விஷ்வா தன் நண்பர்களுடன் ஆஸ்பிட்டலுக்கு சென்றான்.
ஓ பி பில்டிங்கில் சென்று இன்ஜெக்ஷன் போட்டுக் கொண்டு கேன்டீனிற்கு சென்றனர்.
விமல் விஷ்வாவடம்....
மச்சான்... இங்க எப்படி டா அவள கண்டுபிடிக்கிறது?
அங்கு வேலை செய்பவரிடம் விஷ்வா சென்று... அண்ணா... இங்க காலேஜ் பில்டிங் எந்தப் பக்கம்?
அந்தப் பக்கம் தம்பி.... ஆனா படிக்கிற பசங்க, சொல்லிக் கொடுக்குற வாத்தியாருங்க, அப்புறம் டாக்டருங்க.... இவங்கள தவிர யாரும் அங்க போக முடியாது... என்றார் அவர்.
அப்போ யாரையாவது பாக்கனும்னா?
அவங்க பேரு, டிபார்ட்மெண்ட் எல்லாம் சொன்னா... அழைச்சிக்கிட்டு வருவாங்க...
ஹா ஹா ஹா என்று சிரித்தான் ஜானி.... பேரே தெரியாது இதுல டிபார்ட்மெண்ட் வேற சொல்லனுமாம்.
ஏய் மூடு டா என்றான் விஷ்வா...
தம்பி, லஞ்ச் டைம்ல நிறைய பேர் வந்து சாப்பிட்டுவிட்டு போவாங்க... அப்போ வேணும்ன்னா... வெயிட் பண்ணி பாருங்க ப்பா...
தேங்க்ஸ் அண்ணா... என்று சொல்லி ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை அவர் பாக்கெட்டில் வைத்தான்.
அவர் வாய் நிறைய புன்னகையுடன்.... தேங்க்ஸ் தம்பி... எப்போ வேணும்னாலும் என்னை வந்து பாருங்க என்று சொல்லி அவருடைய ஃபோன் நம்பரை மற்றும் பெயரை சொன்னார். அவருடைய பெயர் மணி.
மச்சி நம்ம காலேஜுக்கு போக வேண்டாமா? என்றான் கணேஷ்.
ஷ்ஷ்... என்றான் விஷ்வா.
மற்ற மூவரும் அங்கிருந்த பெண்களை பார்த்து ஜொல்லு விட்டுக் கொண்டு இருந்தனர்.
ஆனால் விஷ்வா அவளின்(ரேஷ்மி) நினைப்பிலேயே இருந்தான்.
மச்சி... அவள் விட இங்க இருக்கிற பொண்ணுங்கல பாரு டா... அவள மறந்திடுவ... என்றான் விமல்.
ஆனால் இவர்கள் பேசியதை எதையுமே காதில் வாங்காமல்.... அவள் அவன் கையை பிடித்து ஸ்டாப்... ஸ்டாப்... என்று கத்தியதையே நினைத்து கொண்டிருந்தான்.

லஞ்ச் டைம் வந்தது. அழகு தேவதைகள் ஊர்வலம் வருவது போல் பலர் வந்து போயினர். ஆனால் ரேஷ்மி வரவில்லை.
லஞ்ச் டைம் முடிந்தது.
தம்பி இதுக்கு மேல யாரும் வரமாட்டாங்க என்று சொன்னார் மணி.
மச்சி.... நாளைக்கு பஸ் ஸ்டாண்டில் பாதுக்கலாம் என்றான் ஜானி.
சரி என்று சொல்லி கிளம்பினான் விஷ்வா.
மறுநாள் பஸ் ஸ்டாண்டில் வெகு நேரம் நின்றார்கள் ஆனால் அவள் வரவில்லை. அன்று அவள் தன் அண்ணன் ராகவுடன் காலேஜ் சென்றுவிட்டாள். பிறகு அவர்கள் நால்வரும் அவர்களுடைய காலேஜுக்கு சென்றனர்.
அடுத்த இரண்டு நாட்களுமே.... அவர்கள் பஸ் ஸ்டாண்டில் வெயிட் செய்து பார்த்துவிட்டு காலேஜூக்கு போனார்கள்.
விஷ்வா... அவனுடைய நண்பர்களிடத்தில் கோபப் பட்டான். நீங்க எல்லாம் என்னோட பிரண்ட்ஸா டா? அந்த பொண்ணு பேரு கூட உங்களால கண்டுபிடிக்க முடியல.... சே.... என்று திட்டிவிட்டு சென்றுவிட்டான்.
அவன் சென்றவுடன்....
ஏய் என்னடா ஆச்சு இவனுக்கு.... அந்த பொண்ண நம்ம யாரும் ஒழுங்கா கூட பாக்கல... அவளே எதிர்ல வந்தா கூட நமக்கு தெரியாது.... நம்ம கிட்ட இவன் இப்படி கோச்சிக்கிறான். என்றான் கணேஷ்.
ஆமாம் டா.... நான் தான் இரண்டாயிரம் ருபாய் நோட்டை கொடுத்தேன்... எனக்கே அவ ஃபேஸ் நியாபகம் இல்லை என்றான் விமல். நம்மலால என்ன பண்ண முடியும்...
சரி வாங்க டா... அவன் கிட்ட போய் பேசலாம். இவன் இவ்வளோ சீரியஸ்ஸா அந்த பொண்ண தேடுவான்னு நினைக்கல என்றான் ஜானி.
மூவரும் சென்று.... மச்சி சொல்றோம் ன்னு கோச்சிக்காதா டா.... எங்களுக்கு அந்த பொண்ணோட முகம் கூட ஞாபகம் இல்லை.... நாங்க எங்க... எப்படி தேட முடியும் என்றான் விமல்.
ஒரு நிமிஷம் மௌனமாக இருந்து விட்டு பின்....
ஸாரி மச்சீஸ்.... என்று சொல்லி கிளம்பிவிட்டான்.
டேய் டேய் என்று மூவரும் கூப்பிட்டு கொண்டே இருக்க... அவன் காதில் வாங்காமல் காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.
வைஷாலி விஷ்வாவிற்கு கால் செய்தாள்.

டேய்.... எங்கடா இருக்க?
என்ன வேணும் உனக்கு?
இல்லடா... என் கார் பஞ்சர் ஆயிடிச்சு. அதான் நீ இந்த பக்கம் இருந்தா அப்படியே உன் கூட வீட்டுக்கு போலாம் ன்னு பார்த்தேன்.
இல்ல... நான் வர லேட் ஆகும். அப்பாவுக்கு கால் பண்ணி வேற கார் அனுப்ப சொல்லு....
டேய்.... கால் பண்ணிட்டேன். அப்பா எடுக்கல. மீட்டிங் ல இருக்காரு போல... அம்மா கோவிலுக்கு போயிருக்கிறதா சொன்னாங்க...
மிச்.... கால் டாக்ஸி புடிச்சி போயேன்.... என்றான்.
எப்பவுமே அப்படி பேசாதவன் இவ்வாறு பேசுகிறான் என்றால் நிச்சயமாக ஏதோ பிரச்சனை என்று புரிந்து கொண்டாள் வைஷாலி.
ஓகே டா....ஸாரி என்றாள்.
அக்கா ஸாரி சொன்னவுடன் அவனுக்கு என்னவோ போல் ஆனது.
அக்கா.... ஸாரி என்றான் விஷ்வா.
விஷ்வா.... ஒண்ணும் பிரச்சனை இல்லை. நான் பாத்துக்கிறேன். நீ ஏதோ டென்ஷன் ல இருக்குன்னு தெரியுது. பாத்துக்கோ என்று சொல்லி ஃபோனை வைத்தாள் வைஷாலி.
அக்காவிடம் அவ்வாறு பேசியதை எண்ணி.... அவனே நோந்துக்கொண்டான்.
மெக்கானிக்கு கால் செய்து காரை எடுத்துக் போக சொல்லிவிட்டு.
அவளுடைய ஃபோனை எடுத்து கால் டாக்ஸி புக் செய்தாள்.
அவளுக்கு அந்த இருட்டில் நிற்க சற்று பயமாக தான் இருந்தது.
இருபது அடி தூரத்தில் பஸ் ஸ்டாண்ட் இருந்தது. அங்கே போய் நின்று கொண்டாள்.
வண்டி வந்ததும் அதில் ஏறி வீட்டிற்கு சென்றாள்.
மூன்று முறை கால் செய்தான் விஷ்வா.
அக்கா... எங்க இருக்க?
வண்டி புக் பண்ணிட்டு வெயிட் பண்றேன்...
ஓகே லைவ் லோகேஷன் ஷேர் பண்ணு....
சரி என்று ஷேர் செய்தாள்.
ஏன் ரொம்ப நேரம் அந்த சிக்னல்ல நிக்குது என்றான்.
டிராஃபிக் ஜாம் டா என்றாள் வைஷாலி.
ஓகே ஓகே...
வீட்டிக்கு போயிட்ட இல்ல....
அதான் நீயே லைவ் லோகேஷன் ல பாத்துட்ட இல்ல... அப்புறம் என்ன? என்று சிரித்துக் கொண்டே கேட்டாள். இதுக்கு நீயே வந்து என்னை பிக்கப் பண்ணிருக்கலாம்... என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.
சரி வைக்கிறேன் என்றான் விஷ்வா.
அவன் பீச்சில் அமர்ந்து கொண்டு ரேஷ்மியை நினைத்து கொண்டே தன் கையிலிருந்த விஸ்கியை குடித்தான்.
ஏய்.... நீ எங்க டி இருக்க.... என்னை ஏன் இப்படி டார்ச்சர் பண்ற.... என்று கத்தி.... கையில் இருந்த பாட்டிலை தரையில் போட்டான். பீச் மணல் என்பதால் உடையவில்லை. கூட்டம் அதிகம் இல்லாததாலும் கடல் அலைகள் சப்தத்தினாலும் அவன் கத்தியது யாருக்கும் கேட்கவில்லை.
கிளம்ப சொல்லி ஒரு கான்ஸ்டபிள் வந்தார்... அங்கிருந்தவர்கள் கிளம்பினார்கள்.... விஷ்வா விடம் வந்து கிளம்ப சொன்னார்.
கிளம்பனுமா? முடியாது.... என்ன பண்ணுவீங்க.... என்றான்.
டேய்.... தண்ணி அடிச்சிருக்க.... ஒழுங்கா போயிடு.... அப்புறம் உள்ள தூக்கி உக்கார வச்சிடுவேன்.
என்னை உள்ள வைப்பியா? அவ்ளோ தைரியம் இருக்கா உனக்கு? என்னை யாருன்னு நினைச்ச?
தம்பி.... மரியாதையா பேசு.... கிளம்புற வழியை பாரு....
முடியாது.... உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என்று மண் தரையில் உட்கார்ந்து கொண்டான்.
அவர் விசில் அடித்து இன்னொரு கான்ஸ்டபிளை வரவழைத்து அவனை இழுத்துக் கொண்டு போலீஸ் ஜுப்பில் ஏற்றினார்கள்.
ஏய்... நான் யாருன்னு தெரியாம இப்படி பண்றீங்க...
சார் இவனை பார்த்தா பெரிய இடத்து பையன் மாதிரி இருக்கான்... என்றார் இன்னொரு கான்ஸ்டபிள்.
இருக்கட்டுமே... அதுக்காக அவன் என்ன பேசினாலும் நாம சும்மா இருக்க முடியுமா என்று சொல்லி போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று அங்கிருக்கும் பெஞ்ச் சில் உட்கார வைத்தனர். குடி மயக்கத்தில் இருந்தான் விஷ்வா.
தொடரும்....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
ஓ பி பில்டிங்கில் சென்று இன்ஜெக்ஷன் போட்டுக் கொண்டு கேன்டீனிற்கு சென்றனர்.
விமல் விஷ்வாவடம்....
மச்சான்... இங்க எப்படி டா அவள கண்டுபிடிக்கிறது?
அங்கு வேலை செய்பவரிடம் விஷ்வா சென்று... அண்ணா... இங்க காலேஜ் பில்டிங் எந்தப் பக்கம்?
அந்தப் பக்கம் தம்பி.... ஆனா படிக்கிற பசங்க, சொல்லிக் கொடுக்குற வாத்தியாருங்க, அப்புறம் டாக்டருங்க.... இவங்கள தவிர யாரும் அங்க போக முடியாது... என்றார் அவர்.
அப்போ யாரையாவது பாக்கனும்னா?
அவங்க பேரு, டிபார்ட்மெண்ட் எல்லாம் சொன்னா... அழைச்சிக்கிட்டு வருவாங்க...
ஹா ஹா ஹா என்று சிரித்தான் ஜானி.... பேரே தெரியாது இதுல டிபார்ட்மெண்ட் வேற சொல்லனுமாம்.
ஏய் மூடு டா என்றான் விஷ்வா...
தம்பி, லஞ்ச் டைம்ல நிறைய பேர் வந்து சாப்பிட்டுவிட்டு போவாங்க... அப்போ வேணும்ன்னா... வெயிட் பண்ணி பாருங்க ப்பா...
தேங்க்ஸ் அண்ணா... என்று சொல்லி ஒரு இரண்டாயிரம் ரூபாய் நோட்டை அவர் பாக்கெட்டில் வைத்தான்.
அவர் வாய் நிறைய புன்னகையுடன்.... தேங்க்ஸ் தம்பி... எப்போ வேணும்னாலும் என்னை வந்து பாருங்க என்று சொல்லி அவருடைய ஃபோன் நம்பரை மற்றும் பெயரை சொன்னார். அவருடைய பெயர் மணி.
மச்சி நம்ம காலேஜுக்கு போக வேண்டாமா? என்றான் கணேஷ்.
ஷ்ஷ்... என்றான் விஷ்வா.
மற்ற மூவரும் அங்கிருந்த பெண்களை பார்த்து ஜொல்லு விட்டுக் கொண்டு இருந்தனர்.
ஆனால் விஷ்வா அவளின்(ரேஷ்மி) நினைப்பிலேயே இருந்தான்.
மச்சி... அவள் விட இங்க இருக்கிற பொண்ணுங்கல பாரு டா... அவள மறந்திடுவ... என்றான் விமல்.
ஆனால் இவர்கள் பேசியதை எதையுமே காதில் வாங்காமல்.... அவள் அவன் கையை பிடித்து ஸ்டாப்... ஸ்டாப்... என்று கத்தியதையே நினைத்து கொண்டிருந்தான்.

லஞ்ச் டைம் வந்தது. அழகு தேவதைகள் ஊர்வலம் வருவது போல் பலர் வந்து போயினர். ஆனால் ரேஷ்மி வரவில்லை.
லஞ்ச் டைம் முடிந்தது.
தம்பி இதுக்கு மேல யாரும் வரமாட்டாங்க என்று சொன்னார் மணி.
மச்சி.... நாளைக்கு பஸ் ஸ்டாண்டில் பாதுக்கலாம் என்றான் ஜானி.
சரி என்று சொல்லி கிளம்பினான் விஷ்வா.
மறுநாள் பஸ் ஸ்டாண்டில் வெகு நேரம் நின்றார்கள் ஆனால் அவள் வரவில்லை. அன்று அவள் தன் அண்ணன் ராகவுடன் காலேஜ் சென்றுவிட்டாள். பிறகு அவர்கள் நால்வரும் அவர்களுடைய காலேஜுக்கு சென்றனர்.
அடுத்த இரண்டு நாட்களுமே.... அவர்கள் பஸ் ஸ்டாண்டில் வெயிட் செய்து பார்த்துவிட்டு காலேஜூக்கு போனார்கள்.
விஷ்வா... அவனுடைய நண்பர்களிடத்தில் கோபப் பட்டான். நீங்க எல்லாம் என்னோட பிரண்ட்ஸா டா? அந்த பொண்ணு பேரு கூட உங்களால கண்டுபிடிக்க முடியல.... சே.... என்று திட்டிவிட்டு சென்றுவிட்டான்.
அவன் சென்றவுடன்....
ஏய் என்னடா ஆச்சு இவனுக்கு.... அந்த பொண்ண நம்ம யாரும் ஒழுங்கா கூட பாக்கல... அவளே எதிர்ல வந்தா கூட நமக்கு தெரியாது.... நம்ம கிட்ட இவன் இப்படி கோச்சிக்கிறான். என்றான் கணேஷ்.
ஆமாம் டா.... நான் தான் இரண்டாயிரம் ருபாய் நோட்டை கொடுத்தேன்... எனக்கே அவ ஃபேஸ் நியாபகம் இல்லை என்றான் விமல். நம்மலால என்ன பண்ண முடியும்...
சரி வாங்க டா... அவன் கிட்ட போய் பேசலாம். இவன் இவ்வளோ சீரியஸ்ஸா அந்த பொண்ண தேடுவான்னு நினைக்கல என்றான் ஜானி.
மூவரும் சென்று.... மச்சி சொல்றோம் ன்னு கோச்சிக்காதா டா.... எங்களுக்கு அந்த பொண்ணோட முகம் கூட ஞாபகம் இல்லை.... நாங்க எங்க... எப்படி தேட முடியும் என்றான் விமல்.
ஒரு நிமிஷம் மௌனமாக இருந்து விட்டு பின்....
ஸாரி மச்சீஸ்.... என்று சொல்லி கிளம்பிவிட்டான்.
டேய் டேய் என்று மூவரும் கூப்பிட்டு கொண்டே இருக்க... அவன் காதில் வாங்காமல் காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.
வைஷாலி விஷ்வாவிற்கு கால் செய்தாள்.

டேய்.... எங்கடா இருக்க?
என்ன வேணும் உனக்கு?
இல்லடா... என் கார் பஞ்சர் ஆயிடிச்சு. அதான் நீ இந்த பக்கம் இருந்தா அப்படியே உன் கூட வீட்டுக்கு போலாம் ன்னு பார்த்தேன்.
இல்ல... நான் வர லேட் ஆகும். அப்பாவுக்கு கால் பண்ணி வேற கார் அனுப்ப சொல்லு....
டேய்.... கால் பண்ணிட்டேன். அப்பா எடுக்கல. மீட்டிங் ல இருக்காரு போல... அம்மா கோவிலுக்கு போயிருக்கிறதா சொன்னாங்க...
மிச்.... கால் டாக்ஸி புடிச்சி போயேன்.... என்றான்.
எப்பவுமே அப்படி பேசாதவன் இவ்வாறு பேசுகிறான் என்றால் நிச்சயமாக ஏதோ பிரச்சனை என்று புரிந்து கொண்டாள் வைஷாலி.
ஓகே டா....ஸாரி என்றாள்.
அக்கா ஸாரி சொன்னவுடன் அவனுக்கு என்னவோ போல் ஆனது.
அக்கா.... ஸாரி என்றான் விஷ்வா.
விஷ்வா.... ஒண்ணும் பிரச்சனை இல்லை. நான் பாத்துக்கிறேன். நீ ஏதோ டென்ஷன் ல இருக்குன்னு தெரியுது. பாத்துக்கோ என்று சொல்லி ஃபோனை வைத்தாள் வைஷாலி.
அக்காவிடம் அவ்வாறு பேசியதை எண்ணி.... அவனே நோந்துக்கொண்டான்.
மெக்கானிக்கு கால் செய்து காரை எடுத்துக் போக சொல்லிவிட்டு.
அவளுடைய ஃபோனை எடுத்து கால் டாக்ஸி புக் செய்தாள்.
அவளுக்கு அந்த இருட்டில் நிற்க சற்று பயமாக தான் இருந்தது.
இருபது அடி தூரத்தில் பஸ் ஸ்டாண்ட் இருந்தது. அங்கே போய் நின்று கொண்டாள்.
வண்டி வந்ததும் அதில் ஏறி வீட்டிற்கு சென்றாள்.
மூன்று முறை கால் செய்தான் விஷ்வா.
அக்கா... எங்க இருக்க?
வண்டி புக் பண்ணிட்டு வெயிட் பண்றேன்...
ஓகே லைவ் லோகேஷன் ஷேர் பண்ணு....
சரி என்று ஷேர் செய்தாள்.
ஏன் ரொம்ப நேரம் அந்த சிக்னல்ல நிக்குது என்றான்.
டிராஃபிக் ஜாம் டா என்றாள் வைஷாலி.
ஓகே ஓகே...
வீட்டிக்கு போயிட்ட இல்ல....
அதான் நீயே லைவ் லோகேஷன் ல பாத்துட்ட இல்ல... அப்புறம் என்ன? என்று சிரித்துக் கொண்டே கேட்டாள். இதுக்கு நீயே வந்து என்னை பிக்கப் பண்ணிருக்கலாம்... என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.
சரி வைக்கிறேன் என்றான் விஷ்வா.
அவன் பீச்சில் அமர்ந்து கொண்டு ரேஷ்மியை நினைத்து கொண்டே தன் கையிலிருந்த விஸ்கியை குடித்தான்.
ஏய்.... நீ எங்க டி இருக்க.... என்னை ஏன் இப்படி டார்ச்சர் பண்ற.... என்று கத்தி.... கையில் இருந்த பாட்டிலை தரையில் போட்டான். பீச் மணல் என்பதால் உடையவில்லை. கூட்டம் அதிகம் இல்லாததாலும் கடல் அலைகள் சப்தத்தினாலும் அவன் கத்தியது யாருக்கும் கேட்கவில்லை.
கிளம்ப சொல்லி ஒரு கான்ஸ்டபிள் வந்தார்... அங்கிருந்தவர்கள் கிளம்பினார்கள்.... விஷ்வா விடம் வந்து கிளம்ப சொன்னார்.
கிளம்பனுமா? முடியாது.... என்ன பண்ணுவீங்க.... என்றான்.
டேய்.... தண்ணி அடிச்சிருக்க.... ஒழுங்கா போயிடு.... அப்புறம் உள்ள தூக்கி உக்கார வச்சிடுவேன்.
என்னை உள்ள வைப்பியா? அவ்ளோ தைரியம் இருக்கா உனக்கு? என்னை யாருன்னு நினைச்ச?
தம்பி.... மரியாதையா பேசு.... கிளம்புற வழியை பாரு....
முடியாது.... உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என்று மண் தரையில் உட்கார்ந்து கொண்டான்.
அவர் விசில் அடித்து இன்னொரு கான்ஸ்டபிளை வரவழைத்து அவனை இழுத்துக் கொண்டு போலீஸ் ஜுப்பில் ஏற்றினார்கள்.
ஏய்... நான் யாருன்னு தெரியாம இப்படி பண்றீங்க...
சார் இவனை பார்த்தா பெரிய இடத்து பையன் மாதிரி இருக்கான்... என்றார் இன்னொரு கான்ஸ்டபிள்.
இருக்கட்டுமே... அதுக்காக அவன் என்ன பேசினாலும் நாம சும்மா இருக்க முடியுமா என்று சொல்லி போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று அங்கிருக்கும் பெஞ்ச் சில் உட்கார வைத்தனர். குடி மயக்கத்தில் இருந்தான் விஷ்வா.
தொடரும்....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.