நிழல் - 6
ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லும் என்ற சொல்லுக்கு ஏற்ற மாதிரி ஆகனோட வார்த்தைகள் அகானாவின் உணர்வுகளை கொல்லவும் செய்தது, அவள் வாழ்க்கையில் வெல்லவும் செய்தது.
அதுவரை அம்மாவிற்காக படிக்க வேண்டும், கலெக்டர் ஆக வேண்டும் என்று இருந்தவள், ஆகனின் வார்த்தைகளுக்குப் பிறகு மனதளவில் தான் ‘ஒரு ஐஏஎஸ் அதிகாரி’தான் என்று உறுதியே எடுத்துக் கொண்டாள்.
வெறி வெறி வெறி..! பழி வெறி.. தங்களை இந்தளவிற்கு கொண்டு வந்தவர்களை துவம்சம் செய்து விடும் அளவிற்கான பழி வெறி அகானாவின் மனதில் நெருப்பாய் கனன்று கொண்டு இருந்தது.
அது கொடுத்த வேகம், அவளை எங்கேயும் தடை என நிறுத்தவில்லை, மருத்துவப் படிப்பின் ஊடே தகுதி தேர்வுகளுக்கும் படிக்க ஆரம்பித்திருந்தாள்.
கஷ்டம் தான், உண்ண நேரமில்லை, உறங்க நேரமில்லை. அதற்காக அவள் சோர்ந்தும் விழவில்லை. உள்ளுக்குள் நெருப்பாய் ஆகனின் வார்த்தைகள் ஓடிக் கொண்டிருக்க, அவளால் வேறெதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
யாரை வேண்டாம் என்றார்களோ, யாரை ஊரைவிட்டு விரட்டியடித்தார்களோ, அவர்கள் முன்னே தைரியமாக, நெஞ்சை நிமிர்த்தி 'நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளா' என்ற பார்வையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அது மட்டுமே அவளது எண்ணமாக இருந்தது.
மகளின் இந்த போக்கு மஞ்சரியிடம் பெரும் பயத்தை உண்டு செய்தது.. முடிந்தளவு அவளிடம் பேசியும் பார்த்தார்தான். ஆனால் அதெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகவேப் போனது.
ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் அவளைத் தடுக்க முடியாமல் விஜயாவிடம் சொல்லி புலம்ப மட்டுமே முடிந்தது.
“அகி ஒன்னும் சின்ன புள்ள கிடையாது மஞ்சு. அவளுக்கு எல்லாம் தெரியும், புரியும். நீ பயந்து என்னையும் பயங்காட்டாதே..” என மஞ்சரிக்கு சொன்னாலும், அவருமே அகானாவிடம் பேச வேண்டும் என்று நினைத்திருந்தார். அவளைப் பார்த்தும் பல வாரங்கள் ஆகியிருந்தது.
அந்த வார ஞாயிரன்று அகானாவைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தார் விஜயா. வழக்கம்போல அறைக்குள் படித்துக் கொண்டிருந்தாள் அகானா. மஞ்சரி வந்து விஜயா வந்திருப்பதைச் சொல்லி அழைக்க, யோசனையுடன் வெளியில் வந்தாள் அகானா.
எப்போதுமே கலகலப்பான பெண் இல்லைதான் அகானா. ஆனால் முகம் சாந்தமாக, சிறு புன்னகையுடன் பார்க்கவே அத்தனை அழகாக இருப்பாள்.
ஆனால் இப்போது உடல் மெலிந்து, கண்களெல்லாம் உள்ளே சென்று, கண்ணைச் சுற்றி கருவளையம் வந்து, சிரிக்கவேத் தெரியாதது போலோரு முகம், உடலில் தன்னால் ஒரு இறுக்கம் என பார்க்கவே மனதுக்கு பெரும் கஷ்டமகாக இருந்தது விஜயாவிற்கு.
என்றோ எப்போதோ ஒரு நாள் பார்க்கும் தனக்கே இப்படி வலிக்கிறது, வருத்தமாக இருக்கிறது என்றால், இரவு பகல் பாராமல் இருபத்து நான்கு மணி நேரமும் கூடவே இருக்கும் மஞ்சரிக்கு எவ்வளவு வலியும், வருத்தமும் இருக்கும் என்று விஜயாவால் உணர முடிந்தது.
இதை எப்படி சரி செய்ய என்றுதான் பெண்கள் இருவருக்கும் புரியவில்லை. அன்று விஜயா இதுபற்றி எதுவும் அவளிடம் பேசவில்லை. சாதாரண விசயங்களையும், அவள் படிப்பைப் பற்றி மட்டுமே பேசிவிட்டு சென்றவர், தன் மகனுக்கு அழைத்து அகானா பற்றி சொல்லிவிட்டார்.
ஆகனுக்கு அடுத்த பேஜ்தான் ஆதிரன். அவன் இப்போது சிங்கப்பூரில் எம்டி பல்மனாலாஜிஸ்ட் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஆகனை நன்றாகத் தெரியும். அகானா முன்பு பேசும் போது ஆகனைப் பற்றி பேசியிருக்கிறாள்தான். ஆனால் அடுத்து நடந்த எந்தப் பிரச்சினையும் அவனுக்குத் தெரியாது.
விஜயா சொல்லவும் தான் அவனுக்கு அனைத்தும் தெரிந்தது. ஆகனைக் கொன்று விடும் அளவிற்கான கோபம் கொந்தளித்தது. ஆனாலும் இப்போது அவனுக்கு அகானா தான் முக்கியம். அவளை சரி செய்ய வேண்டும் என்று நினைத்து அன்று இரவு அவளுக்கு அழைத்தான்.
“அகிம்மா.” என்ற வார்த்தையை மட்டுமே ஆதிரன் சொல்ல, அடுத்த நொடி அகானாவின் அழுகைச் சத்தம் தான் அவன் காதில் ஒலித்தது. அழட்டும், அவள் கோபம் தீரும் வரை அழட்டும், அவள் விரக்தி, வேதனை அனைத்தும் தீரும் வரை அழட்டும்’ என நினைத்தவன் இடையில் எதுவும் பேசவில்லை. அவள் அழுது ஓய்ந்து சில நிமிடங்கள் கழித்து, “ஐம் ஓக்கே” எனவும் தான் பேசவே ஆரம்பித்தான்.
“ஏன்டா இவ்வளவு கஷ்டப்படுற.. இன்னும் சிக்ஸ் மந்த்ஸ்தானேடா, லாஸ்ட் செமஸ்டர் அப்புறம் படிக்கலாமே..” எனப் பொறுமையாக கேட்க,
“நோ ஆதி.. எனக்கு அவ்வளவு எல்லாம் பொறுமை இல்லை. நான் ஜெயிக்கனும். என் அம்மா ஜெயிக்கனும். அவங்க வாழ்க்கையே நான்தான். நான் ஜெயிச்சாதான், அவங்க ஜெயிச்ச மாதிரி. அதுக்காக நான் கஷ்டப்படுறதுல தப்பே இல்லை. எனக்கு இது சிரமமா எல்லாம் இல்லப்பா… ஐம் நவ் ஓக்கே…”
“ம்ம் புரியுது அகிம்மா… ஆனா உன் ஹெல்த் ரொம்ப முக்கியம் இல்லையா.. நீ சாப்பிடாம, தூங்காம ஹெல்த் ஸ்பாயில் செஞ்சா அம்மா கஷ்டப்படுறாங்க இல்லையா.. இதுதான் நீ அவங்களுக்கு கொடுக்குற நிம்மதியா.. ம்ம் சொல்லு.. உன்னோட குறிக்கோளும் லட்சியமும் தப்பு இல்ல தான். ஆனா அதுக்கு முதல்ல நீ நல்லா இருக்கனும். புரியுதா.. சுவர் இருந்தா தான் சித்திரம் வரைய முடியும்..”
“புரியுது ஆதி.. இனி சரி செஞ்சிக்குவேன்… எனக்கு கொஞ்சம் மெட்டீரியல் வேணும், அப்புறம் செமஸ்டர் முடிஞ்சதும் டெல்லில இருக்குற ஐஏஎஸ் அகாடமில ஜாயின் பண்ணனும்.. நீ எப்போ வர..”
“எனக்கு இப்போ லீவ் இல்லடா.. உன்னை டெல்லிக்கு அழைச்சிட்டு போக நான் வருவேன், அன்ட் மெட்டீரியல் லிஸ்ட் எனக்கு மெசேஜ் பண்ணு. நான் ஆர்டர் போட்டுடுறேன். இனி இப்படி எனக்கு கம்ப்ளைன்ட் வரக்கூடாது அகிம்மா.. உனக்கு புரியுதா..?”
“எஸ் ண்ணா.. ஐம் ஓக்கே..” என்றதோடு சில நிமிடங்கள் வேறு பேச, அப்போதுதான் ஆதிரனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது. அடுத்து விஜயாவிற்கும் மஞ்சரிக்கும் அழைத்து சொல்லிவிட்டு, அவள் அனுப்பிய புத்தகங்களை உடனே ஆர்டர் செய்தான்.
ஆதிரனிடம் பேசிய பிறகு சற்று தெளிவானாள் அகானா. தாயின் கவலையும் புரிய அடுத்து மஞ்சரி வருந்தும் அளவிற்கு எதையும் செய்யவில்லை. தன் ஓட்டத்தையும் நிறுத்தவில்லை.
அடுத்து வந்த நாட்கள் மின்னலென சென்று மறைந்திருந்தது. அகானா தன் மருத்துவப் படிப்பை யாருமே எதிர்பார்த்திராத அளவில் மதிப்பெண்களைப் பெற்று முடித்திருந்தாள். ஆதிரன் வந்து தங்கையை அவள் கேட்ட இன்ஸ்டியூட்டில் சேர்த்து விட்டிருந்தான். ஒரு வருட கோச்சிங்க், அந்த வருடமே பிரிலிமினரி முதல் மெயின் எக்ஷாம் வரை அனைத்து தேர்வுகளையும் முடித்துவிட்டு வெளியில் வந்திருந்தாள்.
அங்கு உள்ள ஆசிரியர்களும், ஆஃபிசர்களுமே வியந்துதான் போயிருந்தனர்.
அடுத்து ஒன்பது மாதங்கள் முசோரியில் ட்ரெயினிங்க் அது முடிந்து போஸ்டிங்க் என்றிருக்க, அப்போது தான் மீண்டும் பாண்டிச்சேரி வந்திருந்தாள். இப்போது தோற்றத்தில் பல மாறுதல் நிமிர்வும், நிதானமும் பார்க்க பாரதியின் புதுமைப்பெண் போலவே இருந்தாள். மஞ்சரிக்கு மகளைப் பார்த்து பெருமை தான். ஆனால் அவளது சுயம் தொலைந்து போனதில் மிகவும் வருத்தம்.
சிறு வயதில் இருந்தே மகள் ஆசைப்பட்டு எதையும் கேட்டதில்லை. குடும்பமாக இருந்த போதும் சரி, ரவி பணத்திற்காக சிரமப்படும் போதும் சரி, குழந்தை ஆசைப்பட்டதை, விரும்பியதை பெரிதாக வாங்கிக் கொடுத்ததில்லை. ஆனால் அதெல்லாம் பெரிய ஏக்கமாக அவளுக்கு அப்போது தோன்றியதும் இல்லை. த(க)ப்பனின் தோளில் சாய்ந்தபடிய் கதை கேட்டு அவனே உலகம் என்றிருந்தவளுக்கு ஆசைகள் பெரிதாக இருந்ததில்லை.
அங்கிருந்து வந்த பிறகோ மஞ்சரியின் கஷ்டத்தைப் பார்த்து எதையும் விரும்பியதோ, ஆசைப்பட்டதோ கிடையாது. மஞ்சரியும், விஜயாவும் கட்டாயப்படுத்தி தான் வாங்கிக் கொடுப்பார்கள். அவர்களுக்கு அடுத்து ஆதிரன்.
அகானா கேட்க வேண்டும் என்றெல்லாம் அவன் யோசித்ததே இல்லை. அகானாவிற்கு எது நன்றாக இருக்குமோ அதை எல்லாம் வாங்கிக் கொடுத்து விடுவான்.
அந்த சிறு வயதிலேயே அவ்வளவு பக்குவமாக இருந்தவளுக்கு, இப்போது சொல்ல வேண்டிய தேவை இல்லைதான். ஆனால் சராசரியாகப் பெண்கள் ஆசைப்படும் சிறு ஆசை என்ற உணர்வு கூட இல்லாமல் இருப்பது தான் மஞ்சரியின் வேதனைக்குக் காரணம். வழக்கம்போல விஜயாவிடம் புலம்ப, அவரும் தான் என்ன செய்வார்.
ஆற்று நீரை அணையிட்டுக் கட்டுப்படுத்தலாம். ஆனால் காட்டாற்று வெள்ளத்தைக் கட்டுப்படுத்த முடியுமா.? அகானா காட்டாற்று வெள்ளம் போல் கைகளூக்குச் சிக்காமல் அணையை மீறிப் போய்க் கொண்டிருந்தாள். அவளைக் கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதம் மஞ்சரி மட்டும் தான். ஆனால் அவர் எப்படி மகளின் முன்னேற்றத்தில் குறுக்கே நிற்பார்.
இரு வாரங்கள் விடுமுறை முடிந்து முசோரிக்கு கிளம்பியிருந்தாள் அகானா. அடுத்து வரும் ஒன்பது மாதங்களும் மிகவும் கடுமையாக இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும். மிக கவனமாக செயல்பட வேண்டியக் கட்டாயமும் கூட.
அடுத்து அவள் போஸ்டிங்கோடுதான் வெளியில் வருவாள் என்றும் தெரியும். அவளின் அந்த புதிய அவதாரத்திற்கு அனைவருமே ஆவலோடு காத்திருந்தனர்.
இங்கு அன்று அகானாவிடம் பேசிவிட்டு வந்த ஆகனுக்கு அங்கு இருக்கவே முடியவில்லை. அன்று இரவே அங்கிருந்து கிளம்பியிருந்தான். அவனுக்கு தன் மாமனின் மீது மிகுந்த மரியாதை. அவர் மனைவி மகளிடம் எப்படியோ அவனிடமும், அவன் தங்கையிடமும் மிகுந்த பாசமுள்ள ஒரு மாமா. அவரைப் பற்றி தவறான ஒரு வார்த்தையைக் கேட்டதும் கோபப்பட்டு விட்டான்.
ஆனால் அடுத்து வந்த நாட்களில் உட்கார்ந்து யோசிக்கும் போதுதான் அகானாவின் கோபமும், ஆத்திரமும் அவனுக்குப் புரிந்தது. அது தப்பு இல்லையென்றும் புரிந்தது. அவளிடம் மன்னிப்புக் கேட்கலாம் என்று நினைக்க, உடனே அதை சரி செய்யும் அளவிற்கு அப்போது அவன் சூழல் இல்லை.
காலம் தாழ்ந்து கேட்கப்படும் எந்த மன்னிப்பிற்கும் மதிப்பு இருக்காது என்று அவனுக்கு அப்போது புரிந்திருக்கவில்லை.
ஆகன் வீட்டிற்கு வந்த மறுநாள் சங்கருக்கு ஒரு ஆக்சிடென்ட் நடக்க, அவரை மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். அவன் கூடவே இருக்க வேண்டியக் கட்டாயம். அதோடு தாயையும் தங்கையையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அவருக்கு சரியாகி நடக்கக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுரையோடு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அடுத்து மருத்துவமனையில் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியக் கட்டாயம். அதன்பிறகு அவனால் நகர முடியாதளவிற்கு வேலை.
அவள் செமஸ்டர் முடிய இன்னும் ஆறு மாதங்கள் இருக்கே, அதற்குள் அவளிடம் பேசிவிடலாம் என்று நினைக்க, அது ஆகனுக்கு நடக்காமலே போனது.
அகானாவின் செமஸ்டர் முடிந்த நாளில் அவளைத் தேடி அவன் பாண்டிச்சேரிக்கு வர, அப்போது ஆதிரன் அவனைப் பார்க்கவே விடவில்லை.
“ஆதி நீ என்ன செய்றன்னு உனக்குத் தெரியுதா.? நான் அவக்கிட்ட பேசனும். இப்போ நீ தடுத்தா என்னால பேச முடியாதுன்னு நினைக்கிறியா..” எனக் கட்டுப்படுத்தப்பட்டக் கோபத்தில் கேட்க,
“ச்சே ச்சே நான் ஏன் அப்படி நினைக்கப் போறேன் சீனியர். இருக்குற கொஞ்ச உயிரையும் எடுத்துடாதீங்கன்னு சொல்றேன். ஏற்கனவே உயிர்ப்பு இல்லாம சுத்திட்டு இருக்கா.. படிக்கனும் படிக்கனும்னு வெறில படிச்சிட்டு இருக்கா.. அவ ஜெயிக்கனும், ஜெயிக்கனும்னு படிக்கிறான்னு எல்லாரும் சொல்றாங்க, ஏன் அவளே அப்படித்தான் சொல்லிட்டு இருக்கா.. ஆனா உண்மை என்ன தெரியுமா.?” என நிதானமாக ஆதிரன் கேட்க,
இல்லை எனும் விதமாக யோசனையுடன ஆகன் தலையை ஆட்ட, “உங்களாலத்தான். உங்களால மட்டும் தான் அவ இப்படி ஆனா. உங்களை மறக்க முடியாம கஷ்டப்பட்டு, அதுக்கு வடிகாலா அவ தேர்ந்தெடுத்தது தான் இந்த படிப்பு. உங்களை ரொம்ப நம்பியிருப்பா போல, நீங்களும் ஒரு சராசரி ஆண்தான்னு அவளுக்கு காட்டிட்டு போயிட்டீங்க.”
“பெண் குழந்தங்களூக்கு அப்பாதான் தன்னோட முதல் ஹீரோ, அவளுக்கும் அப்படித்தான். அப்பா இல்லாம இருக்குறது வேற, இருந்தும் இல்லாம இருக்குறது வேற.. பாசத்தைக் கொட்டி வளர்த்துட்டு, அதை பாதிலேயே பிடுங்கிட்டு போறது எல்லாம் கொடுமைத் தெரியுமா..? உங்களுக்கு எதுக்கு நான் இதெல்லாம் சொல்லனும். தப்பே செய்தாலும் அவர் உங்க மாமா. அவரை நீங்க எங்கேயும் விட்டுக் கொடுக்கமாட்டீங்க. உங்களுக்குத் தெரியனும்னா அந்த உங்க மாமாக்கிட்டயே போய் கேளுங்க. ஆனா அவர் உண்மையை சொல்வாரா தெரியாது..” என்றவன் அதிர்ந்து நின்ற ஆகனைப் பார்த்து,
“நீங்க நினைச்சு வந்த எதுவும் நடக்காது. அகி இனி உங்க வாழ்க்கைல எப்பவும் கிடையாது வரமாட்டா.. மனசை மாத்திக்க முயற்சி செய்ங்க. அவக்கிட்ட இனி பேச யோசிக்காதீங்க..” என்றவன் அவனைக் கடந்து செல்ல ஒரு அடி எடுத்து வைத்துவிட்டு மீண்டும் ஆகனுக்கு நேராக வந்து நின்று, “பணத்துக்காக மஞ்சரி ஆன்டி லைஃபைத் தூக்கிக் கொடுத்துட்டு வந்தாங்கன்னு சொன்னீங்களாமே, அப்போ என்ன சிச்சுவேஷன் இருந்தது தெரியுமா.? அகி அப்போ உயிருக்கு போராடிட்டு ஹாஸ்பிடல்ல இருந்தா..” என அன்று நடந்ததை விஜயாவின் மூலம் தனக்கு தெரிந்ததை ஆகனிடம் ஆதிரன் சொல்ல, அப்படியே அமர்ந்துவிட்டான் ஆகன்.
அவனுக்கு இது எதுவுமே தெரியாது. அத்தைக்கும் மாமாவிற்கும் பிரச்சனை, அத்தை சண்டை போட்டு, பணத்தை வாங்கிக் கொண்டு தனியாக போய்விட்டார் என்று மட்டும்தான் தெரியும்.
இப்போது ஆதிரன் சொல்வதைப் பார்த்தால் அத்தைக்கும், அகானாவிற்கும் நடந்தது பச்சைத் துரோகமாகப் பட்டது.
இதை யாரிடம் கேட்டு தெளிவு பெறுவது என்ற யோசனை ஒரு பக்கம், இனி எந்த முகத்தை வைத்து அகானாவைப் பார்ப்பது என்ற குற்ற உணர்ச்சி ஒருபக்கம்.
இரண்டும் அவனை அங்கிருக்க விடவில்லை. மறைந்திருந்தாவது அவளைப் பார்த்து விடு என ஓலமிட்ட மனதை அடக்கி, அகானாவைப் பார்க்காமலே அங்கிருந்து கிளம்பி விட்டான்.
ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லும் என்ற சொல்லுக்கு ஏற்ற மாதிரி ஆகனோட வார்த்தைகள் அகானாவின் உணர்வுகளை கொல்லவும் செய்தது, அவள் வாழ்க்கையில் வெல்லவும் செய்தது.
அதுவரை அம்மாவிற்காக படிக்க வேண்டும், கலெக்டர் ஆக வேண்டும் என்று இருந்தவள், ஆகனின் வார்த்தைகளுக்குப் பிறகு மனதளவில் தான் ‘ஒரு ஐஏஎஸ் அதிகாரி’தான் என்று உறுதியே எடுத்துக் கொண்டாள்.
வெறி வெறி வெறி..! பழி வெறி.. தங்களை இந்தளவிற்கு கொண்டு வந்தவர்களை துவம்சம் செய்து விடும் அளவிற்கான பழி வெறி அகானாவின் மனதில் நெருப்பாய் கனன்று கொண்டு இருந்தது.
அது கொடுத்த வேகம், அவளை எங்கேயும் தடை என நிறுத்தவில்லை, மருத்துவப் படிப்பின் ஊடே தகுதி தேர்வுகளுக்கும் படிக்க ஆரம்பித்திருந்தாள்.
கஷ்டம் தான், உண்ண நேரமில்லை, உறங்க நேரமில்லை. அதற்காக அவள் சோர்ந்தும் விழவில்லை. உள்ளுக்குள் நெருப்பாய் ஆகனின் வார்த்தைகள் ஓடிக் கொண்டிருக்க, அவளால் வேறெதிலும் கவனம் செலுத்த முடியவில்லை.
யாரை வேண்டாம் என்றார்களோ, யாரை ஊரைவிட்டு விரட்டியடித்தார்களோ, அவர்கள் முன்னே தைரியமாக, நெஞ்சை நிமிர்த்தி 'நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளா' என்ற பார்வையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அது மட்டுமே அவளது எண்ணமாக இருந்தது.
மகளின் இந்த போக்கு மஞ்சரியிடம் பெரும் பயத்தை உண்டு செய்தது.. முடிந்தளவு அவளிடம் பேசியும் பார்த்தார்தான். ஆனால் அதெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகவேப் போனது.
ஒரு கட்டத்திற்கு மேல் அவரால் அவளைத் தடுக்க முடியாமல் விஜயாவிடம் சொல்லி புலம்ப மட்டுமே முடிந்தது.
“அகி ஒன்னும் சின்ன புள்ள கிடையாது மஞ்சு. அவளுக்கு எல்லாம் தெரியும், புரியும். நீ பயந்து என்னையும் பயங்காட்டாதே..” என மஞ்சரிக்கு சொன்னாலும், அவருமே அகானாவிடம் பேச வேண்டும் என்று நினைத்திருந்தார். அவளைப் பார்த்தும் பல வாரங்கள் ஆகியிருந்தது.
அந்த வார ஞாயிரன்று அகானாவைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தார் விஜயா. வழக்கம்போல அறைக்குள் படித்துக் கொண்டிருந்தாள் அகானா. மஞ்சரி வந்து விஜயா வந்திருப்பதைச் சொல்லி அழைக்க, யோசனையுடன் வெளியில் வந்தாள் அகானா.
எப்போதுமே கலகலப்பான பெண் இல்லைதான் அகானா. ஆனால் முகம் சாந்தமாக, சிறு புன்னகையுடன் பார்க்கவே அத்தனை அழகாக இருப்பாள்.
ஆனால் இப்போது உடல் மெலிந்து, கண்களெல்லாம் உள்ளே சென்று, கண்ணைச் சுற்றி கருவளையம் வந்து, சிரிக்கவேத் தெரியாதது போலோரு முகம், உடலில் தன்னால் ஒரு இறுக்கம் என பார்க்கவே மனதுக்கு பெரும் கஷ்டமகாக இருந்தது விஜயாவிற்கு.
என்றோ எப்போதோ ஒரு நாள் பார்க்கும் தனக்கே இப்படி வலிக்கிறது, வருத்தமாக இருக்கிறது என்றால், இரவு பகல் பாராமல் இருபத்து நான்கு மணி நேரமும் கூடவே இருக்கும் மஞ்சரிக்கு எவ்வளவு வலியும், வருத்தமும் இருக்கும் என்று விஜயாவால் உணர முடிந்தது.
இதை எப்படி சரி செய்ய என்றுதான் பெண்கள் இருவருக்கும் புரியவில்லை. அன்று விஜயா இதுபற்றி எதுவும் அவளிடம் பேசவில்லை. சாதாரண விசயங்களையும், அவள் படிப்பைப் பற்றி மட்டுமே பேசிவிட்டு சென்றவர், தன் மகனுக்கு அழைத்து அகானா பற்றி சொல்லிவிட்டார்.
ஆகனுக்கு அடுத்த பேஜ்தான் ஆதிரன். அவன் இப்போது சிங்கப்பூரில் எம்டி பல்மனாலாஜிஸ்ட் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஆகனை நன்றாகத் தெரியும். அகானா முன்பு பேசும் போது ஆகனைப் பற்றி பேசியிருக்கிறாள்தான். ஆனால் அடுத்து நடந்த எந்தப் பிரச்சினையும் அவனுக்குத் தெரியாது.
விஜயா சொல்லவும் தான் அவனுக்கு அனைத்தும் தெரிந்தது. ஆகனைக் கொன்று விடும் அளவிற்கான கோபம் கொந்தளித்தது. ஆனாலும் இப்போது அவனுக்கு அகானா தான் முக்கியம். அவளை சரி செய்ய வேண்டும் என்று நினைத்து அன்று இரவு அவளுக்கு அழைத்தான்.
“அகிம்மா.” என்ற வார்த்தையை மட்டுமே ஆதிரன் சொல்ல, அடுத்த நொடி அகானாவின் அழுகைச் சத்தம் தான் அவன் காதில் ஒலித்தது. அழட்டும், அவள் கோபம் தீரும் வரை அழட்டும், அவள் விரக்தி, வேதனை அனைத்தும் தீரும் வரை அழட்டும்’ என நினைத்தவன் இடையில் எதுவும் பேசவில்லை. அவள் அழுது ஓய்ந்து சில நிமிடங்கள் கழித்து, “ஐம் ஓக்கே” எனவும் தான் பேசவே ஆரம்பித்தான்.
“ஏன்டா இவ்வளவு கஷ்டப்படுற.. இன்னும் சிக்ஸ் மந்த்ஸ்தானேடா, லாஸ்ட் செமஸ்டர் அப்புறம் படிக்கலாமே..” எனப் பொறுமையாக கேட்க,
“நோ ஆதி.. எனக்கு அவ்வளவு எல்லாம் பொறுமை இல்லை. நான் ஜெயிக்கனும். என் அம்மா ஜெயிக்கனும். அவங்க வாழ்க்கையே நான்தான். நான் ஜெயிச்சாதான், அவங்க ஜெயிச்ச மாதிரி. அதுக்காக நான் கஷ்டப்படுறதுல தப்பே இல்லை. எனக்கு இது சிரமமா எல்லாம் இல்லப்பா… ஐம் நவ் ஓக்கே…”
“ம்ம் புரியுது அகிம்மா… ஆனா உன் ஹெல்த் ரொம்ப முக்கியம் இல்லையா.. நீ சாப்பிடாம, தூங்காம ஹெல்த் ஸ்பாயில் செஞ்சா அம்மா கஷ்டப்படுறாங்க இல்லையா.. இதுதான் நீ அவங்களுக்கு கொடுக்குற நிம்மதியா.. ம்ம் சொல்லு.. உன்னோட குறிக்கோளும் லட்சியமும் தப்பு இல்ல தான். ஆனா அதுக்கு முதல்ல நீ நல்லா இருக்கனும். புரியுதா.. சுவர் இருந்தா தான் சித்திரம் வரைய முடியும்..”
“புரியுது ஆதி.. இனி சரி செஞ்சிக்குவேன்… எனக்கு கொஞ்சம் மெட்டீரியல் வேணும், அப்புறம் செமஸ்டர் முடிஞ்சதும் டெல்லில இருக்குற ஐஏஎஸ் அகாடமில ஜாயின் பண்ணனும்.. நீ எப்போ வர..”
“எனக்கு இப்போ லீவ் இல்லடா.. உன்னை டெல்லிக்கு அழைச்சிட்டு போக நான் வருவேன், அன்ட் மெட்டீரியல் லிஸ்ட் எனக்கு மெசேஜ் பண்ணு. நான் ஆர்டர் போட்டுடுறேன். இனி இப்படி எனக்கு கம்ப்ளைன்ட் வரக்கூடாது அகிம்மா.. உனக்கு புரியுதா..?”
“எஸ் ண்ணா.. ஐம் ஓக்கே..” என்றதோடு சில நிமிடங்கள் வேறு பேச, அப்போதுதான் ஆதிரனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது. அடுத்து விஜயாவிற்கும் மஞ்சரிக்கும் அழைத்து சொல்லிவிட்டு, அவள் அனுப்பிய புத்தகங்களை உடனே ஆர்டர் செய்தான்.
ஆதிரனிடம் பேசிய பிறகு சற்று தெளிவானாள் அகானா. தாயின் கவலையும் புரிய அடுத்து மஞ்சரி வருந்தும் அளவிற்கு எதையும் செய்யவில்லை. தன் ஓட்டத்தையும் நிறுத்தவில்லை.
அடுத்து வந்த நாட்கள் மின்னலென சென்று மறைந்திருந்தது. அகானா தன் மருத்துவப் படிப்பை யாருமே எதிர்பார்த்திராத அளவில் மதிப்பெண்களைப் பெற்று முடித்திருந்தாள். ஆதிரன் வந்து தங்கையை அவள் கேட்ட இன்ஸ்டியூட்டில் சேர்த்து விட்டிருந்தான். ஒரு வருட கோச்சிங்க், அந்த வருடமே பிரிலிமினரி முதல் மெயின் எக்ஷாம் வரை அனைத்து தேர்வுகளையும் முடித்துவிட்டு வெளியில் வந்திருந்தாள்.
அங்கு உள்ள ஆசிரியர்களும், ஆஃபிசர்களுமே வியந்துதான் போயிருந்தனர்.
அடுத்து ஒன்பது மாதங்கள் முசோரியில் ட்ரெயினிங்க் அது முடிந்து போஸ்டிங்க் என்றிருக்க, அப்போது தான் மீண்டும் பாண்டிச்சேரி வந்திருந்தாள். இப்போது தோற்றத்தில் பல மாறுதல் நிமிர்வும், நிதானமும் பார்க்க பாரதியின் புதுமைப்பெண் போலவே இருந்தாள். மஞ்சரிக்கு மகளைப் பார்த்து பெருமை தான். ஆனால் அவளது சுயம் தொலைந்து போனதில் மிகவும் வருத்தம்.
சிறு வயதில் இருந்தே மகள் ஆசைப்பட்டு எதையும் கேட்டதில்லை. குடும்பமாக இருந்த போதும் சரி, ரவி பணத்திற்காக சிரமப்படும் போதும் சரி, குழந்தை ஆசைப்பட்டதை, விரும்பியதை பெரிதாக வாங்கிக் கொடுத்ததில்லை. ஆனால் அதெல்லாம் பெரிய ஏக்கமாக அவளுக்கு அப்போது தோன்றியதும் இல்லை. த(க)ப்பனின் தோளில் சாய்ந்தபடிய் கதை கேட்டு அவனே உலகம் என்றிருந்தவளுக்கு ஆசைகள் பெரிதாக இருந்ததில்லை.
அங்கிருந்து வந்த பிறகோ மஞ்சரியின் கஷ்டத்தைப் பார்த்து எதையும் விரும்பியதோ, ஆசைப்பட்டதோ கிடையாது. மஞ்சரியும், விஜயாவும் கட்டாயப்படுத்தி தான் வாங்கிக் கொடுப்பார்கள். அவர்களுக்கு அடுத்து ஆதிரன்.
அகானா கேட்க வேண்டும் என்றெல்லாம் அவன் யோசித்ததே இல்லை. அகானாவிற்கு எது நன்றாக இருக்குமோ அதை எல்லாம் வாங்கிக் கொடுத்து விடுவான்.
அந்த சிறு வயதிலேயே அவ்வளவு பக்குவமாக இருந்தவளுக்கு, இப்போது சொல்ல வேண்டிய தேவை இல்லைதான். ஆனால் சராசரியாகப் பெண்கள் ஆசைப்படும் சிறு ஆசை என்ற உணர்வு கூட இல்லாமல் இருப்பது தான் மஞ்சரியின் வேதனைக்குக் காரணம். வழக்கம்போல விஜயாவிடம் புலம்ப, அவரும் தான் என்ன செய்வார்.
ஆற்று நீரை அணையிட்டுக் கட்டுப்படுத்தலாம். ஆனால் காட்டாற்று வெள்ளத்தைக் கட்டுப்படுத்த முடியுமா.? அகானா காட்டாற்று வெள்ளம் போல் கைகளூக்குச் சிக்காமல் அணையை மீறிப் போய்க் கொண்டிருந்தாள். அவளைக் கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதம் மஞ்சரி மட்டும் தான். ஆனால் அவர் எப்படி மகளின் முன்னேற்றத்தில் குறுக்கே நிற்பார்.
இரு வாரங்கள் விடுமுறை முடிந்து முசோரிக்கு கிளம்பியிருந்தாள் அகானா. அடுத்து வரும் ஒன்பது மாதங்களும் மிகவும் கடுமையாக இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும். மிக கவனமாக செயல்பட வேண்டியக் கட்டாயமும் கூட.
அடுத்து அவள் போஸ்டிங்கோடுதான் வெளியில் வருவாள் என்றும் தெரியும். அவளின் அந்த புதிய அவதாரத்திற்கு அனைவருமே ஆவலோடு காத்திருந்தனர்.
இங்கு அன்று அகானாவிடம் பேசிவிட்டு வந்த ஆகனுக்கு அங்கு இருக்கவே முடியவில்லை. அன்று இரவே அங்கிருந்து கிளம்பியிருந்தான். அவனுக்கு தன் மாமனின் மீது மிகுந்த மரியாதை. அவர் மனைவி மகளிடம் எப்படியோ அவனிடமும், அவன் தங்கையிடமும் மிகுந்த பாசமுள்ள ஒரு மாமா. அவரைப் பற்றி தவறான ஒரு வார்த்தையைக் கேட்டதும் கோபப்பட்டு விட்டான்.
ஆனால் அடுத்து வந்த நாட்களில் உட்கார்ந்து யோசிக்கும் போதுதான் அகானாவின் கோபமும், ஆத்திரமும் அவனுக்குப் புரிந்தது. அது தப்பு இல்லையென்றும் புரிந்தது. அவளிடம் மன்னிப்புக் கேட்கலாம் என்று நினைக்க, உடனே அதை சரி செய்யும் அளவிற்கு அப்போது அவன் சூழல் இல்லை.
காலம் தாழ்ந்து கேட்கப்படும் எந்த மன்னிப்பிற்கும் மதிப்பு இருக்காது என்று அவனுக்கு அப்போது புரிந்திருக்கவில்லை.
ஆகன் வீட்டிற்கு வந்த மறுநாள் சங்கருக்கு ஒரு ஆக்சிடென்ட் நடக்க, அவரை மதுரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். அவன் கூடவே இருக்க வேண்டியக் கட்டாயம். அதோடு தாயையும் தங்கையையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அவருக்கு சரியாகி நடக்கக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுரையோடு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அடுத்து மருத்துவமனையில் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டியக் கட்டாயம். அதன்பிறகு அவனால் நகர முடியாதளவிற்கு வேலை.
அவள் செமஸ்டர் முடிய இன்னும் ஆறு மாதங்கள் இருக்கே, அதற்குள் அவளிடம் பேசிவிடலாம் என்று நினைக்க, அது ஆகனுக்கு நடக்காமலே போனது.
அகானாவின் செமஸ்டர் முடிந்த நாளில் அவளைத் தேடி அவன் பாண்டிச்சேரிக்கு வர, அப்போது ஆதிரன் அவனைப் பார்க்கவே விடவில்லை.
“ஆதி நீ என்ன செய்றன்னு உனக்குத் தெரியுதா.? நான் அவக்கிட்ட பேசனும். இப்போ நீ தடுத்தா என்னால பேச முடியாதுன்னு நினைக்கிறியா..” எனக் கட்டுப்படுத்தப்பட்டக் கோபத்தில் கேட்க,
“ச்சே ச்சே நான் ஏன் அப்படி நினைக்கப் போறேன் சீனியர். இருக்குற கொஞ்ச உயிரையும் எடுத்துடாதீங்கன்னு சொல்றேன். ஏற்கனவே உயிர்ப்பு இல்லாம சுத்திட்டு இருக்கா.. படிக்கனும் படிக்கனும்னு வெறில படிச்சிட்டு இருக்கா.. அவ ஜெயிக்கனும், ஜெயிக்கனும்னு படிக்கிறான்னு எல்லாரும் சொல்றாங்க, ஏன் அவளே அப்படித்தான் சொல்லிட்டு இருக்கா.. ஆனா உண்மை என்ன தெரியுமா.?” என நிதானமாக ஆதிரன் கேட்க,
இல்லை எனும் விதமாக யோசனையுடன ஆகன் தலையை ஆட்ட, “உங்களாலத்தான். உங்களால மட்டும் தான் அவ இப்படி ஆனா. உங்களை மறக்க முடியாம கஷ்டப்பட்டு, அதுக்கு வடிகாலா அவ தேர்ந்தெடுத்தது தான் இந்த படிப்பு. உங்களை ரொம்ப நம்பியிருப்பா போல, நீங்களும் ஒரு சராசரி ஆண்தான்னு அவளுக்கு காட்டிட்டு போயிட்டீங்க.”
“பெண் குழந்தங்களூக்கு அப்பாதான் தன்னோட முதல் ஹீரோ, அவளுக்கும் அப்படித்தான். அப்பா இல்லாம இருக்குறது வேற, இருந்தும் இல்லாம இருக்குறது வேற.. பாசத்தைக் கொட்டி வளர்த்துட்டு, அதை பாதிலேயே பிடுங்கிட்டு போறது எல்லாம் கொடுமைத் தெரியுமா..? உங்களுக்கு எதுக்கு நான் இதெல்லாம் சொல்லனும். தப்பே செய்தாலும் அவர் உங்க மாமா. அவரை நீங்க எங்கேயும் விட்டுக் கொடுக்கமாட்டீங்க. உங்களுக்குத் தெரியனும்னா அந்த உங்க மாமாக்கிட்டயே போய் கேளுங்க. ஆனா அவர் உண்மையை சொல்வாரா தெரியாது..” என்றவன் அதிர்ந்து நின்ற ஆகனைப் பார்த்து,
“நீங்க நினைச்சு வந்த எதுவும் நடக்காது. அகி இனி உங்க வாழ்க்கைல எப்பவும் கிடையாது வரமாட்டா.. மனசை மாத்திக்க முயற்சி செய்ங்க. அவக்கிட்ட இனி பேச யோசிக்காதீங்க..” என்றவன் அவனைக் கடந்து செல்ல ஒரு அடி எடுத்து வைத்துவிட்டு மீண்டும் ஆகனுக்கு நேராக வந்து நின்று, “பணத்துக்காக மஞ்சரி ஆன்டி லைஃபைத் தூக்கிக் கொடுத்துட்டு வந்தாங்கன்னு சொன்னீங்களாமே, அப்போ என்ன சிச்சுவேஷன் இருந்தது தெரியுமா.? அகி அப்போ உயிருக்கு போராடிட்டு ஹாஸ்பிடல்ல இருந்தா..” என அன்று நடந்ததை விஜயாவின் மூலம் தனக்கு தெரிந்ததை ஆகனிடம் ஆதிரன் சொல்ல, அப்படியே அமர்ந்துவிட்டான் ஆகன்.
அவனுக்கு இது எதுவுமே தெரியாது. அத்தைக்கும் மாமாவிற்கும் பிரச்சனை, அத்தை சண்டை போட்டு, பணத்தை வாங்கிக் கொண்டு தனியாக போய்விட்டார் என்று மட்டும்தான் தெரியும்.
இப்போது ஆதிரன் சொல்வதைப் பார்த்தால் அத்தைக்கும், அகானாவிற்கும் நடந்தது பச்சைத் துரோகமாகப் பட்டது.
இதை யாரிடம் கேட்டு தெளிவு பெறுவது என்ற யோசனை ஒரு பக்கம், இனி எந்த முகத்தை வைத்து அகானாவைப் பார்ப்பது என்ற குற்ற உணர்ச்சி ஒருபக்கம்.
இரண்டும் அவனை அங்கிருக்க விடவில்லை. மறைந்திருந்தாவது அவளைப் பார்த்து விடு என ஓலமிட்ட மனதை அடக்கி, அகானாவைப் பார்க்காமலே அங்கிருந்து கிளம்பி விட்டான்.