கண்மணி பேசும் போதே பூவினி வந்துவிட்டாள்.இடையிலேயே ஏதாவது சொல்லத்தான் நினைத்தாள்.ஆனால் கண்மணி எது சொன்னாலும் அந்த ஒரு சில நாட்கள் தானே பொறுத்துப்போ என்று மேகலா முன்பே பல தடவைகள் கூறி இருந்ததால் பல்லைக்கடித்து பொறுமை காத்தாள்.
ஆனால் அவளின் கம்பீரமே உருவான அத்தான் எதுவும் பேசாமல் குன்றிப்போய் வெளியேறுவதை பார்த்ததும் அவள் பொறுமை பறந்தது.முகம் கறுக்க வேகமாக வெளியேறியவனின் கரத்தைப் பற்றி நிறுத்தியவள். பாட்டி என்றாள் கோபமாக அவர் திரும்பி பார்க்கவும்
இவர் ஒன்றும் கண்டவர் இல்லை.இவர் என்னுடைய அத்தான்.இந்த வீட்டில் எங்கு நுழையவுமே இவருக்கு உரிமை இருக்கு.என்று கோபமாக கூறி மேலும் ஏதோ கூறப் போனவளின் கையை சட்டென பற்றி இழுத்தபடி நிலவன் வெளியேறி விட்டான்.
உள்ளே பதிலுக்கு கண்மணி கோபமாக ஏதோ கூறுவதும் மேகலா மென் குரலில் ஏதோ கூறி சாமாளிப்பதும் கேட்டது.
வெளியே வந்தவள் கோபமாக ஏன் அத்தான் என்னை பேச விடாமல் இழுத்துட்டு வந்தீங்கள்.அவங்க எப்படி பேசினாங்க.திருப்பி பேசாவிட்டால் அவங்க இப்படியே தான் எப்பவுமே பேசிட்டு இருப்பாங்க என்றாள்.
மௌனமாக அவளை பார்த்தவன் ஏன் பூவினி அவங்க பேச்சுக்கு என்னால் பதில் கொடுத்திருக்க முடியாதா?? இருந்தும் ஏன் பேசாமல் வந்தேன்??
முடியும் தான். நிலவனுக்கு எவ்வளவு தூரம் அமைதியும் பொறுமையும் உண்டோ அதே அளவுக்கு ஏன் அதை விட அதிகமாகவே கோபமும் திமிரும் உண்டு என்பது பூவினிக்கு தெரியும்.கோபம் என்றால் குரலை உயர்த்திப் பேசமாட்டான் ஆனால் அழுத்தமாக அவன் பேசும் ஒரு சில வார்த்தைகளிலேயே மற்றவரின் வாய் அடைத்துவிடும்.அப்படிபட்டவன் ஏன் இப்போது மறு பேச்சு பேசாமல் வந்தான்.
ஏன் அத்தான் ???
அத்தைக்காக பூவினி.அவர் அப்படி பேசும் போது அத்தைக்கு அது எவ்வளவு வேதனையை கொடுத்தது என்று அவர் முகத்தை பார்த்தே தெரிந்தது.இருந்தும் அவர் பாவம் எதுவும் பேசமுடியாது என்னை தவிப்புடன் பார்த்தார்.அதற்காக தான்.அதோடு அவர்கள் என்னதான் செய்தாலும் அவர்கள் வயதில் பெரியவர்கள் பூவினி.அவர்களை எதிர்த்து பேசுவது நல்லது இல்லை.அவர்களின் குணம் அது.அதற்காக நாமும் நம்முடைய நல்ல பண்புகளை ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்??
ம்ம்ம் சரி தான் அத்தான்.
நானும் முடிந்தவரை எதிர்த்து பேசக்கூடாது என்று தான் பல்லைக்கடித்து பொறுமை காத்தேன்.ஆனால் உங்களை அப்படி என்னால் பார்க்க முடியவில்லை அத்தான்.அதான் அப்படிப்பேசி விட்டேன்.அத்தான் அவங்களுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.தயவு செய்து அதை மறந்துவிடுங்கள் அத்தான்.என்றாள் கண்கள் கலங்கி குரல் உடைய.
அவள் பேசுவதை முகத்தில் ஒரு கனிவுடன் பார்த்துக்கொண்டு இருந்தவன்.அவள் கண்கள் கலங்கவும் சட்டென அவள் கையை பற்றி
ஹே பூவினி ... நான் அதை பெரிதாக எடுக்கவில்லைமா. அவர்கள் குணம் தெரிந்ததுதானே.அதை நினைத்து நீ ஒன்றும் கஷ்டப்படாதே.என்றான்………………….
அப்போதும் அவளுக்கு சமாதானம் ஆகவில்லை.அவள் முகம் தெளியாததைக் கண்டவன்.
பூவினி நான் ஒன்று சொல்லவா??
ம்ம்ம் ....
அவர்கள் அப்படிப்பேசியது கஷ்டமாகத்தான் இருந்தது.ஆனால் நீ எனக்காக பேசியதும் அந்த கஷ்டம் ஓடியே போய்விட்டது.என்று கூறி முறுவலித்தவன் மீண்டும் பூவினி என்றான்.
ம்ம்ம் என்னத்தான்??
நான் உன்னுடைய அத்தானா பூவினி என்றான்.ஒற்றைப் புருவத்தை உயர்த்தியபடி.
அவளுக்கு அவனுடைய கேள்வி விளங்கவில்லை.ஏன் இப்படி கேட்கிறான் என்று புரியாமல்
நீங்கள் என்னுடைய அத்தான் தானே?? என்றாள் குழப்பத்துடன்.
அவன் உதடுகளில் ஒரு உல்லாசச் சிரிப்புடன் அவள் முகத்தை சில நொடிகள் பார்த்தவன்
நான் உன்னுடைய அத்தானேதான் செல்லம் என்று கூறி இமைகளை சிமிட்டி முறுவலித்துவிட்டு வேக நடையுடன் சென்று விட்டான்.
பூவினிக்கு சற்று நேரம் எதுவுமே புரியவில்லை.இப்போது என்ன சொன்னான் செல்லம் என்றா?? அவன் அவளை செல்லம் பூக்குட்டி என்று கொஞ்சி இருக்கிறான் தான்.ஆனால் அது
சிறுவனாய் இருக்கும் போது.இருவரும் வளர வளர அந்த அழைப்புகள் இயல்பாகவே மறைந்து மறந்து போய்விட்டன.ஆனால் இப்போது திடீரென்று அவன் செல்லம் என்று சொல்லவும் அவள் திகைத்துவிட்டாள்.
அவனின் அழைப்பும் பார்வையும் அந்த முறுவலும் அவளுக்கு.நெஞ்சுக்குள் பனிக்கட்டியை கொட்டியது போல ஒரு அவஸ்தையை கொடுத்தது.எதுவும் செய்யத் தோன்றாமல் ஓர்வித மயக்கத்துடன் சென்று கட்டிலில் விழுந்தாள்.
அவள் காதுக்குள் “நான் உன்னுடைய அத்தானே தான் செல்லம்” என்ற நிலவனின் ஆழ்ந்த குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது.இதழ்களில் ஓர் இளமுறுவல் மலர கண்மூடி அதை ரசித்தபடியே கிடந்தாள் பூவினி.
பாவம் அவளுக்கு அப்போது தெரியவில்லை தன்னுடைய அந்த மகிழ்ச்சிக்கு தானே தன்னுடைய வாயால் குழியினை தோண்டி வைத்துவிட்டோம் என்று...........
ஆனால் அவளின் கம்பீரமே உருவான அத்தான் எதுவும் பேசாமல் குன்றிப்போய் வெளியேறுவதை பார்த்ததும் அவள் பொறுமை பறந்தது.முகம் கறுக்க வேகமாக வெளியேறியவனின் கரத்தைப் பற்றி நிறுத்தியவள். பாட்டி என்றாள் கோபமாக அவர் திரும்பி பார்க்கவும்
இவர் ஒன்றும் கண்டவர் இல்லை.இவர் என்னுடைய அத்தான்.இந்த வீட்டில் எங்கு நுழையவுமே இவருக்கு உரிமை இருக்கு.என்று கோபமாக கூறி மேலும் ஏதோ கூறப் போனவளின் கையை சட்டென பற்றி இழுத்தபடி நிலவன் வெளியேறி விட்டான்.
உள்ளே பதிலுக்கு கண்மணி கோபமாக ஏதோ கூறுவதும் மேகலா மென் குரலில் ஏதோ கூறி சாமாளிப்பதும் கேட்டது.
வெளியே வந்தவள் கோபமாக ஏன் அத்தான் என்னை பேச விடாமல் இழுத்துட்டு வந்தீங்கள்.அவங்க எப்படி பேசினாங்க.திருப்பி பேசாவிட்டால் அவங்க இப்படியே தான் எப்பவுமே பேசிட்டு இருப்பாங்க என்றாள்.
மௌனமாக அவளை பார்த்தவன் ஏன் பூவினி அவங்க பேச்சுக்கு என்னால் பதில் கொடுத்திருக்க முடியாதா?? இருந்தும் ஏன் பேசாமல் வந்தேன்??
முடியும் தான். நிலவனுக்கு எவ்வளவு தூரம் அமைதியும் பொறுமையும் உண்டோ அதே அளவுக்கு ஏன் அதை விட அதிகமாகவே கோபமும் திமிரும் உண்டு என்பது பூவினிக்கு தெரியும்.கோபம் என்றால் குரலை உயர்த்திப் பேசமாட்டான் ஆனால் அழுத்தமாக அவன் பேசும் ஒரு சில வார்த்தைகளிலேயே மற்றவரின் வாய் அடைத்துவிடும்.அப்படிபட்டவன் ஏன் இப்போது மறு பேச்சு பேசாமல் வந்தான்.
ஏன் அத்தான் ???
அத்தைக்காக பூவினி.அவர் அப்படி பேசும் போது அத்தைக்கு அது எவ்வளவு வேதனையை கொடுத்தது என்று அவர் முகத்தை பார்த்தே தெரிந்தது.இருந்தும் அவர் பாவம் எதுவும் பேசமுடியாது என்னை தவிப்புடன் பார்த்தார்.அதற்காக தான்.அதோடு அவர்கள் என்னதான் செய்தாலும் அவர்கள் வயதில் பெரியவர்கள் பூவினி.அவர்களை எதிர்த்து பேசுவது நல்லது இல்லை.அவர்களின் குணம் அது.அதற்காக நாமும் நம்முடைய நல்ல பண்புகளை ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்??
ம்ம்ம் சரி தான் அத்தான்.
நானும் முடிந்தவரை எதிர்த்து பேசக்கூடாது என்று தான் பல்லைக்கடித்து பொறுமை காத்தேன்.ஆனால் உங்களை அப்படி என்னால் பார்க்க முடியவில்லை அத்தான்.அதான் அப்படிப்பேசி விட்டேன்.அத்தான் அவங்களுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.தயவு செய்து அதை மறந்துவிடுங்கள் அத்தான்.என்றாள் கண்கள் கலங்கி குரல் உடைய.
அவள் பேசுவதை முகத்தில் ஒரு கனிவுடன் பார்த்துக்கொண்டு இருந்தவன்.அவள் கண்கள் கலங்கவும் சட்டென அவள் கையை பற்றி
ஹே பூவினி ... நான் அதை பெரிதாக எடுக்கவில்லைமா. அவர்கள் குணம் தெரிந்ததுதானே.அதை நினைத்து நீ ஒன்றும் கஷ்டப்படாதே.என்றான்………………….
அப்போதும் அவளுக்கு சமாதானம் ஆகவில்லை.அவள் முகம் தெளியாததைக் கண்டவன்.
பூவினி நான் ஒன்று சொல்லவா??
ம்ம்ம் ....
அவர்கள் அப்படிப்பேசியது கஷ்டமாகத்தான் இருந்தது.ஆனால் நீ எனக்காக பேசியதும் அந்த கஷ்டம் ஓடியே போய்விட்டது.என்று கூறி முறுவலித்தவன் மீண்டும் பூவினி என்றான்.
ம்ம்ம் என்னத்தான்??
நான் உன்னுடைய அத்தானா பூவினி என்றான்.ஒற்றைப் புருவத்தை உயர்த்தியபடி.
அவளுக்கு அவனுடைய கேள்வி விளங்கவில்லை.ஏன் இப்படி கேட்கிறான் என்று புரியாமல்
நீங்கள் என்னுடைய அத்தான் தானே?? என்றாள் குழப்பத்துடன்.
அவன் உதடுகளில் ஒரு உல்லாசச் சிரிப்புடன் அவள் முகத்தை சில நொடிகள் பார்த்தவன்
நான் உன்னுடைய அத்தானேதான் செல்லம் என்று கூறி இமைகளை சிமிட்டி முறுவலித்துவிட்டு வேக நடையுடன் சென்று விட்டான்.
பூவினிக்கு சற்று நேரம் எதுவுமே புரியவில்லை.இப்போது என்ன சொன்னான் செல்லம் என்றா?? அவன் அவளை செல்லம் பூக்குட்டி என்று கொஞ்சி இருக்கிறான் தான்.ஆனால் அது
சிறுவனாய் இருக்கும் போது.இருவரும் வளர வளர அந்த அழைப்புகள் இயல்பாகவே மறைந்து மறந்து போய்விட்டன.ஆனால் இப்போது திடீரென்று அவன் செல்லம் என்று சொல்லவும் அவள் திகைத்துவிட்டாள்.
அவனின் அழைப்பும் பார்வையும் அந்த முறுவலும் அவளுக்கு.நெஞ்சுக்குள் பனிக்கட்டியை கொட்டியது போல ஒரு அவஸ்தையை கொடுத்தது.எதுவும் செய்யத் தோன்றாமல் ஓர்வித மயக்கத்துடன் சென்று கட்டிலில் விழுந்தாள்.
அவள் காதுக்குள் “நான் உன்னுடைய அத்தானே தான் செல்லம்” என்ற நிலவனின் ஆழ்ந்த குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது.இதழ்களில் ஓர் இளமுறுவல் மலர கண்மூடி அதை ரசித்தபடியே கிடந்தாள் பூவினி.
பாவம் அவளுக்கு அப்போது தெரியவில்லை தன்னுடைய அந்த மகிழ்ச்சிக்கு தானே தன்னுடைய வாயால் குழியினை தோண்டி வைத்துவிட்டோம் என்று...........