• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

துளி துளியாய் துரோகம் 6

kkp5

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
55
70
18
Thanavur
துளி துளியாய் துரோகம் 6

வர்ஷா தன் தந்தை மோகனை மொத்தமாக தன் பக்கம் இழுத்துவிட்ட பெருமிதத்தில் இருந்தாள். இன்னும் கல்பனாவை வீட்டைவிட்டு துரத்துவது மட்டுமே பாக்கி என அவள் எண்ண வலைகள் பின்னிக் கொண்டிருந்தன.

எதிரியின் ஒரு சின்ன தவற்றையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என எங்கோ படித்த வாசகம் நினைவிற்கு வந்தது.

ஆனால் கல்பனா இத்தனை சீக்கிரம் தோல்வியை ஏற்றுக் கொண்டு மோகன் வாழ்க்கையிலிருந்து விடைபெறும் ரகம் இல்லை என்பது வர்ஷாவிற்குத் தெரியவில்லை.

மோகன் வாழ்க்கையில் நுழைந்து அவன் சாம்ராஜ்ஜியத்தை மொத்தமாகப் பிடித்து தன் பக்கம் இழுக்க கல்பனா பொறுமையும் நிதானத்தைக் கடைப்பிடித்து செங்கல் செங்கல்லாகக் கோட்டையைக் கட்டினாள்.

ஆனால் பேராசை கொண்ட ராகேஷ் அதை ஓரே நிமிடத்தில் தகர்த்தெறிந்து விட்டான். அதை நினைத்துத் தான் பெருமிக் கொண்டிருந்தாள் கல்பனா.

தொடக்கத்தில் கல்பனா மோகனைத் திருமணம் முடித்து நிம்மதியாக வாழ வேண்டும் என்று நினைத்தாள். ஏனெனில் இனி தனக்கு முன்பு போலப் படவாய்ப்புகள் வராது என்பது நன்குத் தெரிந்துவிட்டது. அவள்வரை காதல் என்பதே அங்கு நாடகம்தான்.

மோகனை திருமணம் முடிக்க ஆசைப்பட்டது பிரதானக் காரணம் அவர் பணம்தான். வயதை ஒரு பிரச்சனையாகவே கருதவில்லை. காதலித்ததைப் போல நடித்த நாட்களில் அவரின்ச் செல்வச் செழிப்பைக் கண்டு பிரமித்துப் போனாள்.

சில சமயங்களில் மோகனின் முதல் மனைவி பிள்ளைகளான அஸ்வத் மற்றும் அஸ்வினி அவ்வப்போது போன் செய்வதுண்டு. அவர்கள் தனக்கு இத்தனை கோடிகள் வேண்டும் என்றதும் உடனே மோகன் பணம் கொடுத்தார். ஒருமுறை கூட அஸ்வத் மற்றும் அஸ்வினி அவளைக் காண வரவில்லை. திருமணத்திற்கும் வரவில்லை.

அடுத்து வர்ஷா கல்பனாவை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை என்பது ஆத்திரத்தை மூட்டியது. பல கோடி சொத்துகள் வர்ஷா மற்றும் சுந்தரி பெயரில் மாற்றப்பட்டதை அறிந்து அதிர்ந்து போனாள் கல்பனா.

இப்படியே போனால் தனக்கும் தனக்குப் பிறக்கும் குழந்தைக்கும் ஏதேனும் மிஞ்சுமா? என்ற சந்தேகம் அவளுள் எழுந்தது. தன்னைவிட மோகன் அவனின் குடும்ப உறுப்பினர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறான் என்ற எண்ணம் அவளுள் ஆழமாக பதியத் தொடங்கியது. தான் வெறும் உடல் பசிக்கு மட்டுமே எனக் கோபம் எழுந்தது.

ஆனால் அவளுக்கும் அவள் தம்பி ராகேஷ் பெயருக்கு சில லட்சங்கள் மட்டுமே மாறியிருந்தன. ஏமாற்றத்தை வெளிக் காட்டாமல் பொறுமை காத்தாள். அதற்குள் ஏதேதோ நடந்துவிட்டது. ராகேஷ் பெயரில் மாற்றிய நிறுவனம் மிகவும் பழமையானது. அதற்கே வர்ஷா அப்படி நடந்து கொண்டாள்.

மோகனை எல்லா வகையிலும் தகர்த்தி மொத்த சொத்தையும் அபகரிக்க வேண்டும். அவனையும் அவன் செல்ல மகளையும் நடுத் தெருவில் நிறுத்திவிட வேண்டும் என்பதே அவள் திட்டம். அந்த திட்டத்தில் சிறு சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் கல்பனா விடுவதாயில்லை. ரெயின்போ பங்களாவிலிருந்த கல்பனா தன் அறைக்குச் சென்று கதவை தாளிட்டாள். பிறகுத் தன் போனிலிருந்த சிம் கார்டை அகற்றினாள். மேக்அப் கிட்டில் மறைத்திருந்த வேறு சிம் கார்டை எடுத்து தன் செல்போனில் பொருத்தினாள்.

புதிய சிம் கார்ட் கொண்டு கல்பனா வேறொரு ரகசிய எண்ணுக்குத் தொடர்பு கொண்டாள். மூன்று ரிங் முழுவதுமாய் போனபின் “அக்கா எப்படி இருக்க?” என முழு போதை குரல் பதிலளித்தது.

“டேய் காலங்காத்தால தண்ணி அடிப்பையா?” எனக் கல்பனா பல்லைக் கடிக்க

“உன் தயவுதான் கா .. நீ அனுப்பின பணத்தில்தான் சரக்கு .. ரொம்ப தேங்க்ஸ் யக்கோவ்” என கெக்கப் பிக்க வென சிரித்தது மறுபக்கம்.

“தங்கராசு உனக்கு ஒரு முக்கியமான வேலை கொடுக்கலாம் பார்த்தா இப்படி போதையில இருக்கியே நீ” கல்பனாவின் குரலில் கோபம் தொனித்தது.

“எக்கா என்னதான் சரக்கு உள்ள இறங்கினாலும் தங்கராசு எப்பவும் ஸ்டிதான். நீ வேலையை டப்புனு சொல்லு பட்டுனு முடிச்சிடறேன்” எனச் சொன்னதும்

“சரி கேளு என் புருஷன் மோகன் ராகேசை அடச்சி வெச்சிருக்கான்”

“ஐயோ இப்பவே கண்டுபுடிச்சி உன்கிட்ட கூட்டியாறே” என்றான்

“அறிவு கெட்டவனே .. சொல்லுறத முழுசா கேளு” பல்லைக் கடித்தாள்.

“சாரி சொல்லுக்கா”

“நீ ராகேசை கண்டுபிடிச்சி வேற இடத்துல அடச்சி வை”

“எனக்கா சொல்ற?”

“ஆமா டா .. ராகேசுக்கு அவனைத் திரும்பவும் கடத்தினது நான்னு தெரியக் கூடாது. மோகன் தான் அவனை வேற இடத்துக்கு மாத்தினது மாதிரி நினைக்க வைக்கணும். புரியுதா?” மாணவனுக்குப் பாடம் எடுப்பதைப் போலப் புரிய வைத்தாள் .

“ம்ம் புரியுது”

“தேவைப்பட்டா நான் சொன்னதும் அவனை போட்டுத்தள்ளிடு ..” என்றாள் கல்பனா.

“என்ன கா?” குரலில் அதிர்ச்சி

“டேய் அவன் என்ன என் கூடப் பொறந்த தம்பியா? .. அதுவுமில்லாம கொஞ்ச நாளைக்கு சும்மா பொத்தினு இருக்க சொன்னா .. மொத்தமா சொதப்பிட்டான். அவனால எனக்குப் பல கோடி நஷ்டம் டா. எனக்கு நஷ்டம்னா அது உனக்கு தானே” சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னதும்.

“ஆமா கா”

“எனக்கு போன் பண்ண முடியாது அதனால வாட்சப்ல மெசேஜ் மட்டும் பண்ணு போதும்” எனச் சரமாரியாக ஆணைகளை பிறப்பித்தாள்.

“ம்ம்”

“அட்வான்ஸ் பணத்தை கோபிகிட்ட வாங்கிக்க … வேலை முடிஞ்சதும் மொத்தமா செட்டில் பண்றேன்”

“சரி கா”

“நீயும் வேலையைச் சரியா செய்யலை மவனே நீதான் அடுத்த டெட்பாடி .. என்ன புரியுதா?” எனக் காட்டமாகச் சொல்லவும்.

“அப்படிலா இல்லகா நான் சொன்னா சொன்னதுதான். வேலை கரெக்கிட்டா முடிஞ்சிடும்” என்றான் மீசையைத் தடவியபடி

“ஒரு வீடியோ அனுப்புறேன் அவன் கூட இருந்த நம்ம ஆளுங்க அவங்கள்ல யாராவது வெளில இருந்தா எதுனா தகவல் கிடைக்கும். பெரிய புள்ளிங்க மவனுகளும் இருக்கானுக. கண்டிப்பா அவங்க வெளிலதான் இருப்பாங்க” என்றபடி வீடியோவை அனுப்பினாள்.

வர்ஷா ராகேஷ் லீலைகளை ஆன்லைனில் காட்டியது அப்படியே மோகன் செல்போனில் வீடியோவாக பதிந்திருந்தது. அதை தன் போனுக்கு அவனுக்குத் தெரியாமல் மாற்றியிருந்தாள்.

தொடர்ந்து “மாஜி அமைச்சர் பையனும் இருக்கான் பாரு வீடியோல. அவன் வெளியில் வந்துட்டானானு பார்த்து எனக்கு மெசேஜ் அனுப்பு” என்றாள்

தங்கராசு வீடியோவை தன் சகாக்களோடு ஒருமுறைப் பார்த்தான்.

“சரி எல்லாமே கண்டுபிடிச்சி சொல்லுறேன்” என்றான்.

“போனை வைக்கிறேன்” என லைனை கட் செய்தாள்.

மீண்டும் பழையபடி சிம் கார்டை மாற்றினாள்.

மோகன் போன் செய்திருப்பான் என நம்பியவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வர்ஷாவின் கைகள் வலுப்பதை உணர முடிந்தது.

மோகன் மற்றும் வர்ஷா இன்னமும் மருத்துவமனையில் இருந்தனர். சுந்தரியிடம் உடல் நலன் கருதி எதையும் பகிரவில்லை. அதுவும் தன் செல்ல மகள் வர்ஷாவிற்குப் பிரச்சனை என்றால் சுந்தரியால் தாங்க முடியாது என்பது அனைவரும் அறிந்ததே.

சிந்துவும் பைரவியும் அலுவல் அறைக்குப் பக்கத்து அறையில் காத்துக் கொண்டிருந்தனர். அது இருவருக்குமான தனி அறை. வர்ஷா ஏற்பாடு செய்து கொடுத்திருந்தாள்.

அப்பாவும் மகளும் தங்களுக்கான அறையில் அமர்ந்திருந்தனர். மோகன் மிகவும் தளர்ந்து காணப்பட்டார். திருமணம் ஆகி சில நாட்களே ஆகியிருந்தும் அவரின் உற்சாகம் முழுவதுமாய் வடிந்து பாலைவனமாய் காட்சியளித்தார்.

அவரை இப்படிக் காண மனம் வரவில்லை. எத்தனை கம்பீரமான தோற்றம் உடையவர். வியாபாரம் டீலை சர்வ சாதாரணமாக பேசி தன் வழிக்குக் கொண்டுவரும் அசாத்திய திறமைக் கொண்டவர்.

வர்ஷா “இட்ஸ் ஓகே டாட். எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என ஆதரவாகப் பேசத் தொடங்கினாள்.

“இல்லமா என்னால அதிர்ச்சியில் இருந்து வெளி வரவே முடியலை .. உனக்கு எதாவது ஆகியிருந்தா?” எனச் சொன்னவர் கைகள் நடுங்கின.

வர்ஷா அவர் கைகளை தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டாள்.

“சுந்தரி பயப்பட்ட மாதிரியே ஆகிடுச்சி .. நான் இதையெல்லாம் யோசிக்கவே இல்ல பார்” என்றவர் கண்கள் குளமாயின.

“அப்பா” எனப் பாசத்துடன் அணைத்துக் கொண்டாள். அவர் மேல் கடுகளவும் கோபம் எழவில்லை. அவர் மெல்லச் சமாதானம் அடைந்தார்.

மோகனின் போன் வைப்ரேட் மோட்டில் இருந்ததால் மேசை மேல் அவ்வப்போது “கொர் கொர்” என்ற முறைப்போடு பச்சிளம் குழந்தையைப் போல ஊர்ந்தபடி இருந்தது. கல்பனா அழைத்திருப்பாள் என மோகன் முதல் இரண்டு முறை எடுக்கவில்லை. மூன்றாவது முறை அழைப்பு வரவே வர்ஷா எடுத்துப் பார்த்தாள்.

மோகனின் பி.ஏ. தான் மூன்று முறையும் அழைத்தது. வர்ஷா அவரிடம் காண்பித்து உடனே உயிர்ப்பித்தும் கொடுத்தாள். அவர் ஸ்பீக்கரை ஆன் செய்து மேசையில் வைத்து “சொல்லு பீமா” என்றார்.

“சார் காபி எஸ்டேட் ஓனர் பத்து தடவை போன் பண்ணிட்டார். அவர்கிட்ட …” என மென்று முழிங்கினான்.

“கேன்சல் பண்ணிடு பீமா” அடுத்த நொடி கூறிவிட

“சார்…” என்ற வார்த்தைகளில் அதிர்ச்சி தொனிக்கக் கேட்டது.

“பீமா சார் ஒரு பத்து நிமிஷத்தில் உங்களுக்குப் பதில் சொல்றேன்” என வர்ஷா சொல்லி லைனை கட் செய்தாள்.

“சரிங்க மேடம்” என மறுமுனையில் போன் துண்டிக்கப்பட்டது.

“என்ன இது?”

“கூர்க்ல (Coorg) காபி எஸ்டேட் வாங்கி அங்கேயே காபி பொடி செய்தும் இப்படி நிறைய நினைச்சேன். ஆனா இப்ப இருக்கிற சூழ்நிலையில் அது முடியாது போல இருக்கு” என்றார் விரக்தி புன்னகையோடு

“ நான் போய் பாக்குறேன் டேட்”

“வர்ஷா? ..”

“யெஸ் டேட் எனக்கும் டீல் பேச வரும்” என்றாள் புன்னகை மாறாமல்

“ச்சே நான் அப்படி நினைக்கல மா. உனக்குப் பாதுகாப்பு”

“எனக்கு என்னை பாத்துக்கத் தெரியும் .. அதோடு சிந்து பைரவி இருக்காங்க ப்ளஸ் பாடிகாட்” என்றாள் கைகள் விரிய.

“சரி போயிட்டு வா மா”

“இனிமே உங்க எல்லா பிஸ்னசை நான் கவனிச்சிக்கிறேன். உங்க பிசினஸ் வாரிசா என் பேரை நீங்க சட்டப்படி அறிவிச்சிடுங்க” என்றாள் சட்டென.

இதை மோகன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் திடீர் தாக்குதலுக்குப் பதிலளிக்கும் அனுபவம் பெற்றவர் ஆயிற்றே அதனால் நிதானமாக “இந்த டீலை எப்படி முடிக்கிற பார்க்கணும் வர்ஷா” என்றார்.

“நான் நல்லபடி டீலை முடிச்சா?”

“நீதான் என் வாரிசு .. எல்லாமே உனக்குத்தான்” என்றார்.

வர்ஷா “சேலன்ஜ் அக்சப்டட் டேட் .. ஆனா உங்களுக்கு ஒரு கடமை இருக்கு”

“சொல்லுமா”

“நான் திரும்பி வரும்வரை அம்மாவைப் பத்திரமா பாத்துக்கணும்”

“என் மேல சத்தியமா சுந்தரியை என் கண்ணுல வெச்சி பாத்துப்பேன்” என்றார்.

“சரி இப்ப வீட்டுக்குப் போங்க கல்பனா தனியா இருப்பாங்க” என தன் ஹேண்ட் பேக்கை கையில் எடுத்தபடி தானும் கிளம்ப முனைந்தாள்.

“என்னால இனிமே கல்பனா முகத்தைக் கூடப் பார்க்க முடியாது” என்றார் வெறுப்புடன்

“அப்பா எதிரியை எப்பவும் நம்ம பக்கத்துலயே வைக்கணும். அதுவும் அவங்களுக்கு நாம எதிரினு தெரியக் கூடாது. இப்ப சூழ்நிலைக்கு நீங்க கல்பனாவை உருகி உருகி காதலிங்க. ஆனா எந்த கையெழுத்தும் போடக் கூடாது.. சொத்தும் மாற்றக் கூடாது” என்றாள் சிரிப்புடன்.

விரிந்த புன்னகையுடன் பெருமை பொங்க மகளைப் பார்த்தார் “பிரவுட் ஆப் யூ மை கேள்” என அணைத்துக் கொண்டார். தனக்கு வயதாகிவிட்டது. தான் ஒதுங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதோ எனத் தோன்றியது.

“அந்த ராகேஷை கூட விட்டுடுங்க பா” என்றாள்.

“என்னமா சொல்ற?”

“அப்பா ராகேஷ் கூட சேர்ந்த இருந்தவங்க சிலர் பெரிய ஆளுங்க பசங்க. அவங்கனால நமக்கு எதாவது பிரச்சனை ஏற்படாமல் இருக்கணும். அதனால எல்லாரையும் ரிலீஸ் பண்ணிடுங்க”

“எல்லாரும் நம்ம திண்டிவனம் ரிசார்ட்ல இருக்காங்க. எல்லாருக்கும் தண்ணிய குடுத்து போதையில வெச்சிருக்கேன். ஒரு பயலுக்கும் என்ன நடக்குதுனு தெரியாம தண்ணில மிதக்கிறான்”

“அப்ப அவர்களுக்குச் சேவகம் செய்தது போதும். அனுப்பிடுங்க. ஆனா ராகேஷ் மேல மட்டும் ஒரு கண்ணு இருக்கட்டும். வீட்ல அவன் நடவடிக்கை கண்காணிக்க ஆளுங்கள் போடுங்க” தீவிரமான சிந்தனையுடன் வர்ஷா கூறினாள்.

“நீ சொல்றதும் சரிதான். நான் கிளம்புறேன். நீயும் ஜாக்கிரதையா இரு” என்றார்.

போகும் வழியில் ராகேஷ்மற்றும் அவன் ஆட்களை அனுப்பிவிடக் கூறிவிட்டார். தன் பிஏவிடமும் காபி எஸ்டேட் விஷயமாக இனி வர்ஷாவைத் தொடர்புக் கொள் என்றுவிட்டார்.

வீட்டுக்குச் சென்ற மோகன் தன் கோபத்தை மறைத்து “ஹாய் கல்லு டார்லிங்” என ஆலிங்கனம் செய்தார். அதில் காமம் காதல் இரண்டும் இல்லை என்பதை நொடியில் கல்பனா புரிந்து கொண்டாள்.

“என்கிட்ட சொல்லாமலேயே கிளம்பிட்டிங்க” எனப் பொய் கோபத்துடன் முகத்தை வைத்தபடி சொன்னவள் பிறகு கலகலவென சிரித்து சிணுங்கினாள்.

“ஒரு எமர்ஜென்சி மீட்டிங் அதோடு சுந்தரிக்கும் உடம்பு ரொம்ப முடியலையாம் . டாக்டர் போன் பண்ணார். நீ நல்ல உறக்கத்தில் இருந்த உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு கிளம்பிட்டேன்”

நல்லாவே சமாளிக்கிற கெழவா மனதில் நினைத்தாலும் வெளிக் காட்டாமல் “அப்படியா?” என்றாள்.

“உனக்குத்தான் தெரியுமே வேலைனு வந்துட்டா போன் பக்கமே போக மாட்டேன்னு. உனக்கு போன் பண்ணக் கூட மறந்துட்டேன்னா பார் எத்தனை வேலைனு” என நடித்தார்.

“என்கிட்டியே உன் நடிப்பா? இரு மவனே” என எண்ணியவள் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. தலையசைத்து புன்னகையுடன் இருந்துவிட்டாள். தனக்கும் நடிக்கத் தெரியுமென.

“ நீங்கச் சாப்பிட்டுக் கொஞ்ச நேரம் தூங்குங்க டையர்டா இருப்பீங்க” பாசமொழுக சொன்னாள்.

மோகனும் சோர்வாக இருந்தால் அவ்வாறே செய்ய தன் அறைக்குச் சென்றுவிட்டார்.

அப்போது ராகேஷ் எண்ணிலிருந்து போன் வர கல்பனா அதிர்ந்துவிட்டாள்.

“ஹலோ எங்கடா இருக்க?” பதற்றமாகக் கேட்டாள்.

“அக்கா பயந்துட்டயா?” என ராகேஷ் சிரித்தது எரிச்சலூட்டியது.

“சொல்லுடா முதல்ல” என கல்பனா அதட்டவும்

“அக்கா அன்னிக்கு நடந்தது சர்பிரைஸ் பார்ட்டி .. எங்களை ரிசார்ட்ல அந்த கவனிப்பு கவனிச்சிக்கிட்டாங்க .. மீ வெரி ஹேப்பி” என அவன் முழு தகவலையும் கூறினான்.

கல்பனாவுக்கு இது அத்தனையும் மோகனின் சூழ்ச்சி என்று புரிந்துவிட்டது. ராகேஷ் பாட்டிலைப் பார்த்தால் மயங்கிவிடுவான். அவன் சகாக்களும் அவ்வாறே .. வில்லிலிருந்து அம்பு பறப்பட்டுவிட்டது. இனி தடுக்க முடியாது.

கல்பனா சிம் மாற்றி தங்கராசுவிடம் ராகேஷ் இருக்கும் இடத்தை கூறினாள். பின்னர் அவனிடம் எப்படி பேச வேண்டும் என்பதையும் கூறி மீண்டும் சிம்மை மாற்றினாள்.

அத்தனை ஏசியிலும் வியர்வை வழிந்தது. வர்ஷாவை பழிக்குப் பழி வாங்கும் காலம் வெகு தூரம் இல்லை என நினைக்க மனதில் உற்சாகம் பொங்கியது.



துளிகள் தெறிக்கும் …











































 

ADC

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
13
13
3
Bangalore
Nice update sis 👏🏼👏🏼👏🏼 Rendu perum sariyana alunga dan. who will win the battle? Ivalo dhooram vandhachi ana protagonists inum kanume?
Thank you.
 
  • Love
Reactions: kkp5