அத்தியாயம் 13
ஆதிரையின் மனநிலை புரியாமல் தேவா
“நான் என்றுமே சீதை போல் பெண் வேண்டும் என்று கேட்டதே இல்லையே. ஏன் என்றால் நான் ராமர் இல்லை என்று நன்றாக நானும் அறிவேன் நீயும் அறிவாயே?” என்று தமயனிடம் சிரித்து கொண்டே கூறியவன் தன் காலை உணவை முடித்து கொண்டு எழுந்து விட்டான்.
ராமும் “அது சரிதான்” என்று கூறிவிட்டு சிரிக்க ஆதிரைக்கு தான் தன் தலையில் இடியை போட்டது போல் இருந்தது. எந்த பெண்ணிற்கு தான் தன் கணவன் நான் ஒன்றும் ராமன் இல்லை என்று கூறினால் மகிழ்ச்சியாக இருக்கும்.
திடீரென்று ஆதிரை எதையோ சிந்தித்து கொண்டிருக்கவும் கயல்
“என்ன ஆச்சி ஆதிரை? எதுவும் உடம்புக்கு பண்ணுகிறதா?” என்றாள்.
“ஒன்றுமில்லை அக்கா திடீரென தலை வலிக்கின்றது” என்றாள்.
அதை கேட்ட தேவா “என்ன ஆதிரை ஏன் திடீரென தலை வலிக்கின்றது? மருத்துவரை பார்த்து வருவோமா?” என்றான்.
“இல்லை சிறிது நேரம் தூங்கினால் சரி ஆகிவிடும். அப்படி ஆகவில்லை என்றால் போகலாம்” என்றவள் தன் உணவை முடித்து கொண்டு அவளது அறைக்கு சென்று விட்டாள்.
திடீரென அவளது செயலில் இருந்த மாற்றத்தை தேவாவும் கவணிக்க தவறவில்லை. ஆனால் அவனுக்கு என்ன யோசித்தும் அப்போது என்ன நடந்தது என்று அவனுக்கு புரியவில்லை. ஏதுவாக இருந்தாலும் பேசி கொள்ளலாம் என்று அப்போது அதை விட்டுவிட்டு வயல் வரை சென்று வந்தான்.
ஆதிரையிடம் நேரடியாகவே கேட்கலாம் அல்லது அவளை சீண்டியாவது உண்மையை தெரிந்து கொள்ளலாம் என்று தான் தேவா நினைத்தான். ஆனால் அதற்கு வாய்ப்பே தராமல் ஆதிரை தனது அறைக்குள்ளேயே இருந்தாள். யார் சென்றாலும் கண்களை இறுக மூடிக்கொண்டு தூக்கம் வருகிறது தலை வலிக்கின்றது என்றுவிட்டாள். மதிய உணவும் வேண்டாம் என்று விட்டாள்.
“என்னமா மிகவும் முடியவில்லையா? மருத்துவரிடம் செல்வோமா” என்று கேட்ட மீனாட்சியிடமும்
“அதுவெல்லாம் வேண்டாம் அத்தை” என்றதோடு முடித்து கொண்டாள்.
இரவுவரை பார்த்த தேவாவால் அதற்கு மேல் தன் பொறுமையை கட்டுபடுத்த முடியாமல் அவனே இரவு உணவை எடுத்து கொண்டு அவளது அறைக்கு சென்று விட்டான். வருவது தேவா என்று தெரிந்ததும் ஆதிரை தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
“உண்மையான தலைவலியும் தூக்கமும் தான் சிறிது நேர ஓய்வில் சரி ஆகுமாம் ஆதிரை. இல்லையெனில் எத்தனை நாட்கள் ஆனாலும் சரி ஆக வாய்ப்பில்லையாம்.. இந்த நோய்க்கு மருந்து கூட கண்டு பிடிக்கவில்லை என்கிறார்கள்” என்று தேவா கூறவும் வேகமாக எழுந்து அமர்ந்தவள் அவனை பார்த்து முறைக்க தொடங்கினாள். பின்பு தேவாவே தொடர்ந்து
“நான் என்ன யோசித்தாலும் காலையில் அப்படி என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் என்ன கோபமாக இருந்தாலும் அதை சாப்பாட்டில் காட்ட மாட்டாய் என்று நம்பியிருந்தேன்” என்று கூறவும் ஆதிரையின் வழக்கம் போல அவள் அவளது மனதிற்குள்
‘ஆமாம் நம்பியிருந்தாராம் நம்பி... நானும்தான் இவனை நல்லவன் என்று நம்பி இருந்தேன்’ என்று திட்டி தீர்த்து கொண்டிருந்தாள். அவளிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவும் தேவா
“இந்த உணவை இங்கு வைக்கின்றேன். மறக்காமல் சாப்பிட்டு விடு. அப்பறம் சொல்ல மறந்து விட்டேன். உன் தந்தை உன்னை தொலைபேசியில் தொடர்ப்பு கொள்ள முடியவில்லை என்று எனக்கு அழைத்தார். உன் தோழி யாரோ ரம்யா என்று கூறையதாக நியாபகம்...” என்று அவன் கூறவும் ஆதிரை
“ரம்யா வா? அவளுக்கு என்ன?” என்று வேகமாக கேட்டாள்.
“அந்த பெண் உன்னை பார்க்க நம் ஊருக்கு வருகிறாளாம்” என்றான்.
“என்ன?! எப்போது வருகிறாளாம்?” என்று கேட்டு கொண்டே ஆதிரை தான் தொலைபேசியை தேடி எடுக்க தொடங்கவும் தேவா
“நாளை காலை வருவதாக கூறினார். அப்படி என்றால் இந்நேரம் அப்பெண் இரயில் எறியிருப்பாள் ஆதிரை” என்றவனிடம்
“இப்போதுதான் கூறுவாயா?” என்று கத்தினாள்.
“இப்போதுதான் உன் தந்தையே என்னிடம் கூறினார்” என்று அவன் கூறும் போதே தன் தொலைபேசியை எடுத்து தன் தந்தைக்கு தொடர்ப்பு கொண்டாள். அந்த பக்கம் அவர் அழைப்பை எடுக்கவும் தேவா அதற்கு மேல் அங்கு நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.
ஆதிரை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். ஆதிரையும் ரம்யாவும் சிறு வயதில் இருந்தே மிகவும் நெருங்கிய தோழிகள். சிறு வயதில் இருந்தே ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தார்கள். அவர்கள் வளர வளர அவர்களுக்குள் இருந்த நட்பும் வளர்ந்து கொண்டே சென்றது. இருவருக்குள்ளும் ரகசியம் என இதுநாள் வரை இருந்ததே இல்லை. பள்ளி படிப்பை முடிந்ததும் ஆதிரை பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்கவும் ரம்யா தனக்கு பிடித்த சட்டப் படிப்பை எடுத்து படித்தாள். ஆனாலும் கூட அவர்கள் நட்பு என்றும் குறைந்ததே இல்லை.
ஆதிரை கடைசியாக தன் அம்மாவின் ஊரான இந்த கிராமத்திற்கு வரும் முன்னே ரம்யாவிடம் பேசியது. அதன் பிறகு ரம்யாவிற்கு முக்கிய வேலை இருந்ததால் இருவரும் சரியாக பேசி கொள்ள முடியவில்லை. ஆதிரையின் திருமணத்திற்கு பிறகு ஆதிரை தன் பெற்றோரை தவிர யாரிடமும் பேசாததால் ரம்யாவிடம் பேசியே இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. இப்போது ஆதிரையை பார்க்க ரம்யா வருகிறாள் என்றதும் ஆதிரைக்கு மகிழ்ச்சி தாங்கவே இல்லை. காலை எப்போது வரும் என்று காத்திருந்தாள்.
மறுநாள் காலை ஆதிரை விடிந்தும் விடியாததுமாய் ஆதிரை எழுந்து விட்டாள். எப்போது வருவாள் எப்படி வருவாள் என ஆதிரைக்கு பல கேள்விகள் மனதிற்குள் ஓடி கொண்டிருந்தது. யாரிடம் கேட்பது என்ன கேட்பது என்று தெரியாமல் வீட்டின் வாசலில் குறுக்கும் மறுக்கும் நடந்து கொண்டிருந்தவளின் காதில் தேவாவின் குரல் விழுந்தது.
“என்ன இங்கு யாரோ தரையில் நடந்தே குழி தோண்டுகிறார்களாம்!” என்று சிரித்து கொண்டே வந்தான்.
அவன் குரல் கேட்கவும் முதல் நாள் அவன் கூறியதும் சேர்ந்து நினைவு வரவும் அவனை பார்த்து முறைத்து கொண்டு நின்றாள். அது தேவாவிற்கும் புரியவும்
“என்ன? என்னை முறைத்து கொண்டு இங்கையே நிற்க போகின்றாயா? இல்லை உன் தோழியை அழைக்க என்னுடன் வர போகின்றாயா?” என்றான்.
“என்ன மிரட்டுகிறாயா?” என்றாள்.
தேவாவும் விடாமல் “அப்படி தெரிகிறாதா? சரி அப்படியே வைத்து கொள்ளேன்” என்று கூறிவிட்டு சிரிக்கவும் வழக்கம் போல ஆதிரைக்கு தான் கோபம் வந்தது. ஆனால் தற்போது இவனிடம் சண்டையிட்டு நேரத்தை வீணடிக்க அவள் விரும்பாததால்
“அவளை எங்கு சென்று அழைத்து வர வேண்டும்” என்றாள்.
“அனைத்து கேள்விகளையும் கேட்ட பின்புதான் கிளம்புவாய் என்றால் அங்கு உன் தோழி நமக்கு முன்பே வந்து நிற்க நேரிடும். அதில் உனக்கு விருப்பம் இல்லையெனில் கிளம்பி காரில் ஏறினால் போகும் வழியில் அனைத்து கேள்விக்கான பதிலும் கிடைக்கும்” என்றான்.
‘இவனிடம் இனி பேசுவதும் வீண் அதனுடன் இங்கு நேரமாகி இவன் கூறுவதை போல அங்கு ரம்யா காத்திருந்தால் என்ன செய்வது?’ என்று நினைத்தவள் எதுவும் பேசாமல் தன் அறைக்குள் சென்று வேகமாக ஒரு சுடிதாரை அணிந்து வந்தாள்.
காரில் ஏறவும் ஆதிரை தன் கேள்வி கணைகளை தொடுக்க ஆரம்பித்தாள்.
“எங்கு சென்று அவளை அழைக்க வேண்டும்? எத்தனை மணிக்கு அவள் வருவாள்?” என்றாள்.
தேவா “இரயிலில் வருவதாக நேற்றே கூறியதாக எண்ணினைவில் இருக்கின்றது. அப்படியெனில் எனது அறிவுக்கு எட்டிய வரை தஞ்சாவூருக்கு தான் சென்று இரயில் நிலையத்தில் இருந்து அழைத்து வர வேண்டும். ஏனெனில் நாம் இருப்பது ஒரு கிராமம் அதில் எந்த இரயில் நிலையங்களும் எனக்கு தெரிந்து இல்லை” என்றான்.
தேவா வேண்டும் என்றே தன்னை சீண்டுகிறான் என்று ஆதிரைக்கு புரிந்தது. அவனுடன் வாழ்ந்த இத்தனை நாட்களில் இவளை சீண்டி அவன் இவளை தன்னிடம் பேச வைக்கிறான் என்ற உண்மையையும் அவள் புரிந்து கொண்டிருந்தாள். திருமணம் ஆன புதிதில் இருந்தே ஆதிரைக்கு தேவாவை தவறான குணத்தில் நினைத்து பார்க்க முடிந்தது இல்லை. ஆனால் தேவா வாயால் அவன் கூறியதை அவள் கேட்கவும் அதை அவளால் ஏற்று கொள்ளவும் முடியவில்லை.
அப்படி அவன் கூறிய பின் அவனிடம் சாதாரணமாகவும் பேச இயலவில்லை. எனவே அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அவள் முகத்தை பார்த்த பின்பு தேவா மேலும் குழம்பி போனான். ஒருவழியாக இரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்கள். ஆதிரையால் தன் ஆர்வத்தை அடக்கவே முடியவில்லை. எப்போது தன் தோழி வருவாள் என ஆர்வமாக காத்திருந்தாள். அவர்கள் அங்கு சென்று ஒரு அரை மணி நேரத்தில் அவர்கள் எதிர் பார்த்து சென்றிருந்த இரயில் அதன் இலக்கை அடைந்திருந்தது.
அதிலிருந்து இறங்கும் ஒரு ஒரு ஆளிடமும் தன் தோழியை ஆதிரை ஆவலாக தேடி கொண்டிருந்தாள். தூரமாக ஒரு கருநீல நிற சுடிதாரில் இறங்கி கொண்டிருந்தாள் ஆதிரையின் தோழி, ரம்யா. அவளை பார்த்ததும் எங்கு நிற்கின்றோம் என்றெல்லாம் யோசிக்காமல் அவளிடம் ஓடி சென்றாள் ஆதிரை. ரம்யாவும் தன்னை நோக்கி ஓடி வந்த தன் தோழியை பார்க்கவும் மின்னல் வேகத்தில் இருவரும் ஓடி சென்று ஆர தழுவி கொண்டனர்.
நீண்ட நாட்கள் கழித்து தோழிகள் இருவரும் சந்தித்ததால் அவர்களுக்கு சிறிது நேரம் கொடுத்து தேவா விலகி இருந்தான். இருவரும் ஒருவழியாக அவர்களது அன்பை பறிமாறி கொண்ட பிறகு ஆதிரை ரம்யாவை தேவாவிடம் அழைத்து வந்தாள்.
வரும் வழியிலேயே ரம்யா ஆதிரையிடம் “யாருடன் வந்தாய்” என்று கேட்டாள்.
அதற்கும் முதல் நாள் வரை ஆதிரையிடம் இதே கேள்வி கேட்டிருந்தால் அவள் என்ன பதில் கூறியிருப்பாளோ ஆனால் இப்போது அவள் இருக்கும் கோபத்தினால் அவள் எதுவும் கூறாமல் அமைதியாக நின்றாள். அவளிடம் இருந்து எந்த பதிலும் வராததால் ரம்யாவே தொடர்ந்து
“என்ன? உன் கணவனோடு வந்திருக்கின்றாயோ?” என்றாள்.
ஆதிரை அதற்கு ஆம் என்பது போல தலையை மட்டும் ஆட்டவும் ரம்யா தொடர்ந்து
“அந்த ஆளைதான் நானும் முதலில் பார்க்க வேண்டும் என்று வந்தேன்” என்றாள்.
தோழியின் குரலில் இருந்த கோபம் ஆதிரைக்கு தெரியவும் ஏன் இந்த கோபம் என்று மட்டும் புரியாமல் முழிக்க தொடங்கினாள். அவள் எதுவும் கூறாமல் திருவிழாவில் காணாமல் போன பிள்ளை போல முழிக்கவும் ரம்யாவிற்கு கோபம் உச்சியை தொட்டது.
“இப்போது ஏன் முழித்து கொண்டு இங்கேயே நிற்கின்றாய்?” என தன் கோபத்தை கொஞ்சமும் மறைக்காமல் தன் குரலில் ரம்யா காட்டிட ஆதிரை வேறு வழியின்றி தன் தோழியிடமே அவளது கோபத்திற்கான காரணத்தை கேட்டாள்.
“ஏன் கோபமாக இருக்கின்றாய்?” என்றாள்.
“என்ன!! என்டி உனக்கு மூளை என்று ஏதாவது இருக்கின்றாதா இல்லையா? படித்தவள் தானே நீ?” என்றாள்.
“ஒன்று சொல்லிட்டு திட்டு இல்லையெனில் திட்டாதே.. உன்னை பார்க்க ஆசையாக வந்தால் இப்படி திட்டுகிறாயாயே?” என்றாள் ஆதிரை.
“என்னிடம் மட்டும் வாய் பேசிக்கிறாயே? எவனோ தாலி காட்டினான் என்று அவனுடன் வாழ்கிறேன் என்றாயாமே?” என்றாள்.
ரம்யா எப்படியும் இதை பற்றி கேட்பாள் என்று ஆதிரை எதிர் பார்த்தாள் தான். ஆனால் இப்படி இங்கேயே கேட்பாள் என்று அவள் எதிர் பார்க்கவில்லை. அவளிடமிருந்து அந்த கேள்வி வந்ததும் ஆதிரை வேகமாக தேவா இருந்த திசை பார்த்து திரும்பினாள். எங்கு அவன் காதில் விழுந்துவிடுமோ என்ற பயம் அவளுள் எழுந்தது. ஆனால் நல்ல வேலையாக அவன் அருகில் இருந்த கடைக்குள் சென்று கொண்டிருந்தான். அதை பார்த்த பின்புதான் ஆதிரையால் சற்று நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. அதற்குள் ரம்யா தன் பொறுமையை இழந்து
“நான் ஒருத்தி இங்கு கத்தி கொண்டிருக்கின்றேன் நீ அங்கு என்ன பார்த்து கொண்டிருக்கின்றாய்?” என்றாள்.
ஆதிரை “இப்போது ஏண்டி கத்துகின்றாய்? இப்படியே நடு தெருவில் நின்று அனைத்தையும் கூற வேண்டுமா? வா நாம் வீட்டிற்கு சென்று பேசுவோம்” என்றாள்.
ரம்யாவும் பதிலுக்கு “நம் வீடா? அது சென்னையில் அல்லவா இருக்கின்றது” என்றாள்.
அதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் முழித்தவள்
“ரம்யா வீட்டிற்கு செல்லும் வரை தயவுசெய்து அமைதியாக வா. உனக்கு நடந்த அனைத்தையும் கூறுகிறேன்” என்றாள்.
தோழியை பல நாட்கள் கழித்து பார்த்தவுடன் சண்டையிட ரம்யாவிற்கும் விருப்பம் இல்லைதான். அதேபோல அவளுக்கு ஆதிரையிடம் கேட்க்க சில கேள்விகள் இருந்தன. அதை எல்லாம் ஆதிரை கூறுவதை போல இங்கேயே நின்று பேச முடியாது என்று தோன்றவும் ரம்யா ஆதிரையிடம்
“சரி. ஆனால் நான் உன்னை மட்டும் தான் பார்க்க வந்துள்ளேன். வேறு யாரையும் இல்லை. அதனால் அவர்களை அறிமுகம் செய்கிறேன் இவர்களை செய்கிறேன் என்று கூறாதே. அனைவரிடமும் என்னால் பொறுமையாக பேச இயலாது” என்றாள்.
ரம்யா கூறுவது தன் கணவனைதான் என்று ஆதிரைக்கும் புரிந்தது. ஆனால் அடுத்து என்ன செய்வது என்று தான் அவளுக்கு புரியவில்லை. ஆதிரை யோசித்து கொண்டிருக்கும் போதே தேவா கடையினுள் இருந்து ஒரு தண்ணீர் பாட்டிலுடன் வெளியில் வந்தவன் இவர்களை நோக்கி நடந்து வந்தான்.
ஆதிரையின் மனநிலை புரியாமல் தேவா
“நான் என்றுமே சீதை போல் பெண் வேண்டும் என்று கேட்டதே இல்லையே. ஏன் என்றால் நான் ராமர் இல்லை என்று நன்றாக நானும் அறிவேன் நீயும் அறிவாயே?” என்று தமயனிடம் சிரித்து கொண்டே கூறியவன் தன் காலை உணவை முடித்து கொண்டு எழுந்து விட்டான்.
ராமும் “அது சரிதான்” என்று கூறிவிட்டு சிரிக்க ஆதிரைக்கு தான் தன் தலையில் இடியை போட்டது போல் இருந்தது. எந்த பெண்ணிற்கு தான் தன் கணவன் நான் ஒன்றும் ராமன் இல்லை என்று கூறினால் மகிழ்ச்சியாக இருக்கும்.
திடீரென்று ஆதிரை எதையோ சிந்தித்து கொண்டிருக்கவும் கயல்
“என்ன ஆச்சி ஆதிரை? எதுவும் உடம்புக்கு பண்ணுகிறதா?” என்றாள்.
“ஒன்றுமில்லை அக்கா திடீரென தலை வலிக்கின்றது” என்றாள்.
அதை கேட்ட தேவா “என்ன ஆதிரை ஏன் திடீரென தலை வலிக்கின்றது? மருத்துவரை பார்த்து வருவோமா?” என்றான்.
“இல்லை சிறிது நேரம் தூங்கினால் சரி ஆகிவிடும். அப்படி ஆகவில்லை என்றால் போகலாம்” என்றவள் தன் உணவை முடித்து கொண்டு அவளது அறைக்கு சென்று விட்டாள்.
திடீரென அவளது செயலில் இருந்த மாற்றத்தை தேவாவும் கவணிக்க தவறவில்லை. ஆனால் அவனுக்கு என்ன யோசித்தும் அப்போது என்ன நடந்தது என்று அவனுக்கு புரியவில்லை. ஏதுவாக இருந்தாலும் பேசி கொள்ளலாம் என்று அப்போது அதை விட்டுவிட்டு வயல் வரை சென்று வந்தான்.
ஆதிரையிடம் நேரடியாகவே கேட்கலாம் அல்லது அவளை சீண்டியாவது உண்மையை தெரிந்து கொள்ளலாம் என்று தான் தேவா நினைத்தான். ஆனால் அதற்கு வாய்ப்பே தராமல் ஆதிரை தனது அறைக்குள்ளேயே இருந்தாள். யார் சென்றாலும் கண்களை இறுக மூடிக்கொண்டு தூக்கம் வருகிறது தலை வலிக்கின்றது என்றுவிட்டாள். மதிய உணவும் வேண்டாம் என்று விட்டாள்.
“என்னமா மிகவும் முடியவில்லையா? மருத்துவரிடம் செல்வோமா” என்று கேட்ட மீனாட்சியிடமும்
“அதுவெல்லாம் வேண்டாம் அத்தை” என்றதோடு முடித்து கொண்டாள்.
இரவுவரை பார்த்த தேவாவால் அதற்கு மேல் தன் பொறுமையை கட்டுபடுத்த முடியாமல் அவனே இரவு உணவை எடுத்து கொண்டு அவளது அறைக்கு சென்று விட்டான். வருவது தேவா என்று தெரிந்ததும் ஆதிரை தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
“உண்மையான தலைவலியும் தூக்கமும் தான் சிறிது நேர ஓய்வில் சரி ஆகுமாம் ஆதிரை. இல்லையெனில் எத்தனை நாட்கள் ஆனாலும் சரி ஆக வாய்ப்பில்லையாம்.. இந்த நோய்க்கு மருந்து கூட கண்டு பிடிக்கவில்லை என்கிறார்கள்” என்று தேவா கூறவும் வேகமாக எழுந்து அமர்ந்தவள் அவனை பார்த்து முறைக்க தொடங்கினாள். பின்பு தேவாவே தொடர்ந்து
“நான் என்ன யோசித்தாலும் காலையில் அப்படி என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் என்ன கோபமாக இருந்தாலும் அதை சாப்பாட்டில் காட்ட மாட்டாய் என்று நம்பியிருந்தேன்” என்று கூறவும் ஆதிரையின் வழக்கம் போல அவள் அவளது மனதிற்குள்
‘ஆமாம் நம்பியிருந்தாராம் நம்பி... நானும்தான் இவனை நல்லவன் என்று நம்பி இருந்தேன்’ என்று திட்டி தீர்த்து கொண்டிருந்தாள். அவளிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவும் தேவா
“இந்த உணவை இங்கு வைக்கின்றேன். மறக்காமல் சாப்பிட்டு விடு. அப்பறம் சொல்ல மறந்து விட்டேன். உன் தந்தை உன்னை தொலைபேசியில் தொடர்ப்பு கொள்ள முடியவில்லை என்று எனக்கு அழைத்தார். உன் தோழி யாரோ ரம்யா என்று கூறையதாக நியாபகம்...” என்று அவன் கூறவும் ஆதிரை
“ரம்யா வா? அவளுக்கு என்ன?” என்று வேகமாக கேட்டாள்.
“அந்த பெண் உன்னை பார்க்க நம் ஊருக்கு வருகிறாளாம்” என்றான்.
“என்ன?! எப்போது வருகிறாளாம்?” என்று கேட்டு கொண்டே ஆதிரை தான் தொலைபேசியை தேடி எடுக்க தொடங்கவும் தேவா
“நாளை காலை வருவதாக கூறினார். அப்படி என்றால் இந்நேரம் அப்பெண் இரயில் எறியிருப்பாள் ஆதிரை” என்றவனிடம்
“இப்போதுதான் கூறுவாயா?” என்று கத்தினாள்.
“இப்போதுதான் உன் தந்தையே என்னிடம் கூறினார்” என்று அவன் கூறும் போதே தன் தொலைபேசியை எடுத்து தன் தந்தைக்கு தொடர்ப்பு கொண்டாள். அந்த பக்கம் அவர் அழைப்பை எடுக்கவும் தேவா அதற்கு மேல் அங்கு நிற்காமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.
ஆதிரை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். ஆதிரையும் ரம்யாவும் சிறு வயதில் இருந்தே மிகவும் நெருங்கிய தோழிகள். சிறு வயதில் இருந்தே ஒரே பள்ளியில் ஒன்றாக படித்தார்கள். அவர்கள் வளர வளர அவர்களுக்குள் இருந்த நட்பும் வளர்ந்து கொண்டே சென்றது. இருவருக்குள்ளும் ரகசியம் என இதுநாள் வரை இருந்ததே இல்லை. பள்ளி படிப்பை முடிந்ததும் ஆதிரை பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்கவும் ரம்யா தனக்கு பிடித்த சட்டப் படிப்பை எடுத்து படித்தாள். ஆனாலும் கூட அவர்கள் நட்பு என்றும் குறைந்ததே இல்லை.
ஆதிரை கடைசியாக தன் அம்மாவின் ஊரான இந்த கிராமத்திற்கு வரும் முன்னே ரம்யாவிடம் பேசியது. அதன் பிறகு ரம்யாவிற்கு முக்கிய வேலை இருந்ததால் இருவரும் சரியாக பேசி கொள்ள முடியவில்லை. ஆதிரையின் திருமணத்திற்கு பிறகு ஆதிரை தன் பெற்றோரை தவிர யாரிடமும் பேசாததால் ரம்யாவிடம் பேசியே இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது. இப்போது ஆதிரையை பார்க்க ரம்யா வருகிறாள் என்றதும் ஆதிரைக்கு மகிழ்ச்சி தாங்கவே இல்லை. காலை எப்போது வரும் என்று காத்திருந்தாள்.
மறுநாள் காலை ஆதிரை விடிந்தும் விடியாததுமாய் ஆதிரை எழுந்து விட்டாள். எப்போது வருவாள் எப்படி வருவாள் என ஆதிரைக்கு பல கேள்விகள் மனதிற்குள் ஓடி கொண்டிருந்தது. யாரிடம் கேட்பது என்ன கேட்பது என்று தெரியாமல் வீட்டின் வாசலில் குறுக்கும் மறுக்கும் நடந்து கொண்டிருந்தவளின் காதில் தேவாவின் குரல் விழுந்தது.
“என்ன இங்கு யாரோ தரையில் நடந்தே குழி தோண்டுகிறார்களாம்!” என்று சிரித்து கொண்டே வந்தான்.
அவன் குரல் கேட்கவும் முதல் நாள் அவன் கூறியதும் சேர்ந்து நினைவு வரவும் அவனை பார்த்து முறைத்து கொண்டு நின்றாள். அது தேவாவிற்கும் புரியவும்
“என்ன? என்னை முறைத்து கொண்டு இங்கையே நிற்க போகின்றாயா? இல்லை உன் தோழியை அழைக்க என்னுடன் வர போகின்றாயா?” என்றான்.
“என்ன மிரட்டுகிறாயா?” என்றாள்.
தேவாவும் விடாமல் “அப்படி தெரிகிறாதா? சரி அப்படியே வைத்து கொள்ளேன்” என்று கூறிவிட்டு சிரிக்கவும் வழக்கம் போல ஆதிரைக்கு தான் கோபம் வந்தது. ஆனால் தற்போது இவனிடம் சண்டையிட்டு நேரத்தை வீணடிக்க அவள் விரும்பாததால்
“அவளை எங்கு சென்று அழைத்து வர வேண்டும்” என்றாள்.
“அனைத்து கேள்விகளையும் கேட்ட பின்புதான் கிளம்புவாய் என்றால் அங்கு உன் தோழி நமக்கு முன்பே வந்து நிற்க நேரிடும். அதில் உனக்கு விருப்பம் இல்லையெனில் கிளம்பி காரில் ஏறினால் போகும் வழியில் அனைத்து கேள்விக்கான பதிலும் கிடைக்கும்” என்றான்.
‘இவனிடம் இனி பேசுவதும் வீண் அதனுடன் இங்கு நேரமாகி இவன் கூறுவதை போல அங்கு ரம்யா காத்திருந்தால் என்ன செய்வது?’ என்று நினைத்தவள் எதுவும் பேசாமல் தன் அறைக்குள் சென்று வேகமாக ஒரு சுடிதாரை அணிந்து வந்தாள்.
காரில் ஏறவும் ஆதிரை தன் கேள்வி கணைகளை தொடுக்க ஆரம்பித்தாள்.
“எங்கு சென்று அவளை அழைக்க வேண்டும்? எத்தனை மணிக்கு அவள் வருவாள்?” என்றாள்.
தேவா “இரயிலில் வருவதாக நேற்றே கூறியதாக எண்ணினைவில் இருக்கின்றது. அப்படியெனில் எனது அறிவுக்கு எட்டிய வரை தஞ்சாவூருக்கு தான் சென்று இரயில் நிலையத்தில் இருந்து அழைத்து வர வேண்டும். ஏனெனில் நாம் இருப்பது ஒரு கிராமம் அதில் எந்த இரயில் நிலையங்களும் எனக்கு தெரிந்து இல்லை” என்றான்.
தேவா வேண்டும் என்றே தன்னை சீண்டுகிறான் என்று ஆதிரைக்கு புரிந்தது. அவனுடன் வாழ்ந்த இத்தனை நாட்களில் இவளை சீண்டி அவன் இவளை தன்னிடம் பேச வைக்கிறான் என்ற உண்மையையும் அவள் புரிந்து கொண்டிருந்தாள். திருமணம் ஆன புதிதில் இருந்தே ஆதிரைக்கு தேவாவை தவறான குணத்தில் நினைத்து பார்க்க முடிந்தது இல்லை. ஆனால் தேவா வாயால் அவன் கூறியதை அவள் கேட்கவும் அதை அவளால் ஏற்று கொள்ளவும் முடியவில்லை.
அப்படி அவன் கூறிய பின் அவனிடம் சாதாரணமாகவும் பேச இயலவில்லை. எனவே அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அவள் முகத்தை பார்த்த பின்பு தேவா மேலும் குழம்பி போனான். ஒருவழியாக இரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்கள். ஆதிரையால் தன் ஆர்வத்தை அடக்கவே முடியவில்லை. எப்போது தன் தோழி வருவாள் என ஆர்வமாக காத்திருந்தாள். அவர்கள் அங்கு சென்று ஒரு அரை மணி நேரத்தில் அவர்கள் எதிர் பார்த்து சென்றிருந்த இரயில் அதன் இலக்கை அடைந்திருந்தது.
அதிலிருந்து இறங்கும் ஒரு ஒரு ஆளிடமும் தன் தோழியை ஆதிரை ஆவலாக தேடி கொண்டிருந்தாள். தூரமாக ஒரு கருநீல நிற சுடிதாரில் இறங்கி கொண்டிருந்தாள் ஆதிரையின் தோழி, ரம்யா. அவளை பார்த்ததும் எங்கு நிற்கின்றோம் என்றெல்லாம் யோசிக்காமல் அவளிடம் ஓடி சென்றாள் ஆதிரை. ரம்யாவும் தன்னை நோக்கி ஓடி வந்த தன் தோழியை பார்க்கவும் மின்னல் வேகத்தில் இருவரும் ஓடி சென்று ஆர தழுவி கொண்டனர்.
நீண்ட நாட்கள் கழித்து தோழிகள் இருவரும் சந்தித்ததால் அவர்களுக்கு சிறிது நேரம் கொடுத்து தேவா விலகி இருந்தான். இருவரும் ஒருவழியாக அவர்களது அன்பை பறிமாறி கொண்ட பிறகு ஆதிரை ரம்யாவை தேவாவிடம் அழைத்து வந்தாள்.
வரும் வழியிலேயே ரம்யா ஆதிரையிடம் “யாருடன் வந்தாய்” என்று கேட்டாள்.
அதற்கும் முதல் நாள் வரை ஆதிரையிடம் இதே கேள்வி கேட்டிருந்தால் அவள் என்ன பதில் கூறியிருப்பாளோ ஆனால் இப்போது அவள் இருக்கும் கோபத்தினால் அவள் எதுவும் கூறாமல் அமைதியாக நின்றாள். அவளிடம் இருந்து எந்த பதிலும் வராததால் ரம்யாவே தொடர்ந்து
“என்ன? உன் கணவனோடு வந்திருக்கின்றாயோ?” என்றாள்.
ஆதிரை அதற்கு ஆம் என்பது போல தலையை மட்டும் ஆட்டவும் ரம்யா தொடர்ந்து
“அந்த ஆளைதான் நானும் முதலில் பார்க்க வேண்டும் என்று வந்தேன்” என்றாள்.
தோழியின் குரலில் இருந்த கோபம் ஆதிரைக்கு தெரியவும் ஏன் இந்த கோபம் என்று மட்டும் புரியாமல் முழிக்க தொடங்கினாள். அவள் எதுவும் கூறாமல் திருவிழாவில் காணாமல் போன பிள்ளை போல முழிக்கவும் ரம்யாவிற்கு கோபம் உச்சியை தொட்டது.
“இப்போது ஏன் முழித்து கொண்டு இங்கேயே நிற்கின்றாய்?” என தன் கோபத்தை கொஞ்சமும் மறைக்காமல் தன் குரலில் ரம்யா காட்டிட ஆதிரை வேறு வழியின்றி தன் தோழியிடமே அவளது கோபத்திற்கான காரணத்தை கேட்டாள்.
“ஏன் கோபமாக இருக்கின்றாய்?” என்றாள்.
“என்ன!! என்டி உனக்கு மூளை என்று ஏதாவது இருக்கின்றாதா இல்லையா? படித்தவள் தானே நீ?” என்றாள்.
“ஒன்று சொல்லிட்டு திட்டு இல்லையெனில் திட்டாதே.. உன்னை பார்க்க ஆசையாக வந்தால் இப்படி திட்டுகிறாயாயே?” என்றாள் ஆதிரை.
“என்னிடம் மட்டும் வாய் பேசிக்கிறாயே? எவனோ தாலி காட்டினான் என்று அவனுடன் வாழ்கிறேன் என்றாயாமே?” என்றாள்.
ரம்யா எப்படியும் இதை பற்றி கேட்பாள் என்று ஆதிரை எதிர் பார்த்தாள் தான். ஆனால் இப்படி இங்கேயே கேட்பாள் என்று அவள் எதிர் பார்க்கவில்லை. அவளிடமிருந்து அந்த கேள்வி வந்ததும் ஆதிரை வேகமாக தேவா இருந்த திசை பார்த்து திரும்பினாள். எங்கு அவன் காதில் விழுந்துவிடுமோ என்ற பயம் அவளுள் எழுந்தது. ஆனால் நல்ல வேலையாக அவன் அருகில் இருந்த கடைக்குள் சென்று கொண்டிருந்தான். அதை பார்த்த பின்புதான் ஆதிரையால் சற்று நிம்மதியாக மூச்சு விட முடிந்தது. அதற்குள் ரம்யா தன் பொறுமையை இழந்து
“நான் ஒருத்தி இங்கு கத்தி கொண்டிருக்கின்றேன் நீ அங்கு என்ன பார்த்து கொண்டிருக்கின்றாய்?” என்றாள்.
ஆதிரை “இப்போது ஏண்டி கத்துகின்றாய்? இப்படியே நடு தெருவில் நின்று அனைத்தையும் கூற வேண்டுமா? வா நாம் வீட்டிற்கு சென்று பேசுவோம்” என்றாள்.
ரம்யாவும் பதிலுக்கு “நம் வீடா? அது சென்னையில் அல்லவா இருக்கின்றது” என்றாள்.
அதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் முழித்தவள்
“ரம்யா வீட்டிற்கு செல்லும் வரை தயவுசெய்து அமைதியாக வா. உனக்கு நடந்த அனைத்தையும் கூறுகிறேன்” என்றாள்.
தோழியை பல நாட்கள் கழித்து பார்த்தவுடன் சண்டையிட ரம்யாவிற்கும் விருப்பம் இல்லைதான். அதேபோல அவளுக்கு ஆதிரையிடம் கேட்க்க சில கேள்விகள் இருந்தன. அதை எல்லாம் ஆதிரை கூறுவதை போல இங்கேயே நின்று பேச முடியாது என்று தோன்றவும் ரம்யா ஆதிரையிடம்
“சரி. ஆனால் நான் உன்னை மட்டும் தான் பார்க்க வந்துள்ளேன். வேறு யாரையும் இல்லை. அதனால் அவர்களை அறிமுகம் செய்கிறேன் இவர்களை செய்கிறேன் என்று கூறாதே. அனைவரிடமும் என்னால் பொறுமையாக பேச இயலாது” என்றாள்.
ரம்யா கூறுவது தன் கணவனைதான் என்று ஆதிரைக்கும் புரிந்தது. ஆனால் அடுத்து என்ன செய்வது என்று தான் அவளுக்கு புரியவில்லை. ஆதிரை யோசித்து கொண்டிருக்கும் போதே தேவா கடையினுள் இருந்து ஒரு தண்ணீர் பாட்டிலுடன் வெளியில் வந்தவன் இவர்களை நோக்கி நடந்து வந்தான்.
தொடரும்...