• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕37

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
75
89
18
Madurai
நேஹாவை கொன்று புதைக்கும் வெறகயோடு காரை விரைந்து நேஹாவின் வீட்டிற்கு பரக்கவிட்டவனின் என்னம் முழுவதும் நேஹா தன் கைதேர்ந்த நடிப்பாள் அஞ்சலியை அழகாக அவள் ஆளுகைக்குள் இழுத்து மற்ற விஷயங்களை சிந்திக்க விடாது கிடுக்கு பிடி போட்டு தன் வார்த்தைகளால் ஏமாற்றியதை நினைத்தவனின் கண்கள் செவ்வரியோடி ரத்த பிழம்பாய் காட்ச்சி அளித்தது...

நேஹாவின் மேல் ஆத்தரம் பிறந்தாலும் தன் காதலை எந்த நிலையிலும் முன் நிறுத்தி கொஞ்சம் கூட சிந்திக்காது போன அஞ்சலி மீதும் கோபம் கொழுந்து விட்டு எரிந்த போதும் அவளை காணாத தவிப்பு அதன் மேல் படலமாய் படர்ந்து உள்ளே அழுத்தி வைத்ததே அன்றி புகையாக மறைந்திருக்கவில்லை...

முகத்தை அப்பாவியாக வைத்து கச்சிலமாக நாடகத்திற்காகவே செதுக்கப்பட்டவள் போல் அஞ்சலி முன் நின்றவளை குழப்பமாக எதிர்நோக்கியிருந்தாள் அவள்...

அது லன்ச்சு டைம் என்பதால் அத்தனை கூட்டமும் கேன்டினையே அடைத்திருக்க ஏதோ ஓர் முக்கிய பைலை விரைவாக முடிக்கும் என்னதோடு அவளும் கேன்டின் செல்லாது அமர்ந்து இருந்தது இன்னும் தோதாக போனது நேஹாவிற்கு...

நேராக அவளை நெருங்கி வந்தவள் அஞ்சலி தான உன் பெரு என்றவர் அவள் ஆம் என தலை அசைத்து ஆமோதிக்கும் முன் படபடவென உன்கிட்ட கொஞ்சம் பேசனும் ஆபீஸ் கரோன்டுக்கு வரியா பீளிஸ் என்றவளை புருவம் சுருக்கி பார்த்தவள் ஒரிரு முறை மட்டுமே தன்ன பார்த்திருந்தவளுக்கு தன்னை தனியாக அழைத்து சென்று பேசும் அளவிற்கு என்ன விஷயம் இருக்க போகிறது என்ற என்னம் மனதில் எழுந்தாலும் அதர்ஷனுக்கு வேண்டப்பட்டவள் என்ற முறையில் அவள் பின் சென்றாள்...

அவள் தன் அருகில் வந்து நின்ற உடன் நடிப்பை அறங்கேற்ற தொடங்கியவளாய் உனக்கு அதர்ஷன் பத்தி என்ன தெரியும் அஞ்சலி உனக்கு அவன் அப்பா அம்மா யாருனு தெரியுமா அப்படியே தெரிஞ்சு இருந்தாலும் அவுங்க உயிரோட இருக்காங்கலா இல்லை செத்துட்டாங்கலா இப்படி எதாவது தெரியுமா என கேட்டு நிறுத்தியவளை ஏறிட்டு பார்த்தவளுக்கு நிஜமாகவே இந்த விஷயங்கள் எல்லாம் தெரியாது என்பது தானே உன்மை...

இருந்தும் முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளாது எனக்கு அதர்ஷனை பத்தி சில விஷயங்கள் தெரியலைனு குத்தி காட்டி சொல்ல தான் என்ன தேடி வந்திங்களா...

அப்படி இல்லை ஏன் அவன் உன்கிட்ட இருந்து அவனோட கடந்த காலத்தை இத்தனை பத்திரமா மறைச்சு வச்சுருக்கானு அவனே வாயை திறக்காமா உனக்கு தெரியாது அஞ்சலி அதான் உண்மை..அவன் கண்டிப்பா வாயை திறக்க மாட்டான் அப்படி இருக்கும் போது அவனோட வார்த்தைல பொதிந்து இருக்க என்னோட வாழ்க்கைக்கு ஒரு நியாயம் வேணும்னு தான் இதோ உன் முன்னாடி நிக்கிறேன்...

நீங்க சொல்லுறது ஒன்னும் புரியலை என்னோட ஆது எதாவது மறைச்சு இருந்தா கூட அதுல காரணம் இருக்கும் நினைக்கிறவ நா...அப்படி இருக்கும் போது அவரால உங்க வாழ்க்கையே கேள்விக்குறியா நிக்கிற மாதிரி பேசுறது சிரிப்பா இருக்கு...

அஞ்சலியின் பதிலடியில் முகம் சிறுத்து உள்ளுக்குள் கறுவி கொண்டாளும் அதனை வெளிக்காட்டாது சரி அவனை பத்தி எல்லாம் சொன்னா தான் உனக்கு எல்லாம் புரியும்னா சொல்லுறேன் அப்பறம் நீயே நியாயம் சொல்லும் ஒரு பொண்ணா இன்னோரு பொண்ணுக்கு நியாயம் இல்லாம நடந்துக்க மாட்டேனு நினைக்கிறேன் என்றவள் பேச்சை நீட்டி வளர்த்து இருந்தாள் நேஹா...

செல்வராகவ் யாருனு தெரியுமா..

ம்ம் டி.என் கன்ஸ்டரக்ஷன் கம்பேனி ஓனர் அங்க இருந்து தான் என் வர்க் புடிச்சு முதல்ல ஹயர் பண்ணாங்க என்றவளை பார்த்து கண்களால் கேலி செய்வதவள் வார்த்தைகளை மட்டும் கவனமாக சோகத்தில் தொய்த்து எடுத்திருந்தாள்...

செல்வராகவ் உன்னோட ஆதுவோட சொந்த தம்பி என உன்னோட ஆது என்பதில் அழுத்தம் கொடுத்து வாக்கியத்தை முடித்து வைத்தவளை அதிர்ந்து நோக்கிய அஞ்சலிக்குள் ஏராளமான குழப்பங்கள் கிளர்தெழுந்தது...

அவள் குழம்பிய முகத்தை நிதானமாக உள்வாங்கி கொண்ட நேஹா கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க விளைந்தாள்...

செல்வராகவின் அம்மா நீமா தான் அதர்ஷனுக்கும் பயோலாஜிக்கல் அம்மா என்பது தான் மறுக்கப்படாத உண்மை என அஞ்சலியிடம் கூறியவள் அதனை தொடர்ந்து அதர்ஷனின் கடந்த காலங்களை விளக்கியிருந்தாள்...

நீலிமா மேல்தட்டு மக்களின் பழக்க வழக்கத்தில் சிறு வயதில் இருந்தே ஊரி போயிருந்ததால் ஒரு கட்டத்தில் அனைத்தையும் மறந்து அதுவே கதி என அடிமையாக தொடர்ந்தாள்..

விடாமுற்ச்சியாக உளைத்து உருமெறிய நீலிமாவின் தந்தை வேதநாயகத்திற்கு மேல் தட்டு மக்களின் பழக்கவழக்கங்களில் அத்தனை நாட்டம் இருந்திருக்கவில்லை என்பதால் உழைப்பை மட்டுமே நம்பி இருந்தவர் தலையில் ஏற்கனவே கனத்த பொறுப்பு என்னும் சுமையின் சுமைக்கு சுமை கூட்டுவதாய் நேஹாவை தானே தனியாக கனவித்து கொள்ளும் பொறுப்பும் ஏற்ப்பட்டது எதிர்பாராமல் தன் ஆசை மனைவி தவறியதில்...

இரண்டையும் ஈடுக்கட்டி நகர்த்தி செல்ல தெரியாத மனதிர் பிஸ்னஸில் பன்மடங்கு வளர்ச்சி அடைந்து பெற்ற பிள்ளையின் குன நலங்களை கண்டு தந்தையாக தோற்றதில் அடைந்த வளர்ச்சி எல்லாம் உப்புக்கும் பெறாமல் போனது...

நீலிமாவின் குன நலன்கள் வேதநாயகத்தின் நெஞ்சில் நெருஞ்சில் முள்ளாய் தைத்து உணர்த்திய பின் தான் உணர்ந்தவர் மகளை அடக்கும் வழி அறியாது அப்பாவியாக இருந்த அதர்ஷனின் தந்தையை உள் இழுத்து ஈடு செய்ய முன்று அவரின் வாழ்வையும் சீர்குழைத்தை இன்னும் இப்பூவுலகில் ஜனித்திராத அதர்ஷனின் வாழ்வையை திசை மாற்றி இருந்தார் அவர்....



ஒருநாள் முழு குடி போதையில் தள்ளாடி ஊர் பெயர் தெரியாத ஒரு இளைஞ்னின் தோளில் சரிந்து வந்த மகளை கண்டு ரத்தம் கொதித்து போனவர் அவனை விரட்டி அடித்து நீலிமாவை படுக்க வைத்தவர் தீர்க்கமான ஒரு முடிவுடன் கதிரவனை எதிர்பார்த்து காத்திருந்தார்...


காலை ஹெங் ஓவரில் தலையை பிடித்து கொண்டு எழுந்து அமர்ந்த நீலிமாவின் முன் ஒரு டம்பளருடன் நின்றிருந்தவர் இத முதல்ல குடிச்சுட்டு கீழ வா உனக்கிட்ட சில முக்கியமான விஷயம் பேச வேண்டி இருக்கு என கூறி கீழே சென்று ஹால் ஷோப்பை ஆக்கரமித்து கொண்டு மகளை எதிர் நோக்கி காத்திருந்தவர் அவள் வந்ததும் அவள் தலையில் அலுங்காமல் ஓர் இடியை இறக்கி விட்டு மிச்சம் இருந்த கொஞ்ச நஞ்ச ஹெங் ஓவரையும் களைத்திருந்தார் வேதநாயகம்...

அப்பா நீங்க டக்கு டக்குனு எடுக்கிற முடிவுக்கு எல்லாம் என்னால அடிபனிஞ்சு போக முடியாது முதல்ல எனக்கு அப்படி என்ன வயசு ஆகிறுச்சு இப்போ கல்யானம் பண்ணுற அளவுக்கு...

உன் வயசுல தான் உங்க அம்மா உன் பெத்துகிட்டாங்க அதுவும் இல்லாம இருபத்தி ஐந்து வயசு ஒன்னும் கல்யானம் பண்ணுறதுக்கு குறையான வயசு இல்லையேமா என நிதானமாக பதில் அளித்தவரை சலிப்பாக பார்த்தவள்...

சரி எனக்கு சின்ன வயசு இல்ல தான் ஆனால் ஏன் இந்த தீடர் முடிவு..

உன் வாழ்க்கை இப்படியே நீடிக்கிறதுல எனக்கு விருப்பம் இல்லமா என ஒரு வார்த்தையாக பதில் அளித்தவரை பார்த்தவளுக்கு தெளிவாக புரிந்தது இவர் ஒன்றை முடிவு எடுத்து விட்டு அதற்கு தன் சம்மதம் கேட்காது செய்தியாக தன்னிடம் விஷயத்தை பரிமாறுகிறார் என்று...

ஒரு வேலை உங்க முடிவுக்கு நா சம்மதிக்கலேனா...

சிம்பள் நா சம்பாரிச்ச செர்த்து வச்ச சொத்துல எதுவும் பங்கு கேட்க கூடாது என் மனசு பிராகாரம் எனக்கு புடிச்ச மாதிரி பண்ணுவேன் ஏன் மொத்தமா டிரஷ்ட்க்கு கூட எழுதி வைப்பேன் அதுல நீ பிரச்சனை பண்ண கூடாது...

அப்பா நீங்க என்ன கார்னர் பண்ணுறிங்க புரியுதா உங்களுக்கு...

தெரியலைமா ஆனா இதான் பைனல் பைன் ரெடி சீக்கிரம் நல்ல முடிவோட என் முன்னாடி வருவேன்னு நம்புறேன் என சுருக்கமாக முடித்து கொண்டு நகர்ந்திருந்தவர் பார்த்து பல்லை கடித்தவளுக்கு தந்தையில் முடிவுக்கு கட்டப்படுவதை தவிற வேறு வழி இருக்க வில்லை..

தனக்கு விசுவாசியாக அதே சமயம் சின்ன வயதிலேயே பிஸ்னஸில் முன்னேற துடிக்கும் விஸ்வதேவன் வர்மாவிற்கு உதிவு கரம் நீட்டி எழுப்பி விடுவதை போல் லவகமாக தன் தீட்டத்திற்குள் இழுத்து அனைத்தையும் மறைத்து திருமணம் முடித்து வைத்தார்..

விஸ்வதேவன் நீலிமாவின் விஷயத்தில் சற்று இடைவெளை விட்டு நிற்கும் வரை இருவருக்கும் வாழ்க்கை சீராக தான் சென்றது இருவருக்கும்...

ஆரமபத்தில் வேண்டா வெறுப்பாக ஒத்துக்கொண்ட நீலிமா விஸ்வதேவனின் ஆண்மையான அழகிலும் தொழிலில் வளர்ந்து வருவதில் அவர் கையில் புரண்ட காந்தி தாத்தா சிரித்த காகிதங்களையும் பார்த்து மோகம் கொண்டு அவளே நெருங்கி குழைந்து விஸ்வதேவனை மயக்கி தன் கட்டுக்குள் இழுத்து வைத்து கொண்ட போதும் வெளியில் தான்ரொன்றி தனமாக சுற்றி மகிழ்வதை இன்னும் நிறுத்தியிருக்கவில்லை அவள்...

நீலிமா கொஞ்ச மாதங்கள் கழித்து கருவுற்ற பின் இன்னும் கிடைத்த ராஜ உபசாரத்தில் கொழுத்து போய் தன் லீலைகளை தொடர்ந்து கொண்டிருந்த அந்த குடும்ப குத்துவிலக்கின் சுடர் விட்டு எரிந்த தீபத்தை அனைக்கவே விஸ்வதேவனுக்கு அம்மாதிரியான ஓர் சூழல் அமைந்து போனது பாவம் தான்..

மகள் கருவுற்று இருப்பதை அறிந்து கொண்ட வேதநாயகமும் தன் பிள்ளை திருந்தி விட்டது என்ற நம்பிக்கையுடன் எந்த குறையும் இல்லாம் அவளுக்கு தேவையானதை எல்லாம் வாங்கி கொடுத்து பார்த்து கொண்டவருக்கு சரிசமமாக தேவனும் நன்றாகவே தன் மனைவியை பார்த்து கொண்டார்...

திருமனத்திற்கு பின்னும் கூட மூக்கு முட்ட குடித்தாலும் மற்ற விஷயங்களில் தடம்புராளாது இருந்தவள் அதிலும் வெற்றிகரமாக சீர்குலைந்திருந்தாள்..


ஒருநாள் மிட்ங்கிற்காக ஹோட்டல் சென்று இருந்த விஸ்வதேவன் கண்கள் பார்க்க கூடாத காட்ச்சியை பார்க்க நேரிட்டதில் மனதளவில் சிதைந்து போனவருக்கும் அப்போதும் மனைவி மேல் சிறு நம்பைகை இருந்தது இல்ல இது என் நீலிமா வா இருக்காது என மனதோடு புலப்பி அவளுக்கு முன் பக்கம் வந்து நின்றவர் சுக்கலாக உடைந்து போனார் தன் மனைவியின் பதுக்கி வைத்த இன்னொரு முகத்தை கண்டு...

நீலிமா ஒரு ஆடவனுடன் பொது இடம் என்றும் பாராமல் அவன் இதழில் முத்தமிட்டு கொண்டிருந்ததை பார்த்து ஆத்தரம் பொங்கி ஏழ அவளை நெருங்கி இழுத்து தன் ஐவிரலையும் அவள் கன்னத்தில் பதித்து என்னடி பண்ணிட்டு இருக்க பொது இடத்துல ச்சீ நீ எல்லாம் ஒரு பொம்பளையாடி என்றவரை என்னி இரண்டு நொடி அதிர்ந்து பார்த்தவள் பின் அவனை தள்ளி நிறுத்தி...

நக்கலாக இதழ் வளைத்து என்ன கேட்ட நான் பொம்பளையானு தான கேட்ட என கேட்டு சிரித்தவளை அருவருப்பாக பாரத்தவரிடம் முதல்ல நீ ஒரு ஆம்பளையானு பாருடா ஜஸ்ட் என் வயித்துல புள்ள வந்துட்டா மட்டும் நீ ஆம்பளையா என்ன மத்தடி எல்லாதுலயும் நீ எலிசபள் மென் தானா உன்னால என்னைக்காவது என்ன திருப்தி படுத்த முடிஞ்சுதா இல்லை என கேட்டு நிறுத்தியவளுக்கு தான் மாட்டி கொண்டோம் என்ற எந்த உறுத்தலோ பயமோ இன்றி நின்று கேள்வி கேட்டவளிடம் அவன் தான் கூனி குறுகி போனான்...


அப்பறம் ஏன் என்ன கல்யாணம் பண்ணி என்ன ஏமாத்தி துரோகம் பண்ண..

எல்லாம் எங்க அப்பாவால இல்லனா உணர்ச்சி இல்லாத உன்கூட வாழனும்னு எனக்கு என்ன அவசியம் சொல்லு பார்போம் என கூறியவளின் வார்த்தையில் தன் மாமனார் மேல் ஆத்திரம் போங்கியது எழுந்து தாண்டவம் ஆடியது...

இதற்கு மேலும் அவளே தெடர்ந்து தயவு செஞ்சு எனக்கு டிவோர்ஸ் கொடு இதுக்கு மேல என்னால உன்கூட சர்வைவ் பன்ன முடியாது நா ராக்கேஷ் கூடவே போறேன் என கூறிவளை வெறுமையாக பாரத்து நகர்ந்திருந்தான் அவன்...

மாட்டி கொண்ட பின்னும் திமிராக எதிர்த்து நின்று கொஞ்சமும் சங்கோஜமோ பயமோ இன்றி மாறாக தன்னையே கூனி குறுக வைத்தவளிடம் அதற்கு மேல் வாழ்ந்தாலும் செத்தாலும் உன்னோடு தான் என வாசனம் பேசி கொண்டு நிற்பது எல்லாம் சுத்த மடத்தனம் என்பதை உணர்ந்து அவள் கேட்ட டிவோர்ஸை முழு மனசோடு விரும்பியே வழங்கி இருந்த விஸ்வதேவ வர்மா ஏதோ ஒன்றை மனதில் நினைத்து கொண்டு குழந்தைய பெத்து கொடுத்த அப்பறம் நீ இங்க இருந்து போகலாம் என்றவன் சொல்லுக்கு இனங்க வேண்டிய கட்டாயத்தில் சம்மதித்திருந்தாள்...

கருவில் அனைவராலும் கொண்டாடி வளர்க்கபட்ட குழந்தை பிறந்த பின் அதை சீண்டி பார்க்க கூட ஆள் இன்றி போனதில் தாயுள்ளம் எந்த விதத்திலும் துடிக்காது சாதரனமாக பிள்ளையை பெற்று கொடுக்க வேண்டிய என் கடமை இத்தோடு முடிந்தது என பையோடு அவள் சேர ஆசைப்பட்ட இடத்திற்கு போய் சேர்ந்திருந்தாள் நீலிமா...

கவலை அழுத்தி தள்ளிய போதும் குழந்தையையும் பிஸ்னஸையும் ஒருசேர பார்த்து கொண்ட விஸ்வதேவன்....கவலையின் பிடியில் இருந்து தப்பித்து கொள்ள என்னி அனுதினமும் போதையின் கறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்...

வேதநாயகம் மகளின் செய்து வைத்த செயலை நினைத்து விஸ்வதேவனிடம் மன்னிப்பு கேட்க்க பல முறை முயன்று ஒருவழியாக கேட்டு விட்டவரிடம் விரக்தியான ஓர் சிரிப்பை உதிர்த்து மன்னிப்பு கேட்காதிங்க நா அத மறக்கனும்னு நினைக்கிறேன் முடிஞ்சா இதுவே நீங்க என்ன தேடி வந்து பாக்குறது கடைசியா இருந்தா கொஞ்சம் நல்லா இருக்கும் என கூறி நகர்ந்தவனிடம் எத்தனை மன்னிப்பு கேட்டாலும் தன்‌ மகள் செய்த துரகத்தை சரிக்கட்ட முடியாது என உணர்ந்தவர் அதற்கு மேல் விஸ்வதேவனை சந்திக்க வந்ததும் இல்லை அதர்ஷனை தாத்தா என்ற முறையில் கண்டு கொண்டது இல்லை...

நீலிமாவுடன் நாட்களை கடத்திய வீட்டில் இருக்க பிடிக்காமல் அதர்ஷனோடு வேறு வீடு குடி பெயர்ந்த போதும் ஒரு ஆளாக கூட தேவநாயகம் கலந்து கொள்ளாது முறிந்த உறவை அப்படியே விட்டு சென்று விட்டார்...

அதன் பிறகு கிடத்த சண்முகவேலனின் நட்பினால் பீஸ்னஸை திறம்படவே நடத்தி வாழ்க்கையை குறுடாம் போகில் நகர்த்தி கொண்டிருந்தவர் குடியை மட்டும் விட்டார் இல்லை...வேலனும் எத்தனை எடுத்து கூறியும் ஒரு கட்டத்தில் அதிலேயே அடிமையாகிவனுக்கு மீண்டு வர முடியாது போனது...

இதில் முழுக்க முழுக்க பாதிக்கப்பட்ட அந்த சிறிய பாலகனுக்க விவரம் தெரியும் வரை கூட சற்று மிஞ்சி இருந்த நிம்மதி விவரம் தெரிந்த பின் முற்றும் உருகுலைந்து போனது...

தாய் பாசத்திற்கு ஏங்கிய பிள்ளை தாயின் சுயருபத்தை அறிந்த கொண்ட பின் தாயே தேவை இல்லை என்ற முடிவுக்கு வந்தவனுக்கு தந்தையும் அரவனைப்பும் குன்றி போனதில் சுயம்புவாக வளர வேண்டிய கட்டாயத்தில் அவனாகவே தன்னை வளர்த்தி கொண்டான்...

இவனை கண்டாள் இகழ்ச்சியில் வளையும் இதழ்களை கண்டு பிஞ்சு இதயம் இறுகி கனத்து போனது..


பாசம் என்ற ஒன்று இல்லவே இல்லை என விதி அழுத்தமாக எழுதி வைத்து அவன் கதையை தொடங்கி வைத்ததில் அதன்படியே அவனும் வாழ்ந்து பழகி கொண்டான்...விஸ்வதேவன் சிறிது நாளில் முக்கிய மீட்டிங்கிர்காக வெளிநாடு சென்ற நேரம் பிளைட்டு இன்ஜினில் ஏற்பட்ட ஏதோ ஓர் கோளாரில் பிளைட்டோடு அவரின் உடலும் வெடித்து சிதறி உயர் நீத்திருந்தார்....


அவரின் இழப்பு தன்னை பதிக்கவில்லை என்று வெளியே வேரப்பாக நின்றாலும் தனக்கு ஆதரமாக இருந்த ஒரு உறவும் இல்லாமல் போனதில் துவண்டு தான் போனான்..நீலிமா அன்று சென்றதோடு சரி என்பதால் அவளுக்கு இந்த விஷயம் வருத்தம் எல்லாம் கொண்டிருக்க வாய்ப்பு இல்லையே...

அதன் பிறகு அதர்ஷன் மொத்தமும் சண்முகவேலன் தான் அவனின் முழு பொருப்பிற்கு வந்தான்...

ஹாஸ்டலிலேயே வளர்ந்தான் அவனின் வயதிற்கு மீறி பக்குவப்பட்டு போனவனுக்கு தன்னால் ஆளுமையும் கம்பிரமும் வந்து ஒட்டி கொண்டதின் இனைப்பாக இறுக்கமும் கொண்டு யாரையும் நெருங்க விடாது தனித்து நின்றான்...

சன்முகவேலனின் பொறுப்புக்கு கீழ் வந்த பின் அடிக்கடி நேஹாவை பார்க்க நேரிட்டாலும் அவளோடு அத்தனை ஒட்டுதல் இன்றி விலகியே இருந்தான்...

பிள்ளையின் பொறுப்பை எடுத்து கொண்டவருக்கு அந்த பிள்ளைக்கு அரவனைப்பையும் பரிவையும் காட்ட தெரியாததில் பீஸ்னஸின் யுக்திகளை மட்டும் தெளிவாக சொல்லி வளர்த்திருந்தார்....

சன்முகவேலனும் கிட்டதட்ட நீலிமாவின் தந்தை போல் தந்தையின் பதவியில் இருந்து சறுக்கி தான் போனார் நீலிமாவின் அளவிற்கு இல்லை என்றாலும் திமிரிலும் பிடிவாத்திலும் நீலிமாவின் சாயல் காட்டியதில் அதர்ஷன் அவளை பெரிதாக கண்டு கொள்ளாது விலகி நின்றவனின் கருத்தை தன் மீது பதிக்க கையை வெட்டி கொண்டு ஆரப்பாடம் செய்தவள் அதர்ஷனிடம் எப்போதும் என்னை மட்டுமே காதலிக்க வேண்டும் என சத்தியம் வாங்கி கொண்டது நிம்மதி பெற்றது ரொம்ப நாட்கள் நிலைக்கவில்லை...

அதர்ஷனின் கதையில் சைட் கெரக்டராக கூட இடம் பிடிக்காத நேஹா அஞ்சலியிடம் இன்னும் நான்கு ஐந்து பிட்டுகளை கோர்வையாக கோர்த்து சொன்ன கதையை நம்பியிருந்தாள் அஞ்சலி...


இது எல்லாம் தெரிஞ்சுகிட்ட அப்பறம் நா துடிச்சு போய் அதர்ஷனை அரவனைச்சுகிட்ட அப்போ என்னையவே அவன் உலகம்னு சொல்லி சுற்றி வந்தவன் நீ வந்த அப்பறம் மொத்தமா விலகி போனதுக்கு நீ தான காரனம் என் மனசுல புள்ளா அதர்ஷன் நிறம்பி வழியும் போது அவனை என் மனசுல இருந்த துடைச்சு தூக்கி எறிய முடியல அஞ்சலி அதுனால பாதில வந்த உனக்கு என்னவிட அதகமா ஒன்னும் வலி இருக்காதுல அதுனால போய்டு பீளிஸ்...
நா உன்கிட்ட கேட்குறத பிச்சையா கூட வச்சுகோ நா எனக்கு அதர்ஷன் வேணும் என்றவளை...

விழியில் பொங்கி கன்னத்தை தொட்ட கண்ணீரை துடைத்தபடி பார்த்தவள் ஏதோ கூற வரும் முன் நீலிமாவை பழி வாங்க அதர்ஷன் எடுத்த முயற்ச்சில நீ ஒரு அங்கம் அவ்வளவு‌ தான் என்ற பின் கல்லாக சமைந்து போனவள் அடுத்து அடுத்து மூளை இட்ட கட்டளையில்‌ எதையும்‌ சிந்திக்காது செயல் படுத்தியிருந்தாள் அஞ்சலி...

தன்னை வெளியே கொண்டு வந்து அவர் அவர்களின்‌ வன்மத்தை தீர்த்து கொள்ளதான் இத்தனை நாடகம் என்பதை அறியாதவள் அவளின் பாதி உன்மையையும் பொய்யையும் நம்பி அதர்ஷன் வாழ்வில் இருந்து வெளியேற துனிந்து விட்டிருந்தாள்....

தொடரும்....
 
Last edited:
  • Like
Reactions: Joss uby