அத்தியாயம்-9
ஒவ்வொரு பெண்களும் வித்யாசமானவங்க. என்னோட அதிக நேரம் தங்கைகளுடனும், ஆத்தா, அம்மா, பெரியம்மாவுடன் கழிந்ததால் என்னால் பெண்களின் உணர்வுகளை ஓரளவு புரிந்து கொள்ள முடியும். எங்க அய்யன், அப்பா, பெரியப்பா எல்லாருமே பெண்களை ரொம்ப மதிக்கக் கூடிய ஆளுங்க. அதையேதான் நான் பார்த்து வளர்ந்தேன். அதனால் எனக்கு மேல் ஈகோ குறைவுதான். இல்லைனு சொல்ல மாட்டேன். அந்தப் பொண்ணு அடிச்சதை என்னால் இப்படி மட்டும் தான் ஜஸ்டிஃபை செய்ய முடிஞ்சுது. இதே இடத்தில் என்னோட தங்கச்சி யாரவது இருந்து இழுத்துட்டு போயிருந்தால் நான் அதைப் பார்த்தால் எப்படி இருந்திருக்கும்? அதே மாதிரி என்னோட தங்கச்சி எப்படி பீல் பன்னி இருப்பா? இப்படி யோசிச்சேன். அதனால் தான் என்னால் அந்த சம்பவத்தை அப்படியே விட முடிஞ்சது.
-எழில்.
கோவையின் பிரதான இடத்தில் அமைந்திருந்தது அந்த பிட்னஸ் சென்டர். கருப்பும், கிரேவும் கலந்த ஸ்வெட்ஸில், டேங்க் டாப்பிலும் ஆடிக் கொண்டிருந்தாள் மனோஷா. ஜூம்பா இசைக்கேற்ப அவளுடன் சில பெண்கள் ஆடிக் கொண்டிருந்தனர். உடலெல்லாம் வியர்த்து வழிந்தது அவளுக்கு. கோபமாக வீட்டுக்கு வந்தவள் உடை மாற்றி விட்டு பிட்னஸ் செண்டருக்கு வந்திருந்தாள்.
பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் மிக முக்கியம் என்பதை உணர்ந்திருந்தவள் கல்லூரி காலத்தில் இருந்து ஜும்பா, ஏரோபிக் எக்சர்சைஸ் செய்து வருகிறாள்.
அவ்வப்போது தியானமும் உண்டு. குடும்பத்தில் உள்ள அனைவரின் உடல் நலத்தையும் பார்த்துவிட்டு தனக்கு ஒரு பாராசிட்டமால் போட்டுக் கொண்டு இருக்கும் சராசரி அம்மா அவளுக்குக் கிடையாது.
உடல் நலத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவள் அன்னை கூறியதின் பேரில் ஜும்பாவின் சேர்ந்தவள் அதை இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறாள்.
அரை மணி நேரம் தொடர்ந்து ஆடியவள் இடைவெளி எடுத்துக் கொண்டு மீண்டும் ஆடினாள்.
அங்கிருப்பவர்களால் அவளுக்கு ஈடு கொடுத்து ஆட முடியவில்லை.
ஒரு கட்டத்தில் அங்கிருந்த டிரைனரே அவளை நிறுத்தினார்.
“போதும்மா. கிராம்ப்ஸ் வந்தறப் போகுது.”
“என்னால் ஒண்ட் அண்ட் ஹாஃப் ஹவர் வரைக்கும் ஆட முடியும்.”
“இதுக்கு முன்னாடி?”
“டென் இயர்ஸா ஜும்பா, ஏரோபிக்ஸ்.” மூச்சு வாங்கியபடி அவனுக்கு பதில் கொடுத்தாள்.
“வாவ்! சூப்பர்!”
டிரைனருக்கு ஒரு புன்னகையை மட்டும் பரிசாகக் கொடுத்தாள் மனோஷா.
“கிரேட். அப்ப நியூ ஜாயின் பன்னவங்களுக்கு எல்லாம் நீங்க ஒரு மோட்டிவேஷனா இருப்பீங்க?” பத்து வருடம் தொடர்ந்து பயிற்சி செய்வதால் டிரைனருக்கு மனோஷாவின் மீது ஒரு மதிப்பு ஏற்பட்டிருந்தது. அது அவன் குரலில் இருந்தும் வெளிப்பட்டது.
“சிந்தியா மேடம் இல்லையா?” என அடுத்த கேள்வியைக் கேட்டாள்.
“மேடம் இன்னிக்கு ஒரு அவசர வேலையாக போயிட்டாங்க. சோ நான் அவங்க செஷனையும் சேர்த்து எடுக்க வேண்டியதாடுச்சு.”
“ஓ.”
“எந்த ஸ்கூலில் படிக்கறமா?”
இந்தக் கேள்வியில் மனோஷாவுக்கு சிரிப்பு வந்து விட்டது.
“ஹலோ ஐம் வொர்க்கிங்க் ஆஸ் ஏ சைக்கலாஜிஸ்ட். கம்பிளிட்டு மை டாக்ட்ரேட் இன் சைக்காலஜி.”
எதிரில் இருந்தவன் முகத்தில் ஆச்சரியம்.
“என்னால் நம்ப முடியலை. என்ன ஏஜ் உங்களுக்கு?”
“டிவெண்டி சிக்ஸ்.”
“ஓ கிரேட்.”
“நான் டிவெண்டி எய்ட். ரொம்ப வித்யாசம் இல்லை. நான் முதலில் ஏதோ ஒரு ஸ்கூல் பொண்ணுனு நினைச்சேன்.”
“நோ என்னை இந்த ஊரில் மட்டும் சின்னப் பொண்ணுனு நிறைய பேரு நினைச்சுக்குறாங்க.”
இப்போது அவனுடன் இயல்பாகப் பேச ஆரம்பித்திருந்தாள் மனோஷா. அவன் இலகுவாக மனோஷாவிடம் பேசிக் கொண்டிருந்தான். ஆளை அசரடிக்கும் தோற்றம். அவன் வந்ததில் இருந்து பல பெண்களின் கண்கள் அவன் மீதுதான். ஆனால் அவன் யாரையும் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. தன் வேலையை மட்டும் செய்தான். அனாவசிய வழிசல் இல்லை. அவனைப் பார்த்தவுடன் மனோஷாவுக்கு ஒரு நம்பிக்கை உருவானது.
“ஐம் மனோஷா.”
தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
“நான் அருண்.”
“அருணாச்சலம். அது ஒரு தமிழ் பிலிம் நேம் கரக்டா?”
இப்போது அருணுக்கு சிரிப்பு வந்து விட்டது.
“அப்படினா சூரியன். நீங்க இந்த ஊரு இல்லையா?”
“இல்லை பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூர். தாத்தா காலத்திலேயே அங்க செட்டில் ஆகிட்டோம். ஆனால் தமிழை விடல. கோவை நேட்டிவ். அண்ணா ஊட்டிலதான் படிச்சார். நானும் அப்பப்ப தமிழ்நாடு அடிக்கடி வருவேன். அதனால் தமிழும் பரிச்சயம்.”
அவள் கூறிய விளக்கத்தைக் கேட்டதும் ஆதவன் அடுத்த கேள்வியைக் கேட்டான்.
“அப்ப இப்ப இங்க எதுக்காக வந்திருக்கீங்க?”
“இங்க செண்டர் ஆரம்பிச்சுருக்கேன். சைக்காலஜிஸ்ட். இனி இங்கதான்.”
“தனியாவா?”
“இல்லை அண்ணா இங்க இருக்காங்க.”
“பரவால்லை.. நான் இங்கதான் ஃபோர் இயர்ஸா டிரைனரா இருக்கேன்.”
அப்போது வாட்சைப் பார்த்தவன், “ஓகே டைம் ஆகிடுச்சு. எப்படி வீட்டுக்குப் போவீங்க?” என்றான்.
“கார் இருக்கு.”
“ஓகே டேக் கேர். பாய்.” என விடை பெற்றுச் சென்றான் அருண்.
அருணிடம் மனோஷாவில் இயல்பாகப் பேச முடிந்தது. அவனிடம் ஒரு கம்பர்ட் ஏற்பட்டிருந்தது. ஏ.ஐ பள்ளியில் இருந்து வந்ததிற்குப் பிறகு பேசிய முதல் மனிதன் இவனே. பேசிவிட்டு இலகுவான மன நிலையுடன் வீட்டிற்கு வந்திருந்தாள் அவள்.
இரவு உணவுக்கு எதாவது செய்ய வேண்டும்.
பிரிட்ஜில் காய்கறிகளை ஆராய்ந்தாள். என்ன செய்வது? பேசாமல் வெளியில் ஆர்டர் செய்து கொள்ளலாமா? என யோசித்தாள். அண்ணனிடம் வேறு கேட்க வேண்டும். பாதியில் வந்ததிற்கு அவனிடம் வேறு பதில் கூறியாக வேண்டும். அவனை எப்படி சமாளிப்பது என்று கூட யோசித்துக் கொண்டிருந்தாள். அவன் அண்ணனிடம் எதாவது கூறி இருந்தால்? என்ற கேள்வியும் மனதில் எழுந்தது.
சிலர் நடந்தவற்றை எப்படி வேண்டுமானாலும் திரித்துக் கூறுவர். ஆனால் தன் மீது எந்த தவறும் இல்லை என்பதால் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்.
பிரிட்ஜில் இருக்கும் காய்கறிகளை எடுத்தவள் தன் அண்ணனுக்குப் பிடித்த பிசிபேளாபாத் என்ற சாம்பார் சாதத்தை வைத்து விட முடிவு செய்தாள். அது சுலபமானதும் கூட. அதைப் பார்த்தால் அமைதியாகி விடுவான் என்று தோன்றியது. அனைத்தையும் தயார் செய்து குக்கரில் போட்டு விட்டாள். விசில் வந்ததும் இறக்கி தாளிக்க வேண்டும்.
அப்போது காலிங்க் பெல் அழுத்தும் சத்தம் கேட்டது. திறந்தவளின் எதிரே கன்னச் சிவப்புடன் நின்றவன் வேறு யாருமில்லை. ஆதித் பொன்னெழிலன்.
அத்தியாயம்-10
வாழ்க்கை ஒரு வட்டம். வட்டம்னு சொல்லுவாங்க. அப்படினா என்னனு இப்பப் புரியுது. நாம எதிர்பார்க்காத சூழ்நிலையில் நம்மை மாட்டி விட்டுப் பார்க்கறதில் அப்படி என்ன சந்தோஷமோ இந்த வாழ்க்கைக்கு. மேட்ச் பார்க்கப் போன வடிவேலைத் தூக்கி பாக்ஸிங்க் ரிங்குக்குள்ள போட்ட மாதிரி இருக்கும். இங்க என்ன வித்யாசம்னா? நான் என்னோட ஏரியாவில் ஆப்போனண்ட்கிட்ட அடிவாங்கிட்டு இப்ப அவங்க ரிங்குள்ள நிக்கறேன்.
-எழில்.
சிவந்த கன்னத்துடன் நின்று கொண்டிருந்தான் ஆதித் பொன்னெழிலன். அவன் எழில் முகம் மனோஷாவின் கை வண்ணத்தால் சிவந்துதான் போயிருந்தது. எதிரில் கதவைத் திறந்துக் கொண்டு அவனைக் கண்களை உருட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.
‘மறுபடியும் இந்தப் பொண்ணா? இது மித்ரன் வீட்டில் என்ன செய்யுது? ஒரு வேளை அட்ரஸ் மாறி வந்துட்டமோ?’ என்ற கேள்வியுடன் வாட்ஸ் அப்பில் இருந்த அட்ரஸை ஒரு முறை சரிபார்த்துக் கொண்டான். மனோஷா உடலின் குறுக்கே கைகள் இரண்டையும் கட்டிக் கொண்டு அவனை உறுத்து விழித்துக் கொண்டிருந்தாள்.
இருவரும் ஒருவரை கண்களால் அளந்து கொண்டிருக்கும் சமயம் வந்து சேர்ந்தான் மித்ரன்.
“ஹே மனோ.. என்ன வழி விடாமல் குறுக்க நின்னுட்டு இருக்க? இவரைத் தெரியும் இல்லை. நர்சரிக்கு வந்திருந்தாரு. என்னோட பிரண்ட் ஆதித் பொன்னெழிலன். இன்னிக்கு நம்ம வீட்டில் தான் தங்கப் போறாரு.”
மித்ரன் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டே போக அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தாள் மனோஷா. ஆதித் மித்ரனின் தோழன் என்று அவளுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு வாடிக்கையாளர் என்று நினைத்திருந்தாள். இப்போது சரியாக மாட்டிக் கொண்டோம் என்று தோன்றியது. மித்ரன் கேட்டால் அனைத்தையும் விளக்க வேண்டுமே. வீட்டுக்கே அழைத்து வந்து தங்க வைக்கும் அளவுக்கு நெருங்கிய நண்பன் என்று அவளுக்குத் தெரியவில்லை.
“பிரண்டா?... எங்கிட்ட நீ சொன்னதே இல்லை?”
“மனோ இவன்தான் எழில். நிறைய தடவை சொல்லி இருக்கேன்.”
அப்போதுதான் மனோஷாவுக்கு நினைவு வந்தது. மித்ரன் எழில் என்று ஒரு நண்பன் இருக்கிறான். அவனைப் பற்றி அடிக்கடி பேசியதும் நினைவுக்கு வந்தது. ஆனால் அவள் பெரிதாக அதைக் காதில் போட்டுக் கொண்டதில்லை.
தன்னைப் பற்றிக் மித்ரன் கூறுகையில் அவள் முகம் மாறுவதையும் பின்பு சாதாரண நிலையில் வைத்திருக்கும் அவள் திறமையைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித். நிச்சயம் இப்படி திருப்புதலை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை என்று புரிந்தது அவனுக்கு. அது மட்டுமின்றி தனக்குமே இது அதிர்ச்சிதான். அவளை மித்ரனின் நர்சரியில் வேலைப் பார்க்கும் பெண் என்று நினைத்திருந்தான்.
ஆனால் இப்போது…
“மித்ரா இவங்க?” என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் கேள்வியை கேட்டான் ஆதித்.
“ஹே இதுதான் பூபூ. உனக்கு ஞாபகம் இருக்கா? சுவரு எல்லாம் ஏறிக் குதிப்பா? உங்க வீட்டு பூந்தொட்டி மேல கூட விழுந்து கைக்கட்டு எல்லாம் கட்டு போட்டுருந்த அதே பூபூ.. என்னோட தங்கச்சி மனோஷா.”
‘அந்த பூபூவா?’ ஆதித்தின் நினைவலையில் அவன் பழைய வீட்டில் உள்ள மரத்தில் மாங்காய் பறிக்க ஏறி தவறி விழுந்த சிறுமி ஒருத்தி எட்டிப் பார்த்தாள்.
“மனோ, உனக்கு ஆதியை நினைவிருக்கானு தெரியலை. அப்ப நீ நாலரை வயசு இருக்கும். முன்னாடி டாடி இருந்த பழைய வீட்டுக்கு பக்கத்து வீடுதான் இவங்களோடது. ஆதி அண்ணன் கூட சேர்ந்துட்டு நீ பயங்கர அட்டகாசம் செய்வ தெரியுமா?.. நம்ம ஃபேம்லி கூட ரொம்ப குளோஸ். அப்புறம் டச் இல்லை. ஒரு நாள் அங்கிளோட நம்ம நர்சரிக்கு வந்தப்ப அங்கிள் என்னைக் கண்டுபிடிச்சுட்டாரு. அப்பதில் இருந்து நல்ல பிரண்ட்ஸ். ஆதி உள்ள வா. நிக்க வச்சுட்டு பேசிட்டு இருக்கேன். பூபூ என்ன சமையல் சாம்பார் சாதமா?” என்றவாறு மித்ரன் உள்ளே நுழைந்தான்.
அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்த மனோஷாவும் நகர்ந்தாள்.
அவள் நகர்ந்தவுடன் ஆதியும் உள்ளே வந்தான். மனோஷா ஆதியை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க மித்ரன்தான் பதில் கொடுத்தான்.
“பூபூ இன்னிக்கு பங்கசனுக்கு முன்னாடி ஆதியை ஒரு லூசு கார்டனில் தள்ளிவிட்டுட்டுப் போயிருச்சு. அதான் ஆதி கன்னம் அப்படி இருக்கு. வீட்டில் பதில் சொல்ல முடியாதுனு இன்னிக்கு இங்க வந்திருக்கான். பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எங்க வச்ச?”
தன் அண்ணன் கூறிய பதிலில் அவன் தன்னைப் பற்றி மூச்சு விடவில்லை என்று புரிந்தது. அது மட்டுமின்றி அவனை தனக்கு சிறு வயதில் இருந்தே பரிச்சயம் என்பது அவளுக்கே தெரியாத ஒன்று. அதுதான் அவனை முதல் தடவை பார்த்த போது எங்கோ பார்த்தது போல் இருந்தது.
“டிவிக்கு கீழே இருக்கற கபோர்டில் இருக்கு.”
“ஆதி.. உனக்கு சாம்பார் சாதம் ஓகேவா?..”
“எனக்கு ஒகே. ஆனால் உங்க இரண்டு பேருக்குத்தான் சமைச்சுருப்பாங்க இல்லை. நான் வெளியில் எதாவது ஆர்டர் பன்னிக்கிறேன்.”
“அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பில்லை இல்லை. நான் தோசை சாப்பிட்டுக்குவேன்.”
இப்போது மனோஷா தலையிட்டாள்.
“ஒன்னும் பிரச்சினை இல்லை. எனக்கு இன்னிக்கு நூடூல்ஸ் சாப்பிடனும் போல் இருந்துச்சு. உனக்காததான் சாம்பார் சாதம் வச்சேன். நூடூல்ஸ் சாப்பிட்டா நீ திட்டுவ. அதான் செய்யலை. ஒன் டே பிளீஸ்.” என்றாள் மனோஷா.
கண்களைச் சுருக்கிப் பார்த்த மித்ரன் சம்மதித்து விட அப்படியே இரவு உணவை முடித்துக் கொண்டனர்.
மனோ அமைதியாக உண்ண ஆதியை மித்ரன் கவனித்துக் கொண்டான். தான் அடித்த ஒருவன் இப்படி வீட்டுக்கு வந்து அவள் சமைத்த உணவையே உண்ணுவான் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை.
அதுவும் நடந்த விஷயம் மித்ரனுக்குத் தெரிந்தால் தன்னை ஒரு வழி ஆக்கி இருப்பான். மனோஷாவுக்கு கை நீளும் என்று அவனுக்குத்தான் தெரியுமே.
அமைதியாக உணவை முடித்துக் கொண்டவள் தன் அறைக்குள் மூழ்கினாள். ஆதித்தும் மித்ரனுடன் பேசினாலும் அவள் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டுதான் இருந்தான்.
இருவருக்குமே ஒரு அசௌகரியமான மௌனம் நிலவியது.
இரவு தூக்கம் வராமல் மாடியில் உலாத்திக் கொண்டிருந்தாள் மனோஷா. அவளது கம்பூயூட்டர் திறந்து கிடந்தது. பிறை நிலா மேகத்துடன் விளையாடும் கண்ணாம்பூச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இன்னும் தூங்கலையா?”
நிலவின் குளுமை போன்று ஒலித்த குரலில் அதிர்ந்து திரும்பினாள் மனோஷா.
-ஊஞ்சலாடும்..
ஒவ்வொரு பெண்களும் வித்யாசமானவங்க. என்னோட அதிக நேரம் தங்கைகளுடனும், ஆத்தா, அம்மா, பெரியம்மாவுடன் கழிந்ததால் என்னால் பெண்களின் உணர்வுகளை ஓரளவு புரிந்து கொள்ள முடியும். எங்க அய்யன், அப்பா, பெரியப்பா எல்லாருமே பெண்களை ரொம்ப மதிக்கக் கூடிய ஆளுங்க. அதையேதான் நான் பார்த்து வளர்ந்தேன். அதனால் எனக்கு மேல் ஈகோ குறைவுதான். இல்லைனு சொல்ல மாட்டேன். அந்தப் பொண்ணு அடிச்சதை என்னால் இப்படி மட்டும் தான் ஜஸ்டிஃபை செய்ய முடிஞ்சுது. இதே இடத்தில் என்னோட தங்கச்சி யாரவது இருந்து இழுத்துட்டு போயிருந்தால் நான் அதைப் பார்த்தால் எப்படி இருந்திருக்கும்? அதே மாதிரி என்னோட தங்கச்சி எப்படி பீல் பன்னி இருப்பா? இப்படி யோசிச்சேன். அதனால் தான் என்னால் அந்த சம்பவத்தை அப்படியே விட முடிஞ்சது.
-எழில்.
கோவையின் பிரதான இடத்தில் அமைந்திருந்தது அந்த பிட்னஸ் சென்டர். கருப்பும், கிரேவும் கலந்த ஸ்வெட்ஸில், டேங்க் டாப்பிலும் ஆடிக் கொண்டிருந்தாள் மனோஷா. ஜூம்பா இசைக்கேற்ப அவளுடன் சில பெண்கள் ஆடிக் கொண்டிருந்தனர். உடலெல்லாம் வியர்த்து வழிந்தது அவளுக்கு. கோபமாக வீட்டுக்கு வந்தவள் உடை மாற்றி விட்டு பிட்னஸ் செண்டருக்கு வந்திருந்தாள்.
பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் மிக முக்கியம் என்பதை உணர்ந்திருந்தவள் கல்லூரி காலத்தில் இருந்து ஜும்பா, ஏரோபிக் எக்சர்சைஸ் செய்து வருகிறாள்.
அவ்வப்போது தியானமும் உண்டு. குடும்பத்தில் உள்ள அனைவரின் உடல் நலத்தையும் பார்த்துவிட்டு தனக்கு ஒரு பாராசிட்டமால் போட்டுக் கொண்டு இருக்கும் சராசரி அம்மா அவளுக்குக் கிடையாது.
உடல் நலத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவள் அன்னை கூறியதின் பேரில் ஜும்பாவின் சேர்ந்தவள் அதை இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறாள்.
அரை மணி நேரம் தொடர்ந்து ஆடியவள் இடைவெளி எடுத்துக் கொண்டு மீண்டும் ஆடினாள்.
அங்கிருப்பவர்களால் அவளுக்கு ஈடு கொடுத்து ஆட முடியவில்லை.
ஒரு கட்டத்தில் அங்கிருந்த டிரைனரே அவளை நிறுத்தினார்.
“போதும்மா. கிராம்ப்ஸ் வந்தறப் போகுது.”
“என்னால் ஒண்ட் அண்ட் ஹாஃப் ஹவர் வரைக்கும் ஆட முடியும்.”
“இதுக்கு முன்னாடி?”
“டென் இயர்ஸா ஜும்பா, ஏரோபிக்ஸ்.” மூச்சு வாங்கியபடி அவனுக்கு பதில் கொடுத்தாள்.
“வாவ்! சூப்பர்!”
டிரைனருக்கு ஒரு புன்னகையை மட்டும் பரிசாகக் கொடுத்தாள் மனோஷா.
“கிரேட். அப்ப நியூ ஜாயின் பன்னவங்களுக்கு எல்லாம் நீங்க ஒரு மோட்டிவேஷனா இருப்பீங்க?” பத்து வருடம் தொடர்ந்து பயிற்சி செய்வதால் டிரைனருக்கு மனோஷாவின் மீது ஒரு மதிப்பு ஏற்பட்டிருந்தது. அது அவன் குரலில் இருந்தும் வெளிப்பட்டது.
“சிந்தியா மேடம் இல்லையா?” என அடுத்த கேள்வியைக் கேட்டாள்.
“மேடம் இன்னிக்கு ஒரு அவசர வேலையாக போயிட்டாங்க. சோ நான் அவங்க செஷனையும் சேர்த்து எடுக்க வேண்டியதாடுச்சு.”
“ஓ.”
“எந்த ஸ்கூலில் படிக்கறமா?”
இந்தக் கேள்வியில் மனோஷாவுக்கு சிரிப்பு வந்து விட்டது.
“ஹலோ ஐம் வொர்க்கிங்க் ஆஸ் ஏ சைக்கலாஜிஸ்ட். கம்பிளிட்டு மை டாக்ட்ரேட் இன் சைக்காலஜி.”
எதிரில் இருந்தவன் முகத்தில் ஆச்சரியம்.
“என்னால் நம்ப முடியலை. என்ன ஏஜ் உங்களுக்கு?”
“டிவெண்டி சிக்ஸ்.”
“ஓ கிரேட்.”
“நான் டிவெண்டி எய்ட். ரொம்ப வித்யாசம் இல்லை. நான் முதலில் ஏதோ ஒரு ஸ்கூல் பொண்ணுனு நினைச்சேன்.”
“நோ என்னை இந்த ஊரில் மட்டும் சின்னப் பொண்ணுனு நிறைய பேரு நினைச்சுக்குறாங்க.”
இப்போது அவனுடன் இயல்பாகப் பேச ஆரம்பித்திருந்தாள் மனோஷா. அவன் இலகுவாக மனோஷாவிடம் பேசிக் கொண்டிருந்தான். ஆளை அசரடிக்கும் தோற்றம். அவன் வந்ததில் இருந்து பல பெண்களின் கண்கள் அவன் மீதுதான். ஆனால் அவன் யாரையும் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. தன் வேலையை மட்டும் செய்தான். அனாவசிய வழிசல் இல்லை. அவனைப் பார்த்தவுடன் மனோஷாவுக்கு ஒரு நம்பிக்கை உருவானது.
“ஐம் மனோஷா.”
தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
“நான் அருண்.”
“அருணாச்சலம். அது ஒரு தமிழ் பிலிம் நேம் கரக்டா?”
இப்போது அருணுக்கு சிரிப்பு வந்து விட்டது.
“அப்படினா சூரியன். நீங்க இந்த ஊரு இல்லையா?”
“இல்லை பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூர். தாத்தா காலத்திலேயே அங்க செட்டில் ஆகிட்டோம். ஆனால் தமிழை விடல. கோவை நேட்டிவ். அண்ணா ஊட்டிலதான் படிச்சார். நானும் அப்பப்ப தமிழ்நாடு அடிக்கடி வருவேன். அதனால் தமிழும் பரிச்சயம்.”
அவள் கூறிய விளக்கத்தைக் கேட்டதும் ஆதவன் அடுத்த கேள்வியைக் கேட்டான்.
“அப்ப இப்ப இங்க எதுக்காக வந்திருக்கீங்க?”
“இங்க செண்டர் ஆரம்பிச்சுருக்கேன். சைக்காலஜிஸ்ட். இனி இங்கதான்.”
“தனியாவா?”
“இல்லை அண்ணா இங்க இருக்காங்க.”
“பரவால்லை.. நான் இங்கதான் ஃபோர் இயர்ஸா டிரைனரா இருக்கேன்.”
அப்போது வாட்சைப் பார்த்தவன், “ஓகே டைம் ஆகிடுச்சு. எப்படி வீட்டுக்குப் போவீங்க?” என்றான்.
“கார் இருக்கு.”
“ஓகே டேக் கேர். பாய்.” என விடை பெற்றுச் சென்றான் அருண்.
அருணிடம் மனோஷாவில் இயல்பாகப் பேச முடிந்தது. அவனிடம் ஒரு கம்பர்ட் ஏற்பட்டிருந்தது. ஏ.ஐ பள்ளியில் இருந்து வந்ததிற்குப் பிறகு பேசிய முதல் மனிதன் இவனே. பேசிவிட்டு இலகுவான மன நிலையுடன் வீட்டிற்கு வந்திருந்தாள் அவள்.
இரவு உணவுக்கு எதாவது செய்ய வேண்டும்.
பிரிட்ஜில் காய்கறிகளை ஆராய்ந்தாள். என்ன செய்வது? பேசாமல் வெளியில் ஆர்டர் செய்து கொள்ளலாமா? என யோசித்தாள். அண்ணனிடம் வேறு கேட்க வேண்டும். பாதியில் வந்ததிற்கு அவனிடம் வேறு பதில் கூறியாக வேண்டும். அவனை எப்படி சமாளிப்பது என்று கூட யோசித்துக் கொண்டிருந்தாள். அவன் அண்ணனிடம் எதாவது கூறி இருந்தால்? என்ற கேள்வியும் மனதில் எழுந்தது.
சிலர் நடந்தவற்றை எப்படி வேண்டுமானாலும் திரித்துக் கூறுவர். ஆனால் தன் மீது எந்த தவறும் இல்லை என்பதால் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்.
பிரிட்ஜில் இருக்கும் காய்கறிகளை எடுத்தவள் தன் அண்ணனுக்குப் பிடித்த பிசிபேளாபாத் என்ற சாம்பார் சாதத்தை வைத்து விட முடிவு செய்தாள். அது சுலபமானதும் கூட. அதைப் பார்த்தால் அமைதியாகி விடுவான் என்று தோன்றியது. அனைத்தையும் தயார் செய்து குக்கரில் போட்டு விட்டாள். விசில் வந்ததும் இறக்கி தாளிக்க வேண்டும்.
அப்போது காலிங்க் பெல் அழுத்தும் சத்தம் கேட்டது. திறந்தவளின் எதிரே கன்னச் சிவப்புடன் நின்றவன் வேறு யாருமில்லை. ஆதித் பொன்னெழிலன்.
அத்தியாயம்-10
வாழ்க்கை ஒரு வட்டம். வட்டம்னு சொல்லுவாங்க. அப்படினா என்னனு இப்பப் புரியுது. நாம எதிர்பார்க்காத சூழ்நிலையில் நம்மை மாட்டி விட்டுப் பார்க்கறதில் அப்படி என்ன சந்தோஷமோ இந்த வாழ்க்கைக்கு. மேட்ச் பார்க்கப் போன வடிவேலைத் தூக்கி பாக்ஸிங்க் ரிங்குக்குள்ள போட்ட மாதிரி இருக்கும். இங்க என்ன வித்யாசம்னா? நான் என்னோட ஏரியாவில் ஆப்போனண்ட்கிட்ட அடிவாங்கிட்டு இப்ப அவங்க ரிங்குள்ள நிக்கறேன்.
-எழில்.
சிவந்த கன்னத்துடன் நின்று கொண்டிருந்தான் ஆதித் பொன்னெழிலன். அவன் எழில் முகம் மனோஷாவின் கை வண்ணத்தால் சிவந்துதான் போயிருந்தது. எதிரில் கதவைத் திறந்துக் கொண்டு அவனைக் கண்களை உருட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.
‘மறுபடியும் இந்தப் பொண்ணா? இது மித்ரன் வீட்டில் என்ன செய்யுது? ஒரு வேளை அட்ரஸ் மாறி வந்துட்டமோ?’ என்ற கேள்வியுடன் வாட்ஸ் அப்பில் இருந்த அட்ரஸை ஒரு முறை சரிபார்த்துக் கொண்டான். மனோஷா உடலின் குறுக்கே கைகள் இரண்டையும் கட்டிக் கொண்டு அவனை உறுத்து விழித்துக் கொண்டிருந்தாள்.
இருவரும் ஒருவரை கண்களால் அளந்து கொண்டிருக்கும் சமயம் வந்து சேர்ந்தான் மித்ரன்.
“ஹே மனோ.. என்ன வழி விடாமல் குறுக்க நின்னுட்டு இருக்க? இவரைத் தெரியும் இல்லை. நர்சரிக்கு வந்திருந்தாரு. என்னோட பிரண்ட் ஆதித் பொன்னெழிலன். இன்னிக்கு நம்ம வீட்டில் தான் தங்கப் போறாரு.”
மித்ரன் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டே போக அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தாள் மனோஷா. ஆதித் மித்ரனின் தோழன் என்று அவளுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு வாடிக்கையாளர் என்று நினைத்திருந்தாள். இப்போது சரியாக மாட்டிக் கொண்டோம் என்று தோன்றியது. மித்ரன் கேட்டால் அனைத்தையும் விளக்க வேண்டுமே. வீட்டுக்கே அழைத்து வந்து தங்க வைக்கும் அளவுக்கு நெருங்கிய நண்பன் என்று அவளுக்குத் தெரியவில்லை.
“பிரண்டா?... எங்கிட்ட நீ சொன்னதே இல்லை?”
“மனோ இவன்தான் எழில். நிறைய தடவை சொல்லி இருக்கேன்.”
அப்போதுதான் மனோஷாவுக்கு நினைவு வந்தது. மித்ரன் எழில் என்று ஒரு நண்பன் இருக்கிறான். அவனைப் பற்றி அடிக்கடி பேசியதும் நினைவுக்கு வந்தது. ஆனால் அவள் பெரிதாக அதைக் காதில் போட்டுக் கொண்டதில்லை.
தன்னைப் பற்றிக் மித்ரன் கூறுகையில் அவள் முகம் மாறுவதையும் பின்பு சாதாரண நிலையில் வைத்திருக்கும் அவள் திறமையைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித். நிச்சயம் இப்படி திருப்புதலை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை என்று புரிந்தது அவனுக்கு. அது மட்டுமின்றி தனக்குமே இது அதிர்ச்சிதான். அவளை மித்ரனின் நர்சரியில் வேலைப் பார்க்கும் பெண் என்று நினைத்திருந்தான்.
ஆனால் இப்போது…
“மித்ரா இவங்க?” என்ற சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் கேள்வியை கேட்டான் ஆதித்.
“ஹே இதுதான் பூபூ. உனக்கு ஞாபகம் இருக்கா? சுவரு எல்லாம் ஏறிக் குதிப்பா? உங்க வீட்டு பூந்தொட்டி மேல கூட விழுந்து கைக்கட்டு எல்லாம் கட்டு போட்டுருந்த அதே பூபூ.. என்னோட தங்கச்சி மனோஷா.”
‘அந்த பூபூவா?’ ஆதித்தின் நினைவலையில் அவன் பழைய வீட்டில் உள்ள மரத்தில் மாங்காய் பறிக்க ஏறி தவறி விழுந்த சிறுமி ஒருத்தி எட்டிப் பார்த்தாள்.
“மனோ, உனக்கு ஆதியை நினைவிருக்கானு தெரியலை. அப்ப நீ நாலரை வயசு இருக்கும். முன்னாடி டாடி இருந்த பழைய வீட்டுக்கு பக்கத்து வீடுதான் இவங்களோடது. ஆதி அண்ணன் கூட சேர்ந்துட்டு நீ பயங்கர அட்டகாசம் செய்வ தெரியுமா?.. நம்ம ஃபேம்லி கூட ரொம்ப குளோஸ். அப்புறம் டச் இல்லை. ஒரு நாள் அங்கிளோட நம்ம நர்சரிக்கு வந்தப்ப அங்கிள் என்னைக் கண்டுபிடிச்சுட்டாரு. அப்பதில் இருந்து நல்ல பிரண்ட்ஸ். ஆதி உள்ள வா. நிக்க வச்சுட்டு பேசிட்டு இருக்கேன். பூபூ என்ன சமையல் சாம்பார் சாதமா?” என்றவாறு மித்ரன் உள்ளே நுழைந்தான்.
அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்த மனோஷாவும் நகர்ந்தாள்.
அவள் நகர்ந்தவுடன் ஆதியும் உள்ளே வந்தான். மனோஷா ஆதியை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்க மித்ரன்தான் பதில் கொடுத்தான்.
“பூபூ இன்னிக்கு பங்கசனுக்கு முன்னாடி ஆதியை ஒரு லூசு கார்டனில் தள்ளிவிட்டுட்டுப் போயிருச்சு. அதான் ஆதி கன்னம் அப்படி இருக்கு. வீட்டில் பதில் சொல்ல முடியாதுனு இன்னிக்கு இங்க வந்திருக்கான். பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எங்க வச்ச?”
தன் அண்ணன் கூறிய பதிலில் அவன் தன்னைப் பற்றி மூச்சு விடவில்லை என்று புரிந்தது. அது மட்டுமின்றி அவனை தனக்கு சிறு வயதில் இருந்தே பரிச்சயம் என்பது அவளுக்கே தெரியாத ஒன்று. அதுதான் அவனை முதல் தடவை பார்த்த போது எங்கோ பார்த்தது போல் இருந்தது.
“டிவிக்கு கீழே இருக்கற கபோர்டில் இருக்கு.”
“ஆதி.. உனக்கு சாம்பார் சாதம் ஓகேவா?..”
“எனக்கு ஒகே. ஆனால் உங்க இரண்டு பேருக்குத்தான் சமைச்சுருப்பாங்க இல்லை. நான் வெளியில் எதாவது ஆர்டர் பன்னிக்கிறேன்.”
“அப்படி எல்லாம் நடக்க வாய்ப்பில்லை இல்லை. நான் தோசை சாப்பிட்டுக்குவேன்.”
இப்போது மனோஷா தலையிட்டாள்.
“ஒன்னும் பிரச்சினை இல்லை. எனக்கு இன்னிக்கு நூடூல்ஸ் சாப்பிடனும் போல் இருந்துச்சு. உனக்காததான் சாம்பார் சாதம் வச்சேன். நூடூல்ஸ் சாப்பிட்டா நீ திட்டுவ. அதான் செய்யலை. ஒன் டே பிளீஸ்.” என்றாள் மனோஷா.
கண்களைச் சுருக்கிப் பார்த்த மித்ரன் சம்மதித்து விட அப்படியே இரவு உணவை முடித்துக் கொண்டனர்.
மனோ அமைதியாக உண்ண ஆதியை மித்ரன் கவனித்துக் கொண்டான். தான் அடித்த ஒருவன் இப்படி வீட்டுக்கு வந்து அவள் சமைத்த உணவையே உண்ணுவான் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை.
அதுவும் நடந்த விஷயம் மித்ரனுக்குத் தெரிந்தால் தன்னை ஒரு வழி ஆக்கி இருப்பான். மனோஷாவுக்கு கை நீளும் என்று அவனுக்குத்தான் தெரியுமே.
அமைதியாக உணவை முடித்துக் கொண்டவள் தன் அறைக்குள் மூழ்கினாள். ஆதித்தும் மித்ரனுடன் பேசினாலும் அவள் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டுதான் இருந்தான்.
இருவருக்குமே ஒரு அசௌகரியமான மௌனம் நிலவியது.
இரவு தூக்கம் வராமல் மாடியில் உலாத்திக் கொண்டிருந்தாள் மனோஷா. அவளது கம்பூயூட்டர் திறந்து கிடந்தது. பிறை நிலா மேகத்துடன் விளையாடும் கண்ணாம்பூச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இன்னும் தூங்கலையா?”
நிலவின் குளுமை போன்று ஒலித்த குரலில் அதிர்ந்து திரும்பினாள் மனோஷா.
-ஊஞ்சலாடும்..