• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கி - 2

sankareswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 31, 2024
35
40
18
Chennai
அரக்கி - 2

நாயகன், நாயகி அறிமுகம்


மருத்துவமனைக்கு தனியாக வந்திருந்த அகலி அங்கே ஏற்கனவே இருக்கும் ஆட்களோடு அவளும் இருக்கையில் அமர்ந்து காத்திருந்தாள். அவளுக்கு உள்ளமெல்லாம் படபடப்பு தன் பெற்றவர்களுக்கு இந்த விஷயம் தெரியாது தெரிந்தால் அவர்கள் தன்னை எப்படி நினைத்துக் கொள்வார்கள் ? தன்னை நம்பி இந்தியாவில் தங்க விட்டாலும் தான் கருவுற்றிருந்த விஷயம் தெரிந்தால் அதை விட காரணம் மகிழன் என்று தான் உறுதியாக இருந்தாலும் அவன் மாட்டேன் என்று கூறுகிறான். அவன் கூறிய கூற்றிலும் பொய்யில்லை உண்மையும் இருக்கிறது. தன்னை பெற்றவரிடம் தான் எப்படி இதனை நிரூபிக்க முடியும் ?

"இங்கே யார் அகலிகை டோக்கன் நம்பர் இருபத்தி நாலு யாரு ?" என்றுக் கேட்கவே,
அப்பொழுது தான் அவளின் அருகில் இருந்த ஒரு பெண், " நீங்க தான டோக்கன் நம்பர் இருபத்தி ஒன்பது. உங்களைத்தான் கூப்பிடுறாங்க " என அவள் தோள்பட்டையில் கரம் வைத்து உழுக்கவே இந்த உலகத்திற்கு வந்தாள்.

மருத்துவர் அறைக்குள் நுழைய, ஜீன்ஸ் பேண்ட், வையிட் கலர் டீ ஷர்ட், லூஸ் ஹேரில் மாடர்ன் ரதியாக தன்னைக் காண வந்த அந்த பெண்ணைக் கண்டார்.

"சிட் " என்றதும் முன்னே இருந்த இருக்கையில் அமர, " சொல்லுங்க என்ன பிரச்சனை ?" என்றார்.

"டாக்டர் எனக்கு பீரியட்ஸ் தள்ளி போயிருக்கு கிட்ல வச்சு செக் பண்ணும் போது பாசிட்டிவ் வந்தது. அதனால தான் உங்க கிட்ட எதுக்கும் கன்சல் பண்ணிக்கலாம் அப்படின்னு வந்தேன். "

"அப்படியா நல்ல விஷயம் தான் நான் சில டெஸ்ட் எழுதி கொடுக்கிறேன். அதை மட்டும் எடுத்துட்டு வந்துருங்க " என்று எழுதிக் கொடுக்கவே, அவளும் அதனை வாங்கிக் கொண்டு வெளியேறினாள்.

டெஸ்ட் எல்லாம் கொடுத்து விட்டு அங்கிருந்த ஹாலில் ஒரு இருக்கையில் தளர்வோடு அமர்ந்தாள். காலையிலிருந்து இரு முறை வாந்தி வேறு எடுத்து விட்டதால் அவளுக்கு சோர்வாக இருந்தது. அதுவும் மருத்துவமனைக்கு தனியாக வந்தது அதுவே முதல் முறை. இதற்கு முன் உடல் நிலை சரியில்லை என்றாலும் கூட மெடிக்கலில் ஏதாவது மாத்திரை வாங்கி போட்டுக்கொண்டு தன்னை சரிபடுத்திக் கொள்வாளே தவிர ஒரு நாளும் மருத்துவமனை பக்கம் எட்டிப் பார்த்ததே இல்லை. பெற்றவர்கள் இருவரும் வெளி நாட்டில் இருக்க அவர்களை கவனிக்கும் பொறுப்பும் இல்லை என்பதால் சுதந்திர பறவையாக தான் சுற்றி வந்தாள்.

ஆனால் இன்று அந்த சுதந்திர பறவையின் இறக்கையை ஒடித்து கூட்டுக்குள் ஒடுக்கிய உணர்வு தான் அகலிக்கு மனதால் தோன்றியது.

அவளின் கைபேசி ஓசை எழுப்பியது அன்று அவளுக்கு முக்கியமான போட்டோ சூட் ஒன்று இருந்தது. அதனை மறந்து தான் மருத்துவமனையே வந்திருந்தாள். அலுவலகத்தில் கூட இன்று தான் விடுமுறை எடுக்கப் போகிறேன் என்று ஒரு வார்த்தை கூட கூறவில்லை. அவளுக்கு முதலில் தான் இதனை உறுதி செய்ய வேண்டும் என்பது மட்டும் தான் மனதில் இருந்தது.

கவி மகிழன் தான் அழைத்திருந்தான். இருவரும் சேர்ந்து இருந்த புகைப்படம் தான் கைபேசி திரையில் ஒலித்துக் கொண்டிருந்தது. அந்த அழைப்பை கண்டதுமே உள்ளுக்குள்ளே அப்படி ஒரு எரிச்சல். அவன் காலையில் பேசிய வார்த்தைகளோ இன்னும் நீங்காது ஒலித்துக் கொண்டு தான் இருந்தது. இரு முறை அடிக்கவே மருத்துவமனை என்பதால் அதனை எடுத்தாள்.

"எங்க தான் போயிட்ட எனக்கு முன்னாடி வீட்ல இருந்து கிளம்புன இல்ல. இன்னும் ஆபீஸ் வராம இருக்கே. இன்னைக்கு மறந்துட்டியா என்ன ஒரு போட்டோ சூட்டுக்கு போகணும். நேரம் ஆச்சு இந்த டைம் போனா தான் நம்ம கரெக்டா ஈவினிங்குள்ள அந்த இடத்துக்கு போக முடியும். ஆனா நீ இவ்வளோ நேரம் ஆகி இன்னும் ஆபீஸ்க்கு வராம இருக்க ? அப்படி என்ன தான் பண்ணிட்டு இருக்க ?" என்று அதிகாரமோடு கவிமகிழன் கேட்டான்.

கவிமகிழனை பொறுத்தவரை வேலையில் எப்பொழுதுமே முதல் ஆளாக எந்த ஒரு தவறும் இல்லாத சிறப்பாக செய்ய வேண்டும் அதற்காக அவன் உறக்கம் உணவு அனைத்தையும் கூட மறப்பான். கஷ்டப்பட்டு இந்த நான்கு வருடங்களில் மிகப்பெரிய பிரபலமாக தன் டிசைனிங் மட்டும் ஃபோட்டோ ஸ்டுடியோவை உருவாக்கி வைத்திருந்தான். செலிப்ரட்டி போட்டோஸ் மற்றும் அனைத்து விதமான சுப நிகழ்ச்சிகளுக்கும் போட்டோ எடுப்பது வெப்சைட் டிசைனிங் செய்வது இப்படி அவனாக ஒரு வட்டத்தை உருவாக்க அதில் மகிழனோடு அகலிகை இன்னும் ஒரு சிலர் இருந்தனர். இவர்கள் இருவரும் சம பங்கு தங்களின் பணத்தினைப் போட்டு தான் இந்த கம்பெனியை முதலில் தொடங்கி வைத்தனர். அதன் பிறகு அகலியை விட பல மடங்கு தன் திறமையை வெளிக்காட்டி பிரபலம் ஆக்கியது என்னவோ மகிழன் தான். அதனாலே அவர்களின் அலுவலகத்திற்கு அவன் தான் முதலாளி அவன் என்ன கூறினாலும் மற்றவர்கள் கேட்க வேண்டும் இதில் அகலிகையும் ஒருத்தி தான்.

"நான் ஹாஸ்பிடல் வந்து இருக்கேன்"

"அங்கேயேன் போன. எதுக்கு என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்ல. லீவுன்னா மொதல்ல இன்ஃபார்ம் பண்ண மாட்டியா ? இன்னைக்கு அந்த போட்டோ சூட்டுக்கு நம்ம போகலைன்னா எவ்வளவு லாஸ் ஆகும் உனக்கு தெரியும் தானே ?" என்று அவள் தன்னிடம் காலையில் கூறிய விஷயத்தை மறந்து தான் போயிருந்தான்.

"நீ தெரிஞ்சு தான் பேசுறியா இல்ல தெரியாம பேசுறியா. இப்ப எனக்கு ஒன்னும் அது முக்கியம் கிடையாது. நான் பிரக்னன்சி கன்பார்ம் பண்ணிட்டு தான் எதா இருந்தாலும் என்னால பண்ண முடியும். என்னை டிஸ்டர்ப் பண்ணாத வை. எனக்கு உன்கிட்ட பேசறது கூட பிடிக்கல " என்று பல்லை கடித்துக் கொண்டு பேசியவளோ கைப்பேசியை வைத்து விட்டாள்.
எதற்கு தன்னிடம் இவள் இவ்வாறு பேசுகிறாள் என கண்களை மூடி புருவத்தை சுருக்கி யோசித்துப் பார்த்தவனுக்கு அப்பொழுது தான் காலையில் தூக்க கலக்கத்தில் அவள் வந்து தான் கருவுற்றிருக்கும் இருக்கும் விஷயத்தை கூறி தன்னிடம் சண்டையிட்டதெல்லாம் நினைவுக்கு வந்தது.

"இது நான் எப்படி மறந்தேன் போனேன். ஹாஸ்பிட்டல் போய் இருக்காளா போகட்டும் நெகட்டிவ் வரும் அதுக்கப்புறம் வந்து சாரிடா என்ன மன்னிச்சிடு அப்படின்னு சொல்லிட்டு கெஞ்ச வருவீல அப்ப இருக்கு " என மனதிற்குள் நினைத்துக் கொண்டு தங்களின் அலுவலகத்தில் வேலைப் பார்க்கும் இன்னொரு ஆட்களை அழைத்துக் கொண்டு தன் வேலையை தொடங்க ஆரம்பித்தான்.

கவிமகிழன் விஸ்காம் எம் பி ஏ படித்து இரு வருடங்கள் வெளியே வேலை பார்த்து தன் திறமையை வளர்த்துக்கொண்டு பின் இந்த நிறுவனத்தை தொடங்கி இருந்தான். இவனின் பெற்றோர் உடன் பிறந்தவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வர, இவனோ இப்பொழுது பெங்களூரில் வசித்து வந்தான். இவனின் கல்லூரி படிப்பு அனைத்தும் சென்னையில் தான். பள்ளி படிப்பு மட்டும் தான் அவனின் சொந்த ஊரில் பயின்றான்.

இப்பொழுது அவன் ஊரை விட்டு வந்து பத்து வருடங்கள் கடந்து இருந்தது. முதலில் தன் சேமிப்பு அனைத்தையும் போட்டு கம்பெனியை தொடங்க முயற்சித்தாலும் அவனுக்கு அந்த பணம் பத்தாது போகவே அப்பொழுது தான் அவனோடு ஜூனியராகப் பயின்ற அகலியை சந்தித்தான்.

அவளிடம் தன் விருப்பத்தைக் கூற அவளோ வசதி படைத்தவள் என்பதால் பெற்றோரிடம் கூறவே, உன் விருப்பப் போல் இரு எனக் கூறி அவளின் பெற்றவர்கள் எவ்வளவு பணம் வேணுமோ அவ்வளவும் கொடுத்து விட்டனர். இருவரும் சேர்ந்து தான் இந்த நிறுவனத்தை ஆரம்பித்தனர். இரு வருடங்கள் கடந்த நிலையில் மெல்ல மெல்ல இருவருக்குள்ளும் நட்பினை தாண்டிய ஒரு உறவு மலர ஆரம்பித்தது. அது காதல் என்றும் இருவருக்கும் புரிந்தாலும் இந்த காலகட்டத்தில் எப்பொழுது சூழ்நிலை தங்களை மாற்றமோ என்பது தெரியாது.

தாங்கள் இன்று இருக்கலாம் நாளை இல்லாமல் கூட போய்விடலாம். இருக்கும் வரை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று இருவருமே லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்க ஆரம்பித்தனர். தங்களின் சேமிப்பை வைத்து வெவ்வேறு இடத்தில் தனித்தனியாக இருந்த இருவரும் ஒன்றாக ஒரு பிளாட் வாங்கி அதில் தான் இப்பொழுது இரு வருடங்களாக வசித்து வருகின்றனர்.

திடீரென மனச்சோர்வு ஏற்பட்டால் வெளியேச் சென்று வருவார்கள் இருவருக்குள்ளும் உணர்ச்சிகள் ஏற்பட்டாலும் ஒரே அறையில் இருந்துக் கொள்வார்கள். அதன் விளைவு தானோ என்னவோ அகலி இன்று கருவுற்றிருந்தாள். ஆனால் அதற்க்கான காரணம் தெரிய வரும் போது அவள் அதனை எப்படி ஏற்பால் ?

அகலியும் இவனோடு சென்னையில் எம்பிஏ படித்து பின் பெங்களூர் வந்து விட்டாள். அவளின் பெற்றவர்கள் இருவருமே அவள் சிறுவயதில் இருக்கும் போதே வெளிநாட்டில் தங்கி விட்டனர். அவளின் தந்தைக்கு வெளிநாட்டில் தான் தொழில் என்பதால் அங்கு அவள் வளரவே அவளுக்கு தமிழ்நாட்டுக்குச் செல்ல வேண்டும் அங்கு இருக்கும் பழக்கவழக்கங்களை தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை. அதனாலே மகளை கல்லூரி படிப்பதற்கு தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளி படிப்பை முடித்து திருப்பி வேலையும் இங்கேயே தொடர்ந்து விட்டாள். இப்பொழுது கூட அவளின் பெற்றோர் தன்னோடு வந்து தங்கிக் கொள் என்று தான் கூறுகிறார்கள். ஆனால் தான் சுதந்திரமாக இருக்க வேண்டும் தனக்கு பிடித்த வாழ்க்கையை தான் வாழ வேண்டும் என்று நினைப்போடு இருந்தாள். அகலிகை ஒரு வேளை கூறியதுப் போல் பெற்றோரோடு இருந்தால் அவளுக்கு இப்பொழுது இந்நிலை ஏற்படாமல் இருந்திருக்குமோ என்னவோ ?

"இங்க அகலிகை யாரு ?" என்று மீண்டும் வந்து கூற, விழிகளை திறந்தவளோ, " நான் தான் " எனக் கூறி எழுந்தாள்.

"உங்களுடைய டெஸ்ட் ரிசல்ட் எல்லாம் வந்துச்சு வாங்க டாக்டரை பார்க்கலாம் " கூறவே, செவிலிப் பெண்ணோடுச் சேர்ந்து மருத்துவர் அறைக்குள் நுழைந்தாள்.

"டாக்டர் இந்த பேஷண்ட் ஓட ரிப்போர்ட் " என்க,

"கொடுங்க. நீங்க வெளியில இருங்க நான் சொன்னதுக்கப்புறம் அடுத்த பேஷண்ட் அனுப்புங்க ' என கூறியதும் அந்த நர்ஸ் சென்று விட அந்த ரிப்போர்ட்டை திரும்பி ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருந்தார்.

சில நொடிச் செல்லவே, "வாழ்த்துக்கள் இப்போ நீங்க பிரக்னண்டா இருக்கீங்க. ஸ்கேன் ரிப்போர்ட்ல குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்ல. குழந்தை ரொம்ப நல்லா இருக்கு நீங்க இன்னும் கொஞ்சம் ஹெல்த்தியான ஃபுட் எடுத்துக்கோங்க " என்று மருத்துவர் இன்னும் என்னெல்லாம் செய்ய வேண்டும் அடுத்து எப்பொழுது பரிசோதிக்க வரவேண்டும் என்று கூறிக் கொண்டேப் போக, அவளுக்கு எங்கே அதெல்லாம் உள்ளுக்குள் இறங்கியது.
இப்பொழுது உறுதியாக தன் வயிற்றுக்குள் ஒரு சிசு வளர்கிறது என்பது தெரிந்து விட்டது. ஆனால் இதற்கு அவன் தான் காரணம் என்பதை தன்னால் நிரூபிக்க என்ன செய்ய வேண்டும் ? என்பதைக் கூட அந்த இடத்தில் அமர்ந்து யோசித்தாள்.

"ஹலோ என்ன ஆச்சு. நான் மட்டும் பேசிட்டு இருக்கேன் நீங்க எதையோ யோசிச்சிட்டு இருக்கீங்க ? ரொம்ப டிப்ரஷனுக்கு போயிடாதீங்க அப்புறம் அது நல்லது கிடையாது "
"தேங்க்யூ டாக்டர் அப்புறம் நான் ஒரு விஷயம் கேக்கணும். எனக்கும் என்னுடைய உட்பிக்கும் கொஞ்சம் பிரச்சனை இந்த குழந்தையோட டிஎன்ஏ அவனோட டிஎன்ஏ கூட மேட்ச் ஆகி அவன் தான் அப்பா அப்படிங்கறத நான் நிரூபிக்கணும். அதுக்கு எனக்கு நீங்க உதவி பண்றீங்களா ?" எனக் கேட்க,


அந்த மருத்துவர் இவளுக்கு உதவி செய்யலாமா வேண்டாமா என்று யோசனையில் இருந்தார்.
 
Last edited:

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,274
498
113
Tirupur
அப்போ இந்த மகிழன் தான் ஹீரோவா.. நான் வேற யாரோ இருக்கும்னு நினைச்சேன்/
 

sankareswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 31, 2024
35
40
18
Chennai
அப்போ இந்த மகிழன் தான் ஹீரோவா.. நான் வேற யாரோ இருக்கும்னு நினைச்சேன்/
இவன் தான் ஹீரோ. புரிதல் இல்லாம இருப்பான்
 
  • Love
Reactions: Vathani

sankareswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 31, 2024
35
40
18
Chennai

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
417
99
43
Tirupur
அவ சொன்ன விஷயத்தையே மறந்துட்டு அவளை திட்டுறானே... 😬 அப்பக்கூட அவளாவே வந்து மன்னிப்புக் கேக்கணும்னு நினைக்கிறான்.

DNA டெஸ்ட்ல பாசிட்டிவ்னு வந்தா மூஞ்சியை மண்ணுக்குள்ள புதைச்சிப்பானோ? 🤣🤣