• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் - 36 ஃபைனல்

Relay Stories

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
156
186
43
Karur
வியப்பில் விழி விரித்தவள் அதை பிரிக்க

அதற்குள் ஒரு சின்ன கடிகாரம் இருக்க

அவள் அதை திறக்க அதில் இருந்து

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்
உனக்கே உயிரானேன்...உனக்கே உயிரானேன்

என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதானே என் சன்னிதி

என்ற பாடல் இசைக்க ரோஜாவின் மனமோ அவனது காதலில் கரைந்து அவனை விழிகள் தேட

அதற்குள் நேரமாகிவிட்டது ரோஜா வா என சத்தம் கேட்டதும் கிளம்பி வந்தவள் தேவா எங்கவே என கேட்க அவன் முன்னே சென்றுவிட்டான் என்றனர்.

அண்ணன் என்ற முறையில் சில சடங்குகள் இருந்ததால் அவள் உறங்கும்போதே அதை வைத்து விட்டு முன்பே வந்து விட்டான் தேவா.

வரவேற்ப்பில் நின்று கொண்டு இருந்த தேவாவை இறங்கும்போதே பார்த்துவிட்டாள் ரோஜா .பட்டு வேஷ்டி சட்டையில் அவன் ஜொலிக்க சில மணித்துளிகள் நின்று அவனை ரசித்தவள் பின்னர் மெதுவாக நடந்து வர யாரிடமோ பேசிகொண்டே திரும்பியவன் ரோஜாவை பார்த்ததும் அப்படியே விழி அசையாமல் நின்றான்.

ரோஜா மலர்கள் அனைத்தும் ஒன்றுகூடி ஊர்வலம் வருவது போல அவள் நடந்து வர பலரது கண்களும் அவளின் மேல் தான் இருந்தது.

அவன் கொடுத்திருந்த கடிகாரத்தையும் கட்டி இருந்தாள்.மனம் சந்தோசத்திலும் காதலிலும் தளும்ப அவள் அருகே வந்தும் ரோஜா என அவன் அழைக்கும் முன் “ஹே தரணி “என்றபடி தரணியிடம் சென்று விட்டாள் ரோஜா.

தேவாவோ மிகவும்ஏமாந்து போக அங்கு இன்னொரு ஜீவனும் அவனை போலவே ஏமாந்து நின்றது.

பின்னர் ரோஜா பின்னால் தேவா செல்ல,தரணியை நாதன் துரத்த அவர்கள் இருவரும் இருவருக்கும் ஆட்டம் காட்டி கொண்டு இருந்தனர்.

கனவிலே காதலை வளர்த்து கண்டதும் அத சொல்லி பல இடர்பாடுகளுக்கு இடையே திருமணம் வரை வந்த ரதி ராம் இருவரும் அதன் உற்சாகம் முகத்தில் தெரிய அவர்கள் ஒரு உலகத்தில் சஞ்சரித்து கொண்டு இருந்தனர்.

தேவாவோ ரோஜா கைக்கு சிக்காமல் ஓடிக்கொண்டு இருப்பதை கண்டவன் கோபம் வர வேகமாக அவள் அருகில் செல்ல அதற்குள் “ஏம்மா இங்க வா” என ஐயர் அவளை அழைத்ததும் அவள் அங்கிருந்து நகர்ந்தாள்.

தேவாவோ ஐயரை திட்டிகொண்டே அவள் பின்னால் செல்ல அதற்குள் அவர் மாங்கல்யம் தட்டை கொடுத்து அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்க சொன்னார்.

அவள் அதை எடுத்து கொண்டு நடக்க தேவாவோ அவள் நடையில் தன்னை மறந்தவன் தன்னவளை ரசித்து கொண்டு நிற்க எல்லாரிடமும் வாங்கிவிட்டு அவனிடம் வந்தவள் தட்டடை நீட்ட அப்படியே அவளை உள்ளே இழுத்து அருகில் இருக்கும் அறைக்குள் சென்றவன் அவள் என்ன என கேட்கும் முன் அவள் இதழை சிறைத் செய்தவன் வெகு நேரத்திற்கு பின்பே அவளை விடுவித்தான்.

அவளோ மூச்சு திணறி சற்று தடுமாற அவளை தங்கி பிடித்தவன் “ஏண்டி நானும் பார்த்திட்டே இருக்கேன்....ரொம்ப சீன போட்ற என வேகமாக ஆரம்பித்து ..... அவளை முழுவதுமாக கண்களால் அளந்தவன் “அப்படியே மயக்கிற அம்லு” என காதலாக சொல்ல

அவ்ளோ வெட்கத்துடன் அவன் நெஞ்சில் முகம் புதைக்க ...”உனக்கு பிடிச்சு இருக்கா அம்லு” என அவன் கேட்ட பின்பே

அவள் நிமிர்ந்து உங்களுக்கு எப்படி தெரியும்....இந்த புடவை என ஆச்சிரியமாக அவனை பார்க்க

அவனோ அவளை பார்த்து அதெல்லாம் ரகசியம் என சொல்லி ஒரு மாதிரி கண்ணடித்து சிரிக்க

டேய் ராகன் உண்மையா சொல்லு...நீ அப்போ அங்கதான இருந்த.......கடைக்கு வரலைன்னு சொல்லிட்டு வந்திருக்கா...திருடா என அவனை செல்லமாக அவள் திட்ட

“ மனைவி இருக்கும் இடத்தில் இருப்பதே இந்த மணாளனின் பாக்கியம் அல்லவா என கமல் ஸ்டைலில் சொன்னவன் இன்னைக்கு முழுவதும் நீ என்கூடதான்” என சொல்ல

“டேய் இது உனக்கே நியாயமா இருக்கா” என்ற ஒரு குரல் கேட்க

இருவரும் அதிர்ந்து திரும்பி பார்க்க

அங்கு மணமக்கள் மற்றும் திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் அவர்களை பார்த்துகொண்டு நின்று இருந்தனர்.

“அய்யோ” என ரோஜா வெட்கத்துடன் தேவாவின் பின்னால் மறைய

“தேவாவோ டேய் என்னடா இது....... நியாயம் கேட்க நேரம் காலமே இல்லையா ...மனவறையில உட்காரத விட்டு இங்க வந்து வேடிக்கை பார்த்திட்டு இருக்க” என தேவா அவனை கேட்க

“ம்ம்ம்ம் எல்லாம் என் நேரம்.......ஏண்டா டேய் எட்டு வருசமா காதலிச்சு” என அவன் ஆரம்பிக்க அய்யோ போதுமே என கோரசாக குரல் வர

“பாரு எல்லாருக்கும் இதை கேட்டே அலுத்திடுச்சு........நானே கஷ்டப்பட்டு கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தி இருக்கேன்.....அது உனக்கு பொறுக்கலையா” என அவன் சலித்து கொள்ள

“என்னடா இது இப்படி சலிச்சுக்கிற...ஏண்டா என் பொண்டாட்டியை நான் கொஞ்சறது தப்பா” என அவன் புரியாமல் கேட்க

“நீ கொஞ்சறது தப்பில்லை...ஆனா என் பொண்டாட்டி கழுத்துல கட்ட வேண்டிய தாலியை நீ வச்சுக்கிட்டு கொஞ்சற பாரு அதான் கொடுமை”......என அவன் சொன்னதும் தான் ரோஜாவின் கையில் மாங்கல்யம் தட்டை பார்த்தவன்

“ஹிஹிஹி என வலிந்தவன் அச்சோ நண்பா சாரி...சாரி” என சொன்னான்.
10

“உன் சாரிய கொண்டு குப்பையில போடு”.......என்றவன் வேகமாக தட்டை வாங்க

அதற்குள் காவேரி அம்மாள் “என்ன ஐயரே நல்ல நேரம் முடிஞ்சுடுச்சா...இல்லினா வேற நாள்” என ஆரம்பித்ததும்

“என்னது .மறுபடியுமா என்றவன் இதோ இப்பவே தாலி கட்டிட்டேன்மா” என வேகமாக அவன் ரதியின் கழுத்திற்கு தாலியை கொண்டு செல்ல

“டேய் ஏண்டா அலையற....பேசாம மணவறைக்கு வா” என தேவா நல்லவனை போல் அவனை அழைத்து செல்ல

“ஏண்டா சொல்லமாட்ட.....கல்யாணமாகி ஆறு மாசம் குடும்பம் நடத்திட்டு... அதுவும் பத்தாம இப்பவும் இங்க குழப்பம் பண்ணிட்டு நீ பேசற இதை என புலம்பியபடி வந்தவன் பின்னர் ஐயர் தாலியை கீழே வைக்க சொல்ல வேண்டாம்...வேண்டாம்....நீங்க மந்திரத்தை முடிங்க அதுவரைக்கும் நானே வச்சிருக்கேன்” என சொன்னவன் ரதியின் கழுத்தில் தாலி கட்டிய பின்பே மூச்சுவிட்டான்.

பின்னர் அங்கு நடந்ததை வைத்து அனைவரும் கிண்டல் பண்ண சந்தோசமும் உற்சாகமமும் அங்கு நிரம்பி வழிந்தது.

தன் மனதிற்கு பிடித்தவளே மனைவியாக வர அந்த சந்தோசம் ராமின் முகத்தில் தெரிய ரோஜாவும் ராமின் அருகில் வந்து “நினச்சத சாதிச்சுட்ட மாம்ஸ் என்றவள் ரதியிடம் திரும்பி ரதி ராம் ரொம்ப நல்லவன் ரதி.....உன்னை தன உயிரை விட அதிகமா நேசிக்கிறான்.நீ புரிஞ்சு நடந்துக்கோ......இந்த திருமணத்திற்காக அவன் பட்ட பாடு கொஞ்சம் அல்ல என சொல்லி கொண்டே அவன் முகம் பார்க்க அவனோ எதுவும் சொல்லாமல் சிரித்து கொண்டே இருக்க.......உன்னோட நல்ல மனசுக்கு நீ நினச்சது எல்லாம் நடக்கும் ராம் என மனதின் அன்பை அவள் வார்த்தையாக வெளியே சொல்ல

“அச்சோ எங்க ரோஜாகுட்டி இப்படி பேசற அளவுக்கு பெரிய மனுசி ஆகிட்டிங்களா” என கிண்டலாக கேட்டவன்

“யாரோ ரவா உருண்டை போட்டாதான் இந்த திருமணத்திற்கு ஒத்து கொள்வேனு பேரம் பேசினதா நியாபகம் ...அது யாருன்னு உனக்கு தெரியுமா ரோஜா” என சொன்னதும்

“அய்யோ ஆமா ராம் சாப்பாட்ல ரவா உருண்டை இல்லைன்னு நினைக்கிறேன்.......இரு பார்த்திட்டு வரேன்” என அவள் செல்ல

“பாரு இவ்ளோ நேரம் பெரிய மனுசி மாதிரி பேசிட்டு இருந்தவ இப்போ பாரு...இதான் ரோஜா..”என சொல்லி சிரிக்க

......... அதே போல தேவாவின் காலில் விழுந்து வணங்கிய ரதி வார்த்தைகள் எதுவும் பேசாமல் கண்களில் கண்ணீர் நிற்க அவனோ “ரதிம்மா இப்பாவாவது இந்த அண்ணனை முழு மனசா ஏத்துகுவியா என அவளிடம் அவன் உரிமை வேண்டி நிற்க என்ன அண்ணா இப்படி சொல்லிடிங்க.....எனக்கு எல்லாமே நீங்கதானே” என அவன் நெஞ்சில் சாய்ந்தாள் அவன் அன்பு தங்கை.

இங்கு மரகதத்திற்கு காவேரியின் ஆதங்கம் தெரியவர அவரோ காவேரியிடம் சென்று “எனது சுபாவமே அப்டிதான்.மற்றபடி தான் யாரயும் குறைவாக மதிப்பிடமாட்டேன்......என் ஒரே பிள்ளை என் சொல் பேச்சை கேட்காமல் காதல் செய்து திருமணம் செய்துகிட்டான் என்ற ஆதங்கத்தில் முதலில் கொஞ்சம் பேசினேன்...இப்போது எல்லாம் அப்படி இல்லை என்றதும் காவேரியும் நானும் என் பிள்ளை என்னை விட்டு உங்களை பெரியவராக நினைத்து விட்டான் என்ற ஆதங்கத்தில் தான் பேசிவிட்டேன்.”என இருவரும் மன்னிப்பு கேட்டு கொண்டனர்.

அனைவரும் இப்படி சந்தோசத்தில் திளைத்திருக்க ஒரு ஜீவன் மட்டும் சோகமாக இருந்தது.

அவன் அருகில் சென்ற தேவா “டேய் ஏண்டா நீ மட்டும் சோக கீதம் வாசிக்கிற” என கேட்கவும்

“இல்லை மச்சான்......நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்...ஆனா அது ரொம்ப பிகு பண்ணுது” என்றான்.

“என்னது நீயா” என அதிர்ச்சியாக பார்த்தவன் ...”சரி விடு......யாரு பொண்ணு “என்றான் .

“எல்லாம் உனக்கு தெரிஞ்ச பொண்ணுதான் “என்றான்.

“எனக்கு தெரிஞ்சதா” என அவன் முழிக்க

“அதான் மச்சான் உன் ஜூனியர் தரணி” என சொன்னதும்

“டேய் “என அவன் கோபமாக ஆரம்பிக்க

“மச்சான் என் காதல் தெய்வீக காதல் ....நிஜமாவே லவ் பண்றேண்டா” என்றான்.

அவன் உண்மைய சொல்வது போல் தோன்ற “ஏண்டா அந்த பொண்ணு இங்கு வந்தே ஒரு மாசம்தான் ஆகுது...அதுக்குள்ள” என அவன் தயங்க

“காதல் வரதுக்கு மாசம் வருசம் எல்லாம் தேவை இல்லை மச்சான்...ஒரு நொடிதான்” என அவன் சொல்ல

அவனை முறைத்த தேவா “சரிடா பேசி பார்க்கலாம்”என்றான்.

தேவாவிடம் பொறுப்பை ஒப்படைத்த சந்தோசத்தில் கல்யாண கனவில் மூழ்கினான் நாதன்.

எல்லா வேலையும் முடிந்ததும் பட்டாபி கிளம்புகிறேன் என்றபடி வந்து நின்றான்.

அவனை பார்த்ததும் அருகில் வந்தவள் “சாப்ட்டியா பட்டாபி” என்றாள்.

அவன் சாப்பிட்டேன் என்று சொன்னதும்...”இல்லை நீ சாப்பிடலை என சொன்னாள் “ரோஜா.

பட்டாபி எதுவும் சொல்லாமல் அமைதியாக நிற்க

“சரி இங்கு வா” என ஒரு அறைக்குள் அழைத்து செல்ல

உள்ளே நுழைந்ததும் பட்டாபிக்கு சில நிமிடம் ஒன்று புரியவில்லை......சிறிது நேரம் கழித்த பின்பே “அம்மாஆஆஆஆ” என சொல்ல

“டேய் கருப்பா” என அவர் சொல்ல வேகமாக அவரிடம் ஓடிவந்து கட்டி பிடித்தவன் “எப்படி அம்மா இருக்க? ......என்னை எல்லாம் மறந்திட்டில” என அழுகையின் ஊடே கேட்க

பார்த்துகொண்டிருந்த அனைவர்க்கும் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.

“அவரோ இல்லை கருப்பா.......நீ ஜெயிலுக்கு போனதுக்கு அப்புறம் நாங்க இந்த ஊர்ல இல்லை......உங்க அப்பன் எங்களை கடலூருக்கு கூட்டிட்டு போய்ட்டான் என்றவர் நீ எப்டி இருக்க கருப்பா... இவதான் உன் தங்கச்சி என வத்தலாக ஒரு பெண்ணை காட்டியவர் இது அவளோட புருஷன்.......என சொன்னதும் அண்ணா” என அந்த பெண் அழைக்க பட்டாபி பாசத்தில் அழுதுவிட்டான்.

“ஆமா நீங்க எப்படி இங்க வந்தீங்க ..........நான் இருக்கிறது எப்படி உங்களுக்கு தெரியும் என கேட்க

“இந்த பொண்ணுதான் தேடி வந்திச்சு......,...அப்புறம் நம்ம கதை எல்லாம் சொல்லுச்சு. என்றவர் இவங்க உன்னை பத்தி என்னனமோ சொல்றாங்க.....நீ படிச்சு பெரிய ஆள் ஆகிட்டியாம்,,,,,,,நிறைய சம்பாதிகிறையாம்...எல்லாம் உண்மையா” என கேட்க

அப்போதுதான் சுற்றி நிற்பவர்களை பார்த்த பட்டாபி ஆமாம் அம்மா ...இவர்தான் என்னை வாழ வைய்த்த தெய்வம் என தேவாவை காட்டியவன் இவங்க அவரோட மனைவி ரோஜா என மற்றவர்களையும் அறி,முகம் செய்து வைத்தான்.

“இவங்கதான் கருப்பா எங்களை தேடி வந்தாங்க என ரோஜாவையும் தரணியையும் காட்டியவர் நான் முதல்ல நம்பவே இல்லை......அப்புறம் இவங்கதான் எனக்கு எடுத்து சொல்லி இங்க கூட்டிட்டு வந்தாங்க”......என சொல்ல

ரோஜாவை பார்த்தவன் கண்களில் இருந்து கண்ணீர் பெருக அவள் காலில் விழ செல்ல

“ஹே பட்டாபி என்ன இது” என அவள் பின்வாங்க

“இல்ல ரோஜா ...இதுல வயசு முக்கியம் இல்லை......என்னை ஒரு மனுசனா மதிச்சு என் குடும்பத்தை என்கிட்டே சேர்த்து வச்சில அந்த நல்ல மனசு தான்” என சொன்னவன் தரணிக்கும் நன்றி சொன்னான்.

“பட்டாபி நீ என்னை எப்படி நினச்சாலும் நான் உன்னை என் சகோதரனாக தான் நினைக்கிறேன்” என அவள் பாசத்துடன் சொல்ல

அனைவரும் ரோஜாவை பெருமையோடு பார்க்க பார்வதி சேகர் மரகதம் காவேரி அனைவரும் ரோஜாவை நினைத்து மனநிறைவு அடைய அவள் நாயகனே பெருமிதத்தோடு அவளை பார்க்க அவளோ அது எல்லாம் உன்னால்தான் என்பது போல் அவன் நெஞ்சத்தில் தஞ்சம் அடைய அப்போது அவளது கடிகாரத்தில் இருந்து



காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்

கண்மணி உனை நான் கருத்தினில் நினைத்தேன்

உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே என பாட “



ஆஹா இங்கும் சிச்வேஷன் சாங்கா” என நாதன் சொல்ல

தரணியோ அவனை பார்த்து முறைக்க

“டேய் தேவா பாருடா...இப்படி முறைச்சே என்னை கவுத்திட்டாடா என்றவன் நீ இப்போ அவகிட்ட பேசறியா இல்லை நானே பேசட்டுமா “ என கேட்க

“டேய் ஏண்டா மானத்தை வாங்கிற ....நான்தான் பேசறேன்னு சொன்னேன்ல” என அவன் காதை கடிக்க

அப்போது தரணி அவனை நோக்கி வர

“டோய் வரா...பேசுடா” என சொல்லிவிட்டு அவன் அமைதியாக நின்றான்.

அருகில் வந்தவள் “சார் அப்பா அம்மாவும் கிளம்பறாங்கலாம்...எதா இருந்தாலும் இப்பவே பேசி முடிக்க சொன்னாக என சொல்ல

தேவாவோ “அப்படியா தரணி பேசிட்டா போச்சு என்றவன் எதுக்கும் மாப்பிள்ளையிடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டாமா” என சொல்ல

“அதெல்லாம் எதுக்கு சார்...கட்டு தாலினா கட்ட போறாப்படி” என தரணி சொல்ல

“யார பத்தி பேசிட்டு இருக்கான்....தாலி அப்டின்னு சொல்லிட்டு இருக்கான்” என குழம்பிய நாதன்

“யாரு மச்சான் ..... தாலின்னு பேசறிங்க...யாருக்கு...மறுபடியும் ஒரு அடிமை சிக்கிட்டானா” என கேட்டான்.

“ம்ம்ம்ம் தரணிக்கு தான் கல்யாணம்” என தேவா சொல்ல

“என்னதூஊஊ என அதிர்ந்தவன் .....டேய் இதை நான் ஒத்துக்க மாட்டேன்”.....என அவன் அலற

“நீ என்ன ஒத்துகிறது தாலி கட்றவன் சரின்னு சொல்லிட்டான்” என தேவா சொல்ல

“அடபாவி இவ்ளோநேரம் கதை கேட்டு இப்போ அப்படியே திருப்பி போடறியா...நீயெல்லாம் நண்பனா என்றவன் ...நீ முதல்ல மாப்பிளை யாருன்னு சொல்லு” என கேட்டான்.

“ஏன் எதுக்கு போய் அடிக்க போறியா...டேய் வேண்டாண்டா....நான் சொல்றத கேளு ” என அவன் வேகமாக தடுக்க

உடனே நாதன் “ஏண்டா மச்சான் இப்படி...இப்படி உசுபேத்தி உசுபேத்தி தான் ரணகளம் ஆக்கிட்ரிங்க....நான் அவனை அடிச்சிட்டு ஜெயிலுக்கு போவேன் ...அப்புறம் வேற ஒருத்தன் என் டார்லிங் கழுத்துல தாலி கட்டுவான் ....இந்த வேலை எல்லாம் என்கிட்டே ஆகாது மச்சி... அப்படி எல்லாம் ஏமாறமாட்டேன்........நேரா போய் அவன் கால்ல விழபோறேன் மச்சி ....என் காதலியை எனக்கு விட்ருங்கனு...நான் அவளோட நூறு வருஷம் வாழணும்னு” என சொல்ல

அடபாவி இவ்ளோ வசனம் பேசுனது இதுக்குதான என எல்லாரும் கிண்டலாக சொல்ல

“அப்போ ரங்கநாதன் கால்ல தான் விழனும்” என தேவா சீரிசாக சொல்ல

“யாருடா அது எங்க இருக்கான்” என சொல்லி முடிக்குபோது தான் அவனுக்கு உரைக்க

‘டேய் நண்பா என அவனை பார்த்தவன்....இப்பவும் நான்தான் லேட்டா” என அப்பாவியாக கேட்க

“தேவாவோ சிரித்து கொண்டே ஆனாலும் இவ்ளோ அறிவாளியா நீ இருக்க கூடாதுடா” என்றவன்

“உனக்கு முன்னாடியே தரணி இதை பத்தி சொல்லி எல்லாம் பேசி முடிச்சாச்சு..... என்றவன் அவன் காதருகில் ஆனாலும் தரணி செம ஸ்பீடு மச்சான் ...உன் நிலைமை ரொம்ப கஷ்டம்” என சொல்ல

“பரவாயில்லை மச்சான்.... நமக்கு எப்பவும் சண்டி குதிரை தான் பிடிக்கும்” என சொல்லி கண்ணடிக்க

“டேய் மச்சான் பின்றடா என அவனை அணைத்த தேவா ஆனாலும் கொஞ்சம் பத்திரமா இருந்துக்கோ மச்சான் என்றவன் படவா உசிரே போகுதுன்னு சிச்சுவேஷன் சாங்கா போடற நீ......இருக்கு மொத்தமா ஆப்பு “என சொல்ல

“ ஹே தரணி எல்லாம் உண்மையா” என அவன் கேட்க ....அவளோ அவளது விழிகளை மேலே தூக்கி எப்படி என் திட்டம் என்பது போல் பார்வையாலே கேட்க

“டார்லிங்ங்ங் என சொல்லியபடியே அவளை அணைக்க வேகமாக அருகில் வந்தவன்

“டேய் இது மண்டபம் டா “என அனைவரும் கத்த

“ஏண்டா மண்டபம்னு தெரிஞ்சு நீ உன் பொண்டாட்டிய கட்டி பிடிக்களை...அங்க பாரு அவன் தாலி கட்டுன உடனே அடுத்த வேலை தொடங்கிட்டான்” என கையை நீட்ட

அங்கு ராம் ரதியை சரசமாக கொஞ்சி கொண்டு இருக்க அவளோ நெளிந்து கொண்டு இருந்தாள்.

“நீங்க எல்லாம் சந்தோசமா இருப்பீங்க.....நான் மட்டும் கடமை கண்ணியம் கட்டுப்பாடா என்ன கொடுமைடா இது” என அவன் சொல்லி முடிக்கும் முன்பே தரணி அவன் கன்னத்தில் முத்தமிட அதிர்ச்சியில் அவன் சிலையாக நின்றான் நாந்தான்.

அனைவரும் வாய் விட்டு சிரிக்க

அதற்கு பின் கிண்டலும் கேளியுமாக அங்கிருந்து கிளம்பினர்.

இந்த சந்தோசம் அவர்களின் வாழக்கை முழுவது தொடர மகிழ்ச்சியின் முகவரி இவர்களின் இருப்பிடமானது.





சுபம்.