• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

4.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
109
87
28
Salem

4.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே​





அன்றைய இரவு யாருக்கு குறுகியதோ இல்லையோ ரிஷிக்கு குறுகி போய் இருந்தது. காலைப்பொழுது எப்போதும் போல் விடிய எழுந்தவர் கண்ணுக்கும் காதுக்கும் மினிஸ்டர் காலை ஒன்பது மணியளவில் கிளம்புகிறார் என்ற செய்தி தான். அவசரமாக எழுந்து ரிஷி அறையிலிருந்து வெளியே வர நிமா தயாராகி அடுத்த வேலையில் மூழ்கி இருந்தாள்.

என்ன வாகி அதுக்குள்ள எங்க?

அம்மா சின்னதா அந்த பங்களாவில் சில அரேஞ்மெண்ட் பண்ணனும் அதான் என்றவள் தாயை பார்த்துவிட்டு காபி ம்மா..

ம்ம்ம்…

உட்காருங்க என்றவள் காபியை தர…

தேங்க்ஸ் டா தலைவலி…

தேவையில்லாத வேலையை விடுங்க அம்மா தலைவலி தன்னால போய்டும்.

வாகி என்று அதட்ட..

ப்ச் என்ன அதட்டறதால என்ன கிடைக்க போகுது உங்களுக்கு? எப்படியும் நடக்க வேண்டியது நடந்து தானே ஆகனும் என்று நிமா சொல்ல..

அது நல்லவிதமான விஷயம் ன்னா பரவாயில்ல வாகி நீ ஏழரையை தானே இழுத்துட்டு வர…

என்ன ம்மா ஏழரை? எல்லா பள்ளியிலையும் அந்த அந்த மாநில மொழி கட்டாயம் ன்னு சொல்லிட்டேன். நீங்க டிரான்ஸ்ஃபர், தொழில் விஷயமா அங்க போறோம் எங்க மொழி முக்கியம் ன்னு சொன்னா? அப்ப அங்க இருக்கிற தொழில் பணம் வசதி தேவை அந்த மக்களோட மொழி தேவை இல்லையா…?

நான் அங்க அங்க இருக்கிறதை தான் படிக்க சொல்லுறேன் அவ்வளவு தான். அதுக்கு அங்க இருக்கிறவங்களே பெரிசா ஒத்துழைக்கல நீ ஏன் வாகி… என்று ரிஷி இலக்கணமாய் கேட்க,யாராவது முதல்ல நின்னா தானே? அது நானாவே இருந்துட்டு போறேன். அம்மா சமைச்சுட்டேன் நீங்க ரிலாக்ஸா நேரா ஏர்போர்ட் வந்தா போதும் என்றவள் சிரிக்க..

சமைச்சியா என்று நெஞ்சில் கைவைத்து கொண்டு விதுன் வர…


டேய் என்றாள் நிமா..

அம்மா நான் கொஞ்ச நாள் வாழனும் ன்னு நினைக்கிறேன். நீங்க கொஞ்சம் சமைச்சு தரியா என்றதும், அவன் மீது தண்ணியை ஊற்றியவள் போதும் விது ,அதே தான் நானும் சொல்லுறேன் போதும் ன்னு வாகி பாவம் நான் என்று மீண்டும் சொல்ல..

என்னம்மோ பண்ணி தொலைங்க அம்மா ஒன்பது மணிக்கு தான் அவர் டெல்லி ல இருந்து ப்ளைட் அதை கால்குலேட் பண்ணிக்கோங்க அப்புறம் வந்து மிஸ்டர். ராமைய்யா அவருக்காக தான் மினிஸ்டர் பேச வரார் என்ற விஷயத்தை சொல்ல காபி குடித்து கொண்டு இருந்த ரிஷி க்கு புரையேறிவிட…

என்னடி சொல்லுற அந்த ஆளா…

ஆமா அந்த ஆள் தான் அங்க ஆட்சியே அவங்க தானே அப்ப அவங்க தானே வருவாங்க…

வாகி…

ம்மா இது அபிசியல் நீ ஏன் என்றவள் டேய் உன்னோட ப்ளான் என்ன ?

நீ எங்கேயோ அங்கே தான் நான் என்றவனை பார்த்தவள் என்ன சொல்லுற என்று புருவம் உயர்த்த தன் பேக்கெட்டில் இருந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்ட அதை வாங்கி பார்த்தவள் யோசனையோடு நிற்க…

என்ன வாகி என்றான் விது…

என்ன விஷயம் ன்னு புரிபடல ஏதோ தப்பா இருக்கு விது…

கண்டிப்பா உன்னையே லாக் பண்ணுறது தான் உன் கட்சியிலேயே நிறைய பேருக்கு விருப்பம் அது உனக்கு தெரியுமா தெரியாதா ன்னு தெரியல என்றவனை பார்த்தவள் நான் டிபார்ட்மெண்ட் ல தலையிடறது இல்லையே…


இல்ல தான் பினினாஸ் மினிஸ்டர் இருந்தாலும் டிசிஷன் எல்லாம் நீ தானே அது அவங்களுக்கு தெரியாதுன்னு நினைக்குறியா…?


ஓஓஓ…. அப்ப பெரிசா இருக்கு…

வாகி…

தேவைகள் முடிந்த பிறகு
அனைத்து
உறவும்
ஊமை ஆகிடும்…


உறவே அப்படிங்கற போது இவங்க எல்லாம் எம்மாத்திரம் என்று விது சொன்னதும்…

என்னடா பயங்கரமா பேசுற…

அனுபவம் வாகி அப்படித்தானே ம்மா…என்று ரிஷியை பார்க்க கண்கலங்கி அவனை இழுத்து அணைத்து கொண்டவர் நான் அப்படி எல்லாம் எதுவும் பண்ணல டா…

உன்னையே சொன்னனா நான், ஏன் நீ உடனே உன்னையே ஆஜர் ஆக்குற என்று விது உறும…


இருந்தாலும் விது என்று தேம்பி நிற்க…

அம்மா இந்த உலகத்தில் நீ இல்லைன்னாலும் எனக்கு தேவையானதை செஞ்சு தானே வைக்கனும் ன்னு எல்லாத்தையும் பார்த்த அப்புறம் என்ன ? வாகி க்கு என்ன பண்ணன்னு இதுவரை தெரியல ஆனா இந்த விது க்கு நீ பண்ணாததே இல்ல என்று ரிஷியை தோளில் தட்டி கொண்டே இருக்க கண்கலங்கி நின்று இருந்தாள் நிமா ..

இப்படியான தருணங்களில்
நெஞ்சில்
கசப்புகளையும் காயங்களையும்
தாண்டி
நெருடலும்
சந்தித்த துரோங்களும்
ஆறாத வடுவாய்
நிற்க
எந்த சூழலிலும்
வீழ்த்தியே தீருவேன் என
கங்குகள் மட்டும்
வளர்ந்ததுவே…!!

அதை நெஞ்சில் ஏற்றி ஏற்றி அதை அழிக்காமல் வளர்த்து கொண்டே இருக்கிறாள் நிமாவாகினி..இவள் இங்கே வளர்க்க வளர்க்க அங்கே ரிஷி இன்னும் தள்ளி எங்கேனும் செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு நிகழ்வாய் ஏற்படுத்த ஆதியிடம் கேட்டு கொண்டு இருக்க…

போபோ எதற்கும் அசைந்தபாடு இல்லை..

பிள்ளையை எங்க அனுப்ப பார்க்கிற இந்த உலகத்தை ஆள பிறந்தவ அவ,அவளை வேற இடத்துக்கு மாத்திட்டா எதையும் செய்ய முடியாதுன்னு எண்ணமா உன் எண்ணத்துக்கு எல்லாம் அப்பாற்பட்டவ அவ, இதோட நீ அவளை பத்தி யோசிக்கிறதை நிறுத்திட்டு மகனை கவனி அவன் ஏங்கி போய் இருக்கான் என்று சொல்லி இருந்தது தான் நினைவு வந்தது..

விதுனை அணைத்து கொண்டே கண்ணீர் சிந்தி இருந்த ரிஷி மகளை பார்க்க… நேரமாச்சு மா நான் கிளம்புறேன் என்று தழுதழுக்க..

வேணாம் வாகி இந்த வேலை விட்டுடு நான் சாகுற வரை நீங்க இரண்டு பேராச்சும் எனக்கு வேணும் டா…

வாகி ஒவ்வொரு முறையும் கிளம்புறேன்
நேரமாச்சு
வருகிறேன் வேலை இருக்கு,நேரமில்லை என்று சொல்லும் போது எல்லாம் எங்கோ ஒரு விரிசல் விழுந்து கொண்டே இருக்கிறது ரிஷிக்கு, இதோ இப்போதும் நேரமாச்சு என்று அவள் நிற்க உடைந்து கொண்டு இருக்கிறார் ரிஷி பாலா…

ம்மா நான் எங்க போகப் போறேன், அங்க வீட்டுக்கு தானே என்றவள் ,டேய் விது நான் கிளம்புறேன் நீ எப்ப வர…

அங்க எனக்கு வேலை இல்ல நான் இந்த கேஸை பாலோ பண்ண போகனும் அப்புறம் இந்தா என்றவன் டேபிளில் வைத்து இருந்த ஒரு பவுச்சை தர..

என்னடா…

உன்னோட லைசென்ஸ் கன் எடுக்காத, கொஞ்ச நாளைக்கு இதை யூஸ் பண்ணு…

என்னடா சொல்லுற…

சொல்லுறதை செய் வாகி என்றவன் அவளை ஒரு பார்வை பார்க்க..

ஓகே ஓகே என்றவள் ம்மா பாய் , பாய் டா விது என்று கிளம்பி இருந்தாள் அவள் பங்களாவை நோக்கி…அவள் பின் வாசலை தாண்டியதும் ரிஷி எழுந்து கொண்டவர் நானும் கிளம்புறேன் டா மினிஸ்டரை ரிசிவ் பண்ணனும் என்று சொன்னதும்…ஓகே கலெக்டர் அம்மா உனக்கு தான் அந்த பொறுப்பா?

ஆமா டா மெயில் வந்து இருக்கு..

ஓஓஓ சரி சரி என்றவன் அறைக்குள் நுழைந்து அவன் வேலையை பார்க்க..


ரிஷிபாலா, “சர்மா, டிஜிபி கிளம்பி இருக்க சொல்லு நாம ஏர்போர்ட் போகலாம் எப்படியும் இரண்டு மணிநேரம் ஆகும் என்று சொல்ல எல்லாம் ரெடி மேம் நீங்க வந்தா கிளம்பலாம். ஓகே டூ மினிட்ஸ் என்றவள் கிளம்பி விதுவிடம் சொல்லிவிட்டு கிளம்ப…

யாரை கேட்டு டா அந்த பினான்ஸ் மினிஸ்டர் ப்ளானை சேஞ்சு பண்ணான் இப்ப எதுக்கு அங்க போகனும் இதெல்லாம் சரியில்ல வர்மா, முளைச்சு வரும் போதே இதெல்லாம் கிள்ளிடனும் இல்லன்னா நமக்கு தான் ஆபத்து..


பண்ணிக்கலாம் தாத்தா என்றவன் மனதில் ஏகப்பட்ட எரிச்சல், இருக்கிற நிறைய தொழிலில் கல்வியும் ஒரு தொழில் ஆனால் அதனால் பின்னப்பட்ட ஆயிரம் விஷயங்கள் இருக்க மண்டை காய்ந்தது அவனுக்கு ச்சே இவளை இன்னைக்கு இரண்டுல ஒன்னு பார்க்கிறேன் என்றவன் போனை எடுத்து கொண்டு டேய் சந்திரா..

சொல்லுடா ..

நான் டார்ஜ்லிங் போறேன் நீ எங்க இருக்க…

ஒரு பெருமூச்சுடன் என்ன விஷயம் வர்மா எதுக்கு இவ்வளவு கோபம்

பின்ன டெல்லி ல மீட்டிங் ன்னு சொல்லிட்டு இப்ப இடத்தை மாத்திட்டாங்க இதுக்கு மேல இதை வளரவிட்டா இங்க நிறைய விஷயங்கள் பிரச்சினை ஆகிடும் அதான்‌.

நான் என்ன பண்ணனும் வர்மா டார்ஜ்லிங் வரவா..

ஆர் யூ ப்ரி…

ப்ரி பண்ணிக்குறேன் வா எப்ப வர.


ஈவினிங் தான் மீட் வந்துட்டு போன் பண்ணுறேன் ஓகே நான் ஏர்போர்ட் ல வெயிட் பண்ணுறேன் என்று போனை வைத்தவன் எதிரில் இருப்பவர்களை பார்க்க..

அப்ப இன்னைக்கு ஒரு டிக்கெட் எதிர்ல நிக்க போகுது…

டேய் என்று பல்லை கடித்தவன் விருட்டென கிளம்பி விட…

சரி சரி அடுத்த அனல் வரவும் கிளம்பனும் டா வா என்று இழுத்து கொண்டு வந்து வண்டியை எடுக்க சரியாக போன் வந்தது.. பிக்கப் பண்ணிக்கோ வேந்தா…

வரேன் வரேன் என்றவன் திரும்ப..


பரத், “ என்னடா…

என்ன அதிசயம் இன்னைக்கு எனக்கு போனை போட்டு இருக்கா…

ஏதோ மன உளைச்சல் ல இருப்பா அப்ப…

எப்படி டா…

நாங்க ஒட்டி பொறக்கலன்னாலும் அவளோட வளர்ந்து இருக்கேன் டா… அதான் என்றவன் சிரிக்க..சரி சரி போகலாம் என்ன டென்ஷன் ன்னு தெரியல என்று வேகமாக செல்ல..

நீல வண்ண காட்டன் புடவையில் மடிப்பு கலையாமல் நிமிர்ந்து நின்று இருந்தவளை பார்த்து விசிலடித்த வேந்தன்… என்ன ஸ்வீடி இன்னைக்கு ஆளையே அசத்துற கெட்டப்ல வந்து இருக்க…

ரவி எங்க…

அவன் இன்னைக்கு நம்மளோட வரமாட்டான் என்று பரத் சொல்ல…


அப்ப ராமைய்யா கூட…

அப்படித்தான் நினைக்கிறேன் என்றவன் ஏறு பார்த்துக்கலாம் என்றான் பரத்.

பங்களா சென்றவள் அடுத்த வேலையில் மூழ்கிவிட..

ஏற்போர்ட்டில் மினிஸ்டரை வரவேற்க பாக்டோக்ரா சென்று இருந்தாள் ரிஷி பாலா…அவருக்கான பாதுகாப்பு சரியாக ஏற்படுத்தி இருக்க.. மினிஸ்டர் மதியம் போல் வந்து இறங்கினார் பாக்டோக்ரா ஏர்போர்ட்டில் வந்தவருடன் இணைந்தே வந்தான் வர்மன்…

இருவரும் வெளியே வர ரிஷி பாலா மரியாதை நிமித்தமாக வணங்கி பூங்கொத்தை தந்தவள் அழைத்து செல்ல மிஸஸ். ரிஷிபாலா மீட் மிஸ்டர் வர்மன் தமிழ்நாடு ல பெரிய தொழிலதிபர் என்று சொல்ல. ஹலோ சார் என்று கை தர… இமைக்க மறந்து அசையாமல் நின்று இருந்தான் சாகித்ய வர்மன்.


தொடரும்
 
  • Love
Reactions: Kameswari

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
417
99
43
Tirupur
வர்மன் உறைஞ்சு போனதுக்கு என்ன காரணமோ? 🧐
ஆனா ஏதோ சிறப்பான சம்பவம் இருக்கு போல... 😍
 
  • Like
Reactions: Lakshmi kandhan

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
109
87
28
Salem
வர்மன் உறைஞ்சு போனதுக்கு என்ன காரணமோ? 🧐
ஆனா ஏதோ சிறப்பான சம்பவம் இருக்கு போல... 😍
மிக்க மகிழ்ச்சி சகோதரி
 
  • Like
Reactions: Kameswari