• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

துளி துளியாய் துரோகம் 5

kkp5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
55
70
18
Thanavur
துளி துளியாய் துரோகம் 5


வர்ஷா மருத்துவமனையில் தன் அன்னையைக் கண்டபின் சிந்து மற்றும் பைரவியுடன் தங்கள் அலுவலகத்திற்குக் கிளம்பினர். எப்படியோ வாகன நெரிசலில் சமாளித்து பைரவி காரை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

சிந்து தாங்கள் எங்கு உல்லாசப் பயணம் மேற்கொள்ளலாம்? சிறந்த இடங்கள் எவை? எனக் கூகுளில் தேடியபடி இருந்தாள்.

வர்ஷா ” நாம டிரிப் போன சமயம் இந்த கல்பனாவும் அளோட தம்பியும் அப்பாவைச் சொத்துக்காக எதாவது செய்திட்டா? பயமா இருக்கு. இந்த கல்பனாவை எப்படி மேனேஜ் பண்ண. பெட்ரூம்குள்ள பாடிகாட் போக முடியாது” எனத் தன் நடு நெற்றியில் அழுத்திச் சிந்தித்தபடிச் சொன்னாள்.

இதற்குச் சிந்து தலையசைப்போடு நிறுத்தினாள். பைரவி என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதி காத்தாள்.

மூவரும் அலுவலகத்தை அடைந்தனர். மோகன் தேன்நிலவு சென்றுள்ளதால் அனைத்து வேலைகளையும் பொறுப்பாக வர்ஷா கவனிக்க வேண்டியிருந்தது.

ராகேஷ்க்கு மாற்றப்பட்ட நிறுவன விவகாரங்களை வேண்டுமென்றே தவிர்த்தாள். ஆனால் அங்கு நடப்பவற்றை தனக்கான ஆட்களைக் கொண்டு அவ்வப்பொழுது அறிந்து கொண்டாள். ராகேஷ் வரவில்லை என்னும் செய்தி கிட்டியது.

மோகன் இல்லாத நேரம் என்பதால் சிந்து மற்றும் பைரவிக்கும் சில பொறுப்புகளை வர்ஷா வழங்கினாள்.

சிந்து மற்றும் பைரவி வேலைகளை சிரமேற்ச் செய்தனர். அலுவலகத்தில் சிலருக்கு இதைக் கண்டு புகைச்சல் ஏற்பட்டது. இது வழக்கமான செயல். வர்ஷா அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை.

யாரேனும் அப்படிக் கேட்டு வந்தால் “நான் உங்களுக்கு அசைன் பண்ண வேலை முடிச்சிங்களா? ” எனக் கேள்வி கேட்பாள். வேலையில் குறைகளைக் கண்டு பிடித்து உண்டு இல்லை என ஆக்கிவிடுவாள்.

ஒருமுறை மோகன் வெளிநாடு சென்றிருந்த சமயம்.

அலுவலகத்தில் வேலை செய்யும் முதியவர் “என் அனுபவம் என்ன? இந்த சின்ன பொண்ணுங்களுக்கு நான் பதில் சொல்லணுமா?” என வர்ஷாவிடம் முறையிட்டார்.

வர்ஷா சிரித்த முகமாய் அந்த முதியவருக்கும் சிந்து பைரவி என மூவருக்கும் ஒரே வேலையைக் கொடுத்தாள்.

சிந்து மற்றும் பைரவி அந்த வேலையைக் குறைவான நேரத்தில் மிகவும் சரியாகவும் துல்லியமாகவும் செய்து முடித்தனர். இருவரும் கொடுத்த தரவுகள் பக்காவாக இருந்தது.

“மூணு பேரும் கான்பிரன்ஸ் ஹால்ல ஒண்ணா தானே வேலை செய்தீங்க. உங்களதுல இத்தனை குளறுபடி .. நீங்களே அவங்க ரெண்டு பேர் வேலையை செக் பண்ணி பாருங்க” எனக் காண்பித்தாள்.

வாயடைத்துப் போனார் மனிதர். இனி சிந்து பைரவி பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்று சங்கல்பம் செய்து போய்விட்டார். போகும் முன் “உங்க வேலை அபாரம்” என வாழ்த்தியும் சென்றார்.

அந்த நிகழ்வுக்குப் பிறகு சிந்து பைரவியின் மேல் அனைவருக்கும் ஒரு மதிப்பு உண்டானது. அதற்கு முன்பெல்லாம் “பிரெண்டுனு சொல்லிகிட்டு வேலையே செய்யாம சம்பளம் வாங்குது கொடுத்த வெச்சதுபா ரெண்டும்” எனப் பேசுவார்கள்.

பின்னர் “என்ன இருந்தாலும் இந்த கம்பெனில வேலை செய்யணும்னா ஒரு தகுதி வேணும்ல. சிந்து பைரவிக்கு நல்ல நாலேஜ் இருக்கு” எனப் பாராட்டினார்கள். ஆனாலும் சிலரின் விமர்சனங்கள் இல்லாமல் இருப்பதிலை. மனிதப் பிறவி அன்றோ!!!

சிந்துவும் பைரவியும் இவற்றை எல்லாம் காதிலேயே போட்டுக் கொள்வதில்லை. தங்களால் வர்ஷாவிற்கு எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர்.

மாலை ஏழு மணி வேலைகள் முடிந்ததும் மூவரும் அலுவலகத்திலிருந்து கிளம்பினர். காரில் அமர்ந்ததும் எப்பொழுதும் போலப் பைரவி காரை ஓட்டினாள். சிந்துவின் போன் சிணுங்க .. எடுத்துப் பார்த்தாள். பங்களாவில் வேலைச் செய்யும் சமையல்கார அம்மா.

சிந்து மற்றும் பைரவி பங்களாவில் தங்களை வர்ஷாவின் தோழி என்பதை விட தாங்களும் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள்தான் என்னும் ரீதியில் நடந்து கொள்வார்கள். அதனால் பங்களாவில் பணிபுரியும் வேலை ஆட்கள் இரு பெண்களிடமும் நட்பாகப் பழகுவார்கள். அதிலும் சமையல் செய்யும் அம்மா ஒருபடி மேல் என்றே கூறலாம்.

அப்போது தான் சிந்து கவனித்தாள் பலமுறை அவர் போன் செய்திருப்பதை மிஸ்டு கால்களாக காட்டின.

“சொல்லுங்க அம்மா .. சாரி வேலைனால போன் பார்க்கல .. ஏன் இத்தனை தடவை போன் செய்திருக்கிங்க ..” சிந்து கலவரத்துடன் கேட்டாள்.

“வர்ஷா அம்மாவும் நீங்க இரண்டு பேரும் தயவு செய்து பங்களா பக்கமா வந்திடாதீங்கனு சொல்லத்தான்” எனப் பதற்றமாகப் பேசினார்.

“ஏன் எதாவது பிரச்சனையா?” என்றபடி போன் ஸ்பீக்கரை ஆன் செய்தாள் அத்துடன் ரெக்கார்டும் செய்தாள். வர்ஷாவும் பைரவியும் கூர்மையாகக் கவனித்தனர்.

“அது .. அது ” என அவர் திணற

“பயப்படாம சொல்லுங்கமா” சிந்துவிற்கு ஏதோ பிரச்சனை எனப் புரிந்துவிட்டது.

“இந்த ராகேஷ் தம்பி பார்ட்டினு சொல்லி தன்னோட பிரெண்ட்ஸலாம் கூடிட்டு வந்து ஒரே கூச்சலும் கும்மாளமுமாய் இருக்கு. பத்து பதினஞ்சி பேர் இருக்கும் அரைகுறையா டிரஸ் போட்டு ஆடுதுங்க. சத்தமா பாட்டு வேற .. பாட்டில் பாட்டிலா குடி. விதவிதமா சமைக்கச் சொன்னான. என்கிட்டியே சொல்றான் உங்க மூணு பேரையும் இன்னிக்கு ராத்திரி .. சொல்லவே நாகூசுதுமா … தயவு செய்து இங்க வந்திடாதீங்க” என நா தழுதழுக்கப் பேசினார்.

இதைக் கேட்டு பைரவிக்கும் வர்ஷாவுக்கும் ஆத்திரமாக வந்தது. ஆனால் சிந்து போன் பேசிக் கொண்டிருந்ததால் அமைதிக் காத்தனர்.

“சரிமா நாங்க பார்த்துக்குறோம் .. நீங்க ஜாக்கிரதையா இருங்க” என போனை கட் செய்தாள் சிந்து.

“பைரவி கொஞ்சம் வண்டியை ஓரமா நிறுத்து” என்றாள் சிந்து ஏனெனில் இன்னும் பத்து நிமிடத்தில் பங்களா வந்துவிடும்.

வண்டியை ஓரமாக நிறுத்திய பைரவி “ அவன் என்ன பெரிய பிஸ்தாவா? போய்தான் பார்ப்போமே” எனக் கோபத்தில் கொந்தளித்தாள்.

“இல்ல பைரவி அவசரப்படாத .. அவனுங்க போதையில் இருக்காங்க .. அதுவும் நிறையப் பேர் இருக்காங்க. அது நமக்குத் தான் ஆபத்து” என்றாள் சிந்து சிந்தித்தபடி

“சிந்து சொல்றது சரிதான் பைரவி .. அவசரப்படாத” வர்ஷாவும் சிந்துவின் பக்கம் பேசினாள்.

“ஆனா இவனுங்களை இப்படியே விடக் கூடாது” எனப் பைரவி சொல்லிக் கண்ணடித்து சிரித்தாள். உடனே வர்ஷாவிடமிருந்து போன் எடுத்துப் பேசினாள்.

அவளின் திட்டம் புரிந்து வர்ஷாவும் சிந்துவும் “ நடத்து .. நடத்து” எனப் புன்னகையுடன் அவள் செய்யும் செயலுக்கு ஆதரவுத் தெரிவித்த வர்ஷா “நான் ரெடி” என்றும் கூறினாள்.

பைரவி பங்களாவை நோக்கி வண்டியைச் செலுத்தினாள். அவர்களைக் கண்ட சமையல்கார அம்மா பதறிப் போனார். மூவரையும் நோக்கிச் செல்ல எத்தனிக்க “ஏ கெழவி எங்க போற?” என வாய் குழற ராகேஷ் கேட்டான்.

மூன்று பெண்களும் உள்ளே வர அந்த இடமே சிகரெட் புகையினால் சூழ்ந்திருந்தது. ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அரைகுறை ஆடையுடன் ஆங்காங்கே கிடந்தனர்.

வர்ஷாவைக் கண்டதும் ராகேஷ் அவள் அருகில் வந்து அவளை மேலிருந்து கீழ்வரை விகாரமாக அவளைப் பார்த்து கோனை சிரிப்பை உதிர்த்தான்.

வர்ஷா கன்னத்தைத் தொட முயன்றான் .. அவன் கன்னத்தில் பளார் என்று அறை விழுந்தது. பைரவி தான் அடித்தது. “அவ மேல் உன் கை பட்டுது அவ்வளவுதான் தெரிஞ்சிக்கோ” என்றாள் உக்கிரமாகச்

சிந்து புகையின் காரணமாகத் தும்மினாள்.

“டேய் வாங்கடா முதல்ல இவளை ..” என ஆத்திரமும் அவமானமுமாய் ராகேஷ் தன் நண்பர்களுடன் பைரவியை நோக்கி அடி எடுத்து வைத்தான்.

கையெடுத்துக் கும்பிட்டபடி ”ஐயோ எங்களை விட்டுடு ப்ளீஸ்” என அழுதபடிக் கெஞ்சினாள் வர்ஷா. அவள் கண்ணிலிருந்து தாரை தாரையாக நீர் வடிந்தது.

வர்ஷாவின் அலறல் சத்தம் ராகேஷை அவள் பக்கம் திருப்பியது. மீண்டும் வர்ஷாவின் மேல் கை வைக்கப் போகையில் இடியைப் போல அடி விழுந்தது.

வர்ஷாவின் பாடிகாடுகள் குவிந்திருந்தனர். கதிகலங்கிப் போனான் ராகேஷ். இதை அவன் எதிர்பார்க்கவில்லை.

“மேடம் மேல கைய வெக்க உனக்கென்ன உரிமை” எனக் கர்ஜித்தான் பாடிகாட் சரவணன்.

“டேய் அவ என் வருங்கால பொண்டாட்டி .. நீ என்னோட வேலைக்காரன் ..” என ராகேஷ் நரம்பு புடைக்க கத்தினான்.

“ராகேஷ்” எனச் சீற்றத்துடன் மோகன் கத்த

ராகேஷ் குழப்பத்துடன் வாசலை எட்டிப் பார்த்தான்.

பைரவி “அக்கட சூடு” என டிவியை கை காண்பித்தாள்.

ஹாலில் இருந்த ஸ்மார்ட் டிவியின் வழியே இங்கு நடப்பதை மோகனும் கல்பனாவும் லைவாக பார்த்தனர்.

“என் பொண்ணு மேல கைய வெப்பையா நீ” எனக் கோபத்துடன் மோகன் கத்தினார்.

“மாமா இல்ல .. அது வந்து”அடித்த சரக்கின் மொத்த போதையும் இறங்கிவிட்டது.

“சரவணன் இவங்களை நம்ம இடத்துல அடச்சி வைய்ங்க” என மோகன் கட்டளையிட

“எஸ் சார்” என்றார்.

“அப்பா எனக்கு இங்க இருக்கவே பயமா இருக்குபா .. நாங்க மூணு பேரும் அம்மா பங்களாக்கு போறோம்” என வர்ஷா விசும்பலுடன் கூறினாள்.

“இல்லமா நம்ம ஆளுங்க வந்துட்டாங்கல .. இனி எந்த பிரச்சனையும் இல்ல .. இந்த கோமாளிகளை அடச்சி வெச்சி சோறு தண்ணி இல்லாம பண்றேன் பாரு .. நீ போகாத டா இது உன் பங்களா வர்ஷா” என்றார் மோகன் கண்ணீர் ததும்ப

வயிறெரிய கல்பனா தன் கணவனைப் பார்த்தாள். தன் தம்பியை மனதார சபித்தாள். எத்தனை விதமாக கிழவனை மயக்கி அனைத்து சொத்துகளையும் தன் பெயருக்கு மாற்ற நினைத்திருந்தாள். அத்தனையும் தவிடு பொடியானது தன் தம்பியினால்.

“இல்லபா இங்க ரெஸ்டு ரூம்னு எங்கேயாவது இவன் கேமிரா செட் பண்ணியிருந்தா? .. வேண்டா நாங்க கிளம்பறோம் .. நீங்க வந்து எல்லா இடத்தையும் செக் பண்ணுங்க”

“ ஆமா இவன் பண்ணாலும் பண்ணுவான். சரி நீங்க அம்மா பங்களால பத்திரமா இருங்க நாங்க இப்பவே கிளம்பி வரோம் வர்ஷா ..”

“இல்ல டேட் நீங்க மெதுவா வாங்க” கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

“வர்ஷா எனக்கு நீ தான் முக்கியம். ஹனிமூன் கேன்சல் பண்ணிடறேன். அடுத்த பிளைட்ல கிளம்பி வரேன். அதுவரை ஜாக்கிரதையா இரு” என்றவர். பிறகு சரவணனிடம் சில கட்டளைகளைப் பிறப்பித்தார்.

அதற்குள் பைரவி வர்ஷாவிற்கு ஜாடை காட்ட

“அப்பா ஒரு நிமிஷம் கோவில் மாதிரி இருக்கிற நம்ம பங்களா எப்படி இருக்குனு பாருங்க” என செல்போனில் பங்களாவைக் காட்டினாள் முக்கியமாக ராகேஷின் அறை. அத்தனை அலங்கோலமாக இருந்தது.

சுந்தரி பங்களாவை அத்தனை சுத்தமாகப் பார்த்துக் கொள்வார் என்ற எண்ணம் மோகன் மனதில் எழுந்தது. முதல்முறையாகத் தாம் தவறு செய்துவிட்டோம் என எண்ணினார்.

சில நொடிகள் பேசிவிட்டு அவர்களின் உரையாடல் முடிவு பெற்று லைனை கட் செய்தனர்.

வர்ஷா கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்தபடி “கண்ணுல கிளசரின் போட்டா இத்தனை தண்ணீர் வருமா?” என மூக்கை உரிஞ்சியபடி பேசினாள்.

சிந்துவும் பைரவியும் சிரித்தபடி அவள் அருகில் வந்தனர்.

“மவனே ராகேசுசுசு .. வாழ்க்கையில நீ செஞ்ச நல்ல விஷயம் இன்னிக்கு பார்ட்டி வெச்சது. இனி உனக்கு வாழ்க்கை முழுக்க களிதான் போ போ” என்றாள் பைரவி. அவன் “உன்ன” எனப் பல்லைக் கடிக்க முதுகில் பாடிகாட் பரிசு விழுந்தது. ராகேஷ் கும்பலை இழுத்துச் சென்றனர் பாடிகாட்கள்.

ராகேஷ் வர்ஷாவின் நிழலைக் கூடத் தொட முடியாது. இது மூன்று பெண்களும் அறிந்ததே. பாவம் சமையல் செய்பவருக்கு இதைப் புரிந்து கொள்ளுமளவு விவரம் தெரியாது.

ஆனால் மோகன் இந்த கண் கொள்ளா காட்சியை நேரடியாகக் காண வேண்டும் என்பதே மூன்று பெண்களின் திட்டம்.

மோகனுக்குச் செய்தி அனுப்பி அவர் ஆன் லைனில் வர வேண்டும். அவர் வந்துவிட்டார் என்பதற்கான சிக்னல் தான் சிந்துவின் தும்மல். பாடிகார்ட்டை இரண்டு நிமிடம் தாமதமாக வரச் சொன்னதும் இம்மூவர்தான்.

உண்மையாகவே அந்த இடம் பார்க்க அத்தனை மோசமாக இருந்தது. வர்ஷாவின் முக மாற்றத்தை புரிந்துக் கொண்ட வேலைக்காரர் “ பத்து நிமிஷத்தில் சுத்தம் செய்திடறேன் ” என்றார்.

சிரித்த முகத்துடன் தலையாட்டி நன்றித் தெரிவித்தாள் வர்ஷா.

பிறகு “ உங்க பாஸ்போர்ட், விசா, பேங்க் பேபர்ஸ், டாக்குமண்ட, நகை, டிரஸ்னு முக்கியமான எல்லாத்தையும் எடுத்துக்கோங்க. இனிமே கல்பனா இருக்கிற இடத்துல நாம இருக்க வேண்டாம். அம்மா பங்களாக்கு போயிடலாம்” எனச் சிந்து பைரவியிடம் கூறினாள்.

மூவரும் தத்தம் அறைகளுக்குச் சென்றனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் மூவரும் சுந்தரியின் பங்களாவை அடைந்தனர். சிந்து முன்னமே அங்கு வருவதைச் சொல்லிவிட்டதால் அங்கு அனைத்து ஏற்பாடுகளும் கச்சிதமாகத் தயாராகி இருந்தன.

இரவு உணவை முடித்து உறங்கச் சென்றனர். சற்று நேரத்திற்கெல்லாம் மோகன் போன் “வர்ஷா எங்களுக்கு இன்னும் மூணு மணி நேரத்துல பிளைட். நீ ஜாக்கிரதையா இருமா” என்றார்.

கல்பனா முகம் மனதில் தோன்றச் சிரிப்புதான் வந்தது.“இல்ல வேண்டாம்” என வர்ஷா கூறினாள்.

ஆனால் மோகன் பிடிவாதமாக இருந்தார். வர்ஷா அதற்கு மேல் கட்டாயப்படுத்தவில்லை.

மோகன் “உன் தம்பி இத்தனை கீழ் தனமா நடந்துப்பானு நினைச்சிக் கூட பாக்கல நான்” என கல்பனாவிடம் கோபிக்க

“எதோ வயசு கோளாறு அப்படி செய்தான். அதை ஏன் பெரிசு பண்றீங்க” கல்பனாச் சொல்ல

“என் பொண்ணு மேல கை வைக்கப் போனானே .. அது உனக்கு தப்பாகவே படல .. கைய வைத்து பார்க்கட்டுமே .. கையே இருக்காது” என உருமினார்.

மோகனை இத்தனை கோபத்தில் கல்பனா பார்த்ததில்லை. இன்னும் சண்டை போட்டால் நிலைமை மோசமாகிவிடும் என வாயை மூடினாள்.

கல்பனாவிற்குத் தெரியாமல் மோகன் தன் வக்கீலுக்கு போன் செய்து ராகேஷ் பெயரில் உள்ள சொத்துகளை மீண்டும் தன் பெயருக்கே மாற்றிவிடுங்கள் எனச் சொல்லிவிட்டார்.

அந்த மனிதரும் “சரிங்க சார்” என்றார். தனக்குள் “இந்த ஆளுக்கு இதே வேலையா போச்சு … இந்த சொத்து மாத்து அந்த சொத்தை மாத்து … இதுக்கு பீஸ் நிறையவே சார்ஜ் பண்ணிடனும்” என்றபடி வேலையைத் தொடங்கினார்.

மறுநாள் இரவு போல மோகனும் கல்பனாவும் வந்து சேர்ந்தனர். இருவரும் திருமணத்திற்கு முன் கல்பனா இருந்த தன் ரெயின்போ பங்களாவில் இறங்கினார்கள்.

“இங்க ஏன்?” கல்பனா சந்தேகத்துடன் கேட்க

“உன் தம்பி எப்படி மாத்தி வெச்சிருக்கான் அங்க சுத்தம் செய்யணும்ல” என வெடுக்கெனப் பேசினார்.

பயணத்தில் மோகன் முகம் கொடுத்துப் பேசவில்லை இங்கும் இப்படி என மனக் கணக்குப் போட்டபடி கல்பனா “என் தம்பி எங்க?” எனக் கேட்க

“இன்னும் உயிரோடுதான் இருக்கான்” எனப் பட்டெனப் பதில் வந்தது.

மறுநாள் காலை கல்பனா கண்விழித்த போது மோகனை காணவில்லை. எங்கும் இல்லாமல் போகவே .. வேலையாள் பவ்யமாக அவளிடம் வந்து “மோகன் சார் சுந்தரி மேடத்தை பார்க்க போயிரக்கார்” எனச் சொல்லி தன் கடமை முடிந்ததென அங்கிருந்து நகர்ந்தான்.

மருத்துவமனையில் வர்ஷா மோகனிடம் சமையல்கார அம்மா போனில் பேசியதை போட்டுக் காட்டினாள் “இன்னிக்கு ராத்திரி உங்க மூணு பேரையும் …” என்ற வார்த்தைகளை மோகன் கேட்க ரத்தம் கொதித்தது.

“ரொம்பப் பெரிய தப்பு பண்ணிட்டேன் வர்ஷா ..” எனத் தன் மகளை அணைத்து அழுதார்.

வர்ஷா மற்றும் அவர்களின் தோழிகளை எப்படி இந்த உலகை விட்டு அனுப்புவது என கல்பனா எண்ணிக் கொண்டிந்தாள்.

அதே நொடி கல்பனாவை எப்படி மோகன் வாழ்க்கையிலிருந்து கழற்றுவது என வர்ஷா சிந்திக்கத் தொடங்கினாள். தந்தை செய்த தவற்றைத் திருத்த வேண்டும். மீண்டும் தன் அம்மா சுந்தரி மட்டுமே அந்த பங்களாவில் நிரந்தரமாகத் தந்தையுடன் வசிக்க வேண்டும் என ஆசைப்பட்டாள்.



துளிகள் தெறிக்கும் …













 

januma

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 18, 2025
4
4
3
Theni
துளி துளியாய் துரோகம் 5


வர்ஷா மருத்துவமனையில் தன் அன்னையைக் கண்டபின் சிந்து மற்றும் பைரவியுடன் தங்கள் அலுவலகத்திற்குக் கிளம்பினர். எப்படியோ வாகன நெரிசலில் சமாளித்து பைரவி காரை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

சிந்து தாங்கள் எங்கு உல்லாசப் பயணம் மேற்கொள்ளலாம்? சிறந்த இடங்கள் எவை? எனக் கூகுளில் தேடியபடி இருந்தாள்.

வர்ஷா ” நாம டிரிப் போன சமயம் இந்த கல்பனாவும் அளோட தம்பியும் அப்பாவைச் சொத்துக்காக எதாவது செய்திட்டா? பயமா இருக்கு. இந்த கல்பனாவை எப்படி மேனேஜ் பண்ண. பெட்ரூம்குள்ள பாடிகாட் போக முடியாது” எனத் தன் நடு நெற்றியில் அழுத்திச் சிந்தித்தபடிச் சொன்னாள்.

இதற்குச் சிந்து தலையசைப்போடு நிறுத்தினாள். பைரவி என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதி காத்தாள்.

மூவரும் அலுவலகத்தை அடைந்தனர். மோகன் தேன்நிலவு சென்றுள்ளதால் அனைத்து வேலைகளையும் பொறுப்பாக வர்ஷா கவனிக்க வேண்டியிருந்தது.

ராகேஷ்க்கு மாற்றப்பட்ட நிறுவன விவகாரங்களை வேண்டுமென்றே தவிர்த்தாள். ஆனால் அங்கு நடப்பவற்றை தனக்கான ஆட்களைக் கொண்டு அவ்வப்பொழுது அறிந்து கொண்டாள். ராகேஷ் வரவில்லை என்னும் செய்தி கிட்டியது.

மோகன் இல்லாத நேரம் என்பதால் சிந்து மற்றும் பைரவிக்கும் சில பொறுப்புகளை வர்ஷா வழங்கினாள்.

சிந்து மற்றும் பைரவி வேலைகளை சிரமேற்ச் செய்தனர். அலுவலகத்தில் சிலருக்கு இதைக் கண்டு புகைச்சல் ஏற்பட்டது. இது வழக்கமான செயல். வர்ஷா அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை.

யாரேனும் அப்படிக் கேட்டு வந்தால் “நான் உங்களுக்கு அசைன் பண்ண வேலை முடிச்சிங்களா? ” எனக் கேள்வி கேட்பாள். வேலையில் குறைகளைக் கண்டு பிடித்து உண்டு இல்லை என ஆக்கிவிடுவாள்.

ஒருமுறை மோகன் வெளிநாடு சென்றிருந்த சமயம்.

அலுவலகத்தில் வேலை செய்யும் முதியவர் “என் அனுபவம் என்ன? இந்த சின்ன பொண்ணுங்களுக்கு நான் பதில் சொல்லணுமா?” என வர்ஷாவிடம் முறையிட்டார்.

வர்ஷா சிரித்த முகமாய் அந்த முதியவருக்கும் சிந்து பைரவி என மூவருக்கும் ஒரே வேலையைக் கொடுத்தாள்.

சிந்து மற்றும் பைரவி அந்த வேலையைக் குறைவான நேரத்தில் மிகவும் சரியாகவும் துல்லியமாகவும் செய்து முடித்தனர். இருவரும் கொடுத்த தரவுகள் பக்காவாக இருந்தது.

“மூணு பேரும் கான்பிரன்ஸ் ஹால்ல ஒண்ணா தானே வேலை செய்தீங்க. உங்களதுல இத்தனை குளறுபடி .. நீங்களே அவங்க ரெண்டு பேர் வேலையை செக் பண்ணி பாருங்க” எனக் காண்பித்தாள்.

வாயடைத்துப் போனார் மனிதர். இனி சிந்து பைரவி பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்று சங்கல்பம் செய்து போய்விட்டார். போகும் முன் “உங்க வேலை அபாரம்” என வாழ்த்தியும் சென்றார்.

அந்த நிகழ்வுக்குப் பிறகு சிந்து பைரவியின் மேல் அனைவருக்கும் ஒரு மதிப்பு உண்டானது. அதற்கு முன்பெல்லாம் “பிரெண்டுனு சொல்லிகிட்டு வேலையே செய்யாம சம்பளம் வாங்குது கொடுத்த வெச்சதுபா ரெண்டும்” எனப் பேசுவார்கள்.

பின்னர் “என்ன இருந்தாலும் இந்த கம்பெனில வேலை செய்யணும்னா ஒரு தகுதி வேணும்ல. சிந்து பைரவிக்கு நல்ல நாலேஜ் இருக்கு” எனப் பாராட்டினார்கள். ஆனாலும் சிலரின் விமர்சனங்கள் இல்லாமல் இருப்பதிலை. மனிதப் பிறவி அன்றோ!!!

சிந்துவும் பைரவியும் இவற்றை எல்லாம் காதிலேயே போட்டுக் கொள்வதில்லை. தங்களால் வர்ஷாவிற்கு எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர்.

மாலை ஏழு மணி வேலைகள் முடிந்ததும் மூவரும் அலுவலகத்திலிருந்து கிளம்பினர். காரில் அமர்ந்ததும் எப்பொழுதும் போலப் பைரவி காரை ஓட்டினாள். சிந்துவின் போன் சிணுங்க .. எடுத்துப் பார்த்தாள். பங்களாவில் வேலைச் செய்யும் சமையல்கார அம்மா.

சிந்து மற்றும் பைரவி பங்களாவில் தங்களை வர்ஷாவின் தோழி என்பதை விட தாங்களும் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள்தான் என்னும் ரீதியில் நடந்து கொள்வார்கள். அதனால் பங்களாவில் பணிபுரியும் வேலை ஆட்கள் இரு பெண்களிடமும் நட்பாகப் பழகுவார்கள். அதிலும் சமையல் செய்யும் அம்மா ஒருபடி மேல் என்றே கூறலாம்.

அப்போது தான் சிந்து கவனித்தாள் பலமுறை அவர் போன் செய்திருப்பதை மிஸ்டு கால்களாக காட்டின.

“சொல்லுங்க அம்மா .. சாரி வேலைனால போன் பார்க்கல .. ஏன் இத்தனை தடவை போன் செய்திருக்கிங்க ..” சிந்து கலவரத்துடன் கேட்டாள்.

“வர்ஷா அம்மாவும் நீங்க இரண்டு பேரும் தயவு செய்து பங்களா பக்கமா வந்திடாதீங்கனு சொல்லத்தான்” எனப் பதற்றமாகப் பேசினார்.

“ஏன் எதாவது பிரச்சனையா?” என்றபடி போன் ஸ்பீக்கரை ஆன் செய்தாள் அத்துடன் ரெக்கார்டும் செய்தாள். வர்ஷாவும் பைரவியும் கூர்மையாகக் கவனித்தனர்.

“அது .. அது ” என அவர் திணற

“பயப்படாம சொல்லுங்கமா” சிந்துவிற்கு ஏதோ பிரச்சனை எனப் புரிந்துவிட்டது.

“இந்த ராகேஷ் தம்பி பார்ட்டினு சொல்லி தன்னோட பிரெண்ட்ஸலாம் கூடிட்டு வந்து ஒரே கூச்சலும் கும்மாளமுமாய் இருக்கு. பத்து பதினஞ்சி பேர் இருக்கும் அரைகுறையா டிரஸ் போட்டு ஆடுதுங்க. சத்தமா பாட்டு வேற .. பாட்டில் பாட்டிலா குடி. விதவிதமா சமைக்கச் சொன்னான. என்கிட்டியே சொல்றான் உங்க மூணு பேரையும் இன்னிக்கு ராத்திரி .. சொல்லவே நாகூசுதுமா … தயவு செய்து இங்க வந்திடாதீங்க” என நா தழுதழுக்கப் பேசினார்.

இதைக் கேட்டு பைரவிக்கும் வர்ஷாவுக்கும் ஆத்திரமாக வந்தது. ஆனால் சிந்து போன் பேசிக் கொண்டிருந்ததால் அமைதிக் காத்தனர்.

“சரிமா நாங்க பார்த்துக்குறோம் .. நீங்க ஜாக்கிரதையா இருங்க” என போனை கட் செய்தாள் சிந்து.

“பைரவி கொஞ்சம் வண்டியை ஓரமா நிறுத்து” என்றாள் சிந்து ஏனெனில் இன்னும் பத்து நிமிடத்தில் பங்களா வந்துவிடும்.

வண்டியை ஓரமாக நிறுத்திய பைரவி “ அவன் என்ன பெரிய பிஸ்தாவா? போய்தான் பார்ப்போமே” எனக் கோபத்தில் கொந்தளித்தாள்.

“இல்ல பைரவி அவசரப்படாத .. அவனுங்க போதையில் இருக்காங்க .. அதுவும் நிறையப் பேர் இருக்காங்க. அது நமக்குத் தான் ஆபத்து” என்றாள் சிந்து சிந்தித்தபடி

“சிந்து சொல்றது சரிதான் பைரவி .. அவசரப்படாத” வர்ஷாவும் சிந்துவின் பக்கம் பேசினாள்.

“ஆனா இவனுங்களை இப்படியே விடக் கூடாது” எனப் பைரவி சொல்லிக் கண்ணடித்து சிரித்தாள். உடனே வர்ஷாவிடமிருந்து போன் எடுத்துப் பேசினாள்.

அவளின் திட்டம் புரிந்து வர்ஷாவும் சிந்துவும் “ நடத்து .. நடத்து” எனப் புன்னகையுடன் அவள் செய்யும் செயலுக்கு ஆதரவுத் தெரிவித்த வர்ஷா “நான் ரெடி” என்றும் கூறினாள்.

பைரவி பங்களாவை நோக்கி வண்டியைச் செலுத்தினாள். அவர்களைக் கண்ட சமையல்கார அம்மா பதறிப் போனார். மூவரையும் நோக்கிச் செல்ல எத்தனிக்க “ஏ கெழவி எங்க போற?” என வாய் குழற ராகேஷ் கேட்டான்.

மூன்று பெண்களும் உள்ளே வர அந்த இடமே சிகரெட் புகையினால் சூழ்ந்திருந்தது. ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அரைகுறை ஆடையுடன் ஆங்காங்கே கிடந்தனர்.

வர்ஷாவைக் கண்டதும் ராகேஷ் அவள் அருகில் வந்து அவளை மேலிருந்து கீழ்வரை விகாரமாக அவளைப் பார்த்து கோனை சிரிப்பை உதிர்த்தான்.

வர்ஷா கன்னத்தைத் தொட முயன்றான் .. அவன் கன்னத்தில் பளார் என்று அறை விழுந்தது. பைரவி தான் அடித்தது. “அவ மேல் உன் கை பட்டுது அவ்வளவுதான் தெரிஞ்சிக்கோ” என்றாள் உக்கிரமாகச்

சிந்து புகையின் காரணமாகத் தும்மினாள்.

“டேய் வாங்கடா முதல்ல இவளை ..” என ஆத்திரமும் அவமானமுமாய் ராகேஷ் தன் நண்பர்களுடன் பைரவியை நோக்கி அடி எடுத்து வைத்தான்.

கையெடுத்துக் கும்பிட்டபடி ”ஐயோ எங்களை விட்டுடு ப்ளீஸ்” என அழுதபடிக் கெஞ்சினாள் வர்ஷா. அவள் கண்ணிலிருந்து தாரை தாரையாக நீர் வடிந்தது.

வர்ஷாவின் அலறல் சத்தம் ராகேஷை அவள் பக்கம் திருப்பியது. மீண்டும் வர்ஷாவின் மேல் கை வைக்கப் போகையில் இடியைப் போல அடி விழுந்தது.

வர்ஷாவின் பாடிகாடுகள் குவிந்திருந்தனர். கதிகலங்கிப் போனான் ராகேஷ். இதை அவன் எதிர்பார்க்கவில்லை.

“மேடம் மேல கைய வெக்க உனக்கென்ன உரிமை” எனக் கர்ஜித்தான் பாடிகாட் சரவணன்.

“டேய் அவ என் வருங்கால பொண்டாட்டி .. நீ என்னோட வேலைக்காரன் ..” என ராகேஷ் நரம்பு புடைக்க கத்தினான்.

“ராகேஷ்” எனச் சீற்றத்துடன் மோகன் கத்த

ராகேஷ் குழப்பத்துடன் வாசலை எட்டிப் பார்த்தான்.

பைரவி “அக்கட சூடு” என டிவியை கை காண்பித்தாள்.

ஹாலில் இருந்த ஸ்மார்ட் டிவியின் வழியே இங்கு நடப்பதை மோகனும் கல்பனாவும் லைவாக பார்த்தனர்.

“என் பொண்ணு மேல கைய வெப்பையா நீ” எனக் கோபத்துடன் மோகன் கத்தினார்.

“மாமா இல்ல .. அது வந்து”அடித்த சரக்கின் மொத்த போதையும் இறங்கிவிட்டது.

“சரவணன் இவங்களை நம்ம இடத்துல அடச்சி வைய்ங்க” என மோகன் கட்டளையிட

“எஸ் சார்” என்றார்.

“அப்பா எனக்கு இங்க இருக்கவே பயமா இருக்குபா .. நாங்க மூணு பேரும் அம்மா பங்களாக்கு போறோம்” என வர்ஷா விசும்பலுடன் கூறினாள்.

“இல்லமா நம்ம ஆளுங்க வந்துட்டாங்கல .. இனி எந்த பிரச்சனையும் இல்ல .. இந்த கோமாளிகளை அடச்சி வெச்சி சோறு தண்ணி இல்லாம பண்றேன் பாரு .. நீ போகாத டா இது உன் பங்களா வர்ஷா” என்றார் மோகன் கண்ணீர் ததும்ப

வயிறெரிய கல்பனா தன் கணவனைப் பார்த்தாள். தன் தம்பியை மனதார சபித்தாள். எத்தனை விதமாக கிழவனை மயக்கி அனைத்து சொத்துகளையும் தன் பெயருக்கு மாற்ற நினைத்திருந்தாள். அத்தனையும் தவிடு பொடியானது தன் தம்பியினால்.

“இல்லபா இங்க ரெஸ்டு ரூம்னு எங்கேயாவது இவன் கேமிரா செட் பண்ணியிருந்தா? .. வேண்டா நாங்க கிளம்பறோம் .. நீங்க வந்து எல்லா இடத்தையும் செக் பண்ணுங்க”

“ ஆமா இவன் பண்ணாலும் பண்ணுவான். சரி நீங்க அம்மா பங்களால பத்திரமா இருங்க நாங்க இப்பவே கிளம்பி வரோம் வர்ஷா ..”

“இல்ல டேட் நீங்க மெதுவா வாங்க” கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

“வர்ஷா எனக்கு நீ தான் முக்கியம். ஹனிமூன் கேன்சல் பண்ணிடறேன். அடுத்த பிளைட்ல கிளம்பி வரேன். அதுவரை ஜாக்கிரதையா இரு” என்றவர். பிறகு சரவணனிடம் சில கட்டளைகளைப் பிறப்பித்தார்.

அதற்குள் பைரவி வர்ஷாவிற்கு ஜாடை காட்ட

“அப்பா ஒரு நிமிஷம் கோவில் மாதிரி இருக்கிற நம்ம பங்களா எப்படி இருக்குனு பாருங்க” என செல்போனில் பங்களாவைக் காட்டினாள் முக்கியமாக ராகேஷின் அறை. அத்தனை அலங்கோலமாக இருந்தது.

சுந்தரி பங்களாவை அத்தனை சுத்தமாகப் பார்த்துக் கொள்வார் என்ற எண்ணம் மோகன் மனதில் எழுந்தது. முதல்முறையாகத் தாம் தவறு செய்துவிட்டோம் என எண்ணினார்.

சில நொடிகள் பேசிவிட்டு அவர்களின் உரையாடல் முடிவு பெற்று லைனை கட் செய்தனர்.

வர்ஷா கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்தபடி “கண்ணுல கிளசரின் போட்டா இத்தனை தண்ணீர் வருமா?” என மூக்கை உரிஞ்சியபடி பேசினாள்.

சிந்துவும் பைரவியும் சிரித்தபடி அவள் அருகில் வந்தனர்.

“மவனே ராகேசுசுசு .. வாழ்க்கையில நீ செஞ்ச நல்ல விஷயம் இன்னிக்கு பார்ட்டி வெச்சது. இனி உனக்கு வாழ்க்கை முழுக்க களிதான் போ போ” என்றாள் பைரவி. அவன் “உன்ன” எனப் பல்லைக் கடிக்க முதுகில் பாடிகாட் பரிசு விழுந்தது. ராகேஷ் கும்பலை இழுத்துச் சென்றனர் பாடிகாட்கள்.

ராகேஷ் வர்ஷாவின் நிழலைக் கூடத் தொட முடியாது. இது மூன்று பெண்களும் அறிந்ததே. பாவம் சமையல் செய்பவருக்கு இதைப் புரிந்து கொள்ளுமளவு விவரம் தெரியாது.

ஆனால் மோகன் இந்த கண் கொள்ளா காட்சியை நேரடியாகக் காண வேண்டும் என்பதே மூன்று பெண்களின் திட்டம்.

மோகனுக்குச் செய்தி அனுப்பி அவர் ஆன் லைனில் வர வேண்டும். அவர் வந்துவிட்டார் என்பதற்கான சிக்னல் தான் சிந்துவின் தும்மல். பாடிகார்ட்டை இரண்டு நிமிடம் தாமதமாக வரச் சொன்னதும் இம்மூவர்தான்.

உண்மையாகவே அந்த இடம் பார்க்க அத்தனை மோசமாக இருந்தது. வர்ஷாவின் முக மாற்றத்தை புரிந்துக் கொண்ட வேலைக்காரர் “ பத்து நிமிஷத்தில் சுத்தம் செய்திடறேன் ” என்றார்.

சிரித்த முகத்துடன் தலையாட்டி நன்றித் தெரிவித்தாள் வர்ஷா.

பிறகு “ உங்க பாஸ்போர்ட், விசா, பேங்க் பேபர்ஸ், டாக்குமண்ட, நகை, டிரஸ்னு முக்கியமான எல்லாத்தையும் எடுத்துக்கோங்க. இனிமே கல்பனா இருக்கிற இடத்துல நாம இருக்க வேண்டாம். அம்மா பங்களாக்கு போயிடலாம்” எனச் சிந்து பைரவியிடம் கூறினாள்.

மூவரும் தத்தம் அறைகளுக்குச் சென்றனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் மூவரும் சுந்தரியின் பங்களாவை அடைந்தனர். சிந்து முன்னமே அங்கு வருவதைச் சொல்லிவிட்டதால் அங்கு அனைத்து ஏற்பாடுகளும் கச்சிதமாகத் தயாராகி இருந்தன.

இரவு உணவை முடித்து உறங்கச் சென்றனர். சற்று நேரத்திற்கெல்லாம் மோகன் போன் “வர்ஷா எங்களுக்கு இன்னும் மூணு மணி நேரத்துல பிளைட். நீ ஜாக்கிரதையா இருமா” என்றார்.

கல்பனா முகம் மனதில் தோன்றச் சிரிப்புதான் வந்தது.“இல்ல வேண்டாம்” என வர்ஷா கூறினாள்.

ஆனால் மோகன் பிடிவாதமாக இருந்தார். வர்ஷா அதற்கு மேல் கட்டாயப்படுத்தவில்லை.

மோகன் “உன் தம்பி இத்தனை கீழ் தனமா நடந்துப்பானு நினைச்சிக் கூட பாக்கல நான்” என கல்பனாவிடம் கோபிக்க

“எதோ வயசு கோளாறு அப்படி செய்தான். அதை ஏன் பெரிசு பண்றீங்க” கல்பனாச் சொல்ல

“என் பொண்ணு மேல கை வைக்கப் போனானே .. அது உனக்கு தப்பாகவே படல .. கைய வைத்து பார்க்கட்டுமே .. கையே இருக்காது” என உருமினார்.

மோகனை இத்தனை கோபத்தில் கல்பனா பார்த்ததில்லை. இன்னும் சண்டை போட்டால் நிலைமை மோசமாகிவிடும் என வாயை மூடினாள்.

கல்பனாவிற்குத் தெரியாமல் மோகன் தன் வக்கீலுக்கு போன் செய்து ராகேஷ் பெயரில் உள்ள சொத்துகளை மீண்டும் தன் பெயருக்கே மாற்றிவிடுங்கள் எனச் சொல்லிவிட்டார்.

அந்த மனிதரும் “சரிங்க சார்” என்றார். தனக்குள் “இந்த ஆளுக்கு இதே வேலையா போச்சு … இந்த சொத்து மாத்து அந்த சொத்தை மாத்து … இதுக்கு பீஸ் நிறையவே சார்ஜ் பண்ணிடனும்” என்றபடி வேலையைத் தொடங்கினார்.

மறுநாள் இரவு போல மோகனும் கல்பனாவும் வந்து சேர்ந்தனர். இருவரும் திருமணத்திற்கு முன் கல்பனா இருந்த தன் ரெயின்போ பங்களாவில் இறங்கினார்கள்.

“இங்க ஏன்?” கல்பனா சந்தேகத்துடன் கேட்க

“உன் தம்பி எப்படி மாத்தி வெச்சிருக்கான் அங்க சுத்தம் செய்யணும்ல” என வெடுக்கெனப் பேசினார்.

பயணத்தில் மோகன் முகம் கொடுத்துப் பேசவில்லை இங்கும் இப்படி என மனக் கணக்குப் போட்டபடி கல்பனா “என் தம்பி எங்க?” எனக் கேட்க

“இன்னும் உயிரோடுதான் இருக்கான்” எனப் பட்டெனப் பதில் வந்தது.

மறுநாள் காலை கல்பனா கண்விழித்த போது மோகனை காணவில்லை. எங்கும் இல்லாமல் போகவே .. வேலையாள் பவ்யமாக அவளிடம் வந்து “மோகன் சார் சுந்தரி மேடத்தை பார்க்க போயிரக்கார்” எனச் சொல்லி தன் கடமை முடிந்ததென அங்கிருந்து நகர்ந்தான்.

மருத்துவமனையில் வர்ஷா மோகனிடம் சமையல்கார அம்மா போனில் பேசியதை போட்டுக் காட்டினாள் “இன்னிக்கு ராத்திரி உங்க மூணு பேரையும் …” என்ற வார்த்தைகளை மோகன் கேட்க ரத்தம் கொதித்தது.

“ரொம்பப் பெரிய தப்பு பண்ணிட்டேன் வர்ஷா ..” எனத் தன் மகளை அணைத்து அழுதார்.

வர்ஷா மற்றும் அவர்களின் தோழிகளை எப்படி இந்த உலகை விட்டு அனுப்புவது என கல்பனா எண்ணிக் கொண்டிந்தாள்.

அதே நொடி கல்பனாவை எப்படி மோகன் வாழ்க்கையிலிருந்து கழற்றுவது என வர்ஷா சிந்திக்கத் தொடங்கினாள். தந்தை செய்த தவற்றைத் திருத்த வேண்டும். மீண்டும் தன் அம்மா சுந்தரி மட்டுமே அந்த பங்களாவில் நிரந்தரமாகத் தந்தையுடன் வசிக்க வேண்டும் என ஆசைப்பட்டாள்.




துளிகள் தெறிக்கும் …
Semma 👏 Kalpana vs Varsha🤜🤛 .. eagerly waiting who is going to win.
 
  • Love
Reactions: kkp5

ADC

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
13
13
3
Bangalore
Nice update Sis 👏🏼👏🏼👏🏼 mohan en ippadi irukaru🤦🏼 varsha, kalpana va viratuvangala?? Rakesh chapter close aidicho???
Thank you
 
  • Love
Reactions: kkp5

kkp16

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
7
6
3
Tamilnadu
துளி துளியாய் துரோகம் 5


வர்ஷா மருத்துவமனையில் தன் அன்னையைக் கண்டபின் சிந்து மற்றும் பைரவியுடன் தங்கள் அலுவலகத்திற்குக் கிளம்பினர். எப்படியோ வாகன நெரிசலில் சமாளித்து பைரவி காரை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

சிந்து தாங்கள் எங்கு உல்லாசப் பயணம் மேற்கொள்ளலாம்? சிறந்த இடங்கள் எவை? எனக் கூகுளில் தேடியபடி இருந்தாள்.

வர்ஷா ” நாம டிரிப் போன சமயம் இந்த கல்பனாவும் அளோட தம்பியும் அப்பாவைச் சொத்துக்காக எதாவது செய்திட்டா? பயமா இருக்கு. இந்த கல்பனாவை எப்படி மேனேஜ் பண்ண. பெட்ரூம்குள்ள பாடிகாட் போக முடியாது” எனத் தன் நடு நெற்றியில் அழுத்திச் சிந்தித்தபடிச் சொன்னாள்.

இதற்குச் சிந்து தலையசைப்போடு நிறுத்தினாள். பைரவி என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதி காத்தாள்.

மூவரும் அலுவலகத்தை அடைந்தனர். மோகன் தேன்நிலவு சென்றுள்ளதால் அனைத்து வேலைகளையும் பொறுப்பாக வர்ஷா கவனிக்க வேண்டியிருந்தது.

ராகேஷ்க்கு மாற்றப்பட்ட நிறுவன விவகாரங்களை வேண்டுமென்றே தவிர்த்தாள். ஆனால் அங்கு நடப்பவற்றை தனக்கான ஆட்களைக் கொண்டு அவ்வப்பொழுது அறிந்து கொண்டாள். ராகேஷ் வரவில்லை என்னும் செய்தி கிட்டியது.

மோகன் இல்லாத நேரம் என்பதால் சிந்து மற்றும் பைரவிக்கும் சில பொறுப்புகளை வர்ஷா வழங்கினாள்.

சிந்து மற்றும் பைரவி வேலைகளை சிரமேற்ச் செய்தனர். அலுவலகத்தில் சிலருக்கு இதைக் கண்டு புகைச்சல் ஏற்பட்டது. இது வழக்கமான செயல். வர்ஷா அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை.

யாரேனும் அப்படிக் கேட்டு வந்தால் “நான் உங்களுக்கு அசைன் பண்ண வேலை முடிச்சிங்களா? ” எனக் கேள்வி கேட்பாள். வேலையில் குறைகளைக் கண்டு பிடித்து உண்டு இல்லை என ஆக்கிவிடுவாள்.

ஒருமுறை மோகன் வெளிநாடு சென்றிருந்த சமயம்.

அலுவலகத்தில் வேலை செய்யும் முதியவர் “என் அனுபவம் என்ன? இந்த சின்ன பொண்ணுங்களுக்கு நான் பதில் சொல்லணுமா?” என வர்ஷாவிடம் முறையிட்டார்.

வர்ஷா சிரித்த முகமாய் அந்த முதியவருக்கும் சிந்து பைரவி என மூவருக்கும் ஒரே வேலையைக் கொடுத்தாள்.

சிந்து மற்றும் பைரவி அந்த வேலையைக் குறைவான நேரத்தில் மிகவும் சரியாகவும் துல்லியமாகவும் செய்து முடித்தனர். இருவரும் கொடுத்த தரவுகள் பக்காவாக இருந்தது.

“மூணு பேரும் கான்பிரன்ஸ் ஹால்ல ஒண்ணா தானே வேலை செய்தீங்க. உங்களதுல இத்தனை குளறுபடி .. நீங்களே அவங்க ரெண்டு பேர் வேலையை செக் பண்ணி பாருங்க” எனக் காண்பித்தாள்.

வாயடைத்துப் போனார் மனிதர். இனி சிந்து பைரவி பக்கம் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்று சங்கல்பம் செய்து போய்விட்டார். போகும் முன் “உங்க வேலை அபாரம்” என வாழ்த்தியும் சென்றார்.

அந்த நிகழ்வுக்குப் பிறகு சிந்து பைரவியின் மேல் அனைவருக்கும் ஒரு மதிப்பு உண்டானது. அதற்கு முன்பெல்லாம் “பிரெண்டுனு சொல்லிகிட்டு வேலையே செய்யாம சம்பளம் வாங்குது கொடுத்த வெச்சதுபா ரெண்டும்” எனப் பேசுவார்கள்.

பின்னர் “என்ன இருந்தாலும் இந்த கம்பெனில வேலை செய்யணும்னா ஒரு தகுதி வேணும்ல. சிந்து பைரவிக்கு நல்ல நாலேஜ் இருக்கு” எனப் பாராட்டினார்கள். ஆனாலும் சிலரின் விமர்சனங்கள் இல்லாமல் இருப்பதிலை. மனிதப் பிறவி அன்றோ!!!

சிந்துவும் பைரவியும் இவற்றை எல்லாம் காதிலேயே போட்டுக் கொள்வதில்லை. தங்களால் வர்ஷாவிற்கு எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர்.

மாலை ஏழு மணி வேலைகள் முடிந்ததும் மூவரும் அலுவலகத்திலிருந்து கிளம்பினர். காரில் அமர்ந்ததும் எப்பொழுதும் போலப் பைரவி காரை ஓட்டினாள். சிந்துவின் போன் சிணுங்க .. எடுத்துப் பார்த்தாள். பங்களாவில் வேலைச் செய்யும் சமையல்கார அம்மா.

சிந்து மற்றும் பைரவி பங்களாவில் தங்களை வர்ஷாவின் தோழி என்பதை விட தாங்களும் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள்தான் என்னும் ரீதியில் நடந்து கொள்வார்கள். அதனால் பங்களாவில் பணிபுரியும் வேலை ஆட்கள் இரு பெண்களிடமும் நட்பாகப் பழகுவார்கள். அதிலும் சமையல் செய்யும் அம்மா ஒருபடி மேல் என்றே கூறலாம்.

அப்போது தான் சிந்து கவனித்தாள் பலமுறை அவர் போன் செய்திருப்பதை மிஸ்டு கால்களாக காட்டின.

“சொல்லுங்க அம்மா .. சாரி வேலைனால போன் பார்க்கல .. ஏன் இத்தனை தடவை போன் செய்திருக்கிங்க ..” சிந்து கலவரத்துடன் கேட்டாள்.

“வர்ஷா அம்மாவும் நீங்க இரண்டு பேரும் தயவு செய்து பங்களா பக்கமா வந்திடாதீங்கனு சொல்லத்தான்” எனப் பதற்றமாகப் பேசினார்.

“ஏன் எதாவது பிரச்சனையா?” என்றபடி போன் ஸ்பீக்கரை ஆன் செய்தாள் அத்துடன் ரெக்கார்டும் செய்தாள். வர்ஷாவும் பைரவியும் கூர்மையாகக் கவனித்தனர்.

“அது .. அது ” என அவர் திணற

“பயப்படாம சொல்லுங்கமா” சிந்துவிற்கு ஏதோ பிரச்சனை எனப் புரிந்துவிட்டது.

“இந்த ராகேஷ் தம்பி பார்ட்டினு சொல்லி தன்னோட பிரெண்ட்ஸலாம் கூடிட்டு வந்து ஒரே கூச்சலும் கும்மாளமுமாய் இருக்கு. பத்து பதினஞ்சி பேர் இருக்கும் அரைகுறையா டிரஸ் போட்டு ஆடுதுங்க. சத்தமா பாட்டு வேற .. பாட்டில் பாட்டிலா குடி. விதவிதமா சமைக்கச் சொன்னான. என்கிட்டியே சொல்றான் உங்க மூணு பேரையும் இன்னிக்கு ராத்திரி .. சொல்லவே நாகூசுதுமா … தயவு செய்து இங்க வந்திடாதீங்க” என நா தழுதழுக்கப் பேசினார்.

இதைக் கேட்டு பைரவிக்கும் வர்ஷாவுக்கும் ஆத்திரமாக வந்தது. ஆனால் சிந்து போன் பேசிக் கொண்டிருந்ததால் அமைதிக் காத்தனர்.

“சரிமா நாங்க பார்த்துக்குறோம் .. நீங்க ஜாக்கிரதையா இருங்க” என போனை கட் செய்தாள் சிந்து.

“பைரவி கொஞ்சம் வண்டியை ஓரமா நிறுத்து” என்றாள் சிந்து ஏனெனில் இன்னும் பத்து நிமிடத்தில் பங்களா வந்துவிடும்.

வண்டியை ஓரமாக நிறுத்திய பைரவி “ அவன் என்ன பெரிய பிஸ்தாவா? போய்தான் பார்ப்போமே” எனக் கோபத்தில் கொந்தளித்தாள்.

“இல்ல பைரவி அவசரப்படாத .. அவனுங்க போதையில் இருக்காங்க .. அதுவும் நிறையப் பேர் இருக்காங்க. அது நமக்குத் தான் ஆபத்து” என்றாள் சிந்து சிந்தித்தபடி

“சிந்து சொல்றது சரிதான் பைரவி .. அவசரப்படாத” வர்ஷாவும் சிந்துவின் பக்கம் பேசினாள்.

“ஆனா இவனுங்களை இப்படியே விடக் கூடாது” எனப் பைரவி சொல்லிக் கண்ணடித்து சிரித்தாள். உடனே வர்ஷாவிடமிருந்து போன் எடுத்துப் பேசினாள்.

அவளின் திட்டம் புரிந்து வர்ஷாவும் சிந்துவும் “ நடத்து .. நடத்து” எனப் புன்னகையுடன் அவள் செய்யும் செயலுக்கு ஆதரவுத் தெரிவித்த வர்ஷா “நான் ரெடி” என்றும் கூறினாள்.

பைரவி பங்களாவை நோக்கி வண்டியைச் செலுத்தினாள். அவர்களைக் கண்ட சமையல்கார அம்மா பதறிப் போனார். மூவரையும் நோக்கிச் செல்ல எத்தனிக்க “ஏ கெழவி எங்க போற?” என வாய் குழற ராகேஷ் கேட்டான்.

மூன்று பெண்களும் உள்ளே வர அந்த இடமே சிகரெட் புகையினால் சூழ்ந்திருந்தது. ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அரைகுறை ஆடையுடன் ஆங்காங்கே கிடந்தனர்.

வர்ஷாவைக் கண்டதும் ராகேஷ் அவள் அருகில் வந்து அவளை மேலிருந்து கீழ்வரை விகாரமாக அவளைப் பார்த்து கோனை சிரிப்பை உதிர்த்தான்.

வர்ஷா கன்னத்தைத் தொட முயன்றான் .. அவன் கன்னத்தில் பளார் என்று அறை விழுந்தது. பைரவி தான் அடித்தது. “அவ மேல் உன் கை பட்டுது அவ்வளவுதான் தெரிஞ்சிக்கோ” என்றாள் உக்கிரமாகச்

சிந்து புகையின் காரணமாகத் தும்மினாள்.

“டேய் வாங்கடா முதல்ல இவளை ..” என ஆத்திரமும் அவமானமுமாய் ராகேஷ் தன் நண்பர்களுடன் பைரவியை நோக்கி அடி எடுத்து வைத்தான்.

கையெடுத்துக் கும்பிட்டபடி ”ஐயோ எங்களை விட்டுடு ப்ளீஸ்” என அழுதபடிக் கெஞ்சினாள் வர்ஷா. அவள் கண்ணிலிருந்து தாரை தாரையாக நீர் வடிந்தது.

வர்ஷாவின் அலறல் சத்தம் ராகேஷை அவள் பக்கம் திருப்பியது. மீண்டும் வர்ஷாவின் மேல் கை வைக்கப் போகையில் இடியைப் போல அடி விழுந்தது.

வர்ஷாவின் பாடிகாடுகள் குவிந்திருந்தனர். கதிகலங்கிப் போனான் ராகேஷ். இதை அவன் எதிர்பார்க்கவில்லை.

“மேடம் மேல கைய வெக்க உனக்கென்ன உரிமை” எனக் கர்ஜித்தான் பாடிகாட் சரவணன்.

“டேய் அவ என் வருங்கால பொண்டாட்டி .. நீ என்னோட வேலைக்காரன் ..” என ராகேஷ் நரம்பு புடைக்க கத்தினான்.

“ராகேஷ்” எனச் சீற்றத்துடன் மோகன் கத்த

ராகேஷ் குழப்பத்துடன் வாசலை எட்டிப் பார்த்தான்.

பைரவி “அக்கட சூடு” என டிவியை கை காண்பித்தாள்.

ஹாலில் இருந்த ஸ்மார்ட் டிவியின் வழியே இங்கு நடப்பதை மோகனும் கல்பனாவும் லைவாக பார்த்தனர்.

“என் பொண்ணு மேல கைய வெப்பையா நீ” எனக் கோபத்துடன் மோகன் கத்தினார்.

“மாமா இல்ல .. அது வந்து”அடித்த சரக்கின் மொத்த போதையும் இறங்கிவிட்டது.

“சரவணன் இவங்களை நம்ம இடத்துல அடச்சி வைய்ங்க” என மோகன் கட்டளையிட

“எஸ் சார்” என்றார்.

“அப்பா எனக்கு இங்க இருக்கவே பயமா இருக்குபா .. நாங்க மூணு பேரும் அம்மா பங்களாக்கு போறோம்” என வர்ஷா விசும்பலுடன் கூறினாள்.

“இல்லமா நம்ம ஆளுங்க வந்துட்டாங்கல .. இனி எந்த பிரச்சனையும் இல்ல .. இந்த கோமாளிகளை அடச்சி வெச்சி சோறு தண்ணி இல்லாம பண்றேன் பாரு .. நீ போகாத டா இது உன் பங்களா வர்ஷா” என்றார் மோகன் கண்ணீர் ததும்ப

வயிறெரிய கல்பனா தன் கணவனைப் பார்த்தாள். தன் தம்பியை மனதார சபித்தாள். எத்தனை விதமாக கிழவனை மயக்கி அனைத்து சொத்துகளையும் தன் பெயருக்கு மாற்ற நினைத்திருந்தாள். அத்தனையும் தவிடு பொடியானது தன் தம்பியினால்.

“இல்லபா இங்க ரெஸ்டு ரூம்னு எங்கேயாவது இவன் கேமிரா செட் பண்ணியிருந்தா? .. வேண்டா நாங்க கிளம்பறோம் .. நீங்க வந்து எல்லா இடத்தையும் செக் பண்ணுங்க”

“ ஆமா இவன் பண்ணாலும் பண்ணுவான். சரி நீங்க அம்மா பங்களால பத்திரமா இருங்க நாங்க இப்பவே கிளம்பி வரோம் வர்ஷா ..”

“இல்ல டேட் நீங்க மெதுவா வாங்க” கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

“வர்ஷா எனக்கு நீ தான் முக்கியம். ஹனிமூன் கேன்சல் பண்ணிடறேன். அடுத்த பிளைட்ல கிளம்பி வரேன். அதுவரை ஜாக்கிரதையா இரு” என்றவர். பிறகு சரவணனிடம் சில கட்டளைகளைப் பிறப்பித்தார்.

அதற்குள் பைரவி வர்ஷாவிற்கு ஜாடை காட்ட

“அப்பா ஒரு நிமிஷம் கோவில் மாதிரி இருக்கிற நம்ம பங்களா எப்படி இருக்குனு பாருங்க” என செல்போனில் பங்களாவைக் காட்டினாள் முக்கியமாக ராகேஷின் அறை. அத்தனை அலங்கோலமாக இருந்தது.

சுந்தரி பங்களாவை அத்தனை சுத்தமாகப் பார்த்துக் கொள்வார் என்ற எண்ணம் மோகன் மனதில் எழுந்தது. முதல்முறையாகத் தாம் தவறு செய்துவிட்டோம் என எண்ணினார்.

சில நொடிகள் பேசிவிட்டு அவர்களின் உரையாடல் முடிவு பெற்று லைனை கட் செய்தனர்.

வர்ஷா கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்தபடி “கண்ணுல கிளசரின் போட்டா இத்தனை தண்ணீர் வருமா?” என மூக்கை உரிஞ்சியபடி பேசினாள்.

சிந்துவும் பைரவியும் சிரித்தபடி அவள் அருகில் வந்தனர்.

“மவனே ராகேசுசுசு .. வாழ்க்கையில நீ செஞ்ச நல்ல விஷயம் இன்னிக்கு பார்ட்டி வெச்சது. இனி உனக்கு வாழ்க்கை முழுக்க களிதான் போ போ” என்றாள் பைரவி. அவன் “உன்ன” எனப் பல்லைக் கடிக்க முதுகில் பாடிகாட் பரிசு விழுந்தது. ராகேஷ் கும்பலை இழுத்துச் சென்றனர் பாடிகாட்கள்.

ராகேஷ் வர்ஷாவின் நிழலைக் கூடத் தொட முடியாது. இது மூன்று பெண்களும் அறிந்ததே. பாவம் சமையல் செய்பவருக்கு இதைப் புரிந்து கொள்ளுமளவு விவரம் தெரியாது.

ஆனால் மோகன் இந்த கண் கொள்ளா காட்சியை நேரடியாகக் காண வேண்டும் என்பதே மூன்று பெண்களின் திட்டம்.

மோகனுக்குச் செய்தி அனுப்பி அவர் ஆன் லைனில் வர வேண்டும். அவர் வந்துவிட்டார் என்பதற்கான சிக்னல் தான் சிந்துவின் தும்மல். பாடிகார்ட்டை இரண்டு நிமிடம் தாமதமாக வரச் சொன்னதும் இம்மூவர்தான்.

உண்மையாகவே அந்த இடம் பார்க்க அத்தனை மோசமாக இருந்தது. வர்ஷாவின் முக மாற்றத்தை புரிந்துக் கொண்ட வேலைக்காரர் “ பத்து நிமிஷத்தில் சுத்தம் செய்திடறேன் ” என்றார்.

சிரித்த முகத்துடன் தலையாட்டி நன்றித் தெரிவித்தாள் வர்ஷா.

பிறகு “ உங்க பாஸ்போர்ட், விசா, பேங்க் பேபர்ஸ், டாக்குமண்ட, நகை, டிரஸ்னு முக்கியமான எல்லாத்தையும் எடுத்துக்கோங்க. இனிமே கல்பனா இருக்கிற இடத்துல நாம இருக்க வேண்டாம். அம்மா பங்களாக்கு போயிடலாம்” எனச் சிந்து பைரவியிடம் கூறினாள்.

மூவரும் தத்தம் அறைகளுக்குச் சென்றனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் மூவரும் சுந்தரியின் பங்களாவை அடைந்தனர். சிந்து முன்னமே அங்கு வருவதைச் சொல்லிவிட்டதால் அங்கு அனைத்து ஏற்பாடுகளும் கச்சிதமாகத் தயாராகி இருந்தன.

இரவு உணவை முடித்து உறங்கச் சென்றனர். சற்று நேரத்திற்கெல்லாம் மோகன் போன் “வர்ஷா எங்களுக்கு இன்னும் மூணு மணி நேரத்துல பிளைட். நீ ஜாக்கிரதையா இருமா” என்றார்.

கல்பனா முகம் மனதில் தோன்றச் சிரிப்புதான் வந்தது.“இல்ல வேண்டாம்” என வர்ஷா கூறினாள்.

ஆனால் மோகன் பிடிவாதமாக இருந்தார். வர்ஷா அதற்கு மேல் கட்டாயப்படுத்தவில்லை.

மோகன் “உன் தம்பி இத்தனை கீழ் தனமா நடந்துப்பானு நினைச்சிக் கூட பாக்கல நான்” என கல்பனாவிடம் கோபிக்க

“எதோ வயசு கோளாறு அப்படி செய்தான். அதை ஏன் பெரிசு பண்றீங்க” கல்பனாச் சொல்ல

“என் பொண்ணு மேல கை வைக்கப் போனானே .. அது உனக்கு தப்பாகவே படல .. கைய வைத்து பார்க்கட்டுமே .. கையே இருக்காது” என உருமினார்.

மோகனை இத்தனை கோபத்தில் கல்பனா பார்த்ததில்லை. இன்னும் சண்டை போட்டால் நிலைமை மோசமாகிவிடும் என வாயை மூடினாள்.

கல்பனாவிற்குத் தெரியாமல் மோகன் தன் வக்கீலுக்கு போன் செய்து ராகேஷ் பெயரில் உள்ள சொத்துகளை மீண்டும் தன் பெயருக்கே மாற்றிவிடுங்கள் எனச் சொல்லிவிட்டார்.

அந்த மனிதரும் “சரிங்க சார்” என்றார். தனக்குள் “இந்த ஆளுக்கு இதே வேலையா போச்சு … இந்த சொத்து மாத்து அந்த சொத்தை மாத்து … இதுக்கு பீஸ் நிறையவே சார்ஜ் பண்ணிடனும்” என்றபடி வேலையைத் தொடங்கினார்.

மறுநாள் இரவு போல மோகனும் கல்பனாவும் வந்து சேர்ந்தனர். இருவரும் திருமணத்திற்கு முன் கல்பனா இருந்த தன் ரெயின்போ பங்களாவில் இறங்கினார்கள்.

“இங்க ஏன்?” கல்பனா சந்தேகத்துடன் கேட்க

“உன் தம்பி எப்படி மாத்தி வெச்சிருக்கான் அங்க சுத்தம் செய்யணும்ல” என வெடுக்கெனப் பேசினார்.

பயணத்தில் மோகன் முகம் கொடுத்துப் பேசவில்லை இங்கும் இப்படி என மனக் கணக்குப் போட்டபடி கல்பனா “என் தம்பி எங்க?” எனக் கேட்க

“இன்னும் உயிரோடுதான் இருக்கான்” எனப் பட்டெனப் பதில் வந்தது.

மறுநாள் காலை கல்பனா கண்விழித்த போது மோகனை காணவில்லை. எங்கும் இல்லாமல் போகவே .. வேலையாள் பவ்யமாக அவளிடம் வந்து “மோகன் சார் சுந்தரி மேடத்தை பார்க்க போயிரக்கார்” எனச் சொல்லி தன் கடமை முடிந்ததென அங்கிருந்து நகர்ந்தான்.

மருத்துவமனையில் வர்ஷா மோகனிடம் சமையல்கார அம்மா போனில் பேசியதை போட்டுக் காட்டினாள் “இன்னிக்கு ராத்திரி உங்க மூணு பேரையும் …” என்ற வார்த்தைகளை மோகன் கேட்க ரத்தம் கொதித்தது.

“ரொம்பப் பெரிய தப்பு பண்ணிட்டேன் வர்ஷா ..” எனத் தன் மகளை அணைத்து அழுதார்.

வர்ஷா மற்றும் அவர்களின் தோழிகளை எப்படி இந்த உலகை விட்டு அனுப்புவது என கல்பனா எண்ணிக் கொண்டிந்தாள்.

அதே நொடி கல்பனாவை எப்படி மோகன் வாழ்க்கையிலிருந்து கழற்றுவது என வர்ஷா சிந்திக்கத் தொடங்கினாள். தந்தை செய்த தவற்றைத் திருத்த வேண்டும். மீண்டும் தன் அம்மா சுந்தரி மட்டுமே அந்த பங்களாவில் நிரந்தரமாகத் தந்தையுடன் வசிக்க வேண்டும் என ஆசைப்பட்டாள்.




துளிகள் தெறிக்கு
Nice sis
 
  • Love
Reactions: kkp5