பகுதி – 22.
தன் வீட்டுக்குச் சென்ற தென்றல், தாயின் மடியில் படுத்துக் கண்ணீர் விட, அவருக்கு முதல்முறையாக பிரபஞ்சனின் மீது கோபம் துளிர்த்தது. அவனுக்கு என தன் மகள் இங்கே போராடிக் கிடப்பதும், அவனிடம் சென்று அழுது திரும்புவதுமாக இருக்க,
‘இப்படி புரிந்துகொள்ள மறுக்கும் அவனது உறவு அவசியமா?’ என்னும் அளவுக்கு அவர் யோசித்தார்.
ஆனால் இங்கே முடிவு செய்ய வேண்டியது மகள் என்பதால் அமைதி காத்தவர், மகளது தலையை கோதிக் கொடுத்தார்.
“என்னம்மா...? எதுக்கு அழற? நேத்தும் அழுத, இன்னைக்கும் அழற... நாளைக்கும் இப்படியே அழுவியா? தைரியமா இருக்கத் தெரியாதா?” சற்று கண்டிப்பான குரலிலேயே பேசினார்.
மகளைக் கொஞ்சினால், அவள் இன்னுமே அழுது கரைவாளோ? எனத் தோன்ற, தன் முறையை மாற்றினார்.
“என்னைத் திட்றாங்கம்மா... என்னைத் திட்டிட்டாங்கம்மா” பள்ளிக்குச் சென்று, முதல்முறை ஆசிரியரிடம் அடிவாங்கிவிட்ட அதிர்வை வெளிப்படுத்தும் குழந்தையென அவள் தேம்ப, அவருக்கு உருகிப் போயிற்று.
அதை மறைத்தவர்... “திட்ற அளவுக்கு என் பொண்ணு என்ன பண்ணா? என் பொண்ணு சமத்தாச்சே...” கைக்குழந்தையை விசாரிக்கும் பாங்கு அவரிடம்.
சின்னக்குரலில் தியாகு அவன் முன்பாகவே அவளிடம் பேசியதையும், அவன் கோபத்தையும் சொல்லி, இன்று நடந்ததையும் சொல்ல, பிரபஞ்சனின் கோபம் அவருக்குப் புரிந்தது.
“இந்த ஆம்பளைங்களுக்கு பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டாலே, அவ அவங்க உடைமைன்னு மனசுக்குள்ளே பதிஞ்சு போய்டும். அவளும் ஒரு தனி மனுஷி, அவளுக்குன்னு சில உரிமைகள், ஆசைகள்... அவ பிரச்னையை அவளாலும் தனியா சம்மாளிக்க முடியும்னே யோசிக்க மாட்டாங்க.
“அவ நம்ம பொண்ணு, அவளை நாமதான் பார்த்துக்கணும். அவளுக்கு உலகமே தெரியாதுன்னு அவங்களுக்கு அவங்களே யோசிச்சு பேசறது ஒரு வகைன்னா... சுத்தி நடக்கறதை கவனிக்காமல் இருக்காளேன்னு கோபப்படறது இன்னொரு வகை.
“இப்போ உன் புருஷன் என்ன வகைன்னு கொஞ்சம் யோசி...” அவர் சொல்ல, தன் அழுகையை நிறுத்தியவள், எதையோ யோசிப்பது தெரிந்தது.
அந்த அலுவலகத்தில், கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவனோடு இருக்கிறாள். அலுவலகத்தில் இருக்கும் மற்ற ஆண்களோடும் சரி, பெண்களோடும் சரி... யாரிடம் பேசினாலும் அவன் அப்படி ஒன்றும் அவளைத் தடுத்ததோ, கண்காணித்ததோ இல்லை.
தியாகுவின் பிரச்சனையில் கூட, அவன் தலையிடாமல் விலகித்தான் நின்றான். ‘அவளே சொல்லட்டும்...’ என்பதுதான் அவனது நிலைப்பாடாக இருந்தது.
ஒரு பக்கம் அவனுக்கு கோபமாகவும், தான் இப்படி தன்னைச்சுற்றி நடப்பதை அறியாமலும் இருந்ததுதான் அவனது முதல் கோபத்துக்கான காரணம் என்பது புரிய சற்று தெளிந்தாள்.
“அவங்க ரெண்டாவது ரகம்தான்... அதுக்காக என்னைத் திட்டுவாங்களா? என்னைத் திட்றாங்க...” அப்பப்பா... முன்னர் என்னை ‘போ’ எனச் சொல்லிவிட்டார் என அழுதால், இப்பொழுது திட்டிவிட்டான் என அழுதாள்.
“இது... நீங்க பிரிஞ்சு இருக்கறதால வர்ற பிரச்சனை தென்றல்... நீ அவர் கூடவே இருக்கும்போது இதெல்லாம் சரியா போய்டும். நீயும் அவரை நல்லா திட்டிடு” அவர் சொல்ல,
“அவரையா? திட்டவா?” என்னவோ புதிதாக வாழ்க்கைப் பாடம் படிக்கும் உணர்வு.
“ஆமா... குடும்பம்னு வந்துட்டா அப்படித்தான்... நானும் உங்க அப்பாவும் போடாத சண்டையா? உங்க அப்பா என்னைத் திட்டினதே இல்லையா?” அவர் கேட்க, அமைதியானாள்.
“அப்படின்னா என்னையும் திட்டுவாங்களா? என்னை திட்ட வேண்டாம்” அவள் மீண்டும் கண்ணீர் வடிக்க, அவருக்கு ‘ஐயோ’ வென இருந்தது.
தங்கள் பிள்ளையை ஒரு சொல் கூட திட்டி வளர்க்காமல் விட்டுவிட்டு, அவள் அடுத்த குடும்பத்துப் பெண்ணாக மாறுகையில், அங்கே அவளை அனைவரும் சீராட்டுவார்களா என்ன? ஒரு சொல் கூடத் தாங்காமல் சுணங்கிப் போகும் மகளைப் பார்க்க வருத்தம் மட்டுமே பட முடிந்தது.
“இதையெல்லாம் தாங்கி, தாண்டித்தான் வரணும் தென்றல்...” மகளுக்கு புரிய வைக்க முயன்றார்.
“என் தன்மானத்துக்கு ஒரு இழுக்குன்னா, அதையெல்லாம் தாங்கிட்டு எனக்கு இருக்க வேண்டாம்” அவள் பட்டென சொல்ல, இந்த தென்றல் அவருக்குப் புதியவளே.
“சரி வேண்டாம்... ஆனா அப்படியெல்லாம் ஆகாதும்மா...” சொன்னவர் அவளை அமைதிப்படுத்த முயன்றார். ஆனால் தேறிக்கொள்ள வேண்டியவள் அவள் என்கையில் என்ன செய்ய முடியும்?
இங்கே இவள் இப்படியென்றால்... தன் வீட்டுக்கு வந்த பிரபஞ்சனால் நிம்மதியாக இருக்கவே முடியவில்லை. தென்றல் அப்படி ஒரு அழுகை அழுதிருக்க, அழுதுகொண்டே வேறு சென்றிருக்க, அவள் சமாதானமாகிவிட்டாளா எனத் தெரியாமல் தூங்க முடியும் என்றே தோன்றவில்லை.
அவன் அதையே எண்ணிக்கொண்டு அமர்ந்திருக்க, அவனது அலைபேசி இசைக்கவே, ஒரு வேளை தென்றல்தான் அழைக்கின்றாளோ என எண்ணியவன், வேகமாக அழைப்பை பார்த்தான்.
அவனது அக்கா அழைத்திருக்க, “சொல்லுக்கா...” அவன் குரல் கொடுக்கவே, அவன் குரலில் இருந்த மாறுபாட்டை அவள் உணர்ந்துகொண்டாள்.
“ரஞ்சா... என்னப்பா குரலே சரியில்லை? தென்றல்கூட மறுபடியும் ஏதும் பிரச்சனையா? ஏதாவது சொல்லிட்டாளா?” அவனுக்கு வேறு கவலைகள் இருக்காது என்பதால் கேட்டாள்.
“அவ என்ன சொல்ல? நான்தான்...” தான் கொஞ்சம் அதிகமாக பேசிவிட்டோமோ என வருந்தினான்.
“என்ன ரஞ்சா இது? அவ என்ன நினைக்கறான்னு பேசி புரிஞ்சுகிட்டு, அடுத்த விஷயத்தைப் பாருன்னு சொன்ன பிறகும், இப்போ என்ன புதுசா?” சிறு கண்டிப்பாகவே கேட்டார்.
“அவளைக் கொஞ்சம் திட்டிட்டேன்...” சொன்னவன் காரணத்தை சொல்லாமல் விடுக்கையிலேயே, தவறு அவன்மேல் இருப்பது அவளுக்குப் புரிந்தது.
“திட்டிட்டியா? அதெல்லாம் அவ தாங்கிக்க மாட்டாளே... அவளை அப்படி செல்லமா வளத்து வச்சிருக்காங்கடா. வெளியில் எப்படியோ, வீட்டு ஆட்கள் கிட்டே அவ ரொம்ப சென்சிட்டிவ்ன்னு உனக்குத் தெரியாதா?” அவளைப்பற்றித் தெரிந்தும் இப்படி செய்துவைத்தால், அவளும் என்னதான் செய்வாள்?
“ம்ச்... தெரியும்க்கா... என்னென்னவோ சொல்லிட்டேனா... ஒரே அழுகை அவ... அழுதுட்டே வீட்டுக்குப் போனா... சாப்பிட வேற இல்லையாம்” அவளை அப்படி அனுப்பியது அவன் மனதைப் போட்டு பிசைந்தது.
“சாப்பிடலை, அழுதுட்டே போயிருக்கா... நீ அவளை அப்படியே அனுப்பினியா? எப்படி ரஞ்சா உன்னால் முடியுது? என் தம்பியும், அவ புருஷனும் வேறதான் இல்ல...” அவள் சொல்ல, அவனுக்கு மனதில் பாரம் ஏறியது.
“நானே கஷ்டபட்டுட்டு இருக்கேன்... நீ வேற ஏன்க்கா...?” வருத்தமாக கேட்டான்.
“தென்றல் குணத்துக்கு என்னால் உன்னைத்தான் கண்டிக்க வருது ரஞ்சா. உனக்கு வேற ஏதோ பொண்ணைக் கட்டி வச்சிருந்து, அது எப்படி ஆகி இருக்குமோ? ஆனா தென்றலைப் பொறுத்த வரைக்கும், அவளை தட்டிக்கொடுத்து கொண்டு போகணுமே தவிர, திட்டி இல்லை” அவள் சொல்லச் சொல்ல, அவனுக்கு இன்னுமே கடினமாக இருந்தது.
“இப்போ அவ ரொம்ப மாறிட்டா தெரியுமா” அவன் குரலில் ஒரு சிலாகிப்பு திடுமென கலக்க, அவள் சுவாரசியமானாள்.
“அப்படியா? என்னன்னு சொல்லு, நானும் தெரிஞ்சுக்கறேன்” அவன் குரல் மறுபாட்டில் அவனிடம் கேட்டாள்.
“நான் திட்டிட்டேன்னு அழறாளேன்னு ஆறுதல் சொல்ல ட்ரை பண்ணா, எனக்கு உங்க மேல சாஞ்சுக்கணும் தான்... ஆனா நீங்க என்னைத் திட்றீங்க, எனக்கு வேண்டாம்னு விலகிப் போய் நிக்கறா” அவளது அந்த தன்மானம் அவனுக்குப் பிடித்திருக்க, அந்த நேரத்திலும் அவன் அதை ரசித்தான்.
“அவ்வளவு பிடிவாதக்காரி தான்... பார்த்துக்கடா... ‘உங்களை ஹேட் பண்றேன்’ன்னு சொல்லி சோலியை முடிச்சுடப் போறா...” அவள் கேலியாகச் சொன்னாலும், அதில் இருந்த உண்மை அவனைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது.
“என்னை வெறுத்துடுவாளாக்கா? நிஜமாவா? ஏற்கனவே ஒரு சொல்லு சொல்லிட்டேன்னு அதையே மனசுக்குள் போட்டு குழப்பிக்கறா போல” அவன் சொல்ல, நிவேதிதா அதிர்ந்தார்.
“என்னடா சொல்லி வச்ச?” அதை மறைக்க முடியாமல் கேட்டாள்.
“என்னைக்கோ அவகிட்டே கோபத்தில் பேசறப்போ, ‘எப்போ உன் அப்பன் வந்து கூப்ட்டு, நீ போய்டுவியோன்னு நான் பயந்துட்டே இருக்கணுமா?’ன்னு கேட்டுட்டேன்... அதை வச்சுகிட்டு என்கிட்டே வராம இருக்கறா போல.
“அதை விட ‘நான் என்ன செஞ்சா, நீங்க அப்படி பயப்படாம இருப்பீங்கன்னு எனக்குத் தெரியலை. அதே கேள்வியை நீங்க மறுபடியும் என்னைப்பார்த்து கேட்டா, நான் செத்துடுவேன்’ன்னு அவ சொல்லிட்டு போனப்போ...” அவன் அப்படியே நிறுத்திவிட, அங்கே அப்படி ஒரு அமைதி நிலவியது.
“ரஞ்சா... வேணாம்டா... என்ன செய்வியோ தெரியாது... முதல்ல அவகிட்டே பேசு... அவ இப்படியே இருந்தான்னா அது நல்லதில்லை” அவள் சொல்ல, அவன் கொஞ்சம் பயந்தான்.
“அக்கா, என்னக்கா சொல்ற?” அவன் தன் பயத்தை குரலில் வெளிப்படுத்த,
“ஏற்கனவே ஜன்னி வந்து சுயநினைவே இல்லாமல் கிடந்தவ அவ, நீ அதை மறந்துட்டியா? நீ அவளை ஏதாவது சொன்னா, அதோட இம்பேக்ட் அவகிட்டே பலமடங்கு இருக்கும்... அதை எப்போதும் மறந்துடாதே. முதல்ல அவளை சமாதானப்படுத்து... இப்போ நான் வைக்கறேன்” சொன்னவள் அழைப்பை துண்டிக்க முயன்றாள்.
“என்னக்கா பயம் காட்டற?” நிஜமான பயத்தோடு கேட்டான்.
“உன்னோட இப்படியான செய்கையால, அவ உன்னை வெறுக்க ஆரம்பிச்சுட்டா அதைத் தடுக்கவே முடியாது ரஞ்சா. நான் சொல்வது உண்மை. இதை நீ உன் மனசில் வச்சுக்கோ... ஒரு சொல் கேட்காமல் வளர்ந்த பொண்ணுடா.
“அவங்க அப்பாவைத் தாண்டி, உன்னைத் தேடி வந்திருக்கா. அதுவே அவ அளவுக்கு பெரிய விஷயம் தான்... இப்போ நீ கோபப்பட்டுட்டே இருந்தா, அவளுக்கு அதையெல்லாம் சம்மாளிக்கத் தெரியுமான்னு யோசிச்சியா?” அத்தனை கோபமாக கேட்க, அவனுக்கு இதயம் நின்று துடித்தது.
“அக்கா...” அதிர்வாக அழைத்தான்.
“வெண்ணெய் திரண்டு வர்றப்போ தாழியை உடைச்ச கதையா எதையும் செஞ்சுடாதே ரஞ்சா, கவனம்... தென்றல் இதையெல்லாம் தாங்க மாட்டா, அதை எப்போதும் உன் மனசில் ஆழமா பதிய வச்சுக்கோ. அவளைப் போய் பாரு...” என்றவள் அழைப்பை துண்டிக்கப் போக,
“அக்கா... அக்கா... இந்த நேரம் கூப்ட்டிருக்க, ஏதும் முக்கியமான விஷயமா?” அவள் சாதாரணமாக அழைத்துப் பேசுவாள் என்றாலும், தெரிந்துகொள்ளக் கேட்டான்.
“ரெண்டு நாள்ல பட்டுவோட பெர்த்டே வருது... அதைச் சொல்லத்தான் கூப்ட்டேன்” சொன்னவள் அலைபேசியை வைத்துவிட, தன் தலையிலேயே கை வைத்துக் கொண்டான்.
போன வருடம் இருந்த டென்ஷனில் அவன் நைனிகாவின் பிறந்தநாளையே மறந்து போயிருக்க, இரவுக்குள் அழைத்து விஷ் செய்துவிட்டாலும், அவள் ஒரு மாதம் வரைக்கும் அவனிடம் பேசவே இல்லை.
அதை எண்ணியவன், மனதுக்குள் அதைக் குறித்துக் கொண்டாலும், தன்னவளைக் குறித்து அறிந்துகொள்வதே இப்பொழுது முக்கியம் எனத் தோன்ற, அவளது அலைபேசிக்கு அழைப்பு விடுத்தான்.
அதுவோ அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக சொல்ல, சற்று பயந்து போனான். போனமுறை இப்படி ஆனதாகத்தான் அவனது நினைவு. எனவே வேகமாக பார்வதிக்கு அழைத்துவிட்டு, அவர் எடுக்கக் காத்திருந்தான்.
அவனைக் கொஞ்சம் அதிகம் சோதித்துவிட்டு, அழைப்பு நிற்கப் போகையில்தான் அவர் அதை எடுக்க, “சொல்லுங்க மாப்ள...” அவர் குரல் கொடுக்கவே, அவனுக்குள் ஒரு பெருத்த தயக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.
“அத்த... தென்றல்... தூங்கிட்டாளா? சாப்ட்டாளா?” என்னவோ பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் உணர்வு.
“சாப்ட்டாளான்னு கேட்டா... கஷ்டப்பட்டு ரெண்டு இட்லி சாப்பிட வச்சேன். தூங்கிட்டாளான்னா... தூக்கமாத்திரை கொடுத்தும் தூங்காமல் கிடக்கா” அவர் வேதனையாகச் சொல்ல, அவனுக்கு பேசவே முடியவில்லை.
“நான் உங்ககிட்டே கொஞ்சம் பேசலாமா மாப்ள?” அவர் குரலில் இருந்த மாறுபாட்டில், கொஞ்சம் துணுக்குற்றான்.
“சொல்லுங்க அத்த...”.
“இதுவரைக்கும் நடந்த எதைப்பத்தியும் நான் பேசலை. ஆனா இப்போ நடக்கறது... ஒரே ஒரு விஷயம்தான்... உங்களுக்கு என் பொண்ணோட வாழ வேண்டாம்ன்னா, அவகிட்டே அதைப்பத்தி தெளிவா பேசி முடிச்சுடுங்க.
“வேணும்ன்னா... அதில் உறுதியா இருந்தீங்கன்னா, அவளை இப்படி காயப்படுத்தாதீங்க. என் பொண்ணை நீங்க கொஞ்சிகிட்டே இருக்கணும்னு நான் சொல்ல வரலை... உங்க பொண்டாட்டின்னு வர்றப்போ உங்களுக்கு உரிமை இருக்குதான், அதையும் நான் மறுக்கலை.
“ஆனா, அவ இப்படி காயப்பட்டு அழுதுட்டு வர்றதைப் பார்க்கற சக்தி எனக்குமே இல்ல மாப்ள. அவங்க அப்பா இன்னைக்கு இன்னும் வீட்டுக்கு வரலை, வர கொஞ்சம் லேட் ஆகும், நீலாங்கரைக்கு ஏதோ வேலை விஷயமா போறேன்னு சொல்லிட்டு போனார்” சொன்னவர், அவனது பதிலைக் கூட எதிர்பாராமல் வைத்துவிட, அப்படியே அமர்ந்துவிட்டான்.
‘அவளோட வாழ வேண்டாம்ன்னா இப்படி தவம் இருக்கேன்?’ எண்ணியவன் கொஞ்சம் சோர்ந்து போனான்.
‘அப்போ எதுக்குடா அவளை கஷ்டப்படுத்தற?’ மனசாட்சி அவனிடம் கேள்வி கேட்க, அதற்கு மேலே அவனால் அங்கே இருக்க முடியவில்லை.
‘அதான் அவ அப்பன் அவ வீட்ல இல்லையே, வர நேரமாகும்னு வேற சொல்றாங்க, போய்ட்டு வந்தா என்ன?’ எண்ணியவன் அதற்கு மேலே அங்கே தாமதிக்கவில்லை.
தன் காரைக் கிளப்பியவன், அடுத்த கால்மணி நேரத்தில் அவள் வீட்டின் தெருவில் நிற்க, அவர்கள் வீட்டு கேட் கதவும், வாசல் கதவும் திறந்திருப்பது அவனுக்குத் தெரிந்தது.
‘இதென்ன இப்படி திறந்தே வச்சிருக்காங்க? நான் வருவேன்னா?’ எண்ணியவன் தன் காரை மெதுவாக, தயக்கமாக காம்பவுண்டுக்குள் நுழைத்து, வீட்டின் முன்னால் நிறுத்தியவன், காரில் இருந்து இறங்கினான்.
‘உள்ளே செல்வதா? எப்படி? பார்வதியை எங்கே?’ என எண்ணமிட்டவாறே அவன் தயங்கி நிற்க, பார்வதி வேகமாக வெளியே வந்தார்.
“வாங்க மாப்ள...” அவர் முகத்தில் வருத்தத்தையும் மீறிய ஒரு மலர்ச்சி தெரிய, தயக்கமாக அவரைப் பார்த்தான்.
“சாரி அத்த நான்...” என்னவென விளக்கம் கொடுக்கவென அவன் தடுமாற,
“எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம் மாப்ள, நீங்க வந்ததே எனக்குப் போதும்” சொன்னவர், ‘மீதியை என் மகளிடம் பேசு...’ என்பதுபோல் அவனைப் பார்க்க, அவர் முன்னால் செல்லவே, அவர் பின்னால் சென்றான்.
“டிபன் எடுக்கவா மாப்ள? சாப்பிடுங்களேன்...” அவர் சொல்ல, மறுப்பாக தலை அசைத்தான்.
தன் வீட்டுக்குச் சென்ற தென்றல், தாயின் மடியில் படுத்துக் கண்ணீர் விட, அவருக்கு முதல்முறையாக பிரபஞ்சனின் மீது கோபம் துளிர்த்தது. அவனுக்கு என தன் மகள் இங்கே போராடிக் கிடப்பதும், அவனிடம் சென்று அழுது திரும்புவதுமாக இருக்க,
‘இப்படி புரிந்துகொள்ள மறுக்கும் அவனது உறவு அவசியமா?’ என்னும் அளவுக்கு அவர் யோசித்தார்.
ஆனால் இங்கே முடிவு செய்ய வேண்டியது மகள் என்பதால் அமைதி காத்தவர், மகளது தலையை கோதிக் கொடுத்தார்.
“என்னம்மா...? எதுக்கு அழற? நேத்தும் அழுத, இன்னைக்கும் அழற... நாளைக்கும் இப்படியே அழுவியா? தைரியமா இருக்கத் தெரியாதா?” சற்று கண்டிப்பான குரலிலேயே பேசினார்.
மகளைக் கொஞ்சினால், அவள் இன்னுமே அழுது கரைவாளோ? எனத் தோன்ற, தன் முறையை மாற்றினார்.
“என்னைத் திட்றாங்கம்மா... என்னைத் திட்டிட்டாங்கம்மா” பள்ளிக்குச் சென்று, முதல்முறை ஆசிரியரிடம் அடிவாங்கிவிட்ட அதிர்வை வெளிப்படுத்தும் குழந்தையென அவள் தேம்ப, அவருக்கு உருகிப் போயிற்று.
அதை மறைத்தவர்... “திட்ற அளவுக்கு என் பொண்ணு என்ன பண்ணா? என் பொண்ணு சமத்தாச்சே...” கைக்குழந்தையை விசாரிக்கும் பாங்கு அவரிடம்.
சின்னக்குரலில் தியாகு அவன் முன்பாகவே அவளிடம் பேசியதையும், அவன் கோபத்தையும் சொல்லி, இன்று நடந்ததையும் சொல்ல, பிரபஞ்சனின் கோபம் அவருக்குப் புரிந்தது.
“இந்த ஆம்பளைங்களுக்கு பொண்டாட்டின்னு ஒருத்தி வந்துட்டாலே, அவ அவங்க உடைமைன்னு மனசுக்குள்ளே பதிஞ்சு போய்டும். அவளும் ஒரு தனி மனுஷி, அவளுக்குன்னு சில உரிமைகள், ஆசைகள்... அவ பிரச்னையை அவளாலும் தனியா சம்மாளிக்க முடியும்னே யோசிக்க மாட்டாங்க.
“அவ நம்ம பொண்ணு, அவளை நாமதான் பார்த்துக்கணும். அவளுக்கு உலகமே தெரியாதுன்னு அவங்களுக்கு அவங்களே யோசிச்சு பேசறது ஒரு வகைன்னா... சுத்தி நடக்கறதை கவனிக்காமல் இருக்காளேன்னு கோபப்படறது இன்னொரு வகை.
“இப்போ உன் புருஷன் என்ன வகைன்னு கொஞ்சம் யோசி...” அவர் சொல்ல, தன் அழுகையை நிறுத்தியவள், எதையோ யோசிப்பது தெரிந்தது.
அந்த அலுவலகத்தில், கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவனோடு இருக்கிறாள். அலுவலகத்தில் இருக்கும் மற்ற ஆண்களோடும் சரி, பெண்களோடும் சரி... யாரிடம் பேசினாலும் அவன் அப்படி ஒன்றும் அவளைத் தடுத்ததோ, கண்காணித்ததோ இல்லை.
தியாகுவின் பிரச்சனையில் கூட, அவன் தலையிடாமல் விலகித்தான் நின்றான். ‘அவளே சொல்லட்டும்...’ என்பதுதான் அவனது நிலைப்பாடாக இருந்தது.
ஒரு பக்கம் அவனுக்கு கோபமாகவும், தான் இப்படி தன்னைச்சுற்றி நடப்பதை அறியாமலும் இருந்ததுதான் அவனது முதல் கோபத்துக்கான காரணம் என்பது புரிய சற்று தெளிந்தாள்.
“அவங்க ரெண்டாவது ரகம்தான்... அதுக்காக என்னைத் திட்டுவாங்களா? என்னைத் திட்றாங்க...” அப்பப்பா... முன்னர் என்னை ‘போ’ எனச் சொல்லிவிட்டார் என அழுதால், இப்பொழுது திட்டிவிட்டான் என அழுதாள்.
“இது... நீங்க பிரிஞ்சு இருக்கறதால வர்ற பிரச்சனை தென்றல்... நீ அவர் கூடவே இருக்கும்போது இதெல்லாம் சரியா போய்டும். நீயும் அவரை நல்லா திட்டிடு” அவர் சொல்ல,
“அவரையா? திட்டவா?” என்னவோ புதிதாக வாழ்க்கைப் பாடம் படிக்கும் உணர்வு.
“ஆமா... குடும்பம்னு வந்துட்டா அப்படித்தான்... நானும் உங்க அப்பாவும் போடாத சண்டையா? உங்க அப்பா என்னைத் திட்டினதே இல்லையா?” அவர் கேட்க, அமைதியானாள்.
“அப்படின்னா என்னையும் திட்டுவாங்களா? என்னை திட்ட வேண்டாம்” அவள் மீண்டும் கண்ணீர் வடிக்க, அவருக்கு ‘ஐயோ’ வென இருந்தது.
தங்கள் பிள்ளையை ஒரு சொல் கூட திட்டி வளர்க்காமல் விட்டுவிட்டு, அவள் அடுத்த குடும்பத்துப் பெண்ணாக மாறுகையில், அங்கே அவளை அனைவரும் சீராட்டுவார்களா என்ன? ஒரு சொல் கூடத் தாங்காமல் சுணங்கிப் போகும் மகளைப் பார்க்க வருத்தம் மட்டுமே பட முடிந்தது.
“இதையெல்லாம் தாங்கி, தாண்டித்தான் வரணும் தென்றல்...” மகளுக்கு புரிய வைக்க முயன்றார்.
“என் தன்மானத்துக்கு ஒரு இழுக்குன்னா, அதையெல்லாம் தாங்கிட்டு எனக்கு இருக்க வேண்டாம்” அவள் பட்டென சொல்ல, இந்த தென்றல் அவருக்குப் புதியவளே.
“சரி வேண்டாம்... ஆனா அப்படியெல்லாம் ஆகாதும்மா...” சொன்னவர் அவளை அமைதிப்படுத்த முயன்றார். ஆனால் தேறிக்கொள்ள வேண்டியவள் அவள் என்கையில் என்ன செய்ய முடியும்?
இங்கே இவள் இப்படியென்றால்... தன் வீட்டுக்கு வந்த பிரபஞ்சனால் நிம்மதியாக இருக்கவே முடியவில்லை. தென்றல் அப்படி ஒரு அழுகை அழுதிருக்க, அழுதுகொண்டே வேறு சென்றிருக்க, அவள் சமாதானமாகிவிட்டாளா எனத் தெரியாமல் தூங்க முடியும் என்றே தோன்றவில்லை.
அவன் அதையே எண்ணிக்கொண்டு அமர்ந்திருக்க, அவனது அலைபேசி இசைக்கவே, ஒரு வேளை தென்றல்தான் அழைக்கின்றாளோ என எண்ணியவன், வேகமாக அழைப்பை பார்த்தான்.
அவனது அக்கா அழைத்திருக்க, “சொல்லுக்கா...” அவன் குரல் கொடுக்கவே, அவன் குரலில் இருந்த மாறுபாட்டை அவள் உணர்ந்துகொண்டாள்.
“ரஞ்சா... என்னப்பா குரலே சரியில்லை? தென்றல்கூட மறுபடியும் ஏதும் பிரச்சனையா? ஏதாவது சொல்லிட்டாளா?” அவனுக்கு வேறு கவலைகள் இருக்காது என்பதால் கேட்டாள்.
“அவ என்ன சொல்ல? நான்தான்...” தான் கொஞ்சம் அதிகமாக பேசிவிட்டோமோ என வருந்தினான்.
“என்ன ரஞ்சா இது? அவ என்ன நினைக்கறான்னு பேசி புரிஞ்சுகிட்டு, அடுத்த விஷயத்தைப் பாருன்னு சொன்ன பிறகும், இப்போ என்ன புதுசா?” சிறு கண்டிப்பாகவே கேட்டார்.
“அவளைக் கொஞ்சம் திட்டிட்டேன்...” சொன்னவன் காரணத்தை சொல்லாமல் விடுக்கையிலேயே, தவறு அவன்மேல் இருப்பது அவளுக்குப் புரிந்தது.
“திட்டிட்டியா? அதெல்லாம் அவ தாங்கிக்க மாட்டாளே... அவளை அப்படி செல்லமா வளத்து வச்சிருக்காங்கடா. வெளியில் எப்படியோ, வீட்டு ஆட்கள் கிட்டே அவ ரொம்ப சென்சிட்டிவ்ன்னு உனக்குத் தெரியாதா?” அவளைப்பற்றித் தெரிந்தும் இப்படி செய்துவைத்தால், அவளும் என்னதான் செய்வாள்?
“ம்ச்... தெரியும்க்கா... என்னென்னவோ சொல்லிட்டேனா... ஒரே அழுகை அவ... அழுதுட்டே வீட்டுக்குப் போனா... சாப்பிட வேற இல்லையாம்” அவளை அப்படி அனுப்பியது அவன் மனதைப் போட்டு பிசைந்தது.
“சாப்பிடலை, அழுதுட்டே போயிருக்கா... நீ அவளை அப்படியே அனுப்பினியா? எப்படி ரஞ்சா உன்னால் முடியுது? என் தம்பியும், அவ புருஷனும் வேறதான் இல்ல...” அவள் சொல்ல, அவனுக்கு மனதில் பாரம் ஏறியது.
“நானே கஷ்டபட்டுட்டு இருக்கேன்... நீ வேற ஏன்க்கா...?” வருத்தமாக கேட்டான்.
“தென்றல் குணத்துக்கு என்னால் உன்னைத்தான் கண்டிக்க வருது ரஞ்சா. உனக்கு வேற ஏதோ பொண்ணைக் கட்டி வச்சிருந்து, அது எப்படி ஆகி இருக்குமோ? ஆனா தென்றலைப் பொறுத்த வரைக்கும், அவளை தட்டிக்கொடுத்து கொண்டு போகணுமே தவிர, திட்டி இல்லை” அவள் சொல்லச் சொல்ல, அவனுக்கு இன்னுமே கடினமாக இருந்தது.
“இப்போ அவ ரொம்ப மாறிட்டா தெரியுமா” அவன் குரலில் ஒரு சிலாகிப்பு திடுமென கலக்க, அவள் சுவாரசியமானாள்.
“அப்படியா? என்னன்னு சொல்லு, நானும் தெரிஞ்சுக்கறேன்” அவன் குரல் மறுபாட்டில் அவனிடம் கேட்டாள்.
“நான் திட்டிட்டேன்னு அழறாளேன்னு ஆறுதல் சொல்ல ட்ரை பண்ணா, எனக்கு உங்க மேல சாஞ்சுக்கணும் தான்... ஆனா நீங்க என்னைத் திட்றீங்க, எனக்கு வேண்டாம்னு விலகிப் போய் நிக்கறா” அவளது அந்த தன்மானம் அவனுக்குப் பிடித்திருக்க, அந்த நேரத்திலும் அவன் அதை ரசித்தான்.
“அவ்வளவு பிடிவாதக்காரி தான்... பார்த்துக்கடா... ‘உங்களை ஹேட் பண்றேன்’ன்னு சொல்லி சோலியை முடிச்சுடப் போறா...” அவள் கேலியாகச் சொன்னாலும், அதில் இருந்த உண்மை அவனைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது.
“என்னை வெறுத்துடுவாளாக்கா? நிஜமாவா? ஏற்கனவே ஒரு சொல்லு சொல்லிட்டேன்னு அதையே மனசுக்குள் போட்டு குழப்பிக்கறா போல” அவன் சொல்ல, நிவேதிதா அதிர்ந்தார்.
“என்னடா சொல்லி வச்ச?” அதை மறைக்க முடியாமல் கேட்டாள்.
“என்னைக்கோ அவகிட்டே கோபத்தில் பேசறப்போ, ‘எப்போ உன் அப்பன் வந்து கூப்ட்டு, நீ போய்டுவியோன்னு நான் பயந்துட்டே இருக்கணுமா?’ன்னு கேட்டுட்டேன்... அதை வச்சுகிட்டு என்கிட்டே வராம இருக்கறா போல.
“அதை விட ‘நான் என்ன செஞ்சா, நீங்க அப்படி பயப்படாம இருப்பீங்கன்னு எனக்குத் தெரியலை. அதே கேள்வியை நீங்க மறுபடியும் என்னைப்பார்த்து கேட்டா, நான் செத்துடுவேன்’ன்னு அவ சொல்லிட்டு போனப்போ...” அவன் அப்படியே நிறுத்திவிட, அங்கே அப்படி ஒரு அமைதி நிலவியது.
“ரஞ்சா... வேணாம்டா... என்ன செய்வியோ தெரியாது... முதல்ல அவகிட்டே பேசு... அவ இப்படியே இருந்தான்னா அது நல்லதில்லை” அவள் சொல்ல, அவன் கொஞ்சம் பயந்தான்.
“அக்கா, என்னக்கா சொல்ற?” அவன் தன் பயத்தை குரலில் வெளிப்படுத்த,
“ஏற்கனவே ஜன்னி வந்து சுயநினைவே இல்லாமல் கிடந்தவ அவ, நீ அதை மறந்துட்டியா? நீ அவளை ஏதாவது சொன்னா, அதோட இம்பேக்ட் அவகிட்டே பலமடங்கு இருக்கும்... அதை எப்போதும் மறந்துடாதே. முதல்ல அவளை சமாதானப்படுத்து... இப்போ நான் வைக்கறேன்” சொன்னவள் அழைப்பை துண்டிக்க முயன்றாள்.
“என்னக்கா பயம் காட்டற?” நிஜமான பயத்தோடு கேட்டான்.
“உன்னோட இப்படியான செய்கையால, அவ உன்னை வெறுக்க ஆரம்பிச்சுட்டா அதைத் தடுக்கவே முடியாது ரஞ்சா. நான் சொல்வது உண்மை. இதை நீ உன் மனசில் வச்சுக்கோ... ஒரு சொல் கேட்காமல் வளர்ந்த பொண்ணுடா.
“அவங்க அப்பாவைத் தாண்டி, உன்னைத் தேடி வந்திருக்கா. அதுவே அவ அளவுக்கு பெரிய விஷயம் தான்... இப்போ நீ கோபப்பட்டுட்டே இருந்தா, அவளுக்கு அதையெல்லாம் சம்மாளிக்கத் தெரியுமான்னு யோசிச்சியா?” அத்தனை கோபமாக கேட்க, அவனுக்கு இதயம் நின்று துடித்தது.
“அக்கா...” அதிர்வாக அழைத்தான்.
“வெண்ணெய் திரண்டு வர்றப்போ தாழியை உடைச்ச கதையா எதையும் செஞ்சுடாதே ரஞ்சா, கவனம்... தென்றல் இதையெல்லாம் தாங்க மாட்டா, அதை எப்போதும் உன் மனசில் ஆழமா பதிய வச்சுக்கோ. அவளைப் போய் பாரு...” என்றவள் அழைப்பை துண்டிக்கப் போக,
“அக்கா... அக்கா... இந்த நேரம் கூப்ட்டிருக்க, ஏதும் முக்கியமான விஷயமா?” அவள் சாதாரணமாக அழைத்துப் பேசுவாள் என்றாலும், தெரிந்துகொள்ளக் கேட்டான்.
“ரெண்டு நாள்ல பட்டுவோட பெர்த்டே வருது... அதைச் சொல்லத்தான் கூப்ட்டேன்” சொன்னவள் அலைபேசியை வைத்துவிட, தன் தலையிலேயே கை வைத்துக் கொண்டான்.
போன வருடம் இருந்த டென்ஷனில் அவன் நைனிகாவின் பிறந்தநாளையே மறந்து போயிருக்க, இரவுக்குள் அழைத்து விஷ் செய்துவிட்டாலும், அவள் ஒரு மாதம் வரைக்கும் அவனிடம் பேசவே இல்லை.
அதை எண்ணியவன், மனதுக்குள் அதைக் குறித்துக் கொண்டாலும், தன்னவளைக் குறித்து அறிந்துகொள்வதே இப்பொழுது முக்கியம் எனத் தோன்ற, அவளது அலைபேசிக்கு அழைப்பு விடுத்தான்.
அதுவோ அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக சொல்ல, சற்று பயந்து போனான். போனமுறை இப்படி ஆனதாகத்தான் அவனது நினைவு. எனவே வேகமாக பார்வதிக்கு அழைத்துவிட்டு, அவர் எடுக்கக் காத்திருந்தான்.
அவனைக் கொஞ்சம் அதிகம் சோதித்துவிட்டு, அழைப்பு நிற்கப் போகையில்தான் அவர் அதை எடுக்க, “சொல்லுங்க மாப்ள...” அவர் குரல் கொடுக்கவே, அவனுக்குள் ஒரு பெருத்த தயக்கம் வந்து ஒட்டிக் கொண்டது.
“அத்த... தென்றல்... தூங்கிட்டாளா? சாப்ட்டாளா?” என்னவோ பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டும் உணர்வு.
“சாப்ட்டாளான்னு கேட்டா... கஷ்டப்பட்டு ரெண்டு இட்லி சாப்பிட வச்சேன். தூங்கிட்டாளான்னா... தூக்கமாத்திரை கொடுத்தும் தூங்காமல் கிடக்கா” அவர் வேதனையாகச் சொல்ல, அவனுக்கு பேசவே முடியவில்லை.
“நான் உங்ககிட்டே கொஞ்சம் பேசலாமா மாப்ள?” அவர் குரலில் இருந்த மாறுபாட்டில், கொஞ்சம் துணுக்குற்றான்.
“சொல்லுங்க அத்த...”.
“இதுவரைக்கும் நடந்த எதைப்பத்தியும் நான் பேசலை. ஆனா இப்போ நடக்கறது... ஒரே ஒரு விஷயம்தான்... உங்களுக்கு என் பொண்ணோட வாழ வேண்டாம்ன்னா, அவகிட்டே அதைப்பத்தி தெளிவா பேசி முடிச்சுடுங்க.
“வேணும்ன்னா... அதில் உறுதியா இருந்தீங்கன்னா, அவளை இப்படி காயப்படுத்தாதீங்க. என் பொண்ணை நீங்க கொஞ்சிகிட்டே இருக்கணும்னு நான் சொல்ல வரலை... உங்க பொண்டாட்டின்னு வர்றப்போ உங்களுக்கு உரிமை இருக்குதான், அதையும் நான் மறுக்கலை.
“ஆனா, அவ இப்படி காயப்பட்டு அழுதுட்டு வர்றதைப் பார்க்கற சக்தி எனக்குமே இல்ல மாப்ள. அவங்க அப்பா இன்னைக்கு இன்னும் வீட்டுக்கு வரலை, வர கொஞ்சம் லேட் ஆகும், நீலாங்கரைக்கு ஏதோ வேலை விஷயமா போறேன்னு சொல்லிட்டு போனார்” சொன்னவர், அவனது பதிலைக் கூட எதிர்பாராமல் வைத்துவிட, அப்படியே அமர்ந்துவிட்டான்.
‘அவளோட வாழ வேண்டாம்ன்னா இப்படி தவம் இருக்கேன்?’ எண்ணியவன் கொஞ்சம் சோர்ந்து போனான்.
‘அப்போ எதுக்குடா அவளை கஷ்டப்படுத்தற?’ மனசாட்சி அவனிடம் கேள்வி கேட்க, அதற்கு மேலே அவனால் அங்கே இருக்க முடியவில்லை.
‘அதான் அவ அப்பன் அவ வீட்ல இல்லையே, வர நேரமாகும்னு வேற சொல்றாங்க, போய்ட்டு வந்தா என்ன?’ எண்ணியவன் அதற்கு மேலே அங்கே தாமதிக்கவில்லை.
தன் காரைக் கிளப்பியவன், அடுத்த கால்மணி நேரத்தில் அவள் வீட்டின் தெருவில் நிற்க, அவர்கள் வீட்டு கேட் கதவும், வாசல் கதவும் திறந்திருப்பது அவனுக்குத் தெரிந்தது.
‘இதென்ன இப்படி திறந்தே வச்சிருக்காங்க? நான் வருவேன்னா?’ எண்ணியவன் தன் காரை மெதுவாக, தயக்கமாக காம்பவுண்டுக்குள் நுழைத்து, வீட்டின் முன்னால் நிறுத்தியவன், காரில் இருந்து இறங்கினான்.
‘உள்ளே செல்வதா? எப்படி? பார்வதியை எங்கே?’ என எண்ணமிட்டவாறே அவன் தயங்கி நிற்க, பார்வதி வேகமாக வெளியே வந்தார்.
“வாங்க மாப்ள...” அவர் முகத்தில் வருத்தத்தையும் மீறிய ஒரு மலர்ச்சி தெரிய, தயக்கமாக அவரைப் பார்த்தான்.
“சாரி அத்த நான்...” என்னவென விளக்கம் கொடுக்கவென அவன் தடுமாற,
“எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம் மாப்ள, நீங்க வந்ததே எனக்குப் போதும்” சொன்னவர், ‘மீதியை என் மகளிடம் பேசு...’ என்பதுபோல் அவனைப் பார்க்க, அவர் முன்னால் செல்லவே, அவர் பின்னால் சென்றான்.
“டிபன் எடுக்கவா மாப்ள? சாப்பிடுங்களேன்...” அவர் சொல்ல, மறுப்பாக தலை அசைத்தான்.