• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ.. - 07

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,273
498
113
Tirupur
நிழல் - 7

பாண்டியில் இருந்து வந்த ஆகனுக்கோ நெஞ்சமெல்லாம் ஏதோ ஒரு வகையான பாரம் அழுத்துவதைப் போல, மூச்சுக்கூட விட முடியாமல் அடைப்பது போல, இதயம் தன் துடிப்பை நிறுத்தி விடும் போல சொல்லில் அடங்காத வேதனையாகிப் போனது. யாரிடம் இதைக் கேட்டால், இதற்கு சரியான பதில் கிடைக்கும் என்று யோசித்தவனுக்கு விடையாக அவனது அப்பா சங்கர் தெரிய, உடனே அவருக்கு அழைத்து ஹாஸ்பிடலுக்கு வரச் சொல்லியிருந்தான்.

இதோ அவரும் வந்து பல நிமிடங்கள் கடந்து போயிருந்தது, ஆனாலும் அவன் பேசவில்லை. பேசவில்லை என்பதை விட பேச முடியவில்லை அவனால். எதையும் தெரிந்து கொள்ளாமல் முட்டாள்தனமான தன் பேச்சால் இரு பெண்களையும் வருத்திவிட்டது வேறு மனதைக் கொன்றது.

சிறு பெண்ணின் மனதில் ஆசையை விதைத்து, அது துளிர்க்கும் முன்னே பிடுங்கி எறிந்துவிட்டு, இப்போது வருத்தப்படும் தன் முட்டாள்தனத்தை எண்ணி நொந்து கொண்டிருந்தான்.

மகனின் அலைப்புறுதலை பார்த்துக் கொண்டேதான் இருந்தார் சங்கர். காதல் விவகாரமாக இருக்குமோ, அதனால் தான் சொல்ல யோசிக்கிறானோ..? என்று மனதில் நினைத்தபடியே அமந்திருந்தார்.

அடுத்தும் சில நிமிடங்கள் கடந்தும் அவன் பேசவில்லை என்றதும், “கண்ணா பேசனும்னு சொல்லி வரச்சொல்லிட்டு, பேசாம நடந்துட்டே இருந்தா என்ன அர்த்தம்..” எனக் கேட்க,

தந்தையை நிமிர்ந்துப் பார்க்கத் திராணியில்லாமல் குனிந்தபடியே “சாரிப்பா.. எல்லாத்துக்கும்..” என்றான்.

“சாரி எல்லாம் எதுக்கு. ஏன் சாரி கேட்குற அளவுக்கு என்ன பண்ண.?”

“ஒரு தப்பு பண்ணிட்டேன்ப்பா… சாரிப்பா..” எனச் சிறு குழந்தையாக மன்னிப்புக் கேட்டவன் குரலும் சிறிதாகித்தான் போனது.

“முதல்ல நீ என்ன நடந்ததுன்னு சொல்லு கண்ணா..”

“சொல்றேன் ப்பா.. ஆனா அதுக்கு முன்னாடி மஞ்சரி அத்தையைப் பத்தி எல்லாம் எனக்குத் தெரியனும். எனக்கு நீங்க சொல்லியே ஆகனும். அதை வச்சுத்தான் நான் அடுத்து உங்கக்கிட்ட எல்லாமே சொல்ல முடியும்..” எனத் தீர்க்கமாகச் சொல்ல,

அந்தக் குரலில் என்னக் கண்டாரோ, தனக்குத் தெரிந்த அனைத்தையும் மறைக்காமல் சொல்லிவிட, ஆகனால் எதையும் ஜீரணிக்க முடியவில்லை. அகானா ரவீந்திரனை வெறுத்து அவனிடம் கூறிய வார்த்தைகளில் எத்தனை உண்மை இருந்திருக்கிறது. அது தெரியாமல் வார்த்தை எனும் வாளால் அவளை வதைத்துவிட்டு வந்துவிட்டானே, மனம் ஆற மறுத்தது.

“நீ எதுக்கு இதெல்லாம் கேட்குற கண்ணா.. அவங்களை எங்கேயும் பார்த்தியா, உனக்கு மஞ்சரியை அடையாளம் தெரிஞ்சதா, எங்க இருக்காங்க, என்ன பண்றாங்க.. அம்மு எப்படி இருக்கா? நல்லா வளர்ந்திருப்பாளே.!” எனப் பரபரப்புடன் கேட்டத் தந்தையை குற்ற உணர்ச்சியுடன் பார்த்தான்.

பின் “அதுப்பா..” என்றவன் அனைத்தையும் சொல்லி முடிக்க, சங்கரின் முகத்தில் என்ன என்றேக் கண்டுபிடிக்க முடியாதளவிற்கான உணர்வுகள் போட்டிப் போட்டுக் கொண்டு வந்து போனது. அதிலேயே பெற்றவரின் கோபம் புரிய, “ஸாரிப்பா..” என்றான் அவர் முகத்தைப் பார்க்காமல்.

“உன் அம்மா ரத்தமும் உன் உடம்புல ஓடுது இல்லையா.? அப்போ அந்த புத்தியும் இருக்கும் தானே, நாலு பேர் மதிக்கிற மாதிரி உன்னை நல்லாத்தான் வளர்த்துருக்கேன்னு பெருமையா நினைச்சிட்டு இருந்தேன் ஆனால்..?” என நிறுத்திவிட்டு, சில நொடிகள் அமைதியாகிப் பின் “இனி அந்த பொண்ணோட வாழ்க்கைல நீ எங்கேயும் இருக்கக்கூடாது. இது அவங்களுக்கு செய்ற நன்றியா, எனக்கு செய்ற உதவியா நினைச்சுக்கோ..” என்று எழுந்துவிட,

“ப்பா.. அது என்னால முடியும்னு தோனல, அவ இல்லாம எனக்கு ஒரு லைஃப் இல்லப்பா..” என்றான் உறுதியானக் குரலில்.

“ஆனா அது சாத்தியமான்னு யோசிச்சுக்கோ, நீ செஞ்சது, இவங்க செஞ்சது எல்லாத்தையும் மறந்துட்டு, இந்த குடும்பத்துல வந்து வாழ அந்த பொண்ணு முதல்ல ஒத்துக்கனும், அப்புறம் மஞ்சரி, அதுக்கப்புறமா உன் அம்மா…” என ராகமிழுத்தவர் “கண்டிப்பா உன் அம்மா இதுக்கு ஒத்துக்கமாட்டா, அவளுக்குப் பிடிக்கலன்னா இதுக்காக எந்த எல்லைக்கு வேணும்னாலும் போவா.. அதுக்கு உன் மாமாவும், அவரோட வாழ்க்கையும் சாட்சி..” என்றவர்,

“அதெல்லாம் சரிப்பட்டு வராது விட்டுடு, அப்புறம் அவங்களை பார்த்தேன், பழகினேன்னு உங்க அம்மாக்கிட்ட சொல்லிடாத, அவ்வளவுதான் கொஞ்சம் நஞ்சம் இருக்குற அவங்க மான மரியாதையும் கெடுத்து, உசுரோட கொன்னுட்டு வந்துடுவா.. செய்த பாவக் கணக்கே இன்னும் தீராம இருக்கு, இப்போ புதுசா நீயும் ஆரம்பிச்சு வச்சிருக்க..” என்றுவிட்டு அவர் கிளம்பிவிட, தலையில் கைவைத்தபடி அமர்ந்துவிட்டான் ஆகன்.

புரிந்து கொள்வார் என்று நினைத்த தந்தையே இப்படி சொல்லிச் சென்றால், மற்றவர்களைப் பற்றி யோசிக்கவே வேண்டாம். அகானா இல்லாத ஒரு வாழ்க்கையை அவனால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது, அப்படியிருக்க, அவளை விட்டுவிடு என்றால் கண்டிப்பாக முடியாது. அவளைத் தன்னிடம் கொண்டுவர என்ன செய்ய, என்ன செய்ய என வெகுவாக யோசிக்க ஆரம்பித்து, அதற்காக ஒரு தீர்வையும் கண்டுபிடித்தான்.

ஆதிரனின் நெருங்கிய நண்பன் மூலம் அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆரம்பித்தான். அகானாவின் இந்த புது அவதாரத்தில் அவனுக்கும் மகிழ்ச்சிதான். தாய்க்காக பழிவாங்கப் போகிறாளே. அதற்கு முதல் பழியாகத் தன்னையேக் கொடுக்க முன் வந்தான்.

ஆம்! அவளது பழிவாங்கலை சுகமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தான். அவளை மறக்க வேண்டும் என்று எங்கேயும் நினைக்கவில்லை. அவள் தன்னைத் தேடி வரும் நாளுக்காகத் தவமிருக்க ஆரம்பித்தான். அவளும் வந்தாள்.. அவன் எதிர்பார்த்ததைப் போலவே.. பெண் புலியாக, சீறிவரும் வேங்கையாக.. அவனுக்கு முன்னே வந்து நிமிர்வாகவும், திமிராகவும் நின்றாள்.

ஒன்பது மாதங்கள் ட்ரெயினிங்க் முடிந்து வந்தவளுக்கு, அவளது அதிர்ஷடமாக தேனியிலேயே முதல் போஸ்டிங்க் கிடைக்க, அதுவே அவளது முதல் வெற்றி என்று நினைத்தாள். ஆதிரனும் அதையேத்தான் சொன்னான்.

முதல் ஒரு மாத காலம் அந்த மாவட்டத்தைக் கிரகிக்க அவளுக்குத் தேவையான அவகாசமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் அவளுடன் மஞ்சரியை அழைத்துக் கொள்ளவில்லை. குவார்டஸ் எல்லாம் ரெடியாக இருந்தாலும், அவளுக்கும் நேரம் இருக்கவில்லை.

அப்போது தான் அந்த தனியார் மருத்துவக் கல்லூரியில் பிறந்த குழந்தைகள் காணாமல் போவதாக ஒரு தகவல் வர, அதற்காக நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள் போலும், உடனேக் கிளம்பிவிட்டாள்.

அகானா அந்த மருத்துவக் கல்லூரியை சோதனை செய்வதற்காக வர, அங்கு தலைமைப் பொறுப்பில் இருந்தார் ரவீந்திரன். அவருக்கு முதலில் அவள் அங்கு வருவதே தெரியவில்லை.

திடீரென்று வந்து நின்று மாவட்ட ஆட்சியரை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. “வாங்க.. வாங்க மேம்.. ப்ளீஸ்.. நீங்க வருவீங்கன்னு எந்த இன்ஃபர்மேஷனும் எங்களுக்கு சர்க்குலர் வரல..” என இருக்கையைக் காட்ட,

“இட்ஸ் ஓக்கே.. இன்ஃபாம் பண்ணாம வரதுக்குப் பேருதானே இன்ஸ்பெக்ஷன்..” என்றவளின் குரலில் கிண்டல் வலிந்ததோ என்று எதிரில் இருப்பவர் உணரும் முன்னே, தன் முகபாவத்தை மாற்றியவள் “ஐம் அகானா ரவீந்திரன், ப்ளீஸ் ஷிட்..” என்றவாறே நிமிர்வுடன் அவருக்கு எதிரில் அமர்ந்தாள் அகானா.

அவள் அமர, சட்டென்று தன் இருக்கையில் இருந்து எழுந்துவிட்டார் ரவீந்திரன். முகமெல்லாம் வியர்த்து, மூச்சு விடுவதற்கும் கஷ்டம் போலத் தினற, அதைப் பார்த்துக் கொண்டே இருந்தவளின் கண்களில் வந்து போன குரோதத்தையும், திருப்தியையும், எள்ளலையும் யாரும் அறியவில்லை.

“வெல்.. சார் இங்க மெட்டர்னிட்டி வார்டுல இருந்து குழந்தைங்க மிஸ்ஸாகுறதாகவும், அவங்க கடத்தப்படுறதாகவும் எங்களுக்கு மெசேஜ் வந்துருக்கு, அதுக்காகத்தான் இந்த எமெர்ஜென்சி என்கொய்ரி” அகானா பேசிக் கொண்டே அவரை நோட்டம் விட, அவரோ இன்னும் தன் திகைப்பில் இருந்து வெளியில் வரவில்லை.

“அகானா.. அம்மு..” ரவீந்திரனின் வாய் தானாக அந்தப் பெயரை உச்சரித்தது, உடலெல்லாம் ஒரு நடுக்கம் ஓட, நிற்க முடியாமல் உடல் தள்ளாட, அங்கிருந்த சேரை அழுத்திப் பிடித்தபடி நிற்க,

அவரை மேலும் கீழும் பார்த்தபடி, “வாட் ஹேபன் சர், ஆர் யூ ஓக்கே… எனி இஸ்ஸூஸ்.. எமர்ஜென்சி கால் பண்ணவா..” என கேட்க, அதில் சற்று நிகழ்வுக்கு வந்தவர், ‘அவளுக்குத் தன்னை அடையாளம் தெரியவில்லையோ, அதனால் தான் இப்படி பேசுகிறாளோ’ என யோசித்தபடியே சேரில் அமர்ந்தவரின் முன்னே வாட்டர் பாட்டிலை நகர்த்தி வைத்தாள் அகானா.

“ப்ளீஸ் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க, தண்ணீ குடிங்க..” எனவும், தலையை அசைத்து வேகமாகத் தண்ணீரைக் குடித்தவர், மேஜையின் மேல் இருந்த ஒரு பாக்ஸில் இருந்து மாத்திரையையும் போட்டுக் கொண்டார். அது வேலை செய்ய, இப்போது அவளை ஆராய்ச்சியாகப் பார்த்தபடி தலையை ஆட்ட,

“ஆர் யூ ஓக்கே..” எனக் கேட்டு, அவர் ஆமென்றதும், மீண்டும் தன் கேள்விகளை முன் வைக்க,

“ஓ.. எஸ் மேடம் லாஸ்ட் வீக் தான் இப்படி ஒரு இன்சிடென்ட் நடந்துருக்கு. அதுக்கு முன்னாடி கண்டிப்பா இல்ல, பட் அந்த இன்சிடென்ட்க்கு ஆக்சனும், இனி நடக்காம இருக்கத் தேவையான சொல்யூஷன்சும் எடுத்தாச்சு… இனி இப்படி நடக்காது, அதுக்கு நான் கியாரண்டி..”

“ஐ சீ பட் என்னோட வொர்க் நான் சூப்பர்வைஸ் பண்ணியே ஆகனும், இஃப் யூ டோன் மைன்.. வில் செக் தெ ஸ்பாட்.. சிசிடிவி யுனிட்சும் செக் செய்யனும்…”

“ஏஸ் அஃப்கோர்ஸ்.. ப்ளீஸ்..” என இருக்கையை விட்டு எழ, அந்த நேரம் அறைக் கதவைத் திறந்து கொண்டு “மாமா” என்றபடி உள்ளே வந்தான் ஆகன்.

உள்ளே வந்தவன் திகைத்து அப்படியே நின்றான். அவன் பார்ப்பது நிஜமா.? நம்பவே முடியவில்லை. அந்த நேரத்தில், அந்த இடத்தில் அகானாவை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை ஆகன். அவளையே விழியெடுக்காமல் பார்க்க, அவளோ “ஓக்கே கேரியான், ஐ வில் அட்ஜஸ்ட் அனதர் பெர்சன், கண்ணன் அங்கிள் வேற ஸ்டாஃப் இருந்தா அரேஞ்ச் பண்ணுங்க.. அன்ட் கோ டூ த ஸ்பாட்…” என்றவள் அங்கிருந்து நகர்ந்துவிட,

“நோ.. நோ ப்ராப்ளம் மேடம், ஜஸ்ட் டூ செகண்ட்ஸ்” என அவளிடம் சொன்னவர், “கண்ணா நீ இங்க இரு நான் இப்போ வந்திடுறேன்” என்று விட்டு அகானாவின் பின்னே வேகமாக நடந்தார்.

நடப்பதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஆகன், அவனுக்கு அவள் இங்கே வந்துவிட்டாள் என்றுத் தெரியும். எப்போது வேண்டுமானாலும் நேருக்கு நேர் மோத வேண்டி வரும் என்றும் தெரியும். ஆனால் இப்படியொரு சந்திப்பை அவன் நிச்சயம் பார்க்கவில்லை. அதிலும் அவள் கண்ணில் தெரிந்த அந்நியத் தன்மையில், யார் நீ என்ற பார்வையில் அவன் மொத்தமாகவே நொறுங்கிப் போயிருந்தான்.

மாமாவைப் பார்த்தும் அவள் அமைதியாக இருக்கிறாள் என்றால் ஏதோ பெரிதாக திட்டம் வைத்திருக்கிறாளா.? அவரை என்ன செய்யப் போகிறாள்.? நிச்சயம் அமைதியாக இருக்கமாட்டாள், அது அவனுக்கு நன்கு தெரியும். ஏதோ திட்டம் தீட்டி வைத்திருக்கிறாள், அதை எப்படி அறிய..’ என யோசித்தபடியே அமர்ந்திருந்தவன், அறைக்கதவு திறக்கும் ஒலியில் அங்கே பார்த்தான்.

ரவீந்திரன் தான் வந்து கொண்டிருந்தார். அவர் நடையில் ஒரு தளர்வு, முகத்தில் ஒரு சோர்வு.

“என்னாச்சு மாமா.. ஏன் டல்லா இருக்கீங்க, உடம்புக்கு என்ன பண்ணுது, அவங்க எங்க…”

“கிளம்பிட்டாங்க..” என்றவர், “எனக்கு ஒன்னும் இல்ல, ஜஸ்ட் ஒரு அதிர்ச்சி.. அவ்வளவுதான்..” என்றவர் “அது.. அது.. அந்த கலெக்டர் நம்ம அம்மு..” என்றார் குரலில் ஒரு பரவசத்தோடு.

“ஓ.. உங்களுக்கு எப்படித் தெரியும்.. அடையாளம் தெரிஞ்சதா..?”

“இல்ல.. தெரியல..” என்றவர் குற்ற உணர்ச்சியுடன் தலையைக் குனிந்தபடி, “நான் செஞ்ச பாவத்துக்கான தண்டனைதான் இதெல்லாம். அவளுக்கு என்னைத் தெரியல.. நானா சொல்லவும் அசிங்கமா, அவமானமா இருந்தது.” எனவும் ஆகனின் முகத்தில் ஒரு விரக்திப் புன்னகை.

அவளுக்கு உங்களை அடையாளம் தெரியலையா..? அவளோட ஒவ்வொரு செல்லிலும் உங்களை மறக்கக்கூடாதுனு ஞாபகம் வச்சிருக்கிறவளுக்கு அடையாளம் தெரியலையா.?

அவ இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே.. ஆரம்பிச்சா தாங்குவாங்களா.. என்றபடியே எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தவனின் போன் அடிக்க, எடுத்துப் பார்க்க ‘அம்மா’ என்றிருக்க, இவர் எதுக்கு இந்நேரம் என்றபடியே எடுத்துக் காதில் வைக்க, “கண்ணா மகியைக் காணோம் கண்ணா” என கதற,

“ம்மா.. என்ன சொல்றீங்க, தெளிவா சொல்லுங்க.. ப்ரண்ட்ஸ் கூட எங்கேயும் போயிருப்பா.. இருங்க விசாரிக்கலாம்..”

“இல்ல கண்ணா அவளுக்கு கால் பண்ணா யாரோ ஒரு சின்ன பையன் எடுத்து, இது கீழ கிடந்ததுன்னு சொல்றான், எங்கேன்னு கேட்டா ஆன்டிபட்டின்னு சொல்றான்..”

“ம்மா.. நீங்க இருங்க நான் விசாரிக்கிறேன்..” என்று வைத்தவனின் மூளை சில நிமிடங்கள் வேலை நிறுத்தம் செய்திருந்தது.

“என்னாச்சு கண்ணா மகிக்கு என்ன..” என ரவியும் பதற, அவரிடம் விசயத்தைச் சொன்னவன், தனக்கு தெரிந்த நண்பர்கள் மூலம் தேடுதல் வேட்டையை ஆரம்பித்திருந்தான்.

அதே நேரம் அந்தக் கல்லூரியில் இருந்து வெளியில் வந்த அகானா கண்களை மூடிச் சீட்டில் சாய்ந்திருந்தாள். அவள் மனதில் சிறுவயது மகி அவளது நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருக்க, அதை தூரமிருந்து ஏக்கமாக அகானா பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அந்தக் கூட்டத்தில் ஒரு குட்டிப்பெண், “மகி அந்த அகி உன்னையேப் பார்த்துட்டு இருக்கா, அவங்க அம்மா உனக்கு அத்தைதான, அப்போ சொந்தம் தானே கூப்பிடு விளையாடலாம்..” எனவும்,

“ஹேய் அதெல்லாம் இல்லப்பா, அந்த பொம்பளத்தான் எங்க மாமாவை வேண்டாம்னு சொல்லிட்டு போயிடுச்சாம், அதனால அவங்க ரிலேட்டிவ் எல்லாம் இல்ல, அப்படி அவளையும் நீங்க கூப்பிட்டு விளையாண்டா, இனி நான் உங்ககூட விளையாட வரமாட்டேன்..” என அகனாவிற்கு கேட்க வேண்டும் என்றே சத்தமாகச் சொல்ல, அந்த பத்து வயதுக் குழந்தைக்கு என்ன புரிந்ததோ, ஆனால் ‘பொம்பளை’ என்ற வார்த்தை மட்டும் நெஞ்சில் நீங்காமல் நின்றுவிட்டது, அவளது மண்டையைப் பிளக்கும் ஆத்திரம் இருந்தும் வெளியில் காட்டாமல் அங்கிருந்து நகர்ந்திருந்தாள். இதுவே ஓடிக் கொண்டிருக்க அவளது போன் அடிக்க, “ம்ம் ஸ்பாட்டுக்கு கொண்டு போயிடுங்க, ஆதி வருவான்..” என்று வைத்துவிட்டு மீண்டும் சீட்டில் சாய்ந்து கொண்டாள்.

இங்கு அந்த சிறிய வீட்டை ஒருமுறை நன்றாக பார்வையால் வருடிக் கொண்டார் மஞ்சரி. எத்தனையோ வலிகளையும், அழுகையையும், இன்பத்தையும், துன்பத்தையும் பார்த்த அவர்களது அழகிய சிறுகூடு.

அதைவிட்டு பிரிவதென்பது மஞ்சரிக்கு தன் உயிர்க்கூட்டைப் பிரிவதைப் போல் தான். ஆனால் அதையெல்லாம் சொன்னால் இந்த முட்டாள் பெண் புரிந்து கொள்ளமாட்டாள். ‘நீங்களும், உங்க இடியாட்டிக் செண்டிமெண்டும்’ என்று கோபப்படுவாள்.

வழக்கம்போல தன் அனைத்து உணர்வுகளையும் தனக்குள்ளேயேப் புதைத்துக் கொண்டு தன்னைச் சுற்றி நின்ற, இதுவரை சொந்தங்களாகப் பழகிய அக்கம் பக்கத்தினருக்கு சிறு சிரிப்புடன் விடைக் கொடுத்துவிட்டு, மகளின் அந்த ஐ20 காரில் ஏறினார் மஞ்சரி.
 
  • Like
  • Haha
Reactions: saru and CRVS2797

CRVS2797

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 11, 2023
117
8
18
Ullagaram
அ.. ஆ...
எழுத்தாளர்: வதனி .S
(அத்தியாயம் - 7)


குழந்தைங்க வளரதுக்கு முன்னாடி பெத்தவங்க சொல்றதை கேட்கணும். வளர்ந்துட்ட பிறகோ, குழந்தைங்க சொல்றதை பெத்தவங்க கேட்டுத்தானே ஆகணும். இதானே எழுதப்படாத விதி.


அது சரி, இந்த அகானா தான் உசிரோட இருக்கிறச்சவே பெத்தவரோட போட்டோவுக்கே பூ மாலை போட்டு வைச்சவளாச்சே. அப்புறம் ஏன் இப்ப மட்டும் இன்ட்ரோ கொடுக்கிறச்ச அகான ரவீந்திரன்னு சொல்லிக்கிறா..?
புரியலையே..?


தனக்கு வேணும்ங்கிறச்ச அப்பா பேரை சேர்த்துக்கிறதும், வேண்டாம்ங்கிறச்ச வெட்டி விடறதும் எந்த விதத்துல நியாயம்ன்னு தெரியலையே...? அப்ப இவளுக்குள்ளேயும் ஒரு சுயநலம் இருக்குத்தானே..? அதையேத்தானே அவளோட அப்பாவும் பண்ணான். இவளுக்கு வந்தா ரத்தம், அவருக்கு வந்தா டொமேட்டோ சாஸா...?


😀😀😀
CRVS (or) CRVS 2797