அத்தியாயம் 26
"அப்பாகிட்ட போய் பேசு டி! இன்னும் அங்க தகவல் சொல்லல!" மாலா மெதுவாய் வனிதாவின் காது கடிக்க,
"பயந்த மாதிரி நடிக்காதிங்க ம்மா! அதான் சைலண்டா எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்கீங்களே!" என்ற வனிதாவின் வாயை கைகளை கொண்டு அடைத்தவர்,
"முதலுக்கே மோசம் பண்ணி வச்சுடாத. எப்ப எங்க நிக்குறாரோ உன் அப்பா!" என்று சொல்ல,
"என்ன இருந்தாலும் அவ்வளவு டெரர் அப்பாவை எவ்வளவு ஈஸியா ஹண்டில் பண்றீங்க தெரியுமா நீங்க?" என மீண்டும் சில்லாகித்தாள் வனிதா.
"ம்ம்க்கும்ம்! மேய்க்குறது எருமை.. இதுல பெருமை வேற! போய் உன் புருஷன் கேட்டதா கேளு! அப்ப தான் உன் காது வீங்காம வர முடியும்!" என்று சொல்ல, தந்தைக்கு காபியுடன் அவரருகே சென்றாள் வனிதா.
காலையில் தான் வாழவந்தானும் கனகவள்ளியும் வந்து சென்றிருந்தனர்.
"வாங்க!" என்று அழைத்து வினோதன் நகர, அருகே இருந்து பார்த்து கவனித்துக் கொண்டது அனைத்தும் மாலா தான்.
"இவன் புடிச்சு தான் நம்மகிட்ட சம்மந்தம் பன்றானா இல்ல எதுவும் பகையை மனசுல வச்சிருக்கானா?" வாழவந்தான் முணுமுணுக்க, வினோதனுக்கும் அதே சிந்தனை தான்.
இருவரையும் இரு வீட்டின் மனைவிமார்களும் மயக்கத்திலேயே வைத்திருக்கும்படி தான் குழம்பி தெளிந்து மீண்டும் குழம்பிக் கொண்டிருந்தனர்.
இரவே மாலாவிற்கு விஷயம் மகிமா மூலம் தெரியும். ஆனாலும் கணவனிடம் சொல்ல பயம். நிச்சயம் முடிக்காமல் எப்படி போக முடியும் என கேட்டுவிட்டால்? கோபப்பட்டுவிட்டால் என நினைத்து வினோதனிடம் சொல்லவே இல்லை மாலா.
வனிதாவிடம் மாலா சொல்லி அதன் மூலம் திவாகர் அறிந்து கொண்டவன்,
"பேசாம அவங்களே வந்து பேசட்டும் த்தை! நான் சொன்னாலும் அவங்க வீட்டு மரியாதை முக்கியம்ல?" என்று திவாகர் சொல்ல, அதுவும் சரி தான் என்று முடிவெடுத்து இப்பொழுது வரை வினோதன் என்ன விஷயம் என்று அறிந்திருக்கவில்லை.
"இப்போ தான் மகி ஆபீஸ் கிளம்பி போனா!" மாலா சொல்ல,
"இருக்கட்டும் மாலா! அண்ணனை பார்க்க தான் வந்தோம்!" என்ற கனகவள்ளி கணவனை பார்க்க,
"நீ சொல்லு!" என்றார் ஹஸ்கியாய்.
"நானா?" என்ற வள்ளி,
"ம்ம்ஹும்! உங்களை தான் அவன் சொல்ல சொன்னான். நீங்க தானே பெரியவர். நீங்க தான் சொல்லணும்!" என்று பெருமைப்படுத்த முயல,
"இப்போ தான் தெரியும் இவளுக்கு நான் மூத்தவன் என் வார்த்தை முக்கியம்னு!" என்று கடிந்து கொண்டவர்,
"சிவாவுக்கு ப்ரோமோசன் கிடைச்சிருக்கு.. அதான் சொல்லுவாங்கல்ல! ஏற்கனவே பார்த்த வேலைல இருந்து கூடுதல் பதவி!" என்று மாலாவைப் பார்த்து மட்டும் சொல்லியவர்,
"திடிர்னு தான் அவங்க இவனுக்கு தகவல் சொல்லிருக்காங்க. நாளைக்கு கிளம்பியே ஆவணுமாம்!" என்று சொல்லிவிட்டு வினோதன் முகத்தைப் பார்த்தவர்,
"பத்து நாளுக்கு ட்ரைனிங் அங்கனு சொல்லிருக்காங்களாம்!" என்றார். மாலா இடையில் வந்து காபியை இருவருக்குமாய் தர, வாங்கிக் கொண்டாலும் பேசி முடிக்கும் வரை வள்ளிக்கு பயம் தான் அண்ணன் என்ன கூறுவாரோ என்று.
"வேலை எங்கன?" வினோதனும் பொதுவாய் தான் கேட்டார்.
மாலா, வள்ளி இருவருமே பெரிய புயலை எதிர்பார்த்திருக்க, இங்கே பேச்சுக்கள் எளிதாய் சென்றதில் இருவரும் ஒருவரை பார்த்து மற்றொருவர் தலையசைத்துக் கொண்டனர்.
இது சரியா தவறா என்று கூட அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
"வேலையை எல்லாம் இங்கனைக்குள்ள வாங்கிருவான். கல்யாணமாவ போவுதுன்னு சொன்னா அவங்களே மாத்திற மாட்டாங்க. ட்ரெயினிங் மட்டும் தான் சென்னையில!" வாழவந்தான் சொல்ல,
"சதி பேசிக்குவோம்!" என்று சொன்னதோடு சரி என்ன நினைக்கிறார் என வாழவந்தானுக்கே புரியவில்லை.
குழப்பத்தோடு தான் கிளம்பி வந்திருந்தனர்.
"இவன் வீட்டுக்கு நிச்சயத்துக்கு முன்னயே இப்படி அலையனும்னு என் தலையெழுத்து. அவ்வளவு மிதப்பா பாக்குறான். பொண்ணை குடுக்கோம்னு கொஞ்சமாவது பயம் இருக்கா!" என்று வீட்டில் வந்து தான் குதித்திருந்தார் வாழவந்தான்.
"காபி ப்பா!" என்று வனிதா கொடுக்க, மணி ஐந்தை கடந்ததை பார்த்தபடி காபியை வாங்கிக் கொண்டார்.
ஆறு மணிக்கெல்லாம் வெளியில் நடக்க செல்பவர் ஏழு மணி எட்டு மணிக்கு தான் வருவார். மீண்டும் கடைக்கு சென்றால் பத்து மணியாவிவிடும் வர.
சிவா நாளை சென்னை கிளம்ப இருக்கிறான் அதில் மாற்றமில்லை. ஆனால் வினோதன் இப்படி அமைதியாய் இருக்கிறாரே என்று தான் மாலாவிற்கு பொருமிக் கொண்டு வந்தது.
"கேளு டி!" மகளிடம் சைகை செய்ய,
"ப்பா! காலைல அத்தையும் மாமாவும் வந்தாங்கல்ல?" என்று வனிதா ஒருவாறு ஆரம்பித்துவிட,
"அதுக்கென்ன!" என்றார் சாதாரணமாய்.
"இல்லப்பா! அவங்க வந்துட்டு போன விஷயத்தை என் வீட்டுக்காரர்கிட்ட சொன்னேன். அதான் நீங்க என்ன சொன்னிங்கன்னு கேட்டார்!" என்று மென்று முழுங்கி கூறிவிட்டாள்.
"என்ன சொன்னார் உன் வீட்டுக்காரர்?" என அதிலேயே வினோதன் நிற்க,
"என்ன பால் நம்ம பக்கம் திரும்புது?" என அன்னையை வனிதா பார்க்க, அன்னை மெதுவாய் பின்னே சென்று ஒளிவதும் தெரிந்தது.
"கேட்குறேன்! என்ன அங்க பாக்குற?"
"இல்ல ப்பா! ப்ரோமோஷன்ன்னு சொன்னாங்க இல்ல? அப்போ சம்பளமும் கூடும் இல்ல? மகிக்கு நல்லது தான்னு சொன்னார். வேற எதுவும் சொல்லல! நீங்க அவங்க வீட்டுல என்ன சொல்ல போறீங்க ப்பா?" ஒரே மூச்சில் கணவனை வைத்தே கேட்டுவிட்டாள் கேட்க வந்ததை.
"அதான் தெளிவா சொல்லிருக்கார் இல்ல? ஒரு வாரத்துல முத முஹூர்த்த நாள்ல நிச்சயத்தை வச்சுட்டு அடுத்து கல்யாணத்துக்கு நாள் பார்க்க நினச்சேன். இப்போ மாப்பிள்ளை ஊருக்கு போய்ட்டா வேற என்ன பண்ண? வேற எதாவதுன்னா சண்டை போட்டு நிச்சயம் பண்ணினா தான் ஆச்சுன்னு சொல்லலாம்!" என்று சொல்லவும் வனிதா விழிக்க,
"வேலைல பதவி உயர்வுன்னா அதை எப்படி தடுக்க மாதிரி பேச முடியும்? போய்ட்டு வரட்டும். நல்ல விஷயமா தான போறாப்புல? அதுக்குள்ள நிச்சயம் கல்யாணம்னு நல்ல நாள் எல்லாம் பார்த்து வச்சுருவோம். ரொம்பல்லாம் நாளை கடத்த வேண்டாம். வந்த உடனே நிச்சயம் வச்சு அந்த ஒரு மாசத்துக்குள்ள கல்யாணம் வச்சிரனும். பாவிபயலுக ஊருல இருக்கவன் கண்ணு எல்லாம் இங்க தான் விழும். சேர்ந்தாபோல எல்லாத்தையும் முடிச்சிட்டா தான் குடும்பத்துக்கு நல்லது. எவனையும் நம்ப முடியாது. இழுத்து விட்ருவானுங்க. வெளில யாருக்கும் இப்போ சொல்ல வேண்டாம்னு உன் அம்மாகிட்ட சொல்லி வை. நீயும் உன் வீட்டுல மட்டும் சொல்லு!"
இவ்வளவு தெளிவாய் எல்லாம் மகள் மனைவியிடம் பேசும் வழக்கம் கிடையாது வினோதனுக்கு. அவருக்கு புரிந்தது ப்ரோமோஷன் என்பது வேலையில் எத்தனை முக்கியம் என்று. கூடவே மருமகனை நினைத்து பெருமையும் தான். அதை அப்படியே சொல்லிவிட தெரியாது. வரவும் வராது. அதனால் தன் பாணியில் கூறி வைத்தார்.
"அப்போ வள்ளி அத்தைகிட்ட சொல்லனும்ல ப்பா!"
"அதுக்கு தனியா மைக் வேணுமா உனக்கு? போன் நம்பர் எல்லாம் வாங்குனீங்களா இல்ல மண்ணாந்தை மாதிரி தான் நீயும் உன் அம்மாவும் இருக்கீங்களா? போனைப் போட்டு பேசு. நாள் குறிக்க வார புதன் கிழமை போவோம்னு சொல்லிரு. கருப்பையா பெரியப்பாகிட்ட நான் பேசிக்கிறேன் மத்ததை!" என்று சொல்லி வெளியே செல்ல, நெஞ்சில் கைவைத்து நின்றுவிட்டாள் வனிதா.
"நல்ல மனுஷன் தான். என்ன அமைதியா சொல்ல தெரியல!" அவர் சென்றதும் மாலா வந்து மகளிடம் சொல்ல,
"பெருமைப்பட்டுக்கோங்க ம்மா! ஒரு விஷயத்தை கேட்குறதுக்குள்ள காதெல்லாம் வலிக்குற அளவுக்கு பேசிட்டு போறாங்க. இதுல! நீங்க மண்ணாந்தையாம். உங்ககிட்ட போன் அந்த வீட்டு போன் நம்பர் இல்லையாம். அப்பா எவ்வளவு அப்பாவியா இருக்காங்க!" வனிதா சொல்ல,
"வாயை மூடு டி. நீயே போட்டு குடுத்துட்டு போயிராத. நான் போய் அண்ணிகிட்ட பேசிட்டு வாரேன்!" என்று உடனே போனை எடுத்துக் கொண்டு அறைக்கு செல்ல, மகிமாவிற்கு அழைத்து தந்தை கூறியதை அவளிடம் கூறினாள் வனிதா.
****************************************
காலையில் மகிமா வந்ததும் சிவா அருகே வந்தவள் அமைதியாய் "குட் மார்னிங் மாமா!" என்று சொல்ல, அந்த வேறுபாட்டை அவ்வளவு ரசித்தான் சிவா.
நடையில் அத்தனை துள்ளளோடு உள்ளே வந்து சாதாரணமாய் தன் முன் நின்று குட் மார்னிங் மாமா என்று சொல்லி எதாவது பேசி வைத்துவிட்டு மீண்டும் துள்ளிக் கொண்டு அல்லவா ஓடி வழக்கம்.
இன்று அவன் அருகில் வரவே அத்தனை எண்ணம் அவளுக்கு. கதவை திறந்ததும் தானாய் அவன்புறம் கண்கள் செல்ல, நேற்றைய பேச்சுக்களும் அதனால் இரவு உறக்கமின்றி உருண்டு புரண்டதும் என நேற்று மாலை முதல் சிவாவின்றி வேறு நினைவே இல்லாத அளவுக்கு மாற்றி இருந்தான் அவன்.
இரவு அவனிடம் பேச வேண்டும் என்று தோன்றிய நொடியே பேச முடியாதபடிக்கும் அவன் நினைப்புக்கள் நெஞ்சை அடைக்க, அழைக்க நினைத்தும் அழைக்காமல் இருக்கும் பொழுதே செய்தி அனுப்பி இருந்தான் நினைவில் நின்றவன்.
"நாளைக்கு அம்மா அப்பா வர்ராங்க அம்மு! அத்தைகிட்ட சொல்லிடு!" என்று.
அப்பொழுது தான் நியாபகம் வர, உடனே அன்னையிடம் சென்று கூறி இருந்தாள்.
"மார்னிங் அம்மு!" என்றவன் அவள் கண்களை காண காண, அதன் மாற்றமும் செய்தியும் என உள்ளமெங்கும் அத்தனை கொண்டாட்டம் சிவாவிற்கு.
அதில் அவனைக் கண்டு இன்னும் சிவந்தவள் அவனிடம் சொல்லிக் கொள்ளாமலே தன்னிடம் சென்று அமர்ந்து கொண்டாள்.
இரண்டரை மணிக்கு கேன்டீனில் மகிமா இருக்க, தானே அவளை தேடி சென்றிருந்தான் சிவா.
"கிளம்புறேன் மகி!" என்று வந்ததும் அவன் சொல்ல,
"ஹான்!" என்று விழித்தாள் அவள்.
காபியோடு அவளிருக்க அருகே யாழினி போனைக் காதில் வைத்தபடி இவர்களைக் கண்டாள்.
"கிளம்புறேன் சொன்னேன்!" என்றவன் மீண்டுமாய் யாழினியைக் காண, அவள் அலைபேசியில் கவனத்தை வைத்திருந்தாள்.
"ஹ்ம்ம்!" என்று மட்டும் மகிமா சொல்லவும் தலையசைத்தவன் கதவு வரை சென்றுவிட,
"மாமா!" என்று பின்னோடே வந்துவிட்டாள் அந்த பெண்ணில் இருந்து தூரமாய்.
"சொல்லு மகி!" என்று அவனும் அதில் நின்றுவிட,
"காபி தரவா?" என்றதில் புன்னகைத்தவன்,
"ம்ம்ஹும்! கிளம்பிட்டேன். நீ சாப்பிடு!" என்றான்.
என்னவோ போல இருந்தது மகிமாவிற்கு. நேற்று வரை இல்லாத ஒன்று மனதை அழுந்தியது.
"என்னாச்சு மகி?" என்றவனுக்கு பேசவும் முடியவில்லை அங்கிருந்து கொண்டு.
அவனின் இந்த அழைப்பும் கூட இப்பொழுது அவளுக்கு பிரச்சனையாய் தான் தெரிந்தது.
"ஒண்ணுமில்ல மாமா! நாளைக்கு ஆபீஸ் வருவீங்க இல்ல?" அவள் கேட்க,
"இல்ல டா! நாளைக்கு ஈவ்னிங் கிளம்பனுமே! வீட்டுல இருந்தே மதியம் வரை ஒர்க் பார்க்குற மாதிரி இருக்கும். அதனால தான் சொல்லிட்டு போகலாம்னு உன்னை தேடி வந்தேன்."
"ஓஹ்!" என்றவள் இன்னும் தயங்க, அப்படியே செல்லவும் முடியவில்லை அவனுக்கும்.
"எதாவது கேட்கணுமா மகி?"
"ஹான்.. இல்ல மாமா! பத்திரம்!" என்றவளுக்கு மனம் பிசைந்து என்னவோ செய்தது.
அவளால் சொல்ல முடியவில்லை தான் என்றாலும் முதல்முதலில் அவளுள் தோன்றும் இந்த வித உணர்வுகளை மறைக்கவும் அவள் கண்களுக்கு தெரியவில்லை. அழகாய் காட்டிக் கொடுக்க, திணறிப் போனது என்னவோ சிவா தான்.
"கால் பண்றேன் அம்மு! ரிலாக்ஸ்!" எத்தனைக்கு தன்னால் சத்தமின்றி கூற முடியுமோ அவ்வளவுக்கு அவன் குரல் மெதுவாய் வர, அவள் தலையசைத்து வைத்தாள்.
இருவருக்குமே அழகாய் காதல் விளையாட்டு தொடங்கி இருக்க, அதில் அதிகமாய் தவித்துப் போனது என்னவோ மகிமா தான். விளையாட்டை விரும்பியே சிவா ஆரம்பித்து இருக்க, அவனை தேடிய தன் மனதின் தேடலில் கரைய ஆரம்பித்தாள் பெண்.
தொடரும்..
"அப்பாகிட்ட போய் பேசு டி! இன்னும் அங்க தகவல் சொல்லல!" மாலா மெதுவாய் வனிதாவின் காது கடிக்க,
"பயந்த மாதிரி நடிக்காதிங்க ம்மா! அதான் சைலண்டா எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்கீங்களே!" என்ற வனிதாவின் வாயை கைகளை கொண்டு அடைத்தவர்,
"முதலுக்கே மோசம் பண்ணி வச்சுடாத. எப்ப எங்க நிக்குறாரோ உன் அப்பா!" என்று சொல்ல,
"என்ன இருந்தாலும் அவ்வளவு டெரர் அப்பாவை எவ்வளவு ஈஸியா ஹண்டில் பண்றீங்க தெரியுமா நீங்க?" என மீண்டும் சில்லாகித்தாள் வனிதா.
"ம்ம்க்கும்ம்! மேய்க்குறது எருமை.. இதுல பெருமை வேற! போய் உன் புருஷன் கேட்டதா கேளு! அப்ப தான் உன் காது வீங்காம வர முடியும்!" என்று சொல்ல, தந்தைக்கு காபியுடன் அவரருகே சென்றாள் வனிதா.
காலையில் தான் வாழவந்தானும் கனகவள்ளியும் வந்து சென்றிருந்தனர்.
"வாங்க!" என்று அழைத்து வினோதன் நகர, அருகே இருந்து பார்த்து கவனித்துக் கொண்டது அனைத்தும் மாலா தான்.
"இவன் புடிச்சு தான் நம்மகிட்ட சம்மந்தம் பன்றானா இல்ல எதுவும் பகையை மனசுல வச்சிருக்கானா?" வாழவந்தான் முணுமுணுக்க, வினோதனுக்கும் அதே சிந்தனை தான்.
இருவரையும் இரு வீட்டின் மனைவிமார்களும் மயக்கத்திலேயே வைத்திருக்கும்படி தான் குழம்பி தெளிந்து மீண்டும் குழம்பிக் கொண்டிருந்தனர்.
இரவே மாலாவிற்கு விஷயம் மகிமா மூலம் தெரியும். ஆனாலும் கணவனிடம் சொல்ல பயம். நிச்சயம் முடிக்காமல் எப்படி போக முடியும் என கேட்டுவிட்டால்? கோபப்பட்டுவிட்டால் என நினைத்து வினோதனிடம் சொல்லவே இல்லை மாலா.
வனிதாவிடம் மாலா சொல்லி அதன் மூலம் திவாகர் அறிந்து கொண்டவன்,
"பேசாம அவங்களே வந்து பேசட்டும் த்தை! நான் சொன்னாலும் அவங்க வீட்டு மரியாதை முக்கியம்ல?" என்று திவாகர் சொல்ல, அதுவும் சரி தான் என்று முடிவெடுத்து இப்பொழுது வரை வினோதன் என்ன விஷயம் என்று அறிந்திருக்கவில்லை.
"இப்போ தான் மகி ஆபீஸ் கிளம்பி போனா!" மாலா சொல்ல,
"இருக்கட்டும் மாலா! அண்ணனை பார்க்க தான் வந்தோம்!" என்ற கனகவள்ளி கணவனை பார்க்க,
"நீ சொல்லு!" என்றார் ஹஸ்கியாய்.
"நானா?" என்ற வள்ளி,
"ம்ம்ஹும்! உங்களை தான் அவன் சொல்ல சொன்னான். நீங்க தானே பெரியவர். நீங்க தான் சொல்லணும்!" என்று பெருமைப்படுத்த முயல,
"இப்போ தான் தெரியும் இவளுக்கு நான் மூத்தவன் என் வார்த்தை முக்கியம்னு!" என்று கடிந்து கொண்டவர்,
"சிவாவுக்கு ப்ரோமோசன் கிடைச்சிருக்கு.. அதான் சொல்லுவாங்கல்ல! ஏற்கனவே பார்த்த வேலைல இருந்து கூடுதல் பதவி!" என்று மாலாவைப் பார்த்து மட்டும் சொல்லியவர்,
"திடிர்னு தான் அவங்க இவனுக்கு தகவல் சொல்லிருக்காங்க. நாளைக்கு கிளம்பியே ஆவணுமாம்!" என்று சொல்லிவிட்டு வினோதன் முகத்தைப் பார்த்தவர்,
"பத்து நாளுக்கு ட்ரைனிங் அங்கனு சொல்லிருக்காங்களாம்!" என்றார். மாலா இடையில் வந்து காபியை இருவருக்குமாய் தர, வாங்கிக் கொண்டாலும் பேசி முடிக்கும் வரை வள்ளிக்கு பயம் தான் அண்ணன் என்ன கூறுவாரோ என்று.
"வேலை எங்கன?" வினோதனும் பொதுவாய் தான் கேட்டார்.
மாலா, வள்ளி இருவருமே பெரிய புயலை எதிர்பார்த்திருக்க, இங்கே பேச்சுக்கள் எளிதாய் சென்றதில் இருவரும் ஒருவரை பார்த்து மற்றொருவர் தலையசைத்துக் கொண்டனர்.
இது சரியா தவறா என்று கூட அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
"வேலையை எல்லாம் இங்கனைக்குள்ள வாங்கிருவான். கல்யாணமாவ போவுதுன்னு சொன்னா அவங்களே மாத்திற மாட்டாங்க. ட்ரெயினிங் மட்டும் தான் சென்னையில!" வாழவந்தான் சொல்ல,
"சதி பேசிக்குவோம்!" என்று சொன்னதோடு சரி என்ன நினைக்கிறார் என வாழவந்தானுக்கே புரியவில்லை.
குழப்பத்தோடு தான் கிளம்பி வந்திருந்தனர்.
"இவன் வீட்டுக்கு நிச்சயத்துக்கு முன்னயே இப்படி அலையனும்னு என் தலையெழுத்து. அவ்வளவு மிதப்பா பாக்குறான். பொண்ணை குடுக்கோம்னு கொஞ்சமாவது பயம் இருக்கா!" என்று வீட்டில் வந்து தான் குதித்திருந்தார் வாழவந்தான்.
"காபி ப்பா!" என்று வனிதா கொடுக்க, மணி ஐந்தை கடந்ததை பார்த்தபடி காபியை வாங்கிக் கொண்டார்.
ஆறு மணிக்கெல்லாம் வெளியில் நடக்க செல்பவர் ஏழு மணி எட்டு மணிக்கு தான் வருவார். மீண்டும் கடைக்கு சென்றால் பத்து மணியாவிவிடும் வர.
சிவா நாளை சென்னை கிளம்ப இருக்கிறான் அதில் மாற்றமில்லை. ஆனால் வினோதன் இப்படி அமைதியாய் இருக்கிறாரே என்று தான் மாலாவிற்கு பொருமிக் கொண்டு வந்தது.
"கேளு டி!" மகளிடம் சைகை செய்ய,
"ப்பா! காலைல அத்தையும் மாமாவும் வந்தாங்கல்ல?" என்று வனிதா ஒருவாறு ஆரம்பித்துவிட,
"அதுக்கென்ன!" என்றார் சாதாரணமாய்.
"இல்லப்பா! அவங்க வந்துட்டு போன விஷயத்தை என் வீட்டுக்காரர்கிட்ட சொன்னேன். அதான் நீங்க என்ன சொன்னிங்கன்னு கேட்டார்!" என்று மென்று முழுங்கி கூறிவிட்டாள்.
"என்ன சொன்னார் உன் வீட்டுக்காரர்?" என அதிலேயே வினோதன் நிற்க,
"என்ன பால் நம்ம பக்கம் திரும்புது?" என அன்னையை வனிதா பார்க்க, அன்னை மெதுவாய் பின்னே சென்று ஒளிவதும் தெரிந்தது.
"கேட்குறேன்! என்ன அங்க பாக்குற?"
"இல்ல ப்பா! ப்ரோமோஷன்ன்னு சொன்னாங்க இல்ல? அப்போ சம்பளமும் கூடும் இல்ல? மகிக்கு நல்லது தான்னு சொன்னார். வேற எதுவும் சொல்லல! நீங்க அவங்க வீட்டுல என்ன சொல்ல போறீங்க ப்பா?" ஒரே மூச்சில் கணவனை வைத்தே கேட்டுவிட்டாள் கேட்க வந்ததை.
"அதான் தெளிவா சொல்லிருக்கார் இல்ல? ஒரு வாரத்துல முத முஹூர்த்த நாள்ல நிச்சயத்தை வச்சுட்டு அடுத்து கல்யாணத்துக்கு நாள் பார்க்க நினச்சேன். இப்போ மாப்பிள்ளை ஊருக்கு போய்ட்டா வேற என்ன பண்ண? வேற எதாவதுன்னா சண்டை போட்டு நிச்சயம் பண்ணினா தான் ஆச்சுன்னு சொல்லலாம்!" என்று சொல்லவும் வனிதா விழிக்க,
"வேலைல பதவி உயர்வுன்னா அதை எப்படி தடுக்க மாதிரி பேச முடியும்? போய்ட்டு வரட்டும். நல்ல விஷயமா தான போறாப்புல? அதுக்குள்ள நிச்சயம் கல்யாணம்னு நல்ல நாள் எல்லாம் பார்த்து வச்சுருவோம். ரொம்பல்லாம் நாளை கடத்த வேண்டாம். வந்த உடனே நிச்சயம் வச்சு அந்த ஒரு மாசத்துக்குள்ள கல்யாணம் வச்சிரனும். பாவிபயலுக ஊருல இருக்கவன் கண்ணு எல்லாம் இங்க தான் விழும். சேர்ந்தாபோல எல்லாத்தையும் முடிச்சிட்டா தான் குடும்பத்துக்கு நல்லது. எவனையும் நம்ப முடியாது. இழுத்து விட்ருவானுங்க. வெளில யாருக்கும் இப்போ சொல்ல வேண்டாம்னு உன் அம்மாகிட்ட சொல்லி வை. நீயும் உன் வீட்டுல மட்டும் சொல்லு!"
இவ்வளவு தெளிவாய் எல்லாம் மகள் மனைவியிடம் பேசும் வழக்கம் கிடையாது வினோதனுக்கு. அவருக்கு புரிந்தது ப்ரோமோஷன் என்பது வேலையில் எத்தனை முக்கியம் என்று. கூடவே மருமகனை நினைத்து பெருமையும் தான். அதை அப்படியே சொல்லிவிட தெரியாது. வரவும் வராது. அதனால் தன் பாணியில் கூறி வைத்தார்.
"அப்போ வள்ளி அத்தைகிட்ட சொல்லனும்ல ப்பா!"
"அதுக்கு தனியா மைக் வேணுமா உனக்கு? போன் நம்பர் எல்லாம் வாங்குனீங்களா இல்ல மண்ணாந்தை மாதிரி தான் நீயும் உன் அம்மாவும் இருக்கீங்களா? போனைப் போட்டு பேசு. நாள் குறிக்க வார புதன் கிழமை போவோம்னு சொல்லிரு. கருப்பையா பெரியப்பாகிட்ட நான் பேசிக்கிறேன் மத்ததை!" என்று சொல்லி வெளியே செல்ல, நெஞ்சில் கைவைத்து நின்றுவிட்டாள் வனிதா.
"நல்ல மனுஷன் தான். என்ன அமைதியா சொல்ல தெரியல!" அவர் சென்றதும் மாலா வந்து மகளிடம் சொல்ல,
"பெருமைப்பட்டுக்கோங்க ம்மா! ஒரு விஷயத்தை கேட்குறதுக்குள்ள காதெல்லாம் வலிக்குற அளவுக்கு பேசிட்டு போறாங்க. இதுல! நீங்க மண்ணாந்தையாம். உங்ககிட்ட போன் அந்த வீட்டு போன் நம்பர் இல்லையாம். அப்பா எவ்வளவு அப்பாவியா இருக்காங்க!" வனிதா சொல்ல,
"வாயை மூடு டி. நீயே போட்டு குடுத்துட்டு போயிராத. நான் போய் அண்ணிகிட்ட பேசிட்டு வாரேன்!" என்று உடனே போனை எடுத்துக் கொண்டு அறைக்கு செல்ல, மகிமாவிற்கு அழைத்து தந்தை கூறியதை அவளிடம் கூறினாள் வனிதா.
****************************************
காலையில் மகிமா வந்ததும் சிவா அருகே வந்தவள் அமைதியாய் "குட் மார்னிங் மாமா!" என்று சொல்ல, அந்த வேறுபாட்டை அவ்வளவு ரசித்தான் சிவா.
நடையில் அத்தனை துள்ளளோடு உள்ளே வந்து சாதாரணமாய் தன் முன் நின்று குட் மார்னிங் மாமா என்று சொல்லி எதாவது பேசி வைத்துவிட்டு மீண்டும் துள்ளிக் கொண்டு அல்லவா ஓடி வழக்கம்.
இன்று அவன் அருகில் வரவே அத்தனை எண்ணம் அவளுக்கு. கதவை திறந்ததும் தானாய் அவன்புறம் கண்கள் செல்ல, நேற்றைய பேச்சுக்களும் அதனால் இரவு உறக்கமின்றி உருண்டு புரண்டதும் என நேற்று மாலை முதல் சிவாவின்றி வேறு நினைவே இல்லாத அளவுக்கு மாற்றி இருந்தான் அவன்.
இரவு அவனிடம் பேச வேண்டும் என்று தோன்றிய நொடியே பேச முடியாதபடிக்கும் அவன் நினைப்புக்கள் நெஞ்சை அடைக்க, அழைக்க நினைத்தும் அழைக்காமல் இருக்கும் பொழுதே செய்தி அனுப்பி இருந்தான் நினைவில் நின்றவன்.
"நாளைக்கு அம்மா அப்பா வர்ராங்க அம்மு! அத்தைகிட்ட சொல்லிடு!" என்று.
அப்பொழுது தான் நியாபகம் வர, உடனே அன்னையிடம் சென்று கூறி இருந்தாள்.
"மார்னிங் அம்மு!" என்றவன் அவள் கண்களை காண காண, அதன் மாற்றமும் செய்தியும் என உள்ளமெங்கும் அத்தனை கொண்டாட்டம் சிவாவிற்கு.
அதில் அவனைக் கண்டு இன்னும் சிவந்தவள் அவனிடம் சொல்லிக் கொள்ளாமலே தன்னிடம் சென்று அமர்ந்து கொண்டாள்.
இரண்டரை மணிக்கு கேன்டீனில் மகிமா இருக்க, தானே அவளை தேடி சென்றிருந்தான் சிவா.
"கிளம்புறேன் மகி!" என்று வந்ததும் அவன் சொல்ல,
"ஹான்!" என்று விழித்தாள் அவள்.
காபியோடு அவளிருக்க அருகே யாழினி போனைக் காதில் வைத்தபடி இவர்களைக் கண்டாள்.
"கிளம்புறேன் சொன்னேன்!" என்றவன் மீண்டுமாய் யாழினியைக் காண, அவள் அலைபேசியில் கவனத்தை வைத்திருந்தாள்.
"ஹ்ம்ம்!" என்று மட்டும் மகிமா சொல்லவும் தலையசைத்தவன் கதவு வரை சென்றுவிட,
"மாமா!" என்று பின்னோடே வந்துவிட்டாள் அந்த பெண்ணில் இருந்து தூரமாய்.
"சொல்லு மகி!" என்று அவனும் அதில் நின்றுவிட,
"காபி தரவா?" என்றதில் புன்னகைத்தவன்,
"ம்ம்ஹும்! கிளம்பிட்டேன். நீ சாப்பிடு!" என்றான்.
என்னவோ போல இருந்தது மகிமாவிற்கு. நேற்று வரை இல்லாத ஒன்று மனதை அழுந்தியது.
"என்னாச்சு மகி?" என்றவனுக்கு பேசவும் முடியவில்லை அங்கிருந்து கொண்டு.
அவனின் இந்த அழைப்பும் கூட இப்பொழுது அவளுக்கு பிரச்சனையாய் தான் தெரிந்தது.
"ஒண்ணுமில்ல மாமா! நாளைக்கு ஆபீஸ் வருவீங்க இல்ல?" அவள் கேட்க,
"இல்ல டா! நாளைக்கு ஈவ்னிங் கிளம்பனுமே! வீட்டுல இருந்தே மதியம் வரை ஒர்க் பார்க்குற மாதிரி இருக்கும். அதனால தான் சொல்லிட்டு போகலாம்னு உன்னை தேடி வந்தேன்."
"ஓஹ்!" என்றவள் இன்னும் தயங்க, அப்படியே செல்லவும் முடியவில்லை அவனுக்கும்.
"எதாவது கேட்கணுமா மகி?"
"ஹான்.. இல்ல மாமா! பத்திரம்!" என்றவளுக்கு மனம் பிசைந்து என்னவோ செய்தது.
அவளால் சொல்ல முடியவில்லை தான் என்றாலும் முதல்முதலில் அவளுள் தோன்றும் இந்த வித உணர்வுகளை மறைக்கவும் அவள் கண்களுக்கு தெரியவில்லை. அழகாய் காட்டிக் கொடுக்க, திணறிப் போனது என்னவோ சிவா தான்.
"கால் பண்றேன் அம்மு! ரிலாக்ஸ்!" எத்தனைக்கு தன்னால் சத்தமின்றி கூற முடியுமோ அவ்வளவுக்கு அவன் குரல் மெதுவாய் வர, அவள் தலையசைத்து வைத்தாள்.
இருவருக்குமே அழகாய் காதல் விளையாட்டு தொடங்கி இருக்க, அதில் அதிகமாய் தவித்துப் போனது என்னவோ மகிமா தான். விளையாட்டை விரும்பியே சிவா ஆரம்பித்து இருக்க, அவனை தேடிய தன் மனதின் தேடலில் கரைய ஆரம்பித்தாள் பெண்.
தொடரும்..