• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கி 3

sankareswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 31, 2024
35
40
18
Chennai
அத்தியாயம் 3

அகலியோ மருத்துவரிடம் டிஎன்ஏ பரிசோதனைப் பற்றி கூறவே, அதைக் கேட்டு ஒரு நொடி யோசித்தார்.

பின், "என்னமா நீ இப்படி கேக்குற அப்படின்னா உனக்கு இன்னும் கல்யாணம் முடியலையா ?கல்யாணம் முடியாம தான் நீ கன்சீவ் ஆயிருக்கியா ? நான் உனக்கு ஹெல்ப் பண்ண போய் எனக்கு ஏதாவது பிரச்சனை வந்துட்டனா ? " என்றுக் கேட்கவே,

"டாக்டர் ப்ளீஸ் என் வாழ்க்கையே இதுல தான் அடங்கி இருக்கு. உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராம நான் பார்த்துக்குறேன். இப்ப நான் காதலிக்கிற பையனோட வீட்ல இந்த வயித்துல வளர குழந்தைக்கு அவன் தான் காரணம்னு சொன்னா அவங்க யாருமே ஏத்துக்க மாட்டாங்க. அதான் நான் ரிப்போர்ட்ட காட்டுனா கண்டிப்பா அவங்க எங்களை ஏத்துப்பாங்க. அதுக்காக தான் நான் சொன்னேன் ஃபேமிலி மெம்பர்ஸ் இல்லாம நாங்க மட்டும் எப்படி தனியா இந்த குழந்தையை வளர்க்க முடியும் ? இந்த குழந்தைக்கும் உறவு எல்லாம் வேணும்ல. அதனால தான் கேட்டேன் " என்று அவரை ஒத்துக்க வைக்க, ஏதேதோ காரணங்களை எல்லாம் கூறினாள்.

அவளின் இந்த முக பாவனையும் பரிதாபமாகப் பேசும் செயலை வைத்து சரியென ஒத்துக் கொண்டார்.

"சரிம்மா நீ கூட்டிட்டு வா. ரெண்டு பேருக்கும் டெஸ்ட் பண்ணிடலாம் "

"தேங்க்யூ டாக்டர் " என்று மீண்டும் ஒரு முறை நன்றியை கூறிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

மகிழனை நான்கு வருடம் நன்றாக தெரியும். இரண்டு வருடம் உறவில் இருந்தாலும் அவனின் குடும்பத்தாரைப் பற்றி அவளுக்கு ஒன்றுமே தெரியாது. அவ்வப்போது ஊருக்குச் செல்கிறேன் என்று சென்று வருவான். அவர்களை பற்றிக் கேட்டால் இப்பொழுது எதுக்கு வேலையைப் பார்க்கலாம் என்று ஏதாவது காரணம் கூறி மறந்து விட வைத்தான்.

'ஆனால் இப்பொழுது தன் வயிற்றில் வளர்வது அவனின் குழந்தை என்று வந்த பின் அவனின் குடும்பத்தார் பற்றியும் நினைக்க ஆரம்பித்தாள். அவர்களிடம் இந்த செய்தியை தான் தெரிவிக்கும் நொடி தங்களை ஏற்றுக் கொள்வார்களா ? நிச்சயம் தன் பெற்றோர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவன் குடும்பத்தார்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமே ? முதலில் அவன் சம்மதிக்க வேண்டும். அதற்காகவே இந்த டிஎன்ஏ டெஸ்ட் ' என நினைத்தவாறு அன்று ஏனோ அலுவலகம் செல்ல மனம் இல்லாமல் மீண்டும் தன் வீட்டுக்கு வந்துச் சேர்ந்தாள்.

கவிமகிழனின் அலுவலகத்தில் மதியம் நேரம் உணவருந்த வந்தனா கேன்டீன் நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கவே அவளுக்கு முன்னே குறுக்கே வந்து நின்றான் கௌஷிக்.

ஒரு நொடி திக் என்று பதறியவளோ, "எதுக்கு இப்படி பண்ற கௌஷிக் ? குரங்கு மாதிரி இப்படி தாவிக்கிட்டு வந்து நிக்கிற நான் பயந்துட்டேன் தெரியுமா ?" என்று சிடுசிடுவென முகத்தை வைத்துக் கொண்டு கூறவே,

"அது அப்படி தான். உன் பிரெண்டு என்ன இன்னைக்கு ஆபீஸ்க்கு வராம இருக்காங்க. நல்லாதாப் போச்சு எனக்கு. இந்த டைம்ல நான் உன் கூட மொக்க போடலாம் " என்க, முகத்தை சுருக்கினாள்.

"நம்ம பேசுறது உனக்கு மொக்கை போடுறதா. சரிப்பா இனிமே நான் உன்கிட்ட பேசவே இல்ல. நீயும் என்கிட்ட மொக்கை போடவே வேண்டாம். நீ மொக்கை போட்டு என் டைம் வீணாக்க வேண்டாம். இனிமே நம்ம பார்க்கவே வேண்டாம் " படபடவென பேசி விலகிச் செல்ல

"ஏய் இரு. நான் இப்ப என்ன சொல்லிட்டேன்னு எதுக்கு இப்படி கோபப்படுற. அப்பப்பா ஒரு வார்த்தை விட்ற கூடாது உன்கிட்ட அதை பிடிச்சுகிட்டு தொங்குறது. சரி என்னவாம் இன்னைக்கு உன் பிரெண்டை காணோம். அதுவும் இல்லாம பாஸும் ரொம்ப டென்ஷன்ல சுத்திக்கிட்டு இருக்காரு "

"என்கிட்ட கேட்டா எனக்கு என்ன தெரியும். இப்ப எல்லாம் அவ நடந்துக்குறது வித்தியாசமா இருக்கு. எதுவுமே என்கிட்ட சொல்லவே மாட்டாங்க. காலையில இருந்து நான் அவளுக்கு கால் பண்ணிட்டு தான் இருக்கேன். எடுக்கவே இல்ல. அப்படி என்ன தான் பண்ணிட்டு இருக்கா. கவிமகிழன் சார் கிட்ட நம்மளால கேட்கவும் முடியாது "

"அது என்னவோ உண்மை தான். ஆனால் அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை போல. எப்பவுமே நம்ம பாஸ் இப்படி எல்லாம் இருக்க மாட்டாரு. இன்னைக்கு அநியாயத்துக்கு கோவமா நம்ம வசந்த்தை கூட்டிட்டு போட்டோசூட் போயிருக்காரு. ஆனா அந்த போட்டோ ஷூட்டுக்கு உன் பிரெண்டும் பாஸ்சும் தான் போக வேண்டியது. என்னாச்சுன்னு தெரியல "

"நமக்கு எதுக்கு அது? சரி ஏதாவது சாப்பிட ஆர்டர் பண்ணு ரொம்ப பசிக்குது சாப்பிடலாம் " என்ற வந்தனா அங்கிருந்த டேபிளில் அமரவே, கௌஷிக் சென்று இருவருக்கும் உணவினை வாங்கிக் கொண்டு வந்தான்.

அவன் வரும் இந்த நொடிகளுக்கு எல்லாம் எதுக்கும் ஒரு முறை தன் தோழியான அகலிக்கு அழைத்து பார்க்கலாம் என நினைத்து அழைப்பு விடுத்தாள்.

அவளோ இந்த முறை எடுத்து விட்டாள்.

"ஆபிஸ்க்கு ஏன் இன்னைக்கு நீ வரல. உடம்பு எதுவும் சரி இல்லையா ? நேத்து வேற ஒரு மாதிரி டயர்டா இருந்தே. ஆர் யூ ஓகே ?" என்றுக் கேட்கவே,

"நான் நல்லாத்தான் இருக்கேன். ஆமா கொஞ்சம் உடம்பு சரியில்ல இப்ப தான் டாக்டர் கிட்ட போயிட்டு வந்தேன் "

"என்னடி நான் வேணா வரவா. என்கிட்ட ஒரு வார்த்தை கூட நீ சொல்லவே இல்ல. தனியா வீட்ல என்ன பண்ணிட்டு இருக்கே ?உனக்கு உடம்பு சரியில்ல ஆனா சார் இங்கே வந்துட்டு எப்பையும் போல வேலையை பார்த்துட்டு இருக்காரு "

"அவனை பத்தி என்கிட்ட பேசாத வந்தனா. அப்புறம் நான் டென்ஷன் ஆயிடுவேன் "

"என்ன உங்களுக்குள்ள எதுவும் பிரச்சனையா ?"

"ஆமா "

"இது அடிக்கடி நடக்கிறது தானே இரண்டு நாளா சரியாயிடும்ல அப்புறம் எதுக்கு நீ அதை நினைச்சுட்டு உன் உடம்பை கெடுத்துக்குற "

"இது ரெண்டு நாளா சரியாகாத பிரச்சனை கிடையாது வந்தனா. இது பெரிய பிரச்சனை உன்கிட்ட எனக்கு எப்படி சொல்லணும் தெரியல. நாளைக்கு நான் ஆபீஸ்க்கு வரும்போது நேரா சொல்றேன். ஆனா மகிழன் என்னை ஏமாத்திட்டான். அவன் இப்படி ஒரு கேரக்டர் நான் நினைச்சு கூட பார்க்கல. அவன் கூட போய் நான் ரிலேஷன்ஷிப்ல இருந்தேன் பாரேன் இதுக்கு என்ன நானே அழிச்சுக்கணும் போல தான் இருக்கு "

"என்னடி புதுசா இப்படி எல்லாம் பேசுகிற. சீரியஸா நீ இப்படி எல்லாம் இருந்தது கிடையாது "

"அப்படி என்ன இருக்கு வச்சுட்டான். சரி நான் ரெஸ்ட் எடுக்கிறேன் " என்றதும், சரியென வந்தனாவும் அழைப்பினை துண்டித்து விட்டாள்.

முன்னே வந்து கௌஷிக் அமரவே, "யார்கிட்ட பேசின ?" என்க,

"அகலிகை கிட்ட தான் பேசினேன். நீ சொன்னது சரி தான் ரெண்டு பேருக்கும் ஏதோ பிரச்சனை போல. ஆனா இந்த பிரச்சனை பெரிய பிரச்சனையாம். நாளைக்கு வந்து சொல்றேன்னு சொன்னா இப்போ உடம்பு சரியில்லையாம் வீட்டுல ரெஸ்ட் எடுக்குறா. அதனால தான் ஆபீஸ் வரல " என்றதும்,

"சரி ஓகே நீ சாப்பிடு. அப்புறம் நைட்டு மூவிக்கு போலாமா ?" என்று இருவரும் அவர்களின் பக்கம் திரும்பி விட்டனர்.

இருவருமே ஒரே அலுவலகத்தில் ஒன்றாக வேலைப் பார்த்து வருகின்றனர் கடந்த ஆறு மாதங்களாக...தன் காதலை வெளிப்படுத்தி சின்ன சின்ன சண்டைகளோடு கிண்டலோடும் அழகாக நாட்களை கடத்தி வருகின்றனர்.

அன்று இரவு நேரம் போல் எப்பொழுதுடா மகிழன் வருவான் அவனிடம் டிஎன்ஏ டெஸ்ட் பத்தி பேச வேண்டும் என நினைத்து ஹாலிலே அமர்ந்து காத்துக் கொண்டிருந்தாள். ஆனால் எவ்வளவு நேரம் தான் சென்றதோ தெரியவில்லை. அவனோ வந்த பாடில்லை.

பன்னிரெண்டு மணி தாண்டிய பின்னும் நித்திரை தழுவ அப்படியே அவனுக்கு காத்திருந்தவாறே உறங்கி விட்டாள். மறுநாள் விடியல் கண் விழித்த அகலி அவளின் அறையில் படுக்கையில் இருந்தாள். நிச்சயம் தன்னை இங்கு அழைத்து வந்தது அவனாக தான் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தாள்.

'பாசமெல்லாம் இருக்கு ஆனா நம்பிக்கை மட்டும் இல்ல. பேசுறதெல்லாம் ஈரிடேட் பண்ற மாதிரி இருக்கு. நீ அந்த பேச்சு பேசிட்டு அன்பா இருக்கையா யாருக்கு வேணும் இந்த அன்பு ?எப்படியாவது உன் கிட்ட பேசியே ஆகணும். என்னால நாள் கடத்த கூடாது. அப்புறம் நமக்குள்ள பிரச்சினை தான் வரும் ' என மனதிற்குள் நினைத்தவளோ வேகமாய் குளியலறைச் சென்று வெளியே வந்தாள்.

ஹாலில் அமர்ந்து இன்னும் அலுவலகம் செல்வதற்கு நேரம் இருக்கவே, கைபேசியில் டிசைனிங் சாப்ட்வேர் புதிதாக எப்படி உருவமைப்பது என்பதைப் பற்றி பார்த்துக் கொண்டிருந்தான். அந்த நொடி அவனின் முன்னே வந்து நின்றாள் அகலிகை.

மகிழ் என்றதும் நிமிர்ந்து அவளைக் கண்டவனோ, "இப்ப எப்படி இருக்க எந்த பிரச்சினையும் இல்லையே ?இனி ஆஃபீஸ் வருவியா இல்ல இன்னைக்கு லீவு தான் போட போறியா ? லீவு போட போறேன்னா கொஞ்சம் இன்பார்ம் பண்ணிரு. நான் உன்னோட வேலையை மத்தவங்களுக்கு கொடுப்பேன். அதை பெண்டிங்கில போட்டுக்கிட்டு இருந்தா அப்புறம் நமக்கான கஸ்டமர் கிட்ட நமக்கு தான் கெட்ட பெயர் கிடைக்கும் " என்று அவனோ அவனின் பக்கத்தில் இருந்தே பேசினான்.

"நான் இன்னைக்கு ஆபீஸ் வரேன் ஆனா அதுக்கு முன்னாடி நம்ம ரெண்டு பேருமே ஹாஸ்பிட்டல் போகணும். நான் நேத்து போய் செக் பண்ணிட்டு வந்துட்டேன். நான் கன்ஃபார்மா ப்ரெக்னன்ட் ஆக இருக்கேன். குழந்தைக்கும் உனக்கும் டிஎன்ஏ டெஸ்ட் பண்ணனும். இதுக்கு டாக்டர் சரின்னு சொல்லிட்டாரு "

அவள் கூறியதைக் கேட்டதும் அதிர்ச்சியோடு எழுந்தவனோ, " உன் விருப்பத்துக்கு நீ நடந்து கொல்லணும்னா அதுக்கு நான் சரின்னு ஒத்து போகணுமா. என்னால டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வர முடியாது. இது என் குழந்தையே இல்லைன்னு சொல்லும் போது நீ எதுக்கு இப்படி என்னையே திரும்ப திரும்ப டார்கெட் பண்ணிக்கிட்டு இருக்கே ? அன்னைக்கு நான் அந்த ஹோட்டல்ல இல்லை. நைட் ரைடு போய்ட்டேன். திரும்பத் திரும்ப என்னை நீ பேச வைக்காத " என்க,

"சரி நான் ஒத்துக்குறேன் உனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லன்னு ஆனா ஒரே ஒரு தடவை எனக்காகவா வா "

"என்னால முடியாது "

"ஏன் வந்தா நீ தான் அப்பான்னு தெரிஞ்சுரும்மா. அதனால முடியாதுன்னு சொல்றியா ? "


"அறைஞ்சிடுவேன் அகலி நீ எப்பவுமே இப்படி பண்ணது கிடையாது. இப்ப என்ன புதுசா இப்படி எல்லாம் நடந்துக்கிற. நம்ம என்ன டீலிங் போட்டோனு மறந்துட்டியா ரெண்டு பேரும் அவங்களுடைய இஷ்டப்படி இருந்துக்கலாம். நீ என்ன டார்கெட் பண்ணிக்கிட்டு இருக்க. எவன் குழந்தையோ நீ வயித்துல சுமந்துட்டு திரும்பத் திரும்ப இதுக்கு காரணம் நானும் சொல்லாத "

"நான் உன்கிட்ட சண்டை போடணும்னு நினைக்கல மகிழ். என்னால இப்ப சண்டையும் போட முடியாது. நான் உன்னை கண்டுபிடிக்கணும்னு நினைக்கிறேன். என்னோட மன ஆறுதலுக்காகவாது இந்த டெஸ்ட் எடுக்க நீ ஒத்துக்கோ. நான் அதுக்கப்புறம் உன்னை எந்த தொந்தரவும் பண்ண மாட்டேன். நீ அப்பா இல்லைன்னு தெரிஞ்சா நான் உன் பக்கம் கூட வரமாட்டேன் "

"சரி வரேன். ஆனா ஒரு காரணம் நம்ம என்னைக்குமே இதே உறவுல இருக்கணும் அப்படின்னா நீ இந்த குழந்தையை அழிக்கணும் "

"இப்ப அதெல்லாம் முக்கியமில்லை. எனக்கே இந்த குழந்தையை பெத்துக்க எந்த ஒரு ஆசையும் இல்லை. முதல்ல அதுக்கு யார் காரணம் தெரியணும் ? "

"உனக்கு ஆசை இல்ல. அதுக்கு அப்புறம் நீ அழிக்கத்தான் போற அதுக்கு எதுக்கு தெரிஞ்சு நீ என்ன பண்ண போற "

"நீ சொன்ன மாதிரி நீ காரணமா இல்லாம இருந்தா யார் கிட்டையும் நான் ஏமாந்துட்டேன் தான் அர்த்தம். அவன் யாருன்னு கண்டுபிடிக்க வேண்டாமா. அவன் என்னை யூஸ் பண்ணி இருக்கான். எப்படி இப்படி பண்ணலாம் ?"

"அம்மா தாயே நீ உன் போராட்டத்த கையில எடுத்துக்கோ. நான் வேண்டான்னு சொல்லல இப்ப என்ன ஹாஸ்பி
ட்டல் போகணும். அவ்வளவு தானே சரி கிளம்பு போகலாம் " என்கவே, சரி எனக் கூறி தன் அறைக்குள் நுழைந்தாள்.

தொடரும்...


தங்களின் அபிப்பிராயங்களையும் வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
 
Last edited:

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,761
570
113
45
Ariyalur
அருமை அருமை சகி ❤️❤️❤️❤️❤️❤️இப்படி இருக்குறவங்கள ஒரே உறவுல பிடிச்சு வைக்க முடியாதே கவி அப்படி ஒருவன் 🙄🙄🙄🙄
 

sankareswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 31, 2024
35
40
18
Chennai
அருமை அருமை சகி ❤️❤️❤️❤️❤️❤️இப்படி இருக்குறவங்கள ஒரே உறவுல பிடிச்சு வைக்க முடியாதே கவி அப்படி ஒருவன் 🙄🙄🙄🙄
ஆமா ஆழ்மனசுல இருந்து காதல் வந்தா தான் உண்டு. நம்ம புரிதல் கொண்டு வந்து சேர்த்து வைப்போம்
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
417
100
43
Tirupur
அவன் பேசுறதைப் பாத்தா தான் பொறுப்பில்லைங்கிற மாதிரி எவ்வளவு ஈஸியா அழிக்கச் சொல்றான். இந்த மாதிரி வெறும் ஈர்ப்புனால வாழும் உறவில வரும் குழந்தைகள் நிலை பாவம் தான்! 😢