• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வண்ண நிழல்கள் - 19.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
பகுதி – 19.

பூமிகாவின் நாட்கள் எண்ணப்படுகிறது எனத் தெரிந்த பிறகு, யாருக்குமே நிம்மதி என்பது இருக்கவில்லை. ஏதோ தெரியாத நொடியில் ஒருவர் நம்மளை விட்டுப் போய்விட்டால் கூட, ஏதோ ஒரு விதத்தில் ஏற்றுக் கொள்ளும் மனம், ஒருவரின் கொஞ்சம் கொஞ்சமான மரணத்தை ஏற்குமா என்ன?

அப்படி ஒரு நிலையில்தான் அனைவரும் இருக்க, அங்கே சற்று தெளிவாக இருந்தது ஆகாஷ் மட்டுமே. அவளிடம் சிறு மாற்றம் கூட இன்றி அவன் பழக, மற்றவர்களுக்கு எல்லாம் ஆச்சரியம் தான்.

“எப்படிப்பா உன்னால் மட்டும் முடியுது?” நித்யானந்தம் அவனிடம் அன்று கேட்டுவிட, அமைதியாக அவரைப் பார்த்தான்.

“அவங்க சாகப்போறது இன்னைக்குதான் உங்களுக்குத் தெரியுமா என்ன? அதை விட இன்னைக்கு அவங்க, நாளைக்கு நாம அவ்வளவுதான்” அவன் சொல்லிச் செல்ல, அவனை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அவளது பெற்றவர்களும், உடன் பிறந்தவர்களும் பூமிகாவோடு இருக்க, ஆகாஷ் அவளிடம் பேசாமல் சற்று விலகி நின்றிருந்தான். தினமும் அவளை வந்து பார்த்துச் சென்றாலும், அவனுடனே இருக்க வேண்டும் என நினைப்பவளுக்கு அது போதாதே.

அவன் பேசிவிட்டு கிளம்பும் ஒவ்வொரு நாளும், ‘இங்கேயே, என்னோடவே இன்னும் கொஞ்ச நேரம் இருங்களேன்’ அவளது விழிகள் கெஞ்சுவதைக் கண்டும் காணாமல்தான் சென்று கொண்டிருந்தான்.

அவளோடு இருப்பதில் அவனுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இருக்கப் போவதில்லை. ஆனால், அவள் கண்கள் வழியவிடும் காதலையும், அதை அவன் ஏற்காமல் மறுத்து அமர்ந்திருப்பதையும் மற்றவர்கள் பார்வைக்கு கொண்டுவர அவன் விரும்பவில்லை.

அன்று அவளைப் பார்க்க வந்தவன், “இப்படி ரூமுக்குள்ளேயே உக்காந்து இருக்காதே பூமி... அப்பப்போ கொஞ்சம் வெளியேவும் வா... இப்படியே இருந்தா எனக்கே மூச்சடைக்கும்...” அவன் சொல்லிச் செல்ல, அவன் வார்த்தைகளுக்காகவாவது அதைச் செய்ய முடிவெடுத்தாள்.

பூமிகா எந்த அளவுக்கு அவனோடு இருக்க முடியாமல் தவித்தாளோ, ப்ரதிக்கும் தேன்மொழியை தனிமையில் சந்திக்க முடியாமல் அந்த அளவுக்கு தவித்தான்.

இறுதியாக பூமிகாவும், தேன்மொழியும் பின்னால் இருக்கும் தென்னந்தோப்பு பக்கம் செல்வதைக் கண்டவன், அவர்களை வழி மறித்தான்.

“என்னண்ணா...?” பூமி அவனிடம் கேட்க,

“பூமி... ஒரு ரெண்டு நிமிஷம், நான் இவகிட்டே பேசணும்...” அவன் சொல்ல, பூமிகா வேகமாக விலகி நடந்தாள். அவன் இப்படி பூமிகா முன்னாலேயே நடந்துகொள்வான் என்பதை கொஞ்சம் கூட எதிர்பாராத தேன்மொழி திகைத்துப் போனாள்.

பூமிகா தனியாக செல்வதைப் பார்த்த தேன்மொழி, “ஹையோ... என்னங்க நீங்க, அவளை தனியா போகச் சொல்றீங்க... பூமி, இரு நானும் வர்றேன்” சற்று பதறினாள்.

“அவ ரொம்ப தூரம் போக மாட்டா...” அவளை சமாதானப்படுத்தியவன், “சொல்லு, என்ன முடிவு பண்ணி இருக்க?” அவளிடம் கேட்டான்.

“என் முடிவை நான் ஏற்கனவே சொல்லிட்டேன்... இது நடக்காது வேண்டாம்” அவளால் துரோகி என்ற வார்த்தையை தாங்க முடியாது என உறுதியாக இருந்தாள்.

“ஏய்... நான் அம்மாகிட்டே பேசணும்... பூமி இருக்கறப்போவே பேசினாத்தான் சரியா இருக்கும். இல்லன்னா...” அவன் தங்கள் வாழ்க்கையைக் குறித்து வெகுவாக பயந்தான்.

சற்று தூரத்தில் சென்ற பூமிகா, அங்கே இருந்த மாமரத்தின் கிளையில் அமர்ந்துகொண்டு, இவர்களைத்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ப்ரதிக் கெஞ்சுவதும், தேன்மொழியின் தவிப்பும், மறுப்பும் என அனைத்தும் அவள் பார்வையில் விழுந்து சிறு சுவாரசியத்தை அளித்தது. ‘அவங்களைப் பாக்காதே...’ உள்மனம் அவளைத் தடுத்தாலும், தன் தோழியை அப்படிப் பார்ப்பது பிடித்திருந்தது.

பொறாமை எல்லாம் கொஞ்சமும் இல்லை, மாறாக ஒரு சுவாரசியம், தன் குழந்தை செய்யும் சேட்டையை ஒரு தாய் ரசித்து சிரிப்பாளே, அப்படி ஒரு மனநிலையில்தான் பூமிகா இருந்தாள். ‘தேன்மொழியின் கண்கள் பேசுமா?’ அவளுக்குப் பார்க்கத் தெவிட்டவில்லை.

அவளுக்கே இப்படி என்றால் எதிரில் இருப்பவனை கேட்கவும் வேண்டுமா? “இது எப்பவுமே நடக்காதுங்க...” தேன்மொழி முனக,

“என்னை ஏண்டி இப்படி கொஞ்சம் கொஞ்சமா சாகடிக்கற? மொத்தமா கொன்னுடேன்” அவன் கத்த, அவனை இழுத்து கட்டிக் கொண்டவள், அவன் இதழில் அழுத்தமாக முத்தம் வைக்க, அவன் பேச்சு தடைபட்டது.

முத்தம் என்றால் மென்மையாக அல்ல... அத்தனை வன்மையாக... அவனோடு ஆதியோடு அந்தமாக ஒட்டிக் கொண்டவள், அவன் சிகைக்குள் கை கோர்த்து நெரித்து, தன்னோடு சேர்த்து இழுத்து ஒட்டிக் கொண்டவள், அவன் இதழ்களை மொத்தமாக கொள்ளையிட்டாள்.

அவள் செய்கைக்கு உடன்பட்டு நின்றிருந்தவன், அவள் தன்னைவிட்டுப் பிரியவே, ‘இதற்கு என்ன அர்த்தம்...?’ என்பதுபோல் பார்த்திருக்க, அந்த காதலர்களின் அன்புப் பரிமாற்றத்தைப் பார்த்த பூமி, மெதுவாக பார்வையை விலக்கிக் கொண்டாள்.

“ஐ விஷ் டூ ஹேவ் யுவர் பேபி...” அவள் இப்படிச் சொல்ல முழுதாக அதிர்ந்து போனான்.

“மொழி... நீ என்ன கேட்கறன்னு தெரிஞ்சுதான் கேட்கறியா?” அவன் கத்த,

“நீங்க எனக்கு கிடைக்கலன்னாலும் பரவாயில்லை... உங்க குழந்தையாவது எனக்கு வேணும்” அவள் இன்னும் அழுத்தமாக சொல்ல, அவளை அடிக்க கை ஓங்கியவன், பூமிகா தங்களை நோக்கி வேகமாக வருவதைப் பார்த்தவன், தன் கரத்தை இறக்கினான்.

“பூமி... ஸ்டே கூல்...” அவளைப் பார்த்து ஓடியவன், அவள் கரத்தைப் பற்றி நிறுத்தினான்.

“என்னண்ணா இது? எதுக்கு அவளை அடிக்க கை எல்லாம் ஓங்கற?” பொறுமையாகவே கேட்டாள்.

“அதை நீ இவகிட்டேயே கேள்... காதலுக்காக போராடலாம்... ஆனா காதலிகிட்டேயே போராடறது... ரொம்ப கொடுமையா இருக்கு” அவளிடம் புலம்பியவன், வேகமாக அங்கிருந்து செல்ல, தேன்மொழியை நெருங்கினாள்.

“என்ன தேனு? எதுக்கு அண்ணா இவ்வளவு கோபப்பட்டு போறாங்க?” அவளிடம் கேட்டாள்.

“நீங்க கிடைக்கலன்னாலும் பரவாயில்லை, உங்க குழந்தையாவது எனக்கு வேணும்னு கேட்டேன்... அதான் அவ்வளவு கோபம்” வெறித்த பார்வையாக அவள் சொல்ல, பூமிகா விழித்தாள்.

“என்ன...? குழந்தை... தேனு...” அவளை கண்டிக்கும் குரலில் அழைக்க,

“ஐ மீன் இட் பூமி...” அவள் கண்களில் தெரிந்த ஏக்கம், பரிதவிப்பு, ஏமாற்றம், வலி... பூமிகாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அவள் அழுதால், தான் வருத்தப்படுவோம் என்பதாலேயே அவள் தன் கண்ணீரை அடக்குவது பூமிக்குப் புரிய, தோழியை இழுத்து அணைத்துக் கொண்டாள். “உனக்கும்தான் அவனைப் பிடிச்சிருக்கே... பிறகு என்ன? நான் அம்மாகிட்டே பேசறேன்” தோழியை ஆறுதல் படுத்த முயன்றாள்.

“உங்க அம்மாவுக்கு தெரியும்” அவள் சாதாரணமாக சொல்ல,

“என்னடி சொல்ற?” இவள்தான் அதிர்ந்தாள்.

“உங்க அண்ணா என்கிட்டே காதலைச் சொன்ன அன்னைக்கே உங்க அம்மாகிட்டே போய் சொல்லிட்டேன். என்னை அப்போவே வீட்டை விட்டு அனுப்பிடுவாங்கன்னு பார்த்தேன்... ஆனா நடக்கலை” அவள் சொல்ல, பூமிகா விழித்தாள்.

“அவன் லவ்வை சொன்னதைச் சொன்ன சரி... நீ லவ் பண்றதை சொன்னியா?” அவள் கேட்க, தேன்மொழியிடம் ஒரு அழுத்தமான அமைதி நிலவியது.

“கேட்டதுக்கு பதில் சொல்லு தேனு...” அவளை உலுக்கினாள்.

“என் மனசை சொல்ற தைரியம் எனக்கு இல்லை. அதுவும் இப்படித்தான் நடக்கும்னு சொன்ன அவங்ககிட்டே... அதையே செஞ்சு வச்சிருக்கேன்னு எப்படி சொல்லச் சொல்ற?” ஒருவித வலியோடு அவள் கேட்க, அவளையும் அழைத்துக் கொண்டு அந்த மரத்தின் கிளையில் அமர்ந்தாள்.

“இவ்வளவு தெளிவா பேசறவ, நீ எப்போ, எப்படி அவனை லவ் பண்ண?” அவளது காதல் கதையை தெரிந்துகொள்ள ஆசைப்பட்டாள்.

“உங்க அண்ணா என்கிட்டே ஒரே வருஷத்தில் காதலைச் சொல்லிட்டார். ஆனா எனக்கு அப்போ எல்லாம் கொஞ்சம் கூட அந்த நினைப்பே இருக்கலை. ஆனா எப்போ எங்க அம்மா அப்பாவுக்கு திவசம் செய்யணும்னு, எனக்கே தெரியாத என் ஒண்ணுவிட்ட பெரியப்பா பையனை தேடித் பிடிச்சு, திவசம் செய்ய வச்சாரோ... அப்போ ஆரம்பிச்சது.

“எங்க அம்மா அப்பாவோட ஒரு போட்டோ கூட இல்லாமல், அவங்க முகமே எனக்கு மறந்துடுமோன்னு நான் பயந்தப்போ, என் பிறந்தநாளைக்கு அவங்க போட்டோவை கொண்டுவந்து கொடுத்தார் பார்... அந்த நிமிஷம்... மொத்தமா நான் விழுந்துட்டேன்” அவள் குரலில் அப்படி ஒரு பரவசம் ஓட, தோழியின் முகம் பார்த்திருந்தாள்.

“பிறகு...?” இப்படிக் கேட்ட தோழியை வருத்தமாக ஏறிட்டாள்.

“உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணக் கூடாது பூமி” அவள் குரலில் இப்பொழுது அத்தனை உறுதி ஏறி இருக்க, பூமிக்கு இதுவும் ஆச்சரியம் தான்.

“நீ இதை விடு... எல்லாம் என் தலைஎழுத்துப்படிதான் நடக்கும்... உனக்கு இப்போ எப்படி இருக்கு? ஏதாவது பண்ணுதா? ஹாஸ்பிடல் போகணும்ன்னா போய்டலாம் பூமி...” சற்று சங்கடமாகவே கேட்டாள்.

“ம்ஹும்... எனக்கு எங்கேயும் போக வேண்டாம்... தேனு... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி... என் அண்ணாவோட நீ இருந்தப்போ உன் முகத்தைப் பார்க்கணுமே... அப்படி ஒரு பிரகாசமா இருந்தது.

“உன்னை அவ்வளவு சந்தோஷமா நான் பார்த்த ஞாபகமே எனக்கு இல்லை. நீ அவனோடவே இருந்தா கண்டிப்பா நிம்மதியா, சந்தோஷமா இருப்ப தேனு” அவள் சொல்ல, தேன்மொழியின் முகத்தில் அத்தனை மென்மை.

“எனக்குத் தெரியும் பூமி... ஆகாஷ் பக்கத்தில் இருக்கும்போது, உன் முகமும் அப்படித்தான் ஜொலிக்கும்...” அவள் சொல்ல,

“ஒன் சைட் லவ்க்கு இதெல்லாம் கொஞ்சம் ஜாஸ்தி தானோ?” அவள் கேட்க, அதில் தொனித்த இயலாமையில் நெஞ்சம் நடுங்கியது.

“என்ன பூமி இது?” அவள் வருத்தமாக கேட்க,

“விரும்பறதில் இருக்கற டேஸ்ட் என்னன்னு எனக்குத் தெரிஞ்சுடுச்சு... விரும்பப்படறத்தில் இருக்கற பரவசம் என்னன்னு எனக்குத் தெரியலை. உங்க ரெண்டுபேர் கண்ணுக்குள்ளே நான் அதைப் பார்க்கறப்போ, அவ்வளவு சந்தோஷமா இருக்கு.

“ஆனா அவர் கண்ணுக்குள்ளே அது மிஸ் ஆகுறப்போ...” வருத்தமாக சொல்லிக் கொண்டே வந்தவள்,

“அவர் அப்படி இருக்கறதுதான் ஒரு விதத்தில் எனக்குப் புடிச்சிருக்கு... ஏன் தெரியுமா... சிவா அத்தான் சொன்னாரே... நான் அவளை விரும்பிட்டா, அவ நிம்மதியா போய்டுவா,

“ஆனா மிச்சமிருக்கற என்னோட வாழ்க்கை நரகமா, போராட்டமா போய்டும்னு... அந்த வலி அவருக்கு வேண்டாம்... ரொம்ப சுயநலவாதியா ஆயிட்டே வர்றேன்... ஏன்னு தெரியலை” அவள் சொல்ல, தேன்மொழிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

“பூமி... ப்ரண்டா நான் உனக்குத்தான் சப்போட் பண்ணுவேன்... ஒரே ஒரு விஷயம்... நமக்குப் புடிச்சவங்க நல்லா இருக்கணும், சந்தோஷமா இருக்கணும்னு நினைக்கறதுதான் உண்மையான அன்பு. அதேநேரம்... நாம கொஞ்சம் சுயநலவாதியா இருக்கலாம் தப்பில்லை” அவள் சொல்ல, மறுப்பாக தலை அசைத்தாள்.

இவர்கள் இங்கே வருவதைப் பார்த்த ஆகாஷ், இவர்களது பேச்சுக்களை கேட்டவன், வந்த சுவடு தெரியாமல் அங்கிருந்து அகன்றான். மனமோ காரணமின்றியே கிடந்து தவித்தது.

“இதை நீயா சொல்ற?” பூமிகா கேட்க, வாய்விட்டே சிரித்தாள்.

“நான் ரொம்ப ரொம்ப சுயநலவாதி பூமி... உங்க அண்ணா வேண்டாம்... அவர் குழந்தை வேணும்னு கேட்கறதுக்கு அர்த்தம் வேற என்னவாம்?” அவள் திருப்பிக் கேட்க,

“அவன் இல்லாம இருந்துடுவியா?”.

“என் அம்மா அப்பா இல்லாமல் மட்டும் இருப்பேன்னு நினைச்சேனா என்ன?” அந்த கேள்வியில் வாயடைத்துப் போனாள்.

ஆனாலும் தனக்கு நாட்கள் மிகக் குறைவாக இருப்பதைப் பார்த்தவள், தன்னைப் பெற்றவர்களிடம் பேச முடிவெடுத்தாள். தகப்பனைப் பொறுத்த வரைக்கும், அவள் எதைக் கேட்டாலும், இல்லை என மறுக்க மாட்டார். தாய் அப்படி இல்லை என அவளுக்குத் தெரியுமே.

வீட்டுக்கு வந்தவள், தாயிடம் பேசவேண்டும் எனச் சொல்ல, “என்ன... தேன்மொழி விஷயமா?” அவர் கேட்க, நித்தியானந்தம் அவர்களையே பார்த்திருந்தார்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
“என்ன...? தேன்மொழிக்கு என்ன ஆச்சு? என்ன பேசணும்?” எங்கே மனைவி அவளை வெளியே அனுப்ப வேண்டும் என சொல்லப் போகிறாளோ என பதைபதைத்தார்.

“உன் அப்பாவுக்கு, உன்னைத்தவிர சுத்தி இருக்க எதுவுமே தெரியாது” தாய் நக்கலாக சொல்ல, பூமி தகப்பனை ஏறிட்டாள்.

“என்னன்னு சொல்லும்மா...” நித்யானந்தம் மகளின் அருகே வந்து அமர்ந்தார்.

“என்னோட ஆசைக்கு வேண்டி, பிடிவாதத்துக்கு வேண்டி அவளை வீட்டுக்கு அழைச்சுட்டு வந்தீங்க... நான் இல்லன்னாலும் அவளுக்குன்னு இங்கே ஏதாவது இருக்கணுமேப்பா...” அவள் சொல்ல,

“அவளை அப்படியே விட்டுடுவோமாம்மா? அவளும் எனக்கு பொண்ணு மாதிரிதான்” அவர் மகளுக்கு பதில் கொடுக்க, பிரபா நக்கலாக சிரித்தார்.

“நான் சொல்லல...?” கேட்க வேறு செய்ய, அவர் விழித்தார்.

“தெளிவா பேசு பிரபா...” மனைவியிடம் சாடினார்.

“ஒரு நிமிஷம் இருங்க... சம்பந்தப்பட்டவங்களையும் வரச் சொல்லிடலாம்” சொன்னவர் குரலுயர்த்தி அழைக்க, ப்ரதிக்கும், தேன்மொழியும் உள்ளே வந்தார்கள்.

தோழியின் அருகே வந்த தேன்மொழி, “பூமி, என்ன இது? இதெல்லாம் தேவையா? அவசியமா?” பூமியின் அருகே சென்று அமர்ந்தவள், அவளிடம் அடிக்குரலில் சாடினாள். நித்யானந்தத்துக்கு இப்பொழுது புரிந்தும் புரியாத நிலையே.

“அம்மா... எனக்காகன்னு நீங்க செய்ய வேண்டாம்... இவங்க மனசு... அதுக்காக பாருங்களேன்” பூமி தாயிடம் கெஞ்ச, பிரபா அமைதியாக அவளைப் பார்த்திருந்தார்.

“ப்ரதிக்... இங்கே என்ன நடக்குதுன்னு எனக்கு கொஞ்சம் சொல்றியா?” நித்யானந்தம் மகனின் பக்கம் திரும்பினார்.

“அப்பா, நான் மொழியை விரும்பறேன், அவளையே கல்யாணம் பண்ணிக்கவும் ஆசைப்படறேன். அதை அவகிட்டே சொன்னா, அவ ஒத்துக்க மாட்டேங்கறா...” பழியை அவன் தன்மேல் ஏற்றுக் கொள்ள, தேன்மொழிக்கு உள்ளுக்குள் அத்தனை உதறல்.

“ஓ... நீதான் விரும்பற... அவ இல்லை” பிரபாவதி கேட்க, அவன் அவளைத்தான் பார்த்தான். வழக்கம்போல் அவள் எங்கே அவனைப் பார்த்தாளாம்?

“அதை நீங்க அவகிட்டேதான் கேட்கணும்” அவளது பதில் என்னவாக இருக்கும் என அவனுக்குத் தெரிந்தே ஆகவேண்டும் என நின்றான்.

“கேட்கலாமே...” நித்யானந்தம் எதையோ சொல்லப் போனவர், மனைவியின் பதிலில் வாயை இறுக மூடிக்கொண்டு, அங்கே நடப்பதை வேடிக்கை பார்க்கத் துவங்கினார்.

“ஏய்... இங்கே வா...” பிரபா அழைக்க, தேன்மொழி தோழியின் கரத்தை இறுக்கினாள்.

“போ தேனு...” அவள் சொல்ல, எழுந்து அவர் முன்னால் சென்று நின்றாள்.

“அவன்... அவன் மனசுக்குள் இருக்கறதை சொல்லிட்டான்... நீ உன் மனசுக்குள் இருக்கறதை சொல்லு...” பிரபா கேட்க, தேன்மொழியின் கண்களில் கண்ணீர் வழியத் துவங்கியது.

இத்தனை வருடங்களாக, அவன் காதலைச் சொன்ன நொடி முதல், அவன் தன்னிடம் உரிமை எடுக்கும் விஷயம் வரைக்கும், பிரபாவிடம் அவள் சொல்லி இருக்கிறாள்.

தன்மேல் தவறு இல்லை என காட்டிக் கொள்ளும் முயற்சியை விட, ‘ஏதாவது செய்துவிடேன்’ என்ற கெஞ்சலைத்தான் அவள் அதிகம் வெளிப்படுத்தி இருக்கிறாள். பிரபா அதை எண்ணியவாறே நிற்க, தேன்மொழி பதில்சொல்லும் வழியைத்தான் காணோம்.

“பதில் சொல்லு...” பிரபா அழுத்திக் கேட்க, அவளது அழுகை அதிகரித்ததே தவிர குறையவில்லை.

ப்ரதிக் இல்லாமல் இருக்கையில், அவனை விரும்பவில்லை என தைரியமாக பொய் சொல்ல முடிந்த அவளால், அவன் அருகே இருக்கையில், அந்த பொய்யை பொய்யாக கூட சொல்ல முடியாமல் தவித்தாள்.

“பிரபா...” அவள் அப்படி அழுவதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் நித்யானந்தம் அவர்கள் அருகே வர, ‘நீங்க இதில் தலையிடாதீங்க’ என்னும் பார்வையைக் கொடுத்தார்.

நித்யானந்தம் மகனைப் பார்க்க, அவன் முகத்தில் ஒரு ஜொலிஜொலிப்பும், கர்வமுமாக அவன் நிற்க, நித்யானந்தம் தேன்மொழியின் பக்கம் திரும்பினார்.

“உன் மனசுக்குள் என்ன இருக்குன்னு சொல்ல எதுக்கு இவ்வளவு தயக்கம் தேன்மொழி? எதுவா இருந்தாலும் சொல்லு...” நித்யானந்தம் கேட்க, அவரை நிமிர்ந்து பார்த்தவள், ப்ரதிக்கையும் ஒரு பார்வை பார்த்தாள்.

“அது... அது... நான்... எனக்கு...” அவள் வார்த்தைகளைத் தேட, ப்ரதிக் அவள் அருகே வந்து நின்றான்.

அவளது கரத்தை தைரியமாக பற்றிக் கொள்ள, கைகள் நடுங்க, அவனிடமிருந்து கரத்தை உருவிக்கொள்ள முயன்றாள். அது முடியாமல் போகவே, “எனக்கும் இவரைப் புடிக்கும்... ஆனா உங்களுக்கு பிடிக்காத எதையும் நான் செய்ய மாட்டேன் மேம்...” சொன்னவள் அழ, அவளை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.

“ம்மா... இன்னும் எவ்வளவு நேரம் ப்ளே பண்ணுவீங்க... தட்ஸ் எனஃப்...” அவள் அழுவது பொறுக்காமல், தாயிடம் உரைத்தான்.

“அவ என்கிட்டே உன் காதலை அக்ஸப்ட் பண்ணிக்காம, அவளை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சவால் விட்ட, அதான் இப்போ ஜெயிச்சாச்சே, கல்யாணத்தை வச்சுடலாமா?” பிரபா இப்படிக் கேட்க, விருட்டென அவன் நெஞ்சில் இருந்து நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

“உடனே கல்யாணம் பண்ணிக்கறேன்...” அவன் சொல்ல, பிரபாவின் காலில் விழப் போனவளை அழுத்தமாக பற்றித் தடுத்தார்.

“இதெல்லாம் எதுவும் வேண்டாம்... நீங்க ஒத்துமையா, சந்தோஷமா இருந்தா அதுவே போதும். இன்னைக்கு பக்கத்து கோயில் திருவிழாவாம்... நாம போகலாம்...” அவர் சொல்ல, ப்ரதிக் அங்கிருந்து வெளியேறினான்.

“அம்மாடி... நீ கொஞ்சம் வெளியே இரு...” நித்யானந்தம் சொல்ல, தேன்மொழி அங்கிருந்து வெளியேறினாள்.

“என்ன பிரபா இது...? இது நடக்கவே கூடாதுன்னு அவ்வளவு உறுதியா இருந்த, இப்போ திடீர்ன்னு அப்படியே உல்ட்டாவா மாறிட்ட?” மனைவியிடம் நம்ப முடியாமல் கேட்டார்.

“உங்க பிடிவாதம் உங்க பையன் கிட்டேயும் அப்படியே இருக்கு. அதைவிட, என் வாழ்க்கையோட முடிவுகளையே என்னால் எடுக்க முடிஞ்சது இல்லை. இதில் அவங்க வாழ்க்கையோட முடிவை எடுக்க நான் யாரு? சோ... விட்டுட்டேன்” மனைவி சொல்லவே, அதற்கு மேலே எதையும் சொல்லாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

கணவன் செல்லவே, அவரும் வெளியேறப் போக, “அம்மா...” பூமிகாவின் குரல் அவரைத் தடுத்தது.

“தேங்க்ஸ்ம்மா...” அவள் சொல்ல, ஒரு தலையசைப்போடு அதை விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

முன்பானால் தாயின் விலகல் அவளுக்கு அதிகம் கவலையை அளிக்கும். ஆனால் இப்பொழுது அப்படி இல்லாமல் போக, தாயின் மனநிலையை ஒரு மாதிரி உள்வாங்கத் துவங்கி இருந்தாள்.

தன்னைப் பெற்றவரின் பிடிவாதமும், கூடவே தன் பாட்டியின் அடக்குமுறையும் ஜெயிக்க, வேண்டாவெறுப்பாக தன்னை வயிற்றில் சுமந்தவர். தனக்கு இப்படி ஒரு தீராத வியாதி எனத் தெரிந்த பிறகு, அவர்கள்மேல் இருந்த கோபம் மொத்தமும், தன்னைப் புறக்கணிப்பதில் தீர்த்துக் கொண்டார்.

அதற்காக தன்மேல் பாசமே இல்லை என்றில்லை... அதைக் காட்டவோ, தன்னோடு ஒன்றவோ அவர் பயப்படுவது அவளுக்குப் புரிந்தது. தான் இல்லாமல் போகையில், அந்த வலியை அனுபவிப்பதற்கு, இப்பொழுதே தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்வதும் அவளுக்கு நன்கு புரிந்தது.

எனவே, இதற்கு முன்னர் தாயின்மீது இருந்த வருத்தங்கள் அனைத்தும் சென்றிருக்க, அவரை நினைத்து கவலையாக கூட இருந்தது.

மாலையில் அனைவரும் திருவிழாவுக்குச் செல்ல கிளம்பி வர, பூமிகாவும், தேன்மொழியும் தயாராக மறுத்தார்கள்.

பூமிகாவுக்கு அங்கே இருக்கும் பெருத்த ஓசைகள் சிறிதும் ஒத்துக்கொள்ளாது என்பதால் அவள் செல்ல மறுக்க, அவளுக்குத் துணையாக இருந்தே தீர்வேன் என தேன்மொழியும் செல்ல மறுத்தாள்.

அதே நேரம், அங்கே வந்த ஆகாஷ்... “பூமி... வா நாம திருவிழா பார்க்கப் போகலாம்” அவளை அழைக்க, அவள் கண்களில் ஆசை சுடர் விட்டது.

“இல்ல... நான் அங்கே வந்தா மயக்கம் போட்டு விழுந்துடுவேன்” அவள் மறுக்க,

அதுக்குத்தான் இதை வாங்கிட்டு வந்திருக்கேன்... சொன்னவனது கரங்களில் இருந்தது... ‘நாய்ஸ் ரிஜெக்ட்டர்’ கருவி.

“இதைப் போட்டுகிட்டா வெளியே இருந்து எந்த சத்தமும் உனக்கு சுத்தமா கேட்காது” சொன்னவன், அதை அவளுக்கு காதில் மாட்டி விட, நிஜமாகவே அத்தனை மயான அமைதியாக இருந்தது.

“க்கூ... க்கூ... க்கூ...” அவள் காதுக்கு அருகில் அவன் கத்த, அது எல்லாம் அவளைப் பாதிக்கவே இல்லை.

‘ரிஸ்க் தேவையா?’ என கேட்க வந்த நித்யானந்தம், மனைவியின் கண்களில் மறுப்பைக் காணவே அமைதியாகிவிட்டார்.

“கிளம்பினவங்க எல்லாம் முன்னாடி போங்க... நாங்க பின்னாடி வர்றோம்” அவன் சொல்ல, ப்ரதிக் அவனை முறைத்தான். அவனது முகத்தைப் பார்த்துவிட்டு, ஆகாஷ் வாய் பொத்தி சிரிக்க, அங்கிருந்த அனைவருக்குமே சிரிப்பு வந்தது.

“சரி... நாங்க முன்னாடி போறோம்...” சொன்ன பிரபாவும் நித்யானந்தமும், காவேரி, சிவாவோடு சென்றுவிட, பெண்கள் கிளம்பச் செல்லவே, ஆகாஷ் மாடியேற, ப்ரதிக் அவனை விரட்டிக்கொண்டு ஓடினான்.

“ஹையோ பாஸ்... நான் சும்மாத்தான் சொன்னேன்” அலறியவாறு அவன் ஓட, அவர்களது விளையாட்டைப் பார்த்து, இவர்களுக்கும் சிரிப்புதான்.

“தேனு... நான் புடவை கட்டிக்கவா?” பூமிகா கேட்க, சற்று ஆச்சரியமாக அவளைப் பார்த்தாலும், மறுக்கவில்லை.

தேன்மொழியும் அவளும், ஒரே மாதிரியான புடவையை கட்டிக் கொள்ள, பூமிகாவுக்கு ப்ளவுஸ் பெரியதாக இருந்தது. அதைப் பார்த்த தேன்மொழி உள்ளுக்குள் அதிர்ந்தாலும், அவளிடம் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.

இருவரும் கிளம்பி வெளியே வருகையில், ஆகாஷும், ப்ரதிக்கும் அவர்களுக்காக காத்திருந்தார்கள்.

ப்ரதிக் வெளிப்படையாகவே தன்னவளை விழிகளால் கொள்ளையிட, “லுக் நைஸ்...” சாதாரணமாக பாராட்டிய ஆகாஷ், பூமிகாவின் அருகில் சென்று நின்றுகொண்டான்.

அவளுக்குள் ஒரு ஏமாற்றம் பரவுவதை அவளால் தடுக்க முடியவில்லை. ப்ரதிக் அளவுக்கு இல்லை என்றாலும், கொஞ்சம் ஆர்வமாக, ஆசையாகப் பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என அவளால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

பூமிகா சாதாரணமாக எங்கேயுமே சென்றதில்லை... அப்படி இருக்கையில், இந்த திருவிழா எல்லாம் அவள் முதல் முறையாக நேரில் பார்க்கிறாள். கோவிலில் கூட்டம் அலைமோத, சற்று ஒதுங்கியே நின்றிருந்தார்கள்.

“நீங்க இருங்க... நாங்க இப்போ வர்றோம்...” சொன்ன ப்ரதிக், தேன்மொழியை கூட்டிக்கொண்டு சென்றுவிட்டான்.

சில நிமிடங்களிலேயே பூமிகா பெரும் களைப்பாகவும், பதட்டமாகவும் உணர, “வா... நாம கிளம்பிடலாம்...” சொன்னவன், அவளை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வர, அப்பொழுதுதான் வீட்டுக் கீ அவர்களிடம் இல்லை என்பதே அவனுக்குத் தெரிந்தது.

“நாம மாடிக்கு போகலாம்...” அவள் சொல்ல, பின்படிக்கட்டு வழியாக மாடி ஏறினார்கள்.

படிகளில் அவர்கள் ஏறுகையிலேயே, “ஹையோ... அங்கே எல்லாரும் நம்மளை தேடப் போறாங்க... நீங்க என்னன்னா, இங்கே கூட்டி வந்து வம்பு பண்றீங்க” தேன்மொழியின் குரல் அவர்களை வரவேற்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“நீதான குழந்தை வேணும்னு கேட்ட... இப்போ மாத்திப் பேசினா எப்படி?” கேட்டவன், அவள் அதிர்ந்து விலகும் முன்பே, அவள் இதழ்களை கொள்ளையிடத் துவங்கி இருந்தான் ப்ரதிக்.

அவன் கரங்கள் இரண்டும் அவள் மேனியில் தாராளமாக விளையாட, அவனை தடுக்க முயன்று தோற்று... இறுதியில் அவன்போக்கில் விட்டுவிட்டு, அவனோடு ஒட்டிக் கொண்டாள்.

அவன் இத்தனை வேகமாக இருப்பதன் காரணம் அவளுக்குப் புரிய, சில பல நிமிடங்கள் அவன் உணர்வுகளை உள்வாங்கி நின்றவள், ஒரு கட்டத்தில் அவன் தன்னை விடப் போவதில்லையோ என்ற எண்ணம் தோன்றவே,

அவனிடமிருந்து வலுக்கட்டாயமாக தன்னைப் பிரித்தவள், “ம்மா... எதுக்கு இந்தப் பாடு படுத்தறீங்க? எதையாவது மிச்சம் வைக்கற ஐடியா இருக்கா இல்லையா?” வெட்கமும், சிணுங்கலுமாக அவள் கேட்க, அவளை இழுத்து அணைத்தவன், அவள் இதழ்களில் சின்ன முத்தம் வைக்க, அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

“பய இப்போதைக்கு முடிக்க மாட்டான் போல, வா, நாம இங்கே படிக்கட்டிலேயே உட்கார்ந்துக்கலாம்” பூமிகாவின் காதுக்குள் முனகியவன், அவளது கை பிடித்து அழைத்துச் சென்று படிகளில் அமர்ந்து கொண்டான்.

“ஒரு முறை கிஸ் பண்ணா நானூறு கலோரி பெர்ன் ஆகுமாம்... இவன் வேகத்துக்கு நாப்பதாயிரம் எரிஞ்சு, எனிமியே காணாமல் போகப் போறா” அவன் சொல்லிச் சிரிக்க, அவனையே பார்த்திருந்தாள்.

அவள் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவன், “என்ன...? எதுக்கு இப்படிப் பார்க்கற?” அவளிடம் கேட்க, மறுப்பாக தலை அசைத்தவள், தன் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

அவனுக்கு அவள் எப்படியோ...? ஆனால் அவளுக்கு அவனை நிரம்பப் பிடிக்கும். அவனை உள்ளுக்குள் வெகுவாக ரசித்துக் கொண்டிருக்கிறாள், அவனை நேசிக்கிறாள். அவனது அருகாமை அவளை பாதிக்க, அவன் அசையாமல் இருப்பது ஒருவித வேதனையை அளித்தது.

“இவன் என்ன மரக்கட்டையா’ன்னு யோசிக்கறியா பூமி?” அவன் கேட்க, மீண்டுமாக அவன் முகம் பார்த்தாள்.

அடுத்ததாக அவன் பேசிய பேச்சுக்களைக் கேட்டவளுக்கு, என்ன பதில்வினை புரிவது என்றுதான் தெரியவில்லை.

தொடரும்.......
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,726
617
113
45
Ariyalur
சூப்பர் சூப்பர் சகி 🩵🩵🩵🩵🩵🩵🩵🩵ஒரு வழியா அண்ணனும் பிரண்ட்யும் சேர்ந்துட்டாங்க பூமி என்ன தான் வெளியிலயும் பேச்சுலயும் எதிர்பார்ப்பு இல்லாததை போல் இருந்தாலும் மனசு தவிக்குது 🙄🙄🙄🙄🙄🙄🙄
 
  • Like
Reactions: Infaa

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
88
40
18
Deutschland
அவளின் மனது ,அவளின் கண்களின் வழியாக தெரிந்ததோ..!
ஆகாஷ் ஏன் அமைதியா ஆகிட்டான் ..?
ஒரு ஜோடி ரூட் கிளியர் .
 
  • Like
Reactions: Infaa

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
Oru vazhiya Mozhiku route clear, Bhoomi & Akash?

மொழிக்கு எதையும் செய்யாமல் அவ விட்டுடுவாளா என்ன?

பூமியும் ஆகாஷும் வாழ்க்கையை வாழப் பிறந்தவர்கள்.

நன்றி!
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
சூப்பர் சூப்பர் சகி 🩵🩵🩵🩵🩵🩵🩵🩵ஒரு வழியா அண்ணனும் பிரண்ட்யும் சேர்ந்துட்டாங்க பூமி என்ன தான் வெளியிலயும் பேச்சுலயும் எதிர்பார்ப்பு இல்லாததை போல் இருந்தாலும் மனசு தவிக்குது 🙄🙄🙄🙄🙄🙄🙄

பூமிக்கும் வாழ்க்கையை முழுதாக வாழ்ந்து பார்க்க ஆசை இருக்கும் தானே, அதுதான்....

நன்றி!
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,106
438
113
Chennai
அவளின் மனது ,அவளின் கண்களின் வழியாக தெரிந்ததோ..!
ஆகாஷ் ஏன் அமைதியா ஆகிட்டான் ..?
ஒரு ஜோடி ரூட் கிளியர் .

ஆகாஷுக்கு அவளைப் புரியாதா என்ன?

ப்ரதிக், மொழி வாழ்க்கையில் இனி எல்லாம் வசந்தமே.

நன்றி!
 
  • Love
Reactions: Thani