• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அசுரதாரா -08

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,274
498
113
Tirupur
விழுந்து விடுவோம் என நினைத்தவள், விழுவதை தடுக்க முடியாமல் விட்டாலும், அடி படுவதை தவிர்ப்போம் என்று கைகளை உன்றப் பார்த்தவள் தரையினை தொடுவதற்குள், புதிதாய் இரு கரங்கள் தாங்கிக் கொள்ள, யார் அது என்று முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

புதியவன் தான். பார்ப்பதற்கு சற்று பெருத்த உடலாக இருந்தாலும், அதையும் உடற்பயிற்சி செய்து நேர்த்தியாக வைத்திருப்பான் போல, தொடுகையில் சற்றும் மென்மை இல்லை. ஆட்டுக்கிடாய் போன்றதொரு குறுந்தாடி. சின்னதாக இருந்தாலும் அழகாக வெட்டிய மீசை. கொஞ்சம் வெளுப்பு நிறம். பறவாயில்லை பாராப்பதற்கு அவனும் நாவீன காலத்து திரைப்பட நாயகன் போலத்தான் இருந்தான்.

இரண்டே இரண்டு வினாடிக்குள் அளந்து விட்டாள் தாரா அவனை. ஆனால் அவளை தாங்கிப் பிடித்திருந்தவனது கால அவகாசம் தான் நீண்டு கொண்டே போனதே தவிர, அவனது பார்வையானது அவளது முகத்திலிருந்து விலகவில்லை. தன்னை விடுவிப்பான் என காத்திருந்தவளுக்கு அது ஏமாற்றமாக போக,

"தந்தன தந்தன தந்தன தந்தன.....
தந்தன தந்தன தாளம் வரும் நல்ல நேரம் வரும்.. சந்தன மல்லிகை வாசம் வரும்." என்றவளது சந்தம் மாறாத பாடலில், தலையினை குழுக்கி, நினைவுகளை பூமிக்கு அழைந்து வந்தவளை அவன் காண.

"என்ன இந்தப்பாட்டு, தூரத்தில எங்கேயோ கேக்கிற மாதிரி இருக்குமே" என்றவளது நக்கல் கேள்வி புரிந்தவனும், ஈ.. என வழிந்தவாறு அவளை விடுவிக்க,

"தூரத்தில கேக்கிற அந்த ரேடியோ பெட்டிய கட்டையாலயே அடிச்சு உடைச்சு போடுவன்." என்றவள் அவனை முறைத்தவாறு விலத்தி நடந்தாள்.

"அவற்ர சிரிப்ப பாரன், பறங்கிக்காய்க்கு பல்லு முளைச்ச கணக்கா" என கோபத்தில் முனுமுனுத்து சென்றவளுக்கு எதிரே வந்த நெடுமாறன் கண்ணுக்கு தெரியவே இல்லை. எப்படி தெரிவான்? பெண்களை கண்டதும் பல்லினை காட்டுபவர்களை கண்டாலே ஆத்திரம் தான் வரும் தாராவுக்கு. இவன் என்னடா என்றால் இளையாராஜாவின் இசையோடு அல்லவா வழிகிறான்.


அவளது கவுண்டரில் வாய் பிளந்து நின்றவன் கன்னத்தில் சற்றே வலிக்கும் படி தட்டிய நெடுமாறன்,

"என்ன...! அர்ச்சனை பலமா இருக்குது. என்ன செய்தாய் அவள?" என்றான் இடையில் வந்ததால் எதுவும் தெரியாது.

"ஆரடா அது புதுசா உன்ர வீட்டில?" கேள்வி கேட்டது என்னவோ நண்பனிடம் தான், ஆனால் பார்வை இன்னமும் அறை நோக்கி சென்றவளிடமே இருந்தது.

தன் கேள்வியை பொருட்டாக எண்ணாது, அவளை பற்றி விசாரிக்கும் நண்பனது செயல் சற்று கடுப்பை கிளப்ப.

"ஆ.. என்ர லவ்வர்" அவன் பதிலில் சட்டென்று தலையை திருப்பி நண்பனை பார்த்தவன்,

"எப்பயடா இது நடந்தது? உப்பிடி ஒரு லவ்வர் இருக்கிறா என்டு நீ எனக்கு சொல்லவே இல்லையே!" என்றான் அவனது பதிலில் உண்டான ஏமாற்றத்தை மறைத்து.

"எனக்கே அது என்ர லவ்வர் என்டு தெரியாது. உனக்கு என்னன்டு சொல்லுவன்?" திருப்பி அவன் கேட்க.

"என்னடா சொல்லுறாய்? உனக்கு தெரியாதோ! அப்ப எப்பிடி லவ்? என்னை விசரனாக்காம சொல்லு" விளங்கவே இல்லை அவனுக்கு. பின்னே லவ்வர் என்கிறான். பின்னர் தனக்கே தெரியாது என்கிறான். என்ன தான் சொல்கிறான் இவன் என்றிருந்தது.

"அடேய் விசரா...! அது ஆரன்டே எனக்கு இப்பவரைக்கும் தெரியாதுடா" என்றவனது பேச்சில் வாய் பிளந்தவன்,

"டேய் என்னடா சொல்லுறாய்.. முதல் லவ்வர் என்டாய்... இப்ப தெரியாது என்டுறாய். எனக்கு ஒன்டும் விளங்கேல... எதென்டாலும் சொல்லுறத விளங்கிறா மாதிரி சொல்லி துளை" என்றான் அவன் மாறி மாறி கதைப்பதில்.

நண்பனது குழப்பத்தை கண்டு சிரித்தவனாய், அவனது தோள்களில் வாகாய் கை போட்டவன்,

"அடேய் தேவா... என்ர ஆள உனக்கு தெரியாதோ என்ன? இது ஒரு விபத்துடா! இடேல இருந்து சொன்னா ஒன்டும் விளங்காது. வா கதிரையில இருந்து எல்லாத்தையும் சொல்லுறன்." என்றவாறு கை வளைவில் அழைத்து சென்று, செற்றியில் அமர்த்தியவன், நடந்த அனைத்தையும் கூறினான்.

"ஓ... அப்பிடி என்டா, இவளை பற்றி ஒன்டுமே உனக்கு தெரியாது என்டுறியா?" என்றான் சந்தேகமாய்.

"க்ஹூம்... ஒன்டில்ல பாதி கூட தெரியாது." என்க.

"என்னமோ சொல்லுறாய் நம்புறன். ஆனா உன்ர குணத்துக்கு உன்னோட நீ ஆரையும் தங்க வைக்க மாட்டியே... அப்பிடி இருக்கேக்க இவளை எப்பிடி" என்றவன்,

"சரி... இதுவும் நல்லதுக்கு தான். பாக்க வடிவா தான் இருக்கிறாள். ஏன் நான் செற்ட் பண்ண கூடாது?" என நண்பனிடம் ஆலோசனை கேட்ட மறு நிமிஷம்.

"செருப்பு..." தூரத்தே இருந்து குரல் வர, குரல் வந்த திசை திரும்பி பார்த்தார்கள் இருவரும்.

"இங்க எங்கயோ தான் செருப்பை கழட்டினான் காணேல... அதான் தேடுறன்." என்றவாறு மூலை முடுக்கு என தேடியவள் காலில் தான் அது இருந்தது. விளங்கிக் கொண்டான் நெடுமாறன். வந்த சிரிப்பினை வாயிலயே அடக்கிக் காெண்டவன்,

"என்னடா... தேடுற செருப்பு அவளின்ர கால்ல தான் இருக்கு என்டு சொல்லட்டே" என்றான் நண்பனுக்கு மட்டும் கேட்பதாய் காதினுள்.

"அய்யா ராசா வேண்டாம்டா.. அந்த செருப்பின்ர டிசைன் எனக்கு பிடிக்கேல.. பிடிக்காததை வீணா எதுக்கு? அது அங்கயே இருக்கட்டும்." அவனும் மெதுவாகத்தான் கூறினான். அதில் பெரிதாகவே சிரித்தவன்.

"இப்ப சொல்லு! எதுக்கு என்னை பார்க்கோணும் என்டாய்?" நேராக விசத்திற்கு அழைத்தான்.

"என்னத்தையடா முகிலா சொல்லுறது. அதை விடு! உண்மைய சொல்லு. உனக்கு என்னதான் பிரச்சனை. ஏன் வீட்டுக்காறங்கள விட்டுட்டு இப்பிடி ஒரு இடத்தில ஒழிஞ்சு இருக்கிறாய்? அப்புடி ஆர்ல தான் உனக்கு கோபம்." என்றான் இப்போது சீரியசாக.

"எனக்கு ஆர்ல கோபம்? ஆரிலயும் இல்லை." அதுவரை இயல்பாக பேசியவன், அவனது கேள்வியில் இறுகிப்போனான். பதில்களும் இறுக்கமாகவே வந்தது.

"என்ர கேள்வியும் அதான்டா... எந்த காரணமும் இல்ல. ஆனா அதே நேரத்தில ஆரோடயுமே கதைக்கிறது இல்லை. இன்டைக்கு நீ வீட்டை விட்டுட்டு வந்து எத்தனை மாதம் ஆச்சு. ஒரே ஒருக்கா போன் எடுத்து இஞ்ச தான் நான் இருக்கிறன் என்டா, உன்னை காணேல என்டு தவிச்சுப்போய் இருக்கிறதுகளுக்கு கொஞ்சமாத மனதுக்க நிம்மதியா இருக்கும்.

பாவமடா அந்த மனிசி. உன்னை பெத்ததை தவிர அது என்ன பாவம் செய்தீச்சு? உன்னை பற்றியே யோசிச்சு யோசிச்சு அடிக்கடி வருத்தம் வேற. இதல கலியாண வயசில ஒரு புள்ளை இருக்கு. உன்னால அதின்ர எதிர்காலம் என்ன ஆகமோ!" நீளமாய் நண்பனது தவறை சுட்டிக்காட்டியன் கதையை பொருட்டாகவே எடுக்கவில்லை அவன்.

"இப்ப எதுக்கு மூச்சை புடிச்சு கதைக்கிறாய்? நான் கேட்டது என்னத்துக்கு என்னை பார்க்கோணும் என்டு போன் எடுத்தனி என்டு தான். வேற ஆரோட கதையும் எனக்கு வேண்டாம்." ஏனோ அவர்கள் பேச்சை எடுத்ததுமே முகம் மாறிப்போக, வார்த்தையில் கடுமையை காட்டினான்.

"தெரியுமடா.. எனக்கு எல்லாமே தெரியும். அம்மா எல்லத்தையும் சொல்லீட்டா... சாதியை சாட்டி, உன்ர காதலை அப்பா ஏற்க மாட்டன் என்டதுக்கு தானே இப்பிடி வனவாசம் வந்திருக்கிறாய்.

அப்பா பிழை செய்தா, அப்பாவை மட்டும் தண்டி. மொத்தக் குடும்பத்தையும் ஏன்டா கஷ்டப்படுத்துறாய். பாவம் அந்த மனிசி. புலம்பி தள்ளுது. அதுக்காக என்டாலும் வாடா! உன்னால அங்க வரேலாது. வந்தா அப்பாவ பார்க்க வேண்டி இருக்கும் என்டு நினைச்சாய் என்டா, நீ இங்க தான் இருக்கிறாய் என்டாவது போன் எடுத்து சொல்லு. அதுகளாவது வந்து உன்னை பார்க்குங்கள்." என அவனது தாயின் கண்ணீரை நேரில் பார்த்த ஆதங்கத்தில் அவர்களுக்காக வாதாடினான்.

உண்மை தான். தேவாவுக்கு இவன் காதல் விசயம் மாத்திரமல்ல.. காதலியையும் தெரியும். ஆனால் அவன் தந்தை அவன் காதலை எதிர்த்ததாே, அதனால் கோபம் கொண்டு வீட்டை விட்டு வந்ததோ இது எதுவும் அவனுக்கு தெரியாது. அவனுக்கு தெரிந்தது எல்லாம். ஓர் நாள் அதிகாலையில் அவன் செல்லுக்கு அழைத்து, நான் இப்போது இந்த இடத்தில் நிற்கின்றேன். உடனேயே வா! கொழும்பு போகலாம் என்று கூறியது தான். அவனும் என்ன ஏது என்று விசாரிக்காமலே இவனுடன் வந்து விட்டான். வந்த பிற்பாடு தான் கூறினான்.

நான் இங்குதான் இருக்கிறேன் என்று யாருக்கும் கூறாதே! யாராவது விசாரித்தால் உனக்கு தெரியாது என்று கூறிவிடு. என் வீட்டுக்காரர் உற்பட என்று. அதிர்ச்சியாக இருந்தாலும், அவனது முக இறுக்கத்தில் அவனும் எதுவும் கேட்கவில்லை. பிற்பாடு கேட்போம் என்பது தான் அவன் எண்ணம்.

நண்பன் கேட்டுக் கொண்டதைப்போல் அவன் யாருக்குமே சொல்லவில்லை. இவனும் காரணம் என்னவென்று எத்தனையோ விதத்தில் கேட்டும் பார்த்து விட்டான். ஆனால் இவனோ கதையினை வெட்டிக்கொண்டு வேறு வழியல் செல்வானே தவிர, இது தான் காரணம் என்று கூறியது இல்லை.

இவனை பெற்றவர்களுக்கு தெரியும், எப்படியும் தேவாவுக்கு இவன் இருக்கும் இடம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்று. சிறு வயது நட்பாயிற்றே! எப்படி அவன் இவனிடம் மறைப்பான். அதனால் அவர்களும் இவனிடம் கெஞ்சியே விட்டார்கள்.

"தேவா அவன் போன் வேலையே செய்யிதில்லையடா! உனக்கு உண்மை தெரிஞ்சா சொல்லு. சாகுறதுக்கு முன்னால ஒருக்கா பார்த்துட்டு போறன்" என்று.
பாவம் தேவா தான் இவர்களுக்கு இடையில் இருதலை கொல்லியானான்.

"உப்புடி கதைக்காதேங்கோம்மா... எனக்குமே உண்மையா அவன் இருக்கிற இடம் தெரியாது. ஆனா எவ்வளவு ஏலுமோ அவ்வளவுக்கு உங்கட மகன் இருக்கிற இடத்தை கண்டு புடிச்சு சொல்லுறன். மனச தளர விடாம நம்பிக்கையோட இருங்காே." அவரை தேற்றி விட்டு தான் நேற்றைய தினம் இவனை அழைத்தான்.

"இஞ்ச பார் தேவா... உனக்கு என்னோட உறவு வைச்சிருக்கோணும் என்டு விருப்பம் இருந்தா, தயவு செய்து அவேன்ர எந்த கதையும் என்னட்ட கதைக்காத, இல்லை உன்னால அவயல் கஷ்டப்படுறத பார்க்க கஷ்டமா இருக்கு என்டா, உனக்கு இப்பிடி ஒரு நண்பன் இருந்தான், இப்ப செத்துட்டான் என்டத போல ஒதுங்கிடு. தேவையில்லாம அவேன்ர கதை எடுத்து என்னை பொல்லாதவன் ஆக்காத." கண்கள் சிவந்திருந்தாலும், உடலில் ஏதோ ஒரு வித தளர்வு ஏற்படுவதைப் போல் இருக்க. சட்டென்று இருக்கையில் அமர்ந்தவன், தனது இறுக்கத்தை தளர்த்துவதாக இல்லை.

"சரியான இறுமாப்பு புடிச்சவன்டா நீ. பெத்தவள் கலங்குறாள் என்டுறன், இப்பிடி கதைக்கிறாய். என்னமோ செய்து துளை. உன்னை பற்றி எதுவும் தெரியாது என்டு சொன்னா, அங்க கரப்பான் பூச்சி கூட நம்புதில்ல. உன்னால என்ர கழுத்து தானே அறுது. உனக்கு என்ன கஷ்டம்." என்று அந்த கதையினை அத்தோடு முடித்தவன்,

"அது சரி முகிலா... இப்ப எல்லாம் உன்ர ஆள பார்க்கிறது இல்லையே! எப்பிடி இருக்கிறா அவா?" என்றான் அவளையும் நலம் விசாரிப்பது போல்.

"ம்ம் இருக்கிறாள்." என்று அவன் ஏற்கனவே உண்டான கோபத்தில் கூற.

"சரியடாப்பா... என்ர பிழை தான். உங்கட வீட்டுகதை எடுத்தா உனக்கு கோபம் வரும் என்டு தெரிஞ்சும், அவயல பற்றி கேட்டிருக்க கூடாது தான், ஆனா என்ர நிலமையையும் கொஞ்சம் யோசிச்சு பாரன். பெத்த பிள்ளை உயிரோட இருக்கிறானோ இல்லையோன்டு தெரியாம, அதுகள் என்னை எல்லோ வந்து கெஞ்சுதுகள். அதான் என்னாலயும் அமைதியா இருக்க ஏலாம போச்சு. சரி இனி அவயலின்ர கதைய எடுக்கேல. கோபத்தை விட்டுட்டு, ஒரு கப் தேத்தண்ணி தாடா! இருநூறு முன்னூறு கிலோ மீற்றர் தாண்டி வந்திருக்கிறன் உன்னை பார்க்க. கோவமா இருக்கிறன் என்ட பெயர்ல மிச்சம் புடிக்காத." என்றான் அவன் கோத்தை குறைப்பது போல் நகைச்சுவையாய்.