• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அகானா - 32

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
அகானா - 32

“என்ன பண்ற நீ..?” என ஆகனிடமிருந்து திமிறிய வெளியே வந்த அடுத்த நொடி அவனை ஓங்கி அறைந்திருந்தாள் அகானா.

நொடியில் நடந்த சம்பவத்தில் இருவருமே அதிர்ந்துவிட, கன்னத்தைப் பிடித்து வெறித்த பார்வையோடு ஆகன் அவளைப் பார்க்க, அவளுக்கோ அடித்தது குற்றவுணர்ச்சியைக் கொடுத்தாலும், ‘நீ பேசின பேச்சுக்கு இது தேவைதான்..’ என்பது போல அசராது நின்றாள்.

“ராங்கி..” என வாய்க்குள் முனகியவன் “அம்மு நான் சொல்றதை நீ கொஞ்சம் பொறுமையா கேளு..” என அவனே இறங்கி வந்தான்.

“இங்க பார்.. உன்கிட்ட நான் பலமுறை சொல்லிட்டேன். என்னை இப்படி கூப்பிடாதன்னு.. அது என் அம்மா மட்டும்தான் கூப்பிடனும். அவங்களுக்கு மட்டும் தான் அந்த உரிமை இருக்கு. உங்களை மாதிரி பச்சோந்திகளுக்கு இல்ல..” என வன்மையாகவே சாடினாள்.

“ஓக்கே.. ஓக்கே ரிலாக்ஸ்.. இப்போ என்ன? நான் உன்னை அப்படி கூப்பிடக்கூடாது அவ்ளோதான விடு.. நான் கூப்பிடல.. நீ டென்சன் ஆகாத..” என்றவனுக்கு, இவளை எப்படி சமாதானம் செய்ய என தெரியாமல் தலையை வலித்தது.

ஆகனின் ஓய்ந்த தோற்றம் அவளையும் வதைக்க “தயவுசெஞ்சி என்னை இப்படியே விடு.. நீ போனது போனதுதான். அதை நான் அப்படித்தான் எடுத்துக்கிட்டேன். என்ன ஒரு வருசம் நாம பழகிருப்போமா? அப்போ கூட ரெண்டு பேரும் லவ் பண்றோம்னு சொல்லிக்கல.. என்னனு தெரியாம, என் பக்கம் என்ன உண்மை இருக்கும்னு தெரியாம நீ போனது எனக்கு மிகப்பெரிய தோல்வி. உன் மேல நான் வச்சிருந்த காதல் ஆட்டம் காண ஆரம்பிச்சது அப்போதான்.”

“எனக்கு உன்னோட சூழல் புரியாம இல்லை. ஆரம்பத்துல இருந்து உனக்கு என்ன சொல்லி வளர்த்தாங்களோ அதத்தானே உண்மைன்னு நினைக்கத் தோணும். ஆனா அதுக்குபிறகு நீ என்னைத் தேடி வரல.. அதுதான் நான் உன்மேல வச்ச நம்பிக்கை சரிய காரணம். அதுக்குப்பிறகு முழுசா 7 வருசம் ஆகிடுச்சு. இந்த ஏழு வருசத்துல உனக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சிருக்கும். தெரிஞ்சும் நீ எனக்காக பேசல. அப்புறம் எப்படி உன்னை நான் நம்ப முடியும்..” என்றாள் ஆக்ரோசமாக.

“அம்மு.. நான்… நான் உடனே உன்னைத் தேடி வந்தேன்.. ஆனா ஆரிதான் விடல..” என ஆரம்பிக்கும் போதே குரல் உள்ளே போய்விட்டது ஆகனுக்கு.

‘அவன் சொன்னால் உனக்கு எங்கே போனது அறிவு, உன்னுடைய வேலை உண்மை தெரிந்த அப்போதே அவளை சமாதானம் செய்வதுதானே’ என மூளை அறிவுறுத்தியது.

“நான் செஞ்சதை சரின்னு சொல்லவே இல்ல அம்மு. நீ சொன்ன மாதிரி வீட்டுல சொன்னதை கேட்டு வளர்ந்ததாலோ என்னமோ அதையே உண்மைன்னு நம்பிட்டேன். மாமாதான் எனக்கு எல்லாம். அவரை ஏமாத்திட்டு போய்ட்டாங்களேன்னு கோபம். தப்புத்தான்.. ரொம்ப பெரிய தப்புத்தான். ஆனா அதுக்காக என் காதலை கொச்சைப்படுத்தாதே.. நான் பார்த்த, நேசிச்ச ஒரே பொண்ணு நீ மட்டும்தான். எனக்கு நீ மட்டும்தான்.. அதுதான் கடைசி வரைக்குமே..” என்றான் தன்னை விளக்கும் பொருட்டு.

“ஆனா எனக்கு அப்படி இல்லை. எனக்கு நீ வேண்டாம்னு முடிவு பண்ணிதான் இங்க வந்தேன். என்னோட அம்மாவுக்காகத்தான் இந்த வேலையில் சேர்ந்தேன். எனக்காக அம்மா பட்ட கஷ்டங்களும், அவமானங்களும், வலிகளும், வேதனைகளும் கொஞ்ச நஞ்சமில்ல. அவங்க இனி நிம்மதியா இருக்கனும். அதே வலியை நானும் கொடுக்கமாட்டேன்.” என்றாள் தீர்மானமாக.

“அம்மு.. நான் உன்னை கட்டாயப்படுத்தல, அதே நேரம் அத்தையை யோசி. அவங்க உன்னை அப்படியே விடுவாங்களா? கண்டிப்பா உனக்கு ஒரு கல்யாணம் செஞ்சே ஆகனும்னு சொல்லுவாங்க. உன்னால அவங்க பேச்சை மீற முடியுமா? அவங்க சந்தோசம் தான் உனக்கு முக்கியம்னா, உன்னோட மேரேஜ் தான் அவங்களுக்கு சந்தோசம். அதை நீ முடியாதுன்னு சொல்லுவியா.. சொல்ல முடியுமா?” என்றான் விளக்கமாக.

“என்ன எல்லாரையும் மாதிரி நார்மலான அம்மா மாதிரி, என் அம்மாவும் யோசிப்பாங்கனு நினைக்கிறியா? கண்டிப்பா மாட்டாங்க. என்னோட இந்த காதல், அதனால நான் அனுபவிச்ச வலி எதுவும் அவங்களுக்கு தெரியாதுனு நினைக்கிறியா? ஹ்ம்ம் எல்லாம் தெரியும். தெரிஞ்சும் என்கிட்ட இதுவரை எதுவும் கேட்டதில்ல. கேட்டு என்னை சங்கடப்படுத்தல.. நான்தான் காதலிச்சு வாழ்க்கையை தொலைச்சேன்.. நீயும் ஏன் இப்படி செஞ்சன்னு ஒரு வார்த்தை கேட்கல. அப்படி கேட்டிருந்தா இன்னைக்கு நான் முழுசா உன் முன்னாடி நான் நின்னுட்டு இருந்துருக்கமாட்டேன். என்னை என் அம்மாவுக்கு புரியும். அவங்களை எனக்கு புரியும். நீ அவங்களை இழுத்து பேசாத..” என கண்டிப்புடன் கூறிவிட,

“அம்மு.. நான் செஞ்சது தப்புதாண்டி.. நான் இல்லைன்னு சொல்லவே இல்லை. ஆனா என் சூழலை நீயும் புரிஞ்சிக்கோயேன். அம்மா பேசினது தப்பு.. அவங்களை சரி செய்ய முடியாது. அவங்களா மாறுவாங்க. கண்டிப்பா மாறுவாங்க. எனக்காக உன்னை தேடி வருவாங்க. நம்புடி ப்ளீஸ்.. இப்படி வேண்டவே வேண்டாம்னு யோசிக்காத அம்மு.. ப்ளீஸ்..” என்றான் கெஞ்சலாக.

“ப்ளீஸ்.. நீ இப்படியெல்லாம் எங்கிட்ட பேசாத.. நான் என் வாழ்க்கையில உன்னை யோசிக்கவே இல்ல. காதல் அது எல்லார்க்கும் வரும். எனக்கும் வந்தது.. ஆனா அது சரியா அமையல. போயிடுச்சு.. எல்லாரோட காதலும் சேரனும்னு விதி இருக்கா என்ன? என் காதல் ஃபெயிலாகிடுச்சு.. இல்ல நானே என் காதலை ஃபெயில் பண்ணிக்கிட்டேன். இத தப்புன்னு என்னால எப்பவும் சொல்ல முடியாது. என் அம்மா எனக்காக எத்தனையோ தியாகங்கள் செஞ்சாங்க. அவங்களுக்காக நான் என் காதலை தியாகம் செய்றேன். வலிதான்.. வலிக்குதுதான். ஆனா அதைவிட உன் குடும்பத்தை நினைக்கும் போது என் அம்மாவோட கண்ணீர்தான் முன்ன வந்து நிக்குது..” என்றாள் திருத்தமாக.

அவள் வேதனை படிந்த முகம், கலங்கிய விழிகள், கரகரப்பான குரல்.. அவனை மொத்தமாக வீழ்த்திவிட்டது. “அம்மு..” என்று அவளிடம் வேகமாக சென்றான்.

“வேண்டாம்.. பக்கத்துல வராத.. என்னை வீக் பண்ணாத.. நான் இப்படித்தான் இருக்கனும். எனக்கு இப்படித்தான் நான் வேணும். என்னையும், என் அம்மாவையும் ஒழிச்சு ஓட வச்ச எல்லாரையும் நான் ஓட வைக்கனும். அதுக்கு நான் இப்படித்தான் இருந்தாக வேண்டும். என்னை இப்படியே விட்டுடு..” என்றாள் யாசகமாக.

“இதுதான் உன் முடிவா?” என்றான் ஆகன் இறுதியாக.

“கண்டிப்பா.. என்னோட உறுதியான, இறுதியான முடிவு இது.” என்றாள் அகானாவும் தீர்மானமாக.

“சரி… அப்போ என்னோட முடிவையும் கேட்டுக்கோ.. எத்தனை வருசம் ஆனாலும் உனக்காக நான் காத்துட்டு இருப்பேன். நீ என்னை தேடி வர நாளுக்காக என் உயிர் உன்னை மட்டுமே தூக்கி சுமந்துட்டு இருக்கும். உனக்காக நான் எப்பவும் இருப்பேன். அதை மறந்துடாத…” என்றான் தன் காதல் கரைந்து போன வேதனையில்.

“உன் இஷ்டம்.. நான் கட்டாயப்படுத்த முடியாது. நீ அவங்க எல்லாரையும் கூப்பிட்டு கிளம்பு..” என கட்டிலில் அப்படியே தளர்ந்து அமர்ந்துவிட்டாள்.

‘ஆகனுக்கும் அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதற்காக அப்படியே அமைதியாக இருக்கவும் விருப்பமில்லை. அவள் சொன்னது போல ஏழு வருசத்தை வீணாக்கிவிட்டான். இனியும் அதே தப்பை செய்யமாட்டான். சீக்கிரம் இதற்கொரு முடிவை கட்டியே ஆகவேண்டும்.’ என்று நினைத்தபடியே வெளியில் வந்தான்.

அவனைப் பார்த்ததும் “கண்ணா இந்த பாவி என்ன செஞ்சிட்டான் பாருடா.. நம்ம மகியை ஏமாத்தி கல்யாணம் செஞ்சிருக்கான்டா.. என் பொண்ணு வாழ்க்கையை நாசம் பண்ணிட்டா அவ..” என ரஞ்சனி கத்த,

‘என்ன நடந்தது?’ என்ற பார்வையோடு வினோத்தைப் பார்க்க, அவரும் நடந்ததை சொல்ல,

“என்ன ப்பா பண்ணலாம்.?” என தன் தந்தையை கேட்டான் ஆகான்.

“அவங்க வீட்டுல பேசலாம்..” என்றார் சங்கரும் முடிவாக.

“சரிப்பா கிளம்பலாம்..” என்றவன் வெளியில் நடக்க, அப்போதுதான் அவர்கள் அழைத்து வந்த பத்திரிக்கையாளர் நிற்க, ஒரு நொடி அதிர்ந்தாலும் “சாரி நீங்க வந்ததே மறந்துடுச்சு. உங்க பேமன்ட் செக் ஆஃபிஸ்க்கு அனுப்பிடுங்க..” என அவரைத் தாண்டி வெளியில் செல்ல, வந்தவருக்கோ இதை எப்படி எடுக்க என தெரியவில்லை.

அவர் இந்த செய்தியை நிச்சயம் பதிப்பிக்க மாட்டார். காரணம் அகானா. அவள் முன்னமே சொல்லிவிட்டாள். ஆனாலும் ஆகனின் இந்த தோற்றம் அவரை வருத்த “சாரி சார்..” என்றபடியே தன் டூவிலரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

“கண்ணா அவன் நடந்த எல்லாத்தையும் போட்டுட போறான்டா.. அப்புறம் நாளைக்கு டாப் நியூஸே அதாகத்தான் இருக்கும்..” என வினோத் பதட்டமாக கூற,

“ம்ச்.. போட்டா போடட்டும் மாமா. உண்மையைத்தானே போட போறாங்க..” என சலிப்பாகி காரை எடுத்தவன், “ப்பா.. உங்க கார் இங்கேயே இருக்கட்டும். நாளைக்கு வந்து எடுத்துக்கலாம். இப்போ என்கூட வாங்க..” என்றான் தந்தையைப் பார்த்து.

அவருக்கும் நடந்த சம்பவங்களின் அதிர்ச்சியில் தானாக கார் ஓட்ட முடியும் என தோன்றவில்லை. அதனால் மறுத்து பேசாமல் மகனோடு ஏறிவிட்டார்.

இனி புலம்பி பயன் இல்லை என்று புரிந்த ரஞ்சனி வினோத்தின் காரில் ஏறிக்கொண்டார்.

வழி நெடுக மஞ்சரியையும், அகானாவையும் திட்டி சபித்தபடியேதான் வந்தார்.

ஒருகட்டத்தில் வினோத்திற்கே கோபம் வந்துவிட்டது. “அக்கா போதும்.. இவ்வளவு நடந்தும் உனக்கு புத்தி வரலியா?” என கத்தியவன், “நீ எப்படி இங்க வந்த.?” என கடுப்பாக கேட்க,

“ம்ம் வந்தேன்… எப்படியோ வந்தேன்… அது ரொம்ப முக்கியமா? அப்படி வந்ததுனாலத்தான இந்த உண்மையை கண்டுபிடிக்க முடிஞ்சது..” என ரஞ்சனி ஆத்திரமாக கத்த,

“ம்ச் இப்போ சொல்ல போறியா இல்லையா?” என வினோத் கத்த,

“கண்ணா வீட்டுக்குத்தான் போக சொன்னான்.. எனக்குத்தான் மனசு சரியில்ல நரசிம்மர் கோவிலுக்கு போகலாம்னு லட்சுமிபுரம் வந்தேன்.. அப்போதான் நீ போனத பார்த்தேன்.. அதுதான் வந்தேன்..” என எரிச்சலுடன் பதில் கொடுக்க,

“ம்ம்.. நீ வாய் விடாம இருந்திருந்தா மகியை அந்த பையன் அனுப்பிருப்பான். உன்னாலத்தான் இப்போ அவன் கூட இருக்கா..” என கடுப்புடன் கூறினான் வினோத்.

“ஆமாடா.. எல்லாத்துக்கும் என்னையே குறை சொல்லுங்க.. அந்த நாசமா போனவ என்னைக்கு வந்தாளோ, அப்ப இருந்து எங்க நிம்மதியே போச்சு. முதல்ல அந்த சனியனை தொலைச்சு தலை முழுகனும். அப்போதான் எனக்கு நிம்மதி..” என்றதும்,

“நீ இப்படியே பேசிட்டு இரு.. உன் பொண்ணு உன்னை விட்டு போன மாதிரி உன் பையனும் ஒரு நாள் உன்னை விட்டு போகப்போறான். அப்போதான் உனக்கு இந்த பேச்சோட வீரியம் புரியும்..” என்ற வினோத் அடுத்து ரஞ்சனியிடம் பேசவே இல்லை.

மகனின் முகத்தில் காட்டிய வேதனை பெற்றவருக்கு புரியாமல் இல்லை. அதனால் “என்னப்பா.. ?” என்றார் வாஞ்சையாக.

“ம்ச்.. அவளுக்கு நான் வேண்டாமாம்.. இந்த குடும்பம் எதுவும் வேண்டாமாம். அவளுக்கும் இது வலிதானாம். வலிச்சாலும் நான் வேண்டாமாம்..” என்ற போது ஆகனின் குரல் மொத்தமாக உடைந்திருந்தது.