• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

2.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
109
87
28
Salem

2.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே​



நீண்ட நெடிய அரண்மனை ஆம் அரண்மனை தான் ஆனா, இருக்க ஆள் தான் இல்ல, வீடு எல்லாம் பூரா வேலைக்காரவுங்க இந்த வீட்டுக்கு வந்த நாள்ல இருந்து பார்க்கிறேன் சும்மா ஒப்புக்கு தான் கூட்டம் கூடும் அதுவும் காசு பணத்துக்காக தான் என்று அந்த சமையலறையில் அஞ்சம்மா பேசிக்கொண்டு இருக்க அங்கே அமைதியாக கேட்டு கொண்டு இருந்தாள் அந்த அஞ்சம்மாவின் பேத்தி..

என்ன பாப்பா அமைதியா இருக்க?

எப்படி அவ்வா நீ இந்த வீட்டில் இத்தனை காலம் வாழ்ந்த..?

வாழ்ந்தேன் ஆனா கொஞ்ச வருஷம் இந்த வீடும் வீடா தான் இருந்தது. அதை மொத்தமா சிதைச்சுட்டு இதோ இவ்வளவு பெரிய வீடு சுடுகாடு மாதிரி நிசப்தமா இருக்கு.

கொஞ்ச வருஷமா எப்ப அவ்வா…

அதுவா இதோ இந்த வீட்டு நடுவாக்குல சாமியா இருக்கே அந்த மகராசி வாழ்ந்த காலத்துல ..

அது யாரு அவ்வா.

அது வேற யாரும் இல்ல இதோ இப்ப வந்து உட்கார்ந்து இருக்காரே பகலவன் அய்யா அவரோட சம்சாரம்..

அவரோட சம்சாரம் மா ? அவர் சம்சாரம் இந்த மாலினி தானே…

அடியேய் சத்தத்தை குறை..அது காதுல விழப் போகுது அந்த பொண்ணை இரண்டாவதாக கட்டிக்கிட்டாரு..

ஓஓஓ இது இரண்டாவதா?

ஆமா ஆமா..

அப்ப அந்த போட்டோல இருக்கவங்க… அவங்க பெயர் பாலாம்பிகை… அம்பிகா ன்னு தான் எப்பவும் சத்தம் வரும் அது பகலவன் அய்யா கூப்பிடுறது..

ம்ம்ம் எப்படி இறந்தாங்க அவ்வா?

அவங்க வேலை விஷயமா வெளியூர் போய் இருந்தப்ப இறந்துட்டதா தகவல் உடம்பு கூட கிடைக்கல அந்த மலைகாட்டுல..

அப்படியா எந்த ஊர்ல..

ஹேய் வாலு எனக்கு என்னத்த தெரியும். எனக்கு தெரிஞ்சது எல்லாம் இதோ இந்த அடுமனை அதை தாண்டி அதோ அந்தா இருக்கே தோட்டம் அது அவ்வளவு தான் அப்புறம் எப்பவாவது வெளியே அழைச்சிட்டு போவாங்க நமக்கு தான் எழுத படிக்க தெரியாதே கூடவே போய் கூடவே வந்துடுவேன் அவ்வளவு தான் .

அதெல்லாம் சரி இப்ப எதுக்கு இவங்க இங்க வந்து இருக்காங்க என்று கேட்க…

எனக்கு மட்டும் என்ன தெரியும் பார்க்கலாம் இரு என்ற அஞ்சம்மா காபியை எடுத்து கொண்டு சென்றவர் இந்தாங்க தம்பி நல்லா இருக்கீங்களா என்று ஆரம்பிக்க, அது ஒன்னு தான் குறை, ச்சே ஏய் காபியை எடுத்துட்டு போ என்று கத்தி விட …

மாலினி இப்ப எதுக்கு அஞ்சம்மாவை திட்டுற ..

வேற திட்ட வேண்டியவர்களை பேச முடியாதே வந்து இவ்வளவு நேரம் ஆகுது, ஆனா ஒரு மருந்துக்கு கூட எட்டி பார்க்கல ஏன் உங்க அக்காவுக்கு கதவு திறக்காத? இல்ல வரோம் ன்னு தெரியாதா? அதுக்கு மேல உங்கப்பா என்று படபடவென சத்தமிட படிகளில் இறங்கி வந்தார் ராமைய்யா..

என்னம்மா வந்ததும் இவ்வளவு சத்தம்..


இப்படி கத்தினா தானே வரீங்க, நீங்க பண்ணுறது என்று மாலினி பேசும் முன், அப்பா என்ன இது புதுசா வெளியே ப்ரோபோசல் எல்லாம் .

என்ன நீங்க நேரா கேட்காம பூசி மொழுகிட்டு இருக்கீங்க என்று மாலினி கத்த..

என்ன பூசி மொழுகுறாங்க என்ற கேள்வியுடன் வர்மன் வர

வர்மா என்றான் பகலவன்..

மாமா எப்படி இருக்கீங்க ?

நல்லா இருக்கேன் வர்மா அப்புறம் பிசினஸ் எப்படி போகுது என்று அவர் கேட்க..

எந்த பிசினஸ் மாமா அரசியலா இல்ல நம்ம குடும்ப பிசினஸ் ஆ?

இரண்டும் தான் வர்மா..

சூப்பர் மாமா அதுக்கு என்ன ஜகஜோதியா போய்ட்டு இருக்கு..

கேள்வியோடு பகலவன் பார்க்க..

நீ எத்தனை பார்வை
பார்த்தாலும்
அதற்கு பதில் ஒன்றே
நன்று என்ற நயமான ஒன்று..

யாரறிவார்
அவரவர் நயம் அவர்களுக்கு
நன்றா என்று

இதோ சொல்லிவிட்டான்
எல்லாம் நன்றே என்று..

அவன் பார்வையில்
எதை உணர்த்துகிறானென்றே
தெளிவாய்
தெரிந்தாலும்
பேசவும் முடியாமல் விலகி நிற்கவும் முடியாமல் தானே
வாழ்க்கை சுழற்றி கொண்டு
இருக்கிறது.

அச்சுழலில் சுழலும்
ஓராயிரம் விடயங்கள்
இருக்க
தன் எண்ணவோட்டம்
அடித்து செல்லாமல்

நிலைத்தா நிற்க போகிறது…

பகலவன் நிலையில்லாமல் வெறித்து இருக்க..

என்ன எதுக்கு இப்படி மலைச்சு போய் நிற்குறீங்க கேட்க வேண்டியதை கேட்காம..

கிளம்பலாம் மாலினி..

என்ன சொல்லுறீங்க..

அவ்வளவு தான் ன்னு அர்த்தம்..

ராமைய்யா வை பார்த்த மாலினி உங்களை எங்க எப்படி வழிக்கு கொண்டு வரனும் ன்னு எனக்கு தெரியும் என்று சொன்னதும் அறை வாசலில் கையில் வைத்து இருந்ததை போட்டு உடைத்தால் பல்லவி…அந்த சத்தத்தில் திரும்பி பார்க்க..

செய்ய முடிஞ்சதை செய் மாலினி என்று சொன்னதும்..

ஓஓஓ அப்படியா அண்ணி என்றவள் விருட்டென்று கிளம்ப

வாழ்த்துகள் வர்மா…

மாமா என்றான் தடுமாற்றத்துடன்..

பரவாயில்ல என்னால் தான் அப்பாக்கு வாரிசாக இருக்க முடியல நீயாச்சும் அந்த இடத்தை நிரப்பி விடு..

ராமைய்யா, “ பரவாயில்ல பகலவா இத்தனை வயசுக்கு பிறகு உனக்கு புரிஞ்சு இருக்கே…

வாழ்க்கை கத்துக்கொடுத்த பாடம் அப்பா நிறைய கடந்தும், இழந்தும் இருக்கேன் இப்ப கூட புரிஞ்சுக்கலன்னா எப்படி என்றவன் கிளம்பிவிட..

என்ன வர்மா என்னாச்சு அந்த மீட்டிங் ..

யார் பேசியும் பிடி கொடுக்கல தாத்தா நேர்ல தான் போய் பார்க்கனும்.

முதல்ல எங்க இருக்காங்கன்னு தெரியுமா ? பின்புலம் என்னனு தெரியுமா?

இதுவரை எதையும் கண்டுபிடிக்க முடியல தாத்தா, அந்த அளவுக்கு அவங்க பேஜ் எல்லாம் ப்ரொடெக்டிவா இருக்கு அதேநேரம் பார்லிமெண்ட் ல வரதும் தெரியாது போறதும் தெரியாது இதுவரை அவங்க டிபார்ட்மெண்ட் பிரச்சனைன்னு வந்தது இல்ல அந்த அளவுக்கு பக்கா…

அதெப்படி வர்மா ஒரு சின்ன என்று நிறுத்தியவர் சரி சரி ஆகுற வேலையை பார்க்கனும் நாளைக்கு காலைல டெல்லி ல இருக்கனும் ரெடி பண்ணிடு..

பண்ணிடலாம் தாத்தா என்றவன் நகர்ந்து விட…


பல்லவி, “ என்ன முடிவுல இருக்கீங்க அப்பா?

எல்லாம் நல்ல விஷயம் தான் ..

அப்பா


சொல்லு பல்லவி, வர்மா பகலவன் இல்ல நீங்க நினைச்சதை செய்ய புரியும் ன்னு நினைக்கிறேன் ப்பா, நீங்க நினைச்சது நடக்கலன்னா வருத்தப்படக்கூடாதுன்னு முன்னாடியே சொல்லுறேன்.


தெரியுமா, தெரியாமலா இதுல இறங்குவேன்.

எதுக்கு இப்ப நமக்கு அடுத்த ஸ்டேட் பாலிட்டிக்ஸ் இருக்கிறதை பார்க்க இவன் மட்டும் தான் இருக்கான். பார்த்தி அண்ணன் வீட்டில் இருக்கிறது எல்லாம் சொத்தை அழிக்க பிறந்ததுங்க அதுங்களை எதுக்கும் நம்ப முடியாது. அப்புறம் இன்னும் பெரிசாக்கி என்ன பண்ண போறோம்.


பிறந்தது வேணும் ன்னா சின்ன அளவா இருக்கலாம் ஆனா சாகும் போது ஒரு சாம்ராஜ்யத்தை ஆண்டவனா தான் இருக்கனும் அப்படி ஒரு ஊர்வலம் இருக்கனும்.

பல்லவி அவர் சொன்னதை பார்த்து விட்டு ,என்னவோ பண்ணுங்க என்றவள் சென்றுவிட…

வர்மன், “ டேய் உன்கிட்டே ஒரு வேலை குடுத்தா அதை கண்டுபிடிக்க முடியல என்று சொல்லுறியே என்னடா நீ என்று தன் நண்பனை கேட்க.

இந்த பக்கம் அவனோ.. கண்டுபிடிக்க முடியலன்னா முடியலன்னு தான் சொல்ல முடியும் என்று நெற்றியை தேய்த்து கொண்டவனுக்கோ பதற்றம் நாளை நடக்கவிருக்கும் நிகழ்வை நினைத்து..

என்னடா சத்தத்தை காணோம் நாளைக்கு நான் டெல்லி ல இருப்பேன் நீ வர தானே‌.

எனக்கு அங்க தான் டியூட்டி என்றான் அவன்..

என்ன மச்சான் அங்க டியூட்டி உனக்கு ? நீ ஈஸ்ட் ல தானே…

இல்ல இல்ல நான் மினிஸ்டரி ல வரச் சொல்லி டியூட்டி என்றவன், சரி டா நாளைக்கு பார்க்கலாம் வைக்கட்டா ..

ஓகே சந்திரா பாய் என்று போனை வைத்து விட…

என் தாலியை அறுக்குறாங்க இந்த பக்கமும் அந்த பக்கமும் ச்சே என்றவன் போனை வைத்து விட்டு உள் நுழைந்து விட்டான்.



போபோ எதுக்கு இப்ப இரண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருக்கீங்க என்று நிமாவின் சத்தத்தில் திரும்பிய ஆதித்யா…உன்னால தான் இருக்கிற பிரச்சினையில் புதுசா ஒன்றை கிளப்பி விட்டு இருக்கியே என்ன பண்ணலாம்.

என்ன வேணும் ன்னாலும் பண்ணலாம் அண்ணா இது என்ன புதுசா..

நிமா..

அண்ணா எதுக்கு இவ்வளவு டென்ஷன்? உனக்கு என்ன அதை சரியாக கொண்டு போக வேண்டியது என் பொறுப்பு என்றவள் போபோ வை பார்க்க பக்கத்தில் வா என்று அவர் கை நீட்டி அழைக்க…

போபோ, “ உன்னையே உயர பறக்க வைக்கனும் ன்னு ஆசைப்பட்டேன் செஞ்சுட்டேன். இப்ப அடுத்த ஒரு ஆசை..

என்ன போபோ என்றாள் சிரிப்புடன்..

இந்த மூணு பேர்ல யாரையாவது ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க நிமா என்று போபோ சொன்னதும் பதறி வெளியே நகர்ந்த மூவரையும் பார்த்து சிரித்த ஆதித்யா.. போபோ அங்க பாரு மூணு பேரும் ஓடிட்டானுங்க…

டேய் உள்ள வாங்கடா…

ஏன் இவ இழுத்து வச்சு இருக்க பிரச்சனைகள் எல்லாம் போதாது இதுல இந்த போஸ்டிங் வேறையா? இதுக்கே எப்ப எவன் வருவான் ன்னு தூக்கம் இல்லாம இருக்கோம் என்று முதலில் பதறியது ரவி தான்‌.

ஏன் என் பேத்திக்கு என்ன அவ செய்யுறது எல்லாம் நல்ல காரியம் தானே என்றார் போபோ..

உண்மை தான் போபோ நல்ல காரியம் தான் ஆனா உலகம் அதை எதிர்ககிறதே இப்ப வச்சு இருக்க செக் பாயிண்ட் என்ன என்ன பிரச்சனையை இழுத்துட்டு வருமோ…

நல்ல விஷயம் தானே பண்ணுறா என்றார் போபோ மறுபடியும்..

இதுல தொண்ணூறு சதவீதம் அந்த நிறுவனுங்களை ரன் பண்ணுறது அரசியல்வாதிங்க தான் அப்புறம் எப்படி ஒத்துப்பாங்க இப்ப அவங்க பார்டியிலேயே இதை அப்போஸ் பண்ணுறாங்க என்றவன் ,அதுக்கு தான் அந்த டிபார்ட்மெண்ட் ல இருந்து இவளை தூக்க எல்லாரும் முயற்சி. ஒருத்தர் மட்டும் சரி சொன்னா போதுமா மத்த எம்பி எல்லாம் வேணாம் ன்னு இல்ல சொல்லுறாங்க…


சரி சரி அதை எப்படி என்ன பண்ணலாம் ன்னு பார்க்கலாம் இப்ப கிளம்புங்க நாளைக்கு மீட் இருக்கு இல்ல என்றவள் ,போபோ நான் டெல்லி போய்ட்டு வரேன் வேலை இருக்கு அதை சொல்லத்தான் வந்தேன்..


சரி நிமா… ரிஷி என்ன சொல்லுறா?

அவங்க பயம் நியாயம் தானே போபோ, கண்ணுக்கு தெரியாம நடந்து இருந்தா கூட இவ்வளவு ரியாக்ட் பண்ணி இருக்க மாட்டாங்க தன் கண்ணு முன்னாடியே தன்னையும் குழந்தையும் இங்க தள்ளி விடும் போது அந்த உயிர் எவ்வளவு துடிச்சு இருக்கும் . அந்த துடிப்பு சாதாரணமா இருந்து இருக்காதே என்றவள் எண்ணம் எல்லாம் அன்று காரிலிருந்து நிமாவும் ரிஷி மலையிலிருந்து உருண்ட நினைவுகள் தான்.அதை நினைக்க நினைக்க உடல் உதற ஆரம்பித்து இருந்தது .வண்டி உருண்டதை கூட ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் நம்மை சார்ந்தவர்களே நம் கண் முன்னே அந்த வண்டி மீது ஆயிலை கொட்டி பத்த வைக்க ஆரம்பிக்கும் போது எவ்வளவு துடித்து இருப்பார். துணிந்து கண்ணாடிகளை உடைத்து நிமாவை முதலில் வெளியே தூக்கி தள்ளி தானும் வெளியே குதிக்கும் போது பற்றுதலுக்கு அந்த மலை முகடுகளில் பின்னி பிணைந்து இருந்த வேர்களின் சருகளில் சிக்கி தவித்த நாட்களை எல்லாம் மறந்திட முடியுமா? மறுத்திட முடியுமா….


தொடரும்

 
  • Love
Reactions: Kameswari