அத்தியாயம் 9
(காதலை புரிந்துக் கொள்ளும் கவிமகிழன், விலகும் அகலிகை )
வேலையை முடித்துக் கொண்டு வெளியே வந்த வந்தனா தான் புக் செய்திருந்த கேப்புக்காக காத்திருந்தாள். அப்போது சரியாக அங்கு கௌஷிக் வந்தான்.
"ஹே வா நானே உன்ன டிராப் பண்றேன் " என்கவே,
"இல்லை. நான் இப்ப ஹாஸ்பிட்டல் போறேன். நீ போ. கேப் புக் பண்ணி இருக்கேன், வந்துரும் வந்ததும் நான் அதுல போய்க்கிறேன் " என்றாள்.
"ஹாஸ்பிட்டல் எதுக்கு போற ? உங்க வீட்ல யாருக்கும் உடம்பு சரியில்லையா, என்னாச்சு ?"என்று வேகமாய்க் கேட்கவே,
" நான் தான் சொன்னேன்ல அகலிக்கு உடம்பு சரியில்ல அப்படின்னு "
" ஆமா சொன்ன ஆனா ஹாஸ்பிட்டல்ல இருக்கிற அளவுக்கு உடம்பு சரியில்லையா ?அதனால தான் இந்த ரெண்டு நாள் ஆபீஸ்க்கு வரலையோ. அப்படி என்ன தான் பிரச்சனை ?" என்று ஏதோ இருக்கிறது தன்னவன் இந்த அளவுக்கு அவளுக்காக வருந்துகிறாளே அப்படி என்றால் தன்னிடம் எதையும் மறைக்கிறாள் என்பதை அறிந்து கௌஷிக் கேட்க,
"அப்படிலாம் ஒன்னும் இல்ல அவளுக்கு திடீர்னு ஃபீவர் ரொம்ப ஹையானதுல ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ண சொல்லிட்டாங்க. இப்ப மூணு நாளா ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கா. இன்னைக்கு டிஸ்சார்ஜ் ஆகிருவான்னு சொன்னா. ஆனா நான் கால் பண்ணா எடுக்கல. ஒரு வேளை ஹாஸ்பிட்டல் தான் இருக்காளா என்னன்னு தெரியல ? நேத்து முழுக்க நான் பார்த்துக்கிட்டேன். அதுக்கு முன்னால சார் பார்த்துக்கிட்டாரு. இன்னைக்கு தனியா தான் இருக்கா. சரி அவள போய் பார்த்துட்டு நைட் அவ கூட ஸ்டே பண்ணலாம்னு நினைச்சிட்டு இருந்தேன் "
"சரி எந்த ஹாஸ்பிட்டல்ல இருக்கா. வா நானே டிராப் பண்றேன் " என அழைக்க, அதே நேரம் அங்கு தன் காரில் வந்து நின்றான் கவிமகிழன்.
"என்னாச்சு ஆபீஸ் முடிஞ்சு ரெண்டு பேரும் ஏன் இங்கே நின்னு பேசிட்டு இருக்கீங்க ?" என்றுக் கேட்கவே,
' இவன் ஒருத்தன் ஆபீஸ்க்குள்ள வச்சு பேசினாலும் வேலைய பாருங்க சொல்றது வெளியே வச்சும் பேச விடுறது கிடையாது. ஆனா இவன் மட்டும் நல்லா அவனோட லவ்வர் கூட ஜாலியா என்ஜாய் பண்றது ' என மனதுக்குள் நினைத்த கௌஷிக் "சும்மா பேசிட்டு இருந்தோம் அகலி மேடம்க்கு உடம்பு சரியில்ல ஹாஸ்பிட்டல்ல இருக்காங்கல வந்தனா போகணும்னு சொன்னா அதான் நானே டிராப் பண்றேன்னு சொல்லி பேசிக்கிட்டு இருந்தோம் சார் வேற ஒன்னும் இல்ல " என்றான்.
" வந்தனா உங்களுக்கு ஓகேன்னா நீங்க என் கூட வாங்க. நான் இப்ப ஹாஸ்பிட்டல் தான் போறேன் " என்கவே, அவளோ தன் காதலனை பார்த்து தவிர்க்க முடியாது என்பதால் விழிகளாலே அவனிடம் அனுமதி வாங்கினாள்.
"சரி போய்ட்டு வா நாளைக்கு மீட் பண்ணலாம் " என கௌஷிக் கூறவே, சரி எனக் கூறி கவி மகிழனின் காரில் வந்து அமர அவர்கள் அங்கிருந்துக் கிளம்பினர்.
அவர்கள் சென்ற பின் தான் பைக்கை எடுத்துக் கொண்டு சென்றான் கௌஷிக்.
அரை மணி நேரப் பயணத்திற்கு பிறகு இருவரும் மருத்துவமனை வந்துச் சேர, அகலி தங்கியிருந்த அறைக்குத்தான் சென்றனர். அங்கு அறை வெறுமையாக இருக்க, அவள் தான் மாலை நேரமே வீட்டுக்குச் சென்று விட்டாலே !
அவள் இருந்த யோசனையில் இவர்கள் இருவரிடமும் கூறாமல் இருந்து விட்டாள். ஆனால் இவர்கள் தேடி இங்கு வந்து ஏமாற்றம் கொண்டனர். பின் வரவேற்பில் சென்று அவளைப் பற்றி விசாரித்தனர்.
"அவங்கள நாங்க ஈவினிங்கே டிஸ்சார்ஜ் பண்ணிட்டோம் அவங்க வீட்டுக்கு போயிட்டாங்க " என்றதும்,
"ஏன் தான் இப்படி பண்றாலோ அவ விருப்பத்துக்கு இருக்கிறா ஒரு வார்த்தை சொல்றதுக்கு என்ன ஆகும். வேணுன்னு அலைய வைக்கணும்னு நினைச்சுக்கிட்டு இருக்கா " என்று கோபத்தோடு புலம்பவே,
"சார் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. அகலி என் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா. இந்த நேரம் நீங்க அவ மேல கோபப்படுறது காரணம் சரியா இருந்தாலும் ஆனா நேரமும் சூழ்நிலையும் இப்போ சரியானது இல்லை "
"இங்க பாருங்க வந்தனா எனக்கு ஒன்னும் அவ கூட சண்ட போடணும்னு ஆசை எல்லாம் இல்ல. ஆனா அவ பண்றது எல்லாம் நீங்களும் பார்த்துக்கிட்டு தானே இருக்கீங்க ? சொல்ற விஷயத்தை கேட்கவே மாட்டேங்குற இப்படியே போனா நாங்க பிரேக்அப் பண்ணிட்டு தான் போகணும்"
"அது நீங்க ரெண்டு பேரும் பேசி முடிவு பண்ணிக்கோங்க சார். சரி நான் கிளம்புறேன். எப்படியும் வீட்டுக்கு தான் போயிருப்பா நான் கால் பண்ணி பார்த்தேன் எடுக்கல. நீங்க வீட்ல போயி பார்த்துட்டு எனக்கு மட்டும் கால் பண்ண சொல்றீங்களா ப்ளீஸ் சார் " என விழிகளை சுருக்கி கெஞ்சுதலோடு கூறவே, அவளின் தோழியை எண்ணி மன வருத்தம் கொள்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான் கவி மகிழன்.
"சரி நான் சொல்றேன். உங்க வீட்ல வேணா நான் டிராப் பண்ணவா இல்ல நீங்க போயிடுவீங்களா ?"
"நான் போய்கிடுவேன் சார் " என்றாள்.
பின் தன் காரினை எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான். மகிழன் வீடு வந்த சேர்வதற்கு இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது ஏற்கனவே காலையிலிருந்து வேலை பார்த்த அசதியும் இதில் தன்னை அவள் அலையவிட்டால் என்ற எண்ணமுமே அவனை உச்சத்தின் கோபத்துக்கு கொண்டுச் சென்றது. வேகமோடு அழைப்பு மணியை ஒளிர விட, நேரம் சென்ற பின்னே தள்ளாடிக் கொண்டு வந்து அதனை திறந்தாள்.
இப்பொழுது அவளுக்கு முற்றிலும் காய்ச்சல் காணாமல் போயிருந்தது. ஆனால் அசதியும் மனம் தளர்ந்த உணர்வால் வாடிய தோற்றமுமாக இருந்தாள்.
"அப்படி என்ன பண்ணிக்கிட்டு இருக்க வந்து உனக்கு கதவை திறக்க இவ்வளவு நேரமா ?ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டுக்கு வந்திருக்க ஆனா என்கிட்ட ஒரு வார்த்தை கூட நீ சொல்லவே இல்ல. உன் மனசுல அப்படி நீ என்ன தான் நினைச்சுக்கிட்டு இருக்க ? போனா போகுதுன்னு தனியா விடக்கூடாதுன்னு ஒரு நாள் முழுக்க உனக்காக நான் ஹாஸ்பிட்டல் என்னோட எல்லா வேலையும் விட்டுட்டு நாய் மாதிரி உனக்கு சேவகம் பண்ணிட்டு கிடந்தேன். ஆனா நீ அதை எல்லாம் பெருசாவே எடுக்காம உன் விருப்பத்துக்கு சுத்திக்கிட்டு இருக்கே " என்று வீட்டுக்குள் நுழைந்த நொடியை தன் ஷூவை கழட்ட ஆரம்பித்ததில் இருந்து கையில் இருந்த வாட்ச் முதற்கொண்டு அனைத்தையும் கழட்டி வீசி எறிந்து கத்திக்கொண்டு இருந்தான்
"ப்ளீஸ் நானே ஏற்கனவே முடியாம இருக்கேன். இதுல நீ இப்படி கத்தி பேசுற எனக்கு ஒரு மாதிரியா இருக்கு " என மென்மையாய்க் கூறவே,
"கத்தாதேவா, என்ன கத்துற மாதிரி பேச வைக்கிறது நீ. இதுக்கு முன்னாடி இந்த அளவுக்கு நமக்குள்ள எப்பயாவது சண்டை வந்து இருக்கா. இப்ப வந்ததுக்கு காரணம் யாரு ? அதுவும் நீதான் மத்தவங்கள பத்தி என்னைக்குமே யோசிக்காதே. உன்ன மட்டுமே நீ நினைக்கிற. இப்ப என்ன தான் முடிவு பண்ணி இருக்க டாக்டர் கிட்ட பேசுனியா பேசலையா ?"
"பேசிட்டேன் "
"என்ன தான் சொன்னாங்க அப்பறம் எதுக்கு நீ வீட்டுக்கு வந்து இருக்கே ?"
"நான் இந்த குழந்தையை வளர்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் " எனக் கூறிய நொடி அப்பொழுது தான் அமர்ந்தவனோ அதிர்ச்சியோடு எழுந்து விட்டான்.
"நீ என்ன லூசா? இந்த குழந்தையை வளர்க்க போறேன்னு சொல்ற ?"
"என்னாச்சு இது என்னோட குழந்தை தானே, நான் வளர்க்கறதுல என்ன தப்பு இருக்கு ?"
"நம்மளோட ஃபியூச்சர் பத்தி நீ நெனச்சு பார்த்தியா இந்த குழந்தையை நினைச்சுக்கிட்டு இருக்க இது ஒன்னும் உன் குழந்தையே இல்லை. எவனோ ஒருத்தன் பண்ணுன வேலை. அதை போய் சுமக்க போறேன்னு சொல்லிட்டு இருக்க .வாழ்நாள் முழுக்க இது உனக்கு ஒரு நரகமாக போய்விடும் "
"என் வயித்துல வளர இந்த குழந்தை உன்னோட குழந்தையா இருந்தா நீ இப்படி சொல்லி இருப்பியா ?"
"சத்தியமா சொல்லி இருக்க மாட்டேன் "
"அப்போ உனக்கு ஒரு நியாயம் எனக்கு நான் ஒரு நியாயமா ? நான் வளர்க்க கூடாதா என்ன, இந்த குழந்தையோட அப்பா எவன்னு தெரியல தான் , ஆனா அம்மா நான் தானே நான் இருக்கும் போது என் குழந்தையை எதுக்கு நான் அழிக்கணும். நான் இத்தனை நாள் இதோட மதிப்பு உணராம இருந்துட்டேன். ஆனா இன்னைக்கு நான் உணர்ந்து இருக்கேன். அதனால இத நான் வளர்க்க போறேன். என்னால இந்த குழந்தையை அழிக்க முடியாது. என் குழந்தையை பெத்துக்க முடியல அப்படின்னு போது நான் எதுக்காக இந்த உலகத்துல வாழணும் "
"என்ன நீ இப்பல்லாம் உன் பேச்சு ரொம்ப வித்தியாசமா இருக்கு. இந்த உலகத்துக்கு நம்ம வந்தது சுதந்திரமா வாழத்தான். கடமைப்பட்டு வாழ்றதுக்கு எல்லாம் கிடையாது. அடுத்தவங்களை சார்ந்து எப்பவுமே வாழக்கூடாது அப்படின்னு தான் நம்ம லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்ல இருந்தோம். குடும்பம் குட்டி குழந்தை இதெல்லாம் வச்சு வாழணும்னா நம்ம எப்பயோ கல்யாணம் பண்ணி இருந்திருக்கலாம். அதெல்லாம் எதுக்கு அந்த கட்டாயத்துக்குள்ள நம்ம திணிக்க கூடாதுன்னு சுதந்திரமா இருக்கணும்னு நினைச்சு நம்ம இந்த உறவுல இருந்தோம். நீ அந்த உறவுக்குள்ளே போகணும்னு நினைக்கிற அது இல்லாம இப்ப என்ன நீ வித்தியாசமான பேசிக்கிட்டு இருக்கே ? வாட்ஸ் ராங் வித் யூ ?"
"வாழ்க்கையோட புரிதல் வித்தியாசமா தான் இருக்கு. நான் இத்தனை நாள் எதையுமே புரிஞ்சுக்காம இருந்துட்டேன். நம்ம ஏன் மத்தவங்க மாதிரி அடிமைப்பட்டு இருக்க கூடாது நினைச்சு தான் சுதந்திரமா இருக்கணும் அப்படின்னு உன்கிட்ட சொன்னேன். ஆனா அந்த சுதந்திரம் என்ன அப்படிங்கறதை நானே உண்மையான அர்த்தத்தோட உணராம இருந்துட்டேன். இப்ப தான் எனக்கு எல்லாமே புரிஞ்சிருக்கு. இதுக்கப்புறம் நம்ம இத பத்தி பேச வேண்டாம் "
"பேச வேண்டான்னா என்ன அர்த்தம் ? என்னால அப்படி எல்லாம் உன்னை விட முடியாது எனக்கு நீ வேணும் ? "
"வேணும்னா நீ என்ன அர்த்தத்துல பேசுற ? நமக்குள்ள செக்ஸுவல் ரிலேஷன்ஷிப் மட்டும் உனக்கு தேவைப்படுதா ? அதனால தானே இருந்தோம் உனக்கு அது இல்லாம இருக்க முடியாது அதுக்காக நான் தேவைப்படுறேனா ?"
"உன் மனசுல நான் அதுக்காக தான் உன்கிட்ட பழகுறேன் அப்படின்னா அந்த தேவைக்கு நான் எத்தனையோ பொண்ணுங்கள அனுபவிச்சி இருக்கலாம். நான் அப்படி எல்லாம் பண்ணல. நீதான் உன் கூட நான் இருக்கணும்னு ஆசைப்பட்டேன். இனி மேலும் இருக்கணும் நினைக்கிறேன். ஆனா உன் வயித்துல நீ வேற ஒருத்தனுடைய குழந்தையை சுமந்துக்கிட்டு இருக்கே. இப்ப நீ எனக்கு சொந்தமானவ இல்லை. எனக்கு நீ மட்டுமே சொந்தமாக நெனச்சுக்கிட்டு இருக்கேன். அதனால தான் நான் சொல்றேன் இந்த குழந்தை வேண்டாம் நம்ம வேணும்ன்னா கல்யாணம் கூட பண்ணிக்கலாம்"
"இப்ப தான குழந்தை கல்யாணம் இந்த உறவுக்குள் போக விருப்பம் இல்லைன்னு சொன்னே. நீயே இப்படி பேசுற ?" என்ற நொடி கவி மகிழன் ஒரு நிலையில் இல்லாது தவித்தான்.
அவனுக்கு அகலி உள்ளம் முழுவதும் நிறைந்திருந்தாள். இதயத்துடிப்பின் ஒவ்வொரு துடிப்பும் அகலி தான். அவன் அறியாது அவளை தன் உயிராக நினைத்து காதலித்து வந்தான். இப்பொழுது அவள் தனக்கு இல்லை என்ற நிலை வரும் பொழுது தான் அவன் மனதில் இருந்து அவனின் காதல் வெளி வந்தது. ஆனால் இந்த காதல் எனும் உறவை அவனால் தெளிவாக அவளிடம் வெளிப்படுத்த முடியாமல் தவித்தான்.
தொடரும்...
(காதலை புரிந்துக் கொள்ளும் கவிமகிழன், விலகும் அகலிகை )
வேலையை முடித்துக் கொண்டு வெளியே வந்த வந்தனா தான் புக் செய்திருந்த கேப்புக்காக காத்திருந்தாள். அப்போது சரியாக அங்கு கௌஷிக் வந்தான்.
"ஹே வா நானே உன்ன டிராப் பண்றேன் " என்கவே,
"இல்லை. நான் இப்ப ஹாஸ்பிட்டல் போறேன். நீ போ. கேப் புக் பண்ணி இருக்கேன், வந்துரும் வந்ததும் நான் அதுல போய்க்கிறேன் " என்றாள்.
"ஹாஸ்பிட்டல் எதுக்கு போற ? உங்க வீட்ல யாருக்கும் உடம்பு சரியில்லையா, என்னாச்சு ?"என்று வேகமாய்க் கேட்கவே,
" நான் தான் சொன்னேன்ல அகலிக்கு உடம்பு சரியில்ல அப்படின்னு "
" ஆமா சொன்ன ஆனா ஹாஸ்பிட்டல்ல இருக்கிற அளவுக்கு உடம்பு சரியில்லையா ?அதனால தான் இந்த ரெண்டு நாள் ஆபீஸ்க்கு வரலையோ. அப்படி என்ன தான் பிரச்சனை ?" என்று ஏதோ இருக்கிறது தன்னவன் இந்த அளவுக்கு அவளுக்காக வருந்துகிறாளே அப்படி என்றால் தன்னிடம் எதையும் மறைக்கிறாள் என்பதை அறிந்து கௌஷிக் கேட்க,
"அப்படிலாம் ஒன்னும் இல்ல அவளுக்கு திடீர்னு ஃபீவர் ரொம்ப ஹையானதுல ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ண சொல்லிட்டாங்க. இப்ப மூணு நாளா ஹாஸ்பிட்டல்ல தான் இருக்கா. இன்னைக்கு டிஸ்சார்ஜ் ஆகிருவான்னு சொன்னா. ஆனா நான் கால் பண்ணா எடுக்கல. ஒரு வேளை ஹாஸ்பிட்டல் தான் இருக்காளா என்னன்னு தெரியல ? நேத்து முழுக்க நான் பார்த்துக்கிட்டேன். அதுக்கு முன்னால சார் பார்த்துக்கிட்டாரு. இன்னைக்கு தனியா தான் இருக்கா. சரி அவள போய் பார்த்துட்டு நைட் அவ கூட ஸ்டே பண்ணலாம்னு நினைச்சிட்டு இருந்தேன் "
"சரி எந்த ஹாஸ்பிட்டல்ல இருக்கா. வா நானே டிராப் பண்றேன் " என அழைக்க, அதே நேரம் அங்கு தன் காரில் வந்து நின்றான் கவிமகிழன்.
"என்னாச்சு ஆபீஸ் முடிஞ்சு ரெண்டு பேரும் ஏன் இங்கே நின்னு பேசிட்டு இருக்கீங்க ?" என்றுக் கேட்கவே,
' இவன் ஒருத்தன் ஆபீஸ்க்குள்ள வச்சு பேசினாலும் வேலைய பாருங்க சொல்றது வெளியே வச்சும் பேச விடுறது கிடையாது. ஆனா இவன் மட்டும் நல்லா அவனோட லவ்வர் கூட ஜாலியா என்ஜாய் பண்றது ' என மனதுக்குள் நினைத்த கௌஷிக் "சும்மா பேசிட்டு இருந்தோம் அகலி மேடம்க்கு உடம்பு சரியில்ல ஹாஸ்பிட்டல்ல இருக்காங்கல வந்தனா போகணும்னு சொன்னா அதான் நானே டிராப் பண்றேன்னு சொல்லி பேசிக்கிட்டு இருந்தோம் சார் வேற ஒன்னும் இல்ல " என்றான்.
" வந்தனா உங்களுக்கு ஓகேன்னா நீங்க என் கூட வாங்க. நான் இப்ப ஹாஸ்பிட்டல் தான் போறேன் " என்கவே, அவளோ தன் காதலனை பார்த்து தவிர்க்க முடியாது என்பதால் விழிகளாலே அவனிடம் அனுமதி வாங்கினாள்.
"சரி போய்ட்டு வா நாளைக்கு மீட் பண்ணலாம் " என கௌஷிக் கூறவே, சரி எனக் கூறி கவி மகிழனின் காரில் வந்து அமர அவர்கள் அங்கிருந்துக் கிளம்பினர்.
அவர்கள் சென்ற பின் தான் பைக்கை எடுத்துக் கொண்டு சென்றான் கௌஷிக்.
அரை மணி நேரப் பயணத்திற்கு பிறகு இருவரும் மருத்துவமனை வந்துச் சேர, அகலி தங்கியிருந்த அறைக்குத்தான் சென்றனர். அங்கு அறை வெறுமையாக இருக்க, அவள் தான் மாலை நேரமே வீட்டுக்குச் சென்று விட்டாலே !
அவள் இருந்த யோசனையில் இவர்கள் இருவரிடமும் கூறாமல் இருந்து விட்டாள். ஆனால் இவர்கள் தேடி இங்கு வந்து ஏமாற்றம் கொண்டனர். பின் வரவேற்பில் சென்று அவளைப் பற்றி விசாரித்தனர்.
"அவங்கள நாங்க ஈவினிங்கே டிஸ்சார்ஜ் பண்ணிட்டோம் அவங்க வீட்டுக்கு போயிட்டாங்க " என்றதும்,
"ஏன் தான் இப்படி பண்றாலோ அவ விருப்பத்துக்கு இருக்கிறா ஒரு வார்த்தை சொல்றதுக்கு என்ன ஆகும். வேணுன்னு அலைய வைக்கணும்னு நினைச்சுக்கிட்டு இருக்கா " என்று கோபத்தோடு புலம்பவே,
"சார் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. அகலி என் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா. இந்த நேரம் நீங்க அவ மேல கோபப்படுறது காரணம் சரியா இருந்தாலும் ஆனா நேரமும் சூழ்நிலையும் இப்போ சரியானது இல்லை "
"இங்க பாருங்க வந்தனா எனக்கு ஒன்னும் அவ கூட சண்ட போடணும்னு ஆசை எல்லாம் இல்ல. ஆனா அவ பண்றது எல்லாம் நீங்களும் பார்த்துக்கிட்டு தானே இருக்கீங்க ? சொல்ற விஷயத்தை கேட்கவே மாட்டேங்குற இப்படியே போனா நாங்க பிரேக்அப் பண்ணிட்டு தான் போகணும்"
"அது நீங்க ரெண்டு பேரும் பேசி முடிவு பண்ணிக்கோங்க சார். சரி நான் கிளம்புறேன். எப்படியும் வீட்டுக்கு தான் போயிருப்பா நான் கால் பண்ணி பார்த்தேன் எடுக்கல. நீங்க வீட்ல போயி பார்த்துட்டு எனக்கு மட்டும் கால் பண்ண சொல்றீங்களா ப்ளீஸ் சார் " என விழிகளை சுருக்கி கெஞ்சுதலோடு கூறவே, அவளின் தோழியை எண்ணி மன வருத்தம் கொள்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டான் கவி மகிழன்.
"சரி நான் சொல்றேன். உங்க வீட்ல வேணா நான் டிராப் பண்ணவா இல்ல நீங்க போயிடுவீங்களா ?"
"நான் போய்கிடுவேன் சார் " என்றாள்.
பின் தன் காரினை எடுத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான். மகிழன் வீடு வந்த சேர்வதற்கு இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது ஏற்கனவே காலையிலிருந்து வேலை பார்த்த அசதியும் இதில் தன்னை அவள் அலையவிட்டால் என்ற எண்ணமுமே அவனை உச்சத்தின் கோபத்துக்கு கொண்டுச் சென்றது. வேகமோடு அழைப்பு மணியை ஒளிர விட, நேரம் சென்ற பின்னே தள்ளாடிக் கொண்டு வந்து அதனை திறந்தாள்.
இப்பொழுது அவளுக்கு முற்றிலும் காய்ச்சல் காணாமல் போயிருந்தது. ஆனால் அசதியும் மனம் தளர்ந்த உணர்வால் வாடிய தோற்றமுமாக இருந்தாள்.
"அப்படி என்ன பண்ணிக்கிட்டு இருக்க வந்து உனக்கு கதவை திறக்க இவ்வளவு நேரமா ?ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டுக்கு வந்திருக்க ஆனா என்கிட்ட ஒரு வார்த்தை கூட நீ சொல்லவே இல்ல. உன் மனசுல அப்படி நீ என்ன தான் நினைச்சுக்கிட்டு இருக்க ? போனா போகுதுன்னு தனியா விடக்கூடாதுன்னு ஒரு நாள் முழுக்க உனக்காக நான் ஹாஸ்பிட்டல் என்னோட எல்லா வேலையும் விட்டுட்டு நாய் மாதிரி உனக்கு சேவகம் பண்ணிட்டு கிடந்தேன். ஆனா நீ அதை எல்லாம் பெருசாவே எடுக்காம உன் விருப்பத்துக்கு சுத்திக்கிட்டு இருக்கே " என்று வீட்டுக்குள் நுழைந்த நொடியை தன் ஷூவை கழட்ட ஆரம்பித்ததில் இருந்து கையில் இருந்த வாட்ச் முதற்கொண்டு அனைத்தையும் கழட்டி வீசி எறிந்து கத்திக்கொண்டு இருந்தான்
"ப்ளீஸ் நானே ஏற்கனவே முடியாம இருக்கேன். இதுல நீ இப்படி கத்தி பேசுற எனக்கு ஒரு மாதிரியா இருக்கு " என மென்மையாய்க் கூறவே,
"கத்தாதேவா, என்ன கத்துற மாதிரி பேச வைக்கிறது நீ. இதுக்கு முன்னாடி இந்த அளவுக்கு நமக்குள்ள எப்பயாவது சண்டை வந்து இருக்கா. இப்ப வந்ததுக்கு காரணம் யாரு ? அதுவும் நீதான் மத்தவங்கள பத்தி என்னைக்குமே யோசிக்காதே. உன்ன மட்டுமே நீ நினைக்கிற. இப்ப என்ன தான் முடிவு பண்ணி இருக்க டாக்டர் கிட்ட பேசுனியா பேசலையா ?"
"பேசிட்டேன் "
"என்ன தான் சொன்னாங்க அப்பறம் எதுக்கு நீ வீட்டுக்கு வந்து இருக்கே ?"
"நான் இந்த குழந்தையை வளர்க்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் " எனக் கூறிய நொடி அப்பொழுது தான் அமர்ந்தவனோ அதிர்ச்சியோடு எழுந்து விட்டான்.
"நீ என்ன லூசா? இந்த குழந்தையை வளர்க்க போறேன்னு சொல்ற ?"
"என்னாச்சு இது என்னோட குழந்தை தானே, நான் வளர்க்கறதுல என்ன தப்பு இருக்கு ?"
"நம்மளோட ஃபியூச்சர் பத்தி நீ நெனச்சு பார்த்தியா இந்த குழந்தையை நினைச்சுக்கிட்டு இருக்க இது ஒன்னும் உன் குழந்தையே இல்லை. எவனோ ஒருத்தன் பண்ணுன வேலை. அதை போய் சுமக்க போறேன்னு சொல்லிட்டு இருக்க .வாழ்நாள் முழுக்க இது உனக்கு ஒரு நரகமாக போய்விடும் "
"என் வயித்துல வளர இந்த குழந்தை உன்னோட குழந்தையா இருந்தா நீ இப்படி சொல்லி இருப்பியா ?"
"சத்தியமா சொல்லி இருக்க மாட்டேன் "
"அப்போ உனக்கு ஒரு நியாயம் எனக்கு நான் ஒரு நியாயமா ? நான் வளர்க்க கூடாதா என்ன, இந்த குழந்தையோட அப்பா எவன்னு தெரியல தான் , ஆனா அம்மா நான் தானே நான் இருக்கும் போது என் குழந்தையை எதுக்கு நான் அழிக்கணும். நான் இத்தனை நாள் இதோட மதிப்பு உணராம இருந்துட்டேன். ஆனா இன்னைக்கு நான் உணர்ந்து இருக்கேன். அதனால இத நான் வளர்க்க போறேன். என்னால இந்த குழந்தையை அழிக்க முடியாது. என் குழந்தையை பெத்துக்க முடியல அப்படின்னு போது நான் எதுக்காக இந்த உலகத்துல வாழணும் "
"என்ன நீ இப்பல்லாம் உன் பேச்சு ரொம்ப வித்தியாசமா இருக்கு. இந்த உலகத்துக்கு நம்ம வந்தது சுதந்திரமா வாழத்தான். கடமைப்பட்டு வாழ்றதுக்கு எல்லாம் கிடையாது. அடுத்தவங்களை சார்ந்து எப்பவுமே வாழக்கூடாது அப்படின்னு தான் நம்ம லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்ல இருந்தோம். குடும்பம் குட்டி குழந்தை இதெல்லாம் வச்சு வாழணும்னா நம்ம எப்பயோ கல்யாணம் பண்ணி இருந்திருக்கலாம். அதெல்லாம் எதுக்கு அந்த கட்டாயத்துக்குள்ள நம்ம திணிக்க கூடாதுன்னு சுதந்திரமா இருக்கணும்னு நினைச்சு நம்ம இந்த உறவுல இருந்தோம். நீ அந்த உறவுக்குள்ளே போகணும்னு நினைக்கிற அது இல்லாம இப்ப என்ன நீ வித்தியாசமான பேசிக்கிட்டு இருக்கே ? வாட்ஸ் ராங் வித் யூ ?"
"வாழ்க்கையோட புரிதல் வித்தியாசமா தான் இருக்கு. நான் இத்தனை நாள் எதையுமே புரிஞ்சுக்காம இருந்துட்டேன். நம்ம ஏன் மத்தவங்க மாதிரி அடிமைப்பட்டு இருக்க கூடாது நினைச்சு தான் சுதந்திரமா இருக்கணும் அப்படின்னு உன்கிட்ட சொன்னேன். ஆனா அந்த சுதந்திரம் என்ன அப்படிங்கறதை நானே உண்மையான அர்த்தத்தோட உணராம இருந்துட்டேன். இப்ப தான் எனக்கு எல்லாமே புரிஞ்சிருக்கு. இதுக்கப்புறம் நம்ம இத பத்தி பேச வேண்டாம் "
"பேச வேண்டான்னா என்ன அர்த்தம் ? என்னால அப்படி எல்லாம் உன்னை விட முடியாது எனக்கு நீ வேணும் ? "
"வேணும்னா நீ என்ன அர்த்தத்துல பேசுற ? நமக்குள்ள செக்ஸுவல் ரிலேஷன்ஷிப் மட்டும் உனக்கு தேவைப்படுதா ? அதனால தானே இருந்தோம் உனக்கு அது இல்லாம இருக்க முடியாது அதுக்காக நான் தேவைப்படுறேனா ?"
"உன் மனசுல நான் அதுக்காக தான் உன்கிட்ட பழகுறேன் அப்படின்னா அந்த தேவைக்கு நான் எத்தனையோ பொண்ணுங்கள அனுபவிச்சி இருக்கலாம். நான் அப்படி எல்லாம் பண்ணல. நீதான் உன் கூட நான் இருக்கணும்னு ஆசைப்பட்டேன். இனி மேலும் இருக்கணும் நினைக்கிறேன். ஆனா உன் வயித்துல நீ வேற ஒருத்தனுடைய குழந்தையை சுமந்துக்கிட்டு இருக்கே. இப்ப நீ எனக்கு சொந்தமானவ இல்லை. எனக்கு நீ மட்டுமே சொந்தமாக நெனச்சுக்கிட்டு இருக்கேன். அதனால தான் நான் சொல்றேன் இந்த குழந்தை வேண்டாம் நம்ம வேணும்ன்னா கல்யாணம் கூட பண்ணிக்கலாம்"
"இப்ப தான குழந்தை கல்யாணம் இந்த உறவுக்குள் போக விருப்பம் இல்லைன்னு சொன்னே. நீயே இப்படி பேசுற ?" என்ற நொடி கவி மகிழன் ஒரு நிலையில் இல்லாது தவித்தான்.
அவனுக்கு அகலி உள்ளம் முழுவதும் நிறைந்திருந்தாள். இதயத்துடிப்பின் ஒவ்வொரு துடிப்பும் அகலி தான். அவன் அறியாது அவளை தன் உயிராக நினைத்து காதலித்து வந்தான். இப்பொழுது அவள் தனக்கு இல்லை என்ற நிலை வரும் பொழுது தான் அவன் மனதில் இருந்து அவனின் காதல் வெளி வந்தது. ஆனால் இந்த காதல் எனும் உறவை அவனால் தெளிவாக அவளிடம் வெளிப்படுத்த முடியாமல் தவித்தான்.
தொடரும்...