அத்தியாயம் 4
"சிவா! நிஜமாவா சொல்லுற?" என்று வள்ளி கேட்க,
"ம்ம்!" என்று சிவா தோள்களை குலுக்கினான் வெகு சாதாரணமாய்.
"அப்ப கல்யாணம் இவ்வளவு நாள் வேண்டாம்னது?"
"வேண்டாம்னு தோணுச்சு வேண்டாம்னு சொன்னேன்"
"என்ன டா சொல்ற? அந்த ஆளு எப்படி பொண்ணா பார்த்து வச்சிருக்காரோ! நீ பாட்டுக்கு பொண்ணு பாக்க போவோம்னு சொல்லுற" என்று குழப்பமும் பயமுமாய் கூறியவர்
"அப்போ இப்போ வேணும்னு தோணுதா?" என்றார்.
"வேணும் வேண்டாம்னு எல்லாம் இல்ல ம்மா. இவ்வளவு நாளும் ஏன் இப்பவும் கல்யாணம்னு எந்த ஐடியாவும் எனக்கு இல்ல. உங்களோட டைம் ஸ்பெண்ட் பண்ணிக்க நினச்சேன்.. அவ்வளவு தான்" என்றவன்,
"இவ்வளவு நாளும் மொத்தம் மொத்தமா போட்டோ கொண்டு வந்து குடுக்கும் போது எதுவும் தெரியல. இப்ப அப்பாவே செலக்ட் பண்ணிட்டார்னா ஒரு முடிவு பண்ணிட்டு தான் எல்லாம் பண்றார்னு தெரிலையா உங்களுக்கு?"
"அதான் டா சொல்றேன். அப்படி என்ன அவசரம் அவருக்கு? என்கிட்ட கூட எல்லாமே முடிவு பண்ணிட்டு சொல்றாரு. இதெல்லாம் ஒரு மாதிரி பைத்தியக்காரத்தனமா தெரிலையா? தான் நினைச்சது நடந்தே ஆகணும்னு?" என்றார் கோபமாய்.
"அப்பா எப்பவும் அப்படி தானே? இப்ப சொல்லி என்ன ஆக போகுது? சரி நீங்க சொல்லுங்க ம்மா! உங்களுக்கு நான் கல்யாணம் பண்ணிக்குறதுல எந்த பிரச்சனையும் இல்லை தானே?"
"எனக்கென்ன டா பிரச்சனை? நீ சந்தோசமா இருக்கனும் அவ்வளவு தான் எனக்கு. ஆனா இந்த மனுஷன் இவ்வளவு அவதியா ஏன் நிக்கணும்னு தான் ஒரு மாதிரி சுருக்குங்குது! வாழ போறது நீ. உனக்கு பிடிக்கனும். அப்பா சொல்லிட்டாருன்னு நீ பாக்காத! பிடிக்கலைனா பிடிக்கலைனு சொல்லிடு!"
"ம்மா! அது அவ்வளவு ஈஸியா?" சிவா கேட்க,
"ஏன் டா கேட்குற? பிடிக்கலைனா தலையாட்டி வைக்க போறியா? என்ன டா பேசுற நீ?" என்றவர்க்கு மகன் என்ன நினைத்து பேசுகிறான் என புரியாமல் பதட்டம் வந்தது
"அதில்ல ம்மா. இப்போ போட்டோ பார்த்து பிடிச்சிருக்கு பிடிக்கலைனு சொல்றது வேற! ஆனா நேர்ல போய் பிடிக்கலனு எப்படி சொல்ல? அது ஹர்ட் ஆகாதா?" என்றவனை என்ன செய்ய என்று முறைத்தவர்,
"இப்படிலாம் பேசுனா நான் என்ன செய்வேன்! நல்லவனா இருக்கலாம் ஆனா இவ்வளவு நல்லவனா இருக்காத டா. உன் அப்பா புத்தி கொஞ்சம் கூட இல்லாம என்னனு வளந்தியோ!" என்று சொல்ல, அவனின் அஃமார்க் புன்னகை இப்பொழுது பெரிதாகியது.
"இந்த சிரிப்பு எப்பவும் உன்கிட்ட இருக்கனும். அது தான் வேணும் எனக்கு. வர போறவ உன்னை நல்லா பார்த்துகிட்டா போதும்!"
"என்னமா டயலாக் மாத்தி பொண்ணுகிட்ட சொல்ற மாதிரி சொல்றிங்க!" என்று அதற்கும் சிரித்தான்.
அவன் மனதின் கேள்வியை தான் அன்னையிடமும் கேட்டிருந்தான். எப்படி பார்த்து மட்டும் பிடித்தத்தை கூற முடியும்? பார்வைக்கு மட்டும் அழகாய் இருந்தால் போதுமா? என்ற கேள்வி இதுநாள் வரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தவனுக்கு தோன்ற, அதை அன்னையிடம் நேராய் கூறிட முடியவில்லை.
"நீ சொன்னா சரி தான் டா. உனக்கு சரினா பொண்ணு பாக்க போவோம். எல்லாம் நல்லபடியா முடிஞ்சா பழனிக்கு போய் காது குத்தணும்!" என்று வள்ளி சொல்ல,
"எது?" என்று சிவா அதிர்ச்சியாக,
"ப்ச்! உனக்கில்ல டா. உன் அப்பாக்கு!" என்று சொல்லி மாலாவிற்கு அலைபேசியில் அழைத்தபடி பின்பக்கம் செல்ல, இப்பொழுது இன்னுமாய் சிரித்தான் சிவா.
"சொல்லுங்க அண்ணி! சிவா என்ன பன்றான்!" என்றார் மாலா எடுத்ததும்.
"அவன் இருக்கான் மாலா. உன் அண்ணே தான் இல்லாத வேலையெல்லாம் பாத்துட்டு இருக்காரு!" என்ற வள்ளி நடந்ததை சொல்ல,
"அண்ணே என்ன நினச்சு செஞ்சாலும் நல்லது தான செஞ்சிருக்காரு. அவனே சரினு சொல்லுதானே! அப்போ போய் பார்த்துட்டு வந்துட வேண்டியது தான?"
"ம்ம் ஆமா! எனக்கு இவ்வளவு நாள் ஒன்னும் தெரியல மாலா. ஆனா இப்ப என்னவோ அடிச்சிக்குது. வர போற மருமக மகனை புரிஞ்சிக்குறவளா இருக்கணுமே!" என்று சொல்ல,
"ஒரே பையன். அதும் அம்புட்டு பாசத்தையும் உங்க மேல வச்சிருக்கவன். உங்க நினைப்பும் சரி தான். சிவா குணத்துக்கும் மனசுக்கும் மகராசியா வருவா. நல்லதே நினச்சு சாமியை கும்பிட்டுட்டு போய்ட்டு வாங்க அண்ணி!" என்றார் மாலாவும்.
"உன்கிட்ட பேசினா தான் எனக்கு புத்தி தெளியுது மாலா. என்ன உன்னை கூட்டிட்டு போக முடியாம இருக்கேனேன்னும் மனசு கலங்குது. நீ என்னமும் நினைச்சுக்காத" என்று வள்ளி சொல்ல,
"அட விடுங்க அண்ணி! நான் மூத்த மவ கல்யாணத்தையே நீங்க இல்லாம நடத்தி வச்சிருட்டு இருக்கேன். எங்க! நம்மள கட்டிக்கிட்டவங்க தான் ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு எகிறிகிட்டு நிக்காங்களே! நல்லபடியா கல்யாணம் முடியட்டும்.. நாம திருட்டுத்தனமா பாத்துக்குற மாதிரி உங்க மருமவளையும் நம்ம கூட கூட்டு சேர்த்துக்குவோம். அவ்வளவு தான?" என்று சொல்ல, சிரித்தாலும் வருத்தமில்லாமல் இல்லை இருவருக்கும்.
"இங்க நம்ம அம்முவுக்கும் மாப்பிள்ளை பாத்ததா சொன்னேன்ல? அவரு டில்லில இருந்து வந்துட்டாராம். இருந்தால வருவாங்கனு நினைக்குறேன்.. கடைசி நேரத்துல தான் இந்த நேரம் வாறாங்கனு சொல்லுவாரு மகி அப்பா. நம்ம பிள்ளைங்களுக்கு நல்லதே நடக்கட்டும்னு வேண்டிக்குவோம். கடவுள் கையில!" என்றார் மாலா.
"ரொம்ப நல்ல விஷயம் மாலா. அம்முக்கு நான் வாழ்த்து சொன்னேன்னு சொல்லிரு!"
"ம்ம்க்கும்! நீங்க வேற அண்ணி! இன்னும் சின்ன பிள்ளை மாதிரி தெரியுதா. கல்யாணம் வேண்டாம் அப்பாட்ட சொல்லுன்னு நிக்குதா! என்னனு கேட்டா கொஞ்ச நாள் தனியா சந்தோசமா இருந்துக்கணுமாம். கல்யாணத்துக்கு பின்னால அதுலாம் கிடைக்காதாம்!" என்று புலம்ப, சிரித்த வள்ளியும்,
"நம்ம கைக்குள்ள நின்ன பிள்ளைங்க. வேற இடத்துக்கு மொத்தமா ஒரே நாள்ல போக சொல்லும் போது பயம் வர தான செய்யும். இந்த வயசுல எல்லாம் இருக்குறது தான். அவ நினைப்பு அவளுக்கு சரினு தோணும். கல்யாணத்தை பண்ணிட்டா கடமை முடிஞ்சதேன்னு அண்ணே நிம்மதியா இருக்கும். அவங்கவங்க பக்கம் அவங்கவங்களுக்கு சரி. வேற என்ன சொல்ல!" என்றார்.
"என்னத்த சரி? எனக்குமே பெருசா இந்த கல்யாணம் பண்ணி வைக்க விருப்பம் இல்ல அண்ணி! உங்க அண்ணே பாக்குத வேலை அப்படி!" என்ற மாலா,
"வனி மாப்பிள்ளைக்கு கவர்மெண்ட் வேலை நல்ல சம்பளம் நம்மகிட்ட ரொம்ப எதிர்பார்க்கல. பொண்ணை தந்தா போதும்ன்ற மாதிரி கேட்டாங்க.. பக்கத்துலனதும் சந்தோசமா பண்ணி வச்சாச்சு. அதே மாதிரி தான் மகிக்கும். மாப்பிள்ளைக்கு போட்டோ பாத்தே ரொம்ப பிடிச்சிருச்சாம். சென்ட்ரல் கவெர்மென்ட் வேலை வனியை கேட்ட மாதிரியே பொண்ணை தந்தா போதும்னதும் உடனே பொண்ணு பாக்க வர சொல்லிட்டாரு. அவ்வளவு தூரமா அனுப்ப எனக்கு அவ்வளவு ஒன்னும் அவசியமாப்படல. சொன்னா கண்ணம் தேயுற அளவுக்கு அடி விழும். அதான் அமைதியா இருக்கேன்!" என்றார்.
"பொண்ணை பெத்தவ.. ஆயிரம் கவலை இருக்க தான் செய்யும். எதுக்கும் மாப்பிள்ளை விவரத்த அனுப்பு. நம்ம சிவா விசாரிக்கட்டும்!"
"ம்ம் சரிங்க அண்ணி. அம்முவை அனுப்ப சொல்றேன்!" என்று கூறி மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு வைத்தனர்.
****************************************
மூன்று மணி அளவில் தன் அலுவலக வேலைகளை முடித்து கிளம்பும் முன் கணினிமுன் அமர்ந்து மின்னஞ்சலில் செய்தியை டைப் செய்தபடி இருந்தான் சிவா.
"பர்சனல் ரீசன்..." என்று அருகில் அமர்ந்திருந்த கார்த்திக் அந்த மின்னஞ்சலை வாசிக்க வர, சட்டென அனுப்பும் குறியீட்டை தொட்டு அனுப்பி இருந்தான்.
"லீவ் மெயிலா? நீ லீவ் போடுறியா? அதிசயம் ஆச்சர்யம் ஆனால் உண்மை!" கார்த்திக் சொல்ல சிவா முறைக்க,
"என்னைக்கு டா?" என்றான் கார்த்திக்.
"ஏன் நீயும் லீவ் போடலாம்னா?"
"ச்சே ச்சே! நீ லீவ்னா நான் அன்னைக்கு கண்டிப்பா ஆபீஸ் வருவேன். அன்னைக்கு தான் எனக்கு சுதந்திர தினம்!" என்றவன் முதுகில் ஒன்று சிவா வைக்க,
"மாமா!" என்று அருகில் வந்தாள் மகிமா.
"லீவுக்கு மெயில் போட்டீங்களா இல்லையா?" என்று கேட்க, கண்களால் வேண்டாம் என்பதாய் தலையசைத்தான் சிவா.
"பார்றா! பிரகாஷ் லீவ்னு உனக்கு தெரிஞ்சிருக்கு. அப்போ என்கிட்ட தான் சொல்லல இல்ல நீ?" என்றான் கார்த்திக்.
"ப்ச்! அம்மா சொல்லிருப்பாங்க டா!" என்ற சிவா,
"மகி! ஷிப்ட் முடிஞ்சது இல்ல? கிளம்பலையா நீ?" என்றான் பேச்சை வளர்த்து அவள் எதுவும் கூறிவிட கூடாதே என்று.
"கிளம்பிட்டேன் மாமா. நீங்க மெயில் பண்ண மறந்துட கூடாதே. அதான் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்!"
"அதெல்லாம் முடிஞ்சது. நீ கிளம்பு!" என்றான் விரட்டாத குறையாய்.
"ம்ம் போறேன் போறேன்!" என்று கூறி, "மாமா!" என்று கண்கள் விரிய மகிமா அழைத்து அவனருகே வந்தவள்,
"எனக்கு போட்டோ எடுத்து அனுப்புவீங்களா?" என்று ஆர்வமாய் கேட்க,
"போச்சு! இவளோட..." என்று பல்லைக் கடித்தவன் பேசும் முன்,
"என்ன போட்டோ மகி?" என்று அவள் பேசுவதை அருகிலிருந்து கேட்ட கார்த்திக் கேட்க,
"அதான் சிவா மாமா பொண்ணு பாக்க போறாங்க இல்ல? பொண்ணு போட்டோ தான்" என்று மகிமா சொல்லி முடிக்க,
மேஜையில் கைமுட்டியை வைத்து தலையில் அடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டான் சிவா.
பேச்சு ஆர்வத்தில் மகிமாவின் குரல் உயர்ந்திருக்க, அருகே வேலையை பார்த்திருந்த மற்ற ஆறு ஏழு பேர் அனைவர்க்கும் நிச்சயம் கேட்டிருக்கும்.
"டேய்! பர்சனல் ரீசன் இது தானா?" என்று கார்த்திக் ஒரு பக்கம் கூச்சலிட, சிவா கண்களை இறுக்கமாய் மூடி திறந்தவன் மகிமாவை தான் முறைத்தான்
"ஆல் தி பெஸ்ட் பிரகாஷ்! பெஸ்ட் ஆஃப் லக் பிரகாஷ்! கங்கிரட்ஸ் மச்சி!" சுற்றி இருந்தவர்கள் வாழ்த்துக்கள் அவனை சங்கடமாய் உணர வைத்தது.
"உன்னை இந்த ஆபீஸ்க்கு கொண்டு வந்ததுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்ட இல்ல?" என்று மகிமாவிடம் சிவா கேட்க,
"விஷ் தானே பண்ணினாங்க? அதுக்கு ஏன் மாமா முறைக்கிறீங்க?" என்றவளும் கை நீட்ட, இன்னமும் அவளை தான் முறைத்தான்.
"கை குடுங்க மாமா!" என்று கேட்டு, தானே அவன் கைகளை இழுத்து பிடித்து கைகுலுக்கி,
"ஆல் தி பெஸ்ட்!" என்று புன்னகைக்க, 'அட போ மா!" என்று ஆயாசமாய் பார்த்தவன் அடுத்து சில நொடிகளில் கிளம்பி பறந்துவிட்டான் சுற்றி இருந்தவர்களின் கிண்டல் தொடர்ந்ததை பார்த்து.
தொடரும்..
"சிவா! நிஜமாவா சொல்லுற?" என்று வள்ளி கேட்க,
"ம்ம்!" என்று சிவா தோள்களை குலுக்கினான் வெகு சாதாரணமாய்.
"அப்ப கல்யாணம் இவ்வளவு நாள் வேண்டாம்னது?"
"வேண்டாம்னு தோணுச்சு வேண்டாம்னு சொன்னேன்"
"என்ன டா சொல்ற? அந்த ஆளு எப்படி பொண்ணா பார்த்து வச்சிருக்காரோ! நீ பாட்டுக்கு பொண்ணு பாக்க போவோம்னு சொல்லுற" என்று குழப்பமும் பயமுமாய் கூறியவர்
"அப்போ இப்போ வேணும்னு தோணுதா?" என்றார்.
"வேணும் வேண்டாம்னு எல்லாம் இல்ல ம்மா. இவ்வளவு நாளும் ஏன் இப்பவும் கல்யாணம்னு எந்த ஐடியாவும் எனக்கு இல்ல. உங்களோட டைம் ஸ்பெண்ட் பண்ணிக்க நினச்சேன்.. அவ்வளவு தான்" என்றவன்,
"இவ்வளவு நாளும் மொத்தம் மொத்தமா போட்டோ கொண்டு வந்து குடுக்கும் போது எதுவும் தெரியல. இப்ப அப்பாவே செலக்ட் பண்ணிட்டார்னா ஒரு முடிவு பண்ணிட்டு தான் எல்லாம் பண்றார்னு தெரிலையா உங்களுக்கு?"
"அதான் டா சொல்றேன். அப்படி என்ன அவசரம் அவருக்கு? என்கிட்ட கூட எல்லாமே முடிவு பண்ணிட்டு சொல்றாரு. இதெல்லாம் ஒரு மாதிரி பைத்தியக்காரத்தனமா தெரிலையா? தான் நினைச்சது நடந்தே ஆகணும்னு?" என்றார் கோபமாய்.
"அப்பா எப்பவும் அப்படி தானே? இப்ப சொல்லி என்ன ஆக போகுது? சரி நீங்க சொல்லுங்க ம்மா! உங்களுக்கு நான் கல்யாணம் பண்ணிக்குறதுல எந்த பிரச்சனையும் இல்லை தானே?"
"எனக்கென்ன டா பிரச்சனை? நீ சந்தோசமா இருக்கனும் அவ்வளவு தான் எனக்கு. ஆனா இந்த மனுஷன் இவ்வளவு அவதியா ஏன் நிக்கணும்னு தான் ஒரு மாதிரி சுருக்குங்குது! வாழ போறது நீ. உனக்கு பிடிக்கனும். அப்பா சொல்லிட்டாருன்னு நீ பாக்காத! பிடிக்கலைனா பிடிக்கலைனு சொல்லிடு!"
"ம்மா! அது அவ்வளவு ஈஸியா?" சிவா கேட்க,
"ஏன் டா கேட்குற? பிடிக்கலைனா தலையாட்டி வைக்க போறியா? என்ன டா பேசுற நீ?" என்றவர்க்கு மகன் என்ன நினைத்து பேசுகிறான் என புரியாமல் பதட்டம் வந்தது
"அதில்ல ம்மா. இப்போ போட்டோ பார்த்து பிடிச்சிருக்கு பிடிக்கலைனு சொல்றது வேற! ஆனா நேர்ல போய் பிடிக்கலனு எப்படி சொல்ல? அது ஹர்ட் ஆகாதா?" என்றவனை என்ன செய்ய என்று முறைத்தவர்,
"இப்படிலாம் பேசுனா நான் என்ன செய்வேன்! நல்லவனா இருக்கலாம் ஆனா இவ்வளவு நல்லவனா இருக்காத டா. உன் அப்பா புத்தி கொஞ்சம் கூட இல்லாம என்னனு வளந்தியோ!" என்று சொல்ல, அவனின் அஃமார்க் புன்னகை இப்பொழுது பெரிதாகியது.
"இந்த சிரிப்பு எப்பவும் உன்கிட்ட இருக்கனும். அது தான் வேணும் எனக்கு. வர போறவ உன்னை நல்லா பார்த்துகிட்டா போதும்!"
"என்னமா டயலாக் மாத்தி பொண்ணுகிட்ட சொல்ற மாதிரி சொல்றிங்க!" என்று அதற்கும் சிரித்தான்.
அவன் மனதின் கேள்வியை தான் அன்னையிடமும் கேட்டிருந்தான். எப்படி பார்த்து மட்டும் பிடித்தத்தை கூற முடியும்? பார்வைக்கு மட்டும் அழகாய் இருந்தால் போதுமா? என்ற கேள்வி இதுநாள் வரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தவனுக்கு தோன்ற, அதை அன்னையிடம் நேராய் கூறிட முடியவில்லை.
"நீ சொன்னா சரி தான் டா. உனக்கு சரினா பொண்ணு பாக்க போவோம். எல்லாம் நல்லபடியா முடிஞ்சா பழனிக்கு போய் காது குத்தணும்!" என்று வள்ளி சொல்ல,
"எது?" என்று சிவா அதிர்ச்சியாக,
"ப்ச்! உனக்கில்ல டா. உன் அப்பாக்கு!" என்று சொல்லி மாலாவிற்கு அலைபேசியில் அழைத்தபடி பின்பக்கம் செல்ல, இப்பொழுது இன்னுமாய் சிரித்தான் சிவா.
"சொல்லுங்க அண்ணி! சிவா என்ன பன்றான்!" என்றார் மாலா எடுத்ததும்.
"அவன் இருக்கான் மாலா. உன் அண்ணே தான் இல்லாத வேலையெல்லாம் பாத்துட்டு இருக்காரு!" என்ற வள்ளி நடந்ததை சொல்ல,
"அண்ணே என்ன நினச்சு செஞ்சாலும் நல்லது தான செஞ்சிருக்காரு. அவனே சரினு சொல்லுதானே! அப்போ போய் பார்த்துட்டு வந்துட வேண்டியது தான?"
"ம்ம் ஆமா! எனக்கு இவ்வளவு நாள் ஒன்னும் தெரியல மாலா. ஆனா இப்ப என்னவோ அடிச்சிக்குது. வர போற மருமக மகனை புரிஞ்சிக்குறவளா இருக்கணுமே!" என்று சொல்ல,
"ஒரே பையன். அதும் அம்புட்டு பாசத்தையும் உங்க மேல வச்சிருக்கவன். உங்க நினைப்பும் சரி தான். சிவா குணத்துக்கும் மனசுக்கும் மகராசியா வருவா. நல்லதே நினச்சு சாமியை கும்பிட்டுட்டு போய்ட்டு வாங்க அண்ணி!" என்றார் மாலாவும்.
"உன்கிட்ட பேசினா தான் எனக்கு புத்தி தெளியுது மாலா. என்ன உன்னை கூட்டிட்டு போக முடியாம இருக்கேனேன்னும் மனசு கலங்குது. நீ என்னமும் நினைச்சுக்காத" என்று வள்ளி சொல்ல,
"அட விடுங்க அண்ணி! நான் மூத்த மவ கல்யாணத்தையே நீங்க இல்லாம நடத்தி வச்சிருட்டு இருக்கேன். எங்க! நம்மள கட்டிக்கிட்டவங்க தான் ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு எகிறிகிட்டு நிக்காங்களே! நல்லபடியா கல்யாணம் முடியட்டும்.. நாம திருட்டுத்தனமா பாத்துக்குற மாதிரி உங்க மருமவளையும் நம்ம கூட கூட்டு சேர்த்துக்குவோம். அவ்வளவு தான?" என்று சொல்ல, சிரித்தாலும் வருத்தமில்லாமல் இல்லை இருவருக்கும்.
"இங்க நம்ம அம்முவுக்கும் மாப்பிள்ளை பாத்ததா சொன்னேன்ல? அவரு டில்லில இருந்து வந்துட்டாராம். இருந்தால வருவாங்கனு நினைக்குறேன்.. கடைசி நேரத்துல தான் இந்த நேரம் வாறாங்கனு சொல்லுவாரு மகி அப்பா. நம்ம பிள்ளைங்களுக்கு நல்லதே நடக்கட்டும்னு வேண்டிக்குவோம். கடவுள் கையில!" என்றார் மாலா.
"ரொம்ப நல்ல விஷயம் மாலா. அம்முக்கு நான் வாழ்த்து சொன்னேன்னு சொல்லிரு!"
"ம்ம்க்கும்! நீங்க வேற அண்ணி! இன்னும் சின்ன பிள்ளை மாதிரி தெரியுதா. கல்யாணம் வேண்டாம் அப்பாட்ட சொல்லுன்னு நிக்குதா! என்னனு கேட்டா கொஞ்ச நாள் தனியா சந்தோசமா இருந்துக்கணுமாம். கல்யாணத்துக்கு பின்னால அதுலாம் கிடைக்காதாம்!" என்று புலம்ப, சிரித்த வள்ளியும்,
"நம்ம கைக்குள்ள நின்ன பிள்ளைங்க. வேற இடத்துக்கு மொத்தமா ஒரே நாள்ல போக சொல்லும் போது பயம் வர தான செய்யும். இந்த வயசுல எல்லாம் இருக்குறது தான். அவ நினைப்பு அவளுக்கு சரினு தோணும். கல்யாணத்தை பண்ணிட்டா கடமை முடிஞ்சதேன்னு அண்ணே நிம்மதியா இருக்கும். அவங்கவங்க பக்கம் அவங்கவங்களுக்கு சரி. வேற என்ன சொல்ல!" என்றார்.
"என்னத்த சரி? எனக்குமே பெருசா இந்த கல்யாணம் பண்ணி வைக்க விருப்பம் இல்ல அண்ணி! உங்க அண்ணே பாக்குத வேலை அப்படி!" என்ற மாலா,
"வனி மாப்பிள்ளைக்கு கவர்மெண்ட் வேலை நல்ல சம்பளம் நம்மகிட்ட ரொம்ப எதிர்பார்க்கல. பொண்ணை தந்தா போதும்ன்ற மாதிரி கேட்டாங்க.. பக்கத்துலனதும் சந்தோசமா பண்ணி வச்சாச்சு. அதே மாதிரி தான் மகிக்கும். மாப்பிள்ளைக்கு போட்டோ பாத்தே ரொம்ப பிடிச்சிருச்சாம். சென்ட்ரல் கவெர்மென்ட் வேலை வனியை கேட்ட மாதிரியே பொண்ணை தந்தா போதும்னதும் உடனே பொண்ணு பாக்க வர சொல்லிட்டாரு. அவ்வளவு தூரமா அனுப்ப எனக்கு அவ்வளவு ஒன்னும் அவசியமாப்படல. சொன்னா கண்ணம் தேயுற அளவுக்கு அடி விழும். அதான் அமைதியா இருக்கேன்!" என்றார்.
"பொண்ணை பெத்தவ.. ஆயிரம் கவலை இருக்க தான் செய்யும். எதுக்கும் மாப்பிள்ளை விவரத்த அனுப்பு. நம்ம சிவா விசாரிக்கட்டும்!"
"ம்ம் சரிங்க அண்ணி. அம்முவை அனுப்ப சொல்றேன்!" என்று கூறி மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு வைத்தனர்.
****************************************
மூன்று மணி அளவில் தன் அலுவலக வேலைகளை முடித்து கிளம்பும் முன் கணினிமுன் அமர்ந்து மின்னஞ்சலில் செய்தியை டைப் செய்தபடி இருந்தான் சிவா.
"பர்சனல் ரீசன்..." என்று அருகில் அமர்ந்திருந்த கார்த்திக் அந்த மின்னஞ்சலை வாசிக்க வர, சட்டென அனுப்பும் குறியீட்டை தொட்டு அனுப்பி இருந்தான்.
"லீவ் மெயிலா? நீ லீவ் போடுறியா? அதிசயம் ஆச்சர்யம் ஆனால் உண்மை!" கார்த்திக் சொல்ல சிவா முறைக்க,
"என்னைக்கு டா?" என்றான் கார்த்திக்.
"ஏன் நீயும் லீவ் போடலாம்னா?"
"ச்சே ச்சே! நீ லீவ்னா நான் அன்னைக்கு கண்டிப்பா ஆபீஸ் வருவேன். அன்னைக்கு தான் எனக்கு சுதந்திர தினம்!" என்றவன் முதுகில் ஒன்று சிவா வைக்க,
"மாமா!" என்று அருகில் வந்தாள் மகிமா.
"லீவுக்கு மெயில் போட்டீங்களா இல்லையா?" என்று கேட்க, கண்களால் வேண்டாம் என்பதாய் தலையசைத்தான் சிவா.
"பார்றா! பிரகாஷ் லீவ்னு உனக்கு தெரிஞ்சிருக்கு. அப்போ என்கிட்ட தான் சொல்லல இல்ல நீ?" என்றான் கார்த்திக்.
"ப்ச்! அம்மா சொல்லிருப்பாங்க டா!" என்ற சிவா,
"மகி! ஷிப்ட் முடிஞ்சது இல்ல? கிளம்பலையா நீ?" என்றான் பேச்சை வளர்த்து அவள் எதுவும் கூறிவிட கூடாதே என்று.
"கிளம்பிட்டேன் மாமா. நீங்க மெயில் பண்ண மறந்துட கூடாதே. அதான் சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்!"
"அதெல்லாம் முடிஞ்சது. நீ கிளம்பு!" என்றான் விரட்டாத குறையாய்.
"ம்ம் போறேன் போறேன்!" என்று கூறி, "மாமா!" என்று கண்கள் விரிய மகிமா அழைத்து அவனருகே வந்தவள்,
"எனக்கு போட்டோ எடுத்து அனுப்புவீங்களா?" என்று ஆர்வமாய் கேட்க,
"போச்சு! இவளோட..." என்று பல்லைக் கடித்தவன் பேசும் முன்,
"என்ன போட்டோ மகி?" என்று அவள் பேசுவதை அருகிலிருந்து கேட்ட கார்த்திக் கேட்க,
"அதான் சிவா மாமா பொண்ணு பாக்க போறாங்க இல்ல? பொண்ணு போட்டோ தான்" என்று மகிமா சொல்லி முடிக்க,
மேஜையில் கைமுட்டியை வைத்து தலையில் அடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்துவிட்டான் சிவா.
பேச்சு ஆர்வத்தில் மகிமாவின் குரல் உயர்ந்திருக்க, அருகே வேலையை பார்த்திருந்த மற்ற ஆறு ஏழு பேர் அனைவர்க்கும் நிச்சயம் கேட்டிருக்கும்.
"டேய்! பர்சனல் ரீசன் இது தானா?" என்று கார்த்திக் ஒரு பக்கம் கூச்சலிட, சிவா கண்களை இறுக்கமாய் மூடி திறந்தவன் மகிமாவை தான் முறைத்தான்
"ஆல் தி பெஸ்ட் பிரகாஷ்! பெஸ்ட் ஆஃப் லக் பிரகாஷ்! கங்கிரட்ஸ் மச்சி!" சுற்றி இருந்தவர்கள் வாழ்த்துக்கள் அவனை சங்கடமாய் உணர வைத்தது.
"உன்னை இந்த ஆபீஸ்க்கு கொண்டு வந்ததுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ அதை பண்ணிட்ட இல்ல?" என்று மகிமாவிடம் சிவா கேட்க,
"விஷ் தானே பண்ணினாங்க? அதுக்கு ஏன் மாமா முறைக்கிறீங்க?" என்றவளும் கை நீட்ட, இன்னமும் அவளை தான் முறைத்தான்.
"கை குடுங்க மாமா!" என்று கேட்டு, தானே அவன் கைகளை இழுத்து பிடித்து கைகுலுக்கி,
"ஆல் தி பெஸ்ட்!" என்று புன்னகைக்க, 'அட போ மா!" என்று ஆயாசமாய் பார்த்தவன் அடுத்து சில நொடிகளில் கிளம்பி பறந்துவிட்டான் சுற்றி இருந்தவர்களின் கிண்டல் தொடர்ந்ததை பார்த்து.
தொடரும்..