அகானா- 26
அகானாவின் வாகனம் அலுவலகத்தில் நுழையும் முன்னமே ஆரியன் பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததுமே அகானாவின் விழிகளில் சிறு சிரிப்பு கூட.
‘இவன் பாசத்துக்கு ஒரு அளவில்லாம போச்சு’ என சிரித்தபடியே இறங்க, ‘அகி சாதாரணமாகத்தான் இருக்கிறாள்’ என்று பார்த்து தெரிந்த பிறகே, ஆரியனுக்கு மூச்சு சற்று சீரானது.
அவனது பதட்டமும் வடிந்தது. அதே நேரம் ஆகனிடமிருந்து அவனுக்கு அழைப்பும் வந்தது.
‘சீனியர் ஏன்?’ என யோசித்தபடியே எடுத்து “சொல்லுங்க சீனிய..” என்றான் இறுக்கமான குரலில்.
“ஆரி.. அம்மு.. அம்மு ஓக்கேதான..?” என்றான் பதட்டமாக.
“அவ எப்படி இருந்தா உங்களுக்கு என்ன சீனியர்.? அவளைப் பத்தி யொசிக்க நாங்க இருக்கோம். நீங்க உங்க ஃபேமிலிப் பத்தியும், உங்க ஃபேமிலில இருக்குற லேடிஸ் பத்தி மட்டும் யோசிங்க..” என காட்டமாக சொல்ல,
“டேய்.. உன்னை சாவடிச்சிடுவேன் பார்த்துக்கோ.. டென்சன் பண்ணாம அவ ஓக்கேவான்னு சொல்லு..” என ஆகனும் ஆத்திரமாக கூற,
“ம்ச்.. சீனியர் நீங்க வேண்டாம்னு போனீங்க.. அகியும் அந்த மைன்ட் செட்டுக்கு வந்து பல வருசம் ஆச்சு. வார்த்தைகள் எப்படி வலிக்கும்னு உங்களுக்குத் தெரியாது. அதை அனுபவிச்சவளுக்கு மட்டும் தான் தெரியும். அந்த கஷ்டத்தை வெளிக்காட்டிக்காம தன்னைத்தானே வருத்திக்கிட்டு அகி பட்ட வேதனையை என்னால இப்போக்கூட நினைக்க முடியல. அவ இன்னுமே அதிலிருந்து வெளிய வரல. வருவாளான்னும் தெரியல.” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே,
“போதும் ஆரி… நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு..” என எரிச்சலாக கேட்டான். உண்மையில் எரிச்சல்தான். அது ஆரியனின் மேல் வந்த எரிச்சல் இல்லை. தன் மேலே வந்த எரிச்சலும், கோபமும் தான். அதை ஆரியிடம் வெளிப்படுத்துகிறான். தன் இயலாமையின் வெளிப்பாடு இது.
ஏனென்றால் அவனுக்கேத் தெரியுமே, தன்னுடைய தவறும், தன்னுடைய குடும்பத்தாரின் துரோகமும். அதை சரியென்று எப்படி அவனால் சொல்லிக்கொள்ள முடியும்.
இன்றும் உறவினர்கள் மத்தியில் இவர்கள் குடும்பத்தை பார்த்து நேருக்கு நேராகவும், மறைத்துமே எத்தனை வசை பாடுகிறார்கள் என்று அவனுக்குத் தெரியும்தானே..
‘பணத்துக்காக பையன் வாழ்க்கையே கெடுத்தவதானே, அதான் அவன் குடும்பமே தழைக்காம போயிடுச்சு.’
‘அடுத்தவ புருசன்னு தெரிஞ்சும், அந்த குடும்பத்துல இருந்து பிரிச்சு கூட்டிட்டு வந்து பொழைச்சா இல்ல, அதான் அவளுக்கு பேர் சொல்றதுக்கு ஒரு வாரிசு கூட இல்லாம பண்ணிட்டான் ஆண்டவன்.’
‘பணத்துக்காக பொண்டாட்டி புள்ளையை தெருவுல விட்டுட்டு வந்தானே, அதுதான் பட்ட மரமா நிக்கிறான். பணம் இருந்தா போதுமா? பேர் சொல்ல ஒரு வாரிசு வேணாமா? என்ன இருந்தாலும் இதெல்லாம் அனுபவிக்க மஞ்சு மகளுக்குத்தான் கொடுத்து வச்சிருக்கும் போல. அதான் இவளுக்கு ஒரு வாரிசு இல்லாம கடவுள் பண்ணிட்டான்.. செஞ்ச பாவம் சும்மா விடுமா?’ என எத்தனை எத்தனை பேச்சுக்களை கேட்டிருப்பான்.
அதெல்லாம் இப்போது நினைவில் வந்து அவனை பெருமளவில் வதைத்தது.
“ஆரி ப்ளீஸ்.. நான் என்னை நியாயப்படுத்தல. என் தப்பு எனக்குத் தெரியும். அதை நான் சரி செய்ய முயறசிப்பேன். பட் எனக்கு இப்போ அவ எப்படி இருக்கான்னு தெரியனும். இல்லைன்னா நான் அங்க வருவேன். இந்த நியூஸ்க்கு அப்புறம் நான் அகியோட ஆஃபிஸ்க்கு வர முடியாது. புரிஞ்சிக்கோ.. அது இன்னும் அகிக்கு சிக்கல்தான்..” என தன் நிலை இறங்கி பேசினான் ஆகன்.
அது ஆர்யனுக்கும் புரியம் “ம்ச்..” என சலித்தவன், “அவ நார்மலாத்தான் இருக்கா.. அப்படித் தன்னைக் காட்டிக்கிறா? இவ டென்சனா இருந்தா மஞ்சும்மா கஷ்டப்படுவாங்கனு வெளியேக் காட்டிக்க மாட்டா. நான் பேசிட்டு சொல்றேன் சீனியர்..” என ஒரு பெருமூச்சோடு கூற,
“ம்ம்…” என்ற ஆகனுக்கும் ஒரு பெருமூச்சுதான். அவனே இப்படியொரு செய்தியை எதிர்பார்க்கவில்லைதான். மைதிலி அத்தையிடம் பேச முடியாது. ஆனாலும் பேசித்தான் வந்திருந்தான். அதில் அவருக்கு கோபம் வந்திருக்கும். அதற்காக பேசாமல் இருக்க முடியாதே. ஆனாலும் ஒரு ஆசுவாசம் மனதில். இரவீந்திரனின் முதல் குடும்பத்தை மைதிலியே வெளிப்படுத்தி விட்டார் என்று..’
“ஓக்கே ஆரி.. இங்க ஹாஸ்பிடல்ல நீ எப்போ ஜாயின் பண்ற?” என்றான் ஆகன் சாதாரணமாக.
“நீங்க எப்போ ஓக்கே சொன்னீங்க.?” என ஆரியனும் சிரித்தபடியே கேட்க,
“ஃபர்ஸ்ட் உன் தங்கச்சிக்கிட்ட பெர்மிஷன் வாங்குடா? அப்புறம் நீ எங்கிட்ட கேளு.” என சிரிக்க,
“அவதான் இந்த ஐடியாவே கொடுத்தது. வெட்டியா இங்க சுத்திட்டி இருக்காம, உங்க சீனியர் ஹாஸ்பிடலுக்கு போய் பிராக்டிஸ் பண்ணுனு சொன்னா.. எனக்குத்தான் அங்க வர இன்ட்ரெஸ்ட் இல்லாம இருந்தது..” என்றான் ஆரியன்..
“ஏன்டா.. இந்த சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி கொடுக்க மாட்டாங்கன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்களே, அதுதான் நியாபகம் வருது..” என்றதும்,
“அது சீனியர்.. உங்க மாமாவை, உங்க அம்மாவை எல்லாம் அடிக்கடி பார்க்கிற மாதிரி இருக்கும். எனக்கு அதுல விருப்பம் இல்ல.. தப்பா எடுத்துக்காதீங்க சீனியர்..” என வருத்தமாக கூற, ஆகனுக்கும் புரியத்தான் செய்தது.
“ஓக்கே டா.. உன் விருப்பம் போல செய்..” என்றவன், “அம்முக்கிட்ட பேசிட்டு சொல்லுடா..?” என்று வைத்துவிட்டான்.
ஆரியனுக்கு ஆகனின் மேல் கோபம் இருந்தது. அது குறைந்து இப்போது வருத்தம் மட்டுமே. ஆனாலும் ஏனோ அவர்களுடன் இவனால் ஒன்ற முடியவில்லை. அதோடு ஒரு குற்றவுணர்ச்சியும் கூட. மகிழினியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். அதை வெளிக்காட்டாமல் ஆகனோடு சாதாரணமாக பேச முடியும் என்று தோன்றவில்லை.
மகிழினியப் பற்றிய உண்மை தெரிந்த பிறகு ஆகன் தன்னிடம் எப்படி நடந்து கொள்வான் என்றும் தெரியவில்லை. அதனால் இந்த இடைவெளியோடு இருப்பதே நல்லது என முடிவு செஉது கொண்டான்.
அப்போது கண்ணன் வந்து, “தம்பி பாப்பா உங்களை கூப்பிடுது..” என கூற,
“ஹான் அங்கிள் இதோ வரேன்..” என வேகமாக அகானாவிடம் சென்றான்.
“அகி நீ ஓக்கேதான..” என பதட்டமாகவே கேட்க,
“டேய் அண்ணா.. எனக்கு என்ன? ஐம் ஆல்ரைட்… நீங்க ஏன் இவ்ளோ யோசிக்கிறீங்க.. விடு விடு இதெல்லாம் எதிர்பார்த்ததுதான..” என கண் சிமிட்டி சிரிக்க, ஆர்யனுக்கு முகம் பிரகாசமானது.
‘ஆஹான்..’ ஏதோ ப்ளான் பண்ணிட்டா போல, என யோசித்தபடியே பார்க்க,
“அவங்களே வந்து வாலண்டியரா சிக்கிருக்காங்க.. விட முடியுமா என்ன?” என மேலும் சிரிக்க, ஆகனுக்குள் ஒரு பதட்டம்.. ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் “இது சீனியர் இல்லத்தானே, அப்புறம் என்ன? விடு..” எனவும்,
“உங்க சீனியருக்கு அவ்ளோ தைரியம் இருக்கா என்ன..?” என கிண்டலாக கேட்டவள், “ஆரி என்னை இப்படியே விடு. நீ அவங்க ஹாஸ்பிடல்ல போய் ஜாயின் பண்ணு.. இப்படி எனக்கு பாடிகார்ட் வேலை பார்க்கத்தான் நீ MD முடிச்சியா?” என சீரியசாக கேட்க,
“ஹேய்.. நான் உன் கேஸ் முடிஞ்சதும் கிளம்பிடுவேன். இங்க எல்லாம் எனக்கு செட்டே ஆகாது. நான் ஜிப்மர்ல ஜாயின் பண்ண போறேன்..” என அவனும் சீரியசாக கூற,
“அப்போ மகி.. அவளை என்ன செய்ய போற.?” என காட்டமாக கேட்க
“ம்ச் அகி.. இந்த பேச்சை அப்படியே விடு… அதை நான் யோசிக்கனும். இப்போ உன்னோட பிரச்சினையை மட்டும் பார்க்கலாம்..” என முடித்தவன், “நான் கிளம்பறேன் அகி.. நியூஸ் பார்த்ததும் அப்படியே ஓடி வந்துட்டேன்..” என சிரிக்க,
“ஹான் ஓக்கே ஆரி.. நான் ஈவ்னிங்க் கால் பண்றேன்..” என பேச்சை முடிக்க, ஆரியனும் கிளம்பி விட, அவளுக்கு முன்னே வந்து நின்றார் கண்ணன்.
“மேடம்.. இன்ஸ்பெக்டர் உதய் சார் வந்திருக்கார்..” என்றதும்,
“எஸ்.. நான்தான் வர சொன்னேன்..” என்றவர், “அவர் கொடுத்த டாகுமென்ட்ஸ், எவிடென்ஸ் எல்லாம் உங்ககிட்ட தானே இருக்கு.. அதையெல்லாம் ஸ்கேன் பண்ணி ஒரு காபி சிப் ஃபைல்லா எனக்கு அனுப்பிடுங்க.. அவரை ஒரு டென் மினிட்ஸ் கழிச்சு அனுப்புங்க..”
“ஹான் ஓக்கே மேடம்..”
கண்ணன் வெளியே சென்றதும், நித்யாவிற்கு அழைத்தவள் எத்தனை மணிக்கு வருவார்கள் என கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டாள்.
பின் இங்கு மிகவும் பிரபலமான யூ டியுப் சேனல் லிஸ்டை எடுத்து, அதில் அவளுக்குத் தேவையான இருவருக்கு மட்டும் தன்னிடமிருந்த நியூஸை அனோன் ஐடியில் அனுப்பிவிட்டவளுக்கு, முகத்தில் ஒரு குரோத புன்னகை உண்டானது.
கதவத் தட்டிக்கொண்டு உதய் வர, அவரிடம் அந்த கேஸ் பத்தி விசாரித்தாள். தனக்குத் தெரிந்ததையும் கூறினாள்.
“அந்த துரைப்பாண்டி வெறும் பினாமிதான் உதய். அவரை அரெஸ்ட் பண்ணாலும் ஈசியா வெளியே வந்திடுவார். அதனால இந்த கேசை கொஞ்ச நாள் அப்படியே விடுங்க. நாம அமைதியா இருக்கோம்னு அந்த முக்கியப்புள்ளி வெளியே வருவாங்க. சரியான நேரம் பார்த்து எக்ஸ்கியூட் பண்ணிக்கலாம். அவசரப்பட வேண்டாம். ஏன்னா அந்த முக்கியப்புள்ளி ஆளும் கட்சியில அடுத்த சிஎம் கேண்டிடேட்னு சொல்லிக்கிறாங்க..” என சிரிக்க, கேட்ட செய்தியில் உண்டான அதிர்ச்சியில் உதய் எழுந்து நின்றே விட்டான்.
“மேம்…” என திக்க,
“ம்ம்ம்.. எஸ் மிஸ்டர் உதய்.. இப்போ எலக்ஷன் டைம்.. அவங்களே கொஞ்சம் அடக்கித்தான் வாசிப்பாங்க. நாம எதிர்கட்சி ஆட்களுக்கு நம்மக்கிட்ட எவிடென்சை லீக் பண்ணா போதும்.. ஈசியா நாம நினைச்சது நடக்கும்..” எனவும், உதய்க்கு முகமெல்லாம் வேர்த்துப் போனது.
“மேம்.. இது ரொம்ப ரிஸ்க்.. இது தெரிஞ்சா? உங்களை? உங்களை..?” என திக்க,
“உதய்.. இது நம்மளோட ஒர்க் அண்ட் கடமை. நம்மதான் செய்றோம். உங்களால முடியலன்னா கமிஷ்னர்கிட்ட பேசி ட்ரான்ஸ்ஃபர் வாங்கிக்கோங்க..” என இறுகிய குரலில் கூற, உதயுமே “நான்.. நான் உங்களுக்காகத்தான் சொன்னேன் மேம்.. வீ வில் டூ இட் மேம்..” என்றவன் சல்யூட் அடித்து வெளியில் வந்தவனுக்கு அகானாவை நினைத்து பெருமைதான்.
அன்றைய பொழுது அகானவிற்கு நிற்க கூட நேரமில்லாமல் போய்க்கொண்டே இருந்தது. நித்யா வந்து ஒரு மணி நேரம் கடந்துதான் பார்க்க வேண்டி இருந்தது.
அவரிடம் பேசி தனக்கு வேண்டியதைக் கேட்டு, தான் செய்யப் போவதை சொல்லி, அவர் செய்ய வேண்டியதையும் சொல்லி, அவர் அதைக் கேட்டு தயங்கவும், பொறுமையாக எடுத்துச் சொல்லி ஒத்துக்க வைத்து வெளியில் வர மேலும் ஒரு மணி நேரம் கடந்திருந்தது.
அன்று மாலை அவள் அலுவலகத்தை விட்டு கிளம்பும் நேரம் சரியாக மீடியாக்களின் கூட்டம் அவள் கார் முன் மறைத்து நிற்க, “எஸ்.” என புன்னகை முகமாக கேட்க,
“மேம்.. இன்னைக்கு வந்த நியூஸ் பத்திதான் மேம் கேட்க வந்திருக்கோம். RM ஹாஸ்பிடல்ல நடந்த ரெய்டு.. நித்யா மேடம் அரெஸ்ட் எல்லாம் உங்களோட சொந்தப்பகைன்னு மைதிலி மேடம் சொல்லிருக்காங்க.. இதை நீங்க ஒத்துக்குறீங்களா?” என கேட்க,
“ஸாரி.. இதுக்கு எனக்கு பதில் சொல்ல விருப்பம் இல்ல. பட் என்னோட கேரியரை இது அஃபெக்ட் பண்ணும் போது பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் இருக்கு.. சோ..” என்றவளின் சிரிப்பில் என்ன இருந்தது என அங்கிருந்த யாருக்கும் புரியவில்லை.
ஆனால் அதை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த ரவிக்கும், வினோத்திற்க்கும், ரஞ்சனி என மூவருக்கும் உள்ளுக்குள் பய பந்து சுழல ஆரம்பித்தது.
அகானாவின் வாகனம் அலுவலகத்தில் நுழையும் முன்னமே ஆரியன் பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததுமே அகானாவின் விழிகளில் சிறு சிரிப்பு கூட.
‘இவன் பாசத்துக்கு ஒரு அளவில்லாம போச்சு’ என சிரித்தபடியே இறங்க, ‘அகி சாதாரணமாகத்தான் இருக்கிறாள்’ என்று பார்த்து தெரிந்த பிறகே, ஆரியனுக்கு மூச்சு சற்று சீரானது.
அவனது பதட்டமும் வடிந்தது. அதே நேரம் ஆகனிடமிருந்து அவனுக்கு அழைப்பும் வந்தது.
‘சீனியர் ஏன்?’ என யோசித்தபடியே எடுத்து “சொல்லுங்க சீனிய..” என்றான் இறுக்கமான குரலில்.
“ஆரி.. அம்மு.. அம்மு ஓக்கேதான..?” என்றான் பதட்டமாக.
“அவ எப்படி இருந்தா உங்களுக்கு என்ன சீனியர்.? அவளைப் பத்தி யொசிக்க நாங்க இருக்கோம். நீங்க உங்க ஃபேமிலிப் பத்தியும், உங்க ஃபேமிலில இருக்குற லேடிஸ் பத்தி மட்டும் யோசிங்க..” என காட்டமாக சொல்ல,
“டேய்.. உன்னை சாவடிச்சிடுவேன் பார்த்துக்கோ.. டென்சன் பண்ணாம அவ ஓக்கேவான்னு சொல்லு..” என ஆகனும் ஆத்திரமாக கூற,
“ம்ச்.. சீனியர் நீங்க வேண்டாம்னு போனீங்க.. அகியும் அந்த மைன்ட் செட்டுக்கு வந்து பல வருசம் ஆச்சு. வார்த்தைகள் எப்படி வலிக்கும்னு உங்களுக்குத் தெரியாது. அதை அனுபவிச்சவளுக்கு மட்டும் தான் தெரியும். அந்த கஷ்டத்தை வெளிக்காட்டிக்காம தன்னைத்தானே வருத்திக்கிட்டு அகி பட்ட வேதனையை என்னால இப்போக்கூட நினைக்க முடியல. அவ இன்னுமே அதிலிருந்து வெளிய வரல. வருவாளான்னும் தெரியல.” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே,
“போதும் ஆரி… நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு..” என எரிச்சலாக கேட்டான். உண்மையில் எரிச்சல்தான். அது ஆரியனின் மேல் வந்த எரிச்சல் இல்லை. தன் மேலே வந்த எரிச்சலும், கோபமும் தான். அதை ஆரியிடம் வெளிப்படுத்துகிறான். தன் இயலாமையின் வெளிப்பாடு இது.
ஏனென்றால் அவனுக்கேத் தெரியுமே, தன்னுடைய தவறும், தன்னுடைய குடும்பத்தாரின் துரோகமும். அதை சரியென்று எப்படி அவனால் சொல்லிக்கொள்ள முடியும்.
இன்றும் உறவினர்கள் மத்தியில் இவர்கள் குடும்பத்தை பார்த்து நேருக்கு நேராகவும், மறைத்துமே எத்தனை வசை பாடுகிறார்கள் என்று அவனுக்குத் தெரியும்தானே..
‘பணத்துக்காக பையன் வாழ்க்கையே கெடுத்தவதானே, அதான் அவன் குடும்பமே தழைக்காம போயிடுச்சு.’
‘அடுத்தவ புருசன்னு தெரிஞ்சும், அந்த குடும்பத்துல இருந்து பிரிச்சு கூட்டிட்டு வந்து பொழைச்சா இல்ல, அதான் அவளுக்கு பேர் சொல்றதுக்கு ஒரு வாரிசு கூட இல்லாம பண்ணிட்டான் ஆண்டவன்.’
‘பணத்துக்காக பொண்டாட்டி புள்ளையை தெருவுல விட்டுட்டு வந்தானே, அதுதான் பட்ட மரமா நிக்கிறான். பணம் இருந்தா போதுமா? பேர் சொல்ல ஒரு வாரிசு வேணாமா? என்ன இருந்தாலும் இதெல்லாம் அனுபவிக்க மஞ்சு மகளுக்குத்தான் கொடுத்து வச்சிருக்கும் போல. அதான் இவளுக்கு ஒரு வாரிசு இல்லாம கடவுள் பண்ணிட்டான்.. செஞ்ச பாவம் சும்மா விடுமா?’ என எத்தனை எத்தனை பேச்சுக்களை கேட்டிருப்பான்.
அதெல்லாம் இப்போது நினைவில் வந்து அவனை பெருமளவில் வதைத்தது.
“ஆரி ப்ளீஸ்.. நான் என்னை நியாயப்படுத்தல. என் தப்பு எனக்குத் தெரியும். அதை நான் சரி செய்ய முயறசிப்பேன். பட் எனக்கு இப்போ அவ எப்படி இருக்கான்னு தெரியனும். இல்லைன்னா நான் அங்க வருவேன். இந்த நியூஸ்க்கு அப்புறம் நான் அகியோட ஆஃபிஸ்க்கு வர முடியாது. புரிஞ்சிக்கோ.. அது இன்னும் அகிக்கு சிக்கல்தான்..” என தன் நிலை இறங்கி பேசினான் ஆகன்.
அது ஆர்யனுக்கும் புரியம் “ம்ச்..” என சலித்தவன், “அவ நார்மலாத்தான் இருக்கா.. அப்படித் தன்னைக் காட்டிக்கிறா? இவ டென்சனா இருந்தா மஞ்சும்மா கஷ்டப்படுவாங்கனு வெளியேக் காட்டிக்க மாட்டா. நான் பேசிட்டு சொல்றேன் சீனியர்..” என ஒரு பெருமூச்சோடு கூற,
“ம்ம்…” என்ற ஆகனுக்கும் ஒரு பெருமூச்சுதான். அவனே இப்படியொரு செய்தியை எதிர்பார்க்கவில்லைதான். மைதிலி அத்தையிடம் பேச முடியாது. ஆனாலும் பேசித்தான் வந்திருந்தான். அதில் அவருக்கு கோபம் வந்திருக்கும். அதற்காக பேசாமல் இருக்க முடியாதே. ஆனாலும் ஒரு ஆசுவாசம் மனதில். இரவீந்திரனின் முதல் குடும்பத்தை மைதிலியே வெளிப்படுத்தி விட்டார் என்று..’
“ஓக்கே ஆரி.. இங்க ஹாஸ்பிடல்ல நீ எப்போ ஜாயின் பண்ற?” என்றான் ஆகன் சாதாரணமாக.
“நீங்க எப்போ ஓக்கே சொன்னீங்க.?” என ஆரியனும் சிரித்தபடியே கேட்க,
“ஃபர்ஸ்ட் உன் தங்கச்சிக்கிட்ட பெர்மிஷன் வாங்குடா? அப்புறம் நீ எங்கிட்ட கேளு.” என சிரிக்க,
“அவதான் இந்த ஐடியாவே கொடுத்தது. வெட்டியா இங்க சுத்திட்டி இருக்காம, உங்க சீனியர் ஹாஸ்பிடலுக்கு போய் பிராக்டிஸ் பண்ணுனு சொன்னா.. எனக்குத்தான் அங்க வர இன்ட்ரெஸ்ட் இல்லாம இருந்தது..” என்றான் ஆரியன்..
“ஏன்டா.. இந்த சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி கொடுக்க மாட்டாங்கன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்களே, அதுதான் நியாபகம் வருது..” என்றதும்,
“அது சீனியர்.. உங்க மாமாவை, உங்க அம்மாவை எல்லாம் அடிக்கடி பார்க்கிற மாதிரி இருக்கும். எனக்கு அதுல விருப்பம் இல்ல.. தப்பா எடுத்துக்காதீங்க சீனியர்..” என வருத்தமாக கூற, ஆகனுக்கும் புரியத்தான் செய்தது.
“ஓக்கே டா.. உன் விருப்பம் போல செய்..” என்றவன், “அம்முக்கிட்ட பேசிட்டு சொல்லுடா..?” என்று வைத்துவிட்டான்.
ஆரியனுக்கு ஆகனின் மேல் கோபம் இருந்தது. அது குறைந்து இப்போது வருத்தம் மட்டுமே. ஆனாலும் ஏனோ அவர்களுடன் இவனால் ஒன்ற முடியவில்லை. அதோடு ஒரு குற்றவுணர்ச்சியும் கூட. மகிழினியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். அதை வெளிக்காட்டாமல் ஆகனோடு சாதாரணமாக பேச முடியும் என்று தோன்றவில்லை.
மகிழினியப் பற்றிய உண்மை தெரிந்த பிறகு ஆகன் தன்னிடம் எப்படி நடந்து கொள்வான் என்றும் தெரியவில்லை. அதனால் இந்த இடைவெளியோடு இருப்பதே நல்லது என முடிவு செஉது கொண்டான்.
அப்போது கண்ணன் வந்து, “தம்பி பாப்பா உங்களை கூப்பிடுது..” என கூற,
“ஹான் அங்கிள் இதோ வரேன்..” என வேகமாக அகானாவிடம் சென்றான்.
“அகி நீ ஓக்கேதான..” என பதட்டமாகவே கேட்க,
“டேய் அண்ணா.. எனக்கு என்ன? ஐம் ஆல்ரைட்… நீங்க ஏன் இவ்ளோ யோசிக்கிறீங்க.. விடு விடு இதெல்லாம் எதிர்பார்த்ததுதான..” என கண் சிமிட்டி சிரிக்க, ஆர்யனுக்கு முகம் பிரகாசமானது.
‘ஆஹான்..’ ஏதோ ப்ளான் பண்ணிட்டா போல, என யோசித்தபடியே பார்க்க,
“அவங்களே வந்து வாலண்டியரா சிக்கிருக்காங்க.. விட முடியுமா என்ன?” என மேலும் சிரிக்க, ஆகனுக்குள் ஒரு பதட்டம்.. ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் “இது சீனியர் இல்லத்தானே, அப்புறம் என்ன? விடு..” எனவும்,
“உங்க சீனியருக்கு அவ்ளோ தைரியம் இருக்கா என்ன..?” என கிண்டலாக கேட்டவள், “ஆரி என்னை இப்படியே விடு. நீ அவங்க ஹாஸ்பிடல்ல போய் ஜாயின் பண்ணு.. இப்படி எனக்கு பாடிகார்ட் வேலை பார்க்கத்தான் நீ MD முடிச்சியா?” என சீரியசாக கேட்க,
“ஹேய்.. நான் உன் கேஸ் முடிஞ்சதும் கிளம்பிடுவேன். இங்க எல்லாம் எனக்கு செட்டே ஆகாது. நான் ஜிப்மர்ல ஜாயின் பண்ண போறேன்..” என அவனும் சீரியசாக கூற,
“அப்போ மகி.. அவளை என்ன செய்ய போற.?” என காட்டமாக கேட்க
“ம்ச் அகி.. இந்த பேச்சை அப்படியே விடு… அதை நான் யோசிக்கனும். இப்போ உன்னோட பிரச்சினையை மட்டும் பார்க்கலாம்..” என முடித்தவன், “நான் கிளம்பறேன் அகி.. நியூஸ் பார்த்ததும் அப்படியே ஓடி வந்துட்டேன்..” என சிரிக்க,
“ஹான் ஓக்கே ஆரி.. நான் ஈவ்னிங்க் கால் பண்றேன்..” என பேச்சை முடிக்க, ஆரியனும் கிளம்பி விட, அவளுக்கு முன்னே வந்து நின்றார் கண்ணன்.
“மேடம்.. இன்ஸ்பெக்டர் உதய் சார் வந்திருக்கார்..” என்றதும்,
“எஸ்.. நான்தான் வர சொன்னேன்..” என்றவர், “அவர் கொடுத்த டாகுமென்ட்ஸ், எவிடென்ஸ் எல்லாம் உங்ககிட்ட தானே இருக்கு.. அதையெல்லாம் ஸ்கேன் பண்ணி ஒரு காபி சிப் ஃபைல்லா எனக்கு அனுப்பிடுங்க.. அவரை ஒரு டென் மினிட்ஸ் கழிச்சு அனுப்புங்க..”
“ஹான் ஓக்கே மேடம்..”
கண்ணன் வெளியே சென்றதும், நித்யாவிற்கு அழைத்தவள் எத்தனை மணிக்கு வருவார்கள் என கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டாள்.
பின் இங்கு மிகவும் பிரபலமான யூ டியுப் சேனல் லிஸ்டை எடுத்து, அதில் அவளுக்குத் தேவையான இருவருக்கு மட்டும் தன்னிடமிருந்த நியூஸை அனோன் ஐடியில் அனுப்பிவிட்டவளுக்கு, முகத்தில் ஒரு குரோத புன்னகை உண்டானது.
கதவத் தட்டிக்கொண்டு உதய் வர, அவரிடம் அந்த கேஸ் பத்தி விசாரித்தாள். தனக்குத் தெரிந்ததையும் கூறினாள்.
“அந்த துரைப்பாண்டி வெறும் பினாமிதான் உதய். அவரை அரெஸ்ட் பண்ணாலும் ஈசியா வெளியே வந்திடுவார். அதனால இந்த கேசை கொஞ்ச நாள் அப்படியே விடுங்க. நாம அமைதியா இருக்கோம்னு அந்த முக்கியப்புள்ளி வெளியே வருவாங்க. சரியான நேரம் பார்த்து எக்ஸ்கியூட் பண்ணிக்கலாம். அவசரப்பட வேண்டாம். ஏன்னா அந்த முக்கியப்புள்ளி ஆளும் கட்சியில அடுத்த சிஎம் கேண்டிடேட்னு சொல்லிக்கிறாங்க..” என சிரிக்க, கேட்ட செய்தியில் உண்டான அதிர்ச்சியில் உதய் எழுந்து நின்றே விட்டான்.
“மேம்…” என திக்க,
“ம்ம்ம்.. எஸ் மிஸ்டர் உதய்.. இப்போ எலக்ஷன் டைம்.. அவங்களே கொஞ்சம் அடக்கித்தான் வாசிப்பாங்க. நாம எதிர்கட்சி ஆட்களுக்கு நம்மக்கிட்ட எவிடென்சை லீக் பண்ணா போதும்.. ஈசியா நாம நினைச்சது நடக்கும்..” எனவும், உதய்க்கு முகமெல்லாம் வேர்த்துப் போனது.
“மேம்.. இது ரொம்ப ரிஸ்க்.. இது தெரிஞ்சா? உங்களை? உங்களை..?” என திக்க,
“உதய்.. இது நம்மளோட ஒர்க் அண்ட் கடமை. நம்மதான் செய்றோம். உங்களால முடியலன்னா கமிஷ்னர்கிட்ட பேசி ட்ரான்ஸ்ஃபர் வாங்கிக்கோங்க..” என இறுகிய குரலில் கூற, உதயுமே “நான்.. நான் உங்களுக்காகத்தான் சொன்னேன் மேம்.. வீ வில் டூ இட் மேம்..” என்றவன் சல்யூட் அடித்து வெளியில் வந்தவனுக்கு அகானாவை நினைத்து பெருமைதான்.
அன்றைய பொழுது அகானவிற்கு நிற்க கூட நேரமில்லாமல் போய்க்கொண்டே இருந்தது. நித்யா வந்து ஒரு மணி நேரம் கடந்துதான் பார்க்க வேண்டி இருந்தது.
அவரிடம் பேசி தனக்கு வேண்டியதைக் கேட்டு, தான் செய்யப் போவதை சொல்லி, அவர் செய்ய வேண்டியதையும் சொல்லி, அவர் அதைக் கேட்டு தயங்கவும், பொறுமையாக எடுத்துச் சொல்லி ஒத்துக்க வைத்து வெளியில் வர மேலும் ஒரு மணி நேரம் கடந்திருந்தது.
அன்று மாலை அவள் அலுவலகத்தை விட்டு கிளம்பும் நேரம் சரியாக மீடியாக்களின் கூட்டம் அவள் கார் முன் மறைத்து நிற்க, “எஸ்.” என புன்னகை முகமாக கேட்க,
“மேம்.. இன்னைக்கு வந்த நியூஸ் பத்திதான் மேம் கேட்க வந்திருக்கோம். RM ஹாஸ்பிடல்ல நடந்த ரெய்டு.. நித்யா மேடம் அரெஸ்ட் எல்லாம் உங்களோட சொந்தப்பகைன்னு மைதிலி மேடம் சொல்லிருக்காங்க.. இதை நீங்க ஒத்துக்குறீங்களா?” என கேட்க,
“ஸாரி.. இதுக்கு எனக்கு பதில் சொல்ல விருப்பம் இல்ல. பட் என்னோட கேரியரை இது அஃபெக்ட் பண்ணும் போது பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் இருக்கு.. சோ..” என்றவளின் சிரிப்பில் என்ன இருந்தது என அங்கிருந்த யாருக்கும் புரியவில்லை.
ஆனால் அதை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த ரவிக்கும், வினோத்திற்க்கும், ரஞ்சனி என மூவருக்கும் உள்ளுக்குள் பய பந்து சுழல ஆரம்பித்தது.