அ..ஆ - 18
தனக்குத்தானே புலம்பியபடி நடந்து கொண்டிருந்த ஆரியனை லூசாப்பா நீ என்பது போல் பார்த்து கொண்டிருந்த மகி பொறுமையிழந்து “சார்.. நீங்க ஏன் இப்படி தனியா புலம்பிக்கிட்டு இருக்கீங்க. என்ன பிரச்சினை? எங்கிட்ட சொல்லுங்க.. நான் சால்வ் பண்ணி வைக்கிறேன்..” என கேட்க,
“என் பிரச்சினையே நீதான்மா…” என விரக்தி குரலில் புலம்பியவன், “நீ எப்பவும் இப்படித்தானா? இல்ல இப்படித்தான் எப்பவுமா?” என சீரியசாக கேட்க,
“ஸார் என்ன என்னை பைத்தியம்னு சொல்றீங்களா? தனியா புலம்பிக்கிட்டு இருக்க நீங்கதான் பைத்தியம்.. பாவம் ஏதோ பிரச்சினையில இருக்காரே, சொல்யூஷன் சொல்லுவோம்னு நினைச்சு கேட்டா ஓவரா பேசுறீங்க..” என தன் முட்டக்கண்ணை விரிக்க,
“யாரு.. நானு தனியா புலம்பிக்கிட்டு இருந்தேன் எல்லாம் என் நேரம்தான். தனியா புலம்ப விட்டதே நீதான..” என எரிச்சலானவன், “நாலு நாளா இப்படி என்கூட தனியா இருக்கியே உன்னை வீட்டுல தேடமாட்டாங்க. எவ்ளோ கவலைப்படுவாங்க உன் பேரன்ஸ்.. அதையெல்லாம் யோசிக்காம நீ பாட்டுக்கு ஜாலியா இருக்கியே..” என அவளிடம் எகிற,
“அப்போ நிஜமாவே நாலு நாள்தானா? நீங்க என்னை மிரட்டத்தான் அப்படி சொல்றீங்க நினைச்சேன்.. அய்யோ என் திங்க்ஸ் எதுவும் உங்ககிட்ட இல்லையா? அதை வச்சு என் வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்ணிருக்கலாமே.. எல்லாரும் பயந்துருப்பாங்க. சும்மாவே இந்த மைத்தி அத்தை என்னை கரிச்சு கொட்டும். இப்போ இதெல்லாம் தெரிஞ்சா அவ்ளோதான்..” என பதட்டமாக பேசி அழுகைக்கு செல்ல,
“நல்லா நினைச்ச போ… நீ ஆக்சிடென்ட் ஆகி விழும்போது உன் பேக் எல்லாம் காணோம். மொபைலும் இல்ல.. உன் ஐடென்டி எதுவும் இல்லாம எப்படி உங்க வீட்டுக்கு சொல்ல, போலிஸ்ல சொல்லலாம்னா என் சிஸ்டர் வேண்டாம், வெயிட் பண்ணுவோம்னு சொன்னா..” என்றதும்,
“ஏன்..? ஏன் சொல்லல..? சொல்லிருந்தா எப்படியும் எங்க வீட்டுக்கு தகவல் போயிருக்குமே.. ஆகனும் வந்துருப்பான்.. ஏன் உங்க சிஸ்டர் அப்படி சொன்னாங்க..?” என மூச்சு வாங்க கேள்விகளை அடுக்கினாள் மகிழினி.
“ம்ம்ம் நீ ஒரு பொண்ணு.. உன்னை போலிஸ்கிட்ட தூக்கி கொடுத்துட்டு பயந்துட்டே இருக்க முடியாது. அதோட எல்லாரையும் நம்பி உன்னை மாதிரி ஒரு அழகான பொண்ணை ஒப்படைக்கவும் முடியாது ரைட்..” என அழுத்தமாக சொல்ல,
“ஸாரி.. நான் தப்பா மீன் பண்ணி கேட்கல. எப்பவும் அண்ணாவும், அப்பாவும் என்னை கவனமா இருக்க சொல்லுவாங்க. அதுதான்..” என வார்த்தைகளிய மென்று விழுங்க,
“என்ன இவ்ளோ நேரம் பட்டாசு மாதிரி படபடவென பேச்சு வந்தது.. இப்போ சத்தம் உள்ள போகுது..” என சட்டென இயல்பானவன்.. “அங்க ரெஸ்ட் ரூம் இருக்கு. நீ ரெஃப்ரஷ் ஆகிட்டு வா சாப்பிடலாம். நீ சாப்பிட்டே நாலு நாளாச்சு.. ஜூசும் பாலும் மட்டும்தான் போயிருக்கு..” என பேச்சை மாற்ற,
“ஹான்.. சரி.” என்றவள் சட்டென நின்று, “வேற ட்ரஸ் இருக்குமா? இது எனக்கு வேண்டாம் உவ்வே..” என முகத்தைச் சுருக்க…
“என்னம்மா இப்படி சொல்லிட்ட? நைட்டிதான் பெண்களோட ஆதர்ச உடைன்னு அறிவிச்சிருக்காங்க.. நீ என்னடான்னா முகத்தைச் சுழிக்கிற..” என சிரித்தபடியே கேட்க,
“எல்லாருக்கும் ஏன் பிடிக்குதோ தெரியல. ஆனா எனக்கு பிடிக்காது. என் அம்மா இதெல்லாம் அலோவ் பண்ண மாட்டாங்க. ட்ராக் பேன்ட், டி ஷர்ட் போல இருக்கா..?” என தன் முட்டைக்கண்ணை விரித்து பாவம் போல கேட்க, அந்த விரிந்த விழிகளில் விழுந்து எழ முடியாமல் தத்தளித்துப் போனான் ஆரியன்.
ஆரியனின் பார்வையில் “என்ன சார் நீங்க பட்டிக்காட்டான் முட்டாய்கடையை பார்க்குற மாதிரி வெறிச்சு பார்க்குறீங்க.. இருந்தா இருக்குன்னு சொல்லுங்க. இல்லன்னா இல்லன்னு சொல்லுங்க.. அதுக்கு ஏன் இப்படி ஒரு லுக்கு..” என மீண்டும் வாயடிக்க ஆரம்பிக்க,
“இப்போ இங்க என்னோட ட்ராக் டிசர்ட் தான் இருக்கு. அது கண்டிப்பா உனக்கு பத்தாது..” என்றவன், “என்னோட டிசர்டும் ஷார்ட்சும் போட்டுக்கோ.. ஓரளவுக்கு உனக்கு மேனேஜபிலா இருக்கும்..” என்றவன், தன் அறைக்குச் சென்று இருப்பதிலேயே சிறிதாக இருந்த டிசர்டையும் ஷார்ட்சையும் கொண்டு வந்து கொடுத்தான்.
அதை வாங்கியவள் குளியலறைக்கு செல்ல நடக்க, அவளால் முடியவில்லை. நான்கு நாட்களாக மயக்கத்திலே இருந்தது. எழுந்து நின்றதும் தலை கிறுகிறுத்தது, தள்ளாடியபடி ஓரளவுக்கு நடந்தவளை வந்து பிடித்த ஆரியன், கைத்தாங்களாவே சென்று குளியலறையில் விட்டான்.
“உன்னால முடியுமா? இல்ல மெயிடை வரச் சொல்லவா.?” என தவிப்பாக கேட்க,
“நான் பார்த்துக்குறேன் சார்..” வேலை முடித்து வெளியில் வர பதினைந்து நிமிடங்களாகியிருந்தது. அதற்குள் பத்து முறை “மகி நீ ஓக்கேதான..” என கேட்டுவிட்டான்.
‘இப்போ இவனுக்கு என்னதான் வேணுமாம்.. நொய்யி நொய்யினுட்டு… ஒரு பாத்ரூம் கூட நிம்மதியா யூஸ் பண்ண விடமாட்டானா?’ என பல்லைக் கடித்தவள், கடுப்பாக “தூக்கம் வருது, இங்கேயே தூங்குறேன் சார்..” என ஏரிச்சலாக கூற,
“ஸாரி சாரி.. சீக்கிரம் வா..” என்றதும், “ம்ம..” என அமைதியாகி வெளியில் வந்தாள் மகிழினி.
வெளியில் வந்த மகிழினியைப் பார்த்ததும் பக்கென்று சிரித்துவிட்டான் ஆரியன்.
“வேண்டாம்.. நானே செம்ம கடுப்புல இருக்கேன்.. நீங்க வேற சிரிச்சு காண்டாக்காதீங்க.. என்ன சார் ட்ரெஸ் இது.. எதுக்கு இப்படி உடம்பை வளர்த்து வச்சிருக்கீங்க..” என தான் அணிந்திருந்த உடையைக் காட்டி எரிச்சலாக கேட்டுவிட்டு, ஒருபக்கம் சரிந்து விழுந்த டிசர்டின் கைப்பகுதியை ஏற்றிவிட, மற்றொரு பக்கம் சரிந்து விழுந்தது.
அதில் மேலும் சிரித்தவன், “நல்ல வேலை சார்ட்ஸ்ல ரோப் இருந்தது.. இல்லைன்னா..” என முடிக்கும் முன்னே “டேய்..” என சத்தமாக கத்தியிருந்தாள் மகிழினி.
“ஓக்கே ஓக்கே.. நீ ரிலாக்ஸ் ஆகிட்டு வா.. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்..” என சிரிப்பை அடக்கியபடியே வெளியில் சென்றுவிட,
“பக்கிப்பய.. பொசுக்குன்னு எப்படி சொல்லிட்டான் பாரு… அவனும் அவன் மூஞ்சும்.. ச்சே..” என அவன் சொன்னதை மீண்டும் யோசித்துப் பார்த்தவள் ஷார்ட்சை இறுக்கிப் பிடித்தபடி கட்டிலில் அமர்ந்துவிட்டாள்.
‘அய்யோ ஈஸ்வரா இப்போ எப்படி அவன் மூஞ்சில முழிக்கிறது.. அவ் வெக்கமே இல்லாம பேசிட்டு போய்ட்டானே.. இதுல டயப்பர் எல்லாம் போட்டு விட்டுருக்காய்ங்க.. என்ன கன்ட்ராவீயோ.. அடியே மகி.. சீக்கிரம் ஆகனை வரச்சொல்லி ஓடிரு.. இவன் வேற ஒரு மார்க்கமா இருக்கான்..’ என தனக்குள்ளே புலம்பி, ஒருவழியாக மனதை சமன்செய்து மெல்ல அறையை விட்டு வெளியில் வர, அங்கு இவள் நினைத்து பயந்தது போல ஆரியன் இல்லை.
“வா பாப்பா.. டாக்டருக்கு போன் வந்துடுச்சு.. பேசிட்டு வர ளேட்டாகுமாம். நீங்க சாப்பிட்டு இந்த மாத்திரையை போடனுமாம்..” என கூற, ‘ஷப்பா.’ என பெருமூச்சு விட்டு அமர்ந்தாள் இருக்கையில்.
“நாலு நாளா சாப்பிடலயில்ல பாப்பா.. அதனால காரம் வேண்டாம்னு இடியாப்பமும் தேங்காய்பாலும் வச்சேன். இட்லியும் இருக்கு, ஆப்பமும் இருக்கு.. ஆனா தேங்காய் பால் வச்சு சாப்பிடு..” என கூற, அவளுக்குமே இப்போது லைட்டான உணவுகளே சாப்பிட வேண்டும் என தோன்ற ஆப்பமும் தேங்காய்பாலும் எடுத்துக் கொண்டாள்.
“நீங்க எந்த ஊருக்கா..? இங்கதான் வேலை செய்றீங்களா? உங்க பேர் என்னக்கா..?” என ஆப்பத்தை உள்ளே தள்ளிக்கொண்டே கேட்க,
“பாப்பா பொறுமையா கேளு.. சாப்பிடும் போது இப்படி வரிசையா பேசாதே புரை ஏறிடும்..” என கூறி, “நான் விழுப்புரம் பக்கம் பாப்பா.. ஏஜென்சி மூலமா வீட்டு வேலைக்கு வந்துருக்கேன். என் பேரு பூங்கோதை..” என அவளின் எல்லா கேள்விக்கும் பதில் கூற,
“ஓ சரிக்கா… நீங்க இந்த ஊருன்னு நினைச்சேன் க்கா..” என்றவள், அடுத்து ஒரு இடியாப்பத்தோடு போதும் என்றுவிட்டாள்.
“உடனே நல்லா சாப்பிட முடியாதுதானே பாப்பா. வயிறு ஏத்துக்கனுமே..” என்ற பூங்கோதை, “பத்து நிமிசம் கழிச்சு மாத்திரையை மறக்காம போட்டுடு பாப்பா.. நான் பால் எடுத்துட்டு வரேன்..” என மகிழினியை அறைக்கு அனுப்பிவிட்டு, ஆரியனின் முன் நின்றார்.
“சார்.. அந்த பாப்பா சாப்பிட்டாங்க. மாத்திரையும் போட சொல்லிட்டேன்..” என்றதும்,
“பால் கொண்டு போய் குடுக்கும் போது மறக்காம, செக் பண்ணிடுங்க க்கா.. அவ மாத்திரை சாப்பிடலன்னா பிரச்சினை ஆகிடும். அப்புறம் அகி டென்சன் ஆக்கிடுவா.. பார்த்துக்கோங்க..” என அனுப்பி வைக்க, ஆரியன் சொன்னது போலவே பத்து நிமிசத்தில் பாலைக் கொடுத்து, மாத்திரை சாப்பிட்டாளா என செக் செய்து, சாப்பிட்டு விட்டாள் என உறுதி செய்து, அதை ஆரியனிடமும் தெரியப்படுத்திவிட்டாள் பூங்கோதை.
பூங்கோதை சென்றபிறகு அந்த அறைக்கு ஆரியன் வர, மீண்டும் மயக்கத்திற்கு சென்றிருந்தாள் மகிழினி.
மகிழினியை இப்படி பார்க்க ஆரியனால் முடியவில்லை. உள்ளுக்குள் ஏதோ உடைவது போல உணர்ந்தான். தன் உடலே பாரம் என்பது போல் அவளுக்கு அருகில் கட்டிலில் அமர்ந்தவன் “ஸாரி மகி.. எங்க திட்டத்துக்கு உன்னை நாங்க யூஸ் பண்ணியிருக்கக்கூடாது தான். ஆனா அகானாவோட காயம் ரொம்ப ஆழம். அந்த காயத்துக்கு நீ ஒரு சின்ன மருந்து அவ்ளோதான். உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தாம, நீ எப்படி எங்கிட்ட வந்தியோ அதை மாதிரி உன்னை திருப்பி அனுப்பிடுறோம்.. ஐம் பிராமிஸ் யூ..” என அவள் தலையை வருடியபடியே வேதனையான குரலில் கூறிக் கொண்டிருந்தான் ஆரியன்.
அதேநேரம் அகானாவின் முன் நின்றிருந்தார் இன்ஸ்பெக்டர் உதய்.. அவரை அமர வைத்துவிட்டு “சொல்லுங்க உதய்..?” என்றதும்,
“மேடம்..” என்றவர் “நாங்க எவ்ளோ முறை ரெயிடுக்கு போயிருக்கோம் மேடம்.. ஆனா நாங்க வரோம்னு தெரிஞ்சு உடனே இடத்தை மாத்திடுறாங்க. அவங்க ஆளுங்களே சப்போர்ட் செஞ்சி நம்மளை திசை திருப்பிடுறாங்க மேடம்.. பலமுறை அப்ப்படி போய் பிரச்சினையாகிதான் வந்துருக்கோம். இனி இந்த மாதிரி இல்லாம கவனமா ஹேன்டில் பண்றேன் மேம்..” என்று நேராக கூற,
“இதுல உங்க தப்பு இல்லன்ன சொல்ல வர்ரீங்களா?” என நிதானமாக கேட்க,
“நோ மேம் நான் அந்த மீனிங்க்ல சொல்ல வரல.. எனக்கு முன்னாடி இருந்தவங்க எல்லாருமே அதுக்கு ஃபுல் சப்போர்ட் கொடுத்துருக்காங்க. நான் ஆரம்பத்துல முடியாதுனு சொன்னப்போ.. அந்த சீனியர் ஆஃபிசர்சே என்னை ஓக்கே சொல்ல வச்சாங்க.. நான் என்ன செய்யட்டும் மேம்..” என்றான் சற்று குற்றவுணர்ச்சியாக.
“ஓகே.. இனி உடனே எனக்கு மெசேஜ் ஃபார்வேட் பண்ணுங்க. ஐ வில் ஹேன்டில் திஸ்..” என கூறிவிட்டு, ‘போகலாம்’ என்பது போல் பார்க்க, உதய் கிளம்பாமல் அகானாவையே பார்த்தார்.
அந்த பார்வையில் ஏதோ சொல்ல வருகிறான் என்று புரிந்த அகானா “என்ன உதய் எங்கிட்ட எதுவும் சொல்லனுமா..?” என்று யோசனையாக கேட்க,
“எஸ் மேம்..” என்ற இன்ஸ்பெக்டர் “அந்த மணல் கொள்ளை கேஸ்ல பிடிச்ச மூனு ட்ராக்டரையும் வந்து எடுத்துட்டு போயிருக்காங்க மேம். ப்ராப்பரா எந்த பேப்பரும் சப்மிட் பண்ணல.. RDO ஆஃபிஸ்ல கேட்டா, என்ன கேட்கனும்னாலும் நீங்க ‘துரைப்பாண்டி’ அண்ணனை கேளுங்கன்னு சொல்றாங்க..” என்றவனின் குரலில் கோபம் அப்பட்டமாக தெரிந்தது.
பின்னே இருக்கத்தானே செய்யும்.. இரவெல்லாம் விழித்து பல நாட்களாக போலிசிற்கே தண்ணி காட்டிய மணற் கொள்ளை ஆட்களை உயிரை பணையம் வைத்து பிடித்திருந்தால், அடுத்தநாளே அவர்களை விடுதலை செய்ததும் இல்லாமல், வண்டிகளையும் கொடுத்திருந்தனர். அந்த இடத்தில் இரண்டு கான்ஸ்டபிள்களுக்கு நல்ல அடியும் கூட.. இப்போது அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர். அவர்களின் உழைப்பே வீணாகிவிட்டதே என்ற கோபம்தான் உதயை இப்படி பேச வைத்தது.
“எனக்கும் நியூஸ் வந்தது உதய்.. இதை நான் விசாரிக்கிறேன்.. அன்ட் நீங்களும் கவனமா இருங்க. இப்போ அவங்க டார்கெட் நீங்களா கூட இருக்கலாம். ஒரு டூ வீக்ஸ் எந்த ரெய்டும் வேண்டாம். நான் சொல்லும் போது செய்ங்க.. அதுக்குள்ள நமக்குத் தேவையான டீடைல்ஸை கவனமா கலெக்ட் பண்ணுங்க..” என்றவள், “அந்த ஸ்கூல்ல ஒரு நாள் ரெய்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க உதய். அங்க ட்ரக் அதிகமா சப்ளை ஆகுதாம்.” என்றாள் அடுத்த வேலையாக.
“ஓக்கே மேம்.. கவர்ட்மென்ட் ஸ்கூல் பேரைக் கெடுக்கவே இந்தமாதிரி பண்றாங்க மேம். எங்கிட்ட சில டீடைல்ஸ் இருக்கு. நான் கண்ணன் சாருக்கு அனுப்புறேன் மேம். நீங்க டைம் கிடைக்கும் போது பாருங்க..” என்றவன் வணக்கம் சொல்லி விடைபெற, அகானாவின் போன் ஒலி எழுப்பியது.
புது எண்ணாக இருக்க, யோசித்தபடியே எடுத்து காதில் வைத்து ‘ஹலோ’ என்பதற்குள் “ஏய் உன்னை நான் சும்மா விடமாட்டேண்டி.. முளைச்சு மூனு இலை விட்டுட்டா நீ பெரிய ஆளா? 15 வருசமா ராணி மாதிரி இருந்த வீட்டுல என்னை அநாதை மாதிரி நிக்க வச்சிட்ட இல்ல.. உன் அம்மா மாதிரி உன்னையும் ஓட ஓட விரட்டாம விடமாட்டேன்டி..” என கத்த,
பேசும் போதே தெரிந்து விட்டது அது மைதிலிதான் என.. கோபமெல்லாம் வரவில்லை. சிரிப்புத்தான் வந்தது.. ‘இருக்குற பிரச்சினைல இந்த கௌசிக் வேற’ என நினைத்தவள், “அப்போ ரொம்ப நல்லாத போச்சு.. ட்ரான்ஸ்ஃபர் கேட்டு நான் அலைய வேண்டாம் அப்படித்தானே.. சீக்கிரம் நல்ல செய்தியா சொல்லுங்க… உங்க அப்டேட்டுக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..” என சிரிக்க,
“ஏய்.. ஏய்..” என மைதிலி கத்த, “மேடம்.. உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணுங்க.. ஐம் ஆல்வேய்ஸ் வெயிட்டிங்க்.. ஓக்கே..” என போனை வைத்தவளின் முகம் கோபத்தில் ரத்தமாக சிவந்திருந்தது.
தனக்குத்தானே புலம்பியபடி நடந்து கொண்டிருந்த ஆரியனை லூசாப்பா நீ என்பது போல் பார்த்து கொண்டிருந்த மகி பொறுமையிழந்து “சார்.. நீங்க ஏன் இப்படி தனியா புலம்பிக்கிட்டு இருக்கீங்க. என்ன பிரச்சினை? எங்கிட்ட சொல்லுங்க.. நான் சால்வ் பண்ணி வைக்கிறேன்..” என கேட்க,
“என் பிரச்சினையே நீதான்மா…” என விரக்தி குரலில் புலம்பியவன், “நீ எப்பவும் இப்படித்தானா? இல்ல இப்படித்தான் எப்பவுமா?” என சீரியசாக கேட்க,
“ஸார் என்ன என்னை பைத்தியம்னு சொல்றீங்களா? தனியா புலம்பிக்கிட்டு இருக்க நீங்கதான் பைத்தியம்.. பாவம் ஏதோ பிரச்சினையில இருக்காரே, சொல்யூஷன் சொல்லுவோம்னு நினைச்சு கேட்டா ஓவரா பேசுறீங்க..” என தன் முட்டக்கண்ணை விரிக்க,
“யாரு.. நானு தனியா புலம்பிக்கிட்டு இருந்தேன் எல்லாம் என் நேரம்தான். தனியா புலம்ப விட்டதே நீதான..” என எரிச்சலானவன், “நாலு நாளா இப்படி என்கூட தனியா இருக்கியே உன்னை வீட்டுல தேடமாட்டாங்க. எவ்ளோ கவலைப்படுவாங்க உன் பேரன்ஸ்.. அதையெல்லாம் யோசிக்காம நீ பாட்டுக்கு ஜாலியா இருக்கியே..” என அவளிடம் எகிற,
“அப்போ நிஜமாவே நாலு நாள்தானா? நீங்க என்னை மிரட்டத்தான் அப்படி சொல்றீங்க நினைச்சேன்.. அய்யோ என் திங்க்ஸ் எதுவும் உங்ககிட்ட இல்லையா? அதை வச்சு என் வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்ணிருக்கலாமே.. எல்லாரும் பயந்துருப்பாங்க. சும்மாவே இந்த மைத்தி அத்தை என்னை கரிச்சு கொட்டும். இப்போ இதெல்லாம் தெரிஞ்சா அவ்ளோதான்..” என பதட்டமாக பேசி அழுகைக்கு செல்ல,
“நல்லா நினைச்ச போ… நீ ஆக்சிடென்ட் ஆகி விழும்போது உன் பேக் எல்லாம் காணோம். மொபைலும் இல்ல.. உன் ஐடென்டி எதுவும் இல்லாம எப்படி உங்க வீட்டுக்கு சொல்ல, போலிஸ்ல சொல்லலாம்னா என் சிஸ்டர் வேண்டாம், வெயிட் பண்ணுவோம்னு சொன்னா..” என்றதும்,
“ஏன்..? ஏன் சொல்லல..? சொல்லிருந்தா எப்படியும் எங்க வீட்டுக்கு தகவல் போயிருக்குமே.. ஆகனும் வந்துருப்பான்.. ஏன் உங்க சிஸ்டர் அப்படி சொன்னாங்க..?” என மூச்சு வாங்க கேள்விகளை அடுக்கினாள் மகிழினி.
“ம்ம்ம் நீ ஒரு பொண்ணு.. உன்னை போலிஸ்கிட்ட தூக்கி கொடுத்துட்டு பயந்துட்டே இருக்க முடியாது. அதோட எல்லாரையும் நம்பி உன்னை மாதிரி ஒரு அழகான பொண்ணை ஒப்படைக்கவும் முடியாது ரைட்..” என அழுத்தமாக சொல்ல,
“ஸாரி.. நான் தப்பா மீன் பண்ணி கேட்கல. எப்பவும் அண்ணாவும், அப்பாவும் என்னை கவனமா இருக்க சொல்லுவாங்க. அதுதான்..” என வார்த்தைகளிய மென்று விழுங்க,
“என்ன இவ்ளோ நேரம் பட்டாசு மாதிரி படபடவென பேச்சு வந்தது.. இப்போ சத்தம் உள்ள போகுது..” என சட்டென இயல்பானவன்.. “அங்க ரெஸ்ட் ரூம் இருக்கு. நீ ரெஃப்ரஷ் ஆகிட்டு வா சாப்பிடலாம். நீ சாப்பிட்டே நாலு நாளாச்சு.. ஜூசும் பாலும் மட்டும்தான் போயிருக்கு..” என பேச்சை மாற்ற,
“ஹான்.. சரி.” என்றவள் சட்டென நின்று, “வேற ட்ரஸ் இருக்குமா? இது எனக்கு வேண்டாம் உவ்வே..” என முகத்தைச் சுருக்க…
“என்னம்மா இப்படி சொல்லிட்ட? நைட்டிதான் பெண்களோட ஆதர்ச உடைன்னு அறிவிச்சிருக்காங்க.. நீ என்னடான்னா முகத்தைச் சுழிக்கிற..” என சிரித்தபடியே கேட்க,
“எல்லாருக்கும் ஏன் பிடிக்குதோ தெரியல. ஆனா எனக்கு பிடிக்காது. என் அம்மா இதெல்லாம் அலோவ் பண்ண மாட்டாங்க. ட்ராக் பேன்ட், டி ஷர்ட் போல இருக்கா..?” என தன் முட்டைக்கண்ணை விரித்து பாவம் போல கேட்க, அந்த விரிந்த விழிகளில் விழுந்து எழ முடியாமல் தத்தளித்துப் போனான் ஆரியன்.
ஆரியனின் பார்வையில் “என்ன சார் நீங்க பட்டிக்காட்டான் முட்டாய்கடையை பார்க்குற மாதிரி வெறிச்சு பார்க்குறீங்க.. இருந்தா இருக்குன்னு சொல்லுங்க. இல்லன்னா இல்லன்னு சொல்லுங்க.. அதுக்கு ஏன் இப்படி ஒரு லுக்கு..” என மீண்டும் வாயடிக்க ஆரம்பிக்க,
“இப்போ இங்க என்னோட ட்ராக் டிசர்ட் தான் இருக்கு. அது கண்டிப்பா உனக்கு பத்தாது..” என்றவன், “என்னோட டிசர்டும் ஷார்ட்சும் போட்டுக்கோ.. ஓரளவுக்கு உனக்கு மேனேஜபிலா இருக்கும்..” என்றவன், தன் அறைக்குச் சென்று இருப்பதிலேயே சிறிதாக இருந்த டிசர்டையும் ஷார்ட்சையும் கொண்டு வந்து கொடுத்தான்.
அதை வாங்கியவள் குளியலறைக்கு செல்ல நடக்க, அவளால் முடியவில்லை. நான்கு நாட்களாக மயக்கத்திலே இருந்தது. எழுந்து நின்றதும் தலை கிறுகிறுத்தது, தள்ளாடியபடி ஓரளவுக்கு நடந்தவளை வந்து பிடித்த ஆரியன், கைத்தாங்களாவே சென்று குளியலறையில் விட்டான்.
“உன்னால முடியுமா? இல்ல மெயிடை வரச் சொல்லவா.?” என தவிப்பாக கேட்க,
“நான் பார்த்துக்குறேன் சார்..” வேலை முடித்து வெளியில் வர பதினைந்து நிமிடங்களாகியிருந்தது. அதற்குள் பத்து முறை “மகி நீ ஓக்கேதான..” என கேட்டுவிட்டான்.
‘இப்போ இவனுக்கு என்னதான் வேணுமாம்.. நொய்யி நொய்யினுட்டு… ஒரு பாத்ரூம் கூட நிம்மதியா யூஸ் பண்ண விடமாட்டானா?’ என பல்லைக் கடித்தவள், கடுப்பாக “தூக்கம் வருது, இங்கேயே தூங்குறேன் சார்..” என ஏரிச்சலாக கூற,
“ஸாரி சாரி.. சீக்கிரம் வா..” என்றதும், “ம்ம..” என அமைதியாகி வெளியில் வந்தாள் மகிழினி.
வெளியில் வந்த மகிழினியைப் பார்த்ததும் பக்கென்று சிரித்துவிட்டான் ஆரியன்.
“வேண்டாம்.. நானே செம்ம கடுப்புல இருக்கேன்.. நீங்க வேற சிரிச்சு காண்டாக்காதீங்க.. என்ன சார் ட்ரெஸ் இது.. எதுக்கு இப்படி உடம்பை வளர்த்து வச்சிருக்கீங்க..” என தான் அணிந்திருந்த உடையைக் காட்டி எரிச்சலாக கேட்டுவிட்டு, ஒருபக்கம் சரிந்து விழுந்த டிசர்டின் கைப்பகுதியை ஏற்றிவிட, மற்றொரு பக்கம் சரிந்து விழுந்தது.
அதில் மேலும் சிரித்தவன், “நல்ல வேலை சார்ட்ஸ்ல ரோப் இருந்தது.. இல்லைன்னா..” என முடிக்கும் முன்னே “டேய்..” என சத்தமாக கத்தியிருந்தாள் மகிழினி.
“ஓக்கே ஓக்கே.. நீ ரிலாக்ஸ் ஆகிட்டு வா.. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்..” என சிரிப்பை அடக்கியபடியே வெளியில் சென்றுவிட,
“பக்கிப்பய.. பொசுக்குன்னு எப்படி சொல்லிட்டான் பாரு… அவனும் அவன் மூஞ்சும்.. ச்சே..” என அவன் சொன்னதை மீண்டும் யோசித்துப் பார்த்தவள் ஷார்ட்சை இறுக்கிப் பிடித்தபடி கட்டிலில் அமர்ந்துவிட்டாள்.
‘அய்யோ ஈஸ்வரா இப்போ எப்படி அவன் மூஞ்சில முழிக்கிறது.. அவ் வெக்கமே இல்லாம பேசிட்டு போய்ட்டானே.. இதுல டயப்பர் எல்லாம் போட்டு விட்டுருக்காய்ங்க.. என்ன கன்ட்ராவீயோ.. அடியே மகி.. சீக்கிரம் ஆகனை வரச்சொல்லி ஓடிரு.. இவன் வேற ஒரு மார்க்கமா இருக்கான்..’ என தனக்குள்ளே புலம்பி, ஒருவழியாக மனதை சமன்செய்து மெல்ல அறையை விட்டு வெளியில் வர, அங்கு இவள் நினைத்து பயந்தது போல ஆரியன் இல்லை.
“வா பாப்பா.. டாக்டருக்கு போன் வந்துடுச்சு.. பேசிட்டு வர ளேட்டாகுமாம். நீங்க சாப்பிட்டு இந்த மாத்திரையை போடனுமாம்..” என கூற, ‘ஷப்பா.’ என பெருமூச்சு விட்டு அமர்ந்தாள் இருக்கையில்.
“நாலு நாளா சாப்பிடலயில்ல பாப்பா.. அதனால காரம் வேண்டாம்னு இடியாப்பமும் தேங்காய்பாலும் வச்சேன். இட்லியும் இருக்கு, ஆப்பமும் இருக்கு.. ஆனா தேங்காய் பால் வச்சு சாப்பிடு..” என கூற, அவளுக்குமே இப்போது லைட்டான உணவுகளே சாப்பிட வேண்டும் என தோன்ற ஆப்பமும் தேங்காய்பாலும் எடுத்துக் கொண்டாள்.
“நீங்க எந்த ஊருக்கா..? இங்கதான் வேலை செய்றீங்களா? உங்க பேர் என்னக்கா..?” என ஆப்பத்தை உள்ளே தள்ளிக்கொண்டே கேட்க,
“பாப்பா பொறுமையா கேளு.. சாப்பிடும் போது இப்படி வரிசையா பேசாதே புரை ஏறிடும்..” என கூறி, “நான் விழுப்புரம் பக்கம் பாப்பா.. ஏஜென்சி மூலமா வீட்டு வேலைக்கு வந்துருக்கேன். என் பேரு பூங்கோதை..” என அவளின் எல்லா கேள்விக்கும் பதில் கூற,
“ஓ சரிக்கா… நீங்க இந்த ஊருன்னு நினைச்சேன் க்கா..” என்றவள், அடுத்து ஒரு இடியாப்பத்தோடு போதும் என்றுவிட்டாள்.
“உடனே நல்லா சாப்பிட முடியாதுதானே பாப்பா. வயிறு ஏத்துக்கனுமே..” என்ற பூங்கோதை, “பத்து நிமிசம் கழிச்சு மாத்திரையை மறக்காம போட்டுடு பாப்பா.. நான் பால் எடுத்துட்டு வரேன்..” என மகிழினியை அறைக்கு அனுப்பிவிட்டு, ஆரியனின் முன் நின்றார்.
“சார்.. அந்த பாப்பா சாப்பிட்டாங்க. மாத்திரையும் போட சொல்லிட்டேன்..” என்றதும்,
“பால் கொண்டு போய் குடுக்கும் போது மறக்காம, செக் பண்ணிடுங்க க்கா.. அவ மாத்திரை சாப்பிடலன்னா பிரச்சினை ஆகிடும். அப்புறம் அகி டென்சன் ஆக்கிடுவா.. பார்த்துக்கோங்க..” என அனுப்பி வைக்க, ஆரியன் சொன்னது போலவே பத்து நிமிசத்தில் பாலைக் கொடுத்து, மாத்திரை சாப்பிட்டாளா என செக் செய்து, சாப்பிட்டு விட்டாள் என உறுதி செய்து, அதை ஆரியனிடமும் தெரியப்படுத்திவிட்டாள் பூங்கோதை.
பூங்கோதை சென்றபிறகு அந்த அறைக்கு ஆரியன் வர, மீண்டும் மயக்கத்திற்கு சென்றிருந்தாள் மகிழினி.
மகிழினியை இப்படி பார்க்க ஆரியனால் முடியவில்லை. உள்ளுக்குள் ஏதோ உடைவது போல உணர்ந்தான். தன் உடலே பாரம் என்பது போல் அவளுக்கு அருகில் கட்டிலில் அமர்ந்தவன் “ஸாரி மகி.. எங்க திட்டத்துக்கு உன்னை நாங்க யூஸ் பண்ணியிருக்கக்கூடாது தான். ஆனா அகானாவோட காயம் ரொம்ப ஆழம். அந்த காயத்துக்கு நீ ஒரு சின்ன மருந்து அவ்ளோதான். உன்னை ரொம்ப கஷ்டப்படுத்தாம, நீ எப்படி எங்கிட்ட வந்தியோ அதை மாதிரி உன்னை திருப்பி அனுப்பிடுறோம்.. ஐம் பிராமிஸ் யூ..” என அவள் தலையை வருடியபடியே வேதனையான குரலில் கூறிக் கொண்டிருந்தான் ஆரியன்.
அதேநேரம் அகானாவின் முன் நின்றிருந்தார் இன்ஸ்பெக்டர் உதய்.. அவரை அமர வைத்துவிட்டு “சொல்லுங்க உதய்..?” என்றதும்,
“மேடம்..” என்றவர் “நாங்க எவ்ளோ முறை ரெயிடுக்கு போயிருக்கோம் மேடம்.. ஆனா நாங்க வரோம்னு தெரிஞ்சு உடனே இடத்தை மாத்திடுறாங்க. அவங்க ஆளுங்களே சப்போர்ட் செஞ்சி நம்மளை திசை திருப்பிடுறாங்க மேடம்.. பலமுறை அப்ப்படி போய் பிரச்சினையாகிதான் வந்துருக்கோம். இனி இந்த மாதிரி இல்லாம கவனமா ஹேன்டில் பண்றேன் மேம்..” என்று நேராக கூற,
“இதுல உங்க தப்பு இல்லன்ன சொல்ல வர்ரீங்களா?” என நிதானமாக கேட்க,
“நோ மேம் நான் அந்த மீனிங்க்ல சொல்ல வரல.. எனக்கு முன்னாடி இருந்தவங்க எல்லாருமே அதுக்கு ஃபுல் சப்போர்ட் கொடுத்துருக்காங்க. நான் ஆரம்பத்துல முடியாதுனு சொன்னப்போ.. அந்த சீனியர் ஆஃபிசர்சே என்னை ஓக்கே சொல்ல வச்சாங்க.. நான் என்ன செய்யட்டும் மேம்..” என்றான் சற்று குற்றவுணர்ச்சியாக.
“ஓகே.. இனி உடனே எனக்கு மெசேஜ் ஃபார்வேட் பண்ணுங்க. ஐ வில் ஹேன்டில் திஸ்..” என கூறிவிட்டு, ‘போகலாம்’ என்பது போல் பார்க்க, உதய் கிளம்பாமல் அகானாவையே பார்த்தார்.
அந்த பார்வையில் ஏதோ சொல்ல வருகிறான் என்று புரிந்த அகானா “என்ன உதய் எங்கிட்ட எதுவும் சொல்லனுமா..?” என்று யோசனையாக கேட்க,
“எஸ் மேம்..” என்ற இன்ஸ்பெக்டர் “அந்த மணல் கொள்ளை கேஸ்ல பிடிச்ச மூனு ட்ராக்டரையும் வந்து எடுத்துட்டு போயிருக்காங்க மேம். ப்ராப்பரா எந்த பேப்பரும் சப்மிட் பண்ணல.. RDO ஆஃபிஸ்ல கேட்டா, என்ன கேட்கனும்னாலும் நீங்க ‘துரைப்பாண்டி’ அண்ணனை கேளுங்கன்னு சொல்றாங்க..” என்றவனின் குரலில் கோபம் அப்பட்டமாக தெரிந்தது.
பின்னே இருக்கத்தானே செய்யும்.. இரவெல்லாம் விழித்து பல நாட்களாக போலிசிற்கே தண்ணி காட்டிய மணற் கொள்ளை ஆட்களை உயிரை பணையம் வைத்து பிடித்திருந்தால், அடுத்தநாளே அவர்களை விடுதலை செய்ததும் இல்லாமல், வண்டிகளையும் கொடுத்திருந்தனர். அந்த இடத்தில் இரண்டு கான்ஸ்டபிள்களுக்கு நல்ல அடியும் கூட.. இப்போது அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர். அவர்களின் உழைப்பே வீணாகிவிட்டதே என்ற கோபம்தான் உதயை இப்படி பேச வைத்தது.
“எனக்கும் நியூஸ் வந்தது உதய்.. இதை நான் விசாரிக்கிறேன்.. அன்ட் நீங்களும் கவனமா இருங்க. இப்போ அவங்க டார்கெட் நீங்களா கூட இருக்கலாம். ஒரு டூ வீக்ஸ் எந்த ரெய்டும் வேண்டாம். நான் சொல்லும் போது செய்ங்க.. அதுக்குள்ள நமக்குத் தேவையான டீடைல்ஸை கவனமா கலெக்ட் பண்ணுங்க..” என்றவள், “அந்த ஸ்கூல்ல ஒரு நாள் ரெய்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க உதய். அங்க ட்ரக் அதிகமா சப்ளை ஆகுதாம்.” என்றாள் அடுத்த வேலையாக.
“ஓக்கே மேம்.. கவர்ட்மென்ட் ஸ்கூல் பேரைக் கெடுக்கவே இந்தமாதிரி பண்றாங்க மேம். எங்கிட்ட சில டீடைல்ஸ் இருக்கு. நான் கண்ணன் சாருக்கு அனுப்புறேன் மேம். நீங்க டைம் கிடைக்கும் போது பாருங்க..” என்றவன் வணக்கம் சொல்லி விடைபெற, அகானாவின் போன் ஒலி எழுப்பியது.
புது எண்ணாக இருக்க, யோசித்தபடியே எடுத்து காதில் வைத்து ‘ஹலோ’ என்பதற்குள் “ஏய் உன்னை நான் சும்மா விடமாட்டேண்டி.. முளைச்சு மூனு இலை விட்டுட்டா நீ பெரிய ஆளா? 15 வருசமா ராணி மாதிரி இருந்த வீட்டுல என்னை அநாதை மாதிரி நிக்க வச்சிட்ட இல்ல.. உன் அம்மா மாதிரி உன்னையும் ஓட ஓட விரட்டாம விடமாட்டேன்டி..” என கத்த,
பேசும் போதே தெரிந்து விட்டது அது மைதிலிதான் என.. கோபமெல்லாம் வரவில்லை. சிரிப்புத்தான் வந்தது.. ‘இருக்குற பிரச்சினைல இந்த கௌசிக் வேற’ என நினைத்தவள், “அப்போ ரொம்ப நல்லாத போச்சு.. ட்ரான்ஸ்ஃபர் கேட்டு நான் அலைய வேண்டாம் அப்படித்தானே.. சீக்கிரம் நல்ல செய்தியா சொல்லுங்க… உங்க அப்டேட்டுக்காக நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..” என சிரிக்க,
“ஏய்.. ஏய்..” என மைதிலி கத்த, “மேடம்.. உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணுங்க.. ஐம் ஆல்வேய்ஸ் வெயிட்டிங்க்.. ஓக்கே..” என போனை வைத்தவளின் முகம் கோபத்தில் ரத்தமாக சிவந்திருந்தது.