பகுதி – 20.
மறுநாள் பிரபஞ்சன் அலுவலகத்துக்கு அத்தனை இறுக்கமாகத்தான் வந்தான். அவனுக்கோ, தியாகு அவளிடம் பேசுவதை வைத்து, அவளால் அவனை கணிக்க முடியவில்லையா? அவனைத் தவிர்க்க முடியவில்லையா என்ற கோபம்.
அவன் அத்தனை கோபமாக இருப்பதைப் பார்த்த ஷீபா, தன்னால் இதற்கு எதையாவது செய்ய முடியுமா? என யோசித்தாள்.
திடுமென ஒரு ஐடியா பளிச்சிட, “ரஞ்சா, மேலே கொஞ்சம் ஒதுங்க வைக்கணும்னு சொன்னியே... நான் அதைப் பார்க்கறதுக்கு ஆளை அனுப்பறேன். நீ கொஞ்சம் கூட இருந்து பார்த்துக்கோ...” அவள் சொல்ல, அவளை முறைத்தான்.
“என்ன... சேர்த்து வைக்கப் பார்க்கறியா?” அவன் நக்கலாக வினவ, அவனை முறைத்தாள்.
“ம்கும்... நீயும் எதுவும் செய்ய மாட்ட.... நாங்களும் செய்யக் கூடாதுன்னா... அது என்னடா கணக்கு?” அவனிடம் சாடியவள், தென்றலை அழைத்தாள்.
“சொல்லுங்கக்கா...” அவள் அங்கே வர,
“மேலே கொஞ்சம் வேலை இருக்கு... நீ என்னன்னு பார்த்துட்டு வாயேன்” அவள் சொல்ல, எதற்கென புரியவில்லை என்றாலும், அவள் சொன்னதைச் செய்யக் கிளம்பினாள்.
அவள் மாடிப்படிக்கு அருகே வர, அங்கே வந்தான் தியாகு.
“ஹாய் தென்றல்... குட் மார்னிங்... எங்கே மாடிக்கா போறீங்க?” அவளிடம் எதையாவது பேச அவன் விரும்பினான்.
“குட் மார்னிங் தியாகு சார்... நேத்து நைட் நீங்க துணைக்கு வந்ததில் ரொம்பவே சந்தோஷம். அப்போவே தேங்க்ஸ் சொல்ல நினைச்சேன், நீங்க உடனே கிளம்பிட்டீங்க” முதல் படியில் காலை வைத்தவள், அங்கேயே நின்று பேசினாள்.
“இந்த தியாகுவுக்கு என்ன வேலை இது?” தங்கள் அறைக்குள் இருந்து பார்த்தால், அனைத்து இடங்களும் துல்லியமாகத் தெரியும் என்பதால், சன்னமாக முனகினாள் ஷீபா.
“அவன் அவளை ஒன்சைடா விரும்பறான்...” பிரபஞ்சன் சொல்ல,
“என்ன...? லூசா நீ? அதைப் பார்த்துட்டு பேசாம இருக்கறியா?” படபடவென பொரிந்தாள்.
“என்னை என்ன செய்யச் சொல்ற? அவ பேசாமத்தானே இருக்கா?” அவன் கேட்க, அவளோ விழித்தாள்.
“தென்றலுக்கு அந்த அளவுக்கு மனுஷங்களை எடை போடத் தெரியுமான்னு தெரியலையே ரஞ்சா. அவ இன்னும் அந்த அளவுக்கு வளரலை” அவள் தென்றலைப் புரிந்தவளாக சொல்ல, அவனோ முறைத்தான்.
“இப்படியே சொல்லிச் சொல்லி நாமளே நம்மளை ஏமாத்திக்க வேண்டியதுதான். இன்னும் வளரலைன்னா... இருபத்திநாலு வயசுக்கு மேலே ஆகல?” அவன் வெடிக்க, அவன் நிலை அவளுக்குப் புரிந்தது.
“வயசு வேற, அனுபவம் வேற, வாழும் சூழ்நிலைகள் கற்றுக் கொடுக்கற பாடம் வேற ரஞ்சா. உனக்கு அது தெரியாததா?” அவனுக்குப் புரிய வைக்க முயன்றாள்.
“ஏன்... இந்த சமாதானம் எல்லாம் எனக்கு மட்டுமே எல்லாரும் சொல்றீங்க? அவளுக்கு எதுவும் கிடையாதா?” சற்று ஆத்திரமாகவே குரல் கொடுத்தான்.
‘அவளிடமும் பேசியாச்சு...’ எனச் சொன்னால், அதற்கும் கோபப்படுவான் என்பதால் சற்று அமைதியானாள்.
அவளிடம் கேட்டால், பிரபஞ்சனிடம் இப்படியே, எதுவும் நடவாததுபோல் வந்துவிடுவது, அவனுக்குச் சரியாகச் செய்யும் நியாயமில்லை என அவள் சொல்வதை எந்த விதத்தில் எடுத்துக்கொள்ள என அனைவரும் குழம்பிப் போயிருக்க, அதை இவனிடம் என்னவென விளக்க?
“எல்லாம் கொஞ்ச நாள்தான்... நான் தியாகுகிட்டே பேசறேன்” எழப்போனவளை கையை அழுத்தமாகப் பிடித்து தடுத்தான்.
“ஏன் அவளுக்கு வாய் இல்லையா? அவளே சொல்லட்டும்...” அவன் முடித்துவிட, அவனது அந்த வார்த்தைகளை மீறும் தைரியம் அவளுக்கு இருக்கவில்லை. ஏனென்றால் அவன் அத்தனை இறுக்கமாக, கோபமாக அதைச் சொல்லி இருந்தான்.
“ஏன்டா... உன்னை நான்தான் மாடிக்குப் போன்னு சொன்னேன் தானே?” அவள் கடுப்பாக, அவளைப் பார்த்து முறைத்தான்.
அதைப் பார்த்தவள்... “என்ன... என்ன பார்வை வேண்டிக் கிடக்கு?” அதே கடுப்போடு கேட்டாள்.
“அவன்கூட என்னை போட்டி போடச் சொல்றியா?” அவன் கேட்க, அருகே இருந்த ஃபயிளால் அவன் கையிலேயே அடித்தாள்.
“என்னடா பேச்சு இது?”.
“நீ சொல்றதைப் பார்த்தா எனக்கு அப்படித்தான் தோணுது. நேத்து வரைக்கும் அவ அப்பன், இப்போ இவன்... நாளைக்கு எவனோன்னு”.
“ச்ச்சே... ச்சே... என்ன இப்படியெல்லாம் யோசிக்கற? அவ மனசு உனக்குப் புரியவே இல்லையாடா?” சற்று வருத்தமாகவே கேட்டாள்.
“இனிமேல் நானா எல்லாம் எதையும் எனக்குப் புரிஞ்சுக்க வேண்டாம். நான் ஒன்னும் அவளை லவ் பண்ணி, பெத்தவங்க சம்மதம் இல்லாமல், இழுத்துட்டு போய், கட்டாயக் கல்யாணம் எல்லாம் பண்ணிக்கலை தானே?” அவன் முறுக்கிக் கொள்ள, அவளுக்கு ஐயோ என்று இருந்தது.
“அவ அப்பனை விட்டுட்டியே...” அவள் நக்கலாக வினவ,
“அவனை எல்லாம் நான் மனுஷனா கூட கன்சிடர் பண்ணலை... அவனைப்பத்தி நீ பேசாதே... எனக்கு அவன் பேச்சை எடுத்தாலே, அவனைக் கொல்ற அளவுக்கு ஆத்திரம் வருது” அவன் பல்லைக் கடிக்க, ‘ஏனடா இந்த டாப்பிக்கை எடுத்தோம்? என நொந்து போனாள்.
“டேய்... இப்போ எதுக்கு இவ்வளவு டென்ஷன்? விடு...” அவனை அமைதிப்படுத்த முயன்றாள்.
“நானா ஆரம்பிச்சேன்? நீதானே...?” அவன் பார்வையை அங்கே படிக்கட்டில் நிலைக்க விட்டவாறு கேட்க, இவளோ பதட்டமானாள்.
இங்கே தியாகுவோ... “நான் கிளம்பிட்டா என்ன? அதான் என்னோட போன் நம்பர் உங்ககிட்டே இருந்ததே... அதுக்கு கால் பண்ணி இருக்கலாமே” அவன் சொல்ல, அப்பொழுதுதான் சற்று உசாரானாள்.
“எதுக்கு அது? நான் அப்படியெல்லாம் யாருக்கும் மெஸ்சேஜ் பண்றது இல்லை” அதென்னவோ எப்பொழுது அவளது தகப்பன், பிரபஞ்சனுக்கு அழைக்க, செய்தியனுப்பக் கூடாது என அவனது நம்பரை ப்ளாக் செய்தாரோ, அதன் பிறகு அவள் யாருக்குமே அதைச் செய்யப் பிடிக்காமல்தான் அலைபேசியை வைத்திருந்தாள்.
ஒரு அவசரத் தேவைக்காக என அழைத்து பேசுவாளே தவிர, மற்றவர்கள் அழைக்காமல் அவள் தன் அலைபேசியை உபயோகப் படுத்தக் கூட விரும்பியது இல்லை.
“ஓ... அது ஏன் அப்படி?” அவன் கேட்க, அதற்கு அவனுக்கு பதில் சொல்ல அவளுக்குப் பிடிக்கவில்லை.
அவன் தன் எல்லைக்கோட்டை தாண்டுவது அவளுக்குப் புரியத் துவங்கி இருந்தது.
“சாரி சார்... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு...” பட்டென சொன்னவள், வேகமாகத் திரும்பி படிகளில் நடக்க முயல, கால் இடறியது.
அவள் பின்னாலேயே இருந்த தியாகு அதைப் பார்த்து பதறியவன், இரண்டே எட்டில் அவளை நெருங்கி, அவளது கரத்தைப் பற்றி தடுத்து நிறுத்தினான்.
அவன் பிடிக்கவில்லை என்றாலும், அவளாகவே பேலன்ஸ் செய்திருப்பாள் என்றாலும், அதை அவன் செய்திருக்க, வேகமாக அவனது கரத்தை உதறியவள், படிகளில் ஏறினாள்.
“சாரி, நான் வேணும்னு பண்ணலை... நீங்க விழப் போனீங்க அதான் ஹெல்ப் பண்ண ட்ரை பண்ணேன்” அவள் முதுகின் பின்னால் குரல் கொடுத்தான்.
“எனக்கு உங்க ஹெல்ப் வேண்டாம் தியாகு சார்...” முகம் மொத்தமும் மாறிவிட பதில் கொடுத்தவள், மாடி ஏறினாள்.
அவள் செல்லவே, அவள் தன்னைத் தவறாக எண்ணிவிட்டாளோ என தியாகு பதறினான். அவளைப்பற்றி தன் வீட்டில் பேசி, அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினான்.
அதற்கு முன்னால், எப்படியாவது தன் நேசத்தை அவளிடம் சொல்லிவிடத்தான் அவளையே சுற்றி வருகிறான். அது புரியாமல், எங்கே அவள் தன்னை ஒரு தவறானவனாக எண்ணி விட்டாளோ எனக் கவலையானான்.
அவள் பின்னாலேயே செல்லச் சொல்லி மனம் உந்தினாலும், மாடிக்கு இதுவரை யாரும் செல்ல அனுமதிக்கப்பட்டதில்லை என்பதால் படிகளிலேயே தேங்கினான்.
அவள் திரும்பி வருகையில், அவளிடம் விஷயத்தைச் சொல்லிவிட வேண்டும் என அவன் காத்திருக்க, அங்கே நடந்த விஷயங்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“தென்றல் இப்போதான் தெளிஞ்சிருக்கா... இவன் எதுக்கு இன்னும் அங்கேயே நிக்கறான்?” அவர்கள் பேசியது கேட்கவில்லை என்றாலும், தென்றலின் முகபாவமும், கோபமும், அவனது தடுமாற்ற முகமும் அவர்களுக்கு அங்கே நடந்ததை சற்று தெளிவாகவே விளக்கி இருந்தது.
ஷீபா சற்று எரிச்சலாக முனக, “லவ்வை சொல்ல நிக்கறான் போல?” அவனைக் கணித்தவனாக பிரபஞ்சன் சொல்ல, பட்டென இருக்கையில் இருந்து எழுந்துகொண்டாள்.
“அவன...” அவள் பல்லைக் கடித்தவாறு கிளம்ப,
“நீ மட்டும் இப்போ ஏதாவது அவன்கிட்ட சொல்லு... உனக்கு இங்கே இதுதான் கடைசி நாளா இருக்கும்” அவன் பின்னால் இருந்து கத்தவே, அவனைப் பார்த்து முறைத்தாள்.
“அப்பா சாமி... அவ உன் பொண்டாட்டின்னு... அவ வாயாலேயே அவன் தெரிஞ்சுக்கட்டும். இப்போ அவனுக்கு நான் ஒரு வேலை வச்சிருக்கேன்... அதைச் சொல்லப் போறேன். இப்போ நான் போகவா? இல்லன்னா இருக்கவா?” அவள் கோபமாக, அவன் சிரித்துவிட்டான்.
“சரி போ...” அவன் அனுமதியளிக்கவே, வேகமாக தியாகுவை நோக்கிச் சென்றாள்.
“என்ன தியாகு? படிக்கட்டில் நின்னுட்டு என்ன பண்றீங்க?” அவள் கைகளைக் கட்டிக் கொள்ள, அவன் சற்று தடுமாறினான்.
“அது... மேம்... மேலே...”.
“மேலே என்ன? ஸ்பைடர் ஓடுதா? பிடிக்கப் போறீங்களா? அதுக்குத்தான் இங்கே நிக்கறீங்களா? உங்களுக்கு வேலை எதுவும் இல்ல?” பல்லைக் கடித்தவாறே கேட்டாள்.
இவனால்தான் பிரபஞ்சன் தென்றலின் பின்னால் செல்லாமல், அறைக்குள் அமர்ந்து கோபப்பட்டுக் கொண்டு இருக்கிறான் என அவளுக்குத் தெரியுமே.
“வேலை... இருக்கு...” அவனுக்கு இப்பொழுது வேலையை விட, தென்றலிடம் பேசி, தன் வாழ்க்கையை சரி செய்வதுதான் முக்கியமாக இருந்தது.
“அப்போ அதைப் போய் பாருங்க...” அவள் அழுத்திச் சொல்லவே, வேறு வழியின்றி, மாடியை ஒரு பார்வை பார்த்தவாறே அங்கிருந்து அகன்றான்.
அவன் அங்கே பார்ப்பதைப் பார்த்தவள், “இப்போ கூட அடங்க மாட்டேங்கறானே’ எண்ணியவாறே மாடிக்குச் சென்றாள்.
அங்கே பிரபஞ்சனை எதிர்பார்த்துக் காத்திருந்த தென்றல், அவன் வராமல் போகவே, “அக்கா, அவங்க வரல?” அவளது முதல் கேள்வியே அதுவாகத்தான் இருந்தது.
“அவனுக்கு ஏதோ வேலை போல... சரி... இங்கே ஏதாவது செய்யலாமான்னு பாத்தியா?” பேச்சை மாற்றினாள்.
“இங்கே ரொம்ப நல்லா இருக்குக்கா... மூணு பெட் ரூம், ஒரு பெரிய ஹால்... ரெண்டு பால்க்கனி... அழகா இருக்கு. ஆனா எல்லாமே காலியா இருக்கே” அவள் கேட்க,
மறுநாள் பிரபஞ்சன் அலுவலகத்துக்கு அத்தனை இறுக்கமாகத்தான் வந்தான். அவனுக்கோ, தியாகு அவளிடம் பேசுவதை வைத்து, அவளால் அவனை கணிக்க முடியவில்லையா? அவனைத் தவிர்க்க முடியவில்லையா என்ற கோபம்.
அவன் அத்தனை கோபமாக இருப்பதைப் பார்த்த ஷீபா, தன்னால் இதற்கு எதையாவது செய்ய முடியுமா? என யோசித்தாள்.
திடுமென ஒரு ஐடியா பளிச்சிட, “ரஞ்சா, மேலே கொஞ்சம் ஒதுங்க வைக்கணும்னு சொன்னியே... நான் அதைப் பார்க்கறதுக்கு ஆளை அனுப்பறேன். நீ கொஞ்சம் கூட இருந்து பார்த்துக்கோ...” அவள் சொல்ல, அவளை முறைத்தான்.
“என்ன... சேர்த்து வைக்கப் பார்க்கறியா?” அவன் நக்கலாக வினவ, அவனை முறைத்தாள்.
“ம்கும்... நீயும் எதுவும் செய்ய மாட்ட.... நாங்களும் செய்யக் கூடாதுன்னா... அது என்னடா கணக்கு?” அவனிடம் சாடியவள், தென்றலை அழைத்தாள்.
“சொல்லுங்கக்கா...” அவள் அங்கே வர,
“மேலே கொஞ்சம் வேலை இருக்கு... நீ என்னன்னு பார்த்துட்டு வாயேன்” அவள் சொல்ல, எதற்கென புரியவில்லை என்றாலும், அவள் சொன்னதைச் செய்யக் கிளம்பினாள்.
அவள் மாடிப்படிக்கு அருகே வர, அங்கே வந்தான் தியாகு.
“ஹாய் தென்றல்... குட் மார்னிங்... எங்கே மாடிக்கா போறீங்க?” அவளிடம் எதையாவது பேச அவன் விரும்பினான்.
“குட் மார்னிங் தியாகு சார்... நேத்து நைட் நீங்க துணைக்கு வந்ததில் ரொம்பவே சந்தோஷம். அப்போவே தேங்க்ஸ் சொல்ல நினைச்சேன், நீங்க உடனே கிளம்பிட்டீங்க” முதல் படியில் காலை வைத்தவள், அங்கேயே நின்று பேசினாள்.
“இந்த தியாகுவுக்கு என்ன வேலை இது?” தங்கள் அறைக்குள் இருந்து பார்த்தால், அனைத்து இடங்களும் துல்லியமாகத் தெரியும் என்பதால், சன்னமாக முனகினாள் ஷீபா.
“அவன் அவளை ஒன்சைடா விரும்பறான்...” பிரபஞ்சன் சொல்ல,
“என்ன...? லூசா நீ? அதைப் பார்த்துட்டு பேசாம இருக்கறியா?” படபடவென பொரிந்தாள்.
“என்னை என்ன செய்யச் சொல்ற? அவ பேசாமத்தானே இருக்கா?” அவன் கேட்க, அவளோ விழித்தாள்.
“தென்றலுக்கு அந்த அளவுக்கு மனுஷங்களை எடை போடத் தெரியுமான்னு தெரியலையே ரஞ்சா. அவ இன்னும் அந்த அளவுக்கு வளரலை” அவள் தென்றலைப் புரிந்தவளாக சொல்ல, அவனோ முறைத்தான்.
“இப்படியே சொல்லிச் சொல்லி நாமளே நம்மளை ஏமாத்திக்க வேண்டியதுதான். இன்னும் வளரலைன்னா... இருபத்திநாலு வயசுக்கு மேலே ஆகல?” அவன் வெடிக்க, அவன் நிலை அவளுக்குப் புரிந்தது.
“வயசு வேற, அனுபவம் வேற, வாழும் சூழ்நிலைகள் கற்றுக் கொடுக்கற பாடம் வேற ரஞ்சா. உனக்கு அது தெரியாததா?” அவனுக்குப் புரிய வைக்க முயன்றாள்.
“ஏன்... இந்த சமாதானம் எல்லாம் எனக்கு மட்டுமே எல்லாரும் சொல்றீங்க? அவளுக்கு எதுவும் கிடையாதா?” சற்று ஆத்திரமாகவே குரல் கொடுத்தான்.
‘அவளிடமும் பேசியாச்சு...’ எனச் சொன்னால், அதற்கும் கோபப்படுவான் என்பதால் சற்று அமைதியானாள்.
அவளிடம் கேட்டால், பிரபஞ்சனிடம் இப்படியே, எதுவும் நடவாததுபோல் வந்துவிடுவது, அவனுக்குச் சரியாகச் செய்யும் நியாயமில்லை என அவள் சொல்வதை எந்த விதத்தில் எடுத்துக்கொள்ள என அனைவரும் குழம்பிப் போயிருக்க, அதை இவனிடம் என்னவென விளக்க?
“எல்லாம் கொஞ்ச நாள்தான்... நான் தியாகுகிட்டே பேசறேன்” எழப்போனவளை கையை அழுத்தமாகப் பிடித்து தடுத்தான்.
“ஏன் அவளுக்கு வாய் இல்லையா? அவளே சொல்லட்டும்...” அவன் முடித்துவிட, அவனது அந்த வார்த்தைகளை மீறும் தைரியம் அவளுக்கு இருக்கவில்லை. ஏனென்றால் அவன் அத்தனை இறுக்கமாக, கோபமாக அதைச் சொல்லி இருந்தான்.
“ஏன்டா... உன்னை நான்தான் மாடிக்குப் போன்னு சொன்னேன் தானே?” அவள் கடுப்பாக, அவளைப் பார்த்து முறைத்தான்.
அதைப் பார்த்தவள்... “என்ன... என்ன பார்வை வேண்டிக் கிடக்கு?” அதே கடுப்போடு கேட்டாள்.
“அவன்கூட என்னை போட்டி போடச் சொல்றியா?” அவன் கேட்க, அருகே இருந்த ஃபயிளால் அவன் கையிலேயே அடித்தாள்.
“என்னடா பேச்சு இது?”.
“நீ சொல்றதைப் பார்த்தா எனக்கு அப்படித்தான் தோணுது. நேத்து வரைக்கும் அவ அப்பன், இப்போ இவன்... நாளைக்கு எவனோன்னு”.
“ச்ச்சே... ச்சே... என்ன இப்படியெல்லாம் யோசிக்கற? அவ மனசு உனக்குப் புரியவே இல்லையாடா?” சற்று வருத்தமாகவே கேட்டாள்.
“இனிமேல் நானா எல்லாம் எதையும் எனக்குப் புரிஞ்சுக்க வேண்டாம். நான் ஒன்னும் அவளை லவ் பண்ணி, பெத்தவங்க சம்மதம் இல்லாமல், இழுத்துட்டு போய், கட்டாயக் கல்யாணம் எல்லாம் பண்ணிக்கலை தானே?” அவன் முறுக்கிக் கொள்ள, அவளுக்கு ஐயோ என்று இருந்தது.
“அவ அப்பனை விட்டுட்டியே...” அவள் நக்கலாக வினவ,
“அவனை எல்லாம் நான் மனுஷனா கூட கன்சிடர் பண்ணலை... அவனைப்பத்தி நீ பேசாதே... எனக்கு அவன் பேச்சை எடுத்தாலே, அவனைக் கொல்ற அளவுக்கு ஆத்திரம் வருது” அவன் பல்லைக் கடிக்க, ‘ஏனடா இந்த டாப்பிக்கை எடுத்தோம்? என நொந்து போனாள்.
“டேய்... இப்போ எதுக்கு இவ்வளவு டென்ஷன்? விடு...” அவனை அமைதிப்படுத்த முயன்றாள்.
“நானா ஆரம்பிச்சேன்? நீதானே...?” அவன் பார்வையை அங்கே படிக்கட்டில் நிலைக்க விட்டவாறு கேட்க, இவளோ பதட்டமானாள்.
இங்கே தியாகுவோ... “நான் கிளம்பிட்டா என்ன? அதான் என்னோட போன் நம்பர் உங்ககிட்டே இருந்ததே... அதுக்கு கால் பண்ணி இருக்கலாமே” அவன் சொல்ல, அப்பொழுதுதான் சற்று உசாரானாள்.
“எதுக்கு அது? நான் அப்படியெல்லாம் யாருக்கும் மெஸ்சேஜ் பண்றது இல்லை” அதென்னவோ எப்பொழுது அவளது தகப்பன், பிரபஞ்சனுக்கு அழைக்க, செய்தியனுப்பக் கூடாது என அவனது நம்பரை ப்ளாக் செய்தாரோ, அதன் பிறகு அவள் யாருக்குமே அதைச் செய்யப் பிடிக்காமல்தான் அலைபேசியை வைத்திருந்தாள்.
ஒரு அவசரத் தேவைக்காக என அழைத்து பேசுவாளே தவிர, மற்றவர்கள் அழைக்காமல் அவள் தன் அலைபேசியை உபயோகப் படுத்தக் கூட விரும்பியது இல்லை.
“ஓ... அது ஏன் அப்படி?” அவன் கேட்க, அதற்கு அவனுக்கு பதில் சொல்ல அவளுக்குப் பிடிக்கவில்லை.
அவன் தன் எல்லைக்கோட்டை தாண்டுவது அவளுக்குப் புரியத் துவங்கி இருந்தது.
“சாரி சார்... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு...” பட்டென சொன்னவள், வேகமாகத் திரும்பி படிகளில் நடக்க முயல, கால் இடறியது.
அவள் பின்னாலேயே இருந்த தியாகு அதைப் பார்த்து பதறியவன், இரண்டே எட்டில் அவளை நெருங்கி, அவளது கரத்தைப் பற்றி தடுத்து நிறுத்தினான்.
அவன் பிடிக்கவில்லை என்றாலும், அவளாகவே பேலன்ஸ் செய்திருப்பாள் என்றாலும், அதை அவன் செய்திருக்க, வேகமாக அவனது கரத்தை உதறியவள், படிகளில் ஏறினாள்.
“சாரி, நான் வேணும்னு பண்ணலை... நீங்க விழப் போனீங்க அதான் ஹெல்ப் பண்ண ட்ரை பண்ணேன்” அவள் முதுகின் பின்னால் குரல் கொடுத்தான்.
“எனக்கு உங்க ஹெல்ப் வேண்டாம் தியாகு சார்...” முகம் மொத்தமும் மாறிவிட பதில் கொடுத்தவள், மாடி ஏறினாள்.
அவள் செல்லவே, அவள் தன்னைத் தவறாக எண்ணிவிட்டாளோ என தியாகு பதறினான். அவளைப்பற்றி தன் வீட்டில் பேசி, அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினான்.
அதற்கு முன்னால், எப்படியாவது தன் நேசத்தை அவளிடம் சொல்லிவிடத்தான் அவளையே சுற்றி வருகிறான். அது புரியாமல், எங்கே அவள் தன்னை ஒரு தவறானவனாக எண்ணி விட்டாளோ எனக் கவலையானான்.
அவள் பின்னாலேயே செல்லச் சொல்லி மனம் உந்தினாலும், மாடிக்கு இதுவரை யாரும் செல்ல அனுமதிக்கப்பட்டதில்லை என்பதால் படிகளிலேயே தேங்கினான்.
அவள் திரும்பி வருகையில், அவளிடம் விஷயத்தைச் சொல்லிவிட வேண்டும் என அவன் காத்திருக்க, அங்கே நடந்த விஷயங்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“தென்றல் இப்போதான் தெளிஞ்சிருக்கா... இவன் எதுக்கு இன்னும் அங்கேயே நிக்கறான்?” அவர்கள் பேசியது கேட்கவில்லை என்றாலும், தென்றலின் முகபாவமும், கோபமும், அவனது தடுமாற்ற முகமும் அவர்களுக்கு அங்கே நடந்ததை சற்று தெளிவாகவே விளக்கி இருந்தது.
ஷீபா சற்று எரிச்சலாக முனக, “லவ்வை சொல்ல நிக்கறான் போல?” அவனைக் கணித்தவனாக பிரபஞ்சன் சொல்ல, பட்டென இருக்கையில் இருந்து எழுந்துகொண்டாள்.
“அவன...” அவள் பல்லைக் கடித்தவாறு கிளம்ப,
“நீ மட்டும் இப்போ ஏதாவது அவன்கிட்ட சொல்லு... உனக்கு இங்கே இதுதான் கடைசி நாளா இருக்கும்” அவன் பின்னால் இருந்து கத்தவே, அவனைப் பார்த்து முறைத்தாள்.
“அப்பா சாமி... அவ உன் பொண்டாட்டின்னு... அவ வாயாலேயே அவன் தெரிஞ்சுக்கட்டும். இப்போ அவனுக்கு நான் ஒரு வேலை வச்சிருக்கேன்... அதைச் சொல்லப் போறேன். இப்போ நான் போகவா? இல்லன்னா இருக்கவா?” அவள் கோபமாக, அவன் சிரித்துவிட்டான்.
“சரி போ...” அவன் அனுமதியளிக்கவே, வேகமாக தியாகுவை நோக்கிச் சென்றாள்.
“என்ன தியாகு? படிக்கட்டில் நின்னுட்டு என்ன பண்றீங்க?” அவள் கைகளைக் கட்டிக் கொள்ள, அவன் சற்று தடுமாறினான்.
“அது... மேம்... மேலே...”.
“மேலே என்ன? ஸ்பைடர் ஓடுதா? பிடிக்கப் போறீங்களா? அதுக்குத்தான் இங்கே நிக்கறீங்களா? உங்களுக்கு வேலை எதுவும் இல்ல?” பல்லைக் கடித்தவாறே கேட்டாள்.
இவனால்தான் பிரபஞ்சன் தென்றலின் பின்னால் செல்லாமல், அறைக்குள் அமர்ந்து கோபப்பட்டுக் கொண்டு இருக்கிறான் என அவளுக்குத் தெரியுமே.
“வேலை... இருக்கு...” அவனுக்கு இப்பொழுது வேலையை விட, தென்றலிடம் பேசி, தன் வாழ்க்கையை சரி செய்வதுதான் முக்கியமாக இருந்தது.
“அப்போ அதைப் போய் பாருங்க...” அவள் அழுத்திச் சொல்லவே, வேறு வழியின்றி, மாடியை ஒரு பார்வை பார்த்தவாறே அங்கிருந்து அகன்றான்.
அவன் அங்கே பார்ப்பதைப் பார்த்தவள், “இப்போ கூட அடங்க மாட்டேங்கறானே’ எண்ணியவாறே மாடிக்குச் சென்றாள்.
அங்கே பிரபஞ்சனை எதிர்பார்த்துக் காத்திருந்த தென்றல், அவன் வராமல் போகவே, “அக்கா, அவங்க வரல?” அவளது முதல் கேள்வியே அதுவாகத்தான் இருந்தது.
“அவனுக்கு ஏதோ வேலை போல... சரி... இங்கே ஏதாவது செய்யலாமான்னு பாத்தியா?” பேச்சை மாற்றினாள்.
“இங்கே ரொம்ப நல்லா இருக்குக்கா... மூணு பெட் ரூம், ஒரு பெரிய ஹால்... ரெண்டு பால்க்கனி... அழகா இருக்கு. ஆனா எல்லாமே காலியா இருக்கே” அவள் கேட்க,