ஏரா நேராக வந்து தன் அம்மாவிடம் “ஒம்மா நீங்க ஏன் பாவைக்கு ரொம்ப இடம் கொடுக்கிறீங்க? இப்போ பாருங்க ஹுனும் அவங்களும் ஒன்னா கார்ல வந்து இறங்குறாங்க என்னன்னு கேள்வி கேட்க மாட்டீங்களா?”
அதற்கு அஜ்ஜீமா சிரித்தப்படி “ஏரா அவங்க எங்கே போய்ட்டு வராங்கன்னு எனக்கு தெரியும் பாவை என்கிட்ட சொல்லலை.ஆனால் ஹுன் எல்லாத்தையும் சொல்லிட்டான் ஆஸ்பிட்டல் தானே போய்ட்டு வந்து இருக்காங்க” என்று நடந்த விவரங்களைச் சொன்னார்.
அதைக் கேட்ட ஏரா இதற்கு மேல் எதுவும் பேசமுடியாததால் அமைதியாகச் சென்று விட்டாள்.
மறுநாள்…
ஒரு கவளம் மதுபானத்தை அருந்தியதால் வந்த விளைவால் மயங்கிச் சரிந்தான் கிம்.தென் கொரியாவில் உள்ள மக்கள் எல்லோரும் நிச்சயம் மதுபானத்தையும் ஒரு உணவாகவே அருந்துவார்கள்.ஆனால் கிம்மிற்கு எப்பொழுதுமே ஒத்துக் கொள்ளாத ஒன்று.
தலையை அழுந்த பிடித்தபடி அமர்ந்தவன் கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.தன் கைப்பேசியைப் பார்க்க அதில் நாற்பது மிஸ்டுகால் இருந்தது.அதில் முப்பது முறை மேலாக க்வாங் அழைத்திருந்தாள்.
அந்த அழைப்பை பார்த்தவனுக்கு க்வாங் உடன் இரவு உணவிற்கு வருவதாக சொல்லி இருந்தது நினைவுக்கு வந்தது.
உடனே கிம் தன் கைபேசியை எடுத்து க்வாங்கை தொடர்பு கொண்டான்.அழைத்த முதல் அழைப்பிலேயே அவள் எடுக்கவில்லை.இரண்டு முறை தொடர்பு கொண்டும் கைப்பேசியை எடுக்காமல் போக குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினான்.நிச்சயம் அவன் தன் மேல் கோபமாக இருப்பாள் என்று அவனுக்கு தெரியும்.
அதனால் “க்வாங் என்னை மன்னிச்சிடு முக்கியமான வேலையாக வெளியே வந்து இருந்தேன் அதனால்தான் உன்னை தொடர்பு கொள்ள முடியவில்லை இன்று நிச்சயம் உன்னை நானே வந்து சந்திக்கிறேன்” என்று குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.
அடுத்த நேராக எழுந்து குளியலறைக்குள் சென்றான்.இன்று அலுவலகத்தில் முக்கியமான சந்திப்பு நிகழ்ச்சியில் உள்ளது.அதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு அலுவலகத்திற்கு புறப்பட்டான்.
பாவை எப்பொழுதும் போல் அலுவலகத்துக்கு செல்வதற்காக தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்தாள்.
இம்முறை ஹீன் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தான்.
பாவையைப் பார்த்ததும் புன்னகை ஒன்றை தர பாவையும் ஹீனைப் பார்த்து புன்னகைத்தாள்.செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாலும் அவனின் பார்வையோ அவளின் மீதே நிலைத்து இருந்தது.
செல்லும் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.பாவையின் தாய் வெளியே வந்தவர் ஹுன் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருப்பதைப் பார்த்து “ஹுன் புதுசா தோட்டத்துக்கு தண்ணீரெல்லாம் ஊத்துறே?” என்றதற்கு “ஒம்மா இயற்கை இரசிக்கும் போது மனதுக்கு லேசாக இருக்கு” என்று பாவையின் மீது கண் வைத்து அவன் சொல்ல அஜ்ஜீமாவோ தலையில் அடித்துக் கொண்டு “ஏதோ புதுசு புதுசா நடந்துக்கிறே ஒன்னும் புரியலை” என்றவரிடம்
“ஒம்மா பாவை ஆபிஸ்க்கு இன்னைக்கு சீக்கிரமா போயிட்டா நீங்க போகலையா?” என்றான்.
“இன்னைக்கு பாவைக்கு மற்ற கம்பெனிகளோடு கான்பரென்ஸ் மீட்டிங் இருக்கு அதனால அவ சீக்கிரமா போகனும்” என்றார்.
அதைக் கேட்டு அவனும் தலையசைத்தான்.பாவை வந்த கொஞ்ச நாட்களிலேயே ஓரளவு தெரிந்த ஹங்குவான் மொழியை இப்பொழுது கொஞ்சம் பேச கற்றுக் கொண்டாள்.அதனால் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்றாள்.அங்கு வெளிநாட்டைச் சார்ந்தவர்கள் வர இருப்பதால் ஆங்கிலத்தில் பேசுவதற்காக இவள் சென்று இருந்தாள்.
அங்கே நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் தன்னுடைய இருக்கையில் அமர்ந்து தன் அலுவலகத்தில் மேலாளருக்கு காத்திருந்தவள் மடிக்கணினியில் தேவையான கோப்புக்களை சரிபார்த்துக் கொண்டிருந்தாள்.
முதலீட்டார்கள் என ஓரளவு எல்லோரும் வந்து விட்டனர்.இவளுடைய மேலாளர் உட்பட.இந்த நிகழ்ச்சியை நடத்தும் மற்றும் இவர்களோடு இன்னும் சில கம்பெனிகளின் மொத்த உதவி தலைமை நிர்வாக அதிகாரிக்காக அனைவரும் காத்திருந்தனர்.
பக்கத்தில் உள்ளவர்கள் அந்த தலைவரைப் பற்றி அடுத்த தலைமை அதிகாரியாக இவரே வரவிருப்பதால் தற்சமயம் அவருக்கு இந்த பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக பேசினர்.மேலும் இந்த அதிகாரியே தலைமை அதிகாரியின் மகன் என்று பேசிக் கொண்டனர்.
பேசிக் கொள்வதை எல்லாம் காதில் வாங்கிக் கொண்டாலும் பாவை அதை எதிலும் ஆர்வம் காட்டாமல் இருந்தாள்.
அப்பொழுது எல்லோருடைய கண்களும் அறையின் வாயிலில் இருக்க….
மேல்நாட்டு உடையான கோட் சூட் மற்றும் விலையுயர்ந்த கைக்கடிகாரம் அதோடு கரங்களில் கைபேசியுடன் உள்ளே நுழைந்தான் அந்த நிறுவனத்தின் உதவி தலைமை அதிகாரியான கிம் சியோ ஜீன்.
அங்கே வந்திருப்பவனைக் கண்டு எல்லோரும் முகத்திலும் புன்னகை ததும்பி இருக்க…
அதைக் கண்ட பாவையின் முகமோ மொத்தமாக அதிர்ச்சியில் இருந்தது.அங்கே அவனைக் கண்டதும் தன்னை அறியாமல் எழுந்துக் கொள்ள அவனோ அங்கே ஒருத்தி இருப்பதாக எண்ணிக் கொள்ளாமல் நேராக தன் பார்வையை செலுத்தியவன் இருக்கையில் போல் அமர்ந்தான்.
பாவையின் அருகில் இருந்த மேலாளர் மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக “போடுகா ஜிக்கியாயோ இஸ்ஸாயோ - உட்காரு எல்லோரும் பார்க்குறாங்க” என்றார்.
அவளும் இடமறிந்து அமைதியாக உட்கார்ந்தாள்.கிம் தன்னுடைய சந்தித்தலுக்கான நிகழ்ச்சியைப் பற்றி பேச ஆரம்பித்தான்.
அவளின் பார்வை அவனின் மீதே நிலைத்து இருந்தது.அவன் பேசுவது எதுவும் இவளுடைய காதில் விழவில்லை.மாறாக விழிகள் முழுவதும் கண்ணீரை நிரப்பிக் கொண்டது.எந்த சூழ்நிலையில் அவனை சந்திக்கவே கூடாது என்று நினைத்தாளோ இன்று தன்னவனின் முன்னால் நிற்பதை நினைத்து வெளியே வாய்விட்டு சொல்லி அழ முடியாமல் உள்ளே தேக்கியபடி எச்சிலை விழுங்குவதை பெரும் பாராமாகிப் போனது.
அவன் தன்னுடைய பேச்சை முடித்ததும் மற்றவர்கள் தங்களுடைய யோசனையைப் பற்றி எல்லாம் பேசினார்கள்.ஏற்கனவே பாவையின் மேலாளர் அவளிடம் எல்லாவற்றையும் தயார் செய்யச் சொல்லி விட்டு அவரே நிகழ்ச்சியில் பேசுவதற்காக எழுந்தார்.
உடனே கிம் “ஒசாகி யகி ஜோம் ஹெல்தகோ ஹிஸ்ஸாயோ - உங்க கம்பெனியோட புது எம்ளாயி பேச சொல்லுங்க” என்றான் சாதாரணமாக…
இதைக் கேட்டு பாவைக்கு தான் இன்னும் திணறிப் போனாள்.அவளின் மேலாளர் அவளைப் பார்க்க வேற வழியில்லாமல் மெதுவாக தன் வயிற்றைப் பிடித்து எழுந்தாள்.தன்னைத் தானே கொஞ்சம் சமநிலைப் படுத்திக் கொண்டாள்.
அதை எல்லாம் அவன் பார்க்காமல் மடிக்கணினியில் தன் பார்வையை செலுத்தினான்.பாவை முதலில் தன்னைப் பற்றிய அறிமுகத்தோடு தன் நிறுவனத்தின் விளக்கக்காட்சியை சரியாக பேசி செய்து முடித்தாள்.அவனோ எல்லோரையும் எப்படி கவனித்தானோ அப்படித்தான் அவனின் செயல் இருந்தது.
கிம் எதற்கும் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் சிறு தலையசைப்பை மட்டும் பாவையின் மேலாளரிடம் பார்த்துச் சொன்னான்.
வந்திருந்த எல்லோருடைய விளக்கக்காட்சி முடிந்ததும் புது நிறுவனத்திற்கான பேச்சுவார்த்தை ஆரம்பித்தது.எல்லோரும் பேசி முடித்ததும் கிம் சியோ ஜீன் நேரில் சந்தித்து அவனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
அதற்கு அஜ்ஜீமா சிரித்தப்படி “ஏரா அவங்க எங்கே போய்ட்டு வராங்கன்னு எனக்கு தெரியும் பாவை என்கிட்ட சொல்லலை.ஆனால் ஹுன் எல்லாத்தையும் சொல்லிட்டான் ஆஸ்பிட்டல் தானே போய்ட்டு வந்து இருக்காங்க” என்று நடந்த விவரங்களைச் சொன்னார்.
அதைக் கேட்ட ஏரா இதற்கு மேல் எதுவும் பேசமுடியாததால் அமைதியாகச் சென்று விட்டாள்.
மறுநாள்…
ஒரு கவளம் மதுபானத்தை அருந்தியதால் வந்த விளைவால் மயங்கிச் சரிந்தான் கிம்.தென் கொரியாவில் உள்ள மக்கள் எல்லோரும் நிச்சயம் மதுபானத்தையும் ஒரு உணவாகவே அருந்துவார்கள்.ஆனால் கிம்மிற்கு எப்பொழுதுமே ஒத்துக் கொள்ளாத ஒன்று.
தலையை அழுந்த பிடித்தபடி அமர்ந்தவன் கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.தன் கைப்பேசியைப் பார்க்க அதில் நாற்பது மிஸ்டுகால் இருந்தது.அதில் முப்பது முறை மேலாக க்வாங் அழைத்திருந்தாள்.
அந்த அழைப்பை பார்த்தவனுக்கு க்வாங் உடன் இரவு உணவிற்கு வருவதாக சொல்லி இருந்தது நினைவுக்கு வந்தது.
உடனே கிம் தன் கைபேசியை எடுத்து க்வாங்கை தொடர்பு கொண்டான்.அழைத்த முதல் அழைப்பிலேயே அவள் எடுக்கவில்லை.இரண்டு முறை தொடர்பு கொண்டும் கைப்பேசியை எடுக்காமல் போக குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினான்.நிச்சயம் அவன் தன் மேல் கோபமாக இருப்பாள் என்று அவனுக்கு தெரியும்.
அதனால் “க்வாங் என்னை மன்னிச்சிடு முக்கியமான வேலையாக வெளியே வந்து இருந்தேன் அதனால்தான் உன்னை தொடர்பு கொள்ள முடியவில்லை இன்று நிச்சயம் உன்னை நானே வந்து சந்திக்கிறேன்” என்று குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.
அடுத்த நேராக எழுந்து குளியலறைக்குள் சென்றான்.இன்று அலுவலகத்தில் முக்கியமான சந்திப்பு நிகழ்ச்சியில் உள்ளது.அதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு அலுவலகத்திற்கு புறப்பட்டான்.
பாவை எப்பொழுதும் போல் அலுவலகத்துக்கு செல்வதற்காக தன்னைத் தயார்படுத்திக் கொண்டு வீட்டில் இருந்து வெளியே வந்தாள்.
இம்முறை ஹீன் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தான்.
பாவையைப் பார்த்ததும் புன்னகை ஒன்றை தர பாவையும் ஹீனைப் பார்த்து புன்னகைத்தாள்.செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாலும் அவனின் பார்வையோ அவளின் மீதே நிலைத்து இருந்தது.
செல்லும் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.பாவையின் தாய் வெளியே வந்தவர் ஹுன் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருப்பதைப் பார்த்து “ஹுன் புதுசா தோட்டத்துக்கு தண்ணீரெல்லாம் ஊத்துறே?” என்றதற்கு “ஒம்மா இயற்கை இரசிக்கும் போது மனதுக்கு லேசாக இருக்கு” என்று பாவையின் மீது கண் வைத்து அவன் சொல்ல அஜ்ஜீமாவோ தலையில் அடித்துக் கொண்டு “ஏதோ புதுசு புதுசா நடந்துக்கிறே ஒன்னும் புரியலை” என்றவரிடம்
“ஒம்மா பாவை ஆபிஸ்க்கு இன்னைக்கு சீக்கிரமா போயிட்டா நீங்க போகலையா?” என்றான்.
“இன்னைக்கு பாவைக்கு மற்ற கம்பெனிகளோடு கான்பரென்ஸ் மீட்டிங் இருக்கு அதனால அவ சீக்கிரமா போகனும்” என்றார்.
அதைக் கேட்டு அவனும் தலையசைத்தான்.பாவை வந்த கொஞ்ச நாட்களிலேயே ஓரளவு தெரிந்த ஹங்குவான் மொழியை இப்பொழுது கொஞ்சம் பேச கற்றுக் கொண்டாள்.அதனால் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சென்றாள்.அங்கு வெளிநாட்டைச் சார்ந்தவர்கள் வர இருப்பதால் ஆங்கிலத்தில் பேசுவதற்காக இவள் சென்று இருந்தாள்.
அங்கே நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் தன்னுடைய இருக்கையில் அமர்ந்து தன் அலுவலகத்தில் மேலாளருக்கு காத்திருந்தவள் மடிக்கணினியில் தேவையான கோப்புக்களை சரிபார்த்துக் கொண்டிருந்தாள்.
முதலீட்டார்கள் என ஓரளவு எல்லோரும் வந்து விட்டனர்.இவளுடைய மேலாளர் உட்பட.இந்த நிகழ்ச்சியை நடத்தும் மற்றும் இவர்களோடு இன்னும் சில கம்பெனிகளின் மொத்த உதவி தலைமை நிர்வாக அதிகாரிக்காக அனைவரும் காத்திருந்தனர்.
பக்கத்தில் உள்ளவர்கள் அந்த தலைவரைப் பற்றி அடுத்த தலைமை அதிகாரியாக இவரே வரவிருப்பதால் தற்சமயம் அவருக்கு இந்த பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக பேசினர்.மேலும் இந்த அதிகாரியே தலைமை அதிகாரியின் மகன் என்று பேசிக் கொண்டனர்.
பேசிக் கொள்வதை எல்லாம் காதில் வாங்கிக் கொண்டாலும் பாவை அதை எதிலும் ஆர்வம் காட்டாமல் இருந்தாள்.
அப்பொழுது எல்லோருடைய கண்களும் அறையின் வாயிலில் இருக்க….
மேல்நாட்டு உடையான கோட் சூட் மற்றும் விலையுயர்ந்த கைக்கடிகாரம் அதோடு கரங்களில் கைபேசியுடன் உள்ளே நுழைந்தான் அந்த நிறுவனத்தின் உதவி தலைமை அதிகாரியான கிம் சியோ ஜீன்.
அங்கே வந்திருப்பவனைக் கண்டு எல்லோரும் முகத்திலும் புன்னகை ததும்பி இருக்க…
அதைக் கண்ட பாவையின் முகமோ மொத்தமாக அதிர்ச்சியில் இருந்தது.அங்கே அவனைக் கண்டதும் தன்னை அறியாமல் எழுந்துக் கொள்ள அவனோ அங்கே ஒருத்தி இருப்பதாக எண்ணிக் கொள்ளாமல் நேராக தன் பார்வையை செலுத்தியவன் இருக்கையில் போல் அமர்ந்தான்.
பாவையின் அருகில் இருந்த மேலாளர் மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக “போடுகா ஜிக்கியாயோ இஸ்ஸாயோ - உட்காரு எல்லோரும் பார்க்குறாங்க” என்றார்.
அவளும் இடமறிந்து அமைதியாக உட்கார்ந்தாள்.கிம் தன்னுடைய சந்தித்தலுக்கான நிகழ்ச்சியைப் பற்றி பேச ஆரம்பித்தான்.
அவளின் பார்வை அவனின் மீதே நிலைத்து இருந்தது.அவன் பேசுவது எதுவும் இவளுடைய காதில் விழவில்லை.மாறாக விழிகள் முழுவதும் கண்ணீரை நிரப்பிக் கொண்டது.எந்த சூழ்நிலையில் அவனை சந்திக்கவே கூடாது என்று நினைத்தாளோ இன்று தன்னவனின் முன்னால் நிற்பதை நினைத்து வெளியே வாய்விட்டு சொல்லி அழ முடியாமல் உள்ளே தேக்கியபடி எச்சிலை விழுங்குவதை பெரும் பாராமாகிப் போனது.
அவன் தன்னுடைய பேச்சை முடித்ததும் மற்றவர்கள் தங்களுடைய யோசனையைப் பற்றி எல்லாம் பேசினார்கள்.ஏற்கனவே பாவையின் மேலாளர் அவளிடம் எல்லாவற்றையும் தயார் செய்யச் சொல்லி விட்டு அவரே நிகழ்ச்சியில் பேசுவதற்காக எழுந்தார்.
உடனே கிம் “ஒசாகி யகி ஜோம் ஹெல்தகோ ஹிஸ்ஸாயோ - உங்க கம்பெனியோட புது எம்ளாயி பேச சொல்லுங்க” என்றான் சாதாரணமாக…
இதைக் கேட்டு பாவைக்கு தான் இன்னும் திணறிப் போனாள்.அவளின் மேலாளர் அவளைப் பார்க்க வேற வழியில்லாமல் மெதுவாக தன் வயிற்றைப் பிடித்து எழுந்தாள்.தன்னைத் தானே கொஞ்சம் சமநிலைப் படுத்திக் கொண்டாள்.
அதை எல்லாம் அவன் பார்க்காமல் மடிக்கணினியில் தன் பார்வையை செலுத்தினான்.பாவை முதலில் தன்னைப் பற்றிய அறிமுகத்தோடு தன் நிறுவனத்தின் விளக்கக்காட்சியை சரியாக பேசி செய்து முடித்தாள்.அவனோ எல்லோரையும் எப்படி கவனித்தானோ அப்படித்தான் அவனின் செயல் இருந்தது.
கிம் எதற்கும் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் சிறு தலையசைப்பை மட்டும் பாவையின் மேலாளரிடம் பார்த்துச் சொன்னான்.
வந்திருந்த எல்லோருடைய விளக்கக்காட்சி முடிந்ததும் புது நிறுவனத்திற்கான பேச்சுவார்த்தை ஆரம்பித்தது.எல்லோரும் பேசி முடித்ததும் கிம் சியோ ஜீன் நேரில் சந்தித்து அவனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.