உறவெனும் புது வானிலே
நாயகன் அருண்மொழிதேவன்
நாயகி…. கிருத்திகா
அத்தியாயம் … 1
டைரி
“நான் நிழலாய் வாழ்ந்தேன்…
என் கண்ணீரும் சிரிப்பும் யாரும் காணவில்லை.
இந்த நிழலால் நான் யாரும் இல்லையென நினைத்தேன்,
ஆனா நிஜத்தில் நான் தான் நிழல்.”
‘நீருண்ட மேகம் தான் சூல் கொண்டது. சூல் கொண்ட மேகமோ மசக்கை கண்டது. மசக்கை கண்ட மேகம் தான் ஆசைப்பட்ட விரும்பிய ஆடையைத் தேடியது….
தேடியதில் கருப்பு நிறம் கிடைக்க ஆசையாக அதைக் கட்டிக் கொண்டது.
கட்டிய ஆடையுடன் வான வீதியில் வலம் வந்தது.வான வீதியில் நடைப் பயிற்சியையும் செய்தது
பயிற்சி செய்ததும் வீண் போகாமல் எதிர்மறை மேகங்கள் மோதிக் கொண்டது
மோதிக் கொண்டதால் ஒளியும் மின்னல் வழி காட்டியது. ஒளி வந்தபின்பு ஒலியும் முழங்கியது
இசைக்கச்சேரியோடு மழை மேகமும் மண்ணில் பிரசவித்ததே மழையாகப் பொழிய காத்திருந்தது.
நுணலும் இசைக்கேற்ப ஆடக் காத்திருந்தது.
எங்கும் இருள் கருமை பூசிக் கொண்டது
அடர்ந்த விருட்சங்களின் வடிவமோ ராட்சத உருவங்களாக வாய் பிளந்து முழங்கக் காத்திருக்கிறது நினைவுகளின் சுமைகளை…
மண் மழைக்காகக் காத்திருந்திருந்தது… மலர்கள் மழையில் நனைய காத்திருக்கிறது…. மரங்களில் கூடு கட்டிய பறவைகள் தன் குஞ்சுகளை மழையில் நனையாமல் காக்க சிந்தித்துக் கொண்டிருக்கிறது…. ஆங்காங்கே ஓடும் வாகனங்கள் மழைக்கு முன் போய் விட வேண்டும் என்ற எண்ணத்தில் பறந்தாலும் மழையில் நனையும் சுகமே வேறு தான் என்ற குரல்கள் காத்திருக்கிறது மழைக்காக.
தனிமைப் புயலில் சிக்கிய ஒருவனும் மழைக்காகக் காத்திருந்தான்.
வானில் விழும் மழைத் துளியில் அவளின் சுகந்தம் தன்னைப் பூசிக் கொள்ளுமா… என ஆசைப்பட்டு காத்திருக்கிறான். அடர் மழையாகப் பொழிந்து அவளாக உருவெடுத்தயலு தன்னை இறுக்கிக் கட்டிக் கொண்டு ஒன்றாகக் கரைந்து போக வருவாளா காத்திருந்தான்.….
எத்தனை விதமான காத்திருப்புகள் அவனுள் தேங்கிக் கிடக்கின்றன.
அவனுள் அத்தனை ஏக்கங்கள், ஆசைகள், வெறுமைகள்…. தாங்க வியலாத கவலை சுவடுகளைச் சுமந்தபடி மாடியில் விழிகள் இருள் சூழ்ந்த வானத்தை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தவனுள் பல எண்ணப் போராட்டங்கள்.
அவன் யார்? ஏன் அப்படி எங்கோ வெறித்த இறுகின தோற்றம்…. இந்த வயதிலே அவனுக்குள் இத்தனை ஏக்கமஹ… பெருஞ்சுமைகளை சுமந்த நெஞ்சத்தினுள் தாங்கவியலாத சோகம் ஏன்?… அவனின் சோகத்தின் சூத்திரத்தாரி யார்?
அத்தனையும் உள்ளடக்கிய கேள்விகளைக் கேட்டாலும் மௌனமே பதிலாக நின்றிருந்தான் அருண்மொழிதேவன்.
ஏனென்றால்
மழைக்காக அவனும் காத்திருந்தான்… அம்மழையில் தன்னைச் சூழ்ந்த நிகழ்வுகளின் நிஜங்கள் அவனை வெகுவாகத் தாக்குவதை கரைத்து விடக் காத்திருந்தான் அருண்.
இதே மழை இரவில் தான் அவனின் வாழ்க்கை சூன்யமானது. அதற்கு யார் காரணம்? என்ற வினா அவனுள் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. வினாவிற்கு விடை தேடுவதா…. தன் மனதிற்கு சமதானம் செய்வதா என அறியாமல் திகைத்த காலங்களில் கூடச் சமாளிக்க தெரிந்தவனால் இப்போது இத்தனிமையும் மழையும் மீண்டும் அவன அச்சூழலிலே இழுத்து சுழற்றி அடிக்கிறது நிஜங்களின் கோரதாண்டவம்….
அவளை இம்மழையின் வாசத்தில் உணர முடியுமா…. அவள் இல்லாத இவ்வுலகம் இதே இருள் சூழ்ந்து தானே இருக்கிறது மனமெங்கும்…
அடைமழை கொட்ட தொடங்கியது. அதில் நனைவது கூட அறியாமல் நனைந்து கொண்டிருந்தவன் மேனியோ குளிர்ந்த நீரின் குளுமையை உணரவில்லை.
இந்த மழை சிலருக்கு வரம் தான்…. மிகவும் பிடித்தமான மழையை யாருக்குத் தான் பிடிக்காமல் போகும்… பலர் அவரவர் ரசனைகேற்ப ரசிப்பதுண்டு தானே…. ஏன் அவனே அப்படி ரசிப்பவன் தானே….. மழையின் சாரலில் நனைந்தபடி கைகளைக் கோர்த்து கொண்டு கோன்ஐஸ்க்ரீம் ஜில்னு நாவில் உணர்ந்து பேசியபடி வெகு தூரம் நடப்பது எத்தனை சுவாராசியமாக உணர்வினை தந்தது.
இதே மழை நீரில் தேநீர் அருந்தியபடி பெய்யும் மழை நீரை ஒருவர் முகத்தில் ஒருவர் கைகளால் பிடித்து வீசிக் கொண்டும்… அதன் சிலிர்ப்பால் ஒருவரை ஒருவர் நாட வைத்ததும் இந்த மழைக் காலம் தானே.
ஆனால் இப்போ இந்த மழை அவனுக்கு மிகப் பெரிய சாபமாகத் தோன்றியது.
அவனின் வலிகளை மீண்டும் நினைவுப்படுத்தி அவனுள் இருக்கும் காயங்களைக் கீறிவிடுகிறது. கீறிய காயங்களை வழியும் ரத்தத்தை உறிஞ்சும் ராட்சத நினைவுகள் அவனைச் சுழற்றி சூறாவளியாகச் சுழன்று அடிக்கிறது.
அருண்மொழிதேவன் சிறிதாகக் கம்பெனியை ஒன்றை உருவாக்கி நடத்தி வருகிறான்.
ஆட்டோ மொபைல் தேவையான பாகங்களைத் தயாரிக்கும் கம்பெனி தான் வைத்து இருக்கிறான். படித்து முடித்தபிறகு அவனுக்குப் பிடித்ததை செய்வேன் எனத் தொடங்கியது.
பெயர் சொல்லும் அளவிற்கு பெரிதல்ல என்றாலும் அதில் வரும் வருமானம் பத்து பெயரை வைத்து வேலை வாங்கி அவர்களுக்குச் சம்பளம் கொடுத்தும், இடம் வாடகை, கரண்ட் என இதர செலவுகள் போக அவனுக்குத் தேவைக்கு மேலே கிடைக்கிறது.
தந்தை சிறிய வயதிலே விபத்தில் இறந்து விட்டதால் தாய் ரமணியம்மாள் தான் மகனை வளர்த்து ஆளாக்கியது.
அவனின் படிப்பு, வேலை, காதல் எல்லாவற்றிலும் தன் மகனின் ஆசை விருப்பத்திற்கு மீறி எதுவுமில்லை என்பதை ஒவ்வொரு வினாடிகளில் நிரூபித்தார் …
அத்தகைய மனத்தை இப்போது தான் கஷ்டப்படுத்துகிறோம் என அறியாமல் மழையிலே நனைந்து கொண்டு நின்றிருந்தான் அருண்மொழிதேவன்…
ஐந்தே முக்கால் அடி உயரத்தில் நெற்றியில் படரும் முடிகற்றைகளின் மழையில் நனைந்து போக… இமைமயிர்களில் பனித்துளிகளாகப் படருவதை அழுந்தத் துடைத்தபடி நிற்க….
‘’அருண்… அருண்’’ என அழைத்தபடி மாடிப் படியேறி வந்தார் ரமணியம்மாள்….
‘’ஏய் என்னடா மழையிலே நனைந்து கொண்டு இருக்கே… கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா… இல்லை அதைக் கடனுக்கு யாருக்காவது கொடுத்து விட்டாயா…
ஏன்டா இப்படி பண்ணித் தொலைக்கிற… இன்னும் பால்வாடியில் போகும் பிள்ளைபோல என்னைப் பாடாகப் படுத்துகிறானே’’ எனக் கடுங்கோபத்துடன் அவனை அங்கிருந்து இழுக்க முயன்றார்.
ஈரத்தில் தரை வழுக்கவும் … ‘’ஏய் வந்து தொலையேன்…. நீ நிற்பது பத்தாமல் நானும் நனைந்து கீழே விழப் போறேன்’’ எனக் கூச்சலிட்டவரின் குரலில் சுயநினைவுக்கு வந்தவனோ…
‘’ம்மா… நீங்க எதுக்கு மழையிலே’’ என்றவனை …. முறைத்த ரமணியம்மாள்
‘’ ஆமாடா… எனக்கு ஆசை ரொம்ப நாளா மழை நிற்கணும் நனையனும் ஆசை பாரு’’…. எனக் கடிந்தவர் ….
‘’இங்கிருந்து முதலில் உள்ளே வா…. உன்னை இழுக்கிறேனு… நானும் சேர்ந்து கீழே விழ வேண்டிதான். அப்பறம் நீ தான் ஹாஸ்ப்பிட்டல் வீடு வேலை அலையணும்… வலிக்கது வலிக்கது நான் அலற… நீயோ அம்மா அம்மா என்ன செய்யறது முழிக்கணும். தேவையா இது உனக்கு.
ஏண்டா இப்படி தொப்பலாக நனைஞ்சு இருக்கே புரியலே போ. மழையிலே நனைகிறோமே தெரியாமல் இருக்கே உன்னயெல்லாம்’’… என அவனின் அறைக்கு இழுத்து சென்றவர் துண்டை எடுத்துக் கொடுத்துவிட்டு ஹீட்டர் சுவிட்ச் போட்டுக் '’குளிச்சுட்டு சீக்கிரம் வா… ஈரம் போகத் தலையைத் துவட்டு’’ எனச் சொல்லியவர் ….
‘’இன்னும் சின்னப் பிள்ளைனு நினைப்பு…. மழையிலே தனியே சோலோ பர்பார்ம்ஸ் பண்ணிகிட்டு இருக்கே’’ எனச் சொல்லியவரை முறைக்க முயன்று முடியாமல் வாய் விட்டுச் சிரித்தான்…
எந்த மழையில் தன்னுடைய வலிகளைக் கரைந்து போகணும் நினைச்சானோ…அந்த வலி கரைந்து போனுதா என்றால் இல்லை தான்… அது உள்ளுற ஊடுருவி இதயப் பரப்பினுள் வேரூன்றி இருக்கிறது.
அதைக் களைந்து எறிய இன்னொரு ஜென்மம் தான் எடுத்து வரணும் என அவனுள் எண்ணங்களின் கோட்பாடுகள்.
ஆனாலும் தனக்காகத் தன் அம்மாவின் சிறு சிறு பேச்சுகள், இன்னும் தன்னைக் குழந்தையாக நினைச்சு செய்யும் செயல்களும்… கிண்டலும் கேலியுமாகத் திட்டிக் கொண்டே பேசும் தாய் அவனின் மனத்தைச் சட்னு மாற்றும் மாயஜாலங்கள் கற்றுத் தேர்ந்தவர்.
தன்னுடைய இறுக்கங்களை களைந்து தன் அம்மாவின் பேச்சைக் கேட்டுச் சிரிக்கத் தோன்றியது. ஏனென்றால் அவனுக்காக வாழும் ஜீவன் அவர் தானே….
உயிர் வாழணும் எண்ணம் இல்லாதவன் இப்போ சிரிக்கும் அளவுக்கு மாற்றியது யார்? என்றால் ரமணியம்மாள் தான்.
அருண் சிரிப்பில் கன்னத்தை வழித்துச் சொடக்கு எடுத்தவர்…
‘’எப்பவும் இப்படியே சிரிச்சுகிட்டே இருந்தால் என்ன அருண்….
என்னமோ உன்கிட்டே இருக்கிற சொத்துப்பத்து எல்லாம் எழுதி வாங்கிட்டு உன்னை அம்போ விட்டுவிடுகிற மாதிரி கவலையைத் தூக்கிச் சுமந்துகிட்டு இருக்கே…. சிரிக்கத் தெரியாதவனா நீ… அடிக்கடி வயிற்று வலிக்கு விளக்கெண்ணெயை குடிச்சே மாதிரி மூஞ்சி அஸ்டகோணலாக வச்சுக்கிற’’ எனப் புலம்பலைக் கேட்டவனுக்கு சட்டென்று மாறும் வானிலையாக அவனின் அம்மாவின் பேச்சில் மாறியது….
‘’ம்மா…. போதும் எதுக்கு இந்தப் புலம்பல்’’ என்றவனிடம்…
‘’ம்ஹீம் எனக்குப் புலம்பனும் வேண்டுதல் அது தான்’’ எனக் கேலியாகச் சொல்லிவிட்டுச் ‘’சீக்கிரம் கீழே வா… உனக்குப் பசிக்கதோ இல்லையோ… எனக்குப் பெரும் குடல் சிறு குடலை தின்னும் விடும் ராஜா… பிளீஸ் சீக்கிரம் வாடாக் கண்ணா’’ என மகனைக் கொஞ்சி செல்லும் தாயின் பேச்சில் அவனின் உள்ளம் சற்று நிதானத்திற்கு வந்தது.
குளித்துத் தலை துவட்டி வந்தவனுக்கு… தட்டில் சூடான இட்லியும் வெங்காய சாம்பார், சட்னியும் காத்திருந்தது.
அங்கே அமர்ந்திருந்தவரோ…. ‘’பாருடா ராஜா… இந்த இட்லி கூட உனக்காகக் காத்திருக்கிறது. ஆனால் நீ’’ … எனத் தொடங்கி பெருமூச்சுடன்
‘’ம்மா போதும்… என் மனத்தைத் திசை திருப்பத் தலைகீழாகக் குதிக்கணும் முடிவு பண்ணிகிட்டு பேசிகிட்டே இருக்கீங்க…. இப்ப உங்க பேச்சால்
என் மனம் திசை மாறிருச்சு’’…. என்றதும்…
‘’எந்தத் திசையில் மாறிருக்கு சொல்லு கண்ணா…. ஏனா வடக்கே சூலம் இன்று. அந்தப் பக்கம் போகக் கூடாது’’ எனச் சீரியஸாக சொல்லுபவரை முறைக்க முயன்றவன்……
‘’ அம்மா தாயே பரதேவதை…. ரொம்பவும் கடிக்காதே’’ … என்றவன் ‘’சாப்பிடுங்க!” அவருக்கு ஒரு தட்டில் எடுத்து வைத்தவன் தனக்கும் பரிமாறிக் கொண்டவனிடம்…..
“அருண்… அருண்” என மீண்டும் அழைக்க….
‘’ம்ம் சொல்லுங்கம்மா’’… என்றவனிடம்….
‘’ பக்கத்து வீட்டிலிருக்கும் பங்கஜம் தெரியுமலே உனக்கு’’ எனக் கேட்க….
‘’தெரியுமே ஏன் கேட்கிறீங்க?… அவங்க வாங்கனா டம்ளர் சர்க்கரை இன்னும் கொடுக்கலயா… நான் போய் வாங்கி வரணுமா’’ என நக்கலாகக் கேட்டவனிடம்….
‘’சின்னபிள்ளையலே வாங்கிட்டு வரச் சொல்லிருப்பேன். இப்பவும் போய் வாங்கிட்டு வரச் சொல்வேனா … அப்ப நீ அறியா பிள்ளை. அம்மா சொல்வதே வேத வாக்குனு இருந்தே. ஆனால் இப்ப அப்படியா இருக்கே… இப்ப அறிஞ்ச வயது… அம்மா சொல்வது எல்லாம் செவிடன் காதில் சங்கு ஊதுவதும் உன்னிடம் பேசுவதும் ஒண்ணுனு காமிக்கிற’’ எனச் சிறு கோபமும் ஆற்றாமையும் கலந்தே பேசினார் ரமணியம்மாள்.
‘’ம்மா… பேச்சு எங்கே எங்கோ போகது…. இப்ப பங்கஜம் மாமி கதைக்கு வாங்க…. அவங்க என்ன சொன்னாங்க?… அதற்கு நீங்க என்ன சொன்னீங்க?’’ எனக் கேட்கவும் புரியாமல் மகனை நோக்கியவர்…
‘’ம்மா… நீங்கத் தானே பங்கஜம் தொடங்கினீங்க’’ என்றதும்…
‘’ அச்சோ… போடாக் கண்ணா… உனக்கு எப்பவும் என் பேச்சைத் திசை திருப்புவதே வேலையாக வச்சு இருக்கே’’ என லேசாகக் கடிந்தவர்…. ‘’அ….. அது’’ …
‘’அது தான் எது சொல்லுங்க?’’ என்றவனிடம்…
‘’இப்படியே விரட்டிகிட்டே இருந்தால் நான் சொல்ல வந்தே மறந்து போகுமடா’’ என்றவர் பாவமாகப் பார்க்கவும்…
பக்னு சிரித்தவன்… ‘’ம்ம் நீங்க என்ன சொல்ல வந்தீங்களோ சொல்லுங்க’’ என்றவனிடம்…
‘’நான் சொன்னால் கோவித்து கொள்ள கூடாது’’ என்றதும் …
‘’அப்பக் கோபம் வருகிற விசயத்தைப் பற்றித் தான் பேசப் போறீங்களா எனக் கொடுக்குபிடி பிடித்தவனைப் பரிதாபமாகப் பார்த்தவரை…
‘’ம்மா என்ன சொல்லணுமோ சொல்லுங்க… எனக்குத் தூக்கம் வருது’’…. என்றதும்…
‘’உனக்குத் தூக்கம் வருது… நம்பிட்டேன்…… மோட்டவளையை முறைச்சு பார்த்துக்கிட்டு விடிய விடிய ஓடுகிற காற்றாடி கிட்டே பேரம் பேசுவே’’… என்றதும் அவரை முறைக்க …
‘’சரி சரி…. முறைக்காதே’’ என்றவர்… ‘’நாளைக்கு நாடக சபாவில் நாடகம் போடப் போறாங்க. அதுவும் புது ஆட்களை வைத்துப போடப் போறாங்களாம்… அது தான் நானும் பங்கஜமும் போகலாம் இருக்கோம்’’… என்றவரை…
‘’ஏம்மா இன்னும் நாடகம் கச்சேரி சுத்தணுமா … அது தான் வீட்டில் இவ்வளவு பெரிய எல்.டி இருக்குல… காலையில் ஆரம்பித்து இரவுவரை ஓடுதே… அது பார்த்தால் போதாதா’ என்றவனிடம்….
‘’டேய், அதைப் பார்த்தால் கூட்டமாக இருக்கும் கூட்டுக் குடும்பம் நாலா பக்கம் சிதறிப் போகும். இங்கே நீயும் நானுமே இப்பேவே ஆளுக்கொரு திசையிலே நிற்கிறோம்….. இதிலே அதைப் பார்த்துக் கடையிலே நீ தங்கி இருப்பே… நான் இங்கே டொக் டொக் ஓடுகிற காற்றாடியை முறைக்கணும். ஆசையாடா மகனே உனக்கு’’ என்றவர்…’’நான் நாடகம் பார்க்கப் போகணும் அவ்வளவு தான்.
ஏனோ வளர்ந்த பையனாச்சே அதற்கு மரியாதை கொடுத்துக் கேட்டால் இத்தனைப் பேச்சு.
இதே என் புருசன் இருந்திருந்தால்…. நான் கேட்கணும் அவசியமில்லை. டிக்கெட் வாங்கினது மட்டுமல்லாமல்… எங்கே உட்காரணும், இடைவேளையில் டீக்காபி வேணுமா… படம் முடிகிற வரை என்ன குட்டி வேணும் கேட்டுப் பார்த்துக்குவார்
நீ என்னடானா சலிச்சுக்கிற’’… என்றவரை ஆழ்ந்து பார்த்தவன்…
‘’வாய் மட்டும் வண்டுலூர் ஜூ வரை நீளது… இந்த டிரெண்டிங் தகுந்த மாதிரி மால் சினிமா தியேட்டரில் போய்ப் படப் பார்க்கணும்னு ஆசைப்பட்டால் நியாயம்…. இதில் நாடக சபாவில் நாடகம் பார்க்கப் போறேனு பிடிவாதம்… இதுக்கு உங்க புருஷரை சேர்த்து இழுக்கிறீங்க’’ … சிறு சிரிப்புடன பேசியவனோ ‘’சரி போய்யிட்டு வாங்க. காரிலா பஸ்ஸிலா’’ எனக் கேட்டவனிடம்…
‘’பஸ் தான் மகனே… ரொம்ப தேங்க்ஸ்டா’’ என்றவரிடம்…..
தலையாட்டி விட்டு எழுந்து செல்கிறவனைப் பார்த்து…. ‘’அப்பாடி இவன் கிட்டே பேசுவதற்கு சிரிக்க வைக்கவும் நான் என்ன எல்லாம் டிராமா போட வேண்டிதாக இருக்கு’’ எனச் சொல்லும்போதே ‘’ம்க்ஹீம்’’ கனைத்தவனின் குரலில்…
‘’ஆத்தாடி’’ எனத் திரும்பியவர்…. பேந்த பேந்த முழிக்க …. அவனின் அலைபேசி மேசையில் இருந்ததை எடுத்தும்….
பெரு மூச்சை இழுத்து விட்டவர்…. ‘’டேய் அம்மா பார்க்கத் தான் பயில்வான் மாதிரி இருப்பேன்… பேஸ் மென்ட் வீக்டா நானு’’ என்றவரின் குரலில் சிரித்தபடி மாடியேறினான் அருண்மொழிதேவன்.
மகன் மாடிக்குச் சென்றதும் அலைபேசியை எடுத்து அழைத்தவர் ‘’பங்கஜம் என் மகன் போகச் சொல்லீட்டான்… நாளைக்குச் சாயங்காலம் போகலாம் தானே…. நாளைக்கு எனக்கு வேலை இருக்கு…. நாத்தனார் வராங்க… அவ பொண்ணு வராளு எதாவது கதை சொல்லக் கூடாது…..
நாளைக்கு நாம் போறோம் அவ்வளவு தான் சரியா’’…. எனச் சொல்லித் தன் அலைபேசியை வைத்தவர் மனதினுள் பல கணக்குகள் ஓடியது.
அதில் இனியாவது தன் மகனின் வாழ்வு மலரச் செய்ய வாய்ப்பு அங்கே கிடைக்க வழி செய்யணும் கடவுளேயென வேண்டிக்
கொண்டார் ரமணியம்மாள்.
அவர் என்ன நினைத்தார்… அவர் நினைத்தது நடந்தா… என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
தொடரும்....
கதைப் பற்றிய கருத்துக்களை கூறுங்கள் பிரியங்களே....
‘’
நாயகன் அருண்மொழிதேவன்
நாயகி…. கிருத்திகா
அத்தியாயம் … 1
டைரி
“நான் நிழலாய் வாழ்ந்தேன்…
என் கண்ணீரும் சிரிப்பும் யாரும் காணவில்லை.
இந்த நிழலால் நான் யாரும் இல்லையென நினைத்தேன்,
ஆனா நிஜத்தில் நான் தான் நிழல்.”
‘நீருண்ட மேகம் தான் சூல் கொண்டது. சூல் கொண்ட மேகமோ மசக்கை கண்டது. மசக்கை கண்ட மேகம் தான் ஆசைப்பட்ட விரும்பிய ஆடையைத் தேடியது….
தேடியதில் கருப்பு நிறம் கிடைக்க ஆசையாக அதைக் கட்டிக் கொண்டது.
கட்டிய ஆடையுடன் வான வீதியில் வலம் வந்தது.வான வீதியில் நடைப் பயிற்சியையும் செய்தது
பயிற்சி செய்ததும் வீண் போகாமல் எதிர்மறை மேகங்கள் மோதிக் கொண்டது
மோதிக் கொண்டதால் ஒளியும் மின்னல் வழி காட்டியது. ஒளி வந்தபின்பு ஒலியும் முழங்கியது
இசைக்கச்சேரியோடு மழை மேகமும் மண்ணில் பிரசவித்ததே மழையாகப் பொழிய காத்திருந்தது.
நுணலும் இசைக்கேற்ப ஆடக் காத்திருந்தது.
எங்கும் இருள் கருமை பூசிக் கொண்டது
அடர்ந்த விருட்சங்களின் வடிவமோ ராட்சத உருவங்களாக வாய் பிளந்து முழங்கக் காத்திருக்கிறது நினைவுகளின் சுமைகளை…
மண் மழைக்காகக் காத்திருந்திருந்தது… மலர்கள் மழையில் நனைய காத்திருக்கிறது…. மரங்களில் கூடு கட்டிய பறவைகள் தன் குஞ்சுகளை மழையில் நனையாமல் காக்க சிந்தித்துக் கொண்டிருக்கிறது…. ஆங்காங்கே ஓடும் வாகனங்கள் மழைக்கு முன் போய் விட வேண்டும் என்ற எண்ணத்தில் பறந்தாலும் மழையில் நனையும் சுகமே வேறு தான் என்ற குரல்கள் காத்திருக்கிறது மழைக்காக.
தனிமைப் புயலில் சிக்கிய ஒருவனும் மழைக்காகக் காத்திருந்தான்.
வானில் விழும் மழைத் துளியில் அவளின் சுகந்தம் தன்னைப் பூசிக் கொள்ளுமா… என ஆசைப்பட்டு காத்திருக்கிறான். அடர் மழையாகப் பொழிந்து அவளாக உருவெடுத்தயலு தன்னை இறுக்கிக் கட்டிக் கொண்டு ஒன்றாகக் கரைந்து போக வருவாளா காத்திருந்தான்.….
எத்தனை விதமான காத்திருப்புகள் அவனுள் தேங்கிக் கிடக்கின்றன.
அவனுள் அத்தனை ஏக்கங்கள், ஆசைகள், வெறுமைகள்…. தாங்க வியலாத கவலை சுவடுகளைச் சுமந்தபடி மாடியில் விழிகள் இருள் சூழ்ந்த வானத்தை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தவனுள் பல எண்ணப் போராட்டங்கள்.
அவன் யார்? ஏன் அப்படி எங்கோ வெறித்த இறுகின தோற்றம்…. இந்த வயதிலே அவனுக்குள் இத்தனை ஏக்கமஹ… பெருஞ்சுமைகளை சுமந்த நெஞ்சத்தினுள் தாங்கவியலாத சோகம் ஏன்?… அவனின் சோகத்தின் சூத்திரத்தாரி யார்?
அத்தனையும் உள்ளடக்கிய கேள்விகளைக் கேட்டாலும் மௌனமே பதிலாக நின்றிருந்தான் அருண்மொழிதேவன்.
ஏனென்றால்
மழைக்காக அவனும் காத்திருந்தான்… அம்மழையில் தன்னைச் சூழ்ந்த நிகழ்வுகளின் நிஜங்கள் அவனை வெகுவாகத் தாக்குவதை கரைத்து விடக் காத்திருந்தான் அருண்.
இதே மழை இரவில் தான் அவனின் வாழ்க்கை சூன்யமானது. அதற்கு யார் காரணம்? என்ற வினா அவனுள் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. வினாவிற்கு விடை தேடுவதா…. தன் மனதிற்கு சமதானம் செய்வதா என அறியாமல் திகைத்த காலங்களில் கூடச் சமாளிக்க தெரிந்தவனால் இப்போது இத்தனிமையும் மழையும் மீண்டும் அவன அச்சூழலிலே இழுத்து சுழற்றி அடிக்கிறது நிஜங்களின் கோரதாண்டவம்….
அவளை இம்மழையின் வாசத்தில் உணர முடியுமா…. அவள் இல்லாத இவ்வுலகம் இதே இருள் சூழ்ந்து தானே இருக்கிறது மனமெங்கும்…
அடைமழை கொட்ட தொடங்கியது. அதில் நனைவது கூட அறியாமல் நனைந்து கொண்டிருந்தவன் மேனியோ குளிர்ந்த நீரின் குளுமையை உணரவில்லை.
இந்த மழை சிலருக்கு வரம் தான்…. மிகவும் பிடித்தமான மழையை யாருக்குத் தான் பிடிக்காமல் போகும்… பலர் அவரவர் ரசனைகேற்ப ரசிப்பதுண்டு தானே…. ஏன் அவனே அப்படி ரசிப்பவன் தானே….. மழையின் சாரலில் நனைந்தபடி கைகளைக் கோர்த்து கொண்டு கோன்ஐஸ்க்ரீம் ஜில்னு நாவில் உணர்ந்து பேசியபடி வெகு தூரம் நடப்பது எத்தனை சுவாராசியமாக உணர்வினை தந்தது.
இதே மழை நீரில் தேநீர் அருந்தியபடி பெய்யும் மழை நீரை ஒருவர் முகத்தில் ஒருவர் கைகளால் பிடித்து வீசிக் கொண்டும்… அதன் சிலிர்ப்பால் ஒருவரை ஒருவர் நாட வைத்ததும் இந்த மழைக் காலம் தானே.
ஆனால் இப்போ இந்த மழை அவனுக்கு மிகப் பெரிய சாபமாகத் தோன்றியது.
அவனின் வலிகளை மீண்டும் நினைவுப்படுத்தி அவனுள் இருக்கும் காயங்களைக் கீறிவிடுகிறது. கீறிய காயங்களை வழியும் ரத்தத்தை உறிஞ்சும் ராட்சத நினைவுகள் அவனைச் சுழற்றி சூறாவளியாகச் சுழன்று அடிக்கிறது.
அருண்மொழிதேவன் சிறிதாகக் கம்பெனியை ஒன்றை உருவாக்கி நடத்தி வருகிறான்.
ஆட்டோ மொபைல் தேவையான பாகங்களைத் தயாரிக்கும் கம்பெனி தான் வைத்து இருக்கிறான். படித்து முடித்தபிறகு அவனுக்குப் பிடித்ததை செய்வேன் எனத் தொடங்கியது.
பெயர் சொல்லும் அளவிற்கு பெரிதல்ல என்றாலும் அதில் வரும் வருமானம் பத்து பெயரை வைத்து வேலை வாங்கி அவர்களுக்குச் சம்பளம் கொடுத்தும், இடம் வாடகை, கரண்ட் என இதர செலவுகள் போக அவனுக்குத் தேவைக்கு மேலே கிடைக்கிறது.
தந்தை சிறிய வயதிலே விபத்தில் இறந்து விட்டதால் தாய் ரமணியம்மாள் தான் மகனை வளர்த்து ஆளாக்கியது.
அவனின் படிப்பு, வேலை, காதல் எல்லாவற்றிலும் தன் மகனின் ஆசை விருப்பத்திற்கு மீறி எதுவுமில்லை என்பதை ஒவ்வொரு வினாடிகளில் நிரூபித்தார் …
அத்தகைய மனத்தை இப்போது தான் கஷ்டப்படுத்துகிறோம் என அறியாமல் மழையிலே நனைந்து கொண்டு நின்றிருந்தான் அருண்மொழிதேவன்…
ஐந்தே முக்கால் அடி உயரத்தில் நெற்றியில் படரும் முடிகற்றைகளின் மழையில் நனைந்து போக… இமைமயிர்களில் பனித்துளிகளாகப் படருவதை அழுந்தத் துடைத்தபடி நிற்க….
‘’அருண்… அருண்’’ என அழைத்தபடி மாடிப் படியேறி வந்தார் ரமணியம்மாள்….
‘’ஏய் என்னடா மழையிலே நனைந்து கொண்டு இருக்கே… கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா… இல்லை அதைக் கடனுக்கு யாருக்காவது கொடுத்து விட்டாயா…
ஏன்டா இப்படி பண்ணித் தொலைக்கிற… இன்னும் பால்வாடியில் போகும் பிள்ளைபோல என்னைப் பாடாகப் படுத்துகிறானே’’ எனக் கடுங்கோபத்துடன் அவனை அங்கிருந்து இழுக்க முயன்றார்.
ஈரத்தில் தரை வழுக்கவும் … ‘’ஏய் வந்து தொலையேன்…. நீ நிற்பது பத்தாமல் நானும் நனைந்து கீழே விழப் போறேன்’’ எனக் கூச்சலிட்டவரின் குரலில் சுயநினைவுக்கு வந்தவனோ…
‘’ம்மா… நீங்க எதுக்கு மழையிலே’’ என்றவனை …. முறைத்த ரமணியம்மாள்
‘’ ஆமாடா… எனக்கு ஆசை ரொம்ப நாளா மழை நிற்கணும் நனையனும் ஆசை பாரு’’…. எனக் கடிந்தவர் ….
‘’இங்கிருந்து முதலில் உள்ளே வா…. உன்னை இழுக்கிறேனு… நானும் சேர்ந்து கீழே விழ வேண்டிதான். அப்பறம் நீ தான் ஹாஸ்ப்பிட்டல் வீடு வேலை அலையணும்… வலிக்கது வலிக்கது நான் அலற… நீயோ அம்மா அம்மா என்ன செய்யறது முழிக்கணும். தேவையா இது உனக்கு.
ஏண்டா இப்படி தொப்பலாக நனைஞ்சு இருக்கே புரியலே போ. மழையிலே நனைகிறோமே தெரியாமல் இருக்கே உன்னயெல்லாம்’’… என அவனின் அறைக்கு இழுத்து சென்றவர் துண்டை எடுத்துக் கொடுத்துவிட்டு ஹீட்டர் சுவிட்ச் போட்டுக் '’குளிச்சுட்டு சீக்கிரம் வா… ஈரம் போகத் தலையைத் துவட்டு’’ எனச் சொல்லியவர் ….
‘’இன்னும் சின்னப் பிள்ளைனு நினைப்பு…. மழையிலே தனியே சோலோ பர்பார்ம்ஸ் பண்ணிகிட்டு இருக்கே’’ எனச் சொல்லியவரை முறைக்க முயன்று முடியாமல் வாய் விட்டுச் சிரித்தான்…
எந்த மழையில் தன்னுடைய வலிகளைக் கரைந்து போகணும் நினைச்சானோ…அந்த வலி கரைந்து போனுதா என்றால் இல்லை தான்… அது உள்ளுற ஊடுருவி இதயப் பரப்பினுள் வேரூன்றி இருக்கிறது.
அதைக் களைந்து எறிய இன்னொரு ஜென்மம் தான் எடுத்து வரணும் என அவனுள் எண்ணங்களின் கோட்பாடுகள்.
ஆனாலும் தனக்காகத் தன் அம்மாவின் சிறு சிறு பேச்சுகள், இன்னும் தன்னைக் குழந்தையாக நினைச்சு செய்யும் செயல்களும்… கிண்டலும் கேலியுமாகத் திட்டிக் கொண்டே பேசும் தாய் அவனின் மனத்தைச் சட்னு மாற்றும் மாயஜாலங்கள் கற்றுத் தேர்ந்தவர்.
தன்னுடைய இறுக்கங்களை களைந்து தன் அம்மாவின் பேச்சைக் கேட்டுச் சிரிக்கத் தோன்றியது. ஏனென்றால் அவனுக்காக வாழும் ஜீவன் அவர் தானே….
உயிர் வாழணும் எண்ணம் இல்லாதவன் இப்போ சிரிக்கும் அளவுக்கு மாற்றியது யார்? என்றால் ரமணியம்மாள் தான்.
அருண் சிரிப்பில் கன்னத்தை வழித்துச் சொடக்கு எடுத்தவர்…
‘’எப்பவும் இப்படியே சிரிச்சுகிட்டே இருந்தால் என்ன அருண்….
என்னமோ உன்கிட்டே இருக்கிற சொத்துப்பத்து எல்லாம் எழுதி வாங்கிட்டு உன்னை அம்போ விட்டுவிடுகிற மாதிரி கவலையைத் தூக்கிச் சுமந்துகிட்டு இருக்கே…. சிரிக்கத் தெரியாதவனா நீ… அடிக்கடி வயிற்று வலிக்கு விளக்கெண்ணெயை குடிச்சே மாதிரி மூஞ்சி அஸ்டகோணலாக வச்சுக்கிற’’ எனப் புலம்பலைக் கேட்டவனுக்கு சட்டென்று மாறும் வானிலையாக அவனின் அம்மாவின் பேச்சில் மாறியது….
‘’ம்மா…. போதும் எதுக்கு இந்தப் புலம்பல்’’ என்றவனிடம்…
‘’ம்ஹீம் எனக்குப் புலம்பனும் வேண்டுதல் அது தான்’’ எனக் கேலியாகச் சொல்லிவிட்டுச் ‘’சீக்கிரம் கீழே வா… உனக்குப் பசிக்கதோ இல்லையோ… எனக்குப் பெரும் குடல் சிறு குடலை தின்னும் விடும் ராஜா… பிளீஸ் சீக்கிரம் வாடாக் கண்ணா’’ என மகனைக் கொஞ்சி செல்லும் தாயின் பேச்சில் அவனின் உள்ளம் சற்று நிதானத்திற்கு வந்தது.
குளித்துத் தலை துவட்டி வந்தவனுக்கு… தட்டில் சூடான இட்லியும் வெங்காய சாம்பார், சட்னியும் காத்திருந்தது.
அங்கே அமர்ந்திருந்தவரோ…. ‘’பாருடா ராஜா… இந்த இட்லி கூட உனக்காகக் காத்திருக்கிறது. ஆனால் நீ’’ … எனத் தொடங்கி பெருமூச்சுடன்
‘’ம்மா போதும்… என் மனத்தைத் திசை திருப்பத் தலைகீழாகக் குதிக்கணும் முடிவு பண்ணிகிட்டு பேசிகிட்டே இருக்கீங்க…. இப்ப உங்க பேச்சால்
என் மனம் திசை மாறிருச்சு’’…. என்றதும்…
‘’எந்தத் திசையில் மாறிருக்கு சொல்லு கண்ணா…. ஏனா வடக்கே சூலம் இன்று. அந்தப் பக்கம் போகக் கூடாது’’ எனச் சீரியஸாக சொல்லுபவரை முறைக்க முயன்றவன்……
‘’ அம்மா தாயே பரதேவதை…. ரொம்பவும் கடிக்காதே’’ … என்றவன் ‘’சாப்பிடுங்க!” அவருக்கு ஒரு தட்டில் எடுத்து வைத்தவன் தனக்கும் பரிமாறிக் கொண்டவனிடம்…..
“அருண்… அருண்” என மீண்டும் அழைக்க….
‘’ம்ம் சொல்லுங்கம்மா’’… என்றவனிடம்….
‘’ பக்கத்து வீட்டிலிருக்கும் பங்கஜம் தெரியுமலே உனக்கு’’ எனக் கேட்க….
‘’தெரியுமே ஏன் கேட்கிறீங்க?… அவங்க வாங்கனா டம்ளர் சர்க்கரை இன்னும் கொடுக்கலயா… நான் போய் வாங்கி வரணுமா’’ என நக்கலாகக் கேட்டவனிடம்….
‘’சின்னபிள்ளையலே வாங்கிட்டு வரச் சொல்லிருப்பேன். இப்பவும் போய் வாங்கிட்டு வரச் சொல்வேனா … அப்ப நீ அறியா பிள்ளை. அம்மா சொல்வதே வேத வாக்குனு இருந்தே. ஆனால் இப்ப அப்படியா இருக்கே… இப்ப அறிஞ்ச வயது… அம்மா சொல்வது எல்லாம் செவிடன் காதில் சங்கு ஊதுவதும் உன்னிடம் பேசுவதும் ஒண்ணுனு காமிக்கிற’’ எனச் சிறு கோபமும் ஆற்றாமையும் கலந்தே பேசினார் ரமணியம்மாள்.
‘’ம்மா… பேச்சு எங்கே எங்கோ போகது…. இப்ப பங்கஜம் மாமி கதைக்கு வாங்க…. அவங்க என்ன சொன்னாங்க?… அதற்கு நீங்க என்ன சொன்னீங்க?’’ எனக் கேட்கவும் புரியாமல் மகனை நோக்கியவர்…
‘’ம்மா… நீங்கத் தானே பங்கஜம் தொடங்கினீங்க’’ என்றதும்…
‘’ அச்சோ… போடாக் கண்ணா… உனக்கு எப்பவும் என் பேச்சைத் திசை திருப்புவதே வேலையாக வச்சு இருக்கே’’ என லேசாகக் கடிந்தவர்…. ‘’அ….. அது’’ …
‘’அது தான் எது சொல்லுங்க?’’ என்றவனிடம்…
‘’இப்படியே விரட்டிகிட்டே இருந்தால் நான் சொல்ல வந்தே மறந்து போகுமடா’’ என்றவர் பாவமாகப் பார்க்கவும்…
பக்னு சிரித்தவன்… ‘’ம்ம் நீங்க என்ன சொல்ல வந்தீங்களோ சொல்லுங்க’’ என்றவனிடம்…
‘’நான் சொன்னால் கோவித்து கொள்ள கூடாது’’ என்றதும் …
‘’அப்பக் கோபம் வருகிற விசயத்தைப் பற்றித் தான் பேசப் போறீங்களா எனக் கொடுக்குபிடி பிடித்தவனைப் பரிதாபமாகப் பார்த்தவரை…
‘’ம்மா என்ன சொல்லணுமோ சொல்லுங்க… எனக்குத் தூக்கம் வருது’’…. என்றதும்…
‘’உனக்குத் தூக்கம் வருது… நம்பிட்டேன்…… மோட்டவளையை முறைச்சு பார்த்துக்கிட்டு விடிய விடிய ஓடுகிற காற்றாடி கிட்டே பேரம் பேசுவே’’… என்றதும் அவரை முறைக்க …
‘’சரி சரி…. முறைக்காதே’’ என்றவர்… ‘’நாளைக்கு நாடக சபாவில் நாடகம் போடப் போறாங்க. அதுவும் புது ஆட்களை வைத்துப போடப் போறாங்களாம்… அது தான் நானும் பங்கஜமும் போகலாம் இருக்கோம்’’… என்றவரை…
‘’ஏம்மா இன்னும் நாடகம் கச்சேரி சுத்தணுமா … அது தான் வீட்டில் இவ்வளவு பெரிய எல்.டி இருக்குல… காலையில் ஆரம்பித்து இரவுவரை ஓடுதே… அது பார்த்தால் போதாதா’ என்றவனிடம்….
‘’டேய், அதைப் பார்த்தால் கூட்டமாக இருக்கும் கூட்டுக் குடும்பம் நாலா பக்கம் சிதறிப் போகும். இங்கே நீயும் நானுமே இப்பேவே ஆளுக்கொரு திசையிலே நிற்கிறோம்….. இதிலே அதைப் பார்த்துக் கடையிலே நீ தங்கி இருப்பே… நான் இங்கே டொக் டொக் ஓடுகிற காற்றாடியை முறைக்கணும். ஆசையாடா மகனே உனக்கு’’ என்றவர்…’’நான் நாடகம் பார்க்கப் போகணும் அவ்வளவு தான்.
ஏனோ வளர்ந்த பையனாச்சே அதற்கு மரியாதை கொடுத்துக் கேட்டால் இத்தனைப் பேச்சு.
இதே என் புருசன் இருந்திருந்தால்…. நான் கேட்கணும் அவசியமில்லை. டிக்கெட் வாங்கினது மட்டுமல்லாமல்… எங்கே உட்காரணும், இடைவேளையில் டீக்காபி வேணுமா… படம் முடிகிற வரை என்ன குட்டி வேணும் கேட்டுப் பார்த்துக்குவார்
நீ என்னடானா சலிச்சுக்கிற’’… என்றவரை ஆழ்ந்து பார்த்தவன்…
‘’வாய் மட்டும் வண்டுலூர் ஜூ வரை நீளது… இந்த டிரெண்டிங் தகுந்த மாதிரி மால் சினிமா தியேட்டரில் போய்ப் படப் பார்க்கணும்னு ஆசைப்பட்டால் நியாயம்…. இதில் நாடக சபாவில் நாடகம் பார்க்கப் போறேனு பிடிவாதம்… இதுக்கு உங்க புருஷரை சேர்த்து இழுக்கிறீங்க’’ … சிறு சிரிப்புடன பேசியவனோ ‘’சரி போய்யிட்டு வாங்க. காரிலா பஸ்ஸிலா’’ எனக் கேட்டவனிடம்…
‘’பஸ் தான் மகனே… ரொம்ப தேங்க்ஸ்டா’’ என்றவரிடம்…..
தலையாட்டி விட்டு எழுந்து செல்கிறவனைப் பார்த்து…. ‘’அப்பாடி இவன் கிட்டே பேசுவதற்கு சிரிக்க வைக்கவும் நான் என்ன எல்லாம் டிராமா போட வேண்டிதாக இருக்கு’’ எனச் சொல்லும்போதே ‘’ம்க்ஹீம்’’ கனைத்தவனின் குரலில்…
‘’ஆத்தாடி’’ எனத் திரும்பியவர்…. பேந்த பேந்த முழிக்க …. அவனின் அலைபேசி மேசையில் இருந்ததை எடுத்தும்….
பெரு மூச்சை இழுத்து விட்டவர்…. ‘’டேய் அம்மா பார்க்கத் தான் பயில்வான் மாதிரி இருப்பேன்… பேஸ் மென்ட் வீக்டா நானு’’ என்றவரின் குரலில் சிரித்தபடி மாடியேறினான் அருண்மொழிதேவன்.
மகன் மாடிக்குச் சென்றதும் அலைபேசியை எடுத்து அழைத்தவர் ‘’பங்கஜம் என் மகன் போகச் சொல்லீட்டான்… நாளைக்குச் சாயங்காலம் போகலாம் தானே…. நாளைக்கு எனக்கு வேலை இருக்கு…. நாத்தனார் வராங்க… அவ பொண்ணு வராளு எதாவது கதை சொல்லக் கூடாது…..
நாளைக்கு நாம் போறோம் அவ்வளவு தான் சரியா’’…. எனச் சொல்லித் தன் அலைபேசியை வைத்தவர் மனதினுள் பல கணக்குகள் ஓடியது.
அதில் இனியாவது தன் மகனின் வாழ்வு மலரச் செய்ய வாய்ப்பு அங்கே கிடைக்க வழி செய்யணும் கடவுளேயென வேண்டிக்
கொண்டார் ரமணியம்மாள்.
அவர் என்ன நினைத்தார்… அவர் நினைத்தது நடந்தா… என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.
தொடரும்....
கதைப் பற்றிய கருத்துக்களை கூறுங்கள் பிரியங்களே....
‘’