• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் களவாணி பாகம் 1

Vaishnavi Vijayaraghavan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 11, 2024
288
111
43
Maduravoyal
காதல் களவாணி

1000085575.jpg


பாகம் 1

மேகங்கள் ஒன்றோடு ஒன்று உரசி இடி என்னும் பெரிய சத்தத்தை உருவாக்கி கொண்டிருந்தது. அந்தக் கார் இருளிலும் ஒரு நொடி பௌர்ணமி நிலவின் ஒளியை போல வெளிச்சம் பூமியை பிரகாசிக்க செய்தது.

குடைகள் பறவைகளைப் போல அதைப் பிடித்திருந்தவர்களின் கையில் இருந்து பறந்து சென்றது. இருசக்கர வாகனத்தில் சென்ற அனைவரும் அந்த பெரும் மழையில் வண்டியை ஓட்ட பயந்து அங்கங்கே இருக்கும் கடைகளிலும், மேம்பாலத்தின் அடியிலும், சிலர் மரங்களுக்கு அடியிலும் நின்று கொண்டிருந்தனர்.

அரை மணி நேரத்திற்குப் பிறகு கனமழை குறைந்து பன்னீர் சொம்பிலிருந்து தெளிக்கப்படும் சாரல் போல மழைத் தூறிக் கொண்டிருந்தது.

அதுவரை இடி மின்னல் மழை பயத்தால், தன் அம்மாவின் கையைப் பிடித்தபடி பயந்து நின்று கொண்டிருந்த
ஆரவ், மழை நின்று விட்டது தெரிந்து. அவளின் கையை விட்டுவிட்டு
அந்தக் கடையின் உட்புறத்திலிருந்து சற்று தள்ளி வெளியே வந்து மழை தூறலில் நின்று கொண்டு தன் இரு கைகளையும் நீட்டி வானத்திலிருந்து விழும் தூறலை கண்களை மூடி வரவேற்றபடி நின்று கொண்டான்.

மழை நின்றாலும் மின்னலும் இடியும் நிற்கவில்லை. ஆங்காங்கே லேசாக மின்னல் தெரிந்தது.

"ஆரவ், வாடா" என்ற பயந்து இழுத்துக் கொண்டாள் அபிநயா.

" அம்மா ப்ளீஸ்மா, எனக்கு தான் தூறலில் நிற்கிறது பிடிக்கும் இல்ல? டூ மினிட்ஸ் நின்னுகிறேன் "

" நாளைக்கு எக்ஸாம் இருக்கு மறந்து போச்சா? அப்புறம் கோல்ட் வந்துச்சுன்னா அவ்வளவுதான் "

" மத்த பசங்க தான் அதெல்லாம் நினைச்சு பயப்படனும். நீங்க தான் மருந்து எல்லாம் வச்சிருக்கீங்க இல்ல.
நான் தும்பினாலே மருந்து கொடுத்து விடுவீங்க. அப்புறம் நான் ஏன் பயப்படனும் "

அவன் அப்படி சொன்னது அபிநயாவுக்கு சிரிப்பு தான் வந்தது. ஏனென்றால் அவன் சொல்வது உண்மைதான். ஒரு தும்மல் வந்தாலே மருந்து ஊற்றி விடுவாள். கவர்ன்மென்ட் ஹாஸ்பிடலில் நர்சாக வேலை செய்கிறாள் அபிநயா.

" இதெல்லாம் நல்லா பேசு வா போகலாம் வீட்டுக்கு", என்று சொன்னபடி ஆரவ்வை கைபிடித்து அழைத்து தன் ஸ்கூட்டரில் ஏற்றும்போது தான் தன்னுடைய மூத்த மகன் ஆதித்யா குளிரில் நடுங்கி கொண்டு இருந்தது தெரிந்தது.

" என்னாச்சு ஆதி " என்று சொல்லிய படி சற்றே பதட்டமாக அவனுடைய நெற்றி மற்றும் கழுத்தை தொட்டுப் பார்த்தாள் அபிநயா.

" ரொம்ப குளிருது மா " என்று பற்கள் உதறிக் கொண்டே பேசினான் அதித்யா.

" வா போகலாம் " என்று சொல்லி இருவரையும் பைக்கில் ஏற்றிக்கொண்டு வேகமாக வீட்டிற்கு வந்தாள்.

வீட்டிற்கு வந்தவுடன் அவர்களுடைய உடையை மாற்ற சொல்லி ஆதித்யாவிற்கு ஒரு இன்ஜெக்ஷன் போட்டு விட்டாள்.

இதுவே ஆரவாக இருந்தால், வேண்டாம் அம்மா ஊசி வேண்டாம், சிரப்பு குடுங்க, மாத்திரை கொடுங்க.
மாத்திரையை அப்படியே கொடுக்காதீங்க தூள் பண்ணி கரைச்சு கொடுங்க, என்று சொல்லி வீட்டையே ரணகளப்படுத்தி இருப்பான்.

ஆனால் ஆதித்யா மிகவும் பொறுமையானவன். அபிநயா சொல்வதை மறுத்து கூட பேச மாட்டான்.

அதனால் அபிநயா ஊசி போட போகிறேன் என்று சொன்னவுடன், தன்னுடைய ஷார்ட்ஸை இறக்கி அவனே ஊசி போடுவதற்காக தன் இடுப்பை காண்பித்தான்.

" ஆதி நீ போய் படுத்துக்கோ, நான் உனக்கு சாப்பிட இட்லி கொண்டு வரவா இல்ல ரசம் சாதம் கொண்டு வரவா?"

" அம்மா இட்லி வேண்டாமா, ரசம் சாதம் கொடுக்குறீங்களா?"

" சரிடா கண்ணா, நான் கொண்டு வரேன். நீ போய் படுத்துக்கோ ஊசி போட்டு இருக்க வேண்டிய அதனால உனக்கு டயர்டா இருக்கும். நான் பத்து நிமிஷத்துல கொண்டு வரேன் "

" ஓகே அம்மா" என்று சொல்லி அவனுக்கும் அவன் தம்பிக்குமான ரூமிற்கு சென்று படுத்துக் கொண்டான் ஆதித்யா.

ரசத்தை சூடு செய்து சாதத்தை சற்று குழைத்து குடிக்கும் அளவிற்கு எடுத்து சென்று ஆதித்யாவிற்கு கொடுத்தாள்.

இரண்டு டம்பளர் குடித்து விட்டு படுத்துக் கொண்டான். அவனுக்கு போர்வையை போர்த்திவிட்டு விட்டு அவன் தலையை கோதி விட்டாள் அபிநயா.

குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என்றால் அம்மாக்களுக்கு கண்களில் இருந்து கண்ணீருக்கு பதிலாக ரத்தம் தானே வரும். அப்படித் தான் உணர்ந்தாள் அபிநயா.

கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டு வெளியே வந்து தன் கணவனுக்கு கால் செய்தாள்.

"என்னங்க, பிஸியா இருக்கீங்களா?"

"ஆமாம் அபி, மன்த் எண்டு இல்ல? அதான் அக்கௌண்ட் கிளோஸிங் வேலை இருக்கு முடிச்சிட்டு வந்திடறேன்" என்றான் அர்ஜூன்.

"ஓ, சரிங்க. ஒண்ணும் இல்ல நம்ம ஆதிக்கு குளிர் அப்புறம் ஜூரம். இன்ஜெக்ஷன் கொடுத்திட்டேன். அதான் உங்க கிட்ட சொல்லிட்டு அப்படியே உங்களுக்கு டின்னெர் எடுத்து வைக்கவான்னு கேட்கலாம்னு நினைச்சேன்"

"என்னாச்சு? ஏன் திடீர்னு அவனுக்கு காய்ச்சல்? மழைல நனைந்தானா?"

"இல்ல இல்ல, அதெல்லாம் இல்ல. ரெயின் கோட் போட்டுத் தான் கூட்டி வந்தேன். அதுவும் தூரல் அதிகமானதும், ஓரமாக கடைக்கு கிட்ட நின்று விட்டோம். மழை விட்டதும் தான் அங்கிருந்து கிளம்பினோம்"

"ஓகே, விடு அபி. கிளைமேட் சேன்ஞ் ஆச்சு இல்ல? அதனால கூட அப்படி இருக்கலாம்"

"இல்லங்க, ரொம்ப சோர்வா படுத்துக்கிட்டான். அதான் கவலையா இருக்கு"

"உனக்கே தெரியாதா? இந்த மாதிரி சளி, இருமல், குளிர், காய்ச்சல் எல்லாம் உடம்புக்கு வந்து போனா தான் நம்ம உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று. அப்புறம் நீ ஏன் டென்ஷன் ஆகுற?"

"தெரியும் ங்க, இருந்தாலும்..."

"சரி சரி, அதை விடு. அவன் நாளைக்கு காலைல சரி ஆயிடுவான். டின்னெர் என்ன?"

"இட்லி, காரச் சட்னி"

"ஓகே மா, எடுத்து வை. நான் வர லேட்டா ஆகும்னு நினைக்கிறேன். நீ பூட்டிட்டு படுத்துக்கோ. நான் ஓப்பன் பண்ணி வந்துக்கிறேன்"

"ஓகே ங்க, பை"

ஃபோனை வைத்து விட்டு,

"ஆரவ்" என்றாள் அபிநயா.

" இதோ வந்துட்டேன் மா" என்று சொல்லி வெளியே சாரலில் நனைந்து கொண்டிருந்தவன் உள்ளே வந்து சிரித்தான்.

கோபப்பட்ட அபிநயா,

" என்ன ஆரவ் நீ, இப்பதான் அண்ணாவுக்கு முடியலன்னு ஊசி போட்டுட்டு வந்து இருக்கேன். நீயும் ஜுரம் வந்து படுத்துக்கலாம் என்று நினைக்கிறாயா?" என்று சொல்லி கோபத்தில் ஒரு அடியை முதுகில் வைத்தாள்.

அபிநயா அடிப்பது வலிக்காது, இருப்பினும் தன் அம்மா தன் மீது கோபமாக பேசிவிட்டாரே என்பதிலேயே ஆரவ் அழத் தொடங்கினான்.

அழுத உடனேயே அபிநயாவிற்கும் கண்கள் கலங்கியது.

" சாரிடா செல்லம், சாரிடா செல்லம் " என்று சொல்லி அவனை தூக்கி அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.

" சாரி அம்மா"

" இல்ல இல்ல நான் உன்னை அடிச்சி இருக்க கூடாது. உனக்கு மழையில நனைகிறது பிடிக்கும்னு எனக்கு தெரியும்"

" அண்ணாவுக்கு ஊசி போட்டிங்களா? "

" ஆமாம்"

" எனக்கும் ஊசி போடுவீங்களா? "

இப்போது அவன் பேசியது சிரிப்பு வந்துவிட்டது அபிநயாவுக்கு.

" ஜுரம் வந்தா கண்டிப்பா போடுவேன் "
என்று கோபமாக பேசுவது போல நடித்து சிரித்தாள்.

" எனக்கு ஜுரம் எல்லாம் வராது நான் ஸ்ட்ராங் "

" சரி சரி போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கிட்டு வா, டிபன் தரேன் "

" ஓகே அம்மா" என்று சொல்லி உள்ளே ஓடி சென்றான் ஆரவ்.

அர்ஜூன் மற்றும் அபிநயா இருவருக்கும்
பெற்றோர்கள் பார்த்து நிச்சயிக்கப்பட்டு செய்யப்பட்ட அரேஞ்சிடு மேரேஜ் தான்.

ஆனால் திருமணம் ஆன சில மாதங்களிலேயே இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டு ஆதர்ஷ தம்பதிகள் ஆகி விட்டனர். இருவரும் ஒருவர் மேல் ஒருவர் உயிரையே வைத்திருக்கின்றனர்.

அர்ஜுனுக்கு உலகமே குடும்பம் தான்.
தன் மனைவி மற்றும் மகன்களை உயிரை விட மேலாக எண்ணுவான்.
அதேபோல் தான் அபிநயாவும். அர்ஜுனுக்கோ குழந்தைகளுக்கோ உடம்பு சரியில்லை என்றால் தன் உயிரே போவது போல உணர்வாள்.

அர்ஜுனுக்கு வயது 35 ஒரு சிறிய ஐடி கம்பெனியில் ஆடிட்டராக வேலை செய்கிறான்.

அபிநயா வயது 32 கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் நர்சாக வேலை செய்கிறாள்.

குழந்தைகள் ஆதித்யா மற்றும் ஆரவ்.
ஆதித்யாவிற்கு 9 வயது 5ஆம் வகுப்பு படிக்கிறான்.
ஆரவிற்கு 5 வயது ஒன்றாம் வகுப்பு படிக்கிறான்.

அர்ஜுன் உடைய அப்பா கிருஷ்ணா,
அர்ஜுனுக்கு ஒரு அண்ணன் பெயர் அஜய். அண்ணி ஊர்மிளா அவர்கள் வெளிநாட்டில் செட்டில் ஆகி விட்டார்கள். கிருஷ்ணாவும் அவர்களுடன் தான் இருக்கிறார். மூன்று வருடத்திற்கு ஒரு முறை அஜய் இந்தியா வரும்பொழுது கிருஷ்ணாவும் வந்து அர்ஜுன் உடைய வீட்டில் இரண்டு மாதங்கள் தங்கி இருந்து விட்டு செல்வார். அஜய் ஊர்மிளா மற்றும் குழந்தைகள் ஊர்மிளாவின் அம்மா வீட்டில் இரண்டு மாதங்கள் தங்கி இருப்பார்கள்.

அர்ஜுனின் அண்ணா அஜய்க்கு இரட்டை குழந்தைகள்.
ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை.
இருவருக்கும் 10 வயது. வெளிநாட்டில் 5 வகுப்பு படிக்கிறார்கள். பெயர் வருண் மற்றும் வர்ஷினி.

அபிநயா வீட்டில் அபிநயாவிற்கு ஒரே ஒரு தங்கை. அபிநயாவின் தங்கை பெயர் மோகனா வயது 26. தன்னுடன் காலேஜில் படித்த ரஹ்மானை காதலித்து திருமணம் செய்து கொண்டாள். இவர்களுக்கு மூன்று வயதில் ஹாசினி என்ற பெண் குழந்தை இருக்கிறது.

மதம் மாறி திருமணம் செய்து கொண்டதால் அபிநயாவின் பெற்றோர்கள் அவளை ஏற்றுக் கொள்ளவில்லை. அபிநயாவின் பெற்றோர்கள் அகிலாண்டேஸ்வரி மற்றும் முருகப்பன்.

ஆனால் அபிநயா மற்றும் தன் தங்கையிடம் தினமும் ஒரு முறையாவது ஃபோனில் பேசி விடுவாள். மாதத்திற்கு ஒரு முறை பொது இடத்தில் இருவரும் குழந்தைகளுடன் சந்தித்துக் கொள்வார்கள்.

முருகப்பன் கலெக்டர் ஆபீஸில் பியூன் ஆக இருந்து ரிட்டயர் ஆகிவிட்டார். வசதியின்மை காரணத்தால் தான் அபிநயா நல்ல மதிப்பெண் எடுத்தும் டாக்டருக்கு படிக்க வைக்க முடியாததால் நர்சிங் படிக்க வைத்தார் முருகப்பன்.

மோகனா சிஏ படித்தாள். கம்பெனியில் அக்கவுண்டன்ட்டாக வேலை செய்கிறாள். ரஹ்மானும் அவளுடன் படித்து வேலை செய்தான். இருவரும் ஒரே கம்பெனியில் வேலை செய்கின்றனர்.


அடுத்த முக்கியமான கதாபாத்திரம்
அபிராமி.

அபிநயா மற்றும் அர்ஜுனனின் இந்த அழகிய குடும்பத்தை பிரிக்க வருகிறாள் அபிராமி. அபிராமி வயது 33. திருமணம் ஆகவில்லை.
திருமணத்தில் பெரிதாக அவளுக்கு ஈடுபாடு இல்லை. ஆண்களுக்கு நாம் ஏன் அடிமையாக இருக்க வேண்டும் என்று நினைத்து திருமணத்தை வெறுத்தவள்.

அபிநயாவின் பக்கத்து வீட்டிற்கு குடி வரப்போகிறாள். மேலும் அவளும் அபிநயா வேலை செய்யும் அதே கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் நர்சாக வேலை செய்ய கோயம்புத்தூரில் இருந்து போன வாரம் தான் சென்னைக்கு டிரான்ஸ்பர் ஆகி வந்திருக்கிறாள்.

அதற்கு முன் அவள் கோயம்புத்தூரில் இருந்தாள்.

அபிராமியின் அப்பா பாலச்சந்தர் வயது 59 பேங்கில் வேலை செய்து ரிட்டயர் ஆகிவிட்டார். அபிராமியின் அம்மா சகுந்தலா கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே இறந்து விட்டார். அதனால் பார்மசி டிகிரி படித்த அபிராமிக்கு நர்ஸ் வேலை கிடைத்தது. கோயம்புத்தூரிலேயே 10 வருடமாக வேலை செய்தாள் அபிராமி.

அபிராமியின் அப்பா பாலச்சந்தருக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது. சென்னையில் பைபாஸ் சர்ஜரி செய்ய அவரை அழைத்துக் கொண்டு வர நினைத்தாள். அப்படியே அவளுக்கும் சென்னைக்கு டிரான்ஸ்பர் கேட்டு வந்து விட்டாள் அபிராமி.

அபிராமிக்கு ஒரே ஒரு தம்பி, பெயர் அரங்கநாதன். வயது 28.
பாத்திமா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான். அவளுக்கு வயது 26. நான்கு வயதில் வசீனா என்ற பெண் குழந்தை உள்ளது.
அவர்கள் கோயம்புத்தூரிலேயே இருக்கின்றனர்.

அபிராமி பாம்பு என்று தெரியாமல், பால் வார்க்கப் போகிறாள் நம் கதாநாயகி அபிநயா. என்ன நேருமோ? காத்திருங்கள்.


தொடரும்....

அ. வைஷ்ணவி விஜயராகவன்.