யாரோ நீ! யாரோ நான்!
அத்தியாயம் - 1
- உளவியல் யுத்தத்தின் தொடக்கம்!
மும்பை நகரம் தன் பரபரப்பையும், சத்தத்தையும் அவசரமாக பிரசவித்துக் கொண்டிருந்த ஒரு காலைப் பொழுதில், அதே நகரத்தின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள, இன்டஸ்ட்ரியல் பில்டெக் கார்ப்பரேட் ஹெட்குவார்டர்ஸின் 37வது மாடியில், கண்ணாடிச் சுவர்களுடன் கூடிய கான்பரன்ஸ் ஹால், மிதமான ஏசியின் குளிருடன், அதீத அமைதியில் இருந்தது.
"இது ஒரு அரசாங்க ஒப்பந்தம், பாஸ். பாதுகாப்பு மையங்களில் 'facial tracking system' அமைப்பதற்கான மிக முக்கியமான திட்டம் இது. நாம் குறிப்பிடும் விலை பிற நிறுவனங்களை விட மிகவும் கடுமையானது. நாம் மீண்டும் ஒருமுறை மறுபரிசீலனை செய்யலாம் பாஸ் " என்றாள் மாயா.
அவனின் முகம் கவனமாக அதே சமயம், மிக அலட்சியமாக கண்ணாடிச் சுவர் வழியாக மும்பை நகரத்தைப் பார்த்தது.
"இந்த ஒப்பந்தம், மனித உரிமை குழுக்களால் எதிர்ப்பைச் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது." என்றார் சட்ட ஆலோசகர் பத்ரிநாத்.
அவன் சற்றே தன் தலையை நிமிர்த்தியதும், அவன் தோள்களில் பாந்தமாக பொருந்தி இருந்த, சிறு சுருக்கம் கூட இல்லாத நேர்த்தியான கோட்டின் உள்ளே மறைந்திருந்த அவனுடைய பரந்த மார்பு விரிந்து எழுந்தது. அவனுடைய புஜத்தில் துளிர்த நரம்புகள் அவன் உடலில் திடீரென சூடான ரத்தம் பாய்ந்த வேகத்தில் பச்சை நிறமாய் மாற ஆரம்பித்தது. ஆனால் அந்தக் கண்களில் மட்டும் எந்தவித சலனமும் இல்லை.
அவனது உடல் மொழி நிறைவான அமைதியை பிரதிபலித்தது. ஆனால் அது வெறும் அமைதி அல்ல, ஒவ்வொரு அசைவிலும் துப்பாக்கிச் சுழற்சி போல் ஓர் ஆபத்து பதுங்கி இருப்பதை அறிந்த இருவரும் சற்றே பதட்டத்துடன் அவனைப் பார்த்தனர்.
அவனது முடிவிற்காக காத்திருந்த ஜப்பான் டெக்னாலஜி குழுவும் அவனையே அவதானித்துக் கொண்டிருந்தது.
ஆறடியில் நின்று கொண்டிருந்த அந்த துப்பாக்கி, மெல்ல மாயாவின் புறம் திரும்பியது.
" உணர்ச்சிகளின் அடிப்படையில் விலையை நிர்ணயிக்க கூடாது. நாம் எவ்வளவு பெறுகிறோம் என்பதை, நம் திட்டத்தில் நாம் எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறோம் என்பதுதான் நம் விலையை நிர்ணயிக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் இந்த திட்டம் முழுவதும் நான்... நான்... நான் மட்டுமே! ம்... " என்றவன் இடப் புருவம் ஏறி இறங்கியதும், மாயாவின் தலை தானாகவே இருபுறமும் ஊசலாடியது.
அந்த துப்பாக்கி பத்ரி பக்கம் குறி வைத்ததும், அந்த சட்ட ஆலோசகனின் நெஞ்சில் நீர் வற்றியது. வரண்டிருந்த உதட்டினை நாவால் ஈரம் செய்து கொண்டு, அவனைப் பார்த்தான்.
"உரிமை... ம்... உரிமை! மனித உரிமை!. மனித உரிமை மீறல். நம்மால் உருவாக்கப்படும் கண்காணிப்பு அமைப்பால், ஒரு தாய் தனது குழந்தையை தனியே, பத்திரமாக வெளியே அனுப்பி கண்காணிக்க முடியும், பாதுகாக்க முடியும் என்றால், அந்த உரிமையை மீறலாம் தப்பில்லை மிஸ்டர் பத்ரி!" என்றான்.
" புத்திசாலித்தனமாக சமூக சிந்தனையை நீங்கள் கோடிட்டுக் காட்டினாலும், உங்கள் திட்டம் மிகத் துணிச்சலானது. கிட்டத்தட்ட ஆக்ரோஷமானது" என்றார் ஜப்பான் டெக்னாலஜி குழுவின் தலைவர்.
" பாதுகாப்பான வட்டத்தில் இருந்து பார்க்கும்போது முன்னேற்றம் எப்பொழுதும் ஆக்ரோஷமாகத்தான் தோன்றும்! மனிதர்கள் பேசுவதை விட என் முடிவுகள் தான் அதிகம் பேசும். ரைட்!" என்ற துப்பாக்கி தன் வார்த்தை தோட்டாக்களை ஜப்பான் டெக்னாலஜி குழுவின் தலைவர் பக்கம் இறக்கியதும்,
வர்த்தகத்தில் கைதேர்ந்த அந்த மனிதரும், தன் தோல்வியை சிரிப்பில் மறைத்துக் கொண்டு, "சட்ட ரீதியில், தனியுரிமை பாதுகாப்பு சட்டம், மக்களின் தகவல்களை நாம் வெளி கொணர்வதாக குற்றம் சாட்டினால் என்ன செய்வது?" என்றார் அவனை மடக்கிவிடும் நோக்கத்தில்.
அந்த இரும்பு ராட்சச உருவம், நிதானமாகத் திரும்பியது. அவன் ஒரு அழகிய வன்மத்தின் பிரவாகம். அது வெறும் ஆளுமையல்ல. அது ஒருவகை எச்சரிக்கை என்று அறிந்த மாயாவும், பத்ரியும் தங்களை அறியாமல் ஓரெட்டு தங்கள் கால்களைப் பின்னே வைத்தனர்.
“மறைவு, அபாயத்தை உருவாக்கும். என் தொழில்கள் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. கண்கள் விழித்துக் கொண்டே இருக்கும்போது தவறு நடக்குமா? நம்மிடம் உள்ள data... அதாவது தகவல்கள், இந்த நாட்டின் முதல் சிறைச்சாலையாய் விளங்கும். அவை அனைத்தும் ஆயுள் கைதிகளாய் அங்கே அடைபட்டுக் கிடக்கும். அதன் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரே சக்தி... ” என்று கூறியவன் அனைவரையும் ஓர் பார்வை பார்த்தான்.
அந்த சக்தி அவனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் ஒரே நேரத்தில் எழுந்தது.
"சக்தி என்பது வெறும் ஆதிக்கம் மட்டும் அல்ல. மக்கள் உங்களை நம்பி, உங்கள் தொழிலில் பங்கு கொடுக்க, உங்கள் மீது அதீத நம்பிக்கை வைக்க வேண்டும். உங்கள் கண்காணிப்பு அடுத்த இடம் தான்.” என்ற ஜப்பான் குழுத் தலைவர் அவனின் ஆளுமையை அசைத்துப் பார்த்தார்.
அவரின் வார்த்தைகள் சில நொடி மௌனத்தை ஏற்படுத்தியது.
இப்பொழுது துப்பாக்கி தன் குறியை அந்த ஜப்பான் குழு தலைவரின் நெற்றியில் வைத்தது போல் திரும்பி, “நம்பிக்கை... சில சமயங்களில் கண்காணிப்பை விட ஆபத்தானது. என் வர்த்தகம் உண்மையைத் தரும், உணர்வுகளை அல்ல" என்றது.
தன்னை வார்த்தையால் வெல்லும் அவனை மடக்கிவிடும் நோக்கத்தில் ஜப்பான் குழு தலைவர்,
"ஆனால் உங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் உங்களைக் கண்டால் பயந்து நடுங்குகிறார்களே?" என்றார் கண்களால் மாயவையையும் பத்திரியையும் சுட்டிக்காட்டி.
"பயம் என்பது கட்டுப்பாட்டின் ஓர் வடிவம். கட்டுப்பாடு இல்லை என்றால் எந்த திட்டமும் தரைமட்டமாகிவிடும். என் திட்டங்கள் ஒருபோதும் தோற்பதில்லை"
என்றவன் தன் கையில் இருந்த ரிமோட்டில் உள்ள பட்டனை அழுத்தியதும் பெரிய திரையில், கண்காணிப்பு வரைபடங்கள், நகர ஸ்கேன், வெப்ப கண்காணிப்பு தளவமைப்புகள் போன்றவை துல்லியமாக திரையிடப்பட்டது.
“இந்த தொழில் ஒப்பந்தத்தை நானே உருவாக்குகிறேன். சட்டங்களை உருவாக்கும் நிலையில் நான் இல்லை. ஆனால், நான் தான் அந்தச் சட்டம்" என்றான் கம்பீரத்துடன்.
அவன் முகத்தில் ஒரே நேரத்தில் அமைதி, ஆணை, ஆபத்து கலந்து தாண்டவம் ஆடியது.
தன்னிடம் உள்ள கேள்விகள் எல்லாம் தீர்ந்து போன நொடியில் அந்த ஜப்பான் குழுத் தலைவர், நவீன தொழில்நுட்பத்தையும், தகவல்களையும் தன் விரல் நுனியில் வைத்து, ஆதிக்கம் செலுத்தும் அவனை எதிர்க்கவோ மீறவோ முடியாமல், "இன்டஸ்ட்ரியல் பில்டெக்" உடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிந்ததும், கைகுலுக்குவதற்காக அவனிடம் தன் கையை நீட்டினார். பல கோடி மதிப்பிலான திட்டம் வெற்றி பெற்றதன் மகிழ்ச்சி அவன் கண்களில் தெரிகிறதா? என்று தேடினார்.
அவனின் இடுங்கிய கண்களும், சுருங்கிய புருவமும், அழுந்திய நெற்றியும் அங்கே "நெருங்காதே" எட்டி நில்!" என்ற எச்சரிக்கையை பறைசாற்ற, அதிர்வில் அவனைப் பார்த்தபடி உறைந்து நின்றார்.
அவன்...
ரவணவர்மன், கோப உணர்வும், ஆழ்ந்த மௌனமும் கலந்த உண்மையான ஒரு வன்மத்தின் சாம்ராஜ்யம். சுருக்கமாக அவன் ஒரு கார்ப்பரேட் சாம்ராட்.
"இன்டஸ்ட்ரியல் பில்டெக்" என்ற பெரும் தொழில்நுட்ப மற்றும் கட்டுமான வர்த்தக நிறுவனத்தின் தலைவன் (CEO). இந்த நிறுவனம் நகரத்தின் மேம்பாட்டில் பெரும் பங்கு வகித்துக் கொண்டிருக்கிறது.
பல உயர் அடுக்குமாடிகள், சோபிஸ்டிகேடட் காம்ப்ளெக்ஸ்கள் மற்றும் டிஜிட்டல் நெட்வொர்க் டவர்கள் இவனது உழைப்பில் உருவாகியவை . ஆனால் அந்த கட்டடங்களுக்குப் பின்னால் இருப்பது வெறும் சிமெண்டும் இரும்புமல்ல. அவனது மனதின் உறுதியான கட்டுமானமும்.
தொழில்நுட்ப சார்ந்த கட்டுமான வர்த்தகமான, டிஜிட்டல் கண்காணிப்பு கட்டமைப்புகள், உயர் பாதுகாப்பு அலுவலகங்கள், சர்வதேச ஒப்பந்தங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் முதலீடு என கார்ப்பரேட் உலகத்தில் ஜாம்பவானாக திகழ்ந்து கொண்டிருப்பவன். உணர்வுகளை அறவே வெறுப்பவன். அவனின் சக்தி வன்மம் நிறைந்தது. அவன் ஓர் நிஜ வன்மத்தின் சாம்ராஜ்யம்.
கலந்தாய்வு முடிந்ததும், அனைவரும் வெளியில் புறப்பட்டனர். ரவணன் மட்டும் திரும்பி, அந்த பிரம்மாண்டமான திரையின் முன் நின்று கொண்டிருந்தான். ஏதோ ஓர் புயல் தன்னை நோக்கி வந்து கொண்டிருப்பதை அவனது உள்ளம் பறைசாற்றி கொண்டிருந்தது.
" கங்கிராஜுலேஷன்ஸ் பாஸ்! வழக்கம் போல வெற்றி உங்களுக்கே!' என்று மென்மையாக சிரித்தாள் மாயா.
“இது வெற்றி இல்லை, மாயா. இது ஓர் ஆரம்பம். எல்லா நகரங்களின் கண்களில் நம்முடைய கண்காணிப்பு இருக்க வேண்டும். பல மனித உரிமை பாதுகாப்பு சட்டக் குழுக்களும், மனநலக் குழுக்களும் இதை எதிர்க்கலாம். ஆனா அந்த எதிர்ப்புகள் நமக்கு விளம்பரமாய் அமையும்!" என்றான்.
ஒவ்வொரு நிமிடமும் விஸ்வரூபம் எடுக்கும் ரவணனின் அவதாரத்தில் மாயா மலைத்துப் போனாள்.
" உங்களை அசைத்துப் பார்க்க, இல்லை... இல்லை... அருகில் வரக்கூட உங்கள் எதிரிகள் அஞ்சுவார்கள் மிஸ்டர் வர்மன்!" இன்று சிரித்துக் கொண்டே பத்ரி கூறிவிட்டு விடை பெற்றார்.
அலுவலக அறைக்கதவு லேசாக தட்டப்பட்டதும், உத்தரவு கேட்டுக் கொண்டு உள்ளே நுழைந்த மேலாளர் மிக முக்கியமான கோப்பு ஒன்றை மாயாவிடம் நீட்டி, "இது இப்போதுதான் வந்தது. ஒரு பொது நல வழக்கு குழுவிலிருந்து வந்த ஒரு சட்ட அறிவிப்பு. மருத்துவ உளவியலாளர் ஒருவர் தாக்கல் செய்துள்ளார். அவர் பெயர் டாக்டர் தாரா மேனன்", மிகவும் அவசரம் என்ற ரீதியில் கண்ணைக் காட்டிக்கொண்டே கொடுத்துவிட்டுச் சென்றார்.
மாயா அந்த கோப்பினை வேகமாக திறக்க முற்பட்டதும், " திறக்காதே!" என்ற ரவணனின் சத்தத்தில், மாயா கையில் இருந்த கோப்பு நழுவி கீழே விழுந்தது.
" சாரி பாஸ்... " என்று கூறியவள் கீழே விழுந்த கோப்பை மேஜையின் மீது வைத்து விட்டு, அறையினை விட்டு வெளியேறிச் சென்றாள்.
அழுத்தமான அந்தக் காலடிகள் அந்த மேஜை நோக்கி நகர்ந்தது.
அவன் அந்த கோப்பினைத் திறக்காது, அதன் தலைப்பினை அவன் கண்கள் வாசித்தது மௌனமாய்.
'மனநலம் vs பெருநிறுவன கட்டுப்பாடு - ஒரு சமூகப் புகார்' என்ற தலைப்பினை வாசித்ததும், அவனது இறுக்கமான உதடுகள் மெல்ல அசைந்து சிரித்தது போன்ற மாயையைத் தோற்றுவித்தது.
'அவள் தான். அவளே தான். வெரி இன்ட்ரஸ்டிங்! உன்னை சந்திக்கும் நாள் வெகு அருகில் போல! யார் நீ? ' என்று தன் மனதோடு கேள்வி எழுப்பிக் கொண்டான் ரவணன்.
மும்பையின் மையப்பகுதியில் அமைந்துள்ள ‘MindScape Wellness Centre’ என்ற அழகிய மற்றும் சிறிய அளவிலான உளவியல் கிளினிக்கில், மருத்துவருக்கான இருக்கையில் அவள் அமர்ந்திருந்தாள்.
“உங்கள் பயம் உண்மை அல்ல. அது உங்கள் நினைவின் ஒரு வடிவம். அதில் இருந்து உங்களால் நிச்சயம் தப்பிக்க முடியும்" என்று தன் எதிரே அமர்ந்திருந்த ஒருவருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தாள்.
அவள் பைத்தியங்கள் போல நினைக்கப்படக்கூடியவர்களைக் கூட மிக மென்மையாகப் புரிந்து கொள்ளும் ஒருவித மேன்மை கொண்டவள்.
அவள் ஒரு மருத்துவர் மட்டும் அல்ல. எதிரில் அமர்ந்திருப்பவர்கள் கூறுவதைக் காதால் மட்டும் கேட்காமல் இதயத்தால் உணரும் மென்மை உள்ளம் கொண்டவள்.
அவள் டாக்டர் தாரா மேனன்.
சீரான மெலிதான உடற்கட்டுடன், மென்மையான தோற்றமும், நுண்ணிய அமைதியான மற்றும் தீர்க்கமான பார்வையால் ஆதிக்கம் செலுத்தும் ஒரு மனநல ஆலோசகர்.
அவளது கண்கள் ஒரு ஆய்வாளியின் கூர்மையும், தாய்மையின் கருணையும் கொண்டவை. இளமையின் பிரவாகத்தையும், வயோதிகத்தின் யதார்த்தத்தையும் ஒரே சமயத்தில் உணரும் தன்மை அவளுக்கே உரியது.
தனக்குள் தங்கியிருக்கும் அமைதியால் எதிரிகளை வெல்லக்கூடியவள். மௌனத்தால் தாக்குவதே அவளது சக்தியாக உருவகப்படுத்தப்பட்டது.
அவள் பேசும்போது, அவளது வார்த்தைகள், சத்தமில்லாமல் கத்தியால் வெட்டுவதைப் போல் உண்மைகளைச் சொல்லும்.
அவளது விருப்பங்கள் எளிமையானவை. பகை இல்லை, பொய்கள் இல்லை, பயமும் இல்லை.அவளது சக்தி, அவளின் உணர்வுகள். அவள் ஓர் உணர்வுகளின் சாம்ராஜ்யம்.
" இப்பொழுது நீ என்ன பேசப் போகின்றாய் என்று யோசிக்க வேண்டாம் ராஜீவ். நீ பேசவேண்டியதில்லை. நீ இப்பொழுது இங்கே இருக்கிறாயா? இல்லையா? என்பதுதான் முதலில் எனக்குத் தெரிய வேண்டும் " என்றாள் தாரா.
ராஜீவ் தாராவின் கண்களை சந்திக்க முடியாமல் தலையைக் குனிந்து தரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
'அவமானப்பட்ட மனதுக்கு எந்த மொழியில் பேச வேண்டும் என்று தெரியாது. நம்மை நம்மிடம் இருந்து ஒளித்துக் கொள்வது போல் தான் நீ நடந்து கொள்கிறாய். நீ ஒளிந்து கொண்டால் உண்மையாக ஒரு நாள் உன்னை உன்னால் கண்டுபிடித்துக் கொள்ள முடியுமா? "
ராஜீவ் தாராவை அதிர்ந்து பார்த்ததும், தாரா அவனைப் பார்க்காதது போல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு தன் பேச்சை தொடர்ந்தாள்.
" சொர்க்கமாக, சந்தோஷமாக இருக்கும் ஒரு மனநிலையிலிருந்து கீழே விழுந்த உடனே, ஒரு மனிதன் பேச மாட்டான். முதலில் அவன் அழுவான். ஆனால் நீ அழவில்லை. நீ சத்தம் இல்லாமல் உன் மனதோடு கத்திக் கொண்டிருக்கிறாய்.இன்று உன்னை கண்டுபிடிக்க என்னோடு வருவாயா?" என்று தாரா கேட்டதும் ராஜீவின் விழிகள் நனைந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
"நீ அப்படியே இருக்கலாம் ராஜீவ். நீ நன்றாக அழலாம். நீயும், உன்னைக் கேட்கும் நானும் இங்கே இருப்பது போதுமானது. உன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து, நிச்சயம் நீ பேசுவாய்" என்றாள் உறுதியான குரலில்.
அந்தக் குரலுக்கு கட்டுப்பட்டு ராஜீவின் மௌனம் மெல்ல அவனுள் உடைய ஆரம்பித்தது.
அவனது கைகள் மேஜையில் சிதறிக் கிடந்த கண்ணாடித் துகள்களை நகர்த்திக் கொண்டிருந்தது.
" சிதறிய கண்ணாடித் துண்டுகளில் உன் முழு உருவத்தை காண இயலாது. ஆனால் ஒவ்வொரு துண்டுகளிலும் பிரதிபலிப்பைக் காணலாம். உடைந்த உன் மனதை ஒட்ட வைக்க முடியாமல் போனாலும், உடைந்த பாகங்களின் பிரதிபலிப்பை மீண்டும் பெறலாம்" என்றாள் புன்சிரிப்புடன்.
ராஜீவின் தலை தானாக அசைந்து இசைந்தது.
ராஜீவ் வெளியேறியதும், மருத்துவமனையின் ரிசப்ஷினிஸ்ட் உள்ளே வந்தாள்.
“மேம், அந்த இன்டஸ்ட்ரியல் பில்டெக் நிறுவனம் பற்றிய உங்கள் மனுவை அவர்கள் அக்னாலேஜ் செய்து ஒப்புக் கொண்டுள்ளார்கள். உங்கள் மீதான கண்காணிப்பு இந்த நொடி முதல் ஆரம்பித்திருக்கும். நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மேம்" என்றாள்.
தாரா மிகவும் நிதானமாக, “நானும் அவரைப் பார்க்க விரும்புகிறேன். ஒரே தடவை. மனிதத் தன்மையில்லாமல் ஒரு வன்மம் எப்படி வெல்லுகிறது என்பதை நான் நேரில் பார்க்கவேண்டும்" என்றாள்.
வன்மம் வெல்லுமா?
உணர்வுகள் வெல்லுமா?
தொடரும்...
அத்தியாயம் - 1
- உளவியல் யுத்தத்தின் தொடக்கம்!
மும்பை நகரம் தன் பரபரப்பையும், சத்தத்தையும் அவசரமாக பிரசவித்துக் கொண்டிருந்த ஒரு காலைப் பொழுதில், அதே நகரத்தின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள, இன்டஸ்ட்ரியல் பில்டெக் கார்ப்பரேட் ஹெட்குவார்டர்ஸின் 37வது மாடியில், கண்ணாடிச் சுவர்களுடன் கூடிய கான்பரன்ஸ் ஹால், மிதமான ஏசியின் குளிருடன், அதீத அமைதியில் இருந்தது.
"இது ஒரு அரசாங்க ஒப்பந்தம், பாஸ். பாதுகாப்பு மையங்களில் 'facial tracking system' அமைப்பதற்கான மிக முக்கியமான திட்டம் இது. நாம் குறிப்பிடும் விலை பிற நிறுவனங்களை விட மிகவும் கடுமையானது. நாம் மீண்டும் ஒருமுறை மறுபரிசீலனை செய்யலாம் பாஸ் " என்றாள் மாயா.
அவனின் முகம் கவனமாக அதே சமயம், மிக அலட்சியமாக கண்ணாடிச் சுவர் வழியாக மும்பை நகரத்தைப் பார்த்தது.
"இந்த ஒப்பந்தம், மனித உரிமை குழுக்களால் எதிர்ப்பைச் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது." என்றார் சட்ட ஆலோசகர் பத்ரிநாத்.
அவன் சற்றே தன் தலையை நிமிர்த்தியதும், அவன் தோள்களில் பாந்தமாக பொருந்தி இருந்த, சிறு சுருக்கம் கூட இல்லாத நேர்த்தியான கோட்டின் உள்ளே மறைந்திருந்த அவனுடைய பரந்த மார்பு விரிந்து எழுந்தது. அவனுடைய புஜத்தில் துளிர்த நரம்புகள் அவன் உடலில் திடீரென சூடான ரத்தம் பாய்ந்த வேகத்தில் பச்சை நிறமாய் மாற ஆரம்பித்தது. ஆனால் அந்தக் கண்களில் மட்டும் எந்தவித சலனமும் இல்லை.
அவனது உடல் மொழி நிறைவான அமைதியை பிரதிபலித்தது. ஆனால் அது வெறும் அமைதி அல்ல, ஒவ்வொரு அசைவிலும் துப்பாக்கிச் சுழற்சி போல் ஓர் ஆபத்து பதுங்கி இருப்பதை அறிந்த இருவரும் சற்றே பதட்டத்துடன் அவனைப் பார்த்தனர்.
அவனது முடிவிற்காக காத்திருந்த ஜப்பான் டெக்னாலஜி குழுவும் அவனையே அவதானித்துக் கொண்டிருந்தது.
ஆறடியில் நின்று கொண்டிருந்த அந்த துப்பாக்கி, மெல்ல மாயாவின் புறம் திரும்பியது.
" உணர்ச்சிகளின் அடிப்படையில் விலையை நிர்ணயிக்க கூடாது. நாம் எவ்வளவு பெறுகிறோம் என்பதை, நம் திட்டத்தில் நாம் எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறோம் என்பதுதான் நம் விலையை நிர்ணயிக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் இந்த திட்டம் முழுவதும் நான்... நான்... நான் மட்டுமே! ம்... " என்றவன் இடப் புருவம் ஏறி இறங்கியதும், மாயாவின் தலை தானாகவே இருபுறமும் ஊசலாடியது.
அந்த துப்பாக்கி பத்ரி பக்கம் குறி வைத்ததும், அந்த சட்ட ஆலோசகனின் நெஞ்சில் நீர் வற்றியது. வரண்டிருந்த உதட்டினை நாவால் ஈரம் செய்து கொண்டு, அவனைப் பார்த்தான்.
"உரிமை... ம்... உரிமை! மனித உரிமை!. மனித உரிமை மீறல். நம்மால் உருவாக்கப்படும் கண்காணிப்பு அமைப்பால், ஒரு தாய் தனது குழந்தையை தனியே, பத்திரமாக வெளியே அனுப்பி கண்காணிக்க முடியும், பாதுகாக்க முடியும் என்றால், அந்த உரிமையை மீறலாம் தப்பில்லை மிஸ்டர் பத்ரி!" என்றான்.
" புத்திசாலித்தனமாக சமூக சிந்தனையை நீங்கள் கோடிட்டுக் காட்டினாலும், உங்கள் திட்டம் மிகத் துணிச்சலானது. கிட்டத்தட்ட ஆக்ரோஷமானது" என்றார் ஜப்பான் டெக்னாலஜி குழுவின் தலைவர்.
" பாதுகாப்பான வட்டத்தில் இருந்து பார்க்கும்போது முன்னேற்றம் எப்பொழுதும் ஆக்ரோஷமாகத்தான் தோன்றும்! மனிதர்கள் பேசுவதை விட என் முடிவுகள் தான் அதிகம் பேசும். ரைட்!" என்ற துப்பாக்கி தன் வார்த்தை தோட்டாக்களை ஜப்பான் டெக்னாலஜி குழுவின் தலைவர் பக்கம் இறக்கியதும்,
வர்த்தகத்தில் கைதேர்ந்த அந்த மனிதரும், தன் தோல்வியை சிரிப்பில் மறைத்துக் கொண்டு, "சட்ட ரீதியில், தனியுரிமை பாதுகாப்பு சட்டம், மக்களின் தகவல்களை நாம் வெளி கொணர்வதாக குற்றம் சாட்டினால் என்ன செய்வது?" என்றார் அவனை மடக்கிவிடும் நோக்கத்தில்.
அந்த இரும்பு ராட்சச உருவம், நிதானமாகத் திரும்பியது. அவன் ஒரு அழகிய வன்மத்தின் பிரவாகம். அது வெறும் ஆளுமையல்ல. அது ஒருவகை எச்சரிக்கை என்று அறிந்த மாயாவும், பத்ரியும் தங்களை அறியாமல் ஓரெட்டு தங்கள் கால்களைப் பின்னே வைத்தனர்.
“மறைவு, அபாயத்தை உருவாக்கும். என் தொழில்கள் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. கண்கள் விழித்துக் கொண்டே இருக்கும்போது தவறு நடக்குமா? நம்மிடம் உள்ள data... அதாவது தகவல்கள், இந்த நாட்டின் முதல் சிறைச்சாலையாய் விளங்கும். அவை அனைத்தும் ஆயுள் கைதிகளாய் அங்கே அடைபட்டுக் கிடக்கும். அதன் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரே சக்தி... ” என்று கூறியவன் அனைவரையும் ஓர் பார்வை பார்த்தான்.
அந்த சக்தி அவனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் ஒரே நேரத்தில் எழுந்தது.
"சக்தி என்பது வெறும் ஆதிக்கம் மட்டும் அல்ல. மக்கள் உங்களை நம்பி, உங்கள் தொழிலில் பங்கு கொடுக்க, உங்கள் மீது அதீத நம்பிக்கை வைக்க வேண்டும். உங்கள் கண்காணிப்பு அடுத்த இடம் தான்.” என்ற ஜப்பான் குழுத் தலைவர் அவனின் ஆளுமையை அசைத்துப் பார்த்தார்.
அவரின் வார்த்தைகள் சில நொடி மௌனத்தை ஏற்படுத்தியது.
இப்பொழுது துப்பாக்கி தன் குறியை அந்த ஜப்பான் குழு தலைவரின் நெற்றியில் வைத்தது போல் திரும்பி, “நம்பிக்கை... சில சமயங்களில் கண்காணிப்பை விட ஆபத்தானது. என் வர்த்தகம் உண்மையைத் தரும், உணர்வுகளை அல்ல" என்றது.
தன்னை வார்த்தையால் வெல்லும் அவனை மடக்கிவிடும் நோக்கத்தில் ஜப்பான் குழு தலைவர்,
"ஆனால் உங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் உங்களைக் கண்டால் பயந்து நடுங்குகிறார்களே?" என்றார் கண்களால் மாயவையையும் பத்திரியையும் சுட்டிக்காட்டி.
"பயம் என்பது கட்டுப்பாட்டின் ஓர் வடிவம். கட்டுப்பாடு இல்லை என்றால் எந்த திட்டமும் தரைமட்டமாகிவிடும். என் திட்டங்கள் ஒருபோதும் தோற்பதில்லை"
என்றவன் தன் கையில் இருந்த ரிமோட்டில் உள்ள பட்டனை அழுத்தியதும் பெரிய திரையில், கண்காணிப்பு வரைபடங்கள், நகர ஸ்கேன், வெப்ப கண்காணிப்பு தளவமைப்புகள் போன்றவை துல்லியமாக திரையிடப்பட்டது.
“இந்த தொழில் ஒப்பந்தத்தை நானே உருவாக்குகிறேன். சட்டங்களை உருவாக்கும் நிலையில் நான் இல்லை. ஆனால், நான் தான் அந்தச் சட்டம்" என்றான் கம்பீரத்துடன்.
அவன் முகத்தில் ஒரே நேரத்தில் அமைதி, ஆணை, ஆபத்து கலந்து தாண்டவம் ஆடியது.
தன்னிடம் உள்ள கேள்விகள் எல்லாம் தீர்ந்து போன நொடியில் அந்த ஜப்பான் குழுத் தலைவர், நவீன தொழில்நுட்பத்தையும், தகவல்களையும் தன் விரல் நுனியில் வைத்து, ஆதிக்கம் செலுத்தும் அவனை எதிர்க்கவோ மீறவோ முடியாமல், "இன்டஸ்ட்ரியல் பில்டெக்" உடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிந்ததும், கைகுலுக்குவதற்காக அவனிடம் தன் கையை நீட்டினார். பல கோடி மதிப்பிலான திட்டம் வெற்றி பெற்றதன் மகிழ்ச்சி அவன் கண்களில் தெரிகிறதா? என்று தேடினார்.
அவனின் இடுங்கிய கண்களும், சுருங்கிய புருவமும், அழுந்திய நெற்றியும் அங்கே "நெருங்காதே" எட்டி நில்!" என்ற எச்சரிக்கையை பறைசாற்ற, அதிர்வில் அவனைப் பார்த்தபடி உறைந்து நின்றார்.
அவன்...
ரவணவர்மன், கோப உணர்வும், ஆழ்ந்த மௌனமும் கலந்த உண்மையான ஒரு வன்மத்தின் சாம்ராஜ்யம். சுருக்கமாக அவன் ஒரு கார்ப்பரேட் சாம்ராட்.
"இன்டஸ்ட்ரியல் பில்டெக்" என்ற பெரும் தொழில்நுட்ப மற்றும் கட்டுமான வர்த்தக நிறுவனத்தின் தலைவன் (CEO). இந்த நிறுவனம் நகரத்தின் மேம்பாட்டில் பெரும் பங்கு வகித்துக் கொண்டிருக்கிறது.
பல உயர் அடுக்குமாடிகள், சோபிஸ்டிகேடட் காம்ப்ளெக்ஸ்கள் மற்றும் டிஜிட்டல் நெட்வொர்க் டவர்கள் இவனது உழைப்பில் உருவாகியவை . ஆனால் அந்த கட்டடங்களுக்குப் பின்னால் இருப்பது வெறும் சிமெண்டும் இரும்புமல்ல. அவனது மனதின் உறுதியான கட்டுமானமும்.
தொழில்நுட்ப சார்ந்த கட்டுமான வர்த்தகமான, டிஜிட்டல் கண்காணிப்பு கட்டமைப்புகள், உயர் பாதுகாப்பு அலுவலகங்கள், சர்வதேச ஒப்பந்தங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் முதலீடு என கார்ப்பரேட் உலகத்தில் ஜாம்பவானாக திகழ்ந்து கொண்டிருப்பவன். உணர்வுகளை அறவே வெறுப்பவன். அவனின் சக்தி வன்மம் நிறைந்தது. அவன் ஓர் நிஜ வன்மத்தின் சாம்ராஜ்யம்.
கலந்தாய்வு முடிந்ததும், அனைவரும் வெளியில் புறப்பட்டனர். ரவணன் மட்டும் திரும்பி, அந்த பிரம்மாண்டமான திரையின் முன் நின்று கொண்டிருந்தான். ஏதோ ஓர் புயல் தன்னை நோக்கி வந்து கொண்டிருப்பதை அவனது உள்ளம் பறைசாற்றி கொண்டிருந்தது.
" கங்கிராஜுலேஷன்ஸ் பாஸ்! வழக்கம் போல வெற்றி உங்களுக்கே!' என்று மென்மையாக சிரித்தாள் மாயா.
“இது வெற்றி இல்லை, மாயா. இது ஓர் ஆரம்பம். எல்லா நகரங்களின் கண்களில் நம்முடைய கண்காணிப்பு இருக்க வேண்டும். பல மனித உரிமை பாதுகாப்பு சட்டக் குழுக்களும், மனநலக் குழுக்களும் இதை எதிர்க்கலாம். ஆனா அந்த எதிர்ப்புகள் நமக்கு விளம்பரமாய் அமையும்!" என்றான்.
ஒவ்வொரு நிமிடமும் விஸ்வரூபம் எடுக்கும் ரவணனின் அவதாரத்தில் மாயா மலைத்துப் போனாள்.
" உங்களை அசைத்துப் பார்க்க, இல்லை... இல்லை... அருகில் வரக்கூட உங்கள் எதிரிகள் அஞ்சுவார்கள் மிஸ்டர் வர்மன்!" இன்று சிரித்துக் கொண்டே பத்ரி கூறிவிட்டு விடை பெற்றார்.
அலுவலக அறைக்கதவு லேசாக தட்டப்பட்டதும், உத்தரவு கேட்டுக் கொண்டு உள்ளே நுழைந்த மேலாளர் மிக முக்கியமான கோப்பு ஒன்றை மாயாவிடம் நீட்டி, "இது இப்போதுதான் வந்தது. ஒரு பொது நல வழக்கு குழுவிலிருந்து வந்த ஒரு சட்ட அறிவிப்பு. மருத்துவ உளவியலாளர் ஒருவர் தாக்கல் செய்துள்ளார். அவர் பெயர் டாக்டர் தாரா மேனன்", மிகவும் அவசரம் என்ற ரீதியில் கண்ணைக் காட்டிக்கொண்டே கொடுத்துவிட்டுச் சென்றார்.
மாயா அந்த கோப்பினை வேகமாக திறக்க முற்பட்டதும், " திறக்காதே!" என்ற ரவணனின் சத்தத்தில், மாயா கையில் இருந்த கோப்பு நழுவி கீழே விழுந்தது.
" சாரி பாஸ்... " என்று கூறியவள் கீழே விழுந்த கோப்பை மேஜையின் மீது வைத்து விட்டு, அறையினை விட்டு வெளியேறிச் சென்றாள்.
அழுத்தமான அந்தக் காலடிகள் அந்த மேஜை நோக்கி நகர்ந்தது.
அவன் அந்த கோப்பினைத் திறக்காது, அதன் தலைப்பினை அவன் கண்கள் வாசித்தது மௌனமாய்.
'மனநலம் vs பெருநிறுவன கட்டுப்பாடு - ஒரு சமூகப் புகார்' என்ற தலைப்பினை வாசித்ததும், அவனது இறுக்கமான உதடுகள் மெல்ல அசைந்து சிரித்தது போன்ற மாயையைத் தோற்றுவித்தது.
'அவள் தான். அவளே தான். வெரி இன்ட்ரஸ்டிங்! உன்னை சந்திக்கும் நாள் வெகு அருகில் போல! யார் நீ? ' என்று தன் மனதோடு கேள்வி எழுப்பிக் கொண்டான் ரவணன்.
மும்பையின் மையப்பகுதியில் அமைந்துள்ள ‘MindScape Wellness Centre’ என்ற அழகிய மற்றும் சிறிய அளவிலான உளவியல் கிளினிக்கில், மருத்துவருக்கான இருக்கையில் அவள் அமர்ந்திருந்தாள்.
“உங்கள் பயம் உண்மை அல்ல. அது உங்கள் நினைவின் ஒரு வடிவம். அதில் இருந்து உங்களால் நிச்சயம் தப்பிக்க முடியும்" என்று தன் எதிரே அமர்ந்திருந்த ஒருவருக்கு மருத்துவ ஆலோசனை வழங்கிக் கொண்டிருந்தாள்.
அவள் பைத்தியங்கள் போல நினைக்கப்படக்கூடியவர்களைக் கூட மிக மென்மையாகப் புரிந்து கொள்ளும் ஒருவித மேன்மை கொண்டவள்.
அவள் ஒரு மருத்துவர் மட்டும் அல்ல. எதிரில் அமர்ந்திருப்பவர்கள் கூறுவதைக் காதால் மட்டும் கேட்காமல் இதயத்தால் உணரும் மென்மை உள்ளம் கொண்டவள்.
அவள் டாக்டர் தாரா மேனன்.
சீரான மெலிதான உடற்கட்டுடன், மென்மையான தோற்றமும், நுண்ணிய அமைதியான மற்றும் தீர்க்கமான பார்வையால் ஆதிக்கம் செலுத்தும் ஒரு மனநல ஆலோசகர்.
அவளது கண்கள் ஒரு ஆய்வாளியின் கூர்மையும், தாய்மையின் கருணையும் கொண்டவை. இளமையின் பிரவாகத்தையும், வயோதிகத்தின் யதார்த்தத்தையும் ஒரே சமயத்தில் உணரும் தன்மை அவளுக்கே உரியது.
தனக்குள் தங்கியிருக்கும் அமைதியால் எதிரிகளை வெல்லக்கூடியவள். மௌனத்தால் தாக்குவதே அவளது சக்தியாக உருவகப்படுத்தப்பட்டது.
அவள் பேசும்போது, அவளது வார்த்தைகள், சத்தமில்லாமல் கத்தியால் வெட்டுவதைப் போல் உண்மைகளைச் சொல்லும்.
அவளது விருப்பங்கள் எளிமையானவை. பகை இல்லை, பொய்கள் இல்லை, பயமும் இல்லை.அவளது சக்தி, அவளின் உணர்வுகள். அவள் ஓர் உணர்வுகளின் சாம்ராஜ்யம்.
" இப்பொழுது நீ என்ன பேசப் போகின்றாய் என்று யோசிக்க வேண்டாம் ராஜீவ். நீ பேசவேண்டியதில்லை. நீ இப்பொழுது இங்கே இருக்கிறாயா? இல்லையா? என்பதுதான் முதலில் எனக்குத் தெரிய வேண்டும் " என்றாள் தாரா.
ராஜீவ் தாராவின் கண்களை சந்திக்க முடியாமல் தலையைக் குனிந்து தரையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
'அவமானப்பட்ட மனதுக்கு எந்த மொழியில் பேச வேண்டும் என்று தெரியாது. நம்மை நம்மிடம் இருந்து ஒளித்துக் கொள்வது போல் தான் நீ நடந்து கொள்கிறாய். நீ ஒளிந்து கொண்டால் உண்மையாக ஒரு நாள் உன்னை உன்னால் கண்டுபிடித்துக் கொள்ள முடியுமா? "
ராஜீவ் தாராவை அதிர்ந்து பார்த்ததும், தாரா அவனைப் பார்க்காதது போல் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு தன் பேச்சை தொடர்ந்தாள்.
" சொர்க்கமாக, சந்தோஷமாக இருக்கும் ஒரு மனநிலையிலிருந்து கீழே விழுந்த உடனே, ஒரு மனிதன் பேச மாட்டான். முதலில் அவன் அழுவான். ஆனால் நீ அழவில்லை. நீ சத்தம் இல்லாமல் உன் மனதோடு கத்திக் கொண்டிருக்கிறாய்.இன்று உன்னை கண்டுபிடிக்க என்னோடு வருவாயா?" என்று தாரா கேட்டதும் ராஜீவின் விழிகள் நனைந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.
"நீ அப்படியே இருக்கலாம் ராஜீவ். நீ நன்றாக அழலாம். நீயும், உன்னைக் கேட்கும் நானும் இங்கே இருப்பது போதுமானது. உன் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து, நிச்சயம் நீ பேசுவாய்" என்றாள் உறுதியான குரலில்.
அந்தக் குரலுக்கு கட்டுப்பட்டு ராஜீவின் மௌனம் மெல்ல அவனுள் உடைய ஆரம்பித்தது.
அவனது கைகள் மேஜையில் சிதறிக் கிடந்த கண்ணாடித் துகள்களை நகர்த்திக் கொண்டிருந்தது.
" சிதறிய கண்ணாடித் துண்டுகளில் உன் முழு உருவத்தை காண இயலாது. ஆனால் ஒவ்வொரு துண்டுகளிலும் பிரதிபலிப்பைக் காணலாம். உடைந்த உன் மனதை ஒட்ட வைக்க முடியாமல் போனாலும், உடைந்த பாகங்களின் பிரதிபலிப்பை மீண்டும் பெறலாம்" என்றாள் புன்சிரிப்புடன்.
ராஜீவின் தலை தானாக அசைந்து இசைந்தது.
ராஜீவ் வெளியேறியதும், மருத்துவமனையின் ரிசப்ஷினிஸ்ட் உள்ளே வந்தாள்.
“மேம், அந்த இன்டஸ்ட்ரியல் பில்டெக் நிறுவனம் பற்றிய உங்கள் மனுவை அவர்கள் அக்னாலேஜ் செய்து ஒப்புக் கொண்டுள்ளார்கள். உங்கள் மீதான கண்காணிப்பு இந்த நொடி முதல் ஆரம்பித்திருக்கும். நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் மேம்" என்றாள்.
தாரா மிகவும் நிதானமாக, “நானும் அவரைப் பார்க்க விரும்புகிறேன். ஒரே தடவை. மனிதத் தன்மையில்லாமல் ஒரு வன்மம் எப்படி வெல்லுகிறது என்பதை நான் நேரில் பார்க்கவேண்டும்" என்றாள்.
வன்மம் வெல்லுமா?
உணர்வுகள் வெல்லுமா?
தொடரும்...