உருகாதே உயிரே விலகாதே மலரே அத்தியாயம் -8
இவளும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியது வந்தது.தயக்கமும் தவிப்பும் ஒரு சேர வந்தது.அதை வெளிக்காட்டாமல் கையை பிசைந்துக் கொண்டு நின்றாள்.
அப்பொழுது இவளுடைய முறை வர கிம்மின் உதவியாளர் வந்து ஏதோ அவனின் காதில் சொல்ல உடனே “மற்றவங்களை இன்னொரு நாள் அவங்க கம்பெனில சந்திக்கிறேன் இப்போ நான் கிளம்புறேன்” என்று சொல்லிக் கொண்டு வெளியே சென்றான்.
அவன் அப்படிச் சொன்னதும் தான் பாவைக்கு தற்போது நிம்மதியாக இருந்தது.அவன் சென்ற பிறகு கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள இவளும் வெளியே வந்தாள்.அங்கே கிம்முடன் அந்த நாட்டுப் பெண்ணொருத்தி நெருங்கி நின்றபடி சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டாள்.
அவனும் பதிலுக்கு புன்னகையோடு பேச கடைசியில் அந்தப் பெண்ணவள் இவனின் கரங்களோடு கரம் கோர்த்தப்படி காரில் ஏறிச் சென்றனர் இருவரும்.
இதை எல்லாம் பாவை பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று கிம்மின் உதவியாளன் அவனுக்கு புகைப்படம் எடுத்து அனுப்பினான்.
எல்லாவற்றையும் பார்த்தவளின் மனமோ நீண்ட ஒரு பெருமூச்சை ஒன்றை விட்டப்படி அப்படியே பார்வை நிலைத்து இருந்தது.அவனோடு இருந்த பழைய நினைவுகள் அவளை ஆக்கிரமித்துக் கொண்டன.
இருக்கும் சூழ்நிலையில் மெதுவான நடையோடு கிம்மின் நினைவுகளும் அவளை ஆக்கிரமித்துக் கொண்டன.
இங்கே க்வாங் கிம்முடன் பேசிக் கொண்டிருந்தாலும் பாவை தன்னைப் பற்றி அறிந்துக் கொள்ள அவன் செய்த செயல் சரியானது தானா? என்று அவனின் உதவியாளன் அனுப்பிய பாவையின் புகைப்படத்தை பார்த்தப்படி இருந்தான்.
கிம் எப்பொழுது சந்திப்பு நிகழ்ச்சிக்காக வந்தாலும் கண்காணிப்பு படமியின் மூலம் வந்திருப்பவர்களை பார்ப்பது வழக்கம்.அப்படி அவன் பார்க்கும் பொழுது அங்கே பாவை இருப்பதை கண்டுக் கொண்டான்.
ஏற்கனவே இரண்டு முறை க்வாங்விற்கு கைப்பேசியில் அழைப்பு விடுத்திருந்தவன் கடைசியாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.
அவன் நேற்று வராமல் இருந்ததிற்கு மன்னிப்பு கேட்டிருந்தான்.அலுவலகத்தில் பாவையை பார்க்கவும் உடனே க்வாங் வீட்டிற்கு அவளுக்கு பிடித்த பூக்களை அனுப்பி காலையில் அவனை அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறும் இன்றைய நாள் அவளோடு இருப்பதாகவும் உறுதியளித்து வாழ்த்து அட்டை அனுப்பி இருந்தான்.
அதைப் பார்த்த க்வாங் தன் தோழனின் திடீர் மாற்றத்தில் மகிழ்ச்சியடைந்தவள் அவன் சொன்ன மாதிரியே நேராக அலுவலகத்திற்கு வந்தாள்.
பாவை தன்னைப் பார்க்கும் பொழுது அவளை மறந்து விட்டு தனக்கான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டதாக நினைக்க வேண்டும் என்று தான் கிம் அத்தனையையும் செய்தான்.
கிம் நினைத்தது போலவே பாவை அதைப் பார்த்து விட்டாள்.என்ன தான் அவன் செய்த செயல் அவனுக்கு வெற்றி கிடைத்தாலும் ஏதோ ஒரு நெருடல் மனதைப் போட்டு படுத்தியது.பாவை மட்டும் தன்னை மறந்து இன்னொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் போது தானும் அப்படித் தான் என்று காட்டிக் கொள்ள இத்தனை மெனக்கெடல்கள் இருந்தும் மனம் தான் போனவளையே நினைத்துக் கொண்டிருந்தது.
க்வாங் கேட்கும் கேள்விகளுக்கு உதடுகள் பதில் அளித்தாலும் மனமோ அவளையே நினைத்திருந்தது.
பாவைக்கு வேலைகள் எதுவும் சீராக செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.கடைசியில் வேலை நேரம் முடிய அங்கிருந்து வேகவேகமாக கிளம்பியவள் நேராக பேருந்து நிறுத்தத்தில் போய் அமர்ந்துக் கொண்டாள்
அங்கே பேருந்திற்காக காத்திருந்தவள் அவள் அருகினில் இரண்டு பேர் ஜோடியாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். அடுத்ததாக பெற்றவர்கள் இருவர் வேலையை முடித்து விட்டு தன் மகளுக்காக நிறுத்தத்தில் காத்திருக்க அந்தப் பெண் அதே இடத்திற்கு வரவும் மூவருமாக சிரித்துப் பேசினர்.அதைப் பார்த்தவளின் விழிகளோ காயம் பட்ட மனதினை இன்னுமாக காயப்பட வைத்தது. பழைய நினைவுகளுக்குள் தன்னை தொலைத்திட நினைத்தாள் பெண்ணவள்.
கண்களை மூடி அப்படியே சாய்ந்தாள்.மனம் முழுவதும் பாராமாக நெஞ்சை அழுத்தியது.
வானம் தன் சாரலைத் தூவ மழை பெய்யத் துவங்கியது.
மூன்று வருடங்களுக்கு முன்னால் ….
தமிழ்நாட்டின் தலைநகரமாக சென்னையில் தன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு ஆட்டோமொபைல்ஸ் துறையில் உள்ள நிறுவனங்களில் பயிற்சிக்காக வேலையில் சேர்ந்திருந்தாள் பாவை.
வீட்டின் சின்னவளாளதால் எப்பொழுதும் அவளின் தந்தைக்கு செல்லப்பிள்ளை பாவை.தந்தையோடு சேர்ந்து தாயையும் உடன்பிறந்த அக்காவையும் வம்பிழுப்பது பாவையின் வழக்கம்.
பாவையின் அக்கா வாணி ரொம்ப அமைதியானாவள்.பாவைக்கு இன்னொரு அம்மாவாகத் தான் இருப்பாள்.இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.அவளுடைய பொருட்களை எடுப்பது,சண்டைப் போடுவது என தன்னுடைய நாட்களை அழகாக கழித்தாள் பாவை.
பாவையின் தந்தை ரமணா “பாவை இன்னும் ரெடியாகலையா? புது கம்பெனிக்கு வேலைக்கு போகனும்?” என்று கேட்டதற்கு பதிலளிக்காமல் வாயில் தோசையை வைத்துக் கொண்டிருந்தவள் ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்த பாவையின் தாய் செல்வி “என்னங்க அவ சாப்பிட்டு இருக்கா?” என்றதும் வாணி அப்பாவோடு கடைக்குச் செல்வதற்காக தயாராகிக் கொண்டு வந்தாள்.
ரமணாவும் வாணியும் வெளியே செல்வதற்காக தயாராகிக் கொண்டு வாசலில் வர பின்னால் வந்த பாவை “அப்பா என்னை முதல்ல டிராப் பண்ணிட்டு போங்க டைம் ஆச்சு” என்று பதற்றமாக சொல்லினாள்.
செல்வி “பாவை அப்பாவும் அக்காவும் வெளியே போறாங்க நீ இப்போ உன் பைக்ல போ” என்றதற்கு “அதெல்லாம் முடியாது முதல் நாளு வேலைக்கு போறேன் அப்பாத் தான் டிராப் பண்ணனும் அக்கா நீ வெயிட் பண்ணு” என்று வம்பிழுத்துக் கொண்டிருந்தாள் பாவை.
ரமணாவோ வாணியிடம் “வாணி நீ பாவையோட வண்டில வா கம்பெனில அவளை டிராப் பண்ணிட்டு நாம ரெண்டு பேரும் கடைக்கு போகலாம்.நீ வந்த வண்டியை அங்கே பார்க்கிங்ல விட்டால் வரும் போது பாவைக்கு சுலபமாக இருக்கும்ல” என்று தன் செல்லப்பிள்ளைக்கு ஆதரவான வழியைச் சொல்ல அப்படியே நடந்தது.செல்வித் தான் புலம்பிக் கொண்டிருந்தார்.ஆனால் அதை எல்லாம் கேட்கத் தான் ஆளில்லை.
ரமணா சொன்னது போல் பாவையை கம்பெனியில் இறக்கி விட்டு இருவருமாக இன்னொரு பக்கமாக கடைக்குச் சென்றனர்.அதற்கான மெனக்கெடல்கள் அதிகம் தான் இருந்தாலும் வாணி புன்னகையோடு இருந்தாள்.
பாவை தன் அப்பாவிடம் ஆசி வாங்கி விட்டு தன் புது நிறுவனத்திற்குச் சென்றாள்.காரின் பாகங்கள் தயாரிக்கும் நிறுவனமான சென்னையின் உள்ள கொரியன் நிறுவனத்தின் வந்திருந்தாள்.
அங்கே முக்கியமான பொறுப்பில் இருந்தவர்கள் கொரிய மக்களே இருந்தனர்.புது அலுவலக நண்பர்களோடு ஆரம்பம் ஆனது.
நாட்கள் வேகமாக கடந்து இருக்க வாணிக்கு தினகரனோடு திருமணம் முடிந்து போனது. அவள் தன் கணவன் வீடு ஊட்டியில் இருந்தாள்.இப்பொழுது நினைத்த உடன் எல்லாம் அக்காவை பார்க்க போகலாம் என்று சொல்லி ஊட்டிக்குச் சென்று சுற்றிக் கொண்டிருந்தாள் பாவை.
இவளும் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டியது வந்தது.தயக்கமும் தவிப்பும் ஒரு சேர வந்தது.அதை வெளிக்காட்டாமல் கையை பிசைந்துக் கொண்டு நின்றாள்.
அப்பொழுது இவளுடைய முறை வர கிம்மின் உதவியாளர் வந்து ஏதோ அவனின் காதில் சொல்ல உடனே “மற்றவங்களை இன்னொரு நாள் அவங்க கம்பெனில சந்திக்கிறேன் இப்போ நான் கிளம்புறேன்” என்று சொல்லிக் கொண்டு வெளியே சென்றான்.
அவன் அப்படிச் சொன்னதும் தான் பாவைக்கு தற்போது நிம்மதியாக இருந்தது.அவன் சென்ற பிறகு கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள இவளும் வெளியே வந்தாள்.அங்கே கிம்முடன் அந்த நாட்டுப் பெண்ணொருத்தி நெருங்கி நின்றபடி சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டாள்.
அவனும் பதிலுக்கு புன்னகையோடு பேச கடைசியில் அந்தப் பெண்ணவள் இவனின் கரங்களோடு கரம் கோர்த்தப்படி காரில் ஏறிச் சென்றனர் இருவரும்.
இதை எல்லாம் பாவை பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று கிம்மின் உதவியாளன் அவனுக்கு புகைப்படம் எடுத்து அனுப்பினான்.
எல்லாவற்றையும் பார்த்தவளின் மனமோ நீண்ட ஒரு பெருமூச்சை ஒன்றை விட்டப்படி அப்படியே பார்வை நிலைத்து இருந்தது.அவனோடு இருந்த பழைய நினைவுகள் அவளை ஆக்கிரமித்துக் கொண்டன.
இருக்கும் சூழ்நிலையில் மெதுவான நடையோடு கிம்மின் நினைவுகளும் அவளை ஆக்கிரமித்துக் கொண்டன.
இங்கே க்வாங் கிம்முடன் பேசிக் கொண்டிருந்தாலும் பாவை தன்னைப் பற்றி அறிந்துக் கொள்ள அவன் செய்த செயல் சரியானது தானா? என்று அவனின் உதவியாளன் அனுப்பிய பாவையின் புகைப்படத்தை பார்த்தப்படி இருந்தான்.
கிம் எப்பொழுது சந்திப்பு நிகழ்ச்சிக்காக வந்தாலும் கண்காணிப்பு படமியின் மூலம் வந்திருப்பவர்களை பார்ப்பது வழக்கம்.அப்படி அவன் பார்க்கும் பொழுது அங்கே பாவை இருப்பதை கண்டுக் கொண்டான்.
ஏற்கனவே இரண்டு முறை க்வாங்விற்கு கைப்பேசியில் அழைப்பு விடுத்திருந்தவன் கடைசியாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான்.
அவன் நேற்று வராமல் இருந்ததிற்கு மன்னிப்பு கேட்டிருந்தான்.அலுவலகத்தில் பாவையை பார்க்கவும் உடனே க்வாங் வீட்டிற்கு அவளுக்கு பிடித்த பூக்களை அனுப்பி காலையில் அவனை அலுவலகத்தில் வந்து சந்திக்குமாறும் இன்றைய நாள் அவளோடு இருப்பதாகவும் உறுதியளித்து வாழ்த்து அட்டை அனுப்பி இருந்தான்.
அதைப் பார்த்த க்வாங் தன் தோழனின் திடீர் மாற்றத்தில் மகிழ்ச்சியடைந்தவள் அவன் சொன்ன மாதிரியே நேராக அலுவலகத்திற்கு வந்தாள்.
பாவை தன்னைப் பார்க்கும் பொழுது அவளை மறந்து விட்டு தனக்கான ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டதாக நினைக்க வேண்டும் என்று தான் கிம் அத்தனையையும் செய்தான்.
கிம் நினைத்தது போலவே பாவை அதைப் பார்த்து விட்டாள்.என்ன தான் அவன் செய்த செயல் அவனுக்கு வெற்றி கிடைத்தாலும் ஏதோ ஒரு நெருடல் மனதைப் போட்டு படுத்தியது.பாவை மட்டும் தன்னை மறந்து இன்னொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் போது தானும் அப்படித் தான் என்று காட்டிக் கொள்ள இத்தனை மெனக்கெடல்கள் இருந்தும் மனம் தான் போனவளையே நினைத்துக் கொண்டிருந்தது.
க்வாங் கேட்கும் கேள்விகளுக்கு உதடுகள் பதில் அளித்தாலும் மனமோ அவளையே நினைத்திருந்தது.
பாவைக்கு வேலைகள் எதுவும் சீராக செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.கடைசியில் வேலை நேரம் முடிய அங்கிருந்து வேகவேகமாக கிளம்பியவள் நேராக பேருந்து நிறுத்தத்தில் போய் அமர்ந்துக் கொண்டாள்
அங்கே பேருந்திற்காக காத்திருந்தவள் அவள் அருகினில் இரண்டு பேர் ஜோடியாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். அடுத்ததாக பெற்றவர்கள் இருவர் வேலையை முடித்து விட்டு தன் மகளுக்காக நிறுத்தத்தில் காத்திருக்க அந்தப் பெண் அதே இடத்திற்கு வரவும் மூவருமாக சிரித்துப் பேசினர்.அதைப் பார்த்தவளின் விழிகளோ காயம் பட்ட மனதினை இன்னுமாக காயப்பட வைத்தது. பழைய நினைவுகளுக்குள் தன்னை தொலைத்திட நினைத்தாள் பெண்ணவள்.
கண்களை மூடி அப்படியே சாய்ந்தாள்.மனம் முழுவதும் பாராமாக நெஞ்சை அழுத்தியது.
வானம் தன் சாரலைத் தூவ மழை பெய்யத் துவங்கியது.
மூன்று வருடங்களுக்கு முன்னால் ….
தமிழ்நாட்டின் தலைநகரமாக சென்னையில் தன் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு ஆட்டோமொபைல்ஸ் துறையில் உள்ள நிறுவனங்களில் பயிற்சிக்காக வேலையில் சேர்ந்திருந்தாள் பாவை.
வீட்டின் சின்னவளாளதால் எப்பொழுதும் அவளின் தந்தைக்கு செல்லப்பிள்ளை பாவை.தந்தையோடு சேர்ந்து தாயையும் உடன்பிறந்த அக்காவையும் வம்பிழுப்பது பாவையின் வழக்கம்.
பாவையின் அக்கா வாணி ரொம்ப அமைதியானாவள்.பாவைக்கு இன்னொரு அம்மாவாகத் தான் இருப்பாள்.இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.அவளுடைய பொருட்களை எடுப்பது,சண்டைப் போடுவது என தன்னுடைய நாட்களை அழகாக கழித்தாள் பாவை.
பாவையின் தந்தை ரமணா “பாவை இன்னும் ரெடியாகலையா? புது கம்பெனிக்கு வேலைக்கு போகனும்?” என்று கேட்டதற்கு பதிலளிக்காமல் வாயில் தோசையை வைத்துக் கொண்டிருந்தவள் ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்த பாவையின் தாய் செல்வி “என்னங்க அவ சாப்பிட்டு இருக்கா?” என்றதும் வாணி அப்பாவோடு கடைக்குச் செல்வதற்காக தயாராகிக் கொண்டு வந்தாள்.
ரமணாவும் வாணியும் வெளியே செல்வதற்காக தயாராகிக் கொண்டு வாசலில் வர பின்னால் வந்த பாவை “அப்பா என்னை முதல்ல டிராப் பண்ணிட்டு போங்க டைம் ஆச்சு” என்று பதற்றமாக சொல்லினாள்.
செல்வி “பாவை அப்பாவும் அக்காவும் வெளியே போறாங்க நீ இப்போ உன் பைக்ல போ” என்றதற்கு “அதெல்லாம் முடியாது முதல் நாளு வேலைக்கு போறேன் அப்பாத் தான் டிராப் பண்ணனும் அக்கா நீ வெயிட் பண்ணு” என்று வம்பிழுத்துக் கொண்டிருந்தாள் பாவை.
ரமணாவோ வாணியிடம் “வாணி நீ பாவையோட வண்டில வா கம்பெனில அவளை டிராப் பண்ணிட்டு நாம ரெண்டு பேரும் கடைக்கு போகலாம்.நீ வந்த வண்டியை அங்கே பார்க்கிங்ல விட்டால் வரும் போது பாவைக்கு சுலபமாக இருக்கும்ல” என்று தன் செல்லப்பிள்ளைக்கு ஆதரவான வழியைச் சொல்ல அப்படியே நடந்தது.செல்வித் தான் புலம்பிக் கொண்டிருந்தார்.ஆனால் அதை எல்லாம் கேட்கத் தான் ஆளில்லை.
ரமணா சொன்னது போல் பாவையை கம்பெனியில் இறக்கி விட்டு இருவருமாக இன்னொரு பக்கமாக கடைக்குச் சென்றனர்.அதற்கான மெனக்கெடல்கள் அதிகம் தான் இருந்தாலும் வாணி புன்னகையோடு இருந்தாள்.
பாவை தன் அப்பாவிடம் ஆசி வாங்கி விட்டு தன் புது நிறுவனத்திற்குச் சென்றாள்.காரின் பாகங்கள் தயாரிக்கும் நிறுவனமான சென்னையின் உள்ள கொரியன் நிறுவனத்தின் வந்திருந்தாள்.
அங்கே முக்கியமான பொறுப்பில் இருந்தவர்கள் கொரிய மக்களே இருந்தனர்.புது அலுவலக நண்பர்களோடு ஆரம்பம் ஆனது.
நாட்கள் வேகமாக கடந்து இருக்க வாணிக்கு தினகரனோடு திருமணம் முடிந்து போனது. அவள் தன் கணவன் வீடு ஊட்டியில் இருந்தாள்.இப்பொழுது நினைத்த உடன் எல்லாம் அக்காவை பார்க்க போகலாம் என்று சொல்லி ஊட்டிக்குச் சென்று சுற்றிக் கொண்டிருந்தாள் பாவை.