• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அ.. ஆ..! - 23

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
அகானா- 23

அகானாவிற்கு அன்றைய பொழுது அத்தோடு முடியவில்லை போல.. ஏற்கனவே ரவி வந்து சென்றதில் ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்தாள்.

‘எப்படி..? எப்படி..? அவர் செய்த துரோகத்த சரியென்று சொல்ல ஒரு காரணத்தை தேடுவார். அப்படியென்றால் அவர் நினைப்பது என்ன? அவர் கூப்பிட்டால் நானும் அம்மாவும் அவரிடம் சென்றுவிடுவோம் என்பதா?

எப்படி அவரால் அப்படி நினைக்க முடியும்? அவர் செய்த தவறின் வீரியம் புரியவில்லையா? ஆம் புரியவில்லைதான்! புரியாமல்தான் பேசுகிறார். புரிய வைத்துவிடலாம். ஏன் அப்படி நினைத்தோம் என்று புரிய வைத்துவிடலாம்.. என்று நினைத்தவளுக்கு அதற்கான திட்டங்கள் மடமடவென மூளைக்குள் உருவாக, அதை செயல்படுத்தும் விதத்தை நொடியில் திட்டமிட்டபின் தான் அவள் மனதின் அலைப்புறுதல் சற்று குறைந்தது.

மஞ்சரி வேறு ஊரிலிருந்து அனைவரும் வந்து விட்டார்கள் என அழைத்துக்கொண்டே இருந்தார். அவளுக்கு இருந்த பிரச்சினையில் வீட்டுக்கு போனால் இவர்களோடு சாதரணமாக பேசி சிரிக்க முடியும் போலும் தோன்றவில்லை.

என்னதான் இன்று மாமான்மார்கள், அத்தைகள் என உறவு கொண்டாடி வந்தாலும், அன்று தன் அன்னையைத் தனியே விட்டவர்கள் தானே என்று அதற்காக மனதில் கோபமும் வருத்தமும் கூடிக்கொண்டே போனது.

இதே கோபத்தோடு அவர்கள் முன் போய் நிற்கவும் பிடிக்கவில்லை. அதனால் அலுவலகத்திலேயே தன் நேரத்தைப் போக்கிக்கொண்டு இருந்தாள்.

கண்ணன் கூட இரண்டு முறை வந்து எட்டிப்பார்த்து விட்டு சென்றுவிட்டார். அகானாவிற்கும் புரிந்தது, அவள் போனை எடுக்கவில்லை என்றதும் மஞ்சரி, கண்ணனுக்கு அழைத்து கேட்டிருப்பார் என்று..

இப்படியான சூழ்நிலைகளை எல்லாம் எப்படி கையாள்வது என ஏற்கனவே பலமுறை யோசித்து, அதற்கு மனதிற்குள்ளேயே ஒத்திகையும் பார்த்திருக்கிறாள்தான். ஆனால் இன்று நடந்த நிகழ்வுகளில் அதெல்லாம் மனதின் அடிக்கு சென்றுவிட்டது.

ஏதோ ஆளில்லா வனாந்தரத்தில் விட்ட சிறு குழந்தையென அவள் மனம் பயத்தில் தவித்து துடித்தது.

தன் பெரியம்மா வீட்டு ஆட்களிடம் அவளுக்கு எந்த மனச் சுணக்கமும் இல்லை. ஆனால் மாமா வீட்டினரிடம் ஆரம்பத்தில் இருந்தே சரியான ஒட்டுதல் இருந்ததில்லை.

அம்மாவின் திருமணம் அதற்கு மிகப்பெரும் காரணம்.. அதனாலே அவர்கள் ஒதுங்கி இருந்தார்கள். பிரச்சினை வந்த பிறகு மொத்தமாகவே தங்களை ஒதுக்கி, அவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். அப்படியானவர்கள் மீது எப்படி பாசம் வரும், அன்பான வார்த்தைகள் வரும்.

‘காலம் கடந்திருக்கிறது! அவர்களின் மனமும் மாறியிருக்கலாம்.. அவர்களும் அம்மாவைத் தேடியிருக்கலாம்.. அவர்களிடம் பேசாமல் உனக்கு எப்படி இதெல்லாம் புரியும். முதலில் அவர்களை எதிர்கொள். அதன்பிறகு உன் முடிவை பரிசீலனை செய்..’ என அவள் தடுமாறும் நேரம் கை கொடுக்கும் அவளின் மனசாட்சி, இப்போதும் கை கொடுக்க, ஒரு பெருமூச்சுடன் அந்த முடிவுக்கு கட்டுப்பட்டு கிளம்ப ஆயத்தமானாள். ஆனாலும் ஒரு சலிப்பு!

மிகவும் சலிப்பாக நேரத்தைப் பார்த்தாள். அது ஆறைக் கடந்து சென்றிருந்தது. இனியும் தாமதிக்க முடியாது, கிளம்பலாம் என்று யோசித்த நேரம் அறைக் கதவு வேகமாகத் திறந்தது. இன்றும் அவனே.! ஆகன்!
வந்தவன் சற்றும் யோசிக்காமல் நேராகச் சென்று அகானாவின் கழுத்தைப் பிடித்திருந்தான்.

“மகி.. எங்கடி.. மகியை எங்க வச்சிருக்க, அவளை என்ன பண்ண..? ஒரு வயசுப் புள்ளையக் கடத்தி வச்சிட்டு வேடிக்கை காட்டுறியே நீயெல்லாம் என்ன பொம்பள.. ச்சே.. உன்னை நினைச்சாலே அருவருப்பா இருக்கு.. எனக்கு உன்னைப் பத்தி ஒன்னும் தேவை இல்லை. நீ என்னமோ பண்ணு, யாரையும் பழிவாங்கு, ஆனா என் வீட்டுப் பொண்ணுங்க மேல கை வைக்கிற வேலையை இன்னையோட நிறுத்திக்கோ.. கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாத ஜென்மம்தானே நீ, உன்கிட்ட அதெல்லாம் எதிர்பார்க்க முடியுமா.? உன் வளர்ப்பு அந்த லட்சனத்துல இருக்கு..” என்றவனின் ஒவ்வொரு வார்த்தையிலும் அவன் கையின் இறுக்கம் கூட மூச்சுக்குத் திணறிக் கொண்டிருந்தாள் அகானா.

அவள் கண்கள் இரண்டும் பிதுங்கி, மூச்சுக்கு ஏங்கும் நிலையைப் பார்த்தும் கூட மனசு இறங்காதவனின் கையை வேகமாகப் பிடித்து தள்ளிவிட்டார் கண்ணன். அவர் தள்ளலில் இரண்டடி பின்னால் சென்றவன் அப்போது தான் அவள் மயங்கி விழுவதை உணர்ந்தான். அதற்குள் கண்ணன் அவளைத் தாங்கி அமரவைத்து தண்ணீர் தெளித்தபடியே “பாப்பா.. பாப்பா..” என எழுப்பிக் கொண்டிருந்தார்.


அவளின் நிலைப் பார்த்தும் கூட ஆகனுக்கு தன் கோபம் குறையவில்லை. அனல் கக்கும் விழிகளோடு அகானாவையே பார்த்தான்.

“உனக்கு இன்னைக்கு ஒரு நாள்தான் டைம். நாளைக்கு மார்னிங்க் மகி எங்கிட்ட இருக்கனும். இல்லைன்னா… ஆஹான்.. இருப்பா.. இருக்கனும்.. அப்படி மட்டும் நீ செய்யல.? இந்த போஸ்டிங்காகா நீ எவ்ளோ எஃபோர்ட் போட்டுருப்ப, அதெல்லாம் ஒரு செகண்ட்ல காலி பண்ணிட்டு போயிடுவேன்.. இனி உன்னோட பழி வாங்குற வேலையெல்லாம் எங்ககிட்ட வச்சுக்காத.. இருக்குற இடம் தெரியாம தொலைச்சிடுவேன் ராஸ்கல்..” என கர்ஜித்தவனின் கருத்த முகமே அவன் கோபத்தை சொன்னது.

ஆகனின் கோபத்தைப் பார்த்த கண்ணன் அரண்டு போய் நிற்க, அகானாவோ ‘எனக்குத் தெரியுமே! நீயும் உன் குடும்பமும் இப்படித்தான்னு எனக்குத் தெரியுமே..! உங்கிட்ட வேற என்ன நான் எதிர்பார்த்திட முடியும். அழிக்க போறியா? உன்னால முடியுமா என்ன.?’ என எகத்தாளாமாக பார்க்க, அந்த பார்வை, அது சொன்ன செய்தி ஆகனுக்கு மேலும் கோபத்தை வர வைத்தது..

“இந்த திமிர்.. இந்த திமிர்தாண்டி..” என ஆகன் முன்னே வர, சரியாக அதே நேரம் உள்ளே வந்தான் ஆரியன். வந்தவன் ஆகனைப் பிடித்துக் கொண்டு “என்ன செஞ்சிட்டு இருக்கீங்க சீனியர்.? இது அவளோட ஆஃபிஸ். அங்க வச்சுத்தான் உங்க கோபத்தையும், ஆத்திரத்தையும் காட்டனுமா.?” என எரிச்சலாக கேட்க,

“விடுடா. விடு என்னை.. எங்கிட்ட பேசாத.. தோ அங்க திமிரா நிக்கிறா பார்.. யாரையும் நிம்மதியா வாழவிடக்கூடாதுனு கங்கனம் கட்டிக்கிட்டு நிக்கிறா பார் அவக்கிட்ட பேசு.. என்னைவிடு..” என்றவன்,

“வயசு பொண்ணை வச்சு விளையாடுறியே உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா..? சொல்லுடி..? இது தெரிஞ்சா நாளைக்கு அவ வாழ்க்கை என்னாகும் தெரியுமா? இதெல்லாம் உனக்குத் தெரியாது.. தெரியவே தெரியாது…” என ஆகன் கத்த,

“ஆமா தெரியாது.. எனக்குத் தெரியவும் வேணாம்.. தெரிய விடாம பண்ணது உங்க அம்மாவும், பாட்டியும்.. இதுல என் தப்பு எங்க இருக்கு..? ஹான்.. என் தப்பு எங்க இருக்கு..?” என அவனுக்கும் மேலே கத்த,

சட்டென ஆகனை விட்ட ஆரியன் வேகமாக அகானாவிடம் வந்து “ம்ச் அகி… டோன்ட் கெட் எமோஸ்னல்.. ஃபீல் ஃப்ரீ..?” என அவள் முதுகை தடவ,

ஆனால் அகானாவோ அவன் கையை பட்டென தட்டிவிட்டு “சொல்லு.. என் தப்பு இதுல எங்க இருக்கு.? உனக்கும் உன் குடும்பத்துல இருக்குறவங்க ரத்தம்தானே ஓடும்.. அதுதான் காதலிச்ச பொண்ணை விட்டுட்டு ஓடி வந்துட்ட..” என ஆத்திரமாக பேசப்பேசவே அகானாவிற்கு மூச்சுத் திணறல் வந்துவிட, அவசரமாக அவளது பேகை தேடி அதிலிருந்த பஃபை எடுத்து அகனாவின் வாயில் வைத்து அழுத்தினான் ஆரியன்.

“நத்திங்க் அகி.. கூல் கூல்..” என அகானாவின் முதுகைத் தடவியபடியே, ஆகனை முறைத்தபடியே தங்கையை சமாதானம் செய்தான் ஆரியன்.

அகானா முதல் முறை மூச்சுத் திணறும் போதே ஆகனுக்கு மனம் அவனை சாடத் தொடங்கிவிட்டது. அதனால்தான் அவளைவிட்டு தூரமாக சென்று நின்றான்.

இப்போது அகானாவின் பேச்சும், மூச்சுத் திணறலும், ஆரியனின் செய்கையும் அவனுக்கு பயத்தைக் கொடுக்க, “என்ன? என்ன அவளுக்கு.? ஏன் பஃப் யூஸ் பண்றா? எப்போ இருந்து எடுக்குறா..?” என பதட்டமாக கேட்க,

“போக சொல்லு ஆரி.. அவங்களை இங்க இருந்து போக சொல்லு..” என மீண்டும் கத்த,

“ம்ச்.. அகி இது உன் ஆஃபிஸ்.. திடீர்னு யாரும் உள்ள வந்துட்டா என்ன செய்வ.? இதுதான் உன் பதவிக்கு நீ கொடுக்குற மரியாதையா.? பெர்சனல் ப்ராப்ளம்ஸை சால்டவுட் பண்ற ப்ளேஸ் இது கிடையாது.. இந்த பில்டிங்க் விட்டு வெளிய வந்த பிறகும் கூட நீ இப்படி நடந்துக்கக்கூடாது. அப்போ இந்த இடத்துல நீ எப்படி இருக்கனும்.?” என அழுத்தமா கேட்க,

“என்ன வேணும் இவங்களுக்கு.? இவங்க மாமா வந்து மக வேணும்ன்னு உரிமை கொண்டாடுறார்.. எந்த மூஞ்சை வச்சிக்கிட்டு என்னை பார்க்க வந்தார். அவருக்கு என்ன தகுதி இருக்கு எங்கிட்ட பேச? ஹான் சொல்லு ஆரி.. இவங்க வேண்டாம்னா நான் போயிடனும்.. வேணும்னா நான் வந்து ஒட்டிக்கனுமா? என்ன இவங்க வச்ச ஆளா நான்? ஹான் சொல்லு ஆரி… மஞ்சரி மாதிரி என்ன சொன்னாலும், எவ்ளோ அடிச்சாலும் வாங்கிட்டு அமைதியா போய்டுவேன்னு நினைச்சிட்டாங்க போல.. மஞ்சரி வாங்கின எல்லாத்தையும் திருப்பிக் கொடுக்கத்தான் இந்த அகானா வந்துருக்கா.. அதை நியாபகத்துல வச்சிட்டு கிளம்ப சொல்லு..” என இருக்கும் இடம் உணர்ந்து அமைதியாக என்றாலும், அழுத்தம் திருத்தமாக சொன்னாள் அகானா.

அந்த அழுத்தத்தில் ஆகனின் உடல் இறுகி விரைத்தது. எப்படியும் இவளிடம் நெருங்க முடியாது. அனைத்தையும் தாண்டி நெருங்கினால் சுடு சொற்களால் வதைக்காமல் விடமாட்டாள் என்று புரிந்து கொண்டான்.

ஆனால் அவனுக்கு மகியைப் பற்றித் தெரிய வேண்டுமே.. மருத்துவமனையில் மயக்கத்தில் இருக்கும் அன்னை விழித்துக் கேட்டால் அவன் பதில் சொல்ல வேண்டுமே..

அதனால் தன் கோபத்தை விட்டு “ஆரி ப்ளீஸ்.. தப்பு எல்லாம் எங்க பக்கம்தான். நான் இல்லன்னு சொல்லி வாதாடவே இல்லை. அதுக்காக அவ பழிவாங்க எந்த எல்லைக்கும் போகலாமா? மகி சின்ன பொண்ணுடா.? அவளைக் காணோம்னா என்ன பேசுவாங்கனு யோசிச்சுப் பாரு ஆரி.. நாங்க இருக்கிறது சிட்டி கிடையாது. கிராமம். அங்க ஒரு சின்ன விசயத்தையும் ஊதி பெருசாக்கிடுவாங்க. அது மகியோட ஃபியூச்சர் லைஃபை ஸ்பாயில் ஆக்கிடும். உன் தங்கச்சிக்கு எடுத்து சொல்லு ப்ளீஸ். என் அம்மா ஹாஸ்பிடல்ல இருக்காங்க. மகி வராம அவங்களை கியூர் பண்ண முடியாது. அவங்க ஹெல்த் மோசமாகிட்டே போகுது.. புரிஞ்சிக்கோடா..” என அகானாவைப் பார்த்தபடியே ஆரியனிடம் பேச, ஆரிக்கும் அவன் சூழல் புரியத்தான் செய்தது.

இந்த இடத்தில் அவன் எதுவுமே செய்ய முடியாது. தன் தங்கை அவள் வலிக்கான மருந்தை தேடுகிறாள். அது கிடைக்காமல் அவள் தேடல் ஓயாது. அதில் அவனின் தலையீடு இப்போது மட்டுமல்ல எப்போதும் இருக்கக்கூடாது என்று நினைப்பவன், இப்போது மட்டும் எப்படி தலையிடுவான்.

“சீனியர் நீங்க சொல்றது எனக்கு புரியுது. வருத்தமாவும் இருக்கு. ஆனா அதை நீங்க ஏன் அகியைப் பார்த்து சொல்றீங்க. கேட்குறீங்க? அகியோட போஸ்டிங்க் என்ன? அவகிட்ட ஏன் கேட்குறீங்க.. அவ என்ன ஆள் கடத்தல் வேலை செய்றவளா?” என கேட்க,

“போதும் ஆரி.. அவதான் செஞ்சிருப்பான்னு உனக்கும் தெரியும்.. எனக்கும் தெரியும். இல்லைன்னு சொல்லி என்னை முட்டாளாக்கப் பார்க்காதே..” என கோபமாக கத்தியவன், “நாளைக்கு மகி வீட்டில இருக்கனும். இல்லைன்னா உன்னை தொலைச்சுக் கட்டிடுவேன்..” என கோபத்தில் கத்திவிட்டு வெளியேற, புயலடித்து ஓய்ந்தது போல் இருந்தது அந்த இடம்.

அகானாவிடம் எதையும் கேட்டு அவளை வருந்த வைக்க விரும்பாத ஆரியன் “கிளம்பலாம் அகி.. மஞ்சும்மா கால் பண்ணிட்டே இருக்காங்க.” என கூற, அகானாவும் பதில் எதுவும் பேசாமல் அனைத்தையும் எடுத்து வைத்து அமைதியாகவே கிளம்பினாள்.

காரில் கிளம்பிய ஆகனுக்கு பைத்தியம் பிடிக்காத குறை, அவன் காதில் “சொல்லு.. என் தப்பு இதுல எங்க இருக்கு.? உனக்கும் உன் குடும்பத்துல இருக்குறவங்க ரத்தம்தானே ஓடும்.. அதுதான் காதலிச்ச பொண்ணை விட்டுட்டு ஓடி வந்துட்ட..” அகானாவின் வார்த்தைகளே ஒலித்துக் கொண்டிருந்தது.

அதை அவள் கூறும் போது அந்த முகத்தில் தெரிந்த வேதனை, அந்த குரலில் இருந்த வலி, அவனை உயிரோடு வதைத்தது. இத்தனை வருடமாக அவளைவிட்டு ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்திருக்ககூடாதோ.?

அவளை நெருங்கி “நான் எப்போதும் உனக்கு இருப்பேன்..” என அவளுக்கு நம்பிக்கை கொடுத்திருக்க வேண்டுமோ..? எப்படியெல்லாம் வேதனை பட்டாளோ? எப்படி அனைத்தையும் கடந்து வந்தாளோ? என நினைக்க நினைக்கவே ஆகனின் தவறு அவனுக்குப் புரிந்தது.

அனைத்தும் காலம் கடந்த புரிதல்! இனி அகானாவிற்கு ஆகனின் காதலோ, அன்போ, அரவனைப்போ தேவையே இல்லை.

தேவைப்படும் போது கிடைக்காத எந்த பொருளும் குப்பைக்கு சமம்தானே!

அகானாவின் வாழ்வில் ஆகனும் அப்படித்தான்..!