• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கி 12

sankareswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 31, 2024
35
40
18
Chennai
அத்தியாயம் 12

தன் தோழி அகலி கூறியதைக் கேட்டு அதிர்ந்து விட்டாள் வந்தனா .

"என்னடி சொல்ற வாடகை வீடு வேணுமா ? இவ்வளோ பெரிய வீட்டுல இருந்துக்கிட்டு உனக்கு எப்படி வாடகை வீடு செட் ஆகும். அதுவுமில்லாம இப்ப நீ கன்சிவா இருக்கே, இந்த நேரத்துல புதுசா ஒரு இடம் உனக்கும் நல்லதில்லை குழந்தைக்கு நல்லதில்லை. சொன்னா கேளு இந்த குழந்தை பிறக்கிற வரைக்கும் நீ இங்கேயே இரு அது தான் உனக்கு நல்லது "

"இல்லடி என்னால இங்க இருக்க முடியாது "

"சாரை நெனச்சு யோசிக்கிறையா, இந்த வீட்ல உனக்கு பங்கு இருக்கு தானே அப்புறம் என்ன ?"

"அவன நினைச்சு யோசிக்கிற அளவுக்கு பெருசா ஒன்னும் இல்ல. ஆனா அவன் என்னை வார்த்தையால ரொம்பவே காயப்படுத்திட்டான். நான் தெரிஞ்சே வேற ஒருத்தன் கூட உறவுல இருந்த மாதிரி எல்லாம் பேச அது என்ன ரொம்ப நோகடிச்சிருச்சி. ஆனா இப்ப அதெல்லாம் மறந்து போயி அவன் என்கிட்ட நெருங்கி வர முயற்சி பண்றான். ஆனா இந்த குழந்தை அவனுக்கு தேவையில்லை. இத அபார்ஷன் பண்ணனும்னு சொல்றான். இதனால என் உயிருக்கு ஆபத்து வந்தாலும் நம்ம பார்த்துக்கலாம். இனி நம்ம வாழ்க்கையில குழந்தையே வேண்டாம் அப்படின்னு கூட சொல்றான் "

"எதுக்கு சார் இப்படி எல்லாம் பேசுறாரு. என்னால புரிஞ்சுக்கவே முடியல. உன்னை பொறுத்த வரைக்கும் அவர் எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்கக் கூடாது. அவருக்கு நீ வேணும் அப்படின்னு நினைக்கிறாரு. ஆனால் அவர் குடும்பத்தை நினைச்சி பார்த்து கூட உன் வயித்துல உள்ள இந்த குழந்தை தேவையில்லன்னு நினைக்கலாம். உனக்குன்னு ஒரு வருங்காலம் இருக்குல்ல "

"எப்போ இது என்னோட வயித்துல உதிர்க்க ஆரம்பிச்சதோ அப்பவே எல்லாமே முடிஞ்சு போச்சு. இதுக்கு மேலையும் நான் மகிழ் முகத்தை பார்த்துட்டு என்னால இருக்க முடியாதுன்னு தான் நான் உன்கிட்ட அப்படி சொன்னேன் "

"சரிப்பா நான் எங்க அப்பா கிட்ட பேசுறேன். எங்க வீட்ல மேல மாடியில் ஒரு ரூம் இருக்கு அண்ணா தான் எப்பவுமே ஸ்டே பண்ணுவான். இப்ப அண்ணா ஃபாரின் போயிட்டான். அந்த ரூம் சும்மா தான் இருக்கு. நான் வேணா அப்பாகிட்ட கேட்டு ஓகேன்னா அங்க ஸ்டே பண்ண வைக்கிறேன். நீயும் என் கூட இருந்த மாதிரியே இருக்கும்ல " என்றதும் தன் தோழியின் கரங்களைப் பற்றிக் கொண்டவளோ,

"ரொம்ப தேங்க்ஸ் எப்படியாவது உங்க அப்பாவை சம்மதிக்க வை. எனக்காக பிளீஸ் " என்று மன்றாடினாள்.

பின் அவளுக்கு தேவையான இரவு உணவினை எடுத்து வைத்து விட்டு நேரம் ஆகிவிட்டதால் கேப் ஒன்றை புக் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பினால் வந்தனா.

அவள் சரியாக கீழே கேப்புக்காக காத்திருக்கும் நொடி தான் தன் பிளாட்டிற்கு வந்துச் சேர்ந்தான் கவி மகிழன். காரில் இருந்தவாறு சாலையில் கேட்டின் ஓரமாக நின்று வந்தனாவை கவனித்து விட்டான்.

அவள் நிச்சயம் தோழியான அகலியை பார்க்கத்தான் வந்திருப்பாள் என்பது உணரவே காரினை ஓரமாக நிறுத்தி அதிலிருந்து இறங்கி அவள் அருகே வந்தான்.

காலடி சத்தம் உணர்ந்தே திரும்பியவளோ, 'இவர் எதுக்கு இப்போ இங்கே வராரு ஏதாவது கேட்பாரே ? என்ன சொல்ல ' என யோசித்தவாறு நின்றாள்.

அவள் நினைத்ததுப் போலே, "உன் பிரெண்டை பார்த்துட்டு போகலாம்ன்னு வந்தியா ? ஏதாவது சொன்னாளா ? இப்பயெல்லாம் அரக்கி மாதிரி நடந்துக்கிறா. சொல் பேச்சு எதுவுமே கேட்கவே மாட்டிக்கா. நானே ஏதாவது பண்ணி கொடுத்தாலும் வேண்டாம்ன்னு சொல்லி ஒதுக்கி வச்சிடுறா. தப்பு பண்ணதெல்லாம் அவ, ஏதோ நான் தப்பு பண்ண மாதிரி என்னை அவாய்ட் பண்ணிக்கிட்டு இருக்கா. எதுக்காக இப்படி பண்றா, எதுவும் உன் கிட்ட சொன்னால ? " என்றுக் கேட்கவே,

"சார் தப்பு பண்ணது அவ தான் நான் ஒத்துக்குறேன். ஆனாலும் நீங்க பேசுன வார்த்தைகள் அவளை ரொம்ப காயப்படுத்திட்டதுன்னு சொன்னா. அதனால இப்ப நீங்க அவ கிட்ட இருந்து தள்ளி இருந்தா தான் உங்க லைஃப்க்கு நல்லதுன்னு எனக்கு தோணுது. எப்படியும் அவ ஒரு முடிவு எடுத்துட்டா அதுல இருந்து கீழே இறங்கி வரமாட்டே சார். உங்க வாழ்க்கை நீங்க வீணாக்காதீங்க "

"என்ன நீயும் உன் பிரெண்டு கூட சேர்ந்துக்கிட்டு இப்படி பேசலாமா ? நான் இருக்கிற இதே சூழ்நிலை கௌஷிக் இருந்தா உன்ன விட்டுட்டு போவானா, இல்ல அவன் விட்டுட்டு போன உன்னால நிம்மதியா இருக்க முடியுமா சொல்லும்மா ? "

"சார் எதுக்கு இப்படி எல்லாம் பேசுறீங்க ?"

"வேற என்ன எப்படி பேச சொல்ற நீ ? அவ கூட நான் ரெண்டு வருஷமா லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்ல இருந்து இருக்கேன். அவள பத்தின எல்லா விஷயங்களும் எனக்கு தெரியும். அப்படி இருக்கும் போது ஜஸ்ட் எவனோ ஒருத்தன் கூட ஒரு நாள் உறவுல இருந்துட்டா. ஆனா என் கூட அவ என்ன முடியாத அளவுக்கு ஸ்டே பண்ணி இருக்கா. எனக்கு இதை விட அது பெருசா தெரியுமா ? நான் அதை ஒரு சிம்பிளான விஷயமாகத்தான் நினைச்சுக்கிட்டு இருக்கேன். அவ தான் தேவை இல்லாம அந்த விஷயத்தை பெருசா ஊதி ஊதி அவன் யாருன்னு கண்டுபிடிக்கணும் தான் முயற்சி பண்ணி, அவ உடம்பு அவளே கெடுத்துக்குறா. அவ கண்டு பிடிக்கட்டும் நான் இல்லன்னு சொல்லலை. ஆனா இந்த குழந்தையை அபார்ஷன் பண்றதுல என்ன பிரச்சனை ?டெக்னாலஜி ரொம்பவே வளரந்துட்டு வேற டாக்டர் கிட்ட போகலாம். இந்த சிட்டில பெஸ்ட் டாக்டர் நான் கூட அரேஞ்ச் பண்ணி கொடுத்துடுவேன் அவளுக்கு. அழகா அபார்ஷன் பண்ணிட்டு ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்துட்டு போகலாம். அத விட்டு போட்டு அப்பா யாருன்னே தெரியாத ஒரு குழந்தையை இந்த உலகத்துக்கு கொண்டு வந்தா அந்த குழந்தைக்கு இவளால சந்தோஷத்தை கொடுத்தாலுமே வருங்காலத்தில் அப்பா யாருன்னு அந்த குழந்தைகிட்ட யாராவது கேட்கும் போது அந்த குழந்தைக்கு எவ்வளவு ஹேர்ட் ஆகும் "

"சார் நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க, நீங்க ஏன் அந்த குழந்தைக்கு அப்பாவா இருக்க கூடாது ? உங்களுக்கு அகலியை ரொம்ப புடிச்சிருக்கு. அவ கூட லைப் டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு நினைக்கிறீங்க, அவளை லைப் பார்ட்னரா ஏத்துக்க கூட உங்களுக்கு மனசு இருக்கு. அப்படி இருக்கும் போது அவளுக்காக அந்த குழந்தையை நீங்க ஏத்துக்கலாம்ல. அந்த குழந்தைக்கு அப்பாங்குற பெயரை நீங்க கொடுக்கலாம்ல "

"அது எப்படி என்னால முடியும். நான் ஒத்துக்கிட்டாலும் எங்க வீட்ல இருக்குற எல்லாரும் ஒத்துக்கிடுவாங்களா. கரு உருவாகி வளர்ந்துக்கிட்டு இருக்கு அதை போய் நான் எப்படி அப்பாவா ஏத்துக்க முடியும் ? என்னால இதை ஒரு பொழுதும் ஒத்துக்கவே முடியாது. சொல்லப்போனால் எனக்கு இந்த கல்யாணம் குழந்தை குட்டி பிடிக்காது. இதனை தெளிவா சொல்லிட்டேன். எங்க ரெண்டு பேருக்குமே அப்படித்தான். ஆனால் இந்த சிச்சுவேஷன்ல வந்து நாங்க நிற்கும் போது அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளுக்கு ஒரு வாழ்க்கையை கொடுக்கலாம், எனக்கும் ஒரு பெஸ்ட் துணை கிடைக்கும். ரெண்டு பேரோட இடத்துல இருந்து தான் நான் பேசினேன். ஆனா அவளுக்கு அது புரியல. இப்ப அவ என்ன தான் உன் கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கா "

"அவ வாடகை வீடு எதாவது பார்க்க சொன்னா சார் நானும் சரின்னு சொல்லி இருக்கேன். அவளால இங்கே இருக்க முடியலையாம். அவளுக்கு இங்க இருக்கிறது என்னவோ மாதிரி இருக்குன்னு பீல் பண்றா. தயவு செஞ்சி இதை பத்தி அவ கிட்ட பேசி சண்டை போடாதீங்க சார். ஏற்கனவே அவ ரொம்ப மனசு ஒடிஞ்சு போய் இருக்கா. அவளுக்கு இன்னும் ஒன் மந்தாவது ரெஸ்ட் ரொம்ப தேவை. அதுக்கு அப்புறம் அவ கிட்ட எதா இருந்தாலும் பேசுங்க. அது வரைக்கும் அவளுக்கு கொஞ்சம் இடம் கொடுங்க " என கூறிக் கொண்டிருக்கும் போதே அவள் புக் செய்த டாக்ஸி வந்து நின்றது.

"நான் கிளம்புறேன் " என்க, அவனும் சரி என்றதும் வந்து நின்ற டாக்ஸியில் ஏறி அங்கிருந்து கிளம்பினாள்.
சில மணி நேரம் அங்கேயே நின்றவனும் அவள் பேசிய வார்த்தையையும் நினைத்தவாறே அங்கிருந்து நகர்ந்தான்.

தனியாகச் செல்லப் போகிறேன் என்று தன்னிடமே முன்பு கூறிவிட்டால் தான். அது ஒன்று புதிதான விஷயமல்ல. ஆனால் வந்தனா தன்னிடம் கேட்ட கேள்வி அவனை யோசிக்க தான் வைத்தது.

குழந்தை இல்லாமல் ஒவ்வொருவரும் இந்த நாட்டில் படும் வேதனை அவன் கண்முன்னே அறிந்து ஒன்று தான். அவன் குடும்பத்திலேயே அவனின் அண்ணனுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் கடந்து இருந்தது. அண்ணிக்கோ இன்னும் ஒரு குழந்தை கூட இல்லை அவர்கள் ஏறி இறங்காத மருத்துவமனை இல்லை. தன் அன்னையும் வசைபாடாத நாளில்லை. ஒவ்வொரு நாளும் கண்ணீர் கடலில் குழந்தை இல்லாமல் தவிக்கும் தன் அண்ணி, அண்ணனை அவன் அடிக்கடி கண்டதுண்டு. தான் அப்படி இருக்கும் போது தானாக உதித்தெழுந்த ஒரு குழந்தையை அழிப்பது என்பது தவறு புரிந்தது. எங்கு குழந்தை தேவைப்படுமோ அந்த இடத்தில் இல்லாமல் தேவைப்படாத ஒரு இடத்தில் இருந்தால் என்ன செய்ய முடியும் ?

அவனால் இப்பொழுது முடிவெடுக்க முடியாத நிலையில் தன் வீட்டுக்கு வந்துச் சேர்ந்தான். அப்பொழுது தான் வந்தனா கொடுத்த உணவினை முடித்து விட்டு வாஷ்பேஷனின் அதனை வைத்து இரவு மாத்திரையை போட்டு முடித்து அறைக்குச் செல்ல அகலி நினைக்க அவள் கதவில் கை வைத்த நொடி இங்கு வாசல் கதவினை திறந்தான் கவி மகிழன்.

ஒரே வீட்டில் இருந்தாலும் இருவருக்கும் பேச்சுவார்த்தை நடக்கும் போதெல்லாம் சண்டை மட்டும் தான் வரும். அந்த சண்டையை இப்பொழுது இருவருக்குள் ஒரு விரிசலை கொடுத்திருந்தது. எப்பொழுது இந்த பிரச்சனை தீருமோ என்ற எண்ணம் தான் அகலியின் மனதில். அவனின் அணைப்பினை வெகுவாய் எதிர்பார்த்தது. அவனின் ஆறுதலும் துணையும் தனக்கு தேவை என அவளின் மனம் நினைக்க அதே போல் தான் மகிழன் மனமும்.

முன்பெல்லாம் அலுவலக விட்டு வந்த நொடியை இருவரும் ஒருவரின் ஒருவர் அணைப்பில் இருந்து கொள்வார்கள். ஒன்றாகவே உணவு சமைப்பது, அடுத்த தங்களின் பிளான் பற்றி பேசுவது இப்படி அவர்களின் நேரங்கள் எல்லாம் ஒன்றாகவே தான் செல்லும். ஆனால் இப்பொழுது அப்படி இல்லை.

தங்களின் வாழ்க்கையே திடீரென்று இருட்டைந்து போக இருவரும் தவித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலைக்கு இவர்களைக் கொண்டு வந்த அந்த இருளுக்குள் இருக்கும் ஒருவனும் இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்து திமிரோடு நடமாடிக் கொண்டிருந்தான்.

இவர்கள் இருவரும் அறியாத ஒன்று அவன் ஒவ்வொரு நொடியும் தங்களை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான் என்று.
தான் காரணமாக இருந்து தன்னால் இப்பொழுது ஒரு குழந்தையும் அகலியின் வயிற்றில் வளர்கிறது என்பதை அவளை பின் தொடர்ந்து செல்லும் அந்தக் கயவன் கண்டு வெற்றிக் களிப்பில் இருந்தான்.

அவனின் மனமோ பெருமிதப்போடு இருந்தது. இவர்கள் என்ன முயற்சி செய்தாலும் தன்னை கண்டுபிடிக்க முடியாது என்று ? இவர்கள் முயற்சி செய்வதற்கு முன் தானே இவர்களை விளையாட வைத்து விட்டு முன் செல்ல வேண்டும். அந்த நாளுக்காக தான் ஒவ்வொரு நொடியும் காத்திருந்தான். அந்த நாள் வருவதற்கு இன்னும் சில நாட்கள் இருக்கிறது என்பதை அவன் அறிந்திருந்தான் அதற்கு காரணமான அனைத்து ஆதாரங்களையும் தன் கைகளில் திரட்டி வைத்திருந்தான்.
அந்த ஒரு நாள் இரவு தன்னோடு அகலி இருந்தாள். அவளைப் பொறுத்தவரை அவள் மகிழனோடு இருந்தாக நினைத்து விட்டாள். ஆனால் அந்த இரவு அவள் கொடுத்த அந்த தித்திப்பு போதைக்கு அடிமையாகி போகும் நிலைக்கு அவனை தள்ளியது. இருந்தும் அவன் இந்த விஷயத்தில் தீவிரமாகத் தான் இருந்தான். தான் பழி வாங்கும் படலம் என்று முற்றுப்புள்ளியை எட்டுமென்று.

சுற்றிலும் அகலியின் புகைப்படம் தொங்க விடப்பட்டிருக்க கையில் அவளோடு படுக்கையில் இணைந்தவாறு இருந்த புகைப்படம் ஒன்றை வைத்தவாறு மற்றொரு கையில் சிகரெட்டை ஊதிக் கொண்டிருந்தான் சாய் குமார்.



தொடரும்...