பகுதி – 23.
அலுவலகத்துக்கு கீழே இறங்கி வந்து, தன் இடத்தில் அமர்ந்த தென்றலுக்கு, அவனிடம் எதையோ சொல்ல நினைத்து, எதையோ சொல்லிவிட்டு வந்து அமர்ந்தது புரிந்தது.
‘காலேஜ் பத்தி அவங்ககிட்டே கேட்கணும், சொல்லணும்னு நினைச்சேனே. அதைச் சொல்லாமல், என்னென்னவோ பேசிட்டு வந்துட்டேன்?’ தன்னைத்தானே திட்டியவாறே அமர்ந்திருந்தாள்.
அந்த நேரம் ஷீபா அங்கே வர, “குட் மார்னிங்க்கா...” தென்றல் வாழ்த்தவே, அவள் அருகே வந்தாள்.
“ம்... நிஜமாவே குட்மார்னிங் தான் போல... முகத்தில் ஒரு ஒளி வட்டம் தெரியுது?” சொன்னவள், அவள் முகத்தையே குறுகுறுவென ஆராய, தென்றலுக்கு ஒரு மெல்லிய படபடப்பு எழுந்தது.
“அக்கா... அப்படியெல்லாம் எதுவும் இல்லை...” அவள் சிணுங்க,
“இல்லையா? பிறகு ஏன் முகமே ஜொலிக்குது? அப்படி என்ன சொல்லி உன்னை சமாதானம் பண்ணான்? நேத்து மூச்சு கூட விட மாட்டேன்னு அழுதுட்டு இருந்த? நீ இவ்வளவு சீக்கிரம் சமாதானம் ஆனால் எப்படி? அவனை வச்சு செய்ய வேண்டாம்?” அவள் கேட்டுக் கொண்டிருக்க, அதைக் கேட்டவாறே அங்கே வந்தான் பிரபஞ்சன்.
“ஏய், அரை லூசே... என் பொண்டாட்டியை எதுக்குடி கெடுத்துட்டு இருக்க?” அவள் தலையில் மெல்லியதாக குட்டு வைத்தான்.
“ஆமா, உன் பொண்டாட்டியை நாங்க கெடுக்கறோம்... உனக்கு லக்குதான் டா... இல்லன்னா பொசுக்குன்னு சமாதானமாகற பொண்டாட்டி கிடைப்பாளா? என்ன கால்லயே விழுந்தியா? இல்லன்னா தோப்புக்கரணம் போட்டியா?” அவள் நக்கலாக கேட்க, அவன் தென்றலைப் பார்த்தான்.
“நான் அவகிட்டே ஒரு சாரி கூட சொல்லலை...” நிஜமான வருத்தத்தில் அவன் சொல்ல, தென்றல் தலையைக் குனிந்து கொண்டாள்.
“தென்றல்... இதை என்னால் ஒத்துக்கவே முடியாது. ஒரு பத்து நாளைக்கு இவனை ‘பத்த’ போடுற....” சொன்னவள், அவர்களுக்கு நடுவில் நிற்க விரும்பாமல் அங்கிருந்து அகன்றாள்.
அவள் செல்லவே, “மோனா... ஐ’ம் சாரி... ரியலி சாரி...” அவன் உணர்ந்து சொல்ல, அவளிடம் மெல்லிய மௌனம்.
“இன்னும் என்மேல கோபம் போகலையா?” அவன் வருத்தமாக கேட்க,
“சாரி ஓகே... ஆனா, நீங்க மறுபடியும் அப்படியெல்லாம் பேச மாட்டீங்க தானே? அம்மா என்னவோ புருஷன் எல்லாம் இப்படித்தான் இருப்பாங்கன்னு சொல்றாங்க. எனக்கு அப்படி வேண்டாம்... என்னால் நீங்க திட்றதை எல்லாம் தாங்கிக்க முடியாது...” கண்களில் அத்தனை பயமும், அலைப்புறுதலும் தெரிய, அவனுக்குள் பெருத்த சங்கடம்.
“ஐ ப்ராமிஸ்... ஐ நெவர் ஹெர்ட் யூ மோனா...” அவன் உறுதியாக உரைக்க, அவள் முகம் சற்று தெளிந்தது.
“‘அப்பா... அப்பா... அப்பா... அந்த அப்பாவை மட்டும்தான் யோசிப்பியா? என்னை அந்த அளவுக்கு எப்போவாவது யோசிச்சு இருக்கியான்னு ஒரு முறை கேட்டீங்கல்ல...’ உங்க அளவுக்கு என் அப்பாவைக் கூட நான் யோசிச்சது இல்லைங்கறது தான் நிஜம்” அவள் அவனை ஏறிடாமல் சொல்ல, தன் வார்த்தைகள் அவளுக்குள் ஏற்படுத்தும் தாக்கம் கண்டு திகைத்தான்.
“எதையுமே மறக்க மாட்டியா நீ?” அவன் அதிர்வாக கேட்க,
“நீங்க சொல்றதை எப்படி மறக்கறதாம்? அதோடதான் வாழ்ந்துட்டு இருக்கேன்” அந்த வார்த்தைகள் அவனை சல்லடையாக துளைக்கும் உணர்வு.
“மோனா...” அவன் தடுமாறிப்போய் நிற்க,
“இதுக்கு மேலே இங்கே பேசவேண்டாம்... எல்லாரும் பார்க்கறாங்க... நீங்க போங்க” அனைவரும் அலுவலகம் வந்திருக்க, அனைவருமே அவர்களைப் பாராமல் பார்ப்பது அவனுக்கும் புரியவே செய்தது.
“நான் உன்னை நைட் பார்க்க வந்தேன்னு உனக்கு எப்படித் தெரிஞ்சது மோனா?” அவன் கேட்க, அவ்வளவு நேரமாக அவன் முகம் பார்க்க மறுத்து நின்றவள், சட்டென அவன் முகம் பார்த்தாள்.
அவன் இதழ்களில் ஒரு குறும்பு புன்னகை ஒட்டிக்கொண்டு இருக்க, அவள் முகம் மெல்லியதாக சூடேறும் உணர்வு.
“எனக்குத் தெரியாதே... வந்தீங்களா?” பார்வையை கணினியின்மேல் பதித்தவள், சின்னக் குரலில் கேட்க, அவள் விளையாடுவது அவனுக்குப் புரிந்து போனது.
“ஓ... ஒரு வேளை கன்னத்தில் மட்டும்தான் மார்க் விழும் போல...?” அவன் தனக்குத் தானே சொல்லிக் கொள்வதுபோல் சொல்ல, அவளுக்கு ஏனோ தேகம் மெல்லிய நடுக்கம் கொண்டது.
“மோனா... நான் வேண்ணா செக் பண்ணிக்கவா?” அவன் கேட்க, பெரும் பதட்டமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவளது பதட்டத்தைப் பார்த்தவன், “இங்கே வச்சு இல்ல...” அவன் வேகமாகச் சொல்ல, தன் பதட்டம் தணிந்தாள்.
“அடையாளம் உடனே போய்டுமா? எத்தனை நாள் இருக்கும்?” அவன் அவளை நெருங்கி வர,
“ஹையோ, எனக்குத் தெரியாது... எதுக்கு இப்படி வம்பு பண்றீங்க? போங்க” அவள் முகமே மற்றவர்களுக்கு எதையும் காட்டிக் கொடுத்துவிடுமோ என பதட்டமானாள்.
“எனக்குத் தெரிஞ்சுக்கணுமே...” அவன் சொல்ல, அம்மம்மா... அந்த பேச்சுக்கே அவளால் தாள முடியவில்லை.
“என்னங்க...” அவள் தடுமாறி நிற்கையிலே,
“மாம்ஸு...” திடுமென நைனிகாவின் குரல் அவனுக்குப் பின்னால் ஒலிக்க, சட்டென திரும்பினான்.
“பட்டு... வாடா... இந்த ஆபீஸ் ஆரம்பிச்ச பிறகு இப்போதான் வர்ற... என்ன ஸ்வீட் சர்ப்ரைஸ்...” அவள் சொல்லாமல் வந்து நின்றது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது.
“என் மாம்ஸை பார்க்கணும்னு ஆசையா இருந்தது... காலையில் ஃபஸ்ட் ஹாப் எந்த கிளாசும் இல்லை. மதியத்துக்கு மேலே தான் லேப்... சோ அங்கே இருக்க போரிங்கா இருந்தது. அப்படியே என் பெர்த்டேக்கு உங்களை இன்வைட் பண்ணிட்டுப் போகலாம்னு வந்தேன்” அவள் சொல்ல, அவளது பேச்சில் புருவம் நெரித்தவன், அவள் கண்களை அகலத் திறந்து, உருட்ட சாதாரணமாக நின்றுகொண்டான்.
“பெர்த்டே வருதுல்ல... நான் கூட மறந்தே போயிட்டேன் பாரேன்” அவன் சொல்ல,
“யோவ் மாம்ஸு... இன்னொருவாட்டி என் பெர்த்டேவை மற... உனக்கு நீடில்லதான் அபிஷேகமே...” அவள் அவனைப் போலியாக மிரட்ட, அவள் ஒருமையில் பேசியதிலேயே அவளது கோபம் புரிய அடங்கிப் போனான்.
“என் பட்டு பெர்த்டேயை நான் மறக்கறதா நெவர்...” அவன் வீராவேசமாக சொல்ல,
“போதும் பில்ட்டப்பு... போன வருஷம் இது எங்கே போயிருந்ததாம்?” கேட்டவள் அவனை முறைக்க, கப்பென வாயை மூடிக் கொண்டான்.
இவர்கள் பேசப் பேச, தென்றலின் பார்வை மொத்தமும், நைனிகாவின் மீதுதான் இருந்தது.
அவள் MBBS மூன்றாம் வருடம் படிப்பது அவளுக்குத் தெரியும். இடையில் மேகலை தவறியபொழுது அவளைப் பார்த்திருந்தாலும், இப்பொழுது வளர்ந்த குமரியாக, பாதி பிரபஞ்சனின் சாயலில் இருந்த அவளைப் பார்க்க, ஆச்சரியமாக இருந்தது.
இப்பொழுது இவர்களைப் பார்க்கும் யாரும், நிச்சயம் அண்ணன் தங்கை எனச் சொல்லும் அளவுக்கு இருந்தார்கள்.
“நாளைக்கு ஈவினிங் வீட்ல கேக் கட்டிங் இருக்கு, கண்டிப்பா வர்றீங்க” சொன்னவள் தென்றலைத் துளியும் கண்டுகொள்ளவில்லை.
“ஷீபா இருக்காங்களா? அவங்களையும் இன்வைட் பண்ணணும்...” சொன்னவள், அவனது அறைக்குச் செல்லப் போக, தென்றலால் அதற்குமேல் அமைதியாக இருக்க முடியவில்லை.
“பட்டு... எப்படி இருக்க?” தென்றல் அவளிடம் கேட்க, சில அடி நடந்தவள், வேகமாக அவர்களுக்கு அருகே வந்தாள்.
“பட்டுவா? எங்க ஃபேமிலியைத் தவிர வேற யாரும் என்னை பட்டுன்னு கூப்ட்டா எனக்குப் பிடிக்காது. நீங்க...? மாமா, உங்களுக்குத் தெரிஞ்சவங்களா?” அவள் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு கேட்க, தென்றல் அழுதுவிடும் நிலைக்கே சென்றுவிட்டாள்.
“பட்டு... இதென்ன இப்படி பேசற?”.
“மாமா... நீங்க சொல்லுங்க...” அவள் அதிலேயே இருக்க,
“மாமாவைத் தெரியுது, அத்தையைத் தெரியாதா? உன் கோபம் நியாயமானதுதான். அதுக்காக... என்னை யார்ன்னு தெரியாதுன்னு சொல்லுவியா? எப்படி இருக்க பட்டு?” கேட்டவள், தன் இடத்தில் இருந்து வெளியேறிவந்து, அவள் கரத்தைக் கெட்டியாக பற்றிக் கொண்டாள்.
“உங்களைத் தெரியாதுன்னு எப்போ சொன்னேன்? உங்களுக்கு மறந்து போச்சோன்னு கொஞ்சம் செக் பண்ணேன்...” அவள் சொல்ல, தென்றலின் முகம் வாடிப் போனது.
“உங்க மாமா மறந்த பெர்த்டேயைக் கூட நான் ஞாபகம் வச்சிருந்தேன்” அவள் ரோஷமாக சொல்ல,
“ஆமா, எங்கே பெர்த்டே, அம்மா அப்பா வெடிங் டே... இதுக்கெல்லாம் விஷ் மட்டும் பண்ணா போதும்னு உங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தது? உங்க வெடிங்டேயை இது வரைக்கும் நீங்க கொண்டாடி இருக்கீங்களா?” அவள் சிறு கோபமாக வினவ, அவள் கன்னத்தில் கண்ணீர் இறங்கியது.
“பட்டு, போதும்...” தென்றல் அழுவது பொறுக்காமல், பிரபஞ்சன் அவளுக்கு துணைக்கு வந்தான்.
“இன்னும் நாலு மாசம் போனா, உங்க பிஃப்த் வெடிங்டே வந்துடும். இப்படியே தனித்தனியா கொண்டாடிகிட்டே இருக்கப் போறீங்களா?” அவனிடம் சாடினாள்.
“பட்டு...” அவன் அழுத்தமாக அழைக்க, அவனை முறைத்தாள்.
“என்னவோ போங்க... நாளைக்கு வீட்டுக்கு வந்து சேருங்க. எனக்கு கிப்ட் ஐஃபோன் வேணும்...” சொன்னவள் முறுக்கிக்கொண்டு செல்ல, தென்றலால் தாங்க முடியவில்லை.
வந்தவள் தன்னிடம் பேசவும் இல்லை, தன்னை பார்ட்டிக்கு அழைக்கவும் செய்யாமல் செல்ல, அதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
“பட்டு, எதுக்கு வந்தியோ அதை முடிச்சுட்டு போ...” அவன் அவளைத் தேக்கினான்.
“நான் என்னவோ உங்க பொண்டாட்டியை அழைக்க வந்த மாதிரி சொல்றீங்க? அதெல்லாம் இல்லை...” முறுக்கிக் கொண்டவள், ஷீபாவைப் பார்க்கப் போனாள்.
அவள் செல்லவே, “பட்டுவுக்கு என்மேல ரொம்ப கோபம்... என்னை இன்வைட் பண்ணவே இல்லை பாருங்க...” அவனிடம் குறைபட்டாள்.
“அவ இங்கே வந்ததே உன்னை கூப்பிடத்தான்... நான் எல்லாம் கூப்பிடாமலே போய் நிக்கற ஆளு...” அவன் சொல்ல, ‘அப்படியா?’ என்பதுபோல் நம்ப முடியாத பார்வை பார்த்தாள்.
“நம்பும்மா...” அவன் அழுத்திச் சொல்ல, ஷீபாவும், அவளும் அங்கே வந்தார்கள்.
“ஓகே ஆன்ட்டி... கண்டிப்பா ஃபங்ஷனுக்கு வந்துடுங்க...” அவள் ஷீபாவை அழைக்க, அவளோ முறைத்தாள்.
“ஏய்... நான் உனக்கு ஆன்ட்டியா? உன்னை கொல்லப்போறேன் பார்... நான் யூத்தும்மா...” ஷீபா அவளிடம் சண்டைக்குப் போக, நைனிகாவோ நக்கல் சிரிப்பு சிரித்தாள்.
“யூத்தா? பத்து வருஷத்துக்கு முன்னாடி தான?” கேட்டவள் வெடித்து சிரிக்க, அவளைப் போலியாக அடித்தாள்.
“உன்னை சும்மா விடப் போறதில்லை... ஓவர் நக்கலு... அதுவும் காலேஜ்க்கு போய் ரொம்ப கெட்டு போய்ட்ட...”.
“நீங்களே எனக்கு ஆன்ட்டியா வந்திருக்கலாம்... நல்லா இருந்திருக்கும்” அவள் சொல்ல, தென்றல் திடுக்கிட்டாள்.
“எது... இவனைக் கட்டிக்கிட்டு இவ படறது போதாதா? இவன் எல்லாம் எனக்கு செட்டே ஆக மாட்டான்... காட்டான்...” ஷீபா அதை சாதாரணமாக எடுத்துவிட்டு கடந்துவிட, பிரபஞ்சனோ சிரித்துக் கொண்டான்.
“உங்களுக்கு கொடுத்துவச்சது அவ்வளவுதான்... லாஸ் உங்களுக்குத்தான்” சொன்னவள், “சரி, நான் கிளம்பறேன்... மாம்ஸு, நீங்க வர்றப்போ உங்க வைஃப்பையும் மறக்காம கூட்டி வாங்க. வந்துடுங்க அத்த...” அவள் அந்த அத்தையை அழுத்திச் சொல்லிச் செல்ல, தென்றல் சமாதானம் ஆகவே இல்லை.
“என்னவாம்டா... வந்து சிலுப்பிகிட்டு போறா?” ஷீபா நண்பனிடம் கேட்க,
“தென்றலை சீண்டி விட வந்திருக்கா” அவளிடம் சின்னக் குரலில் சொன்னவன், தென்றலைப் பார்த்தான்.
அவள் இன்னுமே நைனிகா சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருக்க, “மோனா... என்ன அப்படியே நின்னுட்ட?” அவளது தோளைத் தொட்டு கலைத்தான்.
“அவ என்னை வா’ன்னு கூப்ட்டாளா? இல்லன்னா கேலி பண்ணிட்டு போறாளா?” புரியாத குழப்பத்திலேயே கேட்டாள்.
“சுத்தம்... இவ தேற மாட்டா... பார்த்துக்கடா...” ஷீபா புலம்பிவிட்டு போக, அவனுக்கு சிரிப்புவந்து தொலைத்தது.
“நாளைக்கு பட்டு வீட்டுக்கு வா... உனக்கே தெரிஞ்சுடும்...” அவன் சொல்லவே,
“அவளுக்கு நான் கிப்ட் வாங்கிட்டு வர்றேன்...” அவள் சொல்ல, அவன் மறுக்கவெல்லாம் இல்லை.
“சரி, நீயே வாங்கு...” அவன் அனுமதி வழங்க,
“வாங்கறதுக்கு நீங்க என்னோட வரீங்களா? சாயங்காலம் போகலாம்” அவள் ஆசையாக கேட்க, அவன் மறுப்பானா என்ன?
மறுநாள் மாலையில், தென்றல் நிவேதிதாவின் வீட்டுக்குச் செல்கையில், எந்தவிதமான அலங்காரங்களும் இல்லாமல், சாதாரணமாகவே வீடு இருந்தது.
‘பார்ட்டின்னு சொன்னாளே... ஒரு வேளை சும்மா சொன்னாளா?’ எண்ணியவாறு அழைப்புமணியை அழுத்த, நைனிகா வந்து கதவைத் திறந்தாள்.
தென்றலைப் பார்த்தவள், “அம்மா... உங்களுக்குத் தெரிஞ்சவங்க போல, வந்து பாருங்க...” அவள் குரலை வைத்தே, அவளது கேலியைப் புரிந்த நிவேதிதா, உள்ளே இருந்து வெளியே வந்தாள்.
தென்றலைப் பார்த்தவள், “அடடே... தென்றல்... வா... வா... பட்டு, வந்தவங்களை உள்ளே கூப்பிடத் தெரியாது? என்ன பழக்கம் இது?” சிறு கண்டிப்பாக மகளிடம் கேட்டவர், தென்றலை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
“வாங்க அத்த... எப்படி இருக்கீங்க?” கேட்ட நைனிகா, தென்றலை இறுக அணைத்துக் கொள்ள, அவளுக்கு ஒரு ஆனந்த அதிர்வு.
“சாரி அத்த... ரொம்ப டென்ஷன் பண்ணிட்டேனா? சும்மா விளையாடினேன். இன்னைக்கு மட்டும் நீங்க வந்திருக்கல, உங்ககிட்டே பேசியே இருக்க மாட்டேன்” சொன்னவள், அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்.
“ஹேப்பி பெர்த்டே பட்டு...” வாழ்த்தியவள், தன் கைப்பைக்குள் இருந்து அந்த கிப்ட்டை எடுத்து அவளிடம் கொடுத்தாள்.
அதை வாங்கியவள், தென்றலின் கன்னத்தை ஆராய, “என்ன...? என்ன பார்க்கற?” தன் கன்னத்தை கரத்தால் தேய்த்தவள், அவளிடம் கேட்டாள்.
“இல்ல... கன்னத்தில் காயத்தைக் காணோமேன்னு பாத்தேன்...” கண்ணைச் சிமிட்டி, நாக்கைத் துருத்தி அவள் கேட்க, தென்றலின் முகம் அப்படியே சிவந்து போனது.
“அம்மா... அத்தைக்கு வெக்கத்தைப் பாருங்களேன்...” அவள் கேலி செய்ய, தென்றலோ இன்னும் சிவந்தாள்.
“பட்டு, போதும் அவளை விடு... வர வர உன் சேட்டை ஜாஸ்த்தி ஆயிடுச்சு” மகளை மென்மையாக கண்டித்தாள் நிவேதிதா.
“என்ன பண்ணா, கன்னம் சிவக்கும் அத்த?” அவள் இன்னுமே கேட்க, நிவேதிதா அவள் முதுகில் ஒரு அடியைப் போட்டு அவளை அடக்கினாள்.
“மம்மி... பெர்த்டே பேபியை அடிக்கக் கூடாது... சரி அதைக் கேட்கலை, எப்போ மாமாவோட சேர்ந்து லைஃபை ஸ்டார்ட் பண்ணப் போறீங்க? ஸ்டில் வாட் இஸ் இட்சிங் யூ?” அவள் இப்படி நேரடியாகக் கேட்பாள் என மற்றவர்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லை.
“நைனிகா... என்ன இது? வீட்டுக்கு வந்தவகிட்டே இப்படியா கேட்கறது?” நிவேதிதா அத்தனை கோபமாக கேட்க,
“நீங்களும் கேட்க மாட்டீங்க? கேட்கற நானும் கேட்கக் கூடாதுன்னா? மாமா இப்படியே இருப்பாங்க, அத்த அவங்க வீட்டிலேயே இருப்பாங்கன்னா, என்னம்மா இது? அத்தை சொல்லட்டும், நீங்க சும்மா இருங்க” அவள் அத்தனை பிடிவாதமாக இருக்க, நிவேதிதா மகளை அதற்கு மேலே எதுவும் சொல்ல முடியாமல் அமைதியானாள்.
அவளுக்குமே அந்த கேள்விக்கான பதில் வேண்டி இருந்ததோ என்னவோ?
“எங்க அடுத்த வெடிங்டே நம்ம வீட்ல பெருசா, கிராண்டா செலிபரேட் பண்ணுவோம், போதுமா?” தென்றல் கேட்க, அவள் முகத்தில் அத்தனை பிரகாசம்.
“நிஜமா? நிஜமாவா?” துள்ளி குதிக்காத குறையாக அவள் கேட்டுக் கொண்டிருக்க, பிரபஞ்சன் பெரிய கேக் பார்சலோடு அங்கே வந்தான்.
அவனைப் பார்த்த நைனிகா, “மாம்சே... கேட்டீங்களா? அடுத்த வெடிங்டே உங்களோடதானாம்... யாஹூ...” குதித்துக்கொண்டு ஓடியவள், அவன் கழுத்தை கட்டிக்கொண்டு தொங்க, அனைவரின் முகங்களிலும் புன்னகை பூத்தது.
“பட்டு... கேக் உடைஞ்சுடப் போகுது...” ஒரு கையால் அதை விலக்கிப் பிடித்தவன், மறு கரத்தால் தான் பெறாத மகளைத் தாங்கிக் கொண்டான்.
அவனது பார்வை தன்னவளிடம் ‘அப்படியா?’ எனக் கேள்வி கேட்க, ‘ஆம்...’ என அவனுக்கு பதில் கொடுத்தாள்.
“கேக் இந்தா, எடுத்துட்டு போ...” அவளிடம் கொடுத்து அனுப்பியவன், தன் மனைவியின் அருகே வந்து அமர்ந்தான்.
“நீங்க பேசிட்டு இருங்க, குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன்... தென்றலுக்கும் எதுவும் கொடுக்கவே இல்லை...” சொன்னவள், அவர்களுக்கு தனிமை கொடுத்து அங்கிருந்து அகன்றாள்.
“ஏய் மோனா... என்ன புடவை எல்லாம் கட்டிக்கிட்டு வந்திருக்க? சூப்பரா இருக்க” சொன்னவன், அவள் வெற்று இடையை உரிமையாக வருட, பதட்டமானாள்.
“ஹையோ, ஹால்ல வச்சு என்ன பண்றீங்க? பட்டுவே பார்த்தா என்ன நினைப்பா” சற்று பதறினாள்.
“நாமளா உள்ளே போற வரைக்கும் அவ வர மாட்டா... அக்கா வந்தா குரல் கொடுத்துட்டுதான் வருவாங்க” சொன்னவன், அவள் வயிற்றை அழுத்த, விரல்களோ கல்மிஷம் புரிந்தது.
நொடியும் தாமதிக்காமல் அவள் இடக்கன்னத்தை கவ்வி கடித்து சுவைத்தவன், அவள் கழுத்திலும் பல்த்தடம் பதிக்க, உள்ளுக்குள் சிதறும் மனதையும், வெளியே சிலிர்க்கும் தேகத்தையும் அவளால் அடக்க முடியவில்லை.
அலுவலகத்துக்கு கீழே இறங்கி வந்து, தன் இடத்தில் அமர்ந்த தென்றலுக்கு, அவனிடம் எதையோ சொல்ல நினைத்து, எதையோ சொல்லிவிட்டு வந்து அமர்ந்தது புரிந்தது.
‘காலேஜ் பத்தி அவங்ககிட்டே கேட்கணும், சொல்லணும்னு நினைச்சேனே. அதைச் சொல்லாமல், என்னென்னவோ பேசிட்டு வந்துட்டேன்?’ தன்னைத்தானே திட்டியவாறே அமர்ந்திருந்தாள்.
அந்த நேரம் ஷீபா அங்கே வர, “குட் மார்னிங்க்கா...” தென்றல் வாழ்த்தவே, அவள் அருகே வந்தாள்.
“ம்... நிஜமாவே குட்மார்னிங் தான் போல... முகத்தில் ஒரு ஒளி வட்டம் தெரியுது?” சொன்னவள், அவள் முகத்தையே குறுகுறுவென ஆராய, தென்றலுக்கு ஒரு மெல்லிய படபடப்பு எழுந்தது.
“அக்கா... அப்படியெல்லாம் எதுவும் இல்லை...” அவள் சிணுங்க,
“இல்லையா? பிறகு ஏன் முகமே ஜொலிக்குது? அப்படி என்ன சொல்லி உன்னை சமாதானம் பண்ணான்? நேத்து மூச்சு கூட விட மாட்டேன்னு அழுதுட்டு இருந்த? நீ இவ்வளவு சீக்கிரம் சமாதானம் ஆனால் எப்படி? அவனை வச்சு செய்ய வேண்டாம்?” அவள் கேட்டுக் கொண்டிருக்க, அதைக் கேட்டவாறே அங்கே வந்தான் பிரபஞ்சன்.
“ஏய், அரை லூசே... என் பொண்டாட்டியை எதுக்குடி கெடுத்துட்டு இருக்க?” அவள் தலையில் மெல்லியதாக குட்டு வைத்தான்.
“ஆமா, உன் பொண்டாட்டியை நாங்க கெடுக்கறோம்... உனக்கு லக்குதான் டா... இல்லன்னா பொசுக்குன்னு சமாதானமாகற பொண்டாட்டி கிடைப்பாளா? என்ன கால்லயே விழுந்தியா? இல்லன்னா தோப்புக்கரணம் போட்டியா?” அவள் நக்கலாக கேட்க, அவன் தென்றலைப் பார்த்தான்.
“நான் அவகிட்டே ஒரு சாரி கூட சொல்லலை...” நிஜமான வருத்தத்தில் அவன் சொல்ல, தென்றல் தலையைக் குனிந்து கொண்டாள்.
“தென்றல்... இதை என்னால் ஒத்துக்கவே முடியாது. ஒரு பத்து நாளைக்கு இவனை ‘பத்த’ போடுற....” சொன்னவள், அவர்களுக்கு நடுவில் நிற்க விரும்பாமல் அங்கிருந்து அகன்றாள்.
அவள் செல்லவே, “மோனா... ஐ’ம் சாரி... ரியலி சாரி...” அவன் உணர்ந்து சொல்ல, அவளிடம் மெல்லிய மௌனம்.
“இன்னும் என்மேல கோபம் போகலையா?” அவன் வருத்தமாக கேட்க,
“சாரி ஓகே... ஆனா, நீங்க மறுபடியும் அப்படியெல்லாம் பேச மாட்டீங்க தானே? அம்மா என்னவோ புருஷன் எல்லாம் இப்படித்தான் இருப்பாங்கன்னு சொல்றாங்க. எனக்கு அப்படி வேண்டாம்... என்னால் நீங்க திட்றதை எல்லாம் தாங்கிக்க முடியாது...” கண்களில் அத்தனை பயமும், அலைப்புறுதலும் தெரிய, அவனுக்குள் பெருத்த சங்கடம்.
“ஐ ப்ராமிஸ்... ஐ நெவர் ஹெர்ட் யூ மோனா...” அவன் உறுதியாக உரைக்க, அவள் முகம் சற்று தெளிந்தது.
“‘அப்பா... அப்பா... அப்பா... அந்த அப்பாவை மட்டும்தான் யோசிப்பியா? என்னை அந்த அளவுக்கு எப்போவாவது யோசிச்சு இருக்கியான்னு ஒரு முறை கேட்டீங்கல்ல...’ உங்க அளவுக்கு என் அப்பாவைக் கூட நான் யோசிச்சது இல்லைங்கறது தான் நிஜம்” அவள் அவனை ஏறிடாமல் சொல்ல, தன் வார்த்தைகள் அவளுக்குள் ஏற்படுத்தும் தாக்கம் கண்டு திகைத்தான்.
“எதையுமே மறக்க மாட்டியா நீ?” அவன் அதிர்வாக கேட்க,
“நீங்க சொல்றதை எப்படி மறக்கறதாம்? அதோடதான் வாழ்ந்துட்டு இருக்கேன்” அந்த வார்த்தைகள் அவனை சல்லடையாக துளைக்கும் உணர்வு.
“மோனா...” அவன் தடுமாறிப்போய் நிற்க,
“இதுக்கு மேலே இங்கே பேசவேண்டாம்... எல்லாரும் பார்க்கறாங்க... நீங்க போங்க” அனைவரும் அலுவலகம் வந்திருக்க, அனைவருமே அவர்களைப் பாராமல் பார்ப்பது அவனுக்கும் புரியவே செய்தது.
“நான் உன்னை நைட் பார்க்க வந்தேன்னு உனக்கு எப்படித் தெரிஞ்சது மோனா?” அவன் கேட்க, அவ்வளவு நேரமாக அவன் முகம் பார்க்க மறுத்து நின்றவள், சட்டென அவன் முகம் பார்த்தாள்.
அவன் இதழ்களில் ஒரு குறும்பு புன்னகை ஒட்டிக்கொண்டு இருக்க, அவள் முகம் மெல்லியதாக சூடேறும் உணர்வு.
“எனக்குத் தெரியாதே... வந்தீங்களா?” பார்வையை கணினியின்மேல் பதித்தவள், சின்னக் குரலில் கேட்க, அவள் விளையாடுவது அவனுக்குப் புரிந்து போனது.
“ஓ... ஒரு வேளை கன்னத்தில் மட்டும்தான் மார்க் விழும் போல...?” அவன் தனக்குத் தானே சொல்லிக் கொள்வதுபோல் சொல்ல, அவளுக்கு ஏனோ தேகம் மெல்லிய நடுக்கம் கொண்டது.
“மோனா... நான் வேண்ணா செக் பண்ணிக்கவா?” அவன் கேட்க, பெரும் பதட்டமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவளது பதட்டத்தைப் பார்த்தவன், “இங்கே வச்சு இல்ல...” அவன் வேகமாகச் சொல்ல, தன் பதட்டம் தணிந்தாள்.
“அடையாளம் உடனே போய்டுமா? எத்தனை நாள் இருக்கும்?” அவன் அவளை நெருங்கி வர,
“ஹையோ, எனக்குத் தெரியாது... எதுக்கு இப்படி வம்பு பண்றீங்க? போங்க” அவள் முகமே மற்றவர்களுக்கு எதையும் காட்டிக் கொடுத்துவிடுமோ என பதட்டமானாள்.
“எனக்குத் தெரிஞ்சுக்கணுமே...” அவன் சொல்ல, அம்மம்மா... அந்த பேச்சுக்கே அவளால் தாள முடியவில்லை.
“என்னங்க...” அவள் தடுமாறி நிற்கையிலே,
“மாம்ஸு...” திடுமென நைனிகாவின் குரல் அவனுக்குப் பின்னால் ஒலிக்க, சட்டென திரும்பினான்.
“பட்டு... வாடா... இந்த ஆபீஸ் ஆரம்பிச்ச பிறகு இப்போதான் வர்ற... என்ன ஸ்வீட் சர்ப்ரைஸ்...” அவள் சொல்லாமல் வந்து நின்றது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது.
“என் மாம்ஸை பார்க்கணும்னு ஆசையா இருந்தது... காலையில் ஃபஸ்ட் ஹாப் எந்த கிளாசும் இல்லை. மதியத்துக்கு மேலே தான் லேப்... சோ அங்கே இருக்க போரிங்கா இருந்தது. அப்படியே என் பெர்த்டேக்கு உங்களை இன்வைட் பண்ணிட்டுப் போகலாம்னு வந்தேன்” அவள் சொல்ல, அவளது பேச்சில் புருவம் நெரித்தவன், அவள் கண்களை அகலத் திறந்து, உருட்ட சாதாரணமாக நின்றுகொண்டான்.
“பெர்த்டே வருதுல்ல... நான் கூட மறந்தே போயிட்டேன் பாரேன்” அவன் சொல்ல,
“யோவ் மாம்ஸு... இன்னொருவாட்டி என் பெர்த்டேவை மற... உனக்கு நீடில்லதான் அபிஷேகமே...” அவள் அவனைப் போலியாக மிரட்ட, அவள் ஒருமையில் பேசியதிலேயே அவளது கோபம் புரிய அடங்கிப் போனான்.
“என் பட்டு பெர்த்டேயை நான் மறக்கறதா நெவர்...” அவன் வீராவேசமாக சொல்ல,
“போதும் பில்ட்டப்பு... போன வருஷம் இது எங்கே போயிருந்ததாம்?” கேட்டவள் அவனை முறைக்க, கப்பென வாயை மூடிக் கொண்டான்.
இவர்கள் பேசப் பேச, தென்றலின் பார்வை மொத்தமும், நைனிகாவின் மீதுதான் இருந்தது.
அவள் MBBS மூன்றாம் வருடம் படிப்பது அவளுக்குத் தெரியும். இடையில் மேகலை தவறியபொழுது அவளைப் பார்த்திருந்தாலும், இப்பொழுது வளர்ந்த குமரியாக, பாதி பிரபஞ்சனின் சாயலில் இருந்த அவளைப் பார்க்க, ஆச்சரியமாக இருந்தது.
இப்பொழுது இவர்களைப் பார்க்கும் யாரும், நிச்சயம் அண்ணன் தங்கை எனச் சொல்லும் அளவுக்கு இருந்தார்கள்.
“நாளைக்கு ஈவினிங் வீட்ல கேக் கட்டிங் இருக்கு, கண்டிப்பா வர்றீங்க” சொன்னவள் தென்றலைத் துளியும் கண்டுகொள்ளவில்லை.
“ஷீபா இருக்காங்களா? அவங்களையும் இன்வைட் பண்ணணும்...” சொன்னவள், அவனது அறைக்குச் செல்லப் போக, தென்றலால் அதற்குமேல் அமைதியாக இருக்க முடியவில்லை.
“பட்டு... எப்படி இருக்க?” தென்றல் அவளிடம் கேட்க, சில அடி நடந்தவள், வேகமாக அவர்களுக்கு அருகே வந்தாள்.
“பட்டுவா? எங்க ஃபேமிலியைத் தவிர வேற யாரும் என்னை பட்டுன்னு கூப்ட்டா எனக்குப் பிடிக்காது. நீங்க...? மாமா, உங்களுக்குத் தெரிஞ்சவங்களா?” அவள் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு கேட்க, தென்றல் அழுதுவிடும் நிலைக்கே சென்றுவிட்டாள்.
“பட்டு... இதென்ன இப்படி பேசற?”.
“மாமா... நீங்க சொல்லுங்க...” அவள் அதிலேயே இருக்க,
“மாமாவைத் தெரியுது, அத்தையைத் தெரியாதா? உன் கோபம் நியாயமானதுதான். அதுக்காக... என்னை யார்ன்னு தெரியாதுன்னு சொல்லுவியா? எப்படி இருக்க பட்டு?” கேட்டவள், தன் இடத்தில் இருந்து வெளியேறிவந்து, அவள் கரத்தைக் கெட்டியாக பற்றிக் கொண்டாள்.
“உங்களைத் தெரியாதுன்னு எப்போ சொன்னேன்? உங்களுக்கு மறந்து போச்சோன்னு கொஞ்சம் செக் பண்ணேன்...” அவள் சொல்ல, தென்றலின் முகம் வாடிப் போனது.
“உங்க மாமா மறந்த பெர்த்டேயைக் கூட நான் ஞாபகம் வச்சிருந்தேன்” அவள் ரோஷமாக சொல்ல,
“ஆமா, எங்கே பெர்த்டே, அம்மா அப்பா வெடிங் டே... இதுக்கெல்லாம் விஷ் மட்டும் பண்ணா போதும்னு உங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தது? உங்க வெடிங்டேயை இது வரைக்கும் நீங்க கொண்டாடி இருக்கீங்களா?” அவள் சிறு கோபமாக வினவ, அவள் கன்னத்தில் கண்ணீர் இறங்கியது.
“பட்டு, போதும்...” தென்றல் அழுவது பொறுக்காமல், பிரபஞ்சன் அவளுக்கு துணைக்கு வந்தான்.
“இன்னும் நாலு மாசம் போனா, உங்க பிஃப்த் வெடிங்டே வந்துடும். இப்படியே தனித்தனியா கொண்டாடிகிட்டே இருக்கப் போறீங்களா?” அவனிடம் சாடினாள்.
“பட்டு...” அவன் அழுத்தமாக அழைக்க, அவனை முறைத்தாள்.
“என்னவோ போங்க... நாளைக்கு வீட்டுக்கு வந்து சேருங்க. எனக்கு கிப்ட் ஐஃபோன் வேணும்...” சொன்னவள் முறுக்கிக்கொண்டு செல்ல, தென்றலால் தாங்க முடியவில்லை.
வந்தவள் தன்னிடம் பேசவும் இல்லை, தன்னை பார்ட்டிக்கு அழைக்கவும் செய்யாமல் செல்ல, அதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
“பட்டு, எதுக்கு வந்தியோ அதை முடிச்சுட்டு போ...” அவன் அவளைத் தேக்கினான்.
“நான் என்னவோ உங்க பொண்டாட்டியை அழைக்க வந்த மாதிரி சொல்றீங்க? அதெல்லாம் இல்லை...” முறுக்கிக் கொண்டவள், ஷீபாவைப் பார்க்கப் போனாள்.
அவள் செல்லவே, “பட்டுவுக்கு என்மேல ரொம்ப கோபம்... என்னை இன்வைட் பண்ணவே இல்லை பாருங்க...” அவனிடம் குறைபட்டாள்.
“அவ இங்கே வந்ததே உன்னை கூப்பிடத்தான்... நான் எல்லாம் கூப்பிடாமலே போய் நிக்கற ஆளு...” அவன் சொல்ல, ‘அப்படியா?’ என்பதுபோல் நம்ப முடியாத பார்வை பார்த்தாள்.
“நம்பும்மா...” அவன் அழுத்திச் சொல்ல, ஷீபாவும், அவளும் அங்கே வந்தார்கள்.
“ஓகே ஆன்ட்டி... கண்டிப்பா ஃபங்ஷனுக்கு வந்துடுங்க...” அவள் ஷீபாவை அழைக்க, அவளோ முறைத்தாள்.
“ஏய்... நான் உனக்கு ஆன்ட்டியா? உன்னை கொல்லப்போறேன் பார்... நான் யூத்தும்மா...” ஷீபா அவளிடம் சண்டைக்குப் போக, நைனிகாவோ நக்கல் சிரிப்பு சிரித்தாள்.
“யூத்தா? பத்து வருஷத்துக்கு முன்னாடி தான?” கேட்டவள் வெடித்து சிரிக்க, அவளைப் போலியாக அடித்தாள்.
“உன்னை சும்மா விடப் போறதில்லை... ஓவர் நக்கலு... அதுவும் காலேஜ்க்கு போய் ரொம்ப கெட்டு போய்ட்ட...”.
“நீங்களே எனக்கு ஆன்ட்டியா வந்திருக்கலாம்... நல்லா இருந்திருக்கும்” அவள் சொல்ல, தென்றல் திடுக்கிட்டாள்.
“எது... இவனைக் கட்டிக்கிட்டு இவ படறது போதாதா? இவன் எல்லாம் எனக்கு செட்டே ஆக மாட்டான்... காட்டான்...” ஷீபா அதை சாதாரணமாக எடுத்துவிட்டு கடந்துவிட, பிரபஞ்சனோ சிரித்துக் கொண்டான்.
“உங்களுக்கு கொடுத்துவச்சது அவ்வளவுதான்... லாஸ் உங்களுக்குத்தான்” சொன்னவள், “சரி, நான் கிளம்பறேன்... மாம்ஸு, நீங்க வர்றப்போ உங்க வைஃப்பையும் மறக்காம கூட்டி வாங்க. வந்துடுங்க அத்த...” அவள் அந்த அத்தையை அழுத்திச் சொல்லிச் செல்ல, தென்றல் சமாதானம் ஆகவே இல்லை.
“என்னவாம்டா... வந்து சிலுப்பிகிட்டு போறா?” ஷீபா நண்பனிடம் கேட்க,
“தென்றலை சீண்டி விட வந்திருக்கா” அவளிடம் சின்னக் குரலில் சொன்னவன், தென்றலைப் பார்த்தான்.
அவள் இன்னுமே நைனிகா சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருக்க, “மோனா... என்ன அப்படியே நின்னுட்ட?” அவளது தோளைத் தொட்டு கலைத்தான்.
“அவ என்னை வா’ன்னு கூப்ட்டாளா? இல்லன்னா கேலி பண்ணிட்டு போறாளா?” புரியாத குழப்பத்திலேயே கேட்டாள்.
“சுத்தம்... இவ தேற மாட்டா... பார்த்துக்கடா...” ஷீபா புலம்பிவிட்டு போக, அவனுக்கு சிரிப்புவந்து தொலைத்தது.
“நாளைக்கு பட்டு வீட்டுக்கு வா... உனக்கே தெரிஞ்சுடும்...” அவன் சொல்லவே,
“அவளுக்கு நான் கிப்ட் வாங்கிட்டு வர்றேன்...” அவள் சொல்ல, அவன் மறுக்கவெல்லாம் இல்லை.
“சரி, நீயே வாங்கு...” அவன் அனுமதி வழங்க,
“வாங்கறதுக்கு நீங்க என்னோட வரீங்களா? சாயங்காலம் போகலாம்” அவள் ஆசையாக கேட்க, அவன் மறுப்பானா என்ன?
மறுநாள் மாலையில், தென்றல் நிவேதிதாவின் வீட்டுக்குச் செல்கையில், எந்தவிதமான அலங்காரங்களும் இல்லாமல், சாதாரணமாகவே வீடு இருந்தது.
‘பார்ட்டின்னு சொன்னாளே... ஒரு வேளை சும்மா சொன்னாளா?’ எண்ணியவாறு அழைப்புமணியை அழுத்த, நைனிகா வந்து கதவைத் திறந்தாள்.
தென்றலைப் பார்த்தவள், “அம்மா... உங்களுக்குத் தெரிஞ்சவங்க போல, வந்து பாருங்க...” அவள் குரலை வைத்தே, அவளது கேலியைப் புரிந்த நிவேதிதா, உள்ளே இருந்து வெளியே வந்தாள்.
தென்றலைப் பார்த்தவள், “அடடே... தென்றல்... வா... வா... பட்டு, வந்தவங்களை உள்ளே கூப்பிடத் தெரியாது? என்ன பழக்கம் இது?” சிறு கண்டிப்பாக மகளிடம் கேட்டவர், தென்றலை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
“வாங்க அத்த... எப்படி இருக்கீங்க?” கேட்ட நைனிகா, தென்றலை இறுக அணைத்துக் கொள்ள, அவளுக்கு ஒரு ஆனந்த அதிர்வு.
“சாரி அத்த... ரொம்ப டென்ஷன் பண்ணிட்டேனா? சும்மா விளையாடினேன். இன்னைக்கு மட்டும் நீங்க வந்திருக்கல, உங்ககிட்டே பேசியே இருக்க மாட்டேன்” சொன்னவள், அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தாள்.
“ஹேப்பி பெர்த்டே பட்டு...” வாழ்த்தியவள், தன் கைப்பைக்குள் இருந்து அந்த கிப்ட்டை எடுத்து அவளிடம் கொடுத்தாள்.
அதை வாங்கியவள், தென்றலின் கன்னத்தை ஆராய, “என்ன...? என்ன பார்க்கற?” தன் கன்னத்தை கரத்தால் தேய்த்தவள், அவளிடம் கேட்டாள்.
“இல்ல... கன்னத்தில் காயத்தைக் காணோமேன்னு பாத்தேன்...” கண்ணைச் சிமிட்டி, நாக்கைத் துருத்தி அவள் கேட்க, தென்றலின் முகம் அப்படியே சிவந்து போனது.
“அம்மா... அத்தைக்கு வெக்கத்தைப் பாருங்களேன்...” அவள் கேலி செய்ய, தென்றலோ இன்னும் சிவந்தாள்.
“பட்டு, போதும் அவளை விடு... வர வர உன் சேட்டை ஜாஸ்த்தி ஆயிடுச்சு” மகளை மென்மையாக கண்டித்தாள் நிவேதிதா.
“என்ன பண்ணா, கன்னம் சிவக்கும் அத்த?” அவள் இன்னுமே கேட்க, நிவேதிதா அவள் முதுகில் ஒரு அடியைப் போட்டு அவளை அடக்கினாள்.
“மம்மி... பெர்த்டே பேபியை அடிக்கக் கூடாது... சரி அதைக் கேட்கலை, எப்போ மாமாவோட சேர்ந்து லைஃபை ஸ்டார்ட் பண்ணப் போறீங்க? ஸ்டில் வாட் இஸ் இட்சிங் யூ?” அவள் இப்படி நேரடியாகக் கேட்பாள் என மற்றவர்கள் இருவரும் எதிர்பார்க்கவில்லை.
“நைனிகா... என்ன இது? வீட்டுக்கு வந்தவகிட்டே இப்படியா கேட்கறது?” நிவேதிதா அத்தனை கோபமாக கேட்க,
“நீங்களும் கேட்க மாட்டீங்க? கேட்கற நானும் கேட்கக் கூடாதுன்னா? மாமா இப்படியே இருப்பாங்க, அத்த அவங்க வீட்டிலேயே இருப்பாங்கன்னா, என்னம்மா இது? அத்தை சொல்லட்டும், நீங்க சும்மா இருங்க” அவள் அத்தனை பிடிவாதமாக இருக்க, நிவேதிதா மகளை அதற்கு மேலே எதுவும் சொல்ல முடியாமல் அமைதியானாள்.
அவளுக்குமே அந்த கேள்விக்கான பதில் வேண்டி இருந்ததோ என்னவோ?
“எங்க அடுத்த வெடிங்டே நம்ம வீட்ல பெருசா, கிராண்டா செலிபரேட் பண்ணுவோம், போதுமா?” தென்றல் கேட்க, அவள் முகத்தில் அத்தனை பிரகாசம்.
“நிஜமா? நிஜமாவா?” துள்ளி குதிக்காத குறையாக அவள் கேட்டுக் கொண்டிருக்க, பிரபஞ்சன் பெரிய கேக் பார்சலோடு அங்கே வந்தான்.
அவனைப் பார்த்த நைனிகா, “மாம்சே... கேட்டீங்களா? அடுத்த வெடிங்டே உங்களோடதானாம்... யாஹூ...” குதித்துக்கொண்டு ஓடியவள், அவன் கழுத்தை கட்டிக்கொண்டு தொங்க, அனைவரின் முகங்களிலும் புன்னகை பூத்தது.
“பட்டு... கேக் உடைஞ்சுடப் போகுது...” ஒரு கையால் அதை விலக்கிப் பிடித்தவன், மறு கரத்தால் தான் பெறாத மகளைத் தாங்கிக் கொண்டான்.
அவனது பார்வை தன்னவளிடம் ‘அப்படியா?’ எனக் கேள்வி கேட்க, ‘ஆம்...’ என அவனுக்கு பதில் கொடுத்தாள்.
“கேக் இந்தா, எடுத்துட்டு போ...” அவளிடம் கொடுத்து அனுப்பியவன், தன் மனைவியின் அருகே வந்து அமர்ந்தான்.
“நீங்க பேசிட்டு இருங்க, குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன்... தென்றலுக்கும் எதுவும் கொடுக்கவே இல்லை...” சொன்னவள், அவர்களுக்கு தனிமை கொடுத்து அங்கிருந்து அகன்றாள்.
“ஏய் மோனா... என்ன புடவை எல்லாம் கட்டிக்கிட்டு வந்திருக்க? சூப்பரா இருக்க” சொன்னவன், அவள் வெற்று இடையை உரிமையாக வருட, பதட்டமானாள்.
“ஹையோ, ஹால்ல வச்சு என்ன பண்றீங்க? பட்டுவே பார்த்தா என்ன நினைப்பா” சற்று பதறினாள்.
“நாமளா உள்ளே போற வரைக்கும் அவ வர மாட்டா... அக்கா வந்தா குரல் கொடுத்துட்டுதான் வருவாங்க” சொன்னவன், அவள் வயிற்றை அழுத்த, விரல்களோ கல்மிஷம் புரிந்தது.
நொடியும் தாமதிக்காமல் அவள் இடக்கன்னத்தை கவ்வி கடித்து சுவைத்தவன், அவள் கழுத்திலும் பல்த்தடம் பதிக்க, உள்ளுக்குள் சிதறும் மனதையும், வெளியே சிலிர்க்கும் தேகத்தையும் அவளால் அடக்க முடியவில்லை.