அத்தியாயம் 8
(டி என் சி செய்ய நினைக்கும் அகலி.)
மருத்துவமனையில் முதல் நாள் முழுவதும் மகிழ் பார்க்கவே மறுநாள் காலை அவன் முக்கியமான வேலை இருப்பதாக சென்று விட்டான். அன்று வந்தனா தான் அவளின் அருகிலே இருந்தாள்.
தன் தோழியின் மௌனம் அவளை என்னவோ செய்தது. ஒரு வழியாக போராடி அவளின் மௌனத்தை கலைத்து உண்மையை அறிய நினைத்தாள். அவள் மனம் விட்டு பேசினால் அவளுக்கு சற்று ஆறுதலாக இருக்கும் என நினைத்தால் வந்தனா.
"எதுக்காக நீ இவ்வளோ டிப்ரஷன்ல இருக்குற சொல்லு. டாக்டர் வேற நீ இப்படி இருந்தா உன்னோட வயித்துல வளர்ற குழந்தைக்கு நல்லது இல்லைன்னு சொல்லிட்டு போயிருக்காங்க. ஆனா நீ மனசுல போட்டு எதையோ அழுத்திக்கிட்டே இருக்கிற வெளிப்படையா என்கிட்ட சொல்லு " என்று மீண்டும் மீண்டும் அதையே கேட்க வாய் திறந்தாள்.
"டி என் ஏ ரிசல்ட் வந்திருச்சு "
"சூப்பர் சார் தான் அப்பாவா, என்னாச்சு ?" என்றுக் கேட்கவே,
"இல்ல நான் எதிர்பார்த்தது தப்பா ஆயிடுச்சு. என் வாழ்க்கை இப்ப தப்பான பாதையில் போய்க்கிட்டு இருக்கு. எப்படி இந்த நிலைமைக்கு நான் வந்தேன்னு எனக்கே தெரியல. யார் காரணமும் என்னால கண்டுபிடிக்க முடியல " என்கவே,
"என்னடி சொல்ற நீ அந்த அளவு உறுதியாக இருந்தையே "
"ஆமா ஆனா ரிசல்ட் நெகட்டிவ் வந்திருச்சு "
"சரி விடு இப்ப என்ன பண்ற ஐடியால இருக்க. டாக்டர் கிட்ட நீ பேசு இப்ப ஹாஸ்பிடல்ல இருக்கும் போதே அபார்ஷன் பண்ணனும்னு சொல்லிரு "
"இதைத்தான் மகிழ் சொல்லிட்டு போனான். எப்படியும் டிஸ்சார்ஜ் பண்றதுக்குள்ள நான் கேட்கணும் " என்க, அதன் பின் அவளைப் போராடி வற்புறுத்தி உணவினை உண்ண வைத்தாள்.
ஓரளவு தன் தோழியை தேற்றி வைத்தாள் வந்தனா. இரவு நேரம் தான் தன் வீட்டுக்கு மருத்துவமனையில் இருந்து சென்றாள். அந்த இரவு நேரம் தன் வேலையை முடித்துக் கொண்டு மகிழன் வந்து விட்டான்.
இப்பொழுது இருவருக்குள்ளும் ஒரு வார்த்தை கூட பேச்சு என்பது நடக்கவில்லை. மௌனம் மட்டும் தான் இருந்தது. தன்னை கவனித்தாலுமே தன்னை நம்பாது கீழ்த்தரமாகப் பேசினான் அல்லவா அந்த எண்ணமே அவளை சுக்குநூறாக உடைய வைத்தது.
அவளாக தன்னிடம் பேசாத போது தான் ஏன் பேச வேண்டும் ? என்ற எண்ணத்தோடு அங்கிருந்து சோபாவில் படுத்து விட்டான். மறுநாள் விடிந்து விட அன்று கிளம்பலாம் என்று கூறியிருந்தார் மருத்துவர்.
அவளைப் பரிசோதித்து கொண்டிருக்கவே, "டாக்டர் நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். நீங்க எனக்கு தயவு செஞ்சி இதை பண்ணனும் " என்று மென்மையாய் தயங்கிக் கொண்ட கேட்டாள்.
"என்னம்மா சொல்லு என்ன விஷயம் ?" என்க,
"என்னோட இந்த குழந்தை எனக்கு வேண்டாம் டாக்டர். இதை அபார்ஷன் பண்ணனும் " என்கவே,
"நீ என்ன விளையாடுறியா உன்னோட குழந்தைன்னு சொல்ற ஆனா அபார்ஷன் பண்ணனும்னு சொல்லிட்டு இருக்கே. நல்லா யோசிச்சு பாரும்மா. இப்ப கூட கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்கிட்ட ஒரு பேஷன்ட் வந்தாங்க. எட்டு வருஷமா அவங்களுக்கு குழந்தை இல்லைன்னு தவிச்சுக்கிட்டு இருக்காங்க. ஒரு ஆளு ரெண்டு ஆளு இல்லை. இந்த உலகத்துல எத்தனையோ பேர் இப்படி இருக்காங்க. ஆனா உனக்கு அந்த கடவுள் தானா கொடுத்து இருக்காரு. அதை போய் வேண்டாம்னு சொல்லி அபார்ஷன் பண்ணனும்னு சொல்லிட்டு இருக்கே "
"டாக்டர் ப்ளீஸ் என் நிலைமையை புரிஞ்சுக்கோங்க எனக்கு இன்னும் மேரேஜ் ஆகவே இல்லை . அதுவுமில்லாம நாங்க லிவிங் ரிலேஷன்ஷிப்ல இருக்கோம். இந்த குழந்தைக்கு அப்பா யாருன்னு தெரியாத போது என்னால எப்படி இதை வளர்க்க முடியும் ?"
"கலாச்சாரம் கெட்டுப் போய் கிடக்கு. அது சரி தாம்மா ஆனா அம்மா நீ தானே உன் வயித்துல தானே இருக்கு பெத்துக்க போறது நீ தானே ஏன் படிச்சிருக்கேல. உன் குழந்தையை உன்னால வளர்க்க முடியாதா " என மருத்துவர் கேட்ட கேள்விக்கு அவளால் பதில் கூறவே முடியவில்லை.
அவளின் அந்த வாடிய முகத்தை கண்ட மருத்துவர் சற்று இறக்கம் கொண்டார். இருந்தும் அவர் தொழிலுக்கு துரோகம் செய்ய முன் வரவில்லை.
"இங்க பாரும்மா அபார்ஷன் பண்றது ரொம்ப தப்பு. நாளைப் பின்ன எங்களுக்கு எதுவும் பெரிய பிரச்சனை வந்துரும். அதுனால என்னால பண்ண முடியாது. உன்னோட பேரன்ட்ஸ் எல்லாம் எங்க இருக்காங்க ? அவங்க கிட்ட நீ இன்பார்ம் பண்ணு அவங்களை உன்னோட துணைக்கு வச்சு நீ இந்த குழந்தையை பார்த்துக்கோ "
"அவங்க ஃபாரின்ல இருக்காங்க அவங்களுக்கு இந்த விஷயம் தெரியாது. அவங்க என்ன முழுசா நம்பிக்கிட்டு இருக்காங்க. சொல்ல போனா இது ஒரு ரேப் எனக்கே தெரியாம இது நடந்திருக்கு நான் என்னுடைய லவ்வர் தான் காரணம்ன்னு நினைச்சேன். ஆனா அவன் காரணம் இல்லை அப்படின்னு வந்துட்டு. என்னை யாரோ தப்பா யூஸ் பண்ணி இருக்காங்க. அவங்கள நான் கண்டுபிடிச்சி நான் கோர்ட்ல கேஸ் போடணும். அதுக்கு முன்னாடி இந்த குழந்தை என்னோட வருங்காலத்தை எப்படி கொண்டு போக போகுதுன்னு தெரியல. இந்த குழந்தையை பெத்துக்கிட்டாலும் எனக்கு கெட்ட பேரு தான். இந்த குழந்தைக்கு இப்ப நான் அழிச்சாலுமே தப்பு தான். எனக்காக இந்த ஒரு விஷயத்துக்கு மட்டும் உதவி பண்ணுங்க ப்ளீஸ். எவ்வளோ செலவானாலும் பரவாயில்ல. இந்த விஷயம் வெளியே தெரியாம நான் பார்த்துக்குறேன் " என்று நீண்ட நேரமாக அவரிடம் பேசி ஒரு வழியாகப் போராடி அனுமதிக்க வைக்க முயற்சி செய்தாள்.
அவரோ, " சரிம்மா இப்ப நான் உன்னை செக் பண்றேன் உன்னோட பேபி எப்படி இருக்கு அப்படிங்கிற கண்டிஷன் பார்த்துட்டு தான் என்னால டிஎன்சி பண்ண முடியும். உன்னோட பேபி ஆர்கன்ஸ் இருந்த நேரம் எல்லாம் வளர்ந்து இருக்கும். அதனால இப்ப கொஞ்சம் சிரமம் தான் நான் ஃபர்ஸ்ட் ஸ்கேன் எடுத்து என்னன்னு பார்த்துக்கிறேன்" என்க, சரியென ஒத்துக் கொண்டாள். பின் அன்றே அவளை ஸ்கேன் எடுக்கும் அறைக்கு அழைத்துச் சென்றனர்.
அவளின் வயிற்றில் வளரும் குழந்தை எந்த அளவு இருக்கிறது என்பதை ஸ்கேன் எடுத்து பார்க்கவே அதில் குழந்தை முழுவதுமாக நன்றாக வளர்ந்திருந்தது. இப்பொழுது அவளுக்கு எழுபது நாட்கள் ஆகி இருக்கவே உடல் உறுப்பு குழந்தைக்கு வளர்ந்து இருந்தது. அவளின் கர்ப்பப்பை வீக்காக இருந்தது. அதை ஸ்கேன் மூலம் தான் கண்டுபிடித்தனர். இந்த நொடி மட்டும் அவளுக்கு இதனை அபார்ஷன் செய்தால் பின் வருங்காலத்தில் அவளுக்குத்தான் பிரச்சனை அதுவும் இல்லாமல் இப்பொழுது உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த முயற்சியில் குழந்தையை தாங்கள் வெளிய எடுக்க வேண்டுமென்றால் கர்ப்பப்பையில் மொத்தமாக நீக்கும் நிலை வந்து அதனால் உயிருக்கு எதுவும் ஆகிவிட்டால் அனைத்தையும் ஸ்கேன் மூலம் அவர்கள் கண்டுபிடித்து விட்டனர்.
இதனை அப்படியே தன் அறையில் அமர்ந்திருந்த அகலியிடம் மருத்துவர் கூறினார்.
"இப்போ நீ தான் முடிவு பண்ணனும் உனக்கு உன்னோட கர்ப்பப்பையும் உயிரும் முக்கியம் அப்படின்னா இந்த குழந்தையை நீ வளர்த்து தான் ஆகணும். இல்லன்னா இந்த குழந்தையை நீ அழிக்கணும் அப்படின்னா நாங்க கர்ப்பபையை ரிமூவ் பண்ணுவோம். அந்த நேரம் உன்னோட உயிருக்கு கூட ஆபத்து வரலாம் நீ தான் இப்போ முடிவு பண்ணனும் " என்க,
அவளால் இந்த உலகத்தை விட்டுச் செல்ல முடியாது. அவளுக்கென்று சாதிக்க வேண்டியது அதிகம் இருந்தது. அதை விட தன்னை இந்த நிலைமைக்கு காரணமானவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்பது தான் அவளின் ஆழ்மனதில் தோன்றியது.
இப்பொழுது தான் அவள் ஒன்றை உணர்ந்தாள். இந்த உலகத்தை விட்டு தானே செல்லக் கூடாது என்று நினைக்கும் போது எதுவும் அறியாத தன் வயிற்றில் வளரும் அந்த சிசு அது என்ன பாவம் செய்தது. அதை ஏன் தான் கொள்ள வேண்டும் ? எப்படியும் தனக்குள் உருவாக்கி விட்டது தான். அதனை வளர்த்தாக வேண்டும் என்ற முடிவுக்கு இப்பொழுது வந்து விட்டடாள்.
ஒருவேளை மருத்துவர் தன்னிடம் இதனை கூறாமல் இருந்தால் தான் அழித்திருப்போமா என்று நினைக்கும் போது தான் முட்டாள் தனத்தை உணர்ந்தாள். எவ்வளவு பெரிய பாவத்தை தான் செய்ய நேர்ந்து விட்டோம் என்று.
"என்னம்மா இப்ப என்ன முடிவு எடுத்திருக்கே ?" என்றுக் கேட்கவே,
"டாக்டர் நான் இந்த குழந்தையை வளர்க்கிறேன் நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். எனக்கு நீங்க புரிய வச்சிட்டீங்க " என்றாள்.
"உன்னுடைய உயிருக்கு ஆபத்து வரக்கூடாது நினைக்கிறே. அந்த சின்ன உசுரு அது மட்டும் இந்த உலகத்தை விட்டு போகலாமா. நீயாவது இந்த உலகத்தை பார்த்து வளர்ந்துட்டே. ஆனா அது என்ன அந்த உலகத்தை பார்க்கவே இல்லை. யாருக்குமே அவ்வளவு ஈஸியா இது கிடைக்காது. உனக்கு கிடைச்சிருக்கு விட்றாத நல்லபடியா இந்த பிள்ளையை வளர்த்து விடு. எந்த உறவு மாறினாலும் அம்மா புள்ள உறவு என்னைக்குமே அழியாது. மாறவும் மாறாது. அதை நீ உன் மனசுல நல்ல புரிய வச்சுக்கோ. உனக்குன்னு சொந்த இருந்தாலும் இனி எவ்வளவு சொந்தம் வந்தாலும் ரத்தத்திலிருந்து வரப்போற இந்த உறவு தான் என்னைக்கும் நிலைச்சிருக்கும். ஏன் வருங்காலத்தில் அதுவே உன்னை விட்டு போனாலும் உன்னால அதை விட்டு போக முடியாதுமா. அதனால நல்லபடியா வாழ்றதுக்கு பார் " என மீண்டும் அவளுக்கு அறிவுரை கூறவே , சரி என தலையாட்டிக் கொண்டு தான் அனுமதித்திருந்த அறைக்கு வந்தாள்.
அன்று மாலை நேரம் போல் வீட்டுக்குச் செல்லலாம் என்று மருத்துவர் அவளிடம் கூறி இருக்கவே, மருத்துவமனையில் இருந்து கிளம்பினாள்.
இப்பொழுது அவளோடு யாருமே இல்லை தனியாகத்தான் இருந்தாள். டாக்ஸி ஒன்றே புக் செய்து வீட்டுக்கு வந்து விட்டாள்.
தன்னை ஒரு நாள் முழுக்க கவனித்த தன் தோழியிடமும் காதலனிடமும் கூற வேண்டும் என்ற எண்ணம் கூட அவளுக்கு அந்த நொடி நினைவில் இல்லை. அவளின் எண்ணம் முழுவதும் இந்த சமுதாயத்தில் இந்த குழந்தையை தான் எப்படி வளர்க்க வேண்டும் என்பதில் மட்டும் தான் இருந்தது.
எப்படி தான் வீடு வந்து சேர்ந்தால் என்றே தெரியாது. நேரமும் சென்று கொண்டே இருக்க வீட்டுக்குள் நுழைந்தவளுக்கு எதுவுமே தோன்றாது அப்படியே சோபாவில் படுத்து விட்டாள். அவளின் கைபேசி சைலன்ட் மோடில் இருந்ததை அவளே கவனிக்க தவறினாள். பல முறை அழைத்து முயற்சித்துப் பார்த்து தோல்வியை தழுவி இருக்க சரி வேலை முடிந்து செல்லும் போது மருத்துவமனைச் சென்று தோழியை பார்த்து விடலாம்.
அவளுக்கு டிஎன்சி செய்திருந்தால் அவள் அசதியில் இருப்பாள். தான் இரவு துணையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தாள்.
அதனால் கூட தன் கைபேசியை எடுக்காமல் இருக்கலாம் மயக்கத்தில் இருக்க வாய்ப்பு இருக்கிறது என நினைக்க அவளுக்கு அதிர்ச்சியை கொடுத்தது ஒரே ஒரு விஷயம் அன்று அலுவலகம் வந்திருந்தாள் கவிமகிழன்.
இங்கு வந்திருக்கிறான் தன்னையும் அவளோடு இருக்க கூறவில்லை அப்படி என்றால் அகலி அங்கே தனியாக இருக்கிறாள். நேற்று முழுவதும் தான் இருந்திருக்கிறேன் இன்றாவது இவன் உடன் இருப்பான் என்று நினைத்திருக்க இவன் அலுவலகம் வந்தது அவளுக்கு ஏமாற்றம் கொடுத்தது.
அதனால் தான் பலமுறை முயற்சி செய்தாள். தன் தோழி எடுக்காது பயத்தையும் கொடுத்தது. இப்படி அவளின் மீது அக்கறை கொண்ட ஒருவளாக வந்தனா இருக்க , அக்கறை இருந்தாலும் அதை மறைத்து கடமைக்காக சுற்றி வரும் ஒருவனாக கவி மகிழன் இருந்தான்.
இருவரையும் தன் நினைவில் இருந்து தூரத் தள்ளி வைத்து தன் உதிரத்தில் இருந்து வெளிவரப் போகும் புது மலரை பற்றி மட்டுமே யோசனையில் இருந்தால் அகலிகை.
தொடரும்...
(டி என் சி செய்ய நினைக்கும் அகலி.)
மருத்துவமனையில் முதல் நாள் முழுவதும் மகிழ் பார்க்கவே மறுநாள் காலை அவன் முக்கியமான வேலை இருப்பதாக சென்று விட்டான். அன்று வந்தனா தான் அவளின் அருகிலே இருந்தாள்.
தன் தோழியின் மௌனம் அவளை என்னவோ செய்தது. ஒரு வழியாக போராடி அவளின் மௌனத்தை கலைத்து உண்மையை அறிய நினைத்தாள். அவள் மனம் விட்டு பேசினால் அவளுக்கு சற்று ஆறுதலாக இருக்கும் என நினைத்தால் வந்தனா.
"எதுக்காக நீ இவ்வளோ டிப்ரஷன்ல இருக்குற சொல்லு. டாக்டர் வேற நீ இப்படி இருந்தா உன்னோட வயித்துல வளர்ற குழந்தைக்கு நல்லது இல்லைன்னு சொல்லிட்டு போயிருக்காங்க. ஆனா நீ மனசுல போட்டு எதையோ அழுத்திக்கிட்டே இருக்கிற வெளிப்படையா என்கிட்ட சொல்லு " என்று மீண்டும் மீண்டும் அதையே கேட்க வாய் திறந்தாள்.
"டி என் ஏ ரிசல்ட் வந்திருச்சு "
"சூப்பர் சார் தான் அப்பாவா, என்னாச்சு ?" என்றுக் கேட்கவே,
"இல்ல நான் எதிர்பார்த்தது தப்பா ஆயிடுச்சு. என் வாழ்க்கை இப்ப தப்பான பாதையில் போய்க்கிட்டு இருக்கு. எப்படி இந்த நிலைமைக்கு நான் வந்தேன்னு எனக்கே தெரியல. யார் காரணமும் என்னால கண்டுபிடிக்க முடியல " என்கவே,
"என்னடி சொல்ற நீ அந்த அளவு உறுதியாக இருந்தையே "
"ஆமா ஆனா ரிசல்ட் நெகட்டிவ் வந்திருச்சு "
"சரி விடு இப்ப என்ன பண்ற ஐடியால இருக்க. டாக்டர் கிட்ட நீ பேசு இப்ப ஹாஸ்பிடல்ல இருக்கும் போதே அபார்ஷன் பண்ணனும்னு சொல்லிரு "
"இதைத்தான் மகிழ் சொல்லிட்டு போனான். எப்படியும் டிஸ்சார்ஜ் பண்றதுக்குள்ள நான் கேட்கணும் " என்க, அதன் பின் அவளைப் போராடி வற்புறுத்தி உணவினை உண்ண வைத்தாள்.
ஓரளவு தன் தோழியை தேற்றி வைத்தாள் வந்தனா. இரவு நேரம் தான் தன் வீட்டுக்கு மருத்துவமனையில் இருந்து சென்றாள். அந்த இரவு நேரம் தன் வேலையை முடித்துக் கொண்டு மகிழன் வந்து விட்டான்.
இப்பொழுது இருவருக்குள்ளும் ஒரு வார்த்தை கூட பேச்சு என்பது நடக்கவில்லை. மௌனம் மட்டும் தான் இருந்தது. தன்னை கவனித்தாலுமே தன்னை நம்பாது கீழ்த்தரமாகப் பேசினான் அல்லவா அந்த எண்ணமே அவளை சுக்குநூறாக உடைய வைத்தது.
அவளாக தன்னிடம் பேசாத போது தான் ஏன் பேச வேண்டும் ? என்ற எண்ணத்தோடு அங்கிருந்து சோபாவில் படுத்து விட்டான். மறுநாள் விடிந்து விட அன்று கிளம்பலாம் என்று கூறியிருந்தார் மருத்துவர்.
அவளைப் பரிசோதித்து கொண்டிருக்கவே, "டாக்டர் நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். நீங்க எனக்கு தயவு செஞ்சி இதை பண்ணனும் " என்று மென்மையாய் தயங்கிக் கொண்ட கேட்டாள்.
"என்னம்மா சொல்லு என்ன விஷயம் ?" என்க,
"என்னோட இந்த குழந்தை எனக்கு வேண்டாம் டாக்டர். இதை அபார்ஷன் பண்ணனும் " என்கவே,
"நீ என்ன விளையாடுறியா உன்னோட குழந்தைன்னு சொல்ற ஆனா அபார்ஷன் பண்ணனும்னு சொல்லிட்டு இருக்கே. நல்லா யோசிச்சு பாரும்மா. இப்ப கூட கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்கிட்ட ஒரு பேஷன்ட் வந்தாங்க. எட்டு வருஷமா அவங்களுக்கு குழந்தை இல்லைன்னு தவிச்சுக்கிட்டு இருக்காங்க. ஒரு ஆளு ரெண்டு ஆளு இல்லை. இந்த உலகத்துல எத்தனையோ பேர் இப்படி இருக்காங்க. ஆனா உனக்கு அந்த கடவுள் தானா கொடுத்து இருக்காரு. அதை போய் வேண்டாம்னு சொல்லி அபார்ஷன் பண்ணனும்னு சொல்லிட்டு இருக்கே "
"டாக்டர் ப்ளீஸ் என் நிலைமையை புரிஞ்சுக்கோங்க எனக்கு இன்னும் மேரேஜ் ஆகவே இல்லை . அதுவுமில்லாம நாங்க லிவிங் ரிலேஷன்ஷிப்ல இருக்கோம். இந்த குழந்தைக்கு அப்பா யாருன்னு தெரியாத போது என்னால எப்படி இதை வளர்க்க முடியும் ?"
"கலாச்சாரம் கெட்டுப் போய் கிடக்கு. அது சரி தாம்மா ஆனா அம்மா நீ தானே உன் வயித்துல தானே இருக்கு பெத்துக்க போறது நீ தானே ஏன் படிச்சிருக்கேல. உன் குழந்தையை உன்னால வளர்க்க முடியாதா " என மருத்துவர் கேட்ட கேள்விக்கு அவளால் பதில் கூறவே முடியவில்லை.
அவளின் அந்த வாடிய முகத்தை கண்ட மருத்துவர் சற்று இறக்கம் கொண்டார். இருந்தும் அவர் தொழிலுக்கு துரோகம் செய்ய முன் வரவில்லை.
"இங்க பாரும்மா அபார்ஷன் பண்றது ரொம்ப தப்பு. நாளைப் பின்ன எங்களுக்கு எதுவும் பெரிய பிரச்சனை வந்துரும். அதுனால என்னால பண்ண முடியாது. உன்னோட பேரன்ட்ஸ் எல்லாம் எங்க இருக்காங்க ? அவங்க கிட்ட நீ இன்பார்ம் பண்ணு அவங்களை உன்னோட துணைக்கு வச்சு நீ இந்த குழந்தையை பார்த்துக்கோ "
"அவங்க ஃபாரின்ல இருக்காங்க அவங்களுக்கு இந்த விஷயம் தெரியாது. அவங்க என்ன முழுசா நம்பிக்கிட்டு இருக்காங்க. சொல்ல போனா இது ஒரு ரேப் எனக்கே தெரியாம இது நடந்திருக்கு நான் என்னுடைய லவ்வர் தான் காரணம்ன்னு நினைச்சேன். ஆனா அவன் காரணம் இல்லை அப்படின்னு வந்துட்டு. என்னை யாரோ தப்பா யூஸ் பண்ணி இருக்காங்க. அவங்கள நான் கண்டுபிடிச்சி நான் கோர்ட்ல கேஸ் போடணும். அதுக்கு முன்னாடி இந்த குழந்தை என்னோட வருங்காலத்தை எப்படி கொண்டு போக போகுதுன்னு தெரியல. இந்த குழந்தையை பெத்துக்கிட்டாலும் எனக்கு கெட்ட பேரு தான். இந்த குழந்தைக்கு இப்ப நான் அழிச்சாலுமே தப்பு தான். எனக்காக இந்த ஒரு விஷயத்துக்கு மட்டும் உதவி பண்ணுங்க ப்ளீஸ். எவ்வளோ செலவானாலும் பரவாயில்ல. இந்த விஷயம் வெளியே தெரியாம நான் பார்த்துக்குறேன் " என்று நீண்ட நேரமாக அவரிடம் பேசி ஒரு வழியாகப் போராடி அனுமதிக்க வைக்க முயற்சி செய்தாள்.
அவரோ, " சரிம்மா இப்ப நான் உன்னை செக் பண்றேன் உன்னோட பேபி எப்படி இருக்கு அப்படிங்கிற கண்டிஷன் பார்த்துட்டு தான் என்னால டிஎன்சி பண்ண முடியும். உன்னோட பேபி ஆர்கன்ஸ் இருந்த நேரம் எல்லாம் வளர்ந்து இருக்கும். அதனால இப்ப கொஞ்சம் சிரமம் தான் நான் ஃபர்ஸ்ட் ஸ்கேன் எடுத்து என்னன்னு பார்த்துக்கிறேன்" என்க, சரியென ஒத்துக் கொண்டாள். பின் அன்றே அவளை ஸ்கேன் எடுக்கும் அறைக்கு அழைத்துச் சென்றனர்.
அவளின் வயிற்றில் வளரும் குழந்தை எந்த அளவு இருக்கிறது என்பதை ஸ்கேன் எடுத்து பார்க்கவே அதில் குழந்தை முழுவதுமாக நன்றாக வளர்ந்திருந்தது. இப்பொழுது அவளுக்கு எழுபது நாட்கள் ஆகி இருக்கவே உடல் உறுப்பு குழந்தைக்கு வளர்ந்து இருந்தது. அவளின் கர்ப்பப்பை வீக்காக இருந்தது. அதை ஸ்கேன் மூலம் தான் கண்டுபிடித்தனர். இந்த நொடி மட்டும் அவளுக்கு இதனை அபார்ஷன் செய்தால் பின் வருங்காலத்தில் அவளுக்குத்தான் பிரச்சனை அதுவும் இல்லாமல் இப்பொழுது உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த முயற்சியில் குழந்தையை தாங்கள் வெளிய எடுக்க வேண்டுமென்றால் கர்ப்பப்பையில் மொத்தமாக நீக்கும் நிலை வந்து அதனால் உயிருக்கு எதுவும் ஆகிவிட்டால் அனைத்தையும் ஸ்கேன் மூலம் அவர்கள் கண்டுபிடித்து விட்டனர்.
இதனை அப்படியே தன் அறையில் அமர்ந்திருந்த அகலியிடம் மருத்துவர் கூறினார்.
"இப்போ நீ தான் முடிவு பண்ணனும் உனக்கு உன்னோட கர்ப்பப்பையும் உயிரும் முக்கியம் அப்படின்னா இந்த குழந்தையை நீ வளர்த்து தான் ஆகணும். இல்லன்னா இந்த குழந்தையை நீ அழிக்கணும் அப்படின்னா நாங்க கர்ப்பபையை ரிமூவ் பண்ணுவோம். அந்த நேரம் உன்னோட உயிருக்கு கூட ஆபத்து வரலாம் நீ தான் இப்போ முடிவு பண்ணனும் " என்க,
அவளால் இந்த உலகத்தை விட்டுச் செல்ல முடியாது. அவளுக்கென்று சாதிக்க வேண்டியது அதிகம் இருந்தது. அதை விட தன்னை இந்த நிலைமைக்கு காரணமானவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்பது தான் அவளின் ஆழ்மனதில் தோன்றியது.
இப்பொழுது தான் அவள் ஒன்றை உணர்ந்தாள். இந்த உலகத்தை விட்டு தானே செல்லக் கூடாது என்று நினைக்கும் போது எதுவும் அறியாத தன் வயிற்றில் வளரும் அந்த சிசு அது என்ன பாவம் செய்தது. அதை ஏன் தான் கொள்ள வேண்டும் ? எப்படியும் தனக்குள் உருவாக்கி விட்டது தான். அதனை வளர்த்தாக வேண்டும் என்ற முடிவுக்கு இப்பொழுது வந்து விட்டடாள்.
ஒருவேளை மருத்துவர் தன்னிடம் இதனை கூறாமல் இருந்தால் தான் அழித்திருப்போமா என்று நினைக்கும் போது தான் முட்டாள் தனத்தை உணர்ந்தாள். எவ்வளவு பெரிய பாவத்தை தான் செய்ய நேர்ந்து விட்டோம் என்று.
"என்னம்மா இப்ப என்ன முடிவு எடுத்திருக்கே ?" என்றுக் கேட்கவே,
"டாக்டர் நான் இந்த குழந்தையை வளர்க்கிறேன் நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். எனக்கு நீங்க புரிய வச்சிட்டீங்க " என்றாள்.
"உன்னுடைய உயிருக்கு ஆபத்து வரக்கூடாது நினைக்கிறே. அந்த சின்ன உசுரு அது மட்டும் இந்த உலகத்தை விட்டு போகலாமா. நீயாவது இந்த உலகத்தை பார்த்து வளர்ந்துட்டே. ஆனா அது என்ன அந்த உலகத்தை பார்க்கவே இல்லை. யாருக்குமே அவ்வளவு ஈஸியா இது கிடைக்காது. உனக்கு கிடைச்சிருக்கு விட்றாத நல்லபடியா இந்த பிள்ளையை வளர்த்து விடு. எந்த உறவு மாறினாலும் அம்மா புள்ள உறவு என்னைக்குமே அழியாது. மாறவும் மாறாது. அதை நீ உன் மனசுல நல்ல புரிய வச்சுக்கோ. உனக்குன்னு சொந்த இருந்தாலும் இனி எவ்வளவு சொந்தம் வந்தாலும் ரத்தத்திலிருந்து வரப்போற இந்த உறவு தான் என்னைக்கும் நிலைச்சிருக்கும். ஏன் வருங்காலத்தில் அதுவே உன்னை விட்டு போனாலும் உன்னால அதை விட்டு போக முடியாதுமா. அதனால நல்லபடியா வாழ்றதுக்கு பார் " என மீண்டும் அவளுக்கு அறிவுரை கூறவே , சரி என தலையாட்டிக் கொண்டு தான் அனுமதித்திருந்த அறைக்கு வந்தாள்.
அன்று மாலை நேரம் போல் வீட்டுக்குச் செல்லலாம் என்று மருத்துவர் அவளிடம் கூறி இருக்கவே, மருத்துவமனையில் இருந்து கிளம்பினாள்.
இப்பொழுது அவளோடு யாருமே இல்லை தனியாகத்தான் இருந்தாள். டாக்ஸி ஒன்றே புக் செய்து வீட்டுக்கு வந்து விட்டாள்.
தன்னை ஒரு நாள் முழுக்க கவனித்த தன் தோழியிடமும் காதலனிடமும் கூற வேண்டும் என்ற எண்ணம் கூட அவளுக்கு அந்த நொடி நினைவில் இல்லை. அவளின் எண்ணம் முழுவதும் இந்த சமுதாயத்தில் இந்த குழந்தையை தான் எப்படி வளர்க்க வேண்டும் என்பதில் மட்டும் தான் இருந்தது.
எப்படி தான் வீடு வந்து சேர்ந்தால் என்றே தெரியாது. நேரமும் சென்று கொண்டே இருக்க வீட்டுக்குள் நுழைந்தவளுக்கு எதுவுமே தோன்றாது அப்படியே சோபாவில் படுத்து விட்டாள். அவளின் கைபேசி சைலன்ட் மோடில் இருந்ததை அவளே கவனிக்க தவறினாள். பல முறை அழைத்து முயற்சித்துப் பார்த்து தோல்வியை தழுவி இருக்க சரி வேலை முடிந்து செல்லும் போது மருத்துவமனைச் சென்று தோழியை பார்த்து விடலாம்.
அவளுக்கு டிஎன்சி செய்திருந்தால் அவள் அசதியில் இருப்பாள். தான் இரவு துணையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தாள்.
அதனால் கூட தன் கைபேசியை எடுக்காமல் இருக்கலாம் மயக்கத்தில் இருக்க வாய்ப்பு இருக்கிறது என நினைக்க அவளுக்கு அதிர்ச்சியை கொடுத்தது ஒரே ஒரு விஷயம் அன்று அலுவலகம் வந்திருந்தாள் கவிமகிழன்.
இங்கு வந்திருக்கிறான் தன்னையும் அவளோடு இருக்க கூறவில்லை அப்படி என்றால் அகலி அங்கே தனியாக இருக்கிறாள். நேற்று முழுவதும் தான் இருந்திருக்கிறேன் இன்றாவது இவன் உடன் இருப்பான் என்று நினைத்திருக்க இவன் அலுவலகம் வந்தது அவளுக்கு ஏமாற்றம் கொடுத்தது.
அதனால் தான் பலமுறை முயற்சி செய்தாள். தன் தோழி எடுக்காது பயத்தையும் கொடுத்தது. இப்படி அவளின் மீது அக்கறை கொண்ட ஒருவளாக வந்தனா இருக்க , அக்கறை இருந்தாலும் அதை மறைத்து கடமைக்காக சுற்றி வரும் ஒருவனாக கவி மகிழன் இருந்தான்.
இருவரையும் தன் நினைவில் இருந்து தூரத் தள்ளி வைத்து தன் உதிரத்தில் இருந்து வெளிவரப் போகும் புது மலரை பற்றி மட்டுமே யோசனையில் இருந்தால் அகலிகை.
தொடரும்...