காதல் களவாணி
பாகம் 2
ஆரவிற்கு டின்னர் கொடுத்து, சிறிது நேரம் கழித்து அவனையும் பங்க்கர் பெட்டில் படுக்க வைத்துவிட்டு தன்னுடைய ரூமிற்கு வந்தாள் அபிநயா.
இரண்டு முறை சென்று தன் மகன் ஆதித்யாவிற்கு ஜுரம் இருக்கிறதா என்று செக் செய்துவிட்டு வந்தாள்.
அவள் கொடுத்த இன்ஜெக்ஷனிலேயே ஜுரம் நின்று விட்டது. ஜுரம் இல்லை என்று தெரிந்த பிறகுதான் அவள் மனம் நிம்மதி அடைந்தது.
சாப்பிடலாம் என்று நினைத்து டேபிளில் அமர்ந்த போது,
கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
அர்ஜுன் வந்து விட்டான் அவனுடன் சேர்ந்து சாப்பிடலாம் என்று நினைத்து எழுந்து விட்டாள்.
" என்ன அபி இன்னும் தூங்கலையா நீ? "
என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான் அர்ஜுன்.
" இல்லைங்க, இப்பதான் போய் ஆதிக்கு ஜுரம் இருக்கானு செக் பண்ணிட்டு வந்தேன். சாப்பிட்டு விட்டு படுக்கலாம்னு உட்கார்ந்தேன். நீங்க வர சத்தம் கேட்கவே, உங்க கூட சேர்ந்து சாப்பிடலாம் என்று எழுந்துட்டேன்"
என்று சொல்லி அவனுக்கு டவல் கொடுத்தாள்.
அதை வாங்கிக் கொண்டு சென்று கை, கால், முகம் கழுவி விட்டு உடை மாற்றிவிட்டு ஹாலுக்கு வந்தான் அர்ஜுன்.
" நீ சாப்பிட வேண்டியது தானே? நான் ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வந்து, நானே சாப்பிட்டு இருப்பேன் இல்ல? நீயே ஃபுல் டே அலைஞ்சு டயர்டா இருப்ப, அப்படி இருக்கும்போது எதுக்கு இன்னும் தூங்காம, முழிச்சுக்கிட்டு இருக்க? "
என்றான்.
" அது ஒன்னும் பிரச்சனை இல்லைங்க நாளைக்கு லீவு தானே? "
" சாட்டர்டே ஹாஃப் டே இருக்குன்னு சொல்லுவியே? "
" இல்ல போன வாரம் டே ஆஃப் எடுக்கலல்ல, அதனால நாளைக்கு எடுத்துக்கிட்டா உங்க கூடவும் பசங்க கூடவும் டைம் ஸ்பென்ட்
பண்ணலாம்னு "
" ஓ, அப்படின்னா இன்னைக்கு நைட்ஷோவுக்கு ரெடியா? " என்று சொல்லி அவளைப் பார்த்து கண்ணடித்தான் அர்ஜுன்.
" பையனுக்கு உடம்பு சரி இல்லை உங்களுக்கு நைட் ஷோ கேக்குதா? "
என்று கோபமாக இருப்பது போல நடித்து சிரித்தாள்.
" அதான் சரி ஆயிடுச்சு நீயே சொல்லிட்டியே?"
"அதனால?" என்று சொல்லி வெட்கமாக சிரித்தாள் அபிநயா.
" எனக்கு பொண்ணு வேணும்"
" இந்த காலத்துல மூணு குழந்தையா?
படிக்க வைக்கிறது வளக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? "
" அதைப் பற்றி நீ ஏன் கவலைப்படுற?
உனக்கு ஓகேவா சொல்லு, இல்லன்னா நான் வேற பாத்துக்குறேன் "
"என்னது?" என்று கோபமாக தோள்களில் தன் இரு கைகளாலும் குத்தினாள்.
"ஏய் சும்மா சொன்னேன் டி, வலிக்குது. உண்மையாவே அடிக்கிற?"
" பின்ன, நீங்க மட்டும் என் மனசு வலிக்கிற மாதிரி பேசலாமா? "
"ஏய், உனக்கு என்னை பத்தி தெரியாதா?" இன்று அவள் அடித்த இரு கைகளையும் பிடித்து அவளை இறுக்கமாக அணைத்து அவள் இதழில் முத்தம் கொடுத்தான்.
அந்த முத்தத்தில் தன்னையே மறந்தாள் அபிநயா.
அப்படியே அவளை மெல்ல தூக்கிக்கொண்டு தங்களது பெட்ரூமிற்கு சென்றான்.
" பசிக்கலையாங்க "
" இப்ப சாப்பிட தானே தூக்கிட்டு போறேன் "
"சீ, போங்க" என்று வெட்கப்பட்டு தன் முகத்தை மூடிக்கொண்டாள்.
" என்னடி, இதுதான் முதல் முறை மாதிரி இவ்வளவு வெட்கப்படற? "
" பொண்டாட்டிக்கு எப்பவும் புருஷன் தொட்டால் வெட்கம் வர தான் செய்யும்.
அது முதல் தடவை நூறாவது தடவை எல்லாம் கிடையாது "
" பரவாயில்லையே நல்லா பேச கத்துக்கிட்டியே? "
" இல்லன்னா உங்களை என்னால சமாளிக்க முடியுமா? "
" எப்படி என்னை சமாளிக்கிறன்னு பார்க்கிறேன்? " என்று சொல்லி அவள் இதழ்களை மீண்டும் சுவைத்தான்.
சிறிது நேரத்தில் இருவரும் ஒன்றாகினார்கள்.
கால் மணி நேரத்திற்கு பிறகு,
"அபி, பயங்கரமா பசிக்குது டி" என்றான் அர்ஜுன்.
" என்னது மறுபடியுமா? போங்க " என்றாள் அபிநயா.
" ஏய் வயிறு பசிக்குதடி "
" எனக்கு புரிஞ்சிடுச்சு, சும்மாதான் சொன்னேன், வாங்க சாப்பிடலாம்"
" அப்படின்னா மறுபடியும் இன்னொரு நைட் ஷோ பண்றதுக்கு நீ ரெடின்னு சொல்றியா? "
" அட நீங்க வேற, வாங்க சாப்பிடலாம் "
என்று சொல்லி தன் வெட்கத்தை அடக்கிக் கொண்டு ஆடைகளை போட்டுக்கொண்டு வந்து உணவருந்தினார்கள்.
எப்போதுமே அவர்கள் இருவர் மட்டுமோ அல்லது குழந்தைகளுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டாலோ?
அர்ஜுன் அனைவருக்கும் தன் தட்டில் இருந்து மூவருக்கும் ஒரு வாய் சாப்பாடு அல்லது டிபன் ஊட்டி விடுவான்.
அதேபோல இன்றும் அபிநயாவுக்கு ஊட்டி விட்டான்.
அபிநயா தாங்கள் இருவரும் தனியாக அமர்ந்து சாப்பிட்டால் மட்டுமே அவனுக்கு ஊட்டி விடுவாள். குழந்தைகள் முன் அவனுக்கு ஊட்டுவது அவளுக்கு வெட்கமாக இருக்கும்.
இப்போது இருவரும் தனியாக அமர்ந்து சாப்பிடவே மாறி மாறி ஊட்டிக்கொண்டு சாப்பிட்டனர்.
இந்த உலகத்திலேயே தான் மிகவும் அதிர்ஷ்டசாலிப் பெண் என்று நினைத்துக் கொண்டாள் அபிநயா.
இரவு இருவரும் ஒருவரை ஒருவர் இறுக்கமாக அணைத்து படுத்திருந்தனர். காற்று கூட புக முடியாத அளவிற்கு அவர்களின் நெருக்கம் இருந்தது.
மூச்சு திணறுமா? இல்லை இல்லை, இருவருக்கும் ஒருவரின் மூச்சு காற்று மற்றொருவரின் மேல் பட்டால் தான் தூக்கமே வரும்.
இரண்டு முறை தண்ணீர் குடிக்க எழுந்த போது அபிநயா தன் மகன் ஆதித்யாவை தொட்டுப் பார்த்து விட்டு வந்தாள். ஜூரம் இல்லை. சற்று நிம்மதியாக இருந்தது. அப்படியே ஆரவ்வையும் தொட்டுப் பார்த்தாள். அவன் மழைத் தூறலில் நனைந்ததால் ஒருவேளை அவனுக்கு ஜூரம் வந்திருக்குமோ என்று. அவனுக்கும் எதுவும் இல்லை.
பிறகு வந்து படுத்துக் கொண்டாள்.
காலை நாலரை மணிக்கு எழுந்து சமையல் வேலைகளை செய்தாள் அபிநயா.
ஐந்தரை மணிக்கு எழுந்த அர்ஜுன்,
அபிநயா சமைத்து வைத்த பொருட்களை நால்வரது டிபன் பாக்ஸிலும் போட்டான். பின்னர் அனைவருக்கும் தண்ணீர் பிடித்து வைத்துவிட்டு, குழந்தைகளை எழுப்பி
குளிப்பாட்டினான்.
வழக்கமாக ஆதித்யாவே குளித்து விடுவான். முன்தினம் அவனுக்கு உடம்பு சரி இல்லாததால் அவனையும் குளிக்க வைத்தான் அர்ஜுன்.
ஆதித்யா எழுந்த உடனே அவனிடம்,
" உடம்பு பரவாயில்லையாப்பா? சரியாயிடுச்சா? " என்று சொல்லிக் கொண்டே அவனைத் தொட்டுப் பார்த்தான் அர்ஜுன்.
" இப்போ ஓகே அப்பா"
" ஆதி உடம்பு முடியலன்னா இன்னைக்கு லீவ் போட்டுறிய நான் பர்மிஷன் கேட்டு உன் கூட இருக்கேன் "
என்றாள் அபிநயா.
" இல்லம்மா வேண்டாம். இன்னைக்கு எக்ஸாம் இருக்கு. நான் நல்லா தான் இருக்கேன் " என்றான் ஆதித்யா.
" அண்ணா ஏன்டா இப்படி பண்ற? அப்பா அம்மாவே உன்னை லீவ் போட சொல்றாங்க. நீ என்னடான்னா ஸ்கூலுக்கு போகணும்னு சொல்ற? என்கிட்ட மட்டும் சொல்லி இருந்தா நான் ஓகே சொல்லி இருப்பேன் " என்றான் ஆரவ்.
" உன்கிட்ட இந்த ஆப்ஷனையே கேட்க மாட்டா டா உன் அம்மா " என்றான் அர்ஜுன் தன் இளைய மகனிடம்.
"ஏன் அப்பா?"
"நீ உடம்பு நல்லா இருந்தாலும் லீவ் போடுறதுக்காக உடம்பு முடியலன்னு சொல்லுவேன்னு எனக்கு தெரியும். அதனாலதான் அப்பா அப்படி சொல்றாரு " என்று சொல்லி சிரித்தாள் அபிநயா.
" அண்ணா மட்டும் பொய் சொல்ல மாட்டானா? "
" ஆமாம் கண்டிப்பா பொய் சொல்ல மாட்டான். ஆதித்யா முடியலன்னா கரெக்டா சொல்லுவான். அவனுக்கு ஜுரம் போயிடுச்சுன்னு எனக்கு நேத்து நைட்டே தெரியும். ஆனா உடம்பு டயர்டா இருக்கான்னு கேக்குறதுக்காக தான் லீவு போடுறியா ன்னு கேட்டேன்"
என்றாள் அபிநயா.
அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் ஆரவ். ஆனால் முகம் மட்டும் சுண்டைக்காய் போல் சிறியதாக ஆனது.
அதை கவனிக்க தவறவில்லை அர்ஜுன் மற்றும் அபிநயா.
உடனே அர்ஜுன் ஆரவ்வை தூக்கிக்கொண்டு,
" ஏண்டா கண்ணா டல்லா ஆயிட்ட?" என்று சொல்லி அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
தன் அப்பா முத்தம் கொடுத்ததும் தன்னையும் அறியாமல் அவன் முகத்தில் சிரிப்பு வந்தது.
பிறகு அபிநயாவும் வந்து மற்றொரு கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.
இப்போது இரட்டிப்பு சந்தோஷமானது ஆரவ்விற்கு.
ஆதித்யாவையும் அழைத்து இருவரும் முத்தம் கொடுத்தனர்.
" அப்பா அம்மா, நான் என்ன குட்டி குழந்தையா? எனக்கு எதுக்கு முத்தம் கொடுக்குறீங்க? " என்றான் ஆதித்யா.
" நான் மட்டும் குட்டி குழந்தையா? " என்றான் ஆரவ் தன் அண்ணனை பார்த்து.
" ஆமாம் நீ குட்டி குழந்தை தான் "
" இல்ல பாரு நான் எவ்வளவு ஹைட் ஆயிட்டேன்?" என்று சொல்லி ஆதித்யாவின் பக்கத்தில் வந்து நின்றான்.
இருவரும் சண்டை போட்டுக் கொள்ளப் போகிறார்கள் என்று நினைத்து பிரித்து அவர்களை டிபன் சாப்பிட அழைத்து சென்றாள் அபிநயா.
ஏழு முப்பது மணிக்கு நால்வரும் டிபன் சாப்பிட அமர்ந்தனர்.
மூவருக்கும் ஒரு பீஸ் இட்லியை ஊட்டி விட்டான் அர்ஜுன். பின்னர் அவன் சாப்பிட்டான்.
அனைவரும் சாப்பிட்ட பின்னர் 8 மணி அளவில் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு அபிநயா தன் ஸ்கூட்டரில் ஹாஸ்பிடலுக்கு சென்றாள்.
அர்ஜுன் தான் வேலை செய்யும் கம்பெனிக்கு தன்னுடைய காரில் சென்றான்.
ஹாஸ்பிடலில்,
அபிநயாவின் உடன் வேலை செய்யும் மூன்று பெண்கள் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.
கீதா(வயது 45), லலிதா(40), ரோகிணி(28)
அப்போது, "ஹாய் குட்மார்னிங்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தாள் அபிநயா.
" குட் மார்னிங் அபி" என்றனர் மூவரும்.
" என்ன ஆச்சு காலையிலேயே ஒரே பரபரப்பா பேசிக்கிட்டு இருக்கீங்க? "
என்றாள் அபிநயா.
" புதுசா ஒரு நர்ஸ் டியூட்டில ஜாயின் பண்ணி இருக்கா. அவ பேரு அபிராமி.
பத்து வருஷமா கோயம்புத்தூர் கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல வேலை செஞ்சாளாம். அதைத்தான் பேசிக்கிட்டு இருந்தோம்" என்றாள் கீதா.
"ஓ, அப்படியா அக்கா?" என்றாள் அபிநயா.
" கீதா அக்கா, அவங்க ஃபேமிலி பத்தி தெரியுமா? " என்றாள் லலிதா.
" ஃபேமிலி பத்தி கரெக்டா தெரியல.
அவங்க அப்பாவோட ஆபரேஷனுக்காக சென்னைக்கு மாற்றி வந்திருக்காங்கன்னு கேள்விப்பட்டேன் "
என்றாள் கீதா.
" அக்கா உங்களுக்கு டியூட்டி முடிஞ்சிடுச்சு இல்ல? " என்றாள் ரோகிணி லலிதாவை பார்த்து.
" ஆமாம் ரோகிணி, ஆனா புதுசா வந்த அந்த அபிராமியை பார்த்துட்டு போகலாம்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன் "
" அவங்க டாக்டர் எல்லாம் பார்த்துட்டு,
அப்புறமா தானே வர முடியும்? " என்றாள் அபிநயா.
" ஒன்பது மணி வரைக்கும் பாக்கலாம்னு இருக்கேன், அதுவரைக்கும் வரலைன்னா அப்புறமா நான் கிளம்பிடுவேன் " என்றாள் லலிதா.
கையெழுத்து போட்டு விட்டு தன்னுடைய நர்சிங் ஸ்டேஷனில் வந்து அமர்ந்தாள் அபிநயா.
அப்போது அபிநயாவின் ஃபோன் அடித்தது. ஆபீசுக்கு சென்ற அர்ஜுன் தான் கால் செய்தான்.
" ஹலோ சொல்லுங்க" என்றாள் அபிநயா.
" என்னம்மா ஹாஸ்பிடல் போயிட்டியா? வழக்கமா ஹாஸ்பிடல் போயிட்டு மெசேஜ் பண்ணுவியே இன்னைக்கு பண்ணலையே அதனால கேட்டேன்" என்றான் அர்ஜுன்.
" சாரிங்க, இங்க வேற ஏதோ பேசிக்கிட்டு இருந்தோமா அதுல மறந்துட்டேன் "
" இட்ஸ் ஓகே மா சேஃபா போய்ட்ட இல்ல அது போதும். பை"
"பை ங்க" என்ற சொல்லி ஃபோனை வைத்து விட்டு ரோகினியை பார்த்து,
" மெட்டர்னிட்டி வார்டை போய் ஒரு முறை செக் பண்ணிட்டு வந்துரு ரோகிணி" என்றாள் அபிநயா.
" ஓகே அபி அக்கா " என்று சொல்லிவிட்டு அவள் கிளம்பும் முன் உள்ளே நுழைந்தாள் அபிராமி.
"ஹாய், ஹாய், ஹாய், ஹாய்" என்று நால்வரையும் பார்த்து கூறினாள் அபிராமி.
"ஹலோ" என்றனர் நால்வரும்.
"ஐ ஆம் அபி- அபிராமி" என்று அபிநயாவை பார்த்து கையை நீட்டி கூறினாள்.
"நானும் அபி தான். அபிநயா" என்று சொல்லி கையை குலுக்கினாள்.
மற்றவர்களும் அவர்களுடைய பெயரைச் சொல்லி அபிராமிக்கு கை கொடுத்தனர்.
பின்னர் தங்களுடைய வேலைகளைப் பற்றி பேசிக்கொண்டனர்.
அதன் பின்னர் லலிதா அவளுடைய வீட்டிற்கு சென்றாள்.
தொடரும்....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.
பாகம் 2
ஆரவிற்கு டின்னர் கொடுத்து, சிறிது நேரம் கழித்து அவனையும் பங்க்கர் பெட்டில் படுக்க வைத்துவிட்டு தன்னுடைய ரூமிற்கு வந்தாள் அபிநயா.
இரண்டு முறை சென்று தன் மகன் ஆதித்யாவிற்கு ஜுரம் இருக்கிறதா என்று செக் செய்துவிட்டு வந்தாள்.
அவள் கொடுத்த இன்ஜெக்ஷனிலேயே ஜுரம் நின்று விட்டது. ஜுரம் இல்லை என்று தெரிந்த பிறகுதான் அவள் மனம் நிம்மதி அடைந்தது.
சாப்பிடலாம் என்று நினைத்து டேபிளில் அமர்ந்த போது,
கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
அர்ஜுன் வந்து விட்டான் அவனுடன் சேர்ந்து சாப்பிடலாம் என்று நினைத்து எழுந்து விட்டாள்.
" என்ன அபி இன்னும் தூங்கலையா நீ? "
என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான் அர்ஜுன்.
" இல்லைங்க, இப்பதான் போய் ஆதிக்கு ஜுரம் இருக்கானு செக் பண்ணிட்டு வந்தேன். சாப்பிட்டு விட்டு படுக்கலாம்னு உட்கார்ந்தேன். நீங்க வர சத்தம் கேட்கவே, உங்க கூட சேர்ந்து சாப்பிடலாம் என்று எழுந்துட்டேன்"
என்று சொல்லி அவனுக்கு டவல் கொடுத்தாள்.
அதை வாங்கிக் கொண்டு சென்று கை, கால், முகம் கழுவி விட்டு உடை மாற்றிவிட்டு ஹாலுக்கு வந்தான் அர்ஜுன்.
" நீ சாப்பிட வேண்டியது தானே? நான் ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வந்து, நானே சாப்பிட்டு இருப்பேன் இல்ல? நீயே ஃபுல் டே அலைஞ்சு டயர்டா இருப்ப, அப்படி இருக்கும்போது எதுக்கு இன்னும் தூங்காம, முழிச்சுக்கிட்டு இருக்க? "
என்றான்.
" அது ஒன்னும் பிரச்சனை இல்லைங்க நாளைக்கு லீவு தானே? "
" சாட்டர்டே ஹாஃப் டே இருக்குன்னு சொல்லுவியே? "
" இல்ல போன வாரம் டே ஆஃப் எடுக்கலல்ல, அதனால நாளைக்கு எடுத்துக்கிட்டா உங்க கூடவும் பசங்க கூடவும் டைம் ஸ்பென்ட்
பண்ணலாம்னு "
" ஓ, அப்படின்னா இன்னைக்கு நைட்ஷோவுக்கு ரெடியா? " என்று சொல்லி அவளைப் பார்த்து கண்ணடித்தான் அர்ஜுன்.
" பையனுக்கு உடம்பு சரி இல்லை உங்களுக்கு நைட் ஷோ கேக்குதா? "
என்று கோபமாக இருப்பது போல நடித்து சிரித்தாள்.
" அதான் சரி ஆயிடுச்சு நீயே சொல்லிட்டியே?"
"அதனால?" என்று சொல்லி வெட்கமாக சிரித்தாள் அபிநயா.
" எனக்கு பொண்ணு வேணும்"
" இந்த காலத்துல மூணு குழந்தையா?
படிக்க வைக்கிறது வளக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? "
" அதைப் பற்றி நீ ஏன் கவலைப்படுற?
உனக்கு ஓகேவா சொல்லு, இல்லன்னா நான் வேற பாத்துக்குறேன் "
"என்னது?" என்று கோபமாக தோள்களில் தன் இரு கைகளாலும் குத்தினாள்.
"ஏய் சும்மா சொன்னேன் டி, வலிக்குது. உண்மையாவே அடிக்கிற?"
" பின்ன, நீங்க மட்டும் என் மனசு வலிக்கிற மாதிரி பேசலாமா? "
"ஏய், உனக்கு என்னை பத்தி தெரியாதா?" இன்று அவள் அடித்த இரு கைகளையும் பிடித்து அவளை இறுக்கமாக அணைத்து அவள் இதழில் முத்தம் கொடுத்தான்.
அந்த முத்தத்தில் தன்னையே மறந்தாள் அபிநயா.
அப்படியே அவளை மெல்ல தூக்கிக்கொண்டு தங்களது பெட்ரூமிற்கு சென்றான்.
" பசிக்கலையாங்க "
" இப்ப சாப்பிட தானே தூக்கிட்டு போறேன் "
"சீ, போங்க" என்று வெட்கப்பட்டு தன் முகத்தை மூடிக்கொண்டாள்.
" என்னடி, இதுதான் முதல் முறை மாதிரி இவ்வளவு வெட்கப்படற? "
" பொண்டாட்டிக்கு எப்பவும் புருஷன் தொட்டால் வெட்கம் வர தான் செய்யும்.
அது முதல் தடவை நூறாவது தடவை எல்லாம் கிடையாது "
" பரவாயில்லையே நல்லா பேச கத்துக்கிட்டியே? "
" இல்லன்னா உங்களை என்னால சமாளிக்க முடியுமா? "
" எப்படி என்னை சமாளிக்கிறன்னு பார்க்கிறேன்? " என்று சொல்லி அவள் இதழ்களை மீண்டும் சுவைத்தான்.
சிறிது நேரத்தில் இருவரும் ஒன்றாகினார்கள்.
கால் மணி நேரத்திற்கு பிறகு,
"அபி, பயங்கரமா பசிக்குது டி" என்றான் அர்ஜுன்.
" என்னது மறுபடியுமா? போங்க " என்றாள் அபிநயா.
" ஏய் வயிறு பசிக்குதடி "
" எனக்கு புரிஞ்சிடுச்சு, சும்மாதான் சொன்னேன், வாங்க சாப்பிடலாம்"
" அப்படின்னா மறுபடியும் இன்னொரு நைட் ஷோ பண்றதுக்கு நீ ரெடின்னு சொல்றியா? "
" அட நீங்க வேற, வாங்க சாப்பிடலாம் "
என்று சொல்லி தன் வெட்கத்தை அடக்கிக் கொண்டு ஆடைகளை போட்டுக்கொண்டு வந்து உணவருந்தினார்கள்.
எப்போதுமே அவர்கள் இருவர் மட்டுமோ அல்லது குழந்தைகளுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டாலோ?
அர்ஜுன் அனைவருக்கும் தன் தட்டில் இருந்து மூவருக்கும் ஒரு வாய் சாப்பாடு அல்லது டிபன் ஊட்டி விடுவான்.
அதேபோல இன்றும் அபிநயாவுக்கு ஊட்டி விட்டான்.
அபிநயா தாங்கள் இருவரும் தனியாக அமர்ந்து சாப்பிட்டால் மட்டுமே அவனுக்கு ஊட்டி விடுவாள். குழந்தைகள் முன் அவனுக்கு ஊட்டுவது அவளுக்கு வெட்கமாக இருக்கும்.
இப்போது இருவரும் தனியாக அமர்ந்து சாப்பிடவே மாறி மாறி ஊட்டிக்கொண்டு சாப்பிட்டனர்.
இந்த உலகத்திலேயே தான் மிகவும் அதிர்ஷ்டசாலிப் பெண் என்று நினைத்துக் கொண்டாள் அபிநயா.
இரவு இருவரும் ஒருவரை ஒருவர் இறுக்கமாக அணைத்து படுத்திருந்தனர். காற்று கூட புக முடியாத அளவிற்கு அவர்களின் நெருக்கம் இருந்தது.
மூச்சு திணறுமா? இல்லை இல்லை, இருவருக்கும் ஒருவரின் மூச்சு காற்று மற்றொருவரின் மேல் பட்டால் தான் தூக்கமே வரும்.
இரண்டு முறை தண்ணீர் குடிக்க எழுந்த போது அபிநயா தன் மகன் ஆதித்யாவை தொட்டுப் பார்த்து விட்டு வந்தாள். ஜூரம் இல்லை. சற்று நிம்மதியாக இருந்தது. அப்படியே ஆரவ்வையும் தொட்டுப் பார்த்தாள். அவன் மழைத் தூறலில் நனைந்ததால் ஒருவேளை அவனுக்கு ஜூரம் வந்திருக்குமோ என்று. அவனுக்கும் எதுவும் இல்லை.
பிறகு வந்து படுத்துக் கொண்டாள்.
காலை நாலரை மணிக்கு எழுந்து சமையல் வேலைகளை செய்தாள் அபிநயா.
ஐந்தரை மணிக்கு எழுந்த அர்ஜுன்,
அபிநயா சமைத்து வைத்த பொருட்களை நால்வரது டிபன் பாக்ஸிலும் போட்டான். பின்னர் அனைவருக்கும் தண்ணீர் பிடித்து வைத்துவிட்டு, குழந்தைகளை எழுப்பி
குளிப்பாட்டினான்.
வழக்கமாக ஆதித்யாவே குளித்து விடுவான். முன்தினம் அவனுக்கு உடம்பு சரி இல்லாததால் அவனையும் குளிக்க வைத்தான் அர்ஜுன்.
ஆதித்யா எழுந்த உடனே அவனிடம்,
" உடம்பு பரவாயில்லையாப்பா? சரியாயிடுச்சா? " என்று சொல்லிக் கொண்டே அவனைத் தொட்டுப் பார்த்தான் அர்ஜுன்.
" இப்போ ஓகே அப்பா"
" ஆதி உடம்பு முடியலன்னா இன்னைக்கு லீவ் போட்டுறிய நான் பர்மிஷன் கேட்டு உன் கூட இருக்கேன் "
என்றாள் அபிநயா.
" இல்லம்மா வேண்டாம். இன்னைக்கு எக்ஸாம் இருக்கு. நான் நல்லா தான் இருக்கேன் " என்றான் ஆதித்யா.
" அண்ணா ஏன்டா இப்படி பண்ற? அப்பா அம்மாவே உன்னை லீவ் போட சொல்றாங்க. நீ என்னடான்னா ஸ்கூலுக்கு போகணும்னு சொல்ற? என்கிட்ட மட்டும் சொல்லி இருந்தா நான் ஓகே சொல்லி இருப்பேன் " என்றான் ஆரவ்.
" உன்கிட்ட இந்த ஆப்ஷனையே கேட்க மாட்டா டா உன் அம்மா " என்றான் அர்ஜுன் தன் இளைய மகனிடம்.
"ஏன் அப்பா?"
"நீ உடம்பு நல்லா இருந்தாலும் லீவ் போடுறதுக்காக உடம்பு முடியலன்னு சொல்லுவேன்னு எனக்கு தெரியும். அதனாலதான் அப்பா அப்படி சொல்றாரு " என்று சொல்லி சிரித்தாள் அபிநயா.
" அண்ணா மட்டும் பொய் சொல்ல மாட்டானா? "
" ஆமாம் கண்டிப்பா பொய் சொல்ல மாட்டான். ஆதித்யா முடியலன்னா கரெக்டா சொல்லுவான். அவனுக்கு ஜுரம் போயிடுச்சுன்னு எனக்கு நேத்து நைட்டே தெரியும். ஆனா உடம்பு டயர்டா இருக்கான்னு கேக்குறதுக்காக தான் லீவு போடுறியா ன்னு கேட்டேன்"
என்றாள் அபிநயா.
அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான் ஆரவ். ஆனால் முகம் மட்டும் சுண்டைக்காய் போல் சிறியதாக ஆனது.
அதை கவனிக்க தவறவில்லை அர்ஜுன் மற்றும் அபிநயா.
உடனே அர்ஜுன் ஆரவ்வை தூக்கிக்கொண்டு,
" ஏண்டா கண்ணா டல்லா ஆயிட்ட?" என்று சொல்லி அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
தன் அப்பா முத்தம் கொடுத்ததும் தன்னையும் அறியாமல் அவன் முகத்தில் சிரிப்பு வந்தது.
பிறகு அபிநயாவும் வந்து மற்றொரு கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.
இப்போது இரட்டிப்பு சந்தோஷமானது ஆரவ்விற்கு.
ஆதித்யாவையும் அழைத்து இருவரும் முத்தம் கொடுத்தனர்.
" அப்பா அம்மா, நான் என்ன குட்டி குழந்தையா? எனக்கு எதுக்கு முத்தம் கொடுக்குறீங்க? " என்றான் ஆதித்யா.
" நான் மட்டும் குட்டி குழந்தையா? " என்றான் ஆரவ் தன் அண்ணனை பார்த்து.
" ஆமாம் நீ குட்டி குழந்தை தான் "
" இல்ல பாரு நான் எவ்வளவு ஹைட் ஆயிட்டேன்?" என்று சொல்லி ஆதித்யாவின் பக்கத்தில் வந்து நின்றான்.
இருவரும் சண்டை போட்டுக் கொள்ளப் போகிறார்கள் என்று நினைத்து பிரித்து அவர்களை டிபன் சாப்பிட அழைத்து சென்றாள் அபிநயா.
ஏழு முப்பது மணிக்கு நால்வரும் டிபன் சாப்பிட அமர்ந்தனர்.
மூவருக்கும் ஒரு பீஸ் இட்லியை ஊட்டி விட்டான் அர்ஜுன். பின்னர் அவன் சாப்பிட்டான்.
அனைவரும் சாப்பிட்ட பின்னர் 8 மணி அளவில் குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு அபிநயா தன் ஸ்கூட்டரில் ஹாஸ்பிடலுக்கு சென்றாள்.
அர்ஜுன் தான் வேலை செய்யும் கம்பெனிக்கு தன்னுடைய காரில் சென்றான்.
ஹாஸ்பிடலில்,
அபிநயாவின் உடன் வேலை செய்யும் மூன்று பெண்கள் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.
கீதா(வயது 45), லலிதா(40), ரோகிணி(28)
அப்போது, "ஹாய் குட்மார்னிங்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தாள் அபிநயா.
" குட் மார்னிங் அபி" என்றனர் மூவரும்.
" என்ன ஆச்சு காலையிலேயே ஒரே பரபரப்பா பேசிக்கிட்டு இருக்கீங்க? "
என்றாள் அபிநயா.
" புதுசா ஒரு நர்ஸ் டியூட்டில ஜாயின் பண்ணி இருக்கா. அவ பேரு அபிராமி.
பத்து வருஷமா கோயம்புத்தூர் கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல வேலை செஞ்சாளாம். அதைத்தான் பேசிக்கிட்டு இருந்தோம்" என்றாள் கீதா.
"ஓ, அப்படியா அக்கா?" என்றாள் அபிநயா.
" கீதா அக்கா, அவங்க ஃபேமிலி பத்தி தெரியுமா? " என்றாள் லலிதா.
" ஃபேமிலி பத்தி கரெக்டா தெரியல.
அவங்க அப்பாவோட ஆபரேஷனுக்காக சென்னைக்கு மாற்றி வந்திருக்காங்கன்னு கேள்விப்பட்டேன் "
என்றாள் கீதா.
" அக்கா உங்களுக்கு டியூட்டி முடிஞ்சிடுச்சு இல்ல? " என்றாள் ரோகிணி லலிதாவை பார்த்து.
" ஆமாம் ரோகிணி, ஆனா புதுசா வந்த அந்த அபிராமியை பார்த்துட்டு போகலாம்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன் "
" அவங்க டாக்டர் எல்லாம் பார்த்துட்டு,
அப்புறமா தானே வர முடியும்? " என்றாள் அபிநயா.
" ஒன்பது மணி வரைக்கும் பாக்கலாம்னு இருக்கேன், அதுவரைக்கும் வரலைன்னா அப்புறமா நான் கிளம்பிடுவேன் " என்றாள் லலிதா.
கையெழுத்து போட்டு விட்டு தன்னுடைய நர்சிங் ஸ்டேஷனில் வந்து அமர்ந்தாள் அபிநயா.
அப்போது அபிநயாவின் ஃபோன் அடித்தது. ஆபீசுக்கு சென்ற அர்ஜுன் தான் கால் செய்தான்.
" ஹலோ சொல்லுங்க" என்றாள் அபிநயா.
" என்னம்மா ஹாஸ்பிடல் போயிட்டியா? வழக்கமா ஹாஸ்பிடல் போயிட்டு மெசேஜ் பண்ணுவியே இன்னைக்கு பண்ணலையே அதனால கேட்டேன்" என்றான் அர்ஜுன்.
" சாரிங்க, இங்க வேற ஏதோ பேசிக்கிட்டு இருந்தோமா அதுல மறந்துட்டேன் "
" இட்ஸ் ஓகே மா சேஃபா போய்ட்ட இல்ல அது போதும். பை"
"பை ங்க" என்ற சொல்லி ஃபோனை வைத்து விட்டு ரோகினியை பார்த்து,
" மெட்டர்னிட்டி வார்டை போய் ஒரு முறை செக் பண்ணிட்டு வந்துரு ரோகிணி" என்றாள் அபிநயா.
" ஓகே அபி அக்கா " என்று சொல்லிவிட்டு அவள் கிளம்பும் முன் உள்ளே நுழைந்தாள் அபிராமி.
"ஹாய், ஹாய், ஹாய், ஹாய்" என்று நால்வரையும் பார்த்து கூறினாள் அபிராமி.
"ஹலோ" என்றனர் நால்வரும்.
"ஐ ஆம் அபி- அபிராமி" என்று அபிநயாவை பார்த்து கையை நீட்டி கூறினாள்.
"நானும் அபி தான். அபிநயா" என்று சொல்லி கையை குலுக்கினாள்.
மற்றவர்களும் அவர்களுடைய பெயரைச் சொல்லி அபிராமிக்கு கை கொடுத்தனர்.
பின்னர் தங்களுடைய வேலைகளைப் பற்றி பேசிக்கொண்டனர்.
அதன் பின்னர் லலிதா அவளுடைய வீட்டிற்கு சென்றாள்.
தொடரும்....
அ. வைஷ்ணவி விஜயராகவன்.