உருகாதே உயிரே விலகாதே மலரே அத்தியாயம் -9
வாணியின் கணவன் தினகரன் தன் அம்மாவோடு இல்லாமல் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தான்.அவனுக்கு இன்னும் ஒரு சகோதரன் இருந்ததால் அவனோடு அவன் அம்மா இருந்தார்.
பாவை சேர்ந்திருந்த நிறுவனத்தில் மூன்று மாதங்கள் சென்று இருந்தது.பாவைக்கும் அவளுடன் வேலை பார்க்கும் மற்றவர்களுக்கும் சேர்த்து ஒரு அணியாக உருவாக்கி அவர்களுக்காக அந்த நிறுவனம் தலைமை இடமான தென் கொரியாவிலிருந்து ஒரு நபரை அனுப்பி அவர்களுக்கு பயிற்சி அளிக்க இருப்பதாக குறுஞ்செய்தி வந்தது.
அதைப் பார்த்து பாவையுடன் வேலை செய்யும் விமலா “ஹேய் பாவை மெஸேஜ் பார்த்தியா?”
“ம்ம்… பார்த்தேன்”
விமலா “எனக்கு ரொம்ப எக்ஸ்சைன்ட்மெண்ட்டா இருக்கு ஆளு பார்க்க எப்படி இருப்பாங்கன்னு நினைக்கிறே?”
“இதுல என்ன இருக்கு? இப்போ நம்ம வயசான கொரியன் தாத்தாவை பார்க்கிறோம் அடுத்து அதை விட கொஞ்சம் வயசு குறைந்த கொரியனை பார்க்க போறோம் இல்லை அதே தாத்தாவாகவும் இருக்கலாம் அதானே” என்றாள் அசால்ட்டாக…
அதைக் கேட்டு அதிர்ச்சியான விமலா “ஹேய் என்ன இப்படி சொல்லிட்டே? என்னோட ரொம்ப நாள் கனவு நிறைவேறினால் நல்லா இருக்கும் தெரியுமா?”
இவளோ ஆர்வமாய் “என்ன கனவு?”
“எனக்கு ஒரு கொரியன் பையனைப் பார்த்து பேசி லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும் ஆசையா இருக்கு” என்றாள் சிலாகித்துக் கொண்டே…
அதைத் கேட்ட பாவையோ முகத்தை கேள்விக் குறியாக வைத்துக் கொண்டு “என்ன? நம்ம ஊர்ல பசங்களுக்கா பஞ்சம் அங்கேப் பார் கண்ணுல கண்ணாடி கன்னத்துல தாடி மீசைன்னு இருக்கிற நம்ம பசங்களுக்கு என்னடி குறை?”
அவளோ “ம்ஹீம் நீ சொல்றது எல்லாம் சரி தான் ஆனால் கே - டிராமா ,கே - பாப் பாடல்கள் பார்த்து நான் அப்படியே விழுந்துட்டேன் தெரியுமா?”கனவுலகில் மிதந்தபடி சொன்னாள்.
“என்னது கே-டிராமா பாப் ?” புரியாமல் கேட்க…
விமலா அதிர்ச்சியாகி “என்னது கே டிராமா பாப் பாடல்கள் ன்னா என்னன்னு தெரியாதா? பாவை எந்த உலகத்துல இருக்கிற இப்போ என்ன டிரெண்ட்டிங்ன்னு தெரியாதா?” என்றாள்.
பாவையோ “அட ஏதோ பெரிய தப்பு பண்ணிட்ட மாதிரி பேசுற? எனக்கு அதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் கிடையாது நமக்கு எப்பவும் தமிழ் பாடல்கள் தான்” என்றாள்.
விமலா விடாப்பிடியாக “எனக்காக கே டிராமா உலகத்துக்குள்ள போயிட்டு வாயேன் மிஸ் பண்ணிட்டோம்னு நினைப்பே பாவை அதுல வர்ற ஹீரோஸ்லாம் ஹீரோயினை அப்படி பார்த்துக்குவாங்க தெரியுமா? அந்த கைன்ட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள்.
பாவை “எப்படியோ உனக்கு சப்பை மூக்கன்ஸ்ஸா பிடிச்சிருக்கு என்ஜாய் பார்க்கலாம் நாளைக்கு யார் வர்றாங்கன்னு”என்று அவர்களுடைய பேச்சுவார்த்தை முடிந்து இருந்தது.
விமலா அதோடு விடாமல் சில முக்கியமான நாடகங்களின் பெயர்களை அனுப்பி இருந்தாள்.
சிறிதுநேரம் பார்க்கலாம் என்று நினைத்து இருந்தவள் அவள் சொன்ன நாடகங்களை பார்க்க ஆரம்பித்த இருபது நிமிடங்களிலேயே தூங்கிப் போனாள்.
இரவு நேரம் மணி பன்னிரெண்டை தாண்டி இருக்க அவள் அசதியால் தூங்கிப் போனாள்.மறுநாள் காலையில் புது பயிற்சியாளருக்காக அலுவலகத்திற்கு சீக்கிரமே செல்ல வேண்டி இருந்தது.
ஆனால் அன்று காலையில் வாணி தன் கணவனோடு வீட்டிற்கு வந்தாள்.அங்குள்ள
மருத்துவமனையில் தன்னை மருத்துவரிடம் காட்ட வந்திருந்தாள்.அதனால் பாவை வாணியிடமும் அவளின் கணவன் தினகரனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
அவளுடைய அத்தான் தினகரன் எப்போதும் கலகலப்பாக பேசுவார்.அவளை வம்பிழுக்க அவருக்கு பிடிக்கும்.வாணியின் அமைதியான குணத்திற்கு அப்படியே நேர்மாறான குணமுடையவர்.பெற்றவர்கள் இருவருக்கும் அவர்களுக்கு நல்ல ஒரு மருமகன் அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி.
இரண்டு பெண்பிள்ளைகள் இருந்த இடத்தில் தினகரனை ரமணா தன் மூத்த பிள்ளையாக நினைத்தார்.
அலுவலகத்திற்கு தாமதமாக வந்த பாவை தன் இருப்பிடத்தில் போய் அமர்ந்தாள்.விமலாவிடம் கிண்டலாக “விமலா வந்திருக்கிற புது சப்பை மூக்கனை பார்த்துட்டியா? எப்படி ஆளு நீ நினைச்ச மாதிரி இருந்தாங்களா எப்படி? என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.
பாவைக்கு அடுத்து அமர்ந்திருந்த விமலா பாவையை அதிர்ச்சியாகப் பார்க்க அவளோ விமலாவிடம் “என்ன அப்படியே விழுந்திட்டே போல இப்பவே முகத்தில் வேற லெவல் ரியாக்ஷனோடு இருக்க?” என்று சிரித்தாள்.
விமலா “சார்” என்று எழுந்துக் கொண்டாள்.பாவை திரும்பி பார்க்க அங்கே உயரமாக ஒல்லியான தேகத்தோடு பார்மல் சட்டையோடு அங்கே நின்றிருந்தான் அவன்.
பாவை பதறியபடி எழுந்து நிற்க அவனோ எந்தவிதமான உணர்ச்சிகளையும் காட்டாமல் ஆங்கிலத்தில் “நீங்க தான் பாவையா?”
அவள் ஆமாம் என்று தலையசைத்ததும் “அன்னியாங்சேயோ - வணக்கம்” என்று தலையை தாழ்த்திச் சொன்னவன் “நான் கிம் சியோ ஜீன்” என்று தன்னைப் பற்றி அறிமுகம் செய்தவன் தன் அறைக்கு வரச் சொன்னான்.
அவன் அங்கிருந்து சென்றதும் பாவையோ விமலாவை ஒருவித கலக்கத்தோடு பார்க்க அவளும் அந்த நிலைமையில் தான் இருந்தாள்.பாவை இம்முறை கதவைத் தட்டிக் கொண்டு உள்ளேச் சென்றாள்.
அவனது இருக்கையில் அமர்ந்திருந்தவன் அவளை முறைத்துப் பார்த்தப்படி ஆங்கிலத்தில் பேசினான்.
“கம்பெனில ஒரு இன்டர்னா இருக்கீங்க கொஞ்சம் கூட ரெஸ்பான்ஸ் இல்லை இன்றைக்கு சீக்கிரமா வரச் சொல்லி இருந்தும் பர்ஸ்னல் வொர்க் இருக்குன்னு கவலை இல்லாமல் மெஸேஜ் பண்ணுறீங்க அதோட லேட்டா வந்தும் என்னை சந்திக்காமல் வொர்க்கை பார்க்காமல் அரட்டை அடிச்சு டைம் வேஸ்ட் செய்துட்டு இருக்கீங்க” என்று வெளியில் நடந்துக் கொண்ட முறைக்கு அப்படியே மாற்றமாக அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.
பாவை என்னச் சொல்வதென்று தெரியாமல் அப்படியே நின்றாள்.அவன் பேசி முடிக்கவும் இவளோ வேறு வழியில்லாமல் “சாரி சார்” என்றாள்.
அவனோ அதை எல்லாம் கவனித்தில் கொள்ளாமல் காருக்கான பாகங்களின் இறக்குமதியான விவரங்களையும் இதுவரை உபயோகித்த விவரங்கள் மேலும் தேவையுள்ள பாகங்கள் என அனைத்து விவரங்களையும் கொண்டு வரச் சொன்னான்.
“சார் எப்போ ரிப்போர்ட் தரனும்?”
“இன்றைக்கு”
“சார் இன்னைக்கு எப்படி தர முடியும் நிறைய வொர்க் இருக்கு”
“தெரியுதுல்ல எவ்வளவு சீக்கிரம் தர முடியுமோ அவ்வளவு வேகமாக தாங்க” என்றான்.
பாவையால் எதுவும் பேச முடியவில்லை.அமைதியாக வெளியே வந்தாள்.தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
அவளுடன் பணிபுரியும் மற்றவர்களும் அந்த நிலைமையில் தான் இருந்தனர்.உணவு இடைவேளைக்காக எல்லோரும் வெளியில் சென்று இருக்க பாவையால் எங்கும் செல்ல முடியவில்லை.விமலாத் தான் அவளுக்கு மாதுளைச் சாறும் பிரெட் சாலட் ஒன்றும் வாங்கிக் கொடுத்தாள்.
அதை சாப்பிட்டப்படியே தன் வேலையைத் தொடர்ந்தாள் பாவை.தன் இருப்பிடத்தில் இருந்தபடி கண்காணிப்பு கேமராவில் எல்லாவற்றையும் பார்த்தபடி தன் வேலையைத் தொடர்ந்தான்.
மாலை நேரம் ஆறு மணியைத் தாண்டி இருந்தது.எல்லோரும் வேலை முடிந்து செல்ல பாவை அவள் எடுத்திருந்த இரண்டு மணிநேர விடுப்பிற்கும் சேர்ந்து வேலை இருந்தது.
விமலா பாவையிடம் “பாவை நான் உனக்காக வெயிட் பண்ணட்டுமா?”
“வேண்டாம் விமலா அந்த சப்பை மூக்கன் உன்னை இங்கே பார்த்து எதாவது வொர்க் கொடுத்தால் என்னச் செய்ய? அதனால நீ கிளம்பு அப்பாக்கு நான் மெஸேஜ் பண்ணிட்டேன் அவரு வந்து என்னை அழைச்சுட்டு போவாங்க” என்றாள்.
விமலா “ஓகே பாவை பார்த்து இருந்துக்கோ நான் கிளம்புறேன் கிம் சார் இங்கே தான் இருக்காங்கன்னு நினைக்கிறேன்” என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.
பாவையோ “சார் இருந்தாலும் ஓகே இல்லைன்னாலும் பரவாயில்லை என்னோட வேலையை நான் சரியா செய்யனும் அதோட கொரியன்ஸ்னா ரொம்ப கைன்ட்டா இருப்பாங்கன்னு சொன்னே விமலா இப்போ பாரு வந்த முதல் நாளே எல்லோருடைய பெண்ட்டை நிமித்துட்டாரு எந்த நாட்டுக்காரங்களாக இருந்தால் என்ன? மனசுல அன்பும் கருணையும் இருந்தால் எல்லா மக்களும் அழகுதான் இதை நான் சொன்னால் ஏத்துக்க மாட்டே இப்போ நீயே புரிஞ்சுப்பேன்னு நினைக்கிற” என்று அவள் உதடுகள் பேசினாலும் கைககள் தன் வேலையை சரியாகச் செய்துக் கொண்டிருந்தன.
இதை எல்லாம் வெளியிலிருந்து உள்ளே வந்த கிம் சியோ ஜீன் எல்லாவற்றையும் கேட்டான்.அவனுக்கு தமிழ் பேசுவது ஓரளவு புரியும்.ஆனால் பேசுவதற்கு அந்த வார்த்தைகளின் உச்சரிப்பு சரியாக வராமல் இருக்க அவன் பேசுவதில்லை.
வாணியின் கணவன் தினகரன் தன் அம்மாவோடு இல்லாமல் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தான்.அவனுக்கு இன்னும் ஒரு சகோதரன் இருந்ததால் அவனோடு அவன் அம்மா இருந்தார்.
பாவை சேர்ந்திருந்த நிறுவனத்தில் மூன்று மாதங்கள் சென்று இருந்தது.பாவைக்கும் அவளுடன் வேலை பார்க்கும் மற்றவர்களுக்கும் சேர்த்து ஒரு அணியாக உருவாக்கி அவர்களுக்காக அந்த நிறுவனம் தலைமை இடமான தென் கொரியாவிலிருந்து ஒரு நபரை அனுப்பி அவர்களுக்கு பயிற்சி அளிக்க இருப்பதாக குறுஞ்செய்தி வந்தது.
அதைப் பார்த்து பாவையுடன் வேலை செய்யும் விமலா “ஹேய் பாவை மெஸேஜ் பார்த்தியா?”
“ம்ம்… பார்த்தேன்”
விமலா “எனக்கு ரொம்ப எக்ஸ்சைன்ட்மெண்ட்டா இருக்கு ஆளு பார்க்க எப்படி இருப்பாங்கன்னு நினைக்கிறே?”
“இதுல என்ன இருக்கு? இப்போ நம்ம வயசான கொரியன் தாத்தாவை பார்க்கிறோம் அடுத்து அதை விட கொஞ்சம் வயசு குறைந்த கொரியனை பார்க்க போறோம் இல்லை அதே தாத்தாவாகவும் இருக்கலாம் அதானே” என்றாள் அசால்ட்டாக…
அதைக் கேட்டு அதிர்ச்சியான விமலா “ஹேய் என்ன இப்படி சொல்லிட்டே? என்னோட ரொம்ப நாள் கனவு நிறைவேறினால் நல்லா இருக்கும் தெரியுமா?”
இவளோ ஆர்வமாய் “என்ன கனவு?”
“எனக்கு ஒரு கொரியன் பையனைப் பார்த்து பேசி லவ் பண்ணி கல்யாணம் பண்ணனும் ஆசையா இருக்கு” என்றாள் சிலாகித்துக் கொண்டே…
அதைத் கேட்ட பாவையோ முகத்தை கேள்விக் குறியாக வைத்துக் கொண்டு “என்ன? நம்ம ஊர்ல பசங்களுக்கா பஞ்சம் அங்கேப் பார் கண்ணுல கண்ணாடி கன்னத்துல தாடி மீசைன்னு இருக்கிற நம்ம பசங்களுக்கு என்னடி குறை?”
அவளோ “ம்ஹீம் நீ சொல்றது எல்லாம் சரி தான் ஆனால் கே - டிராமா ,கே - பாப் பாடல்கள் பார்த்து நான் அப்படியே விழுந்துட்டேன் தெரியுமா?”கனவுலகில் மிதந்தபடி சொன்னாள்.
“என்னது கே-டிராமா பாப் ?” புரியாமல் கேட்க…
விமலா அதிர்ச்சியாகி “என்னது கே டிராமா பாப் பாடல்கள் ன்னா என்னன்னு தெரியாதா? பாவை எந்த உலகத்துல இருக்கிற இப்போ என்ன டிரெண்ட்டிங்ன்னு தெரியாதா?” என்றாள்.
பாவையோ “அட ஏதோ பெரிய தப்பு பண்ணிட்ட மாதிரி பேசுற? எனக்கு அதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் கிடையாது நமக்கு எப்பவும் தமிழ் பாடல்கள் தான்” என்றாள்.
விமலா விடாப்பிடியாக “எனக்காக கே டிராமா உலகத்துக்குள்ள போயிட்டு வாயேன் மிஸ் பண்ணிட்டோம்னு நினைப்பே பாவை அதுல வர்ற ஹீரோஸ்லாம் ஹீரோயினை அப்படி பார்த்துக்குவாங்க தெரியுமா? அந்த கைன்ட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள்.
பாவை “எப்படியோ உனக்கு சப்பை மூக்கன்ஸ்ஸா பிடிச்சிருக்கு என்ஜாய் பார்க்கலாம் நாளைக்கு யார் வர்றாங்கன்னு”என்று அவர்களுடைய பேச்சுவார்த்தை முடிந்து இருந்தது.
விமலா அதோடு விடாமல் சில முக்கியமான நாடகங்களின் பெயர்களை அனுப்பி இருந்தாள்.
சிறிதுநேரம் பார்க்கலாம் என்று நினைத்து இருந்தவள் அவள் சொன்ன நாடகங்களை பார்க்க ஆரம்பித்த இருபது நிமிடங்களிலேயே தூங்கிப் போனாள்.
இரவு நேரம் மணி பன்னிரெண்டை தாண்டி இருக்க அவள் அசதியால் தூங்கிப் போனாள்.மறுநாள் காலையில் புது பயிற்சியாளருக்காக அலுவலகத்திற்கு சீக்கிரமே செல்ல வேண்டி இருந்தது.
ஆனால் அன்று காலையில் வாணி தன் கணவனோடு வீட்டிற்கு வந்தாள்.அங்குள்ள
மருத்துவமனையில் தன்னை மருத்துவரிடம் காட்ட வந்திருந்தாள்.அதனால் பாவை வாணியிடமும் அவளின் கணவன் தினகரனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
அவளுடைய அத்தான் தினகரன் எப்போதும் கலகலப்பாக பேசுவார்.அவளை வம்பிழுக்க அவருக்கு பிடிக்கும்.வாணியின் அமைதியான குணத்திற்கு அப்படியே நேர்மாறான குணமுடையவர்.பெற்றவர்கள் இருவருக்கும் அவர்களுக்கு நல்ல ஒரு மருமகன் அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி.
இரண்டு பெண்பிள்ளைகள் இருந்த இடத்தில் தினகரனை ரமணா தன் மூத்த பிள்ளையாக நினைத்தார்.
அலுவலகத்திற்கு தாமதமாக வந்த பாவை தன் இருப்பிடத்தில் போய் அமர்ந்தாள்.விமலாவிடம் கிண்டலாக “விமலா வந்திருக்கிற புது சப்பை மூக்கனை பார்த்துட்டியா? எப்படி ஆளு நீ நினைச்ச மாதிரி இருந்தாங்களா எப்படி? என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.
பாவைக்கு அடுத்து அமர்ந்திருந்த விமலா பாவையை அதிர்ச்சியாகப் பார்க்க அவளோ விமலாவிடம் “என்ன அப்படியே விழுந்திட்டே போல இப்பவே முகத்தில் வேற லெவல் ரியாக்ஷனோடு இருக்க?” என்று சிரித்தாள்.
விமலா “சார்” என்று எழுந்துக் கொண்டாள்.பாவை திரும்பி பார்க்க அங்கே உயரமாக ஒல்லியான தேகத்தோடு பார்மல் சட்டையோடு அங்கே நின்றிருந்தான் அவன்.
பாவை பதறியபடி எழுந்து நிற்க அவனோ எந்தவிதமான உணர்ச்சிகளையும் காட்டாமல் ஆங்கிலத்தில் “நீங்க தான் பாவையா?”
அவள் ஆமாம் என்று தலையசைத்ததும் “அன்னியாங்சேயோ - வணக்கம்” என்று தலையை தாழ்த்திச் சொன்னவன் “நான் கிம் சியோ ஜீன்” என்று தன்னைப் பற்றி அறிமுகம் செய்தவன் தன் அறைக்கு வரச் சொன்னான்.
அவன் அங்கிருந்து சென்றதும் பாவையோ விமலாவை ஒருவித கலக்கத்தோடு பார்க்க அவளும் அந்த நிலைமையில் தான் இருந்தாள்.பாவை இம்முறை கதவைத் தட்டிக் கொண்டு உள்ளேச் சென்றாள்.
அவனது இருக்கையில் அமர்ந்திருந்தவன் அவளை முறைத்துப் பார்த்தப்படி ஆங்கிலத்தில் பேசினான்.
“கம்பெனில ஒரு இன்டர்னா இருக்கீங்க கொஞ்சம் கூட ரெஸ்பான்ஸ் இல்லை இன்றைக்கு சீக்கிரமா வரச் சொல்லி இருந்தும் பர்ஸ்னல் வொர்க் இருக்குன்னு கவலை இல்லாமல் மெஸேஜ் பண்ணுறீங்க அதோட லேட்டா வந்தும் என்னை சந்திக்காமல் வொர்க்கை பார்க்காமல் அரட்டை அடிச்சு டைம் வேஸ்ட் செய்துட்டு இருக்கீங்க” என்று வெளியில் நடந்துக் கொண்ட முறைக்கு அப்படியே மாற்றமாக அவளிடம் பேசிக் கொண்டிருந்தான்.
பாவை என்னச் சொல்வதென்று தெரியாமல் அப்படியே நின்றாள்.அவன் பேசி முடிக்கவும் இவளோ வேறு வழியில்லாமல் “சாரி சார்” என்றாள்.
அவனோ அதை எல்லாம் கவனித்தில் கொள்ளாமல் காருக்கான பாகங்களின் இறக்குமதியான விவரங்களையும் இதுவரை உபயோகித்த விவரங்கள் மேலும் தேவையுள்ள பாகங்கள் என அனைத்து விவரங்களையும் கொண்டு வரச் சொன்னான்.
“சார் எப்போ ரிப்போர்ட் தரனும்?”
“இன்றைக்கு”
“சார் இன்னைக்கு எப்படி தர முடியும் நிறைய வொர்க் இருக்கு”
“தெரியுதுல்ல எவ்வளவு சீக்கிரம் தர முடியுமோ அவ்வளவு வேகமாக தாங்க” என்றான்.
பாவையால் எதுவும் பேச முடியவில்லை.அமைதியாக வெளியே வந்தாள்.தன் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
அவளுடன் பணிபுரியும் மற்றவர்களும் அந்த நிலைமையில் தான் இருந்தனர்.உணவு இடைவேளைக்காக எல்லோரும் வெளியில் சென்று இருக்க பாவையால் எங்கும் செல்ல முடியவில்லை.விமலாத் தான் அவளுக்கு மாதுளைச் சாறும் பிரெட் சாலட் ஒன்றும் வாங்கிக் கொடுத்தாள்.
அதை சாப்பிட்டப்படியே தன் வேலையைத் தொடர்ந்தாள் பாவை.தன் இருப்பிடத்தில் இருந்தபடி கண்காணிப்பு கேமராவில் எல்லாவற்றையும் பார்த்தபடி தன் வேலையைத் தொடர்ந்தான்.
மாலை நேரம் ஆறு மணியைத் தாண்டி இருந்தது.எல்லோரும் வேலை முடிந்து செல்ல பாவை அவள் எடுத்திருந்த இரண்டு மணிநேர விடுப்பிற்கும் சேர்ந்து வேலை இருந்தது.
விமலா பாவையிடம் “பாவை நான் உனக்காக வெயிட் பண்ணட்டுமா?”
“வேண்டாம் விமலா அந்த சப்பை மூக்கன் உன்னை இங்கே பார்த்து எதாவது வொர்க் கொடுத்தால் என்னச் செய்ய? அதனால நீ கிளம்பு அப்பாக்கு நான் மெஸேஜ் பண்ணிட்டேன் அவரு வந்து என்னை அழைச்சுட்டு போவாங்க” என்றாள்.
விமலா “ஓகே பாவை பார்த்து இருந்துக்கோ நான் கிளம்புறேன் கிம் சார் இங்கே தான் இருக்காங்கன்னு நினைக்கிறேன்” என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.
பாவையோ “சார் இருந்தாலும் ஓகே இல்லைன்னாலும் பரவாயில்லை என்னோட வேலையை நான் சரியா செய்யனும் அதோட கொரியன்ஸ்னா ரொம்ப கைன்ட்டா இருப்பாங்கன்னு சொன்னே விமலா இப்போ பாரு வந்த முதல் நாளே எல்லோருடைய பெண்ட்டை நிமித்துட்டாரு எந்த நாட்டுக்காரங்களாக இருந்தால் என்ன? மனசுல அன்பும் கருணையும் இருந்தால் எல்லா மக்களும் அழகுதான் இதை நான் சொன்னால் ஏத்துக்க மாட்டே இப்போ நீயே புரிஞ்சுப்பேன்னு நினைக்கிற” என்று அவள் உதடுகள் பேசினாலும் கைககள் தன் வேலையை சரியாகச் செய்துக் கொண்டிருந்தன.
இதை எல்லாம் வெளியிலிருந்து உள்ளே வந்த கிம் சியோ ஜீன் எல்லாவற்றையும் கேட்டான்.அவனுக்கு தமிழ் பேசுவது ஓரளவு புரியும்.ஆனால் பேசுவதற்கு அந்த வார்த்தைகளின் உச்சரிப்பு சரியாக வராமல் இருக்க அவன் பேசுவதில்லை.