அத்தியாயம் 5
மல்லிகாவிற்குத் தேவாவின் மீது இருந்த நம்பிக்கை பார்க்க ஆதிரைக்கு ஆச்சரியமாக இருந்தது. இதே போல் தான் அவர்கள் திருமணத்தன்று அங்குக் கூடியிருந்த மக்களும் சிலர் கூறியதும் ஆதிரையின் நினைவிற்கு வந்தது. அதற்காக அப்படியே விடவும் அவளுக்கு மனம் வரவில்லை.
எனவே மல்லிகாவிடம் “ஏன் உங்கள் தேவ் அண்ணா என்ன கடவுளா? அவரும் மனிதன் தானே. அவரும் சில நேரங்களில் தவறு செய்வார்” என்றாள்.
மல்லிகாவோ “அதுவெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் தேவ் அண்ணா தவறு செய்யமாட்டார். உங்களுக்குத் தான் அவரைப் பற்றித் தெரியவில்லை” என்றாள்.
ஆதிரைக்கோ இதற்கு மேல் எதுவும் கூற விருப்பம் இல்லை. அது சின்னப் பிள்ளையின் மனதில் நஞ்சை கலப்பது போல் இருக்கும் என்று நினைத்து அமைதியானாள். ஆனால் மல்லிகா விடுவதாக இல்லை.
“உங்களுக்குத் தெரியுமா என்னைப் போல் இங்குப் பல பேரை தேவ் அண்ணா தான் படிக்க வைக்கிறார். சிலர் கல்லூரியில் கூடப் படிக்கிறார்கள்” என்று மல்லிகா கூறவும் ஆதிரைக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவளது நீண்ட நேரச் சந்தேகத்திற்கும் பதில் கிடைத்தது. மல்லிகா தேவ் படிக்க வைக்கும் பெண். ஆனால் இவள் கூறுவதைப் பார்த்தால் இவளைப் போல் இன்னும் பலரைப் படிக்க வைக்கிறாரா என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் பேசிக் கொண்டே வந்ததில் மல்லிகாவின் பயம் போயிருந்தது. ஆதிரையோ சிந்தனை உலகத்திற்குள் புகுந்து கொண்டாள்.
இருவரும் வேறு வேறு மனநிலையில் காரில் ஏறுவதைத் தேவாவும் கவனிக்கத் தவறவில்லை. ஆதிரை பயணம் முழுவதுமே ஏதோ சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தாள். காரே மிகவும் அமைதியாக இருந்தது.
கார் கடைசியாக ஒரு குடிசை வீட்டின் முன் நின்றது. உடனே மல்லிகா ஆதிரையிடம்
“இதுதான் எங்கள் வீடு. உள்ளே வாருங்கள்” என்று அழைக்கவும் சிந்தனை உலகிலிருந்து நிஜவுலகிற்கு வந்தவள், ஒரு புன்னகையுடன் சரியெனத் தலையசைத்து காரை விட்டுக் கீழே இறங்கினாள்.
கார் சத்தம் கேட்டு அவசரமாக அந்த வீட்டின் உள்ளேயிருந்து வெளிவந்த பெண்மணி இவர்களைப் பார்த்ததும் பரபரப்பாக “வாருங்கள். வாருங்களம்மா”. என வீட்டினுள் அழைத்தாள்.
காரை விட்டுக் கீழே மல்லியை இறக்கிய தேவா ஒரு புன்னகையுடனே “இல்லை, விடத் தான் வந்தோம். மல்லியின் தந்தை இரவு வந்துவிடுவார். அம்மா வந்ததும் வரச் சொல்கிறேன்” என்று கூறி அந்தப் பெண்மணியின் அழைப்பை மறுத்துவிட்டு ஆதிரையுடன் கிளம்பி விட்டான்.
அங்கிருந்து கிளம்பியதிலிருந்தே ஆதிரை எதுவும் பேசாமல் கோபமாக இருப்பதைப் போல் தெரியவும் தேவா அவளிடம்,
“என்ன சிந்தனையிலிருந்து கோபத்திற்கு மாறியாயிற்று போல?” என்று வினவவும் இந்தக் கேள்விக்காகவே காத்திருந்தவள் போல, “மல்லி எவ்வளவு ஆசையாக வீட்டிற்குக் கூப்பிட்டாள்? அவளது அம்மாவும் கூப்பிட்டார். உள்ளே போக எவ்வளவு நேரம் ஆகப் போகிறது? ஏன் குடிசை வீடாக இருந்ததும் உள்ளே வர மனமில்லையோ?” என்று மூச்சு விடாமல் பேசி முடித்தாள்.
அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவன் அவள் பேசி முடிக்கவும் சிரித்து விட்டு “நான் கூட வேறு நினைத்தேன். குடிசை வீடு மாடி வீடு என்று எதுவும் இல்லை ஆதிரை. இந்தப் பக்கத்தில் பொதுவாக ஒரு பழக்கம் இருக்கின்றது. மணமக்களின் தாய்மாமாக்கள் வீட்டிற்கு விருந்திற்குச் சென்றபின் தான் மற்ற வீடுகளுக்குச் செல்வது வழக்கம். அதற்காகத் திருமணம் வழக்கப்படி தான் நடந்ததா என்று கேட்காதே” என்றான்.
“ஓ! இருந்தாளும் அவர்கள் தவறாக நினைக்கமாட்டார்களா? அப்படியில்லை என்றாலும் வருத்தமாவது ஆகியிருப்பார்கள்” என்றாள்.
“அவர்களுக்கும் வழக்கமும் நிலைமையும் தெரியும். புரிந்து கொள்வார்கள். அதோடு இல்லாமல் நாளை அம்மாவும் செல்வார்கள் கவலைப்படும் அளவு எதுவும் இல்லை” என்றான்.
அவ்வாறு அவன் கூறும்பொழுது அவன் குரல் மாறியிருந்தது. அந்தக் குரலிலிருந்த ஏதோ ஒன்று ஆதிரையைப் பாதித்தது ஆனால் அது என்னவென்று அவளுக்குப் புரியவில்லை. அதைப் பற்றி யோசிப்பதற்குள் அவர்களது வீடும் வந்து விட்டது.
இருவரும் வீட்டிற்குள் நுழைந்தவுடன் தன் அறைக்குள் நுழையப் போன ஆதிரையிடம் தேவா “ஒரு நிமிடம் உன்னிடம் பேச வேண்டும்” என்றான்.
“என்ன” என்று கடுப்பாகக் கேட்டவளிடம்
“மல்லியின் தந்தை தான் நம் காரின் டிரைவர். அதோடு, காலையில் பள்ளியிலிருந்து செய்தி வந்ததும் அவள் அம்மாவைத் தான் தேடிப் போனேன். அவர்கள் வீட்டில் இல்லை. வேலைக்குப் போய் விட்டதாகப் பக்கத்தில் கூறினார்கள். அவர்களுக்குச் செய்தி அனுப்பி விட்டுத் தான் உன்னை அழைத்துச் சென்றேன். அவர்கள் செய்தி கிடைத்து எப்போது வருவார்கள் என்று தெரியாது அல்லவா?” என்றான்.
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவள் “இதையெல்லாம் ஏன் என்னிடம் கூறுகிறாய்” என்று புரியாமல் கேட்டாள்.
தேவா “எப்படியும் மல்லியின் பெற்றோர் இருக்கும்போது இவன் ஏன் போனான். அதிலும் நம்மை ஏன் அழைத்துப் போனான். இவனுக்கு இதில் என்ன லாபம் என்று தான் யோசித்திருப்பாய்” என்று கூறவும் ஆதிரை பதில் ஏதும் கூறாமல் அமைதியாகவே நின்றாள்.
தேவா கூறுவதும் உண்மை தான், ஆதிரை அப்படிச் சிந்தித்தாள் தான். அதிலும் மல்லியின் தாயைப் பார்த்தபிறகு அவளது சந்தேகம் அதிகமாகத் தான் ஆகியிருந்தது. அவளிடமிருந்து பதில் வராததால் தேவாவே தொடர்ந்தான்
“அவ்வாறு நினைப்பதில் தவறில்லை தான். நான் உன்னிடம் நடந்து கொண்டதில் அப்படிதான் நினைக்கத் தோன்றும்” என்று காரில் நிலைமை அவர்களுக்குத் தெரியும் என்று கூறிய அதே குரலில் கூறிவிட்டு அவளது பதிலுக்குக் கூட நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டான்.
அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு சில வினாடிகள் நின்றவள், தன் அறைக்குள் சென்று அன்று நடந்த நிகழ்வுகளையே மீண்டும் மீண்டும் மனத்திரையில் ஓட்டிப் பார்த்தாள்.
எத்தனை முறை யோசித்தாலும் அவளுக்குத் தெரிந்த தேவாவிற்கும் மல்லி கூறிய தேவாவிற்கும் சம்பந்தம் இல்லையென்றே தோன்றியது. மல்லியின் பெற்றோர் இல்லாததால் தான் அவன் அழைக்கச் சென்றேன் என்று கூறினானே தவிர அவன்தான் மல்லியைப் படிக்க வைப்பதாகக் கூறவில்லையே! மணி கூறியதைப் போலப் பணம் தான் முக்கியம் என்று நினைப்பவர்கள் எப்படி அந்தப் பணத்தைச் செலவு செய்து மற்றவர்களுக்கு உதவுவார்கள் என்று பல கேள்விகள் அவளுக்குள் தோன்றி மறைந்தன.
நீண்ட நேரம் அப்படியே சிந்தித்துக் கொண்டிருந்தவள் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்கவும் எழுந்து கதவைத் திறந்தாள். அங்குத் தேவா மதிய உணவோடு நின்றுகொண்டிருந்தான்.
“அம்மா இல்லாததால் தான் நான் கொண்டு வந்தேன்” என்றவன் அவள் அதை வாங்கியதும் ஒரு நொடி கூட நிற்காமல் அங்கிருந்து போய் விட்டான். எங்கே நின்றால் நீ கொண்டு வந்த உணவு எனக்கு வேண்டாமெனக் கூறிவிடுவாளோ என்று பயம் அவனுக்கு.
அங்கிருந்து சென்ற தேவா நேராகத் தன் அறைக்குள் சென்றான். அவனுக்கு அவனை நினைத்தாலே கோபமாக இருந்தது. அவள் முன் நின்று கூடப் பேச முடியாத சூழ்நிலையை அவன்தானே உருவாக்கிக் கொண்டான். என்ன செய்தால் அவன் செய்த தவறை சரி செய்ய இயலும் என அவனும் பலவாறு யோசித்தாலும் அவனுக்கு எந்த ஒரு விடையும் கிடைக்கவில்லை. செய்த தவறை மாற்ற இயலாது என்று அவனுக்கே புரியவும் அடுத்து என்ன என்று யோசிக்க ஆரம்பித்தான்.
ஆதிரையின் நிலையோ அங்கு வேறுமாறி இருந்தது. மணி கூறியதும் மல்லி கூறியதும் மாறி மாறி நினைவில் வந்தது என்றால் இன்னொரு புறம் ஏதோ ஒரு உணர்வு. அது இன்று என்று இல்லை முதன்முதலில் அவனைப் பார்த்தபோது தோன்றியது, அது என்னவென்று பலமுறை யோசித்தாலும் அவளுக்குப் பதில் கிடைக்கவில்லை. ஆனால் ஏதோ ஒன்றை அவள் மறந்ததைப் போல அவளுக்குத் தோன்றிக் கொண்டே இருந்தது.
சும்மா இருக்கும் மனம் சாத்தானின் உறைவிடம் என்று ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தது ஆதிரைக்கு நினைவு வந்தது. இப்படியே இந்த அறைக்குள்ளேயே அமர்ந்திருந்தாள் பைத்தியம் பிடித்துவிடும் என அவளுக்குத் தோன்றவும் அறையை விட்டு வெளியில் வந்தாள்.
வெளியில் வந்தவளுக்கு வீட்டில் யாரும் இல்லாதது நினைவுக்கு வரவும், அறைக்குள்ளேயே மீண்டும் செல்ல எத்தனித்தாள். அதேசமயம் மாடியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த தேவா ஆதிரையைப் பார்த்து விட்டான். வெளியில் வந்தவள் மீண்டும் உள்ளே செல்லவும் தேவா அவளை அழைத்தான்.
“ஆதிரை. என்னமா, எதுவும் வேண்டுமா? வெளியில் வந்துவிட்டு உடனே உள்ளே செல்கிறாயே?” எனப் படியிலிருந்து இறங்கியவாறே கேட்டான்.
அவன் குரல் கேட்டு நின்றவள் சிறிது யோசித்துவிட்டு “இல்லை. அறையின் உள்ளேயே இருப்பது... ஒரு மாதிரி இருந்ததால்...” என்று அவள் இழுக்கவும்
தேவா “தென்னை மரம் எப்படி இருக்கும் என்று தெரியுமா?” என்றான்.
முதலில் அவன் கேள்வியிலிருந்த கேலி புரியாமல் முழித்தவள் உடனே புரிந்து கொண்டு
“எங்கே என் வீட்டிலேயே இரண்டு தென்னை மரங்கள் இருக்கும். உலகத்திலேயே உன் ஊரில் மட்டும் தான் தென்னை மரங்கள் இருப்பதைப் போலப் பேசாதே” எனக் கோபமா பேசிக் கொண்டே போனவளைப் பார்த்துத் தேவா சிரிக்கவும் பேச்சை நிறுத்தி விட்டு அவனைப் பார்த்து முறைக்கத் தொடங்கி விட்டாள்.
அவள் பேச்சை நிறுத்தியும் சிரிப்பை நிறுத்தாதவனைப் பார்த்து “நீ சைக்கோ மாறியான ஆளா? அடுத்தவர்களைக் கோபமாக்கி, அதை இரசிப்பவனா?” என்றாள்.
அவளது கேள்விக்கு இன்னும் அதிகமாகச் சிரித்தவன் “அப்படி என்று சொல்லிவிட முடியாது. ஆனால் ஓரளவு நீ கூறியதும்கூட உண்மையே” என்றவன் மீண்டும் அவனே பேசத் தொடங்கினான்.
“நான் தென்னந்தோப்பைப் பார்க்கப் போகிறேன். உனக்கு விருப்பம் இருந்தால் என்னுடன் வருகிறாயா என்று கேட்பேன் தான். ஆனால் அதற்கும் நீ ஏதாவது வாக்குவாதம் செய்வாய்” என்றவனை இடைமறித்து
“அதனால் என்னைக் கோபப்படுத்தி நீ விளையாடுகிறாய்” என்று ஆதிரை முடித்தாள்.
“அப்படி இல்லை. நீ தவறாக நினைத்துக் கொள்வாயோ என்று எண்ணினேன்” என்றான்.
அவன் கூறியதைக் கேட்டுச் சிந்தித்தவள் “உன்னுடன் வருவதற்கு எனக்கு விருப்பமில்லை தான். ஆனால்...” என்று இழுத்தவள் அவனும் “ஆனால்” என்று இழுக்கவும் “ம்ம்... ஆனால் அங்கே வேறு யாராவது இருப்பார்கள் என்றால் வருகிறேன்” என்றாள்.
அவள் கூறியதற்குத் தேவா எந்தவித பதிலும் கூறாமல் அவளைப் பார்த்து முறைக்கவும்
“என்ன?” என்றாள்.
“நான் கேட்பதற்குச் சரியாக பதில் கூறு” என்றவன் அவனே தொடர்ந்து “நாம் இப்பொழுது எங்கே இருக்கின்றோம்?” என்றான்.
அவனது இந்தக் கேள்விக்கு அவளுக்கும் பதில் கூற விருப்பம் இல்லை தான் ஆனால் அவனது குரல் அவளே அறியாமல் அவளுக்குள் பயத்தைத் தூண்டவும் எந்த விதமான விவாதமும் செய்யாமல்
“உன்னுடைய வீட்டில்” என்றாள்.
“நம்முடைய” என்று தேவா திருத்தவும் அதற்கு ஆதிரையிடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை.
அமைதியாகத் தரையைப் பார்த்து நின்று கொண்டிருந்தவளிடம் தேவாவோ “இங்கு உன்னையும் என்னையும் தவிர வேறு யாராவது இருக்கின்றார்களா?” என்றான்.
அவனது கேள்விகளின் நோக்கம் ஆதிரைக்குப் புரியவும், தான் கூறியதிலிருந்த தவறு அவளுக்குப் புரிந்தது தான். ஆனால் தன் தவறுகளை அதிலும் தேவாவிடம் ஒப்புக்கொண்டால் அது எப்படி ஆதிரை ஆவாள்.
எனவே அவனது கேள்விக்குப் பதில் கூறுவதைத் தவிர்த்து விட்டு “நீ இப்படி தான் எப்போதும் பேசிக் கொண்டே இருப்பாயா என்ன? இப்பொழுது என்னைத் தென்னந்தோப்பிற்கு அழைத்துச் செல்ல முடியுமா முடியாதா?” என்றாள்.
தேவாவும் பதிலுக்கு “நானா! நானா பேசிக் கொண்டே இருக்கின்றேன். நீதான் பக்கம் பக்கமாகப் பேசுகிறாய்” என்றான்.
அவனது குரலிலிருந்த கோபம் மறைந்திருப்பதை ஆதிரையும் கவனிக்கத் தவறவில்லை அதற்குப் பின்புமாய் அவளது பயம் அவளிடம் இருக்கும்? அப்படியொரு உணர்வு இருப்பதையே ஆதிரை மறந்துவிட்டாள்.
“நான் ஒன்றும் பக்கம் பக்கமாகப் பேசவில்லை...” என இருவரும் மாறி மாறி ஒரு பெரிய வாக்குவாதத்தையே தொடங்கி விட்டனர்.
எத்தனை நேரம் அது தொடர்ந்ததோ “தம்பி” என்று வீட்டின் வாசலிலிருந்து குரல் வரவுமே அவர்கள் சண்டையை நிறுத்தி விட்டு வெளியில் சென்று பார்த்தனர்.
அங்கே அறுபது வயதையோற்றிய முதியவர் ஒருவர் நின்று கொண்டிருக்கவும் அவரைப் பார்த்துத் தேவா “வாங்க முத்தையா. அங்கு தான் வந்துகொண்டிருந்தோம் அதற்குள் நீங்களே வந்து விட்டீர்களே! எதுவும் அவசர செய்தியா?” என்றான்.
அதற்கு அந்த முதியவர் “இல்லை தம்பி. வருகிறேன் என்றீர்களா? நேரமாகி விட்டது, காணுமே! மறந்துவிட்டிற்களோ என்று யோசனையில் ஒரு எட்டு பார்த்துப் போகலாமென்று வந்தேன் தம்பி” என்றார்.
“அங்கு தான் இருவரும் வந்து கொண்டிருந்தோம்” என்றவன் ஆதிரையிடம் “ஆதிரை. இவர்தான் முத்தையா. நம் தென்னந்தோப்பில் பல வருசமாக வேலை செய்கிறார். நம் குடும்பத்தில் ஒருவர் போல” என அறிமுகம் செய்து வைத்தான்.
அந்த முதியவரும் ஆதிரையைப் பார்த்து “வணக்கமா” என வணக்கம் வைக்கவும் இவளும் மரியாதையாக ஒரு புன்னகையுடன் வணக்கம் கூறினாள். பின்பு முத்தையா “நான் முன்னே செல்கிறேன் தம்பி. நீங்கள் பொறுமையாக வீட்டைப் பூட்டிவிட்டு வாருங்கள்” எனக் கூறி சென்றார்.
அவரிடம் சரியென்று விட்டுப் பூட்டை எடுக்க உள்ளே சென்ற தேவாவின் பின்னாலேயே சென்ற ஆதிரை அவனிடம் “இதுவரை நீ, நம் வீட்டைச் சுற்றிப் பார்க்கவே இல்லையா?” என மிகவும் ஆச்சரியமாகக் கேட்டான்.
“இல்லை. ஏன்?” என்றவள் தொடர்ந்து “உன்னால் எதையும் நேரடியாகக் கூறவே முடியாதா?” என்றாள்.
“ஓ! தெளிவாகவே கூறலாமே” என்றவன் எதுவும் கூறாமல் அவளை அழைத்துக் கொண்டு வீட்டின் வெளிப்புறம் வந்து வீட்டைப் பூட்டுப் போட்டு மூடினான்.
இவன் செய்கையில் பொறுமை இழந்து கொண்டிருந்த தன் மனைவியைப் பார்த்து வீட்டின் நுழைவாயிலைக் காட்டி “அங்கே என்ன தெரிகிறது?” என்று கேட்டான்.
ஆதிரையும் தன் பொறுமையை இழந்து பிடித்துக் கொண்டு “வீட்டின் காம்பௌன்ட்” என்றவளிடம் “அதிலிருந்து உள்ளே வந்தால்?” என்று அடுத்த கேள்வியை ஆரம்பித்தான்.
அதற்குப் பதில் கூறாமல் ஆதிரை முறைக்கவும் “சொல். நான் தெளிவாகச் சொல்கிறேன்” என்றான். இவள் பதில் கூறாமல் அவன் எதுவும் கூறப்போவதில்லை என்று தெரிந்ததால் “வீடு” என்றாள்.
“ம். வீடு, ஆனால் வீட்டைத் தாண்டியதும்?” என்று கேட்டுக் கொண்டே இரண்டு அடி பின்னாடி நடந்தான்.
மல்லிகாவிற்குத் தேவாவின் மீது இருந்த நம்பிக்கை பார்க்க ஆதிரைக்கு ஆச்சரியமாக இருந்தது. இதே போல் தான் அவர்கள் திருமணத்தன்று அங்குக் கூடியிருந்த மக்களும் சிலர் கூறியதும் ஆதிரையின் நினைவிற்கு வந்தது. அதற்காக அப்படியே விடவும் அவளுக்கு மனம் வரவில்லை.
எனவே மல்லிகாவிடம் “ஏன் உங்கள் தேவ் அண்ணா என்ன கடவுளா? அவரும் மனிதன் தானே. அவரும் சில நேரங்களில் தவறு செய்வார்” என்றாள்.
மல்லிகாவோ “அதுவெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் தேவ் அண்ணா தவறு செய்யமாட்டார். உங்களுக்குத் தான் அவரைப் பற்றித் தெரியவில்லை” என்றாள்.
ஆதிரைக்கோ இதற்கு மேல் எதுவும் கூற விருப்பம் இல்லை. அது சின்னப் பிள்ளையின் மனதில் நஞ்சை கலப்பது போல் இருக்கும் என்று நினைத்து அமைதியானாள். ஆனால் மல்லிகா விடுவதாக இல்லை.
“உங்களுக்குத் தெரியுமா என்னைப் போல் இங்குப் பல பேரை தேவ் அண்ணா தான் படிக்க வைக்கிறார். சிலர் கல்லூரியில் கூடப் படிக்கிறார்கள்” என்று மல்லிகா கூறவும் ஆதிரைக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவளது நீண்ட நேரச் சந்தேகத்திற்கும் பதில் கிடைத்தது. மல்லிகா தேவ் படிக்க வைக்கும் பெண். ஆனால் இவள் கூறுவதைப் பார்த்தால் இவளைப் போல் இன்னும் பலரைப் படிக்க வைக்கிறாரா என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் பேசிக் கொண்டே வந்ததில் மல்லிகாவின் பயம் போயிருந்தது. ஆதிரையோ சிந்தனை உலகத்திற்குள் புகுந்து கொண்டாள்.
இருவரும் வேறு வேறு மனநிலையில் காரில் ஏறுவதைத் தேவாவும் கவனிக்கத் தவறவில்லை. ஆதிரை பயணம் முழுவதுமே ஏதோ சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தாள். காரே மிகவும் அமைதியாக இருந்தது.
கார் கடைசியாக ஒரு குடிசை வீட்டின் முன் நின்றது. உடனே மல்லிகா ஆதிரையிடம்
“இதுதான் எங்கள் வீடு. உள்ளே வாருங்கள்” என்று அழைக்கவும் சிந்தனை உலகிலிருந்து நிஜவுலகிற்கு வந்தவள், ஒரு புன்னகையுடன் சரியெனத் தலையசைத்து காரை விட்டுக் கீழே இறங்கினாள்.
கார் சத்தம் கேட்டு அவசரமாக அந்த வீட்டின் உள்ளேயிருந்து வெளிவந்த பெண்மணி இவர்களைப் பார்த்ததும் பரபரப்பாக “வாருங்கள். வாருங்களம்மா”. என வீட்டினுள் அழைத்தாள்.
காரை விட்டுக் கீழே மல்லியை இறக்கிய தேவா ஒரு புன்னகையுடனே “இல்லை, விடத் தான் வந்தோம். மல்லியின் தந்தை இரவு வந்துவிடுவார். அம்மா வந்ததும் வரச் சொல்கிறேன்” என்று கூறி அந்தப் பெண்மணியின் அழைப்பை மறுத்துவிட்டு ஆதிரையுடன் கிளம்பி விட்டான்.
அங்கிருந்து கிளம்பியதிலிருந்தே ஆதிரை எதுவும் பேசாமல் கோபமாக இருப்பதைப் போல் தெரியவும் தேவா அவளிடம்,
“என்ன சிந்தனையிலிருந்து கோபத்திற்கு மாறியாயிற்று போல?” என்று வினவவும் இந்தக் கேள்விக்காகவே காத்திருந்தவள் போல, “மல்லி எவ்வளவு ஆசையாக வீட்டிற்குக் கூப்பிட்டாள்? அவளது அம்மாவும் கூப்பிட்டார். உள்ளே போக எவ்வளவு நேரம் ஆகப் போகிறது? ஏன் குடிசை வீடாக இருந்ததும் உள்ளே வர மனமில்லையோ?” என்று மூச்சு விடாமல் பேசி முடித்தாள்.
அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவன் அவள் பேசி முடிக்கவும் சிரித்து விட்டு “நான் கூட வேறு நினைத்தேன். குடிசை வீடு மாடி வீடு என்று எதுவும் இல்லை ஆதிரை. இந்தப் பக்கத்தில் பொதுவாக ஒரு பழக்கம் இருக்கின்றது. மணமக்களின் தாய்மாமாக்கள் வீட்டிற்கு விருந்திற்குச் சென்றபின் தான் மற்ற வீடுகளுக்குச் செல்வது வழக்கம். அதற்காகத் திருமணம் வழக்கப்படி தான் நடந்ததா என்று கேட்காதே” என்றான்.
“ஓ! இருந்தாளும் அவர்கள் தவறாக நினைக்கமாட்டார்களா? அப்படியில்லை என்றாலும் வருத்தமாவது ஆகியிருப்பார்கள்” என்றாள்.
“அவர்களுக்கும் வழக்கமும் நிலைமையும் தெரியும். புரிந்து கொள்வார்கள். அதோடு இல்லாமல் நாளை அம்மாவும் செல்வார்கள் கவலைப்படும் அளவு எதுவும் இல்லை” என்றான்.
அவ்வாறு அவன் கூறும்பொழுது அவன் குரல் மாறியிருந்தது. அந்தக் குரலிலிருந்த ஏதோ ஒன்று ஆதிரையைப் பாதித்தது ஆனால் அது என்னவென்று அவளுக்குப் புரியவில்லை. அதைப் பற்றி யோசிப்பதற்குள் அவர்களது வீடும் வந்து விட்டது.
இருவரும் வீட்டிற்குள் நுழைந்தவுடன் தன் அறைக்குள் நுழையப் போன ஆதிரையிடம் தேவா “ஒரு நிமிடம் உன்னிடம் பேச வேண்டும்” என்றான்.
“என்ன” என்று கடுப்பாகக் கேட்டவளிடம்
“மல்லியின் தந்தை தான் நம் காரின் டிரைவர். அதோடு, காலையில் பள்ளியிலிருந்து செய்தி வந்ததும் அவள் அம்மாவைத் தான் தேடிப் போனேன். அவர்கள் வீட்டில் இல்லை. வேலைக்குப் போய் விட்டதாகப் பக்கத்தில் கூறினார்கள். அவர்களுக்குச் செய்தி அனுப்பி விட்டுத் தான் உன்னை அழைத்துச் சென்றேன். அவர்கள் செய்தி கிடைத்து எப்போது வருவார்கள் என்று தெரியாது அல்லவா?” என்றான்.
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவள் “இதையெல்லாம் ஏன் என்னிடம் கூறுகிறாய்” என்று புரியாமல் கேட்டாள்.
தேவா “எப்படியும் மல்லியின் பெற்றோர் இருக்கும்போது இவன் ஏன் போனான். அதிலும் நம்மை ஏன் அழைத்துப் போனான். இவனுக்கு இதில் என்ன லாபம் என்று தான் யோசித்திருப்பாய்” என்று கூறவும் ஆதிரை பதில் ஏதும் கூறாமல் அமைதியாகவே நின்றாள்.
தேவா கூறுவதும் உண்மை தான், ஆதிரை அப்படிச் சிந்தித்தாள் தான். அதிலும் மல்லியின் தாயைப் பார்த்தபிறகு அவளது சந்தேகம் அதிகமாகத் தான் ஆகியிருந்தது. அவளிடமிருந்து பதில் வராததால் தேவாவே தொடர்ந்தான்
“அவ்வாறு நினைப்பதில் தவறில்லை தான். நான் உன்னிடம் நடந்து கொண்டதில் அப்படிதான் நினைக்கத் தோன்றும்” என்று காரில் நிலைமை அவர்களுக்குத் தெரியும் என்று கூறிய அதே குரலில் கூறிவிட்டு அவளது பதிலுக்குக் கூட நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டான்.
அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு சில வினாடிகள் நின்றவள், தன் அறைக்குள் சென்று அன்று நடந்த நிகழ்வுகளையே மீண்டும் மீண்டும் மனத்திரையில் ஓட்டிப் பார்த்தாள்.
எத்தனை முறை யோசித்தாலும் அவளுக்குத் தெரிந்த தேவாவிற்கும் மல்லி கூறிய தேவாவிற்கும் சம்பந்தம் இல்லையென்றே தோன்றியது. மல்லியின் பெற்றோர் இல்லாததால் தான் அவன் அழைக்கச் சென்றேன் என்று கூறினானே தவிர அவன்தான் மல்லியைப் படிக்க வைப்பதாகக் கூறவில்லையே! மணி கூறியதைப் போலப் பணம் தான் முக்கியம் என்று நினைப்பவர்கள் எப்படி அந்தப் பணத்தைச் செலவு செய்து மற்றவர்களுக்கு உதவுவார்கள் என்று பல கேள்விகள் அவளுக்குள் தோன்றி மறைந்தன.
நீண்ட நேரம் அப்படியே சிந்தித்துக் கொண்டிருந்தவள் யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்கவும் எழுந்து கதவைத் திறந்தாள். அங்குத் தேவா மதிய உணவோடு நின்றுகொண்டிருந்தான்.
“அம்மா இல்லாததால் தான் நான் கொண்டு வந்தேன்” என்றவன் அவள் அதை வாங்கியதும் ஒரு நொடி கூட நிற்காமல் அங்கிருந்து போய் விட்டான். எங்கே நின்றால் நீ கொண்டு வந்த உணவு எனக்கு வேண்டாமெனக் கூறிவிடுவாளோ என்று பயம் அவனுக்கு.
அங்கிருந்து சென்ற தேவா நேராகத் தன் அறைக்குள் சென்றான். அவனுக்கு அவனை நினைத்தாலே கோபமாக இருந்தது. அவள் முன் நின்று கூடப் பேச முடியாத சூழ்நிலையை அவன்தானே உருவாக்கிக் கொண்டான். என்ன செய்தால் அவன் செய்த தவறை சரி செய்ய இயலும் என அவனும் பலவாறு யோசித்தாலும் அவனுக்கு எந்த ஒரு விடையும் கிடைக்கவில்லை. செய்த தவறை மாற்ற இயலாது என்று அவனுக்கே புரியவும் அடுத்து என்ன என்று யோசிக்க ஆரம்பித்தான்.
ஆதிரையின் நிலையோ அங்கு வேறுமாறி இருந்தது. மணி கூறியதும் மல்லி கூறியதும் மாறி மாறி நினைவில் வந்தது என்றால் இன்னொரு புறம் ஏதோ ஒரு உணர்வு. அது இன்று என்று இல்லை முதன்முதலில் அவனைப் பார்த்தபோது தோன்றியது, அது என்னவென்று பலமுறை யோசித்தாலும் அவளுக்குப் பதில் கிடைக்கவில்லை. ஆனால் ஏதோ ஒன்றை அவள் மறந்ததைப் போல அவளுக்குத் தோன்றிக் கொண்டே இருந்தது.
சும்மா இருக்கும் மனம் சாத்தானின் உறைவிடம் என்று ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தது ஆதிரைக்கு நினைவு வந்தது. இப்படியே இந்த அறைக்குள்ளேயே அமர்ந்திருந்தாள் பைத்தியம் பிடித்துவிடும் என அவளுக்குத் தோன்றவும் அறையை விட்டு வெளியில் வந்தாள்.
வெளியில் வந்தவளுக்கு வீட்டில் யாரும் இல்லாதது நினைவுக்கு வரவும், அறைக்குள்ளேயே மீண்டும் செல்ல எத்தனித்தாள். அதேசமயம் மாடியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த தேவா ஆதிரையைப் பார்த்து விட்டான். வெளியில் வந்தவள் மீண்டும் உள்ளே செல்லவும் தேவா அவளை அழைத்தான்.
“ஆதிரை. என்னமா, எதுவும் வேண்டுமா? வெளியில் வந்துவிட்டு உடனே உள்ளே செல்கிறாயே?” எனப் படியிலிருந்து இறங்கியவாறே கேட்டான்.
அவன் குரல் கேட்டு நின்றவள் சிறிது யோசித்துவிட்டு “இல்லை. அறையின் உள்ளேயே இருப்பது... ஒரு மாதிரி இருந்ததால்...” என்று அவள் இழுக்கவும்
தேவா “தென்னை மரம் எப்படி இருக்கும் என்று தெரியுமா?” என்றான்.
முதலில் அவன் கேள்வியிலிருந்த கேலி புரியாமல் முழித்தவள் உடனே புரிந்து கொண்டு
“எங்கே என் வீட்டிலேயே இரண்டு தென்னை மரங்கள் இருக்கும். உலகத்திலேயே உன் ஊரில் மட்டும் தான் தென்னை மரங்கள் இருப்பதைப் போலப் பேசாதே” எனக் கோபமா பேசிக் கொண்டே போனவளைப் பார்த்துத் தேவா சிரிக்கவும் பேச்சை நிறுத்தி விட்டு அவனைப் பார்த்து முறைக்கத் தொடங்கி விட்டாள்.
அவள் பேச்சை நிறுத்தியும் சிரிப்பை நிறுத்தாதவனைப் பார்த்து “நீ சைக்கோ மாறியான ஆளா? அடுத்தவர்களைக் கோபமாக்கி, அதை இரசிப்பவனா?” என்றாள்.
அவளது கேள்விக்கு இன்னும் அதிகமாகச் சிரித்தவன் “அப்படி என்று சொல்லிவிட முடியாது. ஆனால் ஓரளவு நீ கூறியதும்கூட உண்மையே” என்றவன் மீண்டும் அவனே பேசத் தொடங்கினான்.
“நான் தென்னந்தோப்பைப் பார்க்கப் போகிறேன். உனக்கு விருப்பம் இருந்தால் என்னுடன் வருகிறாயா என்று கேட்பேன் தான். ஆனால் அதற்கும் நீ ஏதாவது வாக்குவாதம் செய்வாய்” என்றவனை இடைமறித்து
“அதனால் என்னைக் கோபப்படுத்தி நீ விளையாடுகிறாய்” என்று ஆதிரை முடித்தாள்.
“அப்படி இல்லை. நீ தவறாக நினைத்துக் கொள்வாயோ என்று எண்ணினேன்” என்றான்.
அவன் கூறியதைக் கேட்டுச் சிந்தித்தவள் “உன்னுடன் வருவதற்கு எனக்கு விருப்பமில்லை தான். ஆனால்...” என்று இழுத்தவள் அவனும் “ஆனால்” என்று இழுக்கவும் “ம்ம்... ஆனால் அங்கே வேறு யாராவது இருப்பார்கள் என்றால் வருகிறேன்” என்றாள்.
அவள் கூறியதற்குத் தேவா எந்தவித பதிலும் கூறாமல் அவளைப் பார்த்து முறைக்கவும்
“என்ன?” என்றாள்.
“நான் கேட்பதற்குச் சரியாக பதில் கூறு” என்றவன் அவனே தொடர்ந்து “நாம் இப்பொழுது எங்கே இருக்கின்றோம்?” என்றான்.
அவனது இந்தக் கேள்விக்கு அவளுக்கும் பதில் கூற விருப்பம் இல்லை தான் ஆனால் அவனது குரல் அவளே அறியாமல் அவளுக்குள் பயத்தைத் தூண்டவும் எந்த விதமான விவாதமும் செய்யாமல்
“உன்னுடைய வீட்டில்” என்றாள்.
“நம்முடைய” என்று தேவா திருத்தவும் அதற்கு ஆதிரையிடமிருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை.
அமைதியாகத் தரையைப் பார்த்து நின்று கொண்டிருந்தவளிடம் தேவாவோ “இங்கு உன்னையும் என்னையும் தவிர வேறு யாராவது இருக்கின்றார்களா?” என்றான்.
அவனது கேள்விகளின் நோக்கம் ஆதிரைக்குப் புரியவும், தான் கூறியதிலிருந்த தவறு அவளுக்குப் புரிந்தது தான். ஆனால் தன் தவறுகளை அதிலும் தேவாவிடம் ஒப்புக்கொண்டால் அது எப்படி ஆதிரை ஆவாள்.
எனவே அவனது கேள்விக்குப் பதில் கூறுவதைத் தவிர்த்து விட்டு “நீ இப்படி தான் எப்போதும் பேசிக் கொண்டே இருப்பாயா என்ன? இப்பொழுது என்னைத் தென்னந்தோப்பிற்கு அழைத்துச் செல்ல முடியுமா முடியாதா?” என்றாள்.
தேவாவும் பதிலுக்கு “நானா! நானா பேசிக் கொண்டே இருக்கின்றேன். நீதான் பக்கம் பக்கமாகப் பேசுகிறாய்” என்றான்.
அவனது குரலிலிருந்த கோபம் மறைந்திருப்பதை ஆதிரையும் கவனிக்கத் தவறவில்லை அதற்குப் பின்புமாய் அவளது பயம் அவளிடம் இருக்கும்? அப்படியொரு உணர்வு இருப்பதையே ஆதிரை மறந்துவிட்டாள்.
“நான் ஒன்றும் பக்கம் பக்கமாகப் பேசவில்லை...” என இருவரும் மாறி மாறி ஒரு பெரிய வாக்குவாதத்தையே தொடங்கி விட்டனர்.
எத்தனை நேரம் அது தொடர்ந்ததோ “தம்பி” என்று வீட்டின் வாசலிலிருந்து குரல் வரவுமே அவர்கள் சண்டையை நிறுத்தி விட்டு வெளியில் சென்று பார்த்தனர்.
அங்கே அறுபது வயதையோற்றிய முதியவர் ஒருவர் நின்று கொண்டிருக்கவும் அவரைப் பார்த்துத் தேவா “வாங்க முத்தையா. அங்கு தான் வந்துகொண்டிருந்தோம் அதற்குள் நீங்களே வந்து விட்டீர்களே! எதுவும் அவசர செய்தியா?” என்றான்.
அதற்கு அந்த முதியவர் “இல்லை தம்பி. வருகிறேன் என்றீர்களா? நேரமாகி விட்டது, காணுமே! மறந்துவிட்டிற்களோ என்று யோசனையில் ஒரு எட்டு பார்த்துப் போகலாமென்று வந்தேன் தம்பி” என்றார்.
“அங்கு தான் இருவரும் வந்து கொண்டிருந்தோம்” என்றவன் ஆதிரையிடம் “ஆதிரை. இவர்தான் முத்தையா. நம் தென்னந்தோப்பில் பல வருசமாக வேலை செய்கிறார். நம் குடும்பத்தில் ஒருவர் போல” என அறிமுகம் செய்து வைத்தான்.
அந்த முதியவரும் ஆதிரையைப் பார்த்து “வணக்கமா” என வணக்கம் வைக்கவும் இவளும் மரியாதையாக ஒரு புன்னகையுடன் வணக்கம் கூறினாள். பின்பு முத்தையா “நான் முன்னே செல்கிறேன் தம்பி. நீங்கள் பொறுமையாக வீட்டைப் பூட்டிவிட்டு வாருங்கள்” எனக் கூறி சென்றார்.
அவரிடம் சரியென்று விட்டுப் பூட்டை எடுக்க உள்ளே சென்ற தேவாவின் பின்னாலேயே சென்ற ஆதிரை அவனிடம் “இதுவரை நீ, நம் வீட்டைச் சுற்றிப் பார்க்கவே இல்லையா?” என மிகவும் ஆச்சரியமாகக் கேட்டான்.
“இல்லை. ஏன்?” என்றவள் தொடர்ந்து “உன்னால் எதையும் நேரடியாகக் கூறவே முடியாதா?” என்றாள்.
“ஓ! தெளிவாகவே கூறலாமே” என்றவன் எதுவும் கூறாமல் அவளை அழைத்துக் கொண்டு வீட்டின் வெளிப்புறம் வந்து வீட்டைப் பூட்டுப் போட்டு மூடினான்.
இவன் செய்கையில் பொறுமை இழந்து கொண்டிருந்த தன் மனைவியைப் பார்த்து வீட்டின் நுழைவாயிலைக் காட்டி “அங்கே என்ன தெரிகிறது?” என்று கேட்டான்.
ஆதிரையும் தன் பொறுமையை இழந்து பிடித்துக் கொண்டு “வீட்டின் காம்பௌன்ட்” என்றவளிடம் “அதிலிருந்து உள்ளே வந்தால்?” என்று அடுத்த கேள்வியை ஆரம்பித்தான்.
அதற்குப் பதில் கூறாமல் ஆதிரை முறைக்கவும் “சொல். நான் தெளிவாகச் சொல்கிறேன்” என்றான். இவள் பதில் கூறாமல் அவன் எதுவும் கூறப்போவதில்லை என்று தெரிந்ததால் “வீடு” என்றாள்.
“ம். வீடு, ஆனால் வீட்டைத் தாண்டியதும்?” என்று கேட்டுக் கொண்டே இரண்டு அடி பின்னாடி நடந்தான்.
தொடரும்...