அவளின் சத்தம் கேட்டு “என்ன ஆச்சு?”என கதவை அர்ஜுன் திறந்து பார்க்க,
அப்போது தான் உணர்ந்தாள் ’நடந்தது அனைத்தும் கனவு’ என்று
ஆனால் அவனிடம் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் “ஏய் எதுக்கு வந்த வெளியே போ “என அவள் ஒரு விரலை அவன் முகத்திற்கு நேராக நீட்டி சொல்லவும்
“ ஏய் லூசாடி, நீ தானே இப்போ என் பேரை சொல்லி கூப்பிட்ட” என அவன் கேட்க
“நான் எதுக்கு உன் பேரை சொல்லி கூப்பிட போறேன்.முதல்ல வெளியே போ இப்படித்தான் டிரஸ் மாத்தும் போது எட்டி பார்ப்பியா?” என்று அவள் அவனிடம் கோப முகத்தையே காட்ட
அவன் தலையை சொரிந்தவரே ’அர்ஜுன் அப்படி சொல்லி கூப்பிட்ட மாதிரி தான் இருந்துச்சு இல்லன்னு சொல்றா, ஒருவேளை நம்ம மன பிராந்தியா இருக்குமோ’ என யோசித்துக் கொண்டே வெளியே செல்லவும்
அவள் கதவை ’படார்’ என்று மூடிவிட்டு
’எனக்கு ஏன் இப்படி எல்லாம் தோணுது’ என தன்னை தானே கேட்டுக் கொண்டே உடைகளை மாற்றவும்
இப்போ கதவை அவள் திறந்து விட அவன் அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவன் போல் உள்ளே வந்ததும் லேப்டாப் முன்னே உட்கார
மீரா எதையும் பேசவில்லை. அவன் லேப்டாப்பில் ஏதோ வேலை செய்து கொண்டு இருக்க
அவன் விரும்பிய விஷயம் அவளுடன் இருக்கும் நேரம்.அவளுக்கு தேவையானது தனிமை, மன அமைதி.
அர்ஜுன் தன் லேப்டாப்பில், தனது உயர் அதிகாரியிடம் ஃபோனில் உரையாடிக்கொண்டிருந்தான்.
ஆனால் மீராவோ தன் வேலையை பார்த்துக் கொண்டே இருக்க அவன் அவளைப் பார்த்துக்கொண்டு ” கிவ் மீ 20 மினிட்ஸ் ஐ வில் சென்ட் தி மெயில்” என அவன் பேசிக்கொண்டு இருக்க
மீரா, தன் லேப்டாப்பில் கண்கள் முழுமையாக மூழ்கியபடி,மூக்கு ஓரத்தில் கீழ்நோக்கும் பார்வை. அவள் சுட்டி விரலால் தேர்வு மதிப்பீடு வட்டங்களை நிரப்பிக்கொண்டிருந்தாள்.
அவன் வேலையை பார்த்துக்கொண்டு இடையில் அவளையும் நோக்க, ஆனால் பதிலுக்கு அவளிடம் எந்த கவனமும் இல்லை, பார்வையும் இல்லை.
அவன் திரும்பவும் யாரிடமோ போன் பேசிக்கொண்டே “ஹோல்ட் ஆன் சார்”..என சிறிது காத்துக்கொண்டு, கையால் "ஒரு நிமிடம்..." என்று சைகை செய்தான்.அவள் பார்க்கவே இல்லை
கொஞ்ச நேரத்தில்” மீரா எவ்வளவு நேரம் உன்ன கூப்பிடறேன் பாக்கவே மாட்டேங்குற ,உன் கைல வச்சிருக்க பேனா, ஒரு நிமிஷம் குடு.அதுக்கு தான் இவ்வளவு நேரம் கூப்பிட்டேன்” என அவன் சொல்ல
“நீங்க கூப்பிடவே இல்லையே இப்ப தான் கூப்பிட்டது காதில் கேட்டது” என அவள் பதில் சொல்லவும்
“நான் தான் கையை ஆட்டிட்டு இருந்தேனே” என அர்ஜுன் கேட்க
“நீ காத்துல கைய அசைச்சா, அது எனக்கு எப்படி தெரியும் .நான் என்ன உன்னை பார்த்து ஜொள்ளு விட்டுட்டா இருக்கேன் உன்ன மாதிரி” என அவள் கோபமாக கேட்கவும்
இரண்டு கைகளையும் மேலே தூக்கி “அம்மா தாயே தெரியாம உன்கிட்ட பேனா கேட்டுட்டேன்”
’ஆமா ஜொள்ளு விடுறாங்க, இவ கோலி குண்டு கண்ணையும்,இவளையும் பார்த்து’ என சொல்லி கொண்டே லேப்டாப்பின் பட்டனை டொக் என்று தட்டினான்.
அவன் லேப்டாப்பை பார்த்துக் கொண்டே
“அவள் பேசாமலும், வாதிக்காமலும், சிரிக்காமலும் இருக்கும்போதும் அவள் முகத்தில் ஒரு அமைதிப் பாவனையை காண முடிகிறது.
ஆனால் என்கிட்ட ஏதாவது பேச ஆரம்பித்தாலே சண்டையில் தான் முடியும் போல” என நினைத்துக் கொண்டே தன் வேலையை தொடர்ந்தவன்
அதற்குள் யாழினி “அர்ஜுன் சாப்பாடு ரெடி சாப்பிட வா “ என சொல்லவும்
“சித்தப்பா சாப்பிட வாங்க “என ரித்விக் கூப்பிட
இதோ வரேன் என வந்து லேப்டாப்பை அப்படியே வைத்து விட்டு செல்ல
“ஹே மீரா நீயும் வா சாப்பிடலாம்” என அக்கா சொல்லவும்
“நீ போ, உன் கொழுந்தன கூப்பிட தான் வந்த போ”என அவள் சொல்லவும்
“சித்தி சாப்பிட வா போலாம் “என அவன் மீராவின் கையையும் பிடித்து இழுக்க
“நீ போ குட்டி நான் பின்னாடி வரேன்” என்று மீரா சொல்லவும்
“பசிச்சா வந்து சாப்பிடு “என சொல்லிவிட்டு யாழினி கீழே இறங்கவும்
கொஞ்ச நேரத்தில் அர்ஜுன் தன் மொபைலில் இருந்து ஒரு மெசேஜ்ஜை தட்ட அவளுக்கு அது ஒரு நோட்டிபிகேஷன் இல் வந்தது.
ஆனால் கண்கள் அசையவே இல்லை. அவன் பார்த்தான்.அவளுக்கு அவன் எதுவும் இல்லை. எதுவும் ஆகிவிடவில்லை, கழுத்தில் தாலி கட்டினால் கணவன் என அவள் ஏற்றுக்கொள்ளவே இல்லை .அப்போது எப்படி அவன் மெசேஜ்க்கு பதில் அனுப்புவாள் என தனக்குள் யோசித்தவன் அமைதியாக வந்து அமர
கொஞ்ச நேரத்தில் அவள் கீழே இறங்கி வந்து சாப்பிடுவதற்கு அமர,அவன் மெதுவாக அருகில் வந்து அமர்ந்தான்.
“அண்ணி நான் படிக்கும் போதெல்லாம் எங்க ஸ்கூல் டீச்சர் ரொம்ப சாஃப்ட் அவங்களுக்கு அப்பவே ஃபேன்ஸ் ரொம்ப.. இப்பவும் தான் டீச்சர் இருக்காங்களே மூஞ்ச உர் என்று வச்சுக்கிட்டு “என அவன் மீராவை பார்த்து சொல்ல
அவள் சற்று முகம் உயர்த்தினாள், பார்வையை அவன் மீது பதிய விட
“அண்ணி டீச்சர் எல்லாம் ரொம்ப பசங்க கூட ஃப்ரெண்ட்லியா இருக்கணும்,அப்பதான் பசங்க நல்லா படிப்பாங்க “ என்று அவன் சொல்லவும்
“இப்ப ஏண்டா அதை என்கிட்ட சொல்ற, நான் என்ன ஸ்கூலுக்கு போறேன?
எங்க சொல்லனுமோ அங்க சொல்லு” என அண்ணி அவன் தலையில் ஒரு கொட்டு கொட்டி செல்லமாக சொல்லவும்
அவன் அண்ணனும் சிரித்து விட
“அர்ஜுன் இங்க நீ சாப்பிட தான வந்த உன்கிட்ட டீச்சர் எப்படில்லாம் இருப்பாங்கன்னு யாராவது கிளாஸ் எடுக்க சொன்னாங்களா? “என மீரா கேட்கவும்
அவன் அமைதியாக, தன் பக்கத்து கப்பை எடுத்து அவளின் நெற்றியிலிருந்து விழும் கூந்தலின் ஒரு பகுதியைப் பார்த்துவிட்டுப் அவள் அழகை ரசித்தபடி
“அவளின் சாய்ந்த உடல் மொழி, அவளின் அமைதியாக எதையும் எதிர்வினையளிக்காத பாணி...
அதில் கூட ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அவள் பேசாமலேயே அவளிடம் முழு மனதையும் பறிகொடுத்து விட்டேனே“என தன் மனதில் எண்ணியவன் கைகளில் கிள்ளி விட்டு அவன் அண்ணி “சாப்பிடுடா போதும் என் தங்கச்சியை பார்த்தது” என சொல்ல
“இங்க இவன் சாப்பிட வந்திருக்கானா இல்லைன்னா என்ன ரசிக்க வந்து இருக்கானா” என மீரா யாழினியை பார்த்து கேட்கவும்
அர்ஜுன் மெதுவாக"நீ என்னை விரும்ப வேண்டாம். அதற்காக உன்னை ரசிக்காம இருக்க முடியுமா?"
“கண்ணுனு இருந்தா அழகா ரசிக்க தான் செய்வாங்க, சொல்லுங்க அண்ணி இதெல்லாம் உங்க தங்கச்சி கிட்ட “என அவன் சொல்லவும்
“ஏய் இப்ப உனக்கு கொஞ்ச நேரத்துல ஜூம் மீட்டிங் ஸ்டார்ட் ஆக போகுதுல்ல சீக்கிரமா சாப்பிட்டு போடா” என அண்ணன் சொல்லவும்
அவள் அவனைப் பார்த்துப் பேசவில்லை.அவனோ… பேசாமல் அவளை ரசிக்கிறான்.
இது காதலா? இல்ல காதல் வருவதற்கான அமைதியான ஆரம்பமா?
அவளுக்கே தெரியவில்லை.
ஆனால் அவன் கண்ணில் இருக்கும் அந்த பார்வை வெறும் ரசனை அல்ல.
அவளை புரிந்து கொள்ள விரும்பும் ஒரு ஏக்கம்.
ஆனால் மீராவின் மனதிலோ அவனை விரும்புவதற்கு அல்ல,அவனை புரிந்து கொள்ள கூட முயற்சி செய்யவில்லை..
அவள் சாப்பிட்டு முடித்து எந்திரிக்கவும் “அக்கா நான் ரூமுக்கு போறேன்” என சொல்லிவிட்டு செல்ல
அவள் சென்ற மறு நொடியே அவனும் கையில் இரண்டு ஜூஸ் போட்டு கொண்டு வரவும்
அவள் உள்ளே போய் சோபாவில் அமர்ந்து தன் மொபைலை பார்க்கவும்
அவன் இரண்டு கைகளிலும் ஜூஸ் டம்பளருடன் வந்து நிற்பதை பார்த்ததும் “இப்ப நான் உன்கிட்ட ஜூஸ் கேட்டனா எதுக்கு நீ இப்படி எல்லாம் பண்ற உன்கிட்ட கேட்காதது எல்லாம் நீ பண்ணிட்டு இருக்க, இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கல அர்ஜுன் “என அவள் சொல்ல
“உனக்கு கொண்டு வந்திருக்கேன் நான் சொல்லவே இல்லையே ,ரெண்டுமே எனக்கு தான் “என அவளை வெறுப்பேற்றுவதற்காக இரண்டு கிளாஸ் ஜூசையும் குடித்து முடித்து கீழே வைத்தவன்
“ரொம்ப தான் ஆசை இவங்களுக்கு போட்டு கொண்டு வருவாங்களா இவங்க உக்காந்தே குடிச்சிட்டு அப்படியே படுத்துபாங்கலாம் “ என சொல்லி லேப்டாப்பில் வேலையை தொடர
ஆனால் மீராவோ சாப்பிட்ட மயக்கத்தில் கொஞ்ச நேரம் சோபாவில் படுத்துக்கொண்டே மொபைலை பார்த்துக் கொண்டிருந்தவள் அப்படியே கொஞ்சம் கண் அசர
’என்ன இவள் இப்படி மதியம் சாப்பிட்டு தூங்குன அப்புறம் குண்டு குண்டுனு ஆகப் போறாள்,பரவால்ல எப்படி இருந்தாலும் அழகா தான் இருப்பா’ என அவன் மனதில் நினைத்துக் கொண்டு அவளைப் பார்க்க
அவளது தோளில் துப்பட்டா இடது கை மேலே, சறுக்கிக்கொண்டே இருக்க,
ஆனால் அவள் கண்கள் மூடிக்கொண்டே மெதுவாக அவளது விரல்கள் ஏதோ ஒரு இசைக்கு அசைத்தவாறு அவள் வயிற்றிலேயே தட்டிக் கொள்ள
ஒரு நிமிடம்… இரண்டு நிமிடம்…
அவளது கை நின்றுவிட,
அவள் தூங்கிவிட்டாள்.
அர்ஜுன் அருகிலேயே மேசையில் வேலை செய்து கொண்டிருந்தான்.
லேப்டாப்பில் எக்ஸெல் ஓப்பனாக, ஜூம் சேட் மேலே இருக்க, இன்னும் கொஞ்ச நேரத்தில் ஜூம் மீட்டிங் அவனுக்கு நடைபெற இருக்க,ஆனால் ஒருபோதும் அவன் முழு கவனம் அங்கே இல்லை.
அவன் பார்வை மெதுவாய் திரும்பியது அவளிடம்.
அவள் சோபாவில் சாய்ந்தவாறு, சற்றே சுழன்று இருந்தாள்.கண்ணாடி மெதுவாக மூடிய பக்கமாகக் சுழன்றது.
கொஞ்சம் சோர்வுடன் முகம், ஓர் அமைதியான குழந்தை தூக்கத்தில்.
மெல்லிய நெற்றி, சுவாசத்தின் மென்மையான ஓசை.
அவன் மெதுவாக தன் கைப்பிடியிலிருந்த லேப்டாப்பை கீழே வைத்தான்.அவளிடம் ஒரு சில அடிகள் மட்டுமே தூரம்.
ஆனால் அவளின் தூக்கத்திற்குள் முழு நெருக்கமாய் அவன் மனம் சென்றுவிட்டது.
அவன் மனதுக்குள் ஓர் எண்ணம்
“இந்த துப்பட்டா போல் எப்போது அவளது கழுத்தில் என் கைரேகைகள் எப்போது பதியப்போகிறதோ தெரியவில்லையே?
என்னை புரிந்து கொள்வாளா, இல்லை புரிந்து கொள்வதற்குள் காலமே முடிந்து விடுமா” என யோசித்துக் கொண்டே அருகில் வர
அவன் மெதுவாக எழுந்து, அவளது தோளில் இருந்து சரிந்து விழுந்த துப்பட்டாவே நேராக போட்டவன், அவளை பக்கத்தில் பார்த்து ரசித்தான்..
அவளின் கண்களின் அந்த கோலி குண்டு விழிகள் நடுக்கத்தில் மெதுவாக அசைய
அவன் எதுவும் பேசாமல் அவளின் முடிகள் நெற்றி பரப்பில் படர்ந்து கிடக்க, அதை மெதுவாக எடுத்து காதின் பக்கத்தில் சேர்த்தவன்
“எனக்கே தெரியாம நான் உன்னையே நேசிக்கிறேன் மீரா.. நீ நினைக்கிற மாதிரி நான் ஒன்னும் உனக்கு வாழ்க்கை கொடுக்க கல்யாணம் பண்ணல, உன்னை எனக்கு அண்ணா அண்ணி கல்யாணத்துல பார்க்கும்போதே ரொம்ப பிடிக்கும். ஆனா இப்ப கூட பாரு பிடிக்கும் என்பதை நீ தூங்கும்போது தான் சொல்ல வேண்டியது தான் இருக்கு” என அவளின் முகத்தை பார்த்து சொன்னவன்
“ ஒரு நாள் என்னை புரிஞ்சுகிட்டு என் கூட வாழ ஆரம்பித்து விடு,என்னை ரொம்ப தவிக்க விடாதடி முட்டக்கண்ணி”என சொல்லி பின்னால் திரும்பியபோது, அவன் கண்களில் சற்று ஈரமாகத்தான் இருந்தது.அவள் தூங்கும் அமைதியில் அவன் உள்ளம் முழுவதும் ஒளிந்து விட்டது.
அந்த நேரம்…
மீராவுக்குத் தெரியாது,அவள் தூக்கத்தில் கூட,
ஒரு உயிர் அவளுக்காக தன் முழு பாசத்தையும் மெளனமாய் விரித்துக் கொண்டிருப்பது..