அரக்கி 1
லிவிங் டூ கெதர் உறவில் வாழும் நாயகன், நாயகி
காலை நேரம் பரபரப்பாக இருந்த அந்த அப்பார்ட்மெண்டில் ஒரு பிளாட் மட்டும் அமைதியாக இருந்தது. குளியலறையில் நின்றிருந்தவாறு தன் கையில் இருந்த பிரக்னன்சி கிட்டை கண்டவாறு தான் இருந்தாள் அகலிகை.
அவளால் அதனை நம்பவே முடியவில்லை. அது இரண்டு சிவப்பு நிறக் கோடு இருக்கவே, தான் உண்மையிலே கருவுற்றிருக்கிறோம் என்ற செய்தி தெளிவாக தெரிந்தாலும் மனமோ அதை ஏற்றுக் கொள்ள முடியாது தவித்தது.
இது எப்படி சாத்தியமாகும் ? தாங்கள் இருவருமே கவனமாக தானே இருந்தோம். அப்படியிருக்க கருவுற்று இருப்பதை அவளாலே ஒரு நொடி நம்ப முடியவில்லை. அப்பொழுது தான் தன் சின்ன குண்டு குண்டு மூளையைக் கசக்கி யோசித்துப் பார்த்தாள்.
சில நாட்களுக்கு முன்பு போட்டோ சூட் ஒன்றிருக்காக பெங்களூர் சென்றப் போது ஹோட்டல் அறையில் அவனோடு தான் இருந்தது நினைவுக்கு வந்தது. இப்பொழுது அதனை யோசித்துப் பார்த்தவளுக்கு நிச்சயம் தான் அன்று கவனமாக இல்லாமல் விட்டதால் இப்பொழுது இந்நிலை வந்து விட்டது என்பதை உணர்ந்துக் கொண்டாள்.
வேகமாய் குளியலறையை விட்டு வெளியே வந்தவளோ கதவினை திறந்துக் கொண்டு நேர் எதிராக இருந்த ஒரு அறையின் கதவினை வேகமோடுத் தட்டினாள். சில நிமிடங்கள் சென்று அந்த அறையை திறந்து கண்ணை கசக்கிக் கொண்டு நின்றான் கவிமகிழன்.
தலைமுடி கலைந்து தினமும் உடற்பயிற்சி செய்வதால் முறுக்கிய தேகங்கள் திடமாகத் தெரிய, பாறை போன்று அந்த மார்பகங்களை காணும் போது யாராக இருந்தாலும் அதில் கை வைத்து வருட தான் தோன்றும். அவனோ அன்று மேல் உடை அணியாமல் கீழே ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து கரங்களில் டாட்டூ பளிச்சென்று தெரிய நின்றான்.
"என்ன அகலி நேத்து நைட் லேட்டா தானே வந்தேன். அப்புறம் ஏன் என்னை உசுப்புற ? எனக்கு என்ன ஆபீசுக்கு தனியா வர தெரியாதா " எனக் கேட்டவாறே தன் கரங்கள் இரண்டையும் சோம்பலோடு நீட்டி முறுக்கி விடவே, கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு நின்றிருந்தாள்.
தன் காதலியிடமிருந்து பதில் ஏதும் வராதுப் போக அவளைக் காணவே, அவளின் இந்த ருத்ர தாண்டவம் கொண்ட முகம் எதற்காக ?யோசனையோடு புருவத்தை நிமிர்த்தி என்னவென்றுக் கேட்டான்.
"இத பாரு " என அவளின் கரங்களில் வைத்திருந்த அந்த பிரக்னன்சி கிட்டை அவனிடம் காட்டவே, அதனை வாங்கிப் பார்த்தான்.
"என்ன இதுல ரெண்டு கோடு காட்டுது. யாரோட கிட், எதுக்கு என்கிட்ட காட்டுற ?" என்றுக் கேட்கவே,
"விளையாடாத மகிழ் நான் இப்ப பிரக்னண்டா இருக்கேன். ஜஸ்ட் நொவ் செக் பண்ணினேன். இது என்னோடது தான். நான் அன்னைக்கு அவ்வளவு சொன்னேன் நீ கேட்டியா இப்ப பாரு " என்கவே, அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
"நீ என்ன பிராங் பண்றேன்னு சொல்லி விளையாடிட்டு இருக்கியா ? நான் கவனமாகத்தான் இருந்தேன். நமக்குள்ள ரிலேஷன்ஷிப் இருக்குது தான். ஆனா அது இந்த அளவுக்கெல்லாம் வந்து நிக்க சத்தியமா வாய்ப்பே இல்லை. நான் சேஃப்பா தான் இருந்தேன். நீயும் சேஃப்பா தான் இருந்தே. ஒரு வேளை இது தப்பா இருக்கலாம் "
"டேய் ஆல்ரெடி எனக்கு பீரியட்ஸ் மிஸ் ஆயிடுச்சு. அதனால தான் டவுட்ல இப்படி செக் பண்ணி பார்த்தேன். கன்பார்ம்டா நான் பிரக்னண்டா இருக்கேன் "
"என்னால இதை நம்ப முடியல. நான் இதுக்கு காரணமே இல்லை " என்க, அதைக் கேட்டவளோ ஆடிப் போய்விட்டாள்.
ஒரு நொடி அதிர்ச்சியோடு அவனின் விழிகளை நேராக சந்திக்க, அதில் இந்த வார்த்தையை உறுதியாகத்தான் கூறுகிறேன் என்பது விழிகளிலே நன்குத் தெரிந்தது.
"நம்ம கொஞ்ச நாளைக்கு முன்னாடி பெங்களூர் போனோமே உனக்கு மறந்திருச்சா. அப்ப நம்ம இன்டர்கோஸ் வச்சிக்கிட்டோம். அதுனால இப்ப எனக்கு கன்ஃபார்ம் ஆயிருக்கு "
"ஏய் என்ன விளையாடுறியா ? அப்ப நம்ம எப்ப வச்சிருந்தோம். நான் அங்க உன் கூட ரிலேஷன்ஷிப்ல இருக்கலை. நீ எதையோ நினைச்சுக்கிட்டு பேசாத. முதல்ல நீ இன்னொரு தடவை போய் செக் பண்ணு இல்ல டாக்டர் கிட்ட போய் கன்பார்ம் பண்ணிட்டு வா. ஆனா என்னால உறுதியா சொல்ல முடியும் இதுக்கு நான் காரணம் கிடையாது "
"அப்போ நீ என்னை சந்தேகப்படுறியா ?"
"அகலி காலையிலையே எதுக்கு வந்து இப்படி பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கே சொல்லு ?அப்பறம் பாத்துக்கலாம் " என்றான்.
அவனுக்கு நேற்று இரவு பன்னிரண்டு மணி தாண்டிய பின்பு தான் வீட்டுக்கு வந்திருந்தான் என்பதால் இன்னுமே தூக்கம் முழுமையாக விலகாது தான் இருந்தது. ஆனால் இந்த விஷயத்தை சாதாரணமாக தான் எடுத்துக் கொண்டான் அவன் என்பது முகத்திலே நன்றாகவே தெரிந்தது.
" நான் போய் தூங்குறேன் " கூறி விலக முயற்சிக்க, அவனோடு அவன் அறைக்குள் வந்தவளோ வலிய கரங்களைப் பற்றி தன் முன்னே திருப்பினாள்.
"மகிழ் நான் சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன். உனக்கு எப்படி தூக்கம் வருதுன்னு சொல்லலாம். இப்ப நான் என்ன பண்றது " என்று சீற்றமோடுக் கத்தவே,
"இது உன்னோட பிரச்சனை நான் என்ன பண்ண முடியும் ? உனக்கு வேணும்னா வச்சுக்கோ இல்லையா அபார்ஷன் பண்ணிரு. இத போய் பெரிய விஷயம் மாதிரி பேசிக்கிட்டு இருக்க " என்று சாதாரணமாக கூறினான். ஆனால் அவளால் அதனை அவ்வளவு எளிதில் எடுத்துக் கொள்ள முடியவில்லை. முதலில் அவன் தான் காரணம் அதையே ஏன் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறான்.
"இப்ப எனக்கு இது பிரச்சனை கிடையாது. என் வயித்துல வளர குழந்தைக்கு நீ தான் காரணம் அதை ஏன் நீ ஒத்துக்க மாட்டிக்க ?"
"ஏய் நான் உறுதியா சொல்றேன் அன்னைக்கு நான் உன் கூட இல்ல. அப்பறம் எப்படி நான் காரணம் சொல்ல முடியும். நம்ம கடைசியா உறவுல இருந்து ரெண்டு மாசத்துக்கு மேல இருக்கும். இப்ப நம்ம ரெண்டு பேருமே வொர்க் பிஸில தான் இருக்கோம். உனக்கே தெரியும் அதனால தான் ரூம் கூட நம்ம தனித்தனியாக வேணுன்னு சொல்லி வந்துட்டோம். நான் அன்டைம்ல வந்து உன் தூக்கத்தை கெடுக்க கூடாதுன்னு தான் இந்த ரூமுக்கே வந்தேன். அப்படி இருக்கும் போது நான் உன் கூட பெங்களூர்ல ஒன்னா இருந்தேன் அப்படின்னு எப்படி சொல்லலாம் ?"
"அன்னைக்கு நீ குடிச்சிருந்தா நானும் குடிச்சிருந்தேன். ஆனால் எனக்கு கொஞ்சம் நிதானம் இருந்தது "
"நீ என்ன லூசா ரெண்டு வருஷமா என் கூட லிவிங் டு கெதர்ல இருக்கிற. ஆனா நான் நிதானம் இல்லாத அளவுக்கு குடிப்பேன் அப்படிங்கறத நீ என்னைக்காவது பார்த்து இருக்கியா. முதல்ல நான் வெளியில என்னைக்காவது குடிச்சிருக்கேனா என்ன ? டென்ஷனா இருந்தாலும் வீட்டுல வந்து தான குடிப்பேன். முன்னாடி எத்தனையோ இடத்துல நம்ம போட்டோ சூட் போயிருக்கோம். அங்கெல்லாம் நான் இந்த மாதிரி பண்ணி இருக்கேன்னா. ஒரு வாரம் கூட தங்குற மாதிரி எல்லாம் இருக்கும். அப்போ எல்லாம் நான் குடிச்சி உன் கிட்ட வந்து இருக்கேனா. நான் ட்ரிங்க்ஸ் பண்ணிட்டு நிதானம் இல்லாத மாதிரி உன்கிட்ட வந்து ரிலேஷன்ஷிப்ல இருந்தேன்னு நீ சொல்றத என்னால நம்ப முடியாது " எனக் கூறவே அவன் கூறுவதிலும் உண்மை முற்றிலும் இருக்கத்தான் செய்கிறது.
கவிமகிழன் மது அருந்துவான் தான். ஆனால் தான் கண்டவரை ஒரு நாளும் அவன் வெளியில் குடித்ததில்லை. வீட்டில் வைத்து செய்து இருக்கிறான். அப்படி இருக்க அவனின் மீதும் எந்த தவறும் இல்லை. ஆனால் அன்று நடந்தது உண்மை தானே ! அவன் தானே தன்னை நெருங்கினான். அவனோடு தானே அன்று தான் அந்த அறையில் இருந்தோம் நினைத்துக் கொண்டவளோ மீண்டும் ஒரு முறை அவனிடம் இதனைக் கூறினாள்.
"தேவையில்லாம இப்படியே பேசிட்டு இருக்காத அப்பறம் நம்ம பிரேக் அப் பண்ண வேண்டியதுதான் இருக்கும் "
"ஹே, அப்படின்னா நீ இந்த எண்ணத்தில தான் இருந்திருக்கியா ? இப்போ நீ மாட்டிக்கிட்டே அதுனால பிரேக் அப் பண்ண சொல்றியா. உன்னை நான் சும்மாவே விட மாட்டேன்டா. இந்த குழந்தைக்கு நீ தான் அப்பான்னு நான் நிரூபிச்சு காட்டுறேன். அதுக்காகவே இந்த குழந்தையை அதுவரைக்கும் அழிக்க மாட்டேன்டா "
"நீ என்ன பண்ண நினைச்சாலும் உனக்கு தான் வேஸ்ட் ஆகும். உன்னால வளர்க்க முடிஞ்சா அந்த குழந்தையை வளர்த்துக்கோ. இல்லையா மறுபடியும் சொல்றேன் அபார்ஷன் பண்ணிக்கோ. உன் வயித்துல வளர குழந்தைக்கு நான் அப்பா கிடையாது. நம்ம எப்பையும் போல லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்ல இருக்கலாம். நம்ம உறவு வச்சிக்க எந்த பிரச்சினையும் வராது. ஆனா முடிவு எடுக்க வேண்டியது நீ. என்னால உன் வயித்துல உள்ள குழந்தையை ஏன் குழந்தையை ஏத்துக்க முடியாது. அதுக்கு நான் காரணமா இருந்தா கண்டிப்பா ஏத்துப்பேன். நானே காரணம்மில்லை அப்படிங்கும் போது என்னால எப்படி ஏத்துக்க முடியும். ஒரு வேளை நீ தப்பு பண்ணி, வேற யாரோ இதுக்கு காரணம் அப்படின்னா என்கிட்ட சாரி சொல்லி மன்னிப்பு கேட்டு முடிச்சுக்கோ. நாம எப்பயும் போல இருந்துக்கலாம் " என பெருந்தன்மையாக கவிமகிழன் கூறவே அதனைக் கேட்ட நொடி அருவருப்பாக தன் முகத்தை சுழித்தாள். இரண்டு வருடம் உறவில் இருந்தது நினைக்கும் போது அவளுக்கே வெறுப்பாக தான் இருந்தது.
"நீ நினைக்கிறது ஒரு போதும் நடக்காது. நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்க மாட்டேன். இந்த குழந்தையோட அப்பா நீ தான் அப்படிங்கிறது நீயே புரிஞ்சி என்கிட்ட வந்து மன்னிப்பு கேட்பே. அந்த நாளுக்காக நான் இப்போல இருந்து காத்துக்க தயாராக தான் இருக்கேன். வெயிட் அண்ட் வாட்ச் " எனக் கூறி அந்த அறையில் இருந்து வெளியேறி எதிரே இருந்த தன்னறைக்குள் நுழைந்து கொண்டாள். தலையை பிடித்துக் கொண்டு படுக்கையில் அமர்ந்தவனுக்கு எவ்வளவு யோசித்துப் பார்த்தோம் அவள் கூறுவதை அவனால் ஏற்க முடியவில்லை.
அன்று தான் நைட்ரெட்டு செல்கிறேன் என்று வெளியில் சென்று விட்டானே. அந்த ஹோட்டலில் தான் தங்கவேயில்லை. அப்படி இருக்கும் போது அவளோடு தான் எப்படி தங்கினேன் என்று இவள் கூறலாம் ? ஒருவேளை அவள் மனதில் தான் இருக்க அந்த நினைப்பில் போதையோடு வேறொருவனோடு உறவிலிருந்து விட்டாலோ ! அதனால் உண்டான கருவை தன் தலையில் கட்டப்பாக்கிறாளா ? அப்படித்தான் இருக்கும். உன்னை போயி நல்ல பொண்ணுன்னு நெனச்சேன் பாரு எல்லாம் என்னோட தப்பு தான். உன் மேல போய் எனக்கு ஈர்ப்பு வந்தது பாரு என்ன சொல்லணும் " அதற்கு மேல் எப்படி அவனால் தூங்க முடியும். குளியலறைக்குச் சென்று அலுவலகத்திற்கு கிளம்ப ஆரம்பித்து விட்டாள்.
தன்னறைக்கு வந்த அகலி முதலில் மருத்துவரை சந்தித்து உண்மையா என்பதை பரிசோதிக்க நினைத்தாள். தவறாக கூட இருக்க வாய்ப்பு இருக்கும் அல்லவா ? என மனம் நினைத்தாலும் அவளின் உள் மனமோ நிச்சயம் வாய்ப்பு இல்லை எனக் கூறியது. தானாக அவளின் கரங்களோ அடி வயிற்றினை தொட்டு வருடியது.
தொடரும் ....
லிவிங் டூ கெதர் உறவில் வாழும் நாயகன், நாயகி
காலை நேரம் பரபரப்பாக இருந்த அந்த அப்பார்ட்மெண்டில் ஒரு பிளாட் மட்டும் அமைதியாக இருந்தது. குளியலறையில் நின்றிருந்தவாறு தன் கையில் இருந்த பிரக்னன்சி கிட்டை கண்டவாறு தான் இருந்தாள் அகலிகை.
அவளால் அதனை நம்பவே முடியவில்லை. அது இரண்டு சிவப்பு நிறக் கோடு இருக்கவே, தான் உண்மையிலே கருவுற்றிருக்கிறோம் என்ற செய்தி தெளிவாக தெரிந்தாலும் மனமோ அதை ஏற்றுக் கொள்ள முடியாது தவித்தது.
இது எப்படி சாத்தியமாகும் ? தாங்கள் இருவருமே கவனமாக தானே இருந்தோம். அப்படியிருக்க கருவுற்று இருப்பதை அவளாலே ஒரு நொடி நம்ப முடியவில்லை. அப்பொழுது தான் தன் சின்ன குண்டு குண்டு மூளையைக் கசக்கி யோசித்துப் பார்த்தாள்.
சில நாட்களுக்கு முன்பு போட்டோ சூட் ஒன்றிருக்காக பெங்களூர் சென்றப் போது ஹோட்டல் அறையில் அவனோடு தான் இருந்தது நினைவுக்கு வந்தது. இப்பொழுது அதனை யோசித்துப் பார்த்தவளுக்கு நிச்சயம் தான் அன்று கவனமாக இல்லாமல் விட்டதால் இப்பொழுது இந்நிலை வந்து விட்டது என்பதை உணர்ந்துக் கொண்டாள்.
வேகமாய் குளியலறையை விட்டு வெளியே வந்தவளோ கதவினை திறந்துக் கொண்டு நேர் எதிராக இருந்த ஒரு அறையின் கதவினை வேகமோடுத் தட்டினாள். சில நிமிடங்கள் சென்று அந்த அறையை திறந்து கண்ணை கசக்கிக் கொண்டு நின்றான் கவிமகிழன்.
தலைமுடி கலைந்து தினமும் உடற்பயிற்சி செய்வதால் முறுக்கிய தேகங்கள் திடமாகத் தெரிய, பாறை போன்று அந்த மார்பகங்களை காணும் போது யாராக இருந்தாலும் அதில் கை வைத்து வருட தான் தோன்றும். அவனோ அன்று மேல் உடை அணியாமல் கீழே ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து கரங்களில் டாட்டூ பளிச்சென்று தெரிய நின்றான்.
"என்ன அகலி நேத்து நைட் லேட்டா தானே வந்தேன். அப்புறம் ஏன் என்னை உசுப்புற ? எனக்கு என்ன ஆபீசுக்கு தனியா வர தெரியாதா " எனக் கேட்டவாறே தன் கரங்கள் இரண்டையும் சோம்பலோடு நீட்டி முறுக்கி விடவே, கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு நின்றிருந்தாள்.
தன் காதலியிடமிருந்து பதில் ஏதும் வராதுப் போக அவளைக் காணவே, அவளின் இந்த ருத்ர தாண்டவம் கொண்ட முகம் எதற்காக ?யோசனையோடு புருவத்தை நிமிர்த்தி என்னவென்றுக் கேட்டான்.
"இத பாரு " என அவளின் கரங்களில் வைத்திருந்த அந்த பிரக்னன்சி கிட்டை அவனிடம் காட்டவே, அதனை வாங்கிப் பார்த்தான்.
"என்ன இதுல ரெண்டு கோடு காட்டுது. யாரோட கிட், எதுக்கு என்கிட்ட காட்டுற ?" என்றுக் கேட்கவே,
"விளையாடாத மகிழ் நான் இப்ப பிரக்னண்டா இருக்கேன். ஜஸ்ட் நொவ் செக் பண்ணினேன். இது என்னோடது தான். நான் அன்னைக்கு அவ்வளவு சொன்னேன் நீ கேட்டியா இப்ப பாரு " என்கவே, அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
"நீ என்ன பிராங் பண்றேன்னு சொல்லி விளையாடிட்டு இருக்கியா ? நான் கவனமாகத்தான் இருந்தேன். நமக்குள்ள ரிலேஷன்ஷிப் இருக்குது தான். ஆனா அது இந்த அளவுக்கெல்லாம் வந்து நிக்க சத்தியமா வாய்ப்பே இல்லை. நான் சேஃப்பா தான் இருந்தேன். நீயும் சேஃப்பா தான் இருந்தே. ஒரு வேளை இது தப்பா இருக்கலாம் "
"டேய் ஆல்ரெடி எனக்கு பீரியட்ஸ் மிஸ் ஆயிடுச்சு. அதனால தான் டவுட்ல இப்படி செக் பண்ணி பார்த்தேன். கன்பார்ம்டா நான் பிரக்னண்டா இருக்கேன் "
"என்னால இதை நம்ப முடியல. நான் இதுக்கு காரணமே இல்லை " என்க, அதைக் கேட்டவளோ ஆடிப் போய்விட்டாள்.
ஒரு நொடி அதிர்ச்சியோடு அவனின் விழிகளை நேராக சந்திக்க, அதில் இந்த வார்த்தையை உறுதியாகத்தான் கூறுகிறேன் என்பது விழிகளிலே நன்குத் தெரிந்தது.
"நம்ம கொஞ்ச நாளைக்கு முன்னாடி பெங்களூர் போனோமே உனக்கு மறந்திருச்சா. அப்ப நம்ம இன்டர்கோஸ் வச்சிக்கிட்டோம். அதுனால இப்ப எனக்கு கன்ஃபார்ம் ஆயிருக்கு "
"ஏய் என்ன விளையாடுறியா ? அப்ப நம்ம எப்ப வச்சிருந்தோம். நான் அங்க உன் கூட ரிலேஷன்ஷிப்ல இருக்கலை. நீ எதையோ நினைச்சுக்கிட்டு பேசாத. முதல்ல நீ இன்னொரு தடவை போய் செக் பண்ணு இல்ல டாக்டர் கிட்ட போய் கன்பார்ம் பண்ணிட்டு வா. ஆனா என்னால உறுதியா சொல்ல முடியும் இதுக்கு நான் காரணம் கிடையாது "
"அப்போ நீ என்னை சந்தேகப்படுறியா ?"
"அகலி காலையிலையே எதுக்கு வந்து இப்படி பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கே சொல்லு ?அப்பறம் பாத்துக்கலாம் " என்றான்.
அவனுக்கு நேற்று இரவு பன்னிரண்டு மணி தாண்டிய பின்பு தான் வீட்டுக்கு வந்திருந்தான் என்பதால் இன்னுமே தூக்கம் முழுமையாக விலகாது தான் இருந்தது. ஆனால் இந்த விஷயத்தை சாதாரணமாக தான் எடுத்துக் கொண்டான் அவன் என்பது முகத்திலே நன்றாகவே தெரிந்தது.
" நான் போய் தூங்குறேன் " கூறி விலக முயற்சிக்க, அவனோடு அவன் அறைக்குள் வந்தவளோ வலிய கரங்களைப் பற்றி தன் முன்னே திருப்பினாள்.
"மகிழ் நான் சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன். உனக்கு எப்படி தூக்கம் வருதுன்னு சொல்லலாம். இப்ப நான் என்ன பண்றது " என்று சீற்றமோடுக் கத்தவே,
"இது உன்னோட பிரச்சனை நான் என்ன பண்ண முடியும் ? உனக்கு வேணும்னா வச்சுக்கோ இல்லையா அபார்ஷன் பண்ணிரு. இத போய் பெரிய விஷயம் மாதிரி பேசிக்கிட்டு இருக்க " என்று சாதாரணமாக கூறினான். ஆனால் அவளால் அதனை அவ்வளவு எளிதில் எடுத்துக் கொள்ள முடியவில்லை. முதலில் அவன் தான் காரணம் அதையே ஏன் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறான்.
"இப்ப எனக்கு இது பிரச்சனை கிடையாது. என் வயித்துல வளர குழந்தைக்கு நீ தான் காரணம் அதை ஏன் நீ ஒத்துக்க மாட்டிக்க ?"
"ஏய் நான் உறுதியா சொல்றேன் அன்னைக்கு நான் உன் கூட இல்ல. அப்பறம் எப்படி நான் காரணம் சொல்ல முடியும். நம்ம கடைசியா உறவுல இருந்து ரெண்டு மாசத்துக்கு மேல இருக்கும். இப்ப நம்ம ரெண்டு பேருமே வொர்க் பிஸில தான் இருக்கோம். உனக்கே தெரியும் அதனால தான் ரூம் கூட நம்ம தனித்தனியாக வேணுன்னு சொல்லி வந்துட்டோம். நான் அன்டைம்ல வந்து உன் தூக்கத்தை கெடுக்க கூடாதுன்னு தான் இந்த ரூமுக்கே வந்தேன். அப்படி இருக்கும் போது நான் உன் கூட பெங்களூர்ல ஒன்னா இருந்தேன் அப்படின்னு எப்படி சொல்லலாம் ?"
"அன்னைக்கு நீ குடிச்சிருந்தா நானும் குடிச்சிருந்தேன். ஆனால் எனக்கு கொஞ்சம் நிதானம் இருந்தது "
"நீ என்ன லூசா ரெண்டு வருஷமா என் கூட லிவிங் டு கெதர்ல இருக்கிற. ஆனா நான் நிதானம் இல்லாத அளவுக்கு குடிப்பேன் அப்படிங்கறத நீ என்னைக்காவது பார்த்து இருக்கியா. முதல்ல நான் வெளியில என்னைக்காவது குடிச்சிருக்கேனா என்ன ? டென்ஷனா இருந்தாலும் வீட்டுல வந்து தான குடிப்பேன். முன்னாடி எத்தனையோ இடத்துல நம்ம போட்டோ சூட் போயிருக்கோம். அங்கெல்லாம் நான் இந்த மாதிரி பண்ணி இருக்கேன்னா. ஒரு வாரம் கூட தங்குற மாதிரி எல்லாம் இருக்கும். அப்போ எல்லாம் நான் குடிச்சி உன் கிட்ட வந்து இருக்கேனா. நான் ட்ரிங்க்ஸ் பண்ணிட்டு நிதானம் இல்லாத மாதிரி உன்கிட்ட வந்து ரிலேஷன்ஷிப்ல இருந்தேன்னு நீ சொல்றத என்னால நம்ப முடியாது " எனக் கூறவே அவன் கூறுவதிலும் உண்மை முற்றிலும் இருக்கத்தான் செய்கிறது.
கவிமகிழன் மது அருந்துவான் தான். ஆனால் தான் கண்டவரை ஒரு நாளும் அவன் வெளியில் குடித்ததில்லை. வீட்டில் வைத்து செய்து இருக்கிறான். அப்படி இருக்க அவனின் மீதும் எந்த தவறும் இல்லை. ஆனால் அன்று நடந்தது உண்மை தானே ! அவன் தானே தன்னை நெருங்கினான். அவனோடு தானே அன்று தான் அந்த அறையில் இருந்தோம் நினைத்துக் கொண்டவளோ மீண்டும் ஒரு முறை அவனிடம் இதனைக் கூறினாள்.
"தேவையில்லாம இப்படியே பேசிட்டு இருக்காத அப்பறம் நம்ம பிரேக் அப் பண்ண வேண்டியதுதான் இருக்கும் "
"ஹே, அப்படின்னா நீ இந்த எண்ணத்தில தான் இருந்திருக்கியா ? இப்போ நீ மாட்டிக்கிட்டே அதுனால பிரேக் அப் பண்ண சொல்றியா. உன்னை நான் சும்மாவே விட மாட்டேன்டா. இந்த குழந்தைக்கு நீ தான் அப்பான்னு நான் நிரூபிச்சு காட்டுறேன். அதுக்காகவே இந்த குழந்தையை அதுவரைக்கும் அழிக்க மாட்டேன்டா "
"நீ என்ன பண்ண நினைச்சாலும் உனக்கு தான் வேஸ்ட் ஆகும். உன்னால வளர்க்க முடிஞ்சா அந்த குழந்தையை வளர்த்துக்கோ. இல்லையா மறுபடியும் சொல்றேன் அபார்ஷன் பண்ணிக்கோ. உன் வயித்துல வளர குழந்தைக்கு நான் அப்பா கிடையாது. நம்ம எப்பையும் போல லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்ல இருக்கலாம். நம்ம உறவு வச்சிக்க எந்த பிரச்சினையும் வராது. ஆனா முடிவு எடுக்க வேண்டியது நீ. என்னால உன் வயித்துல உள்ள குழந்தையை ஏன் குழந்தையை ஏத்துக்க முடியாது. அதுக்கு நான் காரணமா இருந்தா கண்டிப்பா ஏத்துப்பேன். நானே காரணம்மில்லை அப்படிங்கும் போது என்னால எப்படி ஏத்துக்க முடியும். ஒரு வேளை நீ தப்பு பண்ணி, வேற யாரோ இதுக்கு காரணம் அப்படின்னா என்கிட்ட சாரி சொல்லி மன்னிப்பு கேட்டு முடிச்சுக்கோ. நாம எப்பயும் போல இருந்துக்கலாம் " என பெருந்தன்மையாக கவிமகிழன் கூறவே அதனைக் கேட்ட நொடி அருவருப்பாக தன் முகத்தை சுழித்தாள். இரண்டு வருடம் உறவில் இருந்தது நினைக்கும் போது அவளுக்கே வெறுப்பாக தான் இருந்தது.
"நீ நினைக்கிறது ஒரு போதும் நடக்காது. நான் உன்கிட்ட மன்னிப்பு கேட்க மாட்டேன். இந்த குழந்தையோட அப்பா நீ தான் அப்படிங்கிறது நீயே புரிஞ்சி என்கிட்ட வந்து மன்னிப்பு கேட்பே. அந்த நாளுக்காக நான் இப்போல இருந்து காத்துக்க தயாராக தான் இருக்கேன். வெயிட் அண்ட் வாட்ச் " எனக் கூறி அந்த அறையில் இருந்து வெளியேறி எதிரே இருந்த தன்னறைக்குள் நுழைந்து கொண்டாள். தலையை பிடித்துக் கொண்டு படுக்கையில் அமர்ந்தவனுக்கு எவ்வளவு யோசித்துப் பார்த்தோம் அவள் கூறுவதை அவனால் ஏற்க முடியவில்லை.
அன்று தான் நைட்ரெட்டு செல்கிறேன் என்று வெளியில் சென்று விட்டானே. அந்த ஹோட்டலில் தான் தங்கவேயில்லை. அப்படி இருக்கும் போது அவளோடு தான் எப்படி தங்கினேன் என்று இவள் கூறலாம் ? ஒருவேளை அவள் மனதில் தான் இருக்க அந்த நினைப்பில் போதையோடு வேறொருவனோடு உறவிலிருந்து விட்டாலோ ! அதனால் உண்டான கருவை தன் தலையில் கட்டப்பாக்கிறாளா ? அப்படித்தான் இருக்கும். உன்னை போயி நல்ல பொண்ணுன்னு நெனச்சேன் பாரு எல்லாம் என்னோட தப்பு தான். உன் மேல போய் எனக்கு ஈர்ப்பு வந்தது பாரு என்ன சொல்லணும் " அதற்கு மேல் எப்படி அவனால் தூங்க முடியும். குளியலறைக்குச் சென்று அலுவலகத்திற்கு கிளம்ப ஆரம்பித்து விட்டாள்.
தன்னறைக்கு வந்த அகலி முதலில் மருத்துவரை சந்தித்து உண்மையா என்பதை பரிசோதிக்க நினைத்தாள். தவறாக கூட இருக்க வாய்ப்பு இருக்கும் அல்லவா ? என மனம் நினைத்தாலும் அவளின் உள் மனமோ நிச்சயம் வாய்ப்பு இல்லை எனக் கூறியது. தானாக அவளின் கரங்களோ அடி வயிற்றினை தொட்டு வருடியது.
தொடரும் ....