உதையால் தான் படித்ததை நம்பவே முடியவில்லை... 'இது எப்படி சாத்தியம்?!' என்ற கேள்வி மட்டும் அவன் மனதினுள் திரும்ப திரும்ப ஓடிக் கொண்டே இருந்தது.. ஆம் அவனது ஆச்சரியத்தில் தவ்று ஒன்றும் இல்லை தான்..
பின்னே அவனது வாழ்க்கையில் நடந்ததை அப்படியே ஒருவர் கதையாக பத்திரிக்கையில் எழுதுகிறார் என்றால் அவனால் அதை எப்படி சாதாரணமாக எடுத்து கொள்ள முடியும்? அதிலும் இது உண்மை கதை என்று பேட்டி வேறு அந்த எழுத்தாளர் கூறியிருக்கிறார்!
சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவன் எழுந்து சென்று அங்கிருந்த அந்த கடந்த வார இதழை எடுத்து மீண்டும் அந்த எழுத்தாளரின் பேட்டியை படிக்க தொடங்கினான்.
************************
"என்ன சொல்றீங்க? உங்க பத்திரீக்கைலதான பல வருசமா கதை எழுதுராங்க.. ஆனா அவங்களபத்தி எதுவும் தெரியாதுணு சொல்றீங்க? யார்கிட்ட கதை விடுறீங்க?" என்று தன் மொத்த கோபத்தையும் அந்த பத்திரிக்கையின் ஆசிரியரின் மீது கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தான் உதய்..
ஆனால் அவரோ எந்த வித சலனமும் இல்லாமல் "தம்பி.. இது எங்க பத்திரிக்கையோட தனிப்பட்ட விஷயம்.. இத உங்ககிட்ட சொல்லனுனு அவசியம் இல்ல.. அதுவும் இல்லாம அவங்களோட விபரம் எங்ககிட்ட இருந்தாலும் கூட அவங்க அனுமதி இல்லாம உங்ககிட்ட தரவும் முடியாதுதான் இல்லையா?" என்றார்.
அவரது பதில் அவனது கோபத்தை இன்னும் அதிகம் தான் செய்தது.
********************************
அன்று அந்த பத்திரீக்கையில் வந்திருந்த அத்தியாயத்தை படித்ததும் அவனே அறியாமல் அவனது கைகள் நடுங்க தொடங்கின. அந்த நிகழ்வு நடந்து சில வருடங்கள் கடந்துவிட்டன ஆனால் அதற்கு பின் இப்படி ஒரு காரணம் இருக்கும் என்று அவன் அறிந்திருக்கவே இல்லை. எத்தனை சுயநலவாதியாக இருந்திருக்கின்றோம் என்று அவனை அவனே நொந்து கொண்டான். ஆனால் இப்பொழுது காலம் மிகவும் கடந்து விட்டது.
பின்னே அவனது வாழ்க்கையில் நடந்ததை அப்படியே ஒருவர் கதையாக பத்திரிக்கையில் எழுதுகிறார் என்றால் அவனால் அதை எப்படி சாதாரணமாக எடுத்து கொள்ள முடியும்? அதிலும் இது உண்மை கதை என்று பேட்டி வேறு அந்த எழுத்தாளர் கூறியிருக்கிறார்!
சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவன் எழுந்து சென்று அங்கிருந்த அந்த கடந்த வார இதழை எடுத்து மீண்டும் அந்த எழுத்தாளரின் பேட்டியை படிக்க தொடங்கினான்.
************************
"என்ன சொல்றீங்க? உங்க பத்திரீக்கைலதான பல வருசமா கதை எழுதுராங்க.. ஆனா அவங்களபத்தி எதுவும் தெரியாதுணு சொல்றீங்க? யார்கிட்ட கதை விடுறீங்க?" என்று தன் மொத்த கோபத்தையும் அந்த பத்திரிக்கையின் ஆசிரியரின் மீது கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தான் உதய்..
ஆனால் அவரோ எந்த வித சலனமும் இல்லாமல் "தம்பி.. இது எங்க பத்திரிக்கையோட தனிப்பட்ட விஷயம்.. இத உங்ககிட்ட சொல்லனுனு அவசியம் இல்ல.. அதுவும் இல்லாம அவங்களோட விபரம் எங்ககிட்ட இருந்தாலும் கூட அவங்க அனுமதி இல்லாம உங்ககிட்ட தரவும் முடியாதுதான் இல்லையா?" என்றார்.
அவரது பதில் அவனது கோபத்தை இன்னும் அதிகம் தான் செய்தது.
********************************
அன்று அந்த பத்திரீக்கையில் வந்திருந்த அத்தியாயத்தை படித்ததும் அவனே அறியாமல் அவனது கைகள் நடுங்க தொடங்கின. அந்த நிகழ்வு நடந்து சில வருடங்கள் கடந்துவிட்டன ஆனால் அதற்கு பின் இப்படி ஒரு காரணம் இருக்கும் என்று அவன் அறிந்திருக்கவே இல்லை. எத்தனை சுயநலவாதியாக இருந்திருக்கின்றோம் என்று அவனை அவனே நொந்து கொண்டான். ஆனால் இப்பொழுது காலம் மிகவும் கடந்து விட்டது.