• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

இதயம் 2

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2023
264
48
43
Salem
மருத்துவமனையின் அறை வாசலில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான் ரிஷி.. உள்ளே அவனின் மனைவி விசாலிக்கு மருத்துவம் நடந்து கொண்டிருந்தது.

இன்னும் எத்தனை வலிகளை தன்னவள் அனுபவிக்க போகிறாள்.
அவளை இதிலிருந்து எப்படி மீட்க போகிறோம் என்றே புரியவில்லை.

இன்று எப்படியும் வழக்கமான செக்கப் தான் செல்ல வேண்டும்.. அதற்காக தான் தன்னவள் காத்திருந்தாள். அவனும் வேகமாய் உள்ளே சென்று குளித்து வெளியே வரும் சமயம் பெண்ணவளோ மயக்கத்தின் பிடியில இருக்க மனதில் எழுந்த வலியுடன் வேகமாய் ஆடையை மாற்றி கொண்டு அவளை அள்ளி எடுத்து கொண்டு மருத்துமனைக்கு வந்துவிட்டான்.

உயிரில்லா கூடாய் வெளியே நடமாடி கொண்டிருந்தவனை கண்ட அவனின் குடும்ப மருத்துவர்,

"ரிஷி எதுக்கு இப்போ இப்படி நடந்துட்டு இருக்க.. உன்னோட சாலாக்கு எதுவும் இல்லை.. எப்பவும் நடக்கறது தானே.. நாம எத்தனை முன் ஜாக்கிரதையா இருந்தாலுமே இது போல அப்பப்ப நடக்கறது சகஜம் தான் மேன்.. நீ தான் அவளை தேத்தனும்.. ஆனா நீயோ இப்படி கலங்கி போனா அவளை யாரு தேத்துவா.. மயக்கத்துல தான் இருக்கா.. சீக்கிரமே கண் விழிச்சிடுவா.. போய் பாரு.." என்ற படி அவர் தன் கடமையை செய்ய சென்றார்.

தன் மனைவியை காண வேகமாய் உள்ளே சென்றவன் அங்கே வாடிய பூங்கொடியாய் படுத்திருந்தவளை காண உள்ளம் நொந்து போனான்.

"நான் உன் வாழ்க்கையில வராம இருந்துருந்தா நீ நிம்மதியா இருந்திருப்பே இல்லை சாலா.. என்னால உன்னை இப்படி பாக்க முடியலை டி.. நான் எப்படி இருந்தவன்.. ஆனா இன்னைக்கு உனக்காக நடுங்கி போய் இருக்கேன் டி.. வாழ்க்கை ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு திருப்பு முனையை வச்சிருக்கும்.. எனக்கான திருப்புமுனை நீதான் டி..

உன்னை இழந்தேனா என்னால வாழ முடியாது சாலா.. என் உயிர் உடல் பொருள் ஆவி எல்லாத்துலயும் நீ மட்டும் தாண்டி இருக்கே..

நீ எப்போ என்னை பிரிஞ்சி போவியோன்னு மனசு கிடந்து தவிக்குதுடி.. உனக்கு பழசு எல்லாம் ஞாபகம் வந்துச்சின்னா என்னை விட்டு போயிடுவியா சாலா.. அதை என்னால நிச்சயமா தாங்கிக்க முடியாது டி.." என்று புலம்பியவனுக்குள் மனம் முழுக்க நடுக்க விரவி பரவி கிடந்தது.

எங்கே தன்னவள் தன்னை விட்டு நீங்கி விடுவாளோ என்ற எண்ணமே அவனை பைத்தியமாக்கி கொண்டிருக்கிறது.

அதை அறிந்தாலும் கூட மனம் ஏனோ ஏற்க மறுத்தது.

பிழை அனைத்தும் தன் மேல் இருந்தாலும் அது தன்னவளின் மேல் தான் கொண்ட காதல் தான் என்று மூர்க்கமாய் அவனின் மனம் சிந்தித்தது.

அதே மருத்துவமனையில் கண்களை திறக்க முடியாமல் மெல்ல திறந்தாள் பெண்ணவள்.

அவளை அங்கே கொண்டு வந்து சேர்த்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது.. அதீதமான மன அழுத்தத்திலும் பயத்திலும் இமைகளை திறக்க முடியாமல் இருந்தவள் இன்று திறந்து விட்டாள்.

மெல்ல விழிமலர்த்தி தான் இருக்கும் இடத்தை பார்த்தவள் மெல்ல எழ முயன்றாள்.. அவளால் முடியவில்லை.. காலில் பயங்கரமாய் அடிபட்டிருந்தது.

ஒரு அடி கூட அவளால் எடுத்து வைக்க முடியவில்லை.. ஆனால் அதை தாண்டியும் எழ வேண்டும் என்ற வைராக்கியம் மனதில் உதிக்க மெல்ல கால்களை கீழே வைத்தாள்.

உயிர் போவது போல் வழித்தது.. கண்களில் கண்ணீர் கரைபுரண்டோட மீண்டும் எழுந்தாள்.

அதே நேரம் உள்ளே வந்த டாக்டரும் நர்ஸ் அவளை கண்டு விட்டு, "மேடம் நீங்க என்ன பண்றீங்க.. உங்க கால் பிராக்சர் ஆகியிருக்கு.. இதை மீறி நடந்தா உங்க காலுக்கு ஆபத்து மேடம்.." என்றார் பதட்டமாய் டாக்டர்.

"டாக்டர் என்னை யாரு இங்கே சேர்த்தாங்க.. எனக்கு இங்கிருந்து போகனும் டாக்டர்.." என்றாள் கைகள் நடுங்கியபடி.

"நீங்க ரோட்டுல அடிபட்டு இருந்தீங்க.. எனக்கு தெரிஞ்ச ஒரு பையன் தான் உங்களை காப்பாத்தி இங்கே கொண்டு வந்து சேர்த்தது.. உங்களோட முழு டிரிட்மெண்ட் க்கும் சேர்த்து அவரோ பே பண்ணிட்டு போனாரு மேடம்.. உங்க கால் சரி ஆகாமா நீங்க இங்கிருந்து போக முடியாது மேடம்.. உங்க பேரும் மத்த டீடெயில் எல்லாம் சொல்லுங்க.. இல்லை உங்க வீட்ல யாருக்காவது இன்பார்ம் பண்ணனுமா சொல்லுங்க.." என்றார் அவளை பரிசோதித்தபடி.

"இல்லை சார் எனக்கு யாரும் இல்லை.. நான் ஒரு அனாதை.. வேலை செஞ்சி என்னை காப்பாத்திகிட்டேன்.. நாலு ரவுடி பசங்க என்னை தொறத்துனதுல தான் தெரியாம வண்டி மேல வந்து விழுந்துட்டேன்.. அதுக்கு மேல என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியலை டாக்டர்.." என்றாள் கண்களில் வழியும் கண்ணீருடன்.

அவள் கூறியது பொய் என்று அவளுக்கு தெரிந்தாலும் உண்மையை கூற முடியாத நிலமை.

" சரிங்க மேடம் உங்க பேரு என்ன.."

"என்னோட பேரு.. கன்யா தேவகன்யா.." என்றாள் தடுமாறியபடி.

"உங்க ஊரு மேம்.. உங்களுக்கு மேரேஜ் ஆயிடுச்சா.." என்றாள் மேலும் அவளை தெரிந்து கொள்ள.

"சிஸ்டர் பிளீஸ் எனக்கு கொஞ்சம் தலையை சுத்துது.. நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன்.. அப்புறம் எனக்குன்னு யாருமில்லை.. நான் ஒரு அனாதை அப்படின்னு முன்னவே உங்ககிட்ட சொன்னதா நியாபகம்.." என்றாள் கண்களை மூடியபடி.

"ஓகே மேடம் நீங்க சொல்லிட்டீங்க தான்.. ஆனா உங்க கழுத்துல இந்த தாலி இருந்துச்சி.. இதை நாங்க உங்களுக்கு டிரிட்மெண்ட் பாக்கும் போது கலட்ட வேண்டிய சூழல்.. அது தான் மேம் கேட்டோம்.. ஓகே நீங்க ரெஸ்ட் எடுங்க.. இந்தாங்க உங்களோட தாலி.." என்றவள் தன் பாக்கெட்டில் இருந்த தாலியை எடுத்து அவளின் கைகளில் வைத்தாள்.

அதை தன் கைகளில் வாங்கி கொண்டவளின் கரங்கள் நடுங்கி போயின.

அந்த நர்ஸ் அவளை விட்டு சென்று விட தாலியை கையில் வைத்திருந்தவளின் கண்களில் அவளறியாமல் கண்ணீர் பொங்கியது.

அந்த தாலியை உயர்த்தி பார்த்தவளின் கண்கள் சந்தோஷத்தையும் துக்கத்தையும் வெளிப்படுத்தியது.

"என்னை நீங்க நம்பரை இல்லை.. இவ்வளவு தான் நீங்க என் மேல வச்ச காதலா.. நான் அப்படி செய்யறவளா.. என் உலகம் உயிரே நீங்க தான்னு நினைச்ச என்னை நடைபினமா ஆக்கிட்டீங்க இல்லை.. நான் வாழறதே இந்த பூமிக்கு பாரம் இல்லை.. யாருமில்லாத எனக்கு எல்லாமாவும் நீங்க இருந்தீங்க.. ஆனா இன்னைக்கு என்னை அனாதையா உணர வச்சிட்டீங்க இல்லை.. ஆனா என்னால உங்களை வெறுக்க முடியாது.. உங்களோட நினைவோட தான் வாழ போறேன்.." என்றவள் அந்த தாலியை தன் நெஞ்சோரம் வைத்து அழுத்திக் கொண்டாள் தன்னவனின் நினைவுடன்.

நந்தா குரூப்ஸ் காலை நேர பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தது.

தன் காரை நிறுத்திவிட்டு கம்பீரமாய் இறங்கி நடந்து வந்தான் தேவநந்தன்.

அவனை கண்டதும் வேலை செய்பவர்கள் தன்னியல்பு போல அவனுக்கு ஒரு வணக்கத்தை செலுத்திவிட்டு தங்களின் வேலையை பார்த்து கொண்டிருந்தனர்.

அனைவரிடமும் ஒரு தலையசைப்பை செலுத்திவிட்டு தன்னறைக்கு வந்தவன் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

அவன் அலுவலகத்திற்கு வந்த அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஒரு நவநாகரிக யுவதி அவனின் அறைக்கதவை தட்டாமல் திறந்த படி வந்தாள்.

" ஹாய் டார்லிங்.." என்றவளின் உடை அறைக்குள் மட்டுமே அணிய உகந்தது.

ஆனால் அதை அணிந்து கொண்டு வெளியே வருகிறாள்.

அவளை கண்டவன் எதுவும் சொல்லாமல் தன் வேலையை பார்க்க அவளோ அவனருகில் வந்து அவன் கழுத்தில் தன் கைகளை கட்டி கொண்டவள்,

"என்ன டார்லிங் நான் சொன்ன ஹாய்க்கு கூட பதில் சொல்லலை.." என்றபடி கொஞ்சினாள்.

"முதல்ல கையை எடு மெர்லின்.." என்றான் காட்டமாய்.

"ஏன் டார்லிங் இது ஆபிஸ்னு பாக்குறியா.." என்றாள் கண்ணடித்தபடி.

"இல்லை என் மேல கம்பளி பூச்சி ஊறுற மாறி இருக்கு.. எனக்கு பிடிக்கலைன்னு சொல்லியும் நீ இப்படி பன்றது ஐ நாட் லைக் தட்.." என்றபடி தன் வேலையில் கவனமாய் இருந்தான்

" என்ன பன்றது டார்லிங்.. ஆனா எனக்கு உன்னை ரொம்பவே புடிச்சிருக்கே.. சரி சொல்லு எப்ப கல்யாணம் செஞ்சிக்கலாம்.." என்றாள் மோகமாய் அவனை பார்த்தபடி.

"புல்ஷீட் நான் எப்போ உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன்.. எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனதை மறந்து போனியா மெர்லின்.. உனக்கு நான் எந்த வார்த்தையும் கொடுக்கலை.. இனி ஒரு முறை என்கிட்ட இப்படி பேசிட்டு வராதே.. சின்ன வயசுல இருந்து உன்னை தெரியும்ங்கிற காரணம் தான் நீ இப்போ என்னோட ஆபிஸ் உள்ளே வர முடியுது.. இல்லை என் கம்பெனியில கால் வைக்கவும் உனக்கு தகுதி இல்லை.. இனி இப்படி என் முன்னாடி பேசிட்டு வராதே.. ஜஸ்ட் நீ என்னோட சைல்ட் ஹீட் பிரண்ட்.. அவ்வளவு தான் நமக்குள்ள உறவு.. இனி ஒரு முறை என்னை நெருங்க நினைச்ச நான் மனுசனா இருக்க மாட்டேன் பாத்துக்கோ.." என்று அவளை பார்த்து கர்ஜித்தபடி அங்கிருந்து சென்றான்.

போகும் அவனை மையலுடன் பார்த்து கொண்டிருந்தவள்,

"தேவா பேபி என் கழுத்துல நீ தாலி கட்டுவே.. அதுக்காக தானே நான் வந்தேன்.. நீயும் உன்னோட சொத்தும் எனக்கு தான் சொந்தம்.. அதை யாருக்காகவும் விட மாட்டேன்.. அது போல திரும்பவும் அவளை உன் வாழ்க்கையில வர விட மாட்டேன்.. நீ எப்பவும் எனக்கு மட்டும் தான் பேபி.." என்று நினைத்தவளின் கண்கள் இரண்டும் சிவந்து போனது.

அவன் எப்படி தன்னை தாண்டி போகலாம் என்ற எண்ணத்தில். கூடிய சீக்கிரமே உன்னை என் கால்ல விழ வைக்கிறேன் தேவநந்தன் என்று சூல் உறைத்துக் கொண்டாள்.

இங்கே வெளியே வந்தவனுக்குள் எண்ண அலைகள் எங்கெங்கோ மோதி பறந்தது.

ஆனால் மெர்லின் தன்னை தீண்டிய நொடி உடலில் கம்பளி பூச்சி ஊர்வதை போல் உணர்ந்தவன் மனமெங்கும் தன்னவள் தீண்டிய நொடியே தேடியது.


இங்கே மயக்கத்தில் இருந்து கண் விழித்த விசாலி தன் அருகே அமர்ந்திருந்த தன்னவனை கண்டவள் மென்மையான சிரிப்புடன்,

"மாமா.." என்றழைத்தாள் மென்மையாய்.

அவளின் குரலில் தன் நினைவில் இருந்து வந்தவன்,

"சாலா இப்போ எப்படி மா இருக்கு.. டாக்டரை வர சொல்லவா டா.. என்னை கொஞ்ச நேரத்துல பயமுறுத்திட்டியே டி.." என்றான் தவிப்பாய் அவளை தாவி அணைத்தபடி.

தன்னவன் அணைப்பில் மெழுகாய் உருகி போனவள்,

"மாமா இங்கே பாரு எனக்கு எதுவும் இல்லை.. நீ ஏன்டா இப்படி பயப்படற.. இங்கே பாரு எனக்காக நீ இப்படி தவிச்சி போய் நிக்கறதை நினைச்சா மனசே கஷ்டமா இருக்கு டா.." என்றபடி அவனை தன்னருகே இழுத்து அவனின் நெற்றியில் காதலுடன் அழுத்தமாய் இதழ் பதித்தாள்.

அவளின் காதலான முத்தத்தில் எப்போதும் போல் தன்னை தொலைத்தவன் இன்னும் இறுக்கமாய் அவளை அணைத்து கொண்டான்.

ஏனோ அவனின் இறுக்கத்தில் ஒரு தவிப்பு இருந்ததை உணர்ந்த பெண்மனம் அது தனக்கானது என்பதில் சிறிதும் ஐயமில்லாமல் இருந்தது.

" டேய் ரிஷி எதுக்கு இப்போ இந்த தவிப்பு.. நான் உன்னை விட்டு அப்படி எங்கே போயிட போறேன்.. நம்ம மரணம் தான் நம்மை பிரிக்கும் மாமா.. அதுனால கலங்கி போய் நிக்காத மாமா.." என்றாள் மென்மையாய் அவனின் தலையை வருடியபடி.

"வேண்டாம் சாலா அப்படி மட்டும் சொல்லாதடி.. அந்த மரணம் கூட உன்னையும் என்னையும் பிரிக்க முடியாது.. அதை தாங்குற சக்தி உன் மாமானுக்கு இல்லை டி.." என்றபடி அவளின் இதழை சிறை செய்தான் வன்மையாய்.

முன்பே அவனின் வன்முத்தத்திற்கு பழகி போனதால் அதற்கு தானும் இசைந்து கொடுத்தாள் பெண்ணவள்.

ஆனால் உண்மையில் அவனின் மனமோ, 'சாலா சாலா உண்மை தெரிஞ்சும் என்னை விட்டு போயிடாதடி.. கூட இருந்தே தண்டனை கொடுத்துடு டி.. என்னவோ இப்பல்லாம் அதிகமா பயம் இருக்கு டி..' என்றவனின் மனம் ஊமையாய் அழுத்து.

அப்படி என்ன உண்மையை அவளிடம் மறைத்து வாழ்கிறானோ..?


தேவகன்யா தேவநந்தன் ரிஷி விசாலி இவங்களுக்குள்ளே ஏதோ ஒரு ஒற்றுமை இருக்கா மக்களே.. அது என்ன கொஞ்சம் சொல்லிட்டு போறீங்களா.. புதுசா வந்த இந்த மெர்லின் யாரு பா.. கமெண்ட் பண்ணுங்க மக்களே.


இதயம் நுழையும்..
✍️
 

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,274
498
113
Tirupur
மொத்த குழப்பத்தையும் நீங்க கொடுத்துட்டு தெளிவு எங்ககிட்ட இது நல்லா இருக்கே