• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கி - 4

sankareswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 31, 2024
35
40
18
Chennai
அரக்கி 4

( கவிமகிழனின் பாராமுகம் )

மகிழன் அகலி இருவருமே தங்களின் காரில் மருத்துவனை நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை மௌனம் மட்டும் தான் அந்த இடத்தில் நீடித்தது.

கவிமகிழனின் மனமோ தன் அவ்வளோ கூறியும் நம்பாதவள் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்ததும் அதில் தான் தந்தை இல்லை என தெரிந்தப் பெண் முகத்தை எங்கு கொண்டு வைத்திருப்பாளாம் ?தன்னை நம்பாதே இவளையா தான் காதலித்தோம் ?

திருமணம் என்பதைப் பற்றி இருவருமே ஒரு நாளும் யோசித்ததில்லை. ஒன்றாக இருக்க வேண்டும் என்று ஆசை இருந்தது அதனால காதலித்து ஒன்றாக இருந்து வந்தனர். ஆனால் ஒருவருக்கொருவர் ஏதாவது ஒன்று என்றால் பார்த்துக் கொள்வார்கள். இதற்கு முன் எத்தனையோ முறை இருவருக்கும் உடல்நிலை சரியில்லாதப் போது மாறி மாறி பார்த்துக் கொண்டனர். ஆனால் இந்த ஒரு செயல் மட்டும் இருவரையுமே ஆழமாகப் பாதிக்க அதில் இருந்து வெளிவர முடியாது இருந்தனர்.

அகலிகை மனம் முழுவதும் எப்படியாவது இதற்கு காரணம் இவன் தான் என்று டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டில் வந்து விட வேண்டும் என்று தான் வேண்டிக் கொண்டு இருந்தாள். அப்படி மட்டும் வரவில்லை என்றால் தான் தன்னை யாரிடமும் இழந்திருக்கிறோம் முட்டாளாக தான் இருந்தோம். அப்படி நிச்சியம் தான் இருக்க வாய்ப்பில்லை என்பதை அவள் மனம் அச்சாணியிட்டு கூறியது.

ஒரு வழியாக இருவரும் மருத்துவமனை வந்துச் சேர்ந்தனர்.

"இந்த ஹாஸ்பிட்டல்ல தான் நேத்து செக் பண்ண வந்தியா முதல்ல எல்லாமே பேசிட்டேல அப்புறம் எந்த பிரச்சனையும் இருக்க கூடாது " என்றதும்,

அவளும், "எந்த பிரச்சனையும் இருக்காது வா " என்றாள்.

பின் இருவருமே மருத்துவமனைக்குள் நுழைந்து ரிசப்ஷனில் நேற்று தான் வந்து பதிவு
செய்து வைத்திருக்கவே அவர்களுக்கான நேரம் வந்ததும் இருவரையும் பரிசோதிக்க அழைத்துச் சென்றனர்.

மகிழனுக்கும் அவளின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் எடுத்தனர். இன்னும் ஒரு வாரம் கழித்து தான் ரிப்போர்ட் வரும் எனக் கூறி விடவே அதுவரை தாங்கள் காத்திருக்க வேண்டுமா சரி என நினைத்து வேறு வழி இல்லாமல் இருவரும் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தனர்.

"இங்க பாரு அகலி நான் கடைசியா ஒரு தடவை சொல்றேன். கண்டிப்பா இதுக்கு நான் காரணம் கிடையாது தேவையில்லாம இந்த குழந்தையை வளர்க்கிறேன்னு சொல்லிட்டு உன்னோட வாழ்க்கை நீ வீணாக்காத இப்பவே அழிச்சிடு அது தான் நல்லது "

"என்ன பண்ணனும் எனக்கு தெரியும். நீ எதுவும் பேசாத மகிழ் எனக்கு எரிச்சலா இருக்கு "

"ஏம்மா தாயே உன் பிடிவாதம் பத்தி எனக்கு தெரிஞ்சது தானே இன்னும் ஒரு வாரம் தானே அதுக்கப்புறம் உனக்கே முடிவு தெரியும் அப்ப பார். இப்ப ஆஃபீஸ்க்கு வரியா ?"

"வாரேன் " என்றதும், மருத்துவமனையில் இருந்தவாறு அலுவலகம் தான் சென்றனர்.
அவளுக்காக அன்று அவளின் தோழி வந்தனா காத்திருந்தாள். அன்று அலுவலகம் வருகிறேன் என்று காலையிலேயே அழைப்பு விடும்போது கூறி இருந்தாள். இவ்வளவு நேரம் ஆகியும் வரவில்லையே, பாஸ்சும் வரவில்லை.

ஒருவேளை மறுபடியும் இருவருக்குள்ளும் எதுவும் பிரச்சினை வந்து விட்டதோ என்ற நினைப்பில் வந்தனா தோழியை எதிர்பார்த்து வாசல் புறம் அடிக்கடி பார்த்தவாறு இருந்தாள்.

பதினொரு மணி கடந்த பின் தான் இருவரும் ஒன்றாகவே உள்ளே நுழைந்தனர்.

"அப்பாடா இன்னைக்கு இரண்டு பேரும் ஒண்ணா தான் வராங்க அப்போ பிரச்சனை சால்வ் ஆயிடுச்சு போல " வந்தனா நினைக்க, அவனோ அவனின் அறைக்குள் நுழைந்து விட, இவளோ தன் தோழியை நோக்கி தான் சென்றாள்.

"ஏய் வாடி இப்போ உனக்கு உடம்பு சரி ஆயிடுச்சா ஒரு மாதிரியா இருந்தே நேத்து காலையில பேசும்போது கூட...கோவமா பேசுனே எதுவும் பிரச்சனையா ?" என்றுக் கேட்கவே,

"ஆமா நான் இப்ப பிரக்னண்டா இருக்கேன் " என்றதும்,

"என்னது பிரக்னண்டா இருக்கியா ?" என்று அதிர்ந்தவளோ அந்த இடத்தில் இருந்து எழுந்தே விட்டாள். அவள் சத்தமோடு அந்த வார்த்தையை கூற அவளின் வாயை மூடினாள்.

அதை அங்கு வேலைப் பார்ப்பவர்கள் சிலர் சத்தம் கேட்டு இவர்களைக் காண, " சாரி...சாரி " என அவளிடம் மன்னிப்பு கேட்க, "கத்தாதடி எதுக்கு என் மானத்தை வாங்குற வா. முதல்ல கேன்டீன் போகலாம் " எனக் கூறி அங்கிருந்து தன் தோழியை இழுத்துக் கொண்டுச் சென்றாள்.

இந்த விஷயத்தைக் கேட்ட வந்தனாவிற்கு பொறுமை என்பதே இல்லை. கேன்டீன் செல்லும் அந்த ஐந்து நிமிடத்திற்குள் அவளின் எண்ணங்கள் எல்லாம் எங்கெங்கோச் சென்றது? ஆயிரம் கேள்விகள் அவளுக்குள் உதித்து விட்டது. இதற்கெல்லாம் இப்போதே பதில் தெரிந்து விட வேண்டும் என்ற எண்ணம் தான்.


அவளோ அறியாத ஒன்று அகலிக்கே பதில் தெரியாத பொழுது எப்படி தனக்கு அவள் பதில் கூறுவாள்.

"உண்மையா தான் சொல்றியா அப்போ நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறீங்களா ? லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்ல இருக்கீங்க தான சொன்னீங்க. என்னடி திடீர்னு இவ்வளோ பெரிய குண்ட தூக்கி போடுற. உங்க வீட்ல தெரியுமா பாஸ் ஓட வீட்ல தெரியுமா ?" அதிர்ச்சியாய்க் கேட்கவே,

"அடியேய் நான் தான் பிரக்னண்டா இருக்கேன். நீ ஏண்டி இவ்வளோ ஷாக் ஆகுற. நானே அமைதியா தானே இருக்கேன். அப்புறம் என்ன உனக்கு. என்ன இப்ப எல்லா விஷயமும் தெரிஞ்சாகணும் அவ்வளவு தானே சொல்றேன். ஆனா இது நீ யார்கிட்டையும் சொல்லாத " என்று நேற்று தங்களுக்குள் நடந்த பிரச்சனையும் இன்று மருத்துவமனைச் சென்று டிஎன்ஏ டெஸ்ட் கொடுத்து விட்டு வந்தது முதல் கொண்டு அனைத்தையும் கூறினாள்.

"இதுக்குத்தான் நான் ஆரம்பத்திலே சொன்னேன். இதெல்லாம் வேண்டாம் அப்படின்னு நீ கேட்டியா. பாஸ் மேல அவ்வளோ நம்பிக்கை வச்சிருவேன். இப்ப பார்த்தியா அவங்களுக்கு தேவையானது உன் கிட்ட தீர்த்துக்கிட்டதும் நான் காரணம் இல்லைன்னு சொல்லுறாங்க "

"இல்லடி மகிழன் இப்படி எல்லாம் பண்ண மாட்டான். ஆனால் ஏன் இந்த விஷயத்துல இவ்வளவு உறுதியாக இருக்கான்னு எனக்கு தெரியல. ஆனா அவன் தான் காரணம். அன்னைக்கு அவன் கூட தான் நான் இன்டர்கோஸ் வச்சுக்கிட்டேன். எனக்கு நல்லா தெரியும். அப்படி இருக்கும்போது நூறு சதவீதம் அடிச்சு சொல்லுறான். சரி இன்னைக்கு ரிசல்ட் வந்துரும் அதுல தெரிஞ்சிரும் அப்படின்னு பார்த்தா ஒரு வாரம் கழிச்சு வர சொல்றாங்க எனக்கு என்ன பண்ணனும்னே தெரியல தலையே வலிக்குது "

"டென்ஷன் ஆகாத விடு ஒரு வாரம் தானே தெரிஞ்சிடும். என்னை பொறுத்த வரைக்கும் ஆம்பளைங்கள நம்பாதே நம்பாதே சொன்னேன் கேட்டியா. ஏன் என்னை எடுத்துக்கோ கௌஷிக் என் பின்னாடி ரெண்டரை வருஷமா சுத்திக்கிட்டு தான் இருக்கான். நானும் அவனை காதலிக்கிறேன் ரெண்டு பேருமே லவ் பண்ணுறோம். ஆனா ஒரு நாள் கூட என்னோட அனுமதி இல்லாம அவ என்ன தொட்டது கூட இல்லை. இரண்டு பேரும் ஒண்ணா பார்ட்டிக்கு போயிருக்கோம். ஆனா இதுவரை எங்களுக்குள்ள உங்கள மாதிரி எதுவும் நடந்தது கிடையாது. நம்ம கற்பை நம்ம தான் காப்பாத்திக்கணும். நான் அப்போ சொல்லும் போதே கேக்கல. இப்ப நீ அனுபவிக்கிறே. எனக்கு தெரியும் நீ வளர்ந்த நாட்டுல இதெல்லாம் சர்வ சாதாரணம் தான். ஆனால் இங்கே அப்படி கிடையாது. சரி அப்படியே பாஸ் தான் உன் வயித்துல வளர குழந்தைக்கு அப்பா அப்படின்னா பிரச்சனை இல்ல. அவங்க இல்ல அப்படின்னா என்ன பண்ண போற ?"

"நான் என்னால அதுக்கு மேல யோசிக்க முடியலடி. என்ன பண்ண போறான்னு எனக்கே தெரியல "

"சரி விடு இதை யோசிச்சிக்கிட்டு இருக்காதே உன் உடம்பு நல்லா தானே இருக்கு. தனியா எப்படி நீ மேனேஜ் பண்ணுவே. இந்த குழந்தையை வளர்க்க போறியா என்ன ? உனக்கு இன்னும் கல்யாணமே முடியல. எப்படி இந்த குழந்தையை நீ வளர்ப்ப ?அபார்ஷன் பண்ணுறது தான் பெஸ்ட் "

"மகிழனும் அதைத்தான் சொல்றான். எனக்குமே இது வளர்க்கணும் அப்படிங்கிற ஆசை எல்லாம் இல்லை. நான் எதிர்பார்த்து கிடைச்சதா என்ன இல்லையில. அப்புறம் என்ன நானே அழிக்கணும் தான் முடிவில இருக்கேன். ஆனா எனக்கு இப்ப இதுக்கு காரணம் அவன் தான் நான் இந்த முடிவில இருக்கிறேன் "

"உன்னோட விருப்பம் இதுக்கு மேல என்னால ஒன்னும் சொல்ல முடியாது. ஏதாவது உதவின்னா என் கிட்ட கேளு. இந்த டைமிங்ல அடிக்கடி வாந்தி வரும் தலை சுத்தல் வரும் டயர்டா பீல் ஆகும்னு நான் கேள்விப்பட்டு இருக்கேன். அப்படி ஏதாவதுன்னா சொல்லுடி " என்றதும், சரி எனக் கூற, தன் தோழியின் இந்த அன்பான பேச்சில் சற்று நிம்மதிக் கொண்டாள்.

இன்னும் சிறிது நேரம் அவளுக்கு ஆறுதலாகப் பேசிக் கொண்டிருக்க, நேரம் செல்ல சற்று தலைவலியும் குறைந்ததுப் போல் உணர்ந்தாள். இப்பொழுது இதை மூட்டை கட்டி வைத்து விட்டு தன் வேலையை பார்க்கலாம் நேற்று வேறு வேலைக்கு வரவில்லை இன்று அதற்கான வேலை சேர்த்து குவிந்து கிடக்கும் என நினைத்தவள் தன் இருப்பிடம் சென்றாள்.

அன்றைய நாள் முடிய இரவு நேரம் வழக்கம் போல் ஒன்றாகவே செல்வதற்காக அகலி காத்துக் கொண்டிருக்க, அவள் தனக்காக காத்திருக்கிறாள் என தெரிந்தும் வேண்டுமென்றே தன் நேரத்தினை கடத்தினான்.

கவிமகிழன் மனமோ இதற்கு மேல் தான் பேசப்போவதில்லை அவளாக தன்னிடம் வந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே உண்டு. அதுவும் இல்லாமல் தனக்கு அவள் துரோகம் செய்ததை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

ஒருவேளை அவள் அறியாது அவளுக்கு ஏதேனும் தவறு நடந்து அதனால் இக்குழந்தை உருவாகி இருக்குமோ ? அப்படி நடந்திருந்தால் சரி ஆனால் இவள் தெரிந்து இதை செய்திருந்தால் தன்னால் ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது என்பதில் உறுதியாக இருந்தான்.

ஒன்பது மணி ஆகியும் இன்னும் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் மகிழனைக் கண்டவளுக்கு அதற்கு மேல் காத்திருக்க முடியவில்லை. தலை வலிக்க உடல் சோர்வும் அவளை நித்திரைக்குச் செல் என்று அறிவுறுத்தியது.

அலுவலகத்திலிருந்து அனைவரும் எட்டு மணிக்கு எல்லாம் கிளம்பி இருந்தனர். நேராகவே மகிழனின் அறைக்குள் நுழைந்தாள்.

"இன்னும் எவ்வளவு நேரம் தான் வேலை பார்த்துட்டு இருப்ப வீட்டுக்கு போகலாம். எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு " என்க,

"உனக்கு வேணா நீ போ. எனக்கு வேலை இருக்கு " என வெறுப்பாக முகத்தை வைத்துக்கொண்டு கூறவே, மீண்டும் அவனின் மீது இறங்கிய கோபத்தை பற்றிக் கொண்டாள்.

'என்னை அவாய்ட் பண்றியா இருக்கட்டும். இன்னும் ஒரு வாரத்துல தெரிஞ்சுரும். அப்போ இருக்கு ' என்று கூறியவளோ உதட்டை சுழித்துக் கொண்டு அறையில் இருந்து வெளியேறினாள். தன் கைபேசியில் கேப் ஒன்றை புக் செய்து பத்து மணி போல் வீடு வந்துச் சேர்ந்தாள்.

அவள் நினைத்தால் அவனோடு இந்த இடத்தில் தங்காமல் வேறு எங்கும் செல்ல முடியும் ? ஆனால் அந்த பிளாக் வாங்குவதற்கு அவளும் அவளின் பங்கினை கொடுத்திருக்கிறாள் என்பதால் அவளுக்கும் அது சொந்தமான ஒன்று தான். ஏன் இந்த இடத்தை விட்டு கிளம்ப வேண்டும் ? என்ற நினைப்பில் வந்து தன்னறைக்குச் சென்றாள். அசதியில் உடை கூட மாற்றாது படுத்து விட்டாள்.

இன்னும் ஒரு வாரத்தில் தனக்கு மிகப்பெரிய இடி ஒன்று தன் தலையில் விழப்போகிறது என்பதை அறியாது நித்திரையில் இருந்தாள் அகலிகை.


தொடரும்...
 
Last edited:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
417
99
43
Tirupur
என்ன இடின்னு தெரியலையே 🧐

இவனுக்கு சாதகமா ரிசல்ட் வருமோ🤔🤔