பகுதி – 6.
சர்வஜித் பெண்கள் இருவரின் உடைமைகளை பறித்துக்கொண்டு, தன் விசிட்டிங் கார்டை மட்டும் கொடுத்துச் செல்ல, முழுதாக ஒரு நிமிடம் என்ன செய்வது என்றே தெரியவில்லை. முழு அதிர்வில் அப்படியே நின்றுவிட்டார்கள்.
அதில் முதலில் தெளிந்தது ரூபி தான். “ஷாலு... என்னடி இது? இப்போ என்ன பண்றது?” நிஜத்தில் அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
“எ...எ...னக்கும் என்ன செய்யறதுன்னு தெரியலையே ரூபி” என்றவளுக்கு ஒரு உதவி செய்யப் போய் இப்படி சிக்கலில் வந்து சிக்கிக் கொண்டோமே என்று இருந்தது. இந்த விஷயத்தை உடனடியாக தன் அப்பாவின் கவனத்துக்கு கொண்டு சென்றால் எல்லாம் முடிந்துவிடும் என புத்தி சொன்னது.
ஆனால் தங்கள் முன்னால் இருப்பவனின் பலம் தெரியாமல் சட்டென அவளால் எதையும் செய்துவிட முடியவில்லை. அதைவிட தன் அப்பாவிடம் சொன்னால், விஷயம் தன் மாமாவிடம்தான் செல்லும் என அவளுக்குத் தெரியுமே.
அப்படி இருக்கையில், தன் அப்பாவிடம் சொல்லி விஷயத்தை இன்னும் சிக்கலாக்கிக் கொள்ள பிடிக்கவில்லை. தன் மாமா தனது விஷயத்துக்குள் மூக்கை நுழைப்பது பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை.
அது மாமாவோடு நின்றுவிடாது. அவரது மகன் முத்துப்பாண்டியின் வசம் விஷயம் செல்வது அறவே பிடிக்கவில்லை. எனவே அந்த நினைப்பை அடியோடு கைவிட்டாள். ‘தன் மாமாவை விட, முத்துப்பாண்டியை விடவா வந்தவன் மோசமாக இருந்துவிடப் போகிறான்?’ என்ற நினைப்பு ஒரு அசட்டு தைரியத்தைக் கொடுத்தது.
ஆனால் வந்திருப்பவன் எத்தனை மோசமானவன், கெட்டவன் என அவளுக்குத் தெரியாதே. தெரிய வருகையில் என்ன செய்வாளோ?
தன் கையில் இருந்த அவனது கார்டைப் பார்த்தாள். அது அவனது அலுவலக கார்ட் என்பது புரிந்தது. அந்த கார்டின் தரத்தை வைத்தே அவன் எப்படிப்பட்டவன், அவனது உயரம் என்னவாக இருக்கும் என அவளால் ஓரளவுக்கு கணிக்க முடிந்தது.
வைஷாலி அந்த கார்டைப் பார்க்கவே, தானும் பார்த்தவள், “இதை எதுக்குடி நம்மகிட்டே கொடுத்துட்டு போயிருக்கான்?” ரூபிக்கு மூளை மொத்தமாக வேலைநிறுத்தம் செய்துவிட்ட உணர்வு.
“நம்மளை அங்கே போய் பார்க்க வரச் சொல்லி இருக்கான்னு நினைக்கறேன்” வைஷாலி சொல்ல, அதிர்ந்து போனாள்.
“என்னடி சொல்ற? அங்கேயா? எதுக்கா இருக்கும்? ஹையோ... எங்க வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சால் என்ன ஆகும்னு தெரியலையே. அதைவிட, இப்போ இன்டர்வியூ பத்தி கேள்வி கேட்க கால் பண்ணுவாங்க. நாம அட்டன் பண்ணலைன்னா என்ன நினைப்பாங்க? எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஷாலு...” சற்று நடுக்கமாகவே சொன்னாள்.
வைஷாலிக்கும் உள்ளுக்குள் பதட்டம் இருந்தாலும், அவள் வீட்டுப்பக்கம் முரடர்களையே பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ அத்தனை கலங்கிவிடவில்லை. ‘என்னவென பார்த்துவிட்டு, பிறகு முடிவு செய்து கொள்ளலாம்’ என நினைத்தாள்.
“ரூபி... நாம ஏதாவது செய்யலாம்” அவளது பதட்டத்தை குறைக்க முயன்றாள்.
“நம்மகிட்டே பத்து பைசா கிடையாது, நம்ம ஃபோனும் அவனோட போய்டுச்சு. இப்போ என்ன செய்யறது?” வைஷாலிக்கும் அந்த கவலை இருக்கவே செய்தது. சரியாக அந்த நேரம் பெட்ரோல் பங்கில் இருந்து வந்த ஒருவன், விபத்தில் சிக்கிய பெண்ணின் கைப்பை, உணவுப்பை என அனைத்தையும் அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தான்.
அதே நேரம் அங்கே ஒரு போலீஸ் வாகனம் வர, அதில் இருந்து இரண்டு போலீஸ்க்காரர்கள் இறங்கினார்கள். அவர்கள் எதற்காக வந்திருப்பார்கள் என இரு பெண்களுக்கும் புரிய, “அண்ணே... ஒரு நிமிஷம் எங்க கூட இருக்கீங்களா?” வந்தவனிடம் கேட்க, அவனும் சம்மதித்தான்.
எப்படியும் போலீஸ் தங்கள் பெட்ரோல் பங்குக்கு வருவார்கள் என்பதால், அவன் ஓடி ஒளிய விரும்பவில்லை. போலீஸ் மருத்துவமனைக்குள் செல்ல, அவர்கள் பின்னாலேயே இவர்களும் சென்றார்கள்.
வந்த போலீஸ், ரிசப்ஷனில் கேட்டு, இவர்களிடம் அவர்கள் திரும்ப, நடந்த விஷயங்களை ஒன்றுவிடாமல் சொல்லி, அந்த பெண்ணின் உடைமைகளை அவர்கள் வசம் ஒப்படைத்தார்கள்.
“உங்க ட்ரஸ் எல்லாம் ரத்தமா இருக்கே... நீங்க எப்படிப் போவீங்க?” அவர்களிடம் எல்லாம் விவரம் கேட்டுக் கொண்ட இன்ஸ்பெக்டர் அவர்களிடம் கேட்டார். இப்பொழுது விபத்து நடந்தவர்களுக்கு உதவி செய்தால், அவர்களை குற்றவாளிபோல் கேள்வி கேட்டு குடையக் கூடாது என்ற உத்தரவு இருக்கவே அப்படியே செயல்பட்டார்கள்.
“நீங்க வந்த வண்டியை எங்கே?” அவர் கேட்க,
‘இவரிடம் விஷயத்தைச் சொல்லிவிடலாமா?’ என எண்ணிய வைஷாலி தன் முடிவை மாற்றிக் கொண்டாள். கூடவே கையில் இருந்த கார்டையும் மறைத்தாள். தேவையில்லாமல், நிலைமையின் தீவிரம் புரியாமல் அவர்களை உள்ளே இழுக்க மனம் சம்மதிக்க மறுத்தது.
ஏனென்றால் கோபாலிடம் வரும் விஷயங்களை அவன் எந்த அளவுக்கு திரித்து, மறித்து என தனக்கு சாதகமாகவும், வருபவர்களுக்கு பாதகமாகவும் திருப்புவான் என அவளுக்குத் தெரியும். அதையெல்லாம் கண்கூடாகப் பார்த்து வளர்ந்தவள். எனவே வைஷாலியிடம் அத்தனை நிதானம் இருந்தது.
ரூபிக்கு அந்த காவலர்களிடம் பேசக் கூட கை கால்கள் எல்லாம் நடுங்கியது. வைஷாலிக்கு போலீஸ் முதல், அடியாள் துவங்கி அரசியல்வாதி வரைக்கும் பார்த்தவள் என்பதால் போலீசைப் பார்த்து பயப்படவில்லை.
“அவங்க எங்களை இறக்கிவிட்டுட்டு உடனே போய்ட்டாங்க சார். வழியில் நிறுத்தி ஏறியதால் அது யார் என்ற விவரம் எல்லாம் எங்களுக்குத் தெரியலை” வேகமாகச் சொன்னாள்.
“ஏட்டையா, அந்த பொண்ணோட பேகில் இருந்து ஏதாவது உபயோகமா கிடைச்சதா?” இன்ஸ்பெக்டர் ஏட்டிடம் கேட்க,
“அந்த பொண்ணோட ஆபீஸ் ஐடி கிடைச்சிருக்கு சார். அதில் எமெர்ஜென்சி நம்பர் கொடுத்திருந்தாங்க, அதுக்கு கால் பண்ணி சொல்லிட்டேன். அந்த பொண்ணோட வீடு இங்கே பக்கத்தில்தானாம், அவங்க ஹஸ்பன்ட் இப்போ வர்றதா சொன்னார்” ஏட்டைய்யா சொல்ல, அதை அனைவருமே கேட்டுக் கொண்டார்கள்.
“சார் நாங்க போகலாமா?” வைஷாலி கேட்டாள்.
“ம் ஆமா, நீங்க இங்கே இருக்கணும்னு இல்லை. நாங்க கூப்ட்டா மட்டும் நீங்க ஸ்டேஷனுக்கு வர வேண்டி இருக்கும்” இன்ஸ்பெக்டர் சொல்ல, இவர்களுக்கு கொஞ்சம் நிம்மதி.
“அப்போ நானும் கிளம்பட்டுமா சார்?” அந்த பெட்ரோல் பங்க் பையன் கேட்க,
“நீ போப்பா, பங்கில் இருக்கும் சிசிடிவி பதிவுகளை எல்லாம் நாங்க பார்க்க வர்றோம்” அவர் சொல்ல, அந்தப் பையன் கிளம்பினான்.
அவன் பின்னாலேயே ஓடி வந்த வைஷாலி, “அண்ணே... எங்க வண்டி...?” அவனிடம் கேட்டாள்.
“ரெண்டு வண்டியையும் அங்கேதான் நிப்பாட்டி வச்சிருக்கோம். வந்து எடுத்துக்கோங்க” அவன் சொல்ல, இப்பொழுது இரு பெண்களுக்குமே அந்த வண்டி அவசியமாக இருந்தது. அது இருந்தால் எதையாவது செய்யலாம் எனத் தோன்ற அப்படியே நின்றார்கள்.
“வண்டியை எடுக்கணுமா மேடம்? நான் ஸ்கூட்டியில் தான் வந்திருக்கேன், என் வண்டியை எடுத்துட்டு போய்ட்டு, உங்க வண்டியை எடுத்துக்கோங்க” அவன் சொல்ல, ஒரு பெரும் நன்றியோடு அதை வாங்கிக்கொண்டு சென்றார்கள்.
திரும்பி வந்து அவன் வண்டியை அவனிடம் ஒப்படைத்துவிட்டு, ரூபியின் வண்டியில் இருவரும் கிளம்பினார்கள்.
“ஷாலு, இப்போ எங்கே போறோம்?” அவளிடம் கேட்டாள்.
“என் வீட்டுக்கு போய் ட்ரஸ் மாத்திட்டு, அவன் சொன்ன அட்ரசுக்குப் போறோம்” அவள் சொல்ல, ரூபி மறுத்து எதையும் பேசவில்லை. நிஜத்தில் அவர்களுக்கு வேறு வழி எதுவும் இல்லை என அவர்களுக்குத் தெரியுமே.
இருவரும் வைஷாலியின் வில்லாவுக்குச் செல்ல, அவர்களை இப்படி இரத்தம் உறைந்த ஆடையில் பார்த்துவிட்டு, அருணா பயந்து போனாள்.
“பாப்பா... என்ன இது? ஆக்சிடென்ட் ஆயிடுச்சா? எங்கேயாவது அடி பட்டிருக்கா? இருங்க நான் உடனே ஐயாவுக்கு கால் பண்றேன்” என்ற அருணா தன் அலைபேசியை எடுக்க ஓடினாள்.
“அக்கா, அக்கா... ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளுங்க” என்றவள் அவளைத் தடுத்தாள்.
“எங்களுக்கு எதுவும் இல்லை, நாங்க போன இடத்தில் ஒரு விபத்து, அவங்களுக்கு உதவி செய்யப் போனதில் உருவான இரத்தம்தான் இது. மற்றபடி எதுவும் இல்லை. நீங்க அவசரப்பட்டு அப்பாவுக்கு எதுவும் சொல்லிடாதீங்க” அவளிடம் சொன்னாள்.
“நிஜமா வேற எதுவும் இல்லையே பாப்பா?” மீண்டும் கேட்டாள்.
“நான் குளிச்சுட்டு வந்த பிறகு நீங்களே பாருங்க. இப்போ கொஞ்சம் குடிக்க தண்ணி கொடுங்க” என்றவள், “ரூபி, நீ போய் குளிச்சுட்டு ட்ரஸ் மாத்து போ...” அவளிடம் சொன்னாள்.
அருணா கொண்டு வந்த தண்ணீரை இருவரும் குடித்து முடிக்கவே, அடுத்த அரைமணி நேரத்தில் இருவரும் குளித்து வேறு உடைக்கு மாறிக் கொண்டார்கள்.
“அக்கா, எனக்கு உங்க ஃபோன் வேணுமே...” என்றவாறு அவளது அலைபேசிக்காக கை நீட்டினாள். அந்த அலைபேசி அவளது அப்பா பைரவன் வாங்கிக் கொடுத்ததுதான் என்பதால், எந்தவிதமான கேள்வியும் கேட்காமல் அவளிடம் கொடுத்தாள்.
“அக்கா, எங்க ஃபோனை நாங்க இன்டர்வியூ போன இடத்தில் வாங்கி வச்சுட்டாங்க. அதனால்தான் உங்க ஃபோனை வாங்கிட்டுப் போறேன். அப்பா ஃபோன் பண்ணா, இந்த நம்பருக்கு கூப்பிடச் சொல்லுங்க” என்றவள் வீட்டில் இருந்து கொஞ்சம் பணம், தன் கைப்பை என எடுத்துக் கொண்டாள்.
அருணா மேலே குடைந்து எதையும் கேட்டுவிடக் கூடாதே என்பதற்காகவே வேகமாக வெளியேறினாள்.
இருவரும் வேகமாக வெளியே வர, “ரூபி, உங்க வீட்டுக்கும் கூப்ட்டு நான் சொன்ன அதே கதையை அவங்ககிட்டேயும் சொல்லு. இது ரிசப்ஷன்ல இருக்கற நம்பர்ன்னு சொல்லு...” அவளது கரத்தில் அலைபேசியை கொடுத்தவாறே சொன்னாள்.
“ஷாலு... எப்படிடி இப்படியெல்லாம் யோசிக்கற? எனக்கு பதட்டத்தில் நெஞ்சடைக்குது” புலம்பியவாறே அவள் சொன்னதைச் செய்தாள்.
“இந்த அட்ரசை மேப்ல போடு... என்னன்னு போய் பார்த்துடலாம்” என்றவாறு அவளிடம் அந்த கார்டைக் கொடுத்தாள்.
வைஷாலி வண்டியைக் கிளப்ப, ரூபி அவள் சொன்னதைச் செய்தாள். “இங்கே இருந்து ஒன் அவர் காட்டுது ஷாலு...” அவள் சொல்ல, வண்டியை செலுத்தத் துவங்கினாள். உள்ளுக்குள் அத்தனை பதட்டமாக இருந்தாலும், முயன்று தன்னை கட்டுப்படுத்தியவாறே சாலையில் கவனமானாள்.
இங்கே இப்படி என்றால், தன் காருக்குள் இருந்த சர்வஜித்துக்கு கார் சீட்டில் சிந்தி இருந்த ரத்தத்தைப் பார்த்து அவனுக்கு ரத்த அழுத்தம் எகிறியது.
‘அவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? என் காரை வழி மறிச்சு, என் காரிலேயே ஏறுவாளா? அவளை விடப் போவதில்லை’ உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தான். அவன் புகைக்கும் விதத்தை வைத்தே அவனது டென்ஷனை உணர்ந்த ஹரீஷ் வாயைத் திறக்கவே இல்லை.
கார் அவர்கள் சென்று சேர வேண்டிய இடத்துக்குச் செல்ல, “கார் அப்படியே இருக்கட்டும்” பின்னால் திரும்பி ரத்தத்தைப் பார்த்தவாறே அவனிடம் உறுமிவிட்டுச் சென்றான். அவன் சொன்ன விதத்திலேயே அவன் செய்யக் காத்திருப்பது இன்னது என அவனுக்குப் புரிந்து போனது.
சர்வஜித் பெண்கள் இருவரின் உடைமைகளை பறித்துக்கொண்டு, தன் விசிட்டிங் கார்டை மட்டும் கொடுத்துச் செல்ல, முழுதாக ஒரு நிமிடம் என்ன செய்வது என்றே தெரியவில்லை. முழு அதிர்வில் அப்படியே நின்றுவிட்டார்கள்.
அதில் முதலில் தெளிந்தது ரூபி தான். “ஷாலு... என்னடி இது? இப்போ என்ன பண்றது?” நிஜத்தில் அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
“எ...எ...னக்கும் என்ன செய்யறதுன்னு தெரியலையே ரூபி” என்றவளுக்கு ஒரு உதவி செய்யப் போய் இப்படி சிக்கலில் வந்து சிக்கிக் கொண்டோமே என்று இருந்தது. இந்த விஷயத்தை உடனடியாக தன் அப்பாவின் கவனத்துக்கு கொண்டு சென்றால் எல்லாம் முடிந்துவிடும் என புத்தி சொன்னது.
ஆனால் தங்கள் முன்னால் இருப்பவனின் பலம் தெரியாமல் சட்டென அவளால் எதையும் செய்துவிட முடியவில்லை. அதைவிட தன் அப்பாவிடம் சொன்னால், விஷயம் தன் மாமாவிடம்தான் செல்லும் என அவளுக்குத் தெரியுமே.
அப்படி இருக்கையில், தன் அப்பாவிடம் சொல்லி விஷயத்தை இன்னும் சிக்கலாக்கிக் கொள்ள பிடிக்கவில்லை. தன் மாமா தனது விஷயத்துக்குள் மூக்கை நுழைப்பது பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை.
அது மாமாவோடு நின்றுவிடாது. அவரது மகன் முத்துப்பாண்டியின் வசம் விஷயம் செல்வது அறவே பிடிக்கவில்லை. எனவே அந்த நினைப்பை அடியோடு கைவிட்டாள். ‘தன் மாமாவை விட, முத்துப்பாண்டியை விடவா வந்தவன் மோசமாக இருந்துவிடப் போகிறான்?’ என்ற நினைப்பு ஒரு அசட்டு தைரியத்தைக் கொடுத்தது.
ஆனால் வந்திருப்பவன் எத்தனை மோசமானவன், கெட்டவன் என அவளுக்குத் தெரியாதே. தெரிய வருகையில் என்ன செய்வாளோ?
தன் கையில் இருந்த அவனது கார்டைப் பார்த்தாள். அது அவனது அலுவலக கார்ட் என்பது புரிந்தது. அந்த கார்டின் தரத்தை வைத்தே அவன் எப்படிப்பட்டவன், அவனது உயரம் என்னவாக இருக்கும் என அவளால் ஓரளவுக்கு கணிக்க முடிந்தது.
வைஷாலி அந்த கார்டைப் பார்க்கவே, தானும் பார்த்தவள், “இதை எதுக்குடி நம்மகிட்டே கொடுத்துட்டு போயிருக்கான்?” ரூபிக்கு மூளை மொத்தமாக வேலைநிறுத்தம் செய்துவிட்ட உணர்வு.
“நம்மளை அங்கே போய் பார்க்க வரச் சொல்லி இருக்கான்னு நினைக்கறேன்” வைஷாலி சொல்ல, அதிர்ந்து போனாள்.
“என்னடி சொல்ற? அங்கேயா? எதுக்கா இருக்கும்? ஹையோ... எங்க வீட்டுக்கு விஷயம் தெரிஞ்சால் என்ன ஆகும்னு தெரியலையே. அதைவிட, இப்போ இன்டர்வியூ பத்தி கேள்வி கேட்க கால் பண்ணுவாங்க. நாம அட்டன் பண்ணலைன்னா என்ன நினைப்பாங்க? எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஷாலு...” சற்று நடுக்கமாகவே சொன்னாள்.
வைஷாலிக்கும் உள்ளுக்குள் பதட்டம் இருந்தாலும், அவள் வீட்டுப்பக்கம் முரடர்களையே பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ அத்தனை கலங்கிவிடவில்லை. ‘என்னவென பார்த்துவிட்டு, பிறகு முடிவு செய்து கொள்ளலாம்’ என நினைத்தாள்.
“ரூபி... நாம ஏதாவது செய்யலாம்” அவளது பதட்டத்தை குறைக்க முயன்றாள்.
“நம்மகிட்டே பத்து பைசா கிடையாது, நம்ம ஃபோனும் அவனோட போய்டுச்சு. இப்போ என்ன செய்யறது?” வைஷாலிக்கும் அந்த கவலை இருக்கவே செய்தது. சரியாக அந்த நேரம் பெட்ரோல் பங்கில் இருந்து வந்த ஒருவன், விபத்தில் சிக்கிய பெண்ணின் கைப்பை, உணவுப்பை என அனைத்தையும் அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்தான்.
அதே நேரம் அங்கே ஒரு போலீஸ் வாகனம் வர, அதில் இருந்து இரண்டு போலீஸ்க்காரர்கள் இறங்கினார்கள். அவர்கள் எதற்காக வந்திருப்பார்கள் என இரு பெண்களுக்கும் புரிய, “அண்ணே... ஒரு நிமிஷம் எங்க கூட இருக்கீங்களா?” வந்தவனிடம் கேட்க, அவனும் சம்மதித்தான்.
எப்படியும் போலீஸ் தங்கள் பெட்ரோல் பங்குக்கு வருவார்கள் என்பதால், அவன் ஓடி ஒளிய விரும்பவில்லை. போலீஸ் மருத்துவமனைக்குள் செல்ல, அவர்கள் பின்னாலேயே இவர்களும் சென்றார்கள்.
வந்த போலீஸ், ரிசப்ஷனில் கேட்டு, இவர்களிடம் அவர்கள் திரும்ப, நடந்த விஷயங்களை ஒன்றுவிடாமல் சொல்லி, அந்த பெண்ணின் உடைமைகளை அவர்கள் வசம் ஒப்படைத்தார்கள்.
“உங்க ட்ரஸ் எல்லாம் ரத்தமா இருக்கே... நீங்க எப்படிப் போவீங்க?” அவர்களிடம் எல்லாம் விவரம் கேட்டுக் கொண்ட இன்ஸ்பெக்டர் அவர்களிடம் கேட்டார். இப்பொழுது விபத்து நடந்தவர்களுக்கு உதவி செய்தால், அவர்களை குற்றவாளிபோல் கேள்வி கேட்டு குடையக் கூடாது என்ற உத்தரவு இருக்கவே அப்படியே செயல்பட்டார்கள்.
“நீங்க வந்த வண்டியை எங்கே?” அவர் கேட்க,
‘இவரிடம் விஷயத்தைச் சொல்லிவிடலாமா?’ என எண்ணிய வைஷாலி தன் முடிவை மாற்றிக் கொண்டாள். கூடவே கையில் இருந்த கார்டையும் மறைத்தாள். தேவையில்லாமல், நிலைமையின் தீவிரம் புரியாமல் அவர்களை உள்ளே இழுக்க மனம் சம்மதிக்க மறுத்தது.
ஏனென்றால் கோபாலிடம் வரும் விஷயங்களை அவன் எந்த அளவுக்கு திரித்து, மறித்து என தனக்கு சாதகமாகவும், வருபவர்களுக்கு பாதகமாகவும் திருப்புவான் என அவளுக்குத் தெரியும். அதையெல்லாம் கண்கூடாகப் பார்த்து வளர்ந்தவள். எனவே வைஷாலியிடம் அத்தனை நிதானம் இருந்தது.
ரூபிக்கு அந்த காவலர்களிடம் பேசக் கூட கை கால்கள் எல்லாம் நடுங்கியது. வைஷாலிக்கு போலீஸ் முதல், அடியாள் துவங்கி அரசியல்வாதி வரைக்கும் பார்த்தவள் என்பதால் போலீசைப் பார்த்து பயப்படவில்லை.
“அவங்க எங்களை இறக்கிவிட்டுட்டு உடனே போய்ட்டாங்க சார். வழியில் நிறுத்தி ஏறியதால் அது யார் என்ற விவரம் எல்லாம் எங்களுக்குத் தெரியலை” வேகமாகச் சொன்னாள்.
“ஏட்டையா, அந்த பொண்ணோட பேகில் இருந்து ஏதாவது உபயோகமா கிடைச்சதா?” இன்ஸ்பெக்டர் ஏட்டிடம் கேட்க,
“அந்த பொண்ணோட ஆபீஸ் ஐடி கிடைச்சிருக்கு சார். அதில் எமெர்ஜென்சி நம்பர் கொடுத்திருந்தாங்க, அதுக்கு கால் பண்ணி சொல்லிட்டேன். அந்த பொண்ணோட வீடு இங்கே பக்கத்தில்தானாம், அவங்க ஹஸ்பன்ட் இப்போ வர்றதா சொன்னார்” ஏட்டைய்யா சொல்ல, அதை அனைவருமே கேட்டுக் கொண்டார்கள்.
“சார் நாங்க போகலாமா?” வைஷாலி கேட்டாள்.
“ம் ஆமா, நீங்க இங்கே இருக்கணும்னு இல்லை. நாங்க கூப்ட்டா மட்டும் நீங்க ஸ்டேஷனுக்கு வர வேண்டி இருக்கும்” இன்ஸ்பெக்டர் சொல்ல, இவர்களுக்கு கொஞ்சம் நிம்மதி.
“அப்போ நானும் கிளம்பட்டுமா சார்?” அந்த பெட்ரோல் பங்க் பையன் கேட்க,
“நீ போப்பா, பங்கில் இருக்கும் சிசிடிவி பதிவுகளை எல்லாம் நாங்க பார்க்க வர்றோம்” அவர் சொல்ல, அந்தப் பையன் கிளம்பினான்.
அவன் பின்னாலேயே ஓடி வந்த வைஷாலி, “அண்ணே... எங்க வண்டி...?” அவனிடம் கேட்டாள்.
“ரெண்டு வண்டியையும் அங்கேதான் நிப்பாட்டி வச்சிருக்கோம். வந்து எடுத்துக்கோங்க” அவன் சொல்ல, இப்பொழுது இரு பெண்களுக்குமே அந்த வண்டி அவசியமாக இருந்தது. அது இருந்தால் எதையாவது செய்யலாம் எனத் தோன்ற அப்படியே நின்றார்கள்.
“வண்டியை எடுக்கணுமா மேடம்? நான் ஸ்கூட்டியில் தான் வந்திருக்கேன், என் வண்டியை எடுத்துட்டு போய்ட்டு, உங்க வண்டியை எடுத்துக்கோங்க” அவன் சொல்ல, ஒரு பெரும் நன்றியோடு அதை வாங்கிக்கொண்டு சென்றார்கள்.
திரும்பி வந்து அவன் வண்டியை அவனிடம் ஒப்படைத்துவிட்டு, ரூபியின் வண்டியில் இருவரும் கிளம்பினார்கள்.
“ஷாலு, இப்போ எங்கே போறோம்?” அவளிடம் கேட்டாள்.
“என் வீட்டுக்கு போய் ட்ரஸ் மாத்திட்டு, அவன் சொன்ன அட்ரசுக்குப் போறோம்” அவள் சொல்ல, ரூபி மறுத்து எதையும் பேசவில்லை. நிஜத்தில் அவர்களுக்கு வேறு வழி எதுவும் இல்லை என அவர்களுக்குத் தெரியுமே.
இருவரும் வைஷாலியின் வில்லாவுக்குச் செல்ல, அவர்களை இப்படி இரத்தம் உறைந்த ஆடையில் பார்த்துவிட்டு, அருணா பயந்து போனாள்.
“பாப்பா... என்ன இது? ஆக்சிடென்ட் ஆயிடுச்சா? எங்கேயாவது அடி பட்டிருக்கா? இருங்க நான் உடனே ஐயாவுக்கு கால் பண்றேன்” என்ற அருணா தன் அலைபேசியை எடுக்க ஓடினாள்.
“அக்கா, அக்கா... ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளுங்க” என்றவள் அவளைத் தடுத்தாள்.
“எங்களுக்கு எதுவும் இல்லை, நாங்க போன இடத்தில் ஒரு விபத்து, அவங்களுக்கு உதவி செய்யப் போனதில் உருவான இரத்தம்தான் இது. மற்றபடி எதுவும் இல்லை. நீங்க அவசரப்பட்டு அப்பாவுக்கு எதுவும் சொல்லிடாதீங்க” அவளிடம் சொன்னாள்.
“நிஜமா வேற எதுவும் இல்லையே பாப்பா?” மீண்டும் கேட்டாள்.
“நான் குளிச்சுட்டு வந்த பிறகு நீங்களே பாருங்க. இப்போ கொஞ்சம் குடிக்க தண்ணி கொடுங்க” என்றவள், “ரூபி, நீ போய் குளிச்சுட்டு ட்ரஸ் மாத்து போ...” அவளிடம் சொன்னாள்.
அருணா கொண்டு வந்த தண்ணீரை இருவரும் குடித்து முடிக்கவே, அடுத்த அரைமணி நேரத்தில் இருவரும் குளித்து வேறு உடைக்கு மாறிக் கொண்டார்கள்.
“அக்கா, எனக்கு உங்க ஃபோன் வேணுமே...” என்றவாறு அவளது அலைபேசிக்காக கை நீட்டினாள். அந்த அலைபேசி அவளது அப்பா பைரவன் வாங்கிக் கொடுத்ததுதான் என்பதால், எந்தவிதமான கேள்வியும் கேட்காமல் அவளிடம் கொடுத்தாள்.
“அக்கா, எங்க ஃபோனை நாங்க இன்டர்வியூ போன இடத்தில் வாங்கி வச்சுட்டாங்க. அதனால்தான் உங்க ஃபோனை வாங்கிட்டுப் போறேன். அப்பா ஃபோன் பண்ணா, இந்த நம்பருக்கு கூப்பிடச் சொல்லுங்க” என்றவள் வீட்டில் இருந்து கொஞ்சம் பணம், தன் கைப்பை என எடுத்துக் கொண்டாள்.
அருணா மேலே குடைந்து எதையும் கேட்டுவிடக் கூடாதே என்பதற்காகவே வேகமாக வெளியேறினாள்.
இருவரும் வேகமாக வெளியே வர, “ரூபி, உங்க வீட்டுக்கும் கூப்ட்டு நான் சொன்ன அதே கதையை அவங்ககிட்டேயும் சொல்லு. இது ரிசப்ஷன்ல இருக்கற நம்பர்ன்னு சொல்லு...” அவளது கரத்தில் அலைபேசியை கொடுத்தவாறே சொன்னாள்.
“ஷாலு... எப்படிடி இப்படியெல்லாம் யோசிக்கற? எனக்கு பதட்டத்தில் நெஞ்சடைக்குது” புலம்பியவாறே அவள் சொன்னதைச் செய்தாள்.
“இந்த அட்ரசை மேப்ல போடு... என்னன்னு போய் பார்த்துடலாம்” என்றவாறு அவளிடம் அந்த கார்டைக் கொடுத்தாள்.
வைஷாலி வண்டியைக் கிளப்ப, ரூபி அவள் சொன்னதைச் செய்தாள். “இங்கே இருந்து ஒன் அவர் காட்டுது ஷாலு...” அவள் சொல்ல, வண்டியை செலுத்தத் துவங்கினாள். உள்ளுக்குள் அத்தனை பதட்டமாக இருந்தாலும், முயன்று தன்னை கட்டுப்படுத்தியவாறே சாலையில் கவனமானாள்.
இங்கே இப்படி என்றால், தன் காருக்குள் இருந்த சர்வஜித்துக்கு கார் சீட்டில் சிந்தி இருந்த ரத்தத்தைப் பார்த்து அவனுக்கு ரத்த அழுத்தம் எகிறியது.
‘அவளுக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? என் காரை வழி மறிச்சு, என் காரிலேயே ஏறுவாளா? அவளை விடப் போவதில்லை’ உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்தான். அவன் புகைக்கும் விதத்தை வைத்தே அவனது டென்ஷனை உணர்ந்த ஹரீஷ் வாயைத் திறக்கவே இல்லை.
கார் அவர்கள் சென்று சேர வேண்டிய இடத்துக்குச் செல்ல, “கார் அப்படியே இருக்கட்டும்” பின்னால் திரும்பி ரத்தத்தைப் பார்த்தவாறே அவனிடம் உறுமிவிட்டுச் சென்றான். அவன் சொன்ன விதத்திலேயே அவன் செய்யக் காத்திருப்பது இன்னது என அவனுக்குப் புரிந்து போனது.