கோவிட்..!
""""""""""""""""""""""""""""""
""""""""""""""""""""""""""""""
ஊரடங்கு உத்தரவிலிருந்து விவசாயப் பணிகளுக்கு மட்டும் அரசு தளர்வை அறிவித்திருந்த நிலையில், வயல் வேலையை முடித்துவிட்டு ராமாமிர்தம் வியர்க்க விறுவிறுக்க
வீட்டுக்குள்ளே நுழைந்தபோது இளையராஜாவின் குரல் நடுக் கூடத்திலிருந்து வந்துகொண்டிருந்தது.
"அம்மா.. ரசம் ஒங்கள மாதிரி வேறு யாருமே இவ்ளோ மணமா வெக்க முடியாதும்மா... ரொம்ப அருமையா இருக்கு..." என்று சொல்லியபடியே தட்டிலிருந்த மிச்ச ரசத்தையும் தூக்கி உறிஞ்சிக்
கொண்டிருந்தான்.
ராமாமிர்தத்தைக் கண்டதும் வாரிசுருட்டிக்கொண்டு எழுந்து, "அம்மா..அப்பா வந்துட்டாங்க.. தண்ணி குடுங்க அவங்களுக்கு "
என்றபடி தட்டைத் தூக்கிக்கொண்டு
கொல்லைப்புறம் சென்றான்.அங்கிருந்த சிமெண்ட் தொட்டியில் தட்டைக் கழுவி வைத்துவிட்டு, மண் பானையில் இருந்த குடிதண்ணீரை சொம்பில் முகந்து அவரிடம் நீட்டினான்.
"இந்தாங்கப்பா தண்ணீ..."
வாசல்பக்கம், கொரோனா பெருந்தொற்றை வீட்டுக்குள் நுழையாமல் விரட்டியடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அம்மா வைத்திருந்த மஞ்சளும் வேப்பிலை விழுதும் கலந்த நீரில் கைகால்களைக் கழுவிக்கொண்டிருந்த
ராமாமிர்தம் அவன் பக்கம் பார்வையைத் திருப்பாமலே
"வையிவையி...
எடுத்துக்குறேன்"
கையில் சொம்பை வாங்காமல் சிடுசிடுப்பாய் அவர் பதில் சொல்ல, இளையராஜாவின் முகம் சற்று வாடிப் போனாலும் இதுபோல் பலமுறை நடந்துள்ளதால் அவன் வருத்தத்தை காட்டிக்கொள்ளாமல் ,
"சரிம்மா.. நேரமாகிட்டு நா வாரேன்..:
என்றபடி ஆட்டோவை ஸ்டார்ட் செய்து புறப்பட்டான்.
'சரிப்பா ..மாஸ்க்க நல்லா மூக்குத்துவாரம் வெளிய தெரியாதபடி இழுத்துப் போட்டுக்கப்பா..." என்றபடி திண்ணைப் பக்கம் அம்மா வநாததும் ,அவன் தெருமுனையைத் தாண்டியதை உறுதிசெய்துகொண்ட ராமாமிர்தம்,
மனைவியைக் கடிந்துகொண்டார்.
"ஒன்னகிட்ட எத்தனவாட்டி சொல்லுறது.. அந்தப் பயல நடுவூட்டுக்குள்ளயெல்லாம்
வுடாதன்னு..
அக்கம் பக்கம்
சொந்தஞ் சாதியெல்லாத்துக்கும்
தெரியும் அவ என்ன சாதின்னு...நாலு பேரு நம்பள என்ன சொல்லுவாங்க .
அதுவுமில்லாம இந்த தொத்துநோய் காலதாதுலயும் சொன்ன பேச்சக் கேக்காம ஆட்டோ வேற ஓட்டுறான்...
இதுல மூச்சுக்கு முப்பதுவாட்டி நொப்பா..நொம்மா..னு வேற கூப்புடுறான்..
எல்லாம் நம்ப புள்ள குடுக்குற எடம்..."
எரிச்சலுடன் புலம்பினார்.
ஆமாம்.ராமாமிர்தத்தின் பிள்ளை குமரனுடன் பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தவன் இளையராஜா.
குமரன் மேற்கொண்டு ஐடிஐ முடித்து சிங்கப்பூர் சென்றுவிட்டான்.
அவனுக்குக் கீழ் இரு தங்கைகள்.அவர்கள் திருமணம்
பிறகு அவன் திருமணம்.இப்படி தொடர்ந்து இருந்து வந்த பணத்தேவையால், பத்தாண்டுக்கும் மேலாகக் குமரன் சிங்கப்பூரிலேயே மனைவி குழந்தைகளுடன்
தங்கிவிட்டான்.
இளையராஜாவோ,
அவனுடைய அப்பா தவறிவிட்டதால் குடும்பத்துக்குத் துணையாக உள்ளூரிலேயே இருந்துவிட்டான்.
குமரன், பணம் அனுப்புவதோடு சரி.குமரன் கேட்டுக்கொண்டதின் பேரில் எல்லா உதவிகளையும் ராமாமிராதம் குடும்பத்தினருக்கு இளையராஜாதான் செய்துவந்தான்.
பொய்ப் புரட்டு இல்லாத அவனது நேர்மைக் குணத்தால் ஈர்க்கப்பட்டு ராமாமிர்தத்தின் மனைவி கற்பகம், இளையராஜாவை தன் மகன் போலவே நேசித்தாள்.
அவனும் குமரனைத் தாண்டி
அவள்மீது பாசம் காட்டினான்
குமரனிடம் சொல்லி ட்யூவில் இளையராஜாவுக்கு ஆட்டோ வாங்கித்தர
ஏற்பாடு செய்ததும் அவள்தான்.
இதெல்லாம் தெரிந்தும் கூட,
இப்படி எரிந்துவிழும் கணவரை
என்ன செய்வது என தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்தபோதுதான்
அந்தத் தண்டோரா சத்தமும் ஒலித்தது. "பெருந்தொற்று அபாயம் பெரிதாக இருப்பதால் வெளியூர்க்காரர்களை அதிலும் சென்னைவாசிகளை
ஊருக்குள் விடவேக்கூடாது "
இதைக் கேட்டதும்,' இனி அந்தப் பயலை
வூட்டுக்குள்ள வுடப்பிடாது.."
என்று தீர்மானம் செய்துகொண்ட ராமாமிர்தம்,
அன்று இரவு, வீப்டுக்கு வந்த இளையராஜாவிடம்
தண்டோராவில் சொல்லப்பட்டதை காரணமாக்கி அவன் மனத்தை ரணமாக்கினார்
அம்மா அருகில் இலலாத சமயமாகப் பார்த்து,
"ஊரடங்கு உத்தரவு முடியும்வரை நீ இங்க வராதப்பா..நியூசெல்லாம் பயங்கரமா வருது..கொரோனாவ கொண்டுவந்து உட்றுவன்னு பயமாருக்கு"
முகத்தில் அறைந்தார்போல் ராமாமிர்தம் சொல்ல ..
"சரிங்கப்பா.." சிரித்தபடி
சென்றவன் பத்து நாட்கள் கடந்தும் வீட்டுப்பக்கம் வரவேயில்லை.
அவன் வராததால் சின்னச்சின்ன உதவிகளுக்கெல்லாம் அவனின்றித் தடுமாறிய கற்பகம்,ஒருநாள் இரவு, "அம்மா..அம்மான்னு சுத்துற பய இரும்பாட்டமா எப்படியிருக்கான்?"..என எண்ணியபடியே கொல்லைபுறம் ஊர்ந்த பாம்பின் மேல் அடியை வைத்துவிட
அடுத்த கணம் நாகம் அவளைத் தீண்டியது.
.மயங்கிச்சரிந்துவிட்டாள்.
அக்கம் பக்கம் எவரும் கொரோனா பீதியில்,
கூட வருவதற்கு முன்வரவில்லை.
அதே கொரோனா பீதியில்
சுற்றங்களும் சாக்கு சொல்ல..சிலர் அறிவுரைகளை மட்டும் அள்ளி வழங்கிக் கொண்டிருக்க..
அடுத்த அரைமணியில்
இளையராஜா
எப்படியோ அஙகு வந்து சேர்ந்துவிட்டான்.
ராமாமிர்தத்துக்கு ஆறுதல் கொடுத்து அவரை பத்திரமாக உட்கார வைத்துவிட்டு, அரசு ஆஸ்பத்திரியில் அங்கும் இங்கும் தனியொருவனாக அலைந்து திரிந்து ஸ்ரெச்சர் தூக்கும் பணியாளரிடமெல்லாம் கெஞ்சிக் கூத்தாடி அட்மிஷன் போட்டு
நான்கு நாள் கழித்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிலும் பத்திரமாக
சேர்த்துவிட்டான்.ஆனால்,
அடுத்த நான்கு நாட்களாக இளையராஜா அந்த வீட்டுப்பக்கம் வரவேயில்லை.இம்முறை
ரமாமிர்தத்துக்கும் கவலையாக இருந்தது .
"ஏங்க புள்ள போனும் எடுக்க மாட்டேங்கிறான் ஒரு எட்டு அவங்க வூட்டுப்பக்கம் போய்தான் பாத்திட்டு வாங்களேன்.."
என்றாள்அசித்திரக் கதை
தலைப்பு:
இளையராஜா..!
""""""""""""""""""""""""""""""
ஊரடங்கு உத்தரவிலிருந்து விவசாயப் பணிகளுக்கு மட்டும் அரசு தளர்வை அறிவித்திருந்த நிலையில், வயல் வேலையை முடித்துவிட்டு ராமாமிர்தம் வியர்க்க விறுவிறுக்க
வீட்டுக்குள்ளே நுழைந்தபோது இளையராஜாவின் குரல் நடுக் கூடத்திலிருந்து வந்துகொண்டிருந்தது.
"அம்மா.. ரசம் ஒங்கள மாதிரி வேறு யாருமே இவ்ளோ மணமா வெக்க முடியாதும்மா... ரொம்ப அருமையா இருக்கு..." என்று சொல்லியபடியே தட்டிலிருந்த மிச்ச ரசத்தையும் தூக்கி உறிஞ்சிக்
கொண்டிருந்தான்.
ராமாமிர்தத்தைக் கண்டதும் வாரிசுருட்டிக்கொண்டு எழுந்து, "அம்மா..அப்பா வந்துட்டாங்க.. தண்ணி குடுங்க அவங்களுக்கு "
என்றபடி தட்டைத் தூக்கிக்கொண்டு
கொல்லைப்புறம் சென்றான்.அங்கிருந்த சிமெண்ட் தொட்டியில் தட்டைக் கழுவி வைத்துவிட்டு, மண் பானையில் இருந்த குடிதண்ணீரை சொம்பில் முகந்து அவரிடம் நீட்டினான்.
"இந்தாங்கப்பா தண்ணீ..."
வாசல்பக்கம், கொரோனா பெருந்தொற்றை வீட்டுக்குள் நுழையாமல் விரட்டியடித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் அம்மா வைத்திருந்த மஞ்சளும் வேப்பிலை விழுதும் கலந்த நீரில் கைகால்களைக் கழுவிக்கொண்டிருந்த
ராமாமிர்தம் அவன் பக்கம் பார்வையைத் திருப்பாமலே
"வையிவையி...
எடுத்துக்குறேன்"
கையில் சொம்பை வாங்காமல் சிடுசிடுப்பாய் அவர் பதில் சொல்ல, இளையராஜாவின் முகம் சற்று வாடிப் போனாலும் இதுபோல் பலமுறை நடந்துள்ளதால் அவன் வருத்தத்தை காட்டிக்கொள்ளாமல் ,
"சரிம்மா.. நேரமாகிட்டு நா வாரேன்..:
என்றபடி ஆட்டோவை ஸ்டார்ட் செய்து புறப்பட்டான்.
'சரிப்பா ..மாஸ்க்க நல்லா மூக்குத்துவாரம் வெளிய தெரியாதபடி இழுத்துப் போட்டுக்கப்பா..." என்றபடி திண்ணைப் பக்கம் அம்மா வநாததும் ,அவன் தெருமுனையைத் தாண்டியதை உறுதிசெய்துகொண்ட ராமாமிர்தம்,
மனைவியைக் கடிந்துகொண்டார்.
"ஒன்னகிட்ட எத்தனவாட்டி சொல்லுறது.. அந்தப் பயல நடுவூட்டுக்குள்ளயெல்லாம்
வுடாதன்னு..
அக்கம் பக்கம்
சொந்தஞ் சாதியெல்லாத்துக்கும்
தெரியும் அவ என்ன சாதின்னு...நாலு பேரு நம்பள என்ன சொல்லுவாங்க .
அதுவுமில்லாம இந்த தொத்துநோய் காலதாதுலயும் சொன்ன பேச்சக் கேக்காம ஆட்டோ வேற ஓட்டுறான்...
இதுல மூச்சுக்கு முப்பதுவாட்டி நொப்பா..நொம்மா..னு வேற கூப்புடுறான்..
எல்லாம் நம்ப புள்ள குடுக்குற எடம்..."
எரிச்சலுடன் புலம்பினார்.
ஆமாம்.ராமாமிர்தத்தின் பிள்ளை குமரனுடன் பத்தாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தவன் இளையராஜா.
குமரன் மேற்கொண்டு ஐடிஐ முடித்து சிங்கப்பூர் சென்றுவிட்டான்.
அவனுக்குக் கீழ் இரு தங்கைகள்.அவர்கள் திருமணம்
பிறகு அவன் திருமணம்.இப்படி தொடர்ந்து இருந்து வந்த பணத்தேவையால், பத்தாண்டுக்கும் மேலாகக் குமரன் சிங்கப்பூரிலேயே மனைவி குழந்தைகளுடன்
தங்கிவிட்டான்.
இளையராஜாவோ,
அவனுடைய அப்பா தவறிவிட்டதால் குடும்பத்துக்குத் துணையாக உள்ளூரிலேயே இருந்துவிட்டான்.
குமரன், பணம் அனுப்புவதோடு சரி.குமரன் கேட்டுக்கொண்டதின் பேரில் எல்லா உதவிகளையும் ராமாமிராதம் குடும்பத்தினருக்கு இளையராஜாதான் செய்துவந்தான்.
பொய்ப் புரட்டு இல்லாத அவனது நேர்மைக் குணத்தால் ஈர்க்கப்பட்டு ராமாமிர்தத்தின் மனைவி கற்பகம், இளையராஜாவை தன் மகன் போலவே நேசித்தாள்.
அவனும் குமரனைத் தாண்டி
அவள்மீது பாசம் காட்டினான்
குமரனிடம் சொல்லி ட்யூவில் இளையராஜாவுக்கு ஆட்டோ வாங்கித்தர
ஏற்பாடு செய்ததும் அவள்தான்.
இதெல்லாம் தெரிந்தும் கூட,
இப்படி எரிந்துவிழும் கணவரை
என்ன செய்வது என தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்தபோதுதான்
அந்தத் தண்டோரா சத்தமும் ஒலித்தது. "பெருந்தொற்று அபாயம் பெரிதாக இருப்பதால் வெளியூர்க்காரர்களை அதிலும் சென்னைவாசிகளை
ஊருக்குள் விடவேக்கூடாது "
இதைக் கேட்டதும்,' இனி அந்தப் பயலை
வூட்டுக்குள்ள வுடப்பிடாது.."
என்று தீர்மானம் செய்துகொண்ட ராமாமிர்தம்,
அன்று இரவு, வீப்டுக்கு வந்த இளையராஜாவிடம்
தண்டோராவில் சொல்லப்பட்டதை காரணமாக்கி அவன் மனத்தை ரணமாக்கினார்
அம்மா அருகில் இலலாத சமயமாகப் பார்த்து,
"ஊரடங்கு உத்தரவு முடியும்வரை நீ இங்க வராதப்பா..நியூசெல்லாம் பயங்கரமா வருது..கொரோனாவ கொண்டுவந்து உட்றுவன்னு பயமாருக்கு"
முகத்தில் அறைந்தார்போல் ராமாமிர்தம் சொல்ல ..
"சரிங்கப்பா.." சிரித்தபடி
சென்றவன் பத்து நாட்கள் கடந்தும் வீட்டுப்பக்கம் வரவேயில்லை.
அவன் வராததால் சின்னச்சின்ன உதவிகளுக்கெல்லாம் அவனின்றித் தடுமாறிய கற்பகம்,ஒருநாள் இரவு, "அம்மா..அம்மான்னு சுத்துற பய இரும்பாட்டமா எப்படியிருக்கான்?"..என எண்ணியபடியே கொல்லைபுறம் ஊர்ந்த பாம்பின் மேல் அடியை வைத்துவிட
அடுத்த கணம் நாகம் அவளைத் தீண்டியது.
.மயங்கிச்சரிந்துவிட்டாள்.
அக்கம் பக்கம் எவரும் கொரோனா பீதியில்,
கூட வருவதற்கு முன்வரவில்லை.
அதே கொரோனா பீதியில்
சுற்றங்களும் சாக்கு சொல்ல..சிலர் அறிவுரைகளை மட்டும் அள்ளி வழங்கிக் கொண்டிருக்க..
அடுத்த அரைமணியில்
இளையராஜா
எப்படியோ அஙகு வந்து சேர்ந்துவிட்டான்.
ராமாமிர்தத்துக்கு ஆறுதல் கொடுத்து அவரை பத்திரமாக உட்கார வைத்துவிட்டு, அரசு ஆஸ்பத்திரியில் அங்கும் இங்கும் தனியொருவனாக அலைந்து திரிந்து ஸ்ரெச்சர் தூக்கும் பணியாளரிடமெல்லாம் கெஞ்சிக் கூத்தாடி அட்மிஷன் போட்டு
நான்கு நாள் கழித்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிலும் பத்திரமாக
சேர்த்துவிட்டான்.
ஆனால்,
அடுத்த நான்கு நாட்களாக இளையராஜா அந்த வீட்டுப்பக்கம் வரவேயில்லை.இம்முறை
ரமாமிர்தத்துக்கும் கவலையாக இருந்தது .
"ஏங்க புள்ள போனும் எடுக்க மாட்டேங்கிறான் ஒரு எட்டு அவங்க வூட்டுப்பக்கம் போய்தான் பாத்திட்டு வாங்களேன்.."
என்றாள்
அவர் நினைத்ததையே அவளும் சொல்ல, "சரி போறன்" என்றபடி துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு சைக்கிளில் புறப்பட்டார்.
அவன் வீட்டுப்பக்கம் போகமுடியாமல் தடுப்பு அமைத்துக்
கொண்டிருந்தார்கள்.
"35 வயது ஆட்டோ டிரைவர் இன்று கொரோனாவுக்கு பலியானார்.
இவருக்கு கொரோனா பிரிவில் வேலைபார்த்த வார்டுபாய் ஒருவரிடமிருந்து தொற்று பரவியதாகத் தெரிகறது"
தொலைக்காட்சி செய்தி கேட்டதும் தன் மனைவிக்காக இளையராஜா,
வண்டி தள்ளும் பணியாளரிடம் கெஞ்சியது நிழலாட
அந்த தடுப்புக்கு அருகிலேயே குமுறி குமுறி அழுதார்.அதில் சாதி எனும் கறை நன்றாகவே கழுவப்பட்டுக்
கொண்டிருந்தது
கொரோனா நுண்மியும் மனிதர்களைப் போலவே உருமாற்றம் பெற ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. !
முற்றும்வர் நினைத்ததையே அவளும் சொல்ல, "சரி போறன்" என்றபடி துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு சைக்கிளில் புறப்பட்டார்.
அவன் வீட்டுப்பக்கம் போகமுடியாமல் தடுப்பு அமைத்துக்
கொண்டிருந்தார்கள்.
"35 வயது ஆட்டோ டிரைவர் இன்று கொரோனாவுக்கு பலியானார்.
இவருக்கு கொரோனா பிரிவில் வேலைபார்த்த வார்டுபாய் ஒருவரிடமிருந்து தொற்று பரவியதாகத் தெரிகிறது"
தொலைக்காட்சி செய்தி கேட்டதும் தன் மனைவிக்காக இளையராஜா,
வண்டி தள்ளும் பணியாளரிடம் கெஞ்சியது நிழலாட
அந்த தடுப்புக்கு அருகிலேயே குமுறி குமுறி அழுதார்.அதில் சாதி எனும் கறை நன்றாகவே கழுவப்பட்டுக்
கொண்டிருந்தது
கொரோனா நுண்மியும் மனிதர்களைப் போலவே உருமாற்றம் பெற ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. !
முற்றும்