• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கி 5

sankareswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 31, 2024
35
40
18
Chennai
அத்தியாயம் 5

(தன்னை நம்பாத நாயகியின் மீது கோவம் கொள்ளும் நாயகன் )


ஒரு வாரம் கடந்திருக்க எப்படித்தான் இந்த இடைப்பட்ட நாட்கள் சென்றதென்றே தெரியவில்லை கண்மூடி திறக்கும் நேரத்திற்குள் சென்று விட்டது. அகலி, கவிமகிழன் இருவருமே ஒன்றாகவே இருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே இல்லை. முகம் கொடுத்த பேசிய இருவருக்குள்ளும் பல நாட்கள் கடந்து விட்டது.


தினமும் அலுவலகம் செல்லும்போது முன்பெல்லாம் ஒன்றாகவே காரில் செல்வார்கள். ஆனால் இப்பொழுது மகிழன் அவனின் காரில் சென்று விட அகலி டாக்ஸி புக் செய்து சென்று விட்டாள். வெளியில் எங்கேயாவது போட்டோ சூட் செல்ல நேரிடும் போது கூட அகலியை தவிர்த்து வேறு யாரேனும் கூட அழைத்துச் செல்ல ஆரம்பித்தான்.


பிரபலமான ஐடி கம்பெனி ஒன்றின் வெப்சைட் டிசைனிங் உருவாக்குவதற்கு இவர்கள் அலுவலகத்திற்கு தான் அந்த ப்ராஜெக்டை ஒப்படைத்திருந்தனர். எப்பொழுதுமே தங்களுக்கு வெப்சைட் டிசைனிங் வந்தால் அதை அவளிடம் தான் கொடுப்பான். ஆனால் இன்று அதை கௌஷிகிடம் கொடுத்தான்.


"என்ன என்கிட்ட கொடுக்குறீங்க சார் ? எப்பவுமே அகலி மேடம் கிட்ட தானே குடுப்பீங்க ?" என்க, மற்ற அனைவரும் ஏன் அகலி கூட அங்கு தான் இருந்தாள்.


"உன்கிட்ட இந்த வேலையை கொடுத்தா நீ செய். உனக்கு கீழ ஒரு நாலு பேரை வச்சிக்கோ. நீதான் டீம் லீடர் இன்னும் இரண்டு வாரத்துக்குள்ள இந்த வெப்சைட் டிசைனிங் முடிச்சு என்கிட்ட கொடுக்கணும் " என்க, தன்னை நம்பி தன்னுடைய பாஸ் கொடுத்த முதல் வேலையை தான் நல்லபடியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம்.


தன்னை தவிர்க்கவே இவன் இவ்வாறு செய்கிறான் என்பதை உணர்ந்த அகலியோ முறைப்போடு அங்கிருந்து விலகிச் செல்ல, தன் தோழியை பரிதாபமாகப் பார்த்தாள் வந்தனா. ஏற்கனவே வயிற்றில் கருவை சுமந்துக் கொண்டு உடல்நிலை சரியில்லாமல் வாடி போய் கிடக்க, இதில் துணையாய் இல்லாத தன் முதலாளியும் அவளைக் காயப்படுத்தவே தன் தோழிக்காக பரிதவித்தாள்.


"கௌஷிக் உங்களுக்கு கீழ வேலை பார்க்கப் போற அந்த நாலு பேரு யார் யாருன்னு நீங்க சூஸ் பண்ணிட்டு எனக்கு அவங்களோட டீடெயில்ஸ் சொல்லுங்க. அவங்களுக்கு ஆல்ரெடி வெளியில ஏதாவது வேலை இருந்ததுன்னா அதை மத்தவங்களுக்கு கொடுக்கணும் "


"சரிங்க சார் எனக்கு ஒரு டூ ஹவர்ஸ் டைம் கொடுங்க. நான் உங்களுக்கு எல்லா டீடெயில்ஸ் கொடுக்கிறேன் " என்க, அகலியோ முறைத்துக் கொண்டு சென்றாள். தெரிந்தும் தெரியாதது போல் நடந்து கொண்டான் கவிமகிழன். அவனும் சென்று விட வந்தனா கௌஷிக் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


"என்னடா இது " என்க,


"நான் என்னடி பண்ணுவேன் " என்றான் கௌஷிக்.


நேரங்கள் செல்லவே இந்த வேலையை தான் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்றால் தனக்கு சீனியர் ஆன அகலி உதவி நிச்சியம் தேவைப்படும். தான் ஏன் அவளை தனக்கு கீழ் வேலை பார்க்கும் நால்வரில் ஒருவர் ஆக இருக்க வைக்க கூடாது.


முன்னொரு காலத்தில் அவளுக்கு கீழ் தான் வேலைப் பார்த்திருக்க இப்பொழுது தனக்கு கீழ் அவள் வேலை பார்ப்பாளா யோசனையோடு வந்தனாவின் கேபினுக்கு வந்தான்.


"என்னடா வேலை நேரத்தில் இங்க வந்து இருக்கே, என்ன விஷயம் ?"


"எங்கே பாஸ் என்ன நம்பி ஒரு பொறுப்பை கொடுத்து இருக்காரு. அது உனக்கு தெரியும் தானே ? அதுல நான் உன்னோட பேரு ஜாயின் பண்ணி இருக்கேன். உனக்கு சம்மதம் தானே ? நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா வேலை பார்க்கலாம். டூ வீக் நீ என் கூட டைம் ஸ்பென்ட் பண்றதுக்கு நல்ல வாய்ப்பு "


"அது சரி தான். ஆனா நீ இப்ப இதை சொல்ல வந்த மாதிரி இல்லையே. நீ எப்படியும் என் பேர் சூஸ் பண்ணுவேன்னு எனக்கு தெரியும் வேற என்ன அதை சொல்லு "


"நான் அகலி மேடம் பேரையும் சேர்த்துக்கலாம் நினைக்கிறேன் " என்ற நொடி,


"டேய் நீ என்ன லூசாடா மேடம் ஃப்ரெண்ட்ஷிப் எல்லாம் தூர தள்ளி வைக்கணும். இந்த விஷயம் மட்டும் அவளுக்கு தெரிஞ்சா அவ என்ன நினைப்பா கில்டி ஃபீல் ஆயிடும்டா. ஏன் நீ இப்படி பேசுற உன்னோட பாயிண்ட் ஆஃப் வியூல மட்டும் நீ யோசிக்காதே " என்று கௌஷிக்கு புரிய வைக்க முயற்சி செய்ய அவளுக்கு அதை தவிர வேறு வழி தெரியவில்லை என்பதால் தானே இதனை கூற நினைத்தான்.


இவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டிருக்க அப்பொழுது தான் அறையில் இருந்து வெளியே வந்த அகலியின் விழிகளில் விழுந்தது.


"என்னாச்சு ரெண்டு பேரும் ஏன் வேலை பார்க்காம சண்டை போட்டுட்டு இருக்கீங்க ? மறுபடியும் பிரச்சனையா உங்களுக்குள்ள " என்று சிரிப்போடுக் கேட்கவே, இவர்கள் இருவரும் காதலிக்கும் விஷயம் அங்கு இருக்கும் அனைவருக்கும் நன்றாக தெரியும். அதே போல் தான் இருவரும் லிவிங் டூ கெதர் உறவில் இருக்கிறார்கள் என்பதும் நன்றாக தெரிந்த ஒன்று தான்.


"ஒன்னும் இல்ல நீ வேலைய பாரு "


"அப்படியா அது சரி நீங்க இப்ப சண்டை போடுவீங்க நாளைக்கு சேர்ந்து இருப்பீங்க. நான் எதுக்கு குறுக்க வந்துக்கிட்டு " எனக் கூறி விலக முயற்சி செய்ய,


"மேடம் ஒரு நிமிஷம் " எனக் கூறி தடுத்தான் கௌஷிக்.


"என்ன கௌஷிக் சொல்லுங்க " என்க,


"டேய் சொன்னா நெனச்சுக்கோ உன்ன கொன்னுடுவேன் " மிரட்டினாள் வந்தனா.


இருவரையும் கவனித்து தான் இருந்தாள் அகலிகை. தன்னை பற்றி தான் அவன் ஏதோ கேட்க வருகிறான் அதற்குத்தான் வந்தனா கூறாதே என்று சொல்கிறாள் என்பதை உணர்ந்துக் கொண்டாள்.


ஒரு வேளை தங்களுக்குள் என்ன பிரச்சனை தான் இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறேன் என்பதை வந்தனா அவளின் காதலனிடம் கூறிவிட்டாலோ அப்படி செய்பவள் அல்ல. அவனை நம்பி விஷயத்தை சொல்லி விட்டாள் என்ன செய்ய ? ஏற்கனவே அகலிகை வந்தனாவிடம் தான் கருவுற்றிருக்கும் விஷயத்தை யாரிடமும் கூறக்கூடாது என்று தான் சொல்லி வைத்திருந்தாள். இப்பொழுது அப்படி நினைத்தவாறு நின்றாள்.


"என்ன மன்னிச்சிடு எனக்கு வேற வழி தெரியல " என தன் காதலியிடம் மெல்ல கெஞ்சும் குரலில் கூறி விட்டு, "மேடம் உங்களுக்கே தெரியும். எனக்கு காலையில சார் மிகப்பெரிய பொறுப்பு கொடுத்து இருக்காரு அதை நல்லபடியா முடிச்சு காட்டணும் "


"ஆல் தி பெஸ்ட் கண்டிப்பா நீங்க உங்களோட பெஸ்ட் குடுங்க உங்களோட ஒர்க் நான் பார்த்து இருக்கேன். உங்களால இதை பண்ண முடியும் " என்று அவனை வாழ்த்தவே,


"அதுக்கு எனக்கு உங்களோட உதவி வேணும் மேடம். சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க சார் கூட ஹெல்ப்புக்கு நாலு பேர சூஸ் பண்ண சொன்னாங்கல. அதுல நான் உங்க பேரையும் சேர்த்துக்கிட்டா. என்ன விட நீங்க சீனியர் எனக்கு தெரியாத விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியும் " என மெல்ல மெல்ல தயங்கிக்கொண்டே கேட்டான்.


"அகலி அவன் சொல்றதை நீ கேட்காத உனக்கு என்ன தோணுதோ அதை மட்டும் நீ செய் " என்று வந்தனா தடுத்து கூறினாள்.


"இதனால் என்ன எனக்கு ஒரு பிரச்சனை இல்லை. இந்த கம்பெனியோட பேரு என்னைக்கும் கெட்டு போக கூடாது இதை கஷ்டப்பட்டு உருவாக்கி இருக்கு. இதை இன்னும் அடுத்தபடிக்கு மேல தான் கொண்டு போனோமே தவிர கீழ கொண்டு போக நான் என்னைக்குமே நினைக்க மாட்டேன் நான் கீழ போனாலும் பரவாயில்லை. கண்டிப்பா என்னோட பெயரை சேர்த்துக்கோங்க. என்ன உதவினாலும் என்கிட்ட கேளுங்க கௌஷிக். இதுக்கு நீங்க தயங்கன்னு அவசியமே இல்லை " என்கவே,


"ரொம்ப தேங்க்ஸ் மேடம் தேங்க்யூ சோ மச். உங்க கிட்ட இருந்து இதை எதிர்பார்க்கவே இல்லை. வெரி வெரி சாரி இந்த விஷயம் உங்கள ஹர்ட் பண்ணி இருந்தா என்ன மன்னிச்சிடுங்க " என்று மீண்டும் ஒரு முறை சந்தோஷத்தோடு நன்றியும் மன்னிப்பும் வேண்டினான்.


"சரி சரி நீங்க போங்க போய் வேலையை பாருங்க " என்க, கௌஷிக் அங்கிருந்த சென்று விடவே, தன் தோழியைக் கண்டு திரும்பினாள் அகலிகை.


"இதனால நீங்க ரெண்டு பேரும் சண்டை போடாம இருங்க. எனக்கு இதுல எந்த மன வருத்தமும் இல்லை. என் மேல உள்ள கோவத்துல தான் இப்படி எல்லாம் பண்றான். ஆனா அதுக்காக நான் என்னோட கம்பெனியை விட்டுக்கொடுக்க முடியாது. என்னைக்குமே இந்த கம்பெனியில எனக்கு முழு உரிமை இருக்கு அத மறந்துட்டியா வந்தனா "


"அப்படிலாம் இல்லடி. நீ இந்த கம்பெனியோட முதலாளி. ஆனா உன்ன அப்படி கேட்கும் போது கஷ்டமா தானே இருக்கும். அதனால தான் சொன்னேன் "


"எந்த கஷ்டமும் இல்ல நான் கேன்டீன் போறேன் வரியா. என்னன்னு தெரியல இப்ப எல்லாம் எனக்கு ரொம்ப பசிக்குது " என்றதும், அவளும் சரி எனக் கூற இருவரும் அந்த இடத்திலிருந்து விலகிச் சென்றனர்.


கேண்டீன் நோக்கிச் செல்லும் போதே வந்தனா தன் தோழியிடம், " ஆமா அந்த டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் என்னைக்கு வருது. இப்ப உனக்கு எவ்வளவு நாளாச்சு ?" என்றுக் கேட்கவே,


"இப்ப டூ மந்த் கிட்ட ஆக போது. உனக்கே தெரியும் எனக்கு பிரீயர்ட்ஸ் லேட்டா வரும் அப்படின்னு நினைச்சேன். ஆனா இப்படி ஆகும் நான் நினைச்சு பார்க்கவே இல்லை. இன்னும் ரெண்டு மூணு நாள்ல ரிசல்ட் வந்துரும் அவங்களே எனக்கு கால் பண்றேன்னு சொல்லி இருக்காங்க "


"அப்படியா சரி இருந்தாலும் நாள் கடந்தே போகுது கொஞ்சம் யோசிச்சுக்கோ நான் எதுக்காக அப்படி சொல்றேன் அப்படின்னா அதுக்கப்புறம் நீ அந்த குழந்தையை அபார்ஷன் பண்ண நினைக்கும் போது உனக்கு தான் ரொம்ப கஷ்டம் அதனால பேசாம நீ இப்பவே போயி அத பத்தி டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணிக்கலாம் "


"எப்படி ரெண்டு நாளா ரிசல்ட் வந்திரும்ல. வந்ததும் அந்த பிரச்சனையை முடிச்சிட்டு அதுக்கப்புறம் நான் இதை ப்ரோசீட் பண்ணிக்கிறேன் "என்று இருவரும் பேசிக்கொண்டே அங்கிருந்து சென்றனர்.


இங்கு தன்னறையில் அமர்ந்து கவிமகிழன் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு இன்னும் சில நாட்களில் பிரபலமான செலிபிரட்டி ஒருவரின் இல்லத் திருவிழாவிற்கு புகைப்படம் எடுக்க வேண்டியது இருந்தது. அதற்காக என்ன பொருட்கள் எல்லாம் தேவையோ அதனை இப்பொழுது பதிவு செய்து வைத்துக் கொண்டிருந்தான்.


அப்பொழுது அவனின் அறை கதவை மெல்லத் தட்டி அனுமதி வாங்கி கௌஷிக் உள்ளே வர அனுமதித்தான்.


"என்ன கௌஷிக் நேம் எல்லாம் சூஸ் பண்ணிட்டீங்களா, யாரு அவங்க ? இப்ப என்னென்ன ஒர்க் எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. நீங்க இந்த வெப்சைட் டிசைனிங் ஏதாவது ஐடியா எல்லாம் வச்சிருக்கீங்களா ?" என்க,


"எஸ் சார் நான் எல்லாமே இந்த பைலை நோட் பண்ணி வச்சிருக்கேன். நீங்க பார்த்துட்டு இதுல ஏதாவது கரெக்ஷன் இருந்துச்சுன்னா சொல்லுங்க சார். அப்புறம் நான் தேர்ந்தெடுத்த இருக்கிற அந்த நாலு பேரோட லிஸ்டும் இதுல இருக்குது " எனக் கூறி, அந்த பைலை அவனிடம் கொடுக்கவே, அதை வாங்கி அப்பொழுதே பார்க்க ஆரம்பித்தான் கவிமகிழன்.


அவனைப் பொறுத்தவரை எதையுமே பெண்டிங் போட்டு விடுவது சுத்தமாக பிடிக்காது அப்பொழுதே முடித்து விட வேண்டும் என்று தான் நினைப்பான். அதனால் தான் என்ன முடிவு எடுத்திருக்கிறான் கௌஷிக் இந்த ப்ராஜெக்ட் பற்றி என அதனை திறந்துப் பார்க்க அதிர்ந்து விட்டான்.


"கௌஷிக் என்ன நீ அகலி பேரை எதுக்கு இதுல எழுதி இருக்க ?"


"சாரி சார் மேடம் கிட்ட கேட்டேன். அவங்க ஓகேன்னு தான் சொன்னாங்க. அதனால தான் நான் அவங்கள தேர்ந்தெடுத்தேன் "


"உனக்கு கீழ அவ வேலை பார்க்கணுமா அவ கிட்ட ப்ராஜெக்ட் போக கூடாதுன்னு தான் நான் உன்கிட்ட கொடுத்தேன். ஆனா நீ திரும்பவும் அவளை இதுக்குள்ள இருக்குற "


"இல்ல சார் அவங்களுக்கு இதுல முழு விருப்பம் தான் அவங்க சொல்லித்தான் நான் இப்படி பண்ணேன் " என்ற நொடி அகலியின் மீது கோபத்தில் இருந்தான் கவிமகிழன்.


வேண்டாம் என வெறுத்தவள் எப்படி முன்னே வந்து நிற்க, தான் ஏற்றுக் கொள்ள முடியும் ?


 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
417
100
43
Tirupur
இவனை என்ன பண்ணா தகும்? அவளும் சரிசமமான பங்குதாரர் தானே அந்த கம்பெனியில... இவன் இப்படி பண்றதெல்லாம் சரியே இல்ல. எல்லாம் ஈகோ..