• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சுடும் நிலவு -5

kkp44

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
8
3
3
Tamilnadu
மதுவை சமாதானம் செய்வதற்காக, ஆகாஷ் அவளின் அருகில் மெல்லச் சென்று, " மதுவின் கை விரலை மட்டும் மெல்ல தீண்ட , இதுவரை இல்லாத முகபாவனையோடு ஆகாஷின் கைகளை வேகமாக உதறியவளின், மனதிற்குள் உண்மையாக கோபம் இல்லை என்றாலும் அவளின் முகத்தைக் கண்ட ஆகாஷ் சற்றும் எதிர்பாராதவனாய் ஏமாந்து தான் போகிறான்.

என்னடா இது....! நிஜமாலுமே கோவிச்சுட்டாளோ, அடேய் ..ஆகாசு உன் பாடு இன்னிக்கி திண்டாட்டம் தான் என்று மனதுக்குள் தனக்குத்தானே புலம்பிக் கொள்கிறான்.

சரி.... ! என்ன பன்றது ..? சமாளிப்போம்
.....!என்று தனக்கு தானே பேசிக் கொண்டே, "மது" விற்கு மிக அருகில் செல்கிறான்.


மது... அந்த பக்கமே திரும்பி நிற்க,, ஆகாஷ் அவளின் பின்புறமாக வந்து அவளின் தோள்களை பிடித்து மெல்ல தன் வசம் திருப்புகிறான்.

உடலை மட்டும் திருப்பிய மது முகத்தை நிமிர்த்தி கூட ஆகாஷை பார்க்கவில்லை

ஆகாஷ்,... மதுவின் இரண்டு கைகளையும் இறுக்கி பிடித்து இழுத்து தன் கண்ணத்தைப் அவள் கைகளால் பிடித்து கொள்ளவே,அவனது இடது கையால் அவளது கன்னத்தை மெல்ல வருடி ஒற்றை விரலால் தலைமுடி கோதி என் அழகு செல்லமே , என்று அன்பை பொழியவே,

ஆகாஷின் மூச்சு காற்று அவள் மீது தீண்டும் போதே , தன் வசம் மறந்து அவனிடம் அடங்கியவளாய் அவனின் தீண்டிலில் இனம் புரியாத சுகம் கண்டவள் ஓர் நொடியில் என்ன நினைத்தாளோ சட்டென்று அவனின் கைகளை உதறி விட்டு, ஓர் அடி தள்ளி சென்று விட்டாள்..


ஒன்றுமே புரியாதவன், அம்மு ....என்ற மெதுவாக அழைக்கவே , முரண்டு பிடித்தவள் ஓடி வந்து கட்டிக்கொள்கிறாள்.ஆகாஷ் , மது என்று அழைப்பதை விட "அம்மு "என்று ஆசையாக அழைப்பது. தான் அவளுக்கு அதீத இஷ்டம் .


கட்டிக்கொண்ட மதுவிடம் ஆகாஷ், ஏன் "அம்மு" உனக்கு நான்னா அவ்ளோ இஷ்டமா?? என்று கேட்க பதில் ஏதும் பேசாமல் அவனின் கண்களை மட்டும் உற்று நோக்கியவளின் நெற்றி மீது இதமாய் ஒர் முத்தம் பதிக்கிறான் ஆகாஷ்

முத்தத்தின் ஈரம் காயும் நேரம் கூட நீ என்னை பிரியக் கூடாது, நான் பிறந்ததில் இருந்து ,நீ என் கூடவே இருந்த அதே போல் நான் சாகும் வரை நீ என் கூடவே இருக்கனும், இருப்பியா மாமா என்று கேட்கிறாள் மது

ச்சீ... பைத்தியம் நீ,தான் என் உலகமே உன்னை நான் ஏன் பிரிய போறேன்? லூசு ..., மாறி பேசாத டைம் ஆகிட்டு வா கிளம்பலாம் என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தவனின் இடது கையை பிடித்து "லவ் யூ ஸோ மச் மாமா" என்று அவள் கூறுவதை கேட்ட ஆகாஷ் , "லவ் யூ டி அம்மு" என்று கூறி வா போலாம் என்று கோவிலுக்கு அழைத்து செல்கிறான்.

இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியேறும் பொழுது ,"மதுவின் அலைபேசி அடிக்கிறது.

மது....! ஆன்ட்டி அங்கிள் தான் யாராவது கால் பண்ணு வாங்கப்பா இன்னும் நீங்க கிளம்பலையா திட்ட போறாங்க யாருன்னு போன்ல பாரு என்று ஆகாஷ் கூறவே

ஆமா ..., ஆகாஷ் அம்மா தான் போன் பண்றாங்க பா இரு பேசிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு தனது அலைபேசியை எடுத்து பேச துவங்குகிறாள்

அம்மா சொல்லுங்க என்றும் மது கேட்கவே

மதும்மா... இரண்டு பேரும் கிளம்பிட்டீங்களா டா

ஹான் ம்மா.... இதோ இப்பதான் கிளம்பறோம் அம்மா ஸ்டெப்ஸ் கிட்ட வந்துட்டேன் முருகன் கோவில் தானே இன்னொரு பதினைந்து நிமிடத்தில் நான் அங்கே இருப்பேன்

ஒரு நிமிடம் டா நாம இப்போ இந்தியா போகப் போறோம்ல அதுக்காக கொஞ்சம் ட்ரெஸ்ஸஸ் வாங்கணும் இந்தியாவில் யார் யாருக்கு என்ன டிரஸ் வாங்கணும் அப்படின்னு ஒரு லிஸ்ட் போட்டு பூஜை அறையில வச்சிருக்கேன் இப்ப கோவில் போயிட்டு பர்சேஸ் போலான்னு டாடி சொன்னார் மா

வரும்போது , மறக்காம அந்த லிஸ்ட்ட கொண்டுவாமா பார்த்து வாங்க ரெண்டு பேரும் பாய் என்று கூறிவிட்டு அலைபேசியை துண்டித்து விடுகிறாள் பிந்து.


என்னப்பா ஆன்ட்டி என்ன சொன்னாங்க என்று ஆகாஷ் கேட்கவே,

அது ஒன்னும் இல்ல ஆகாஷ், நாம இந்தியா போபோறோம்ல , அதுக்காக அங்கு இருக்க ரிலேட்டிவ்ஸ்க்கெல்லாம் அம்மா டிரஸ் வாங்க போறாங்களாம் யார் யாருக்கு என்ன டிரஸ் வாங்கணும் அப்படின்னு லிஸ்ட் போட்டு வீட்டிலேயே வச்சிட்டு போயிட்டாங்களாம் வரும்போது நம்மள அந்த லிஸ்ட் கொண்டுவர சொன்னாங்க கோவில் போயிட்டு பர்ச்சேஸ் முடிச்சிட்டு வந்துருவோம் அப்படின்னு டாடி சொன்னாங்கன்னு சொன்னாங்க பா..


ஹோ.... சூப்பர் மது உனக்கு இந்தியாவில யாரெல்லாம் இருக்காங்கன்னு தெரியுமா என்று ஆகாஷ் , மதுவிடம் கேட்கிறான்

ம்ம்ம்..... கொஞ்சம் கொஞ்சம் தெரியும் ஃபுல் டீடைல்ஸ் தெரியாது.

உனக்கு கொஞ்சமாவது தெரியுது பட் எனக்கு இந்தியாவுல யாரையுமே தெரியாது என்று ஆகாஷ் கூறுகிறான்.

நாம நிறைய தெரிஞ்சுக்கணும் மாமா அங்க நமக்கு நிறைய சொந்தங்கள் இருக்கு அம்மா சமயத்துல சொல்லுவாங்க ஆனா எனக்கு புரியாது பட் அவங்க சொல்றத கேக்குறதுக்கு ரொம்பவே இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் அவங்க சொல்றத கேட்டு கேட்டு இந்தியா போகணும் கிராமத்து லைஃப் பாக்கணும் அப்படின்னு ரொம்ப ஈகரா இருக்கு என்றும் அவள் கூறும் போதே


ஆமா அம்மு... நானும் நிறைய இந்தியன் மூவிஸ் பார்த்திருக்கிறேன் அது மட்டும் இல்லாம என் அப்பா அம்மாவோட மேரேஜ் ஆல்பம் அம்மா போல சின்ன வயசு கலாட்டா இந்த மாதிரி பிக்சர்ஸ் எல்லாம் பார்க்கும்போது எனக்கும் இந்தியா பாக்குறதுக்கு ரொம்ப ஆர்வமா இருக்கு. அந்த டேக்காக நானும் ரொம்ப ஈகரா வெயிட் பண்றேன்பா என்று ஆகாஷ் கூறவே,

வீட்டை பூட்டி விட்டு வந்தவர்கள் மீண்டும் வீட்டுக்குள் லிஸ்ட் எடுக்க செல்கின்றனர்,

நான் வெளியே நிக்கிறேன் நீ... மட்டும் எடுத்து வா...மது என்று அவனும் கூற

தலையசத்த படியே மதுவும் உள்ளே செல்கிறாள்.

உள்ளே சென்று இரண்டு நிமிடத்தில் மது வேகமாக அலறும் சத்தம் கேட்டிடவே, ஆகாஷ் பதற்றத்தோடு உள்ளே சென்று மது என்று அழைக்கிறான்.


🥰🥰🥰 தொடரும் 🥰🥰🥰


எதற்காக மது அலறினாள்???
அடுத்த பகுதியில் பார்ப்போம் 😁🌹