தாமரை - 2
தாமரையை ஐசியுவில் வைத்திருந்தனர். தண்ணீரை அதிகமாக குடித்தது, பசி மயக்கம், உடல் சோர்வு, அடி வாங்கிய வலி என எல்லாம் சேர்ந்து அவளுக்கு மயக்கத்தைக் கொடுத்திருக்க, இந்த நான்கு மணி நேரமாக மயக்கத்தில் இருக்கிறாள் தாமரை.
செல்வம் மிகவும் ஒடுங்கி போயிருந்தார். அவர் குடும்பத்திற்கு இது சாபமோ என்று பயம் கூட வந்துவிட்டது. அந்த வீட்டு ஆண்களால் ஏமாற்றப்பட்டு உயிரை விடுவது தன் குடும்ப பெண்களுக்கு கிடைத்த சாபமோ என்ற எண்ணமே வந்துவிட்டது. அந்த எண்ணம் வந்ததுமே அவர் உயிர் ஒரு நொடி துடித்து அடங்கியது.
கணவரின் உடல் தூக்கிவாரிப் போடுவதை உணர்ந்த மகேஸ்வரி “என்னாச்சுங்க.. தாமரைக்கு ஒன்னும் ஆகாது. அவ நல்லாகிடுவா? நீங்க பயப்படாதீங்க..” என அவர் கையைப் பிடித்து ஆறுதல் சொல்ல,
“நாங்க அப்படி என்ன பண்ணிட்டோம்? உங்க குடும்ப ஆம்பளைங்க எல்லாரும் என் வீட்டு பொண்ணுங்களோட வாழ்க்கையில விளையாண்டுட்டு போக, என் தங்கச்சிக்கு நடக்கும் போது நான் சும்மா இருந்தேன். ஆனா என் பொண்ணுக்கு நடக்கும் போதும் அப்படியே இருப்பேன்னு நினைக்காத, அவனை கொல்லக்கூட தயங்கமாட்டேன்.” என ஆங்காரமாக சொன்னவர், மனைவியின் அதிந்த முகத்தில்,
“பூ மாதிரி வளர்த்த பொண்ணுடி, எப்படி படுத்திருக்கா பாரு. அவளை எப்படி இதுல இருந்து நான் வெளியே கொண்டு வருவேன். என் பொண்ணு எப்படி இதெல்லாம் தாங்குவா..” என அவரின் கையிலேயே முகத்தைப் புதைத்து அழ, மகேஸ்வரிக்கும் அழுகை பொங்கியது.
இருவரும் யாருக்கு யார் ஆறுதல் சொல்வது எனத் தெரியாமல், அழுது கொண்டிருந்த நேரம், நர்ஸ் வந்து தாமரை விழித்துவிட்டாள் என்று சொன்னதும் வேகமாக இருவரும் அவளைப் பார்க்க ஓடினர்.
பதட்டத்திலும், பயத்திலும் ஓடிவந்த பெற்றோரை பார்த்த தாமரைக்கு தன்னையே அவளால் மன்னிக்க முடியவில்லை. செத்திருந்தால் கூட ஒரு சில நாட்களோ, மாதங்களோ அழுது ஓய்ந்து அதிலிருந்து வெளியில் வந்துவிடுவார்கள்.
ஆனால் அவள் வாங்கிக் கொடுத்த பட்டம், அது அவள் சாகும் வரைக்குமே தொடருமே.
‘என்ன செஞ்சி வச்சிருக்க தாமரை. இதனால உன் அப்பா அம்மா தலை நிமிர்ந்து ஊர்ல நடக்க முடியாத மாதிரி பண்ணிட்டியே’ என அவளுக்குள்ளே பெரும் போராட்டம்.
மகளின் கையைப் பிடித்துக் கொண்ட செல்வம் “ஏன் இப்படி செஞ்சிட்ட கண்ணு, என்ன நடந்திருந்தாலும் அப்பா உன்னை விட்டிருப்பேனா சொல்லு?” என்றவர் குழுங்கி குழுங்கி அழ, அவருக்கு அவளால் என்ன பதில் கொடுத்திட முடியும்.
மௌனமாக கண்ணீர் வடிப்பவளை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவர் “உனக்கு அவனை பிடிச்சிருந்ததா?” என்றார் மெல்ல. தன் பேச்சுக்கூட தன் மகளை காயப்படுத்தி விடக்கூடாது என்று கவனமாக கேட்டார்.
அந்த கேள்வியில் தாமரையும், மகேஸ்வரியும் அதிர்ந்து போய் பார்த்தனர்.
தாமரைக்கு இல்லை என்றும் சொல்ல முடியவில்லை. ஆம் என்றும் சொல்ல முடியவில்லை.
‘இல்லை’ என்றால் பிறகு ஏன் அங்கு போனாய் என்ற கேள்வி வரும்.
‘ஆம்’ என்றால் அப்போ நான் கேட்டதற்கு இல்லையென்று பொய் சொன்னாயா என்ற கேள்வி வரும்.
என்ன பதில் சொல்வது என அவள் திணறிக் கொண்டிருந்த நேரம் மருத்துவர் உள்ளே வர, இரு பெண்களும் ஆசுவாசமாக மூச்சை விட்டனர்.
“இனி பயப்பட வேண்டாம் அண்ணா. ரெண்டு நாள் இங்க இருக்கட்டும். அப்புறம் வீட்டுக்கு போகலாம். இப்போ கண்டிப்பா ரெஸ்ட் எடுக்கட்டும். நீங்க அவளை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க..” என டாக்டர் சுமதி கூறவும், சரியென்றபடி வெளியில் வந்தனர், மகேஸ்வரியும் செல்வமும்.
அதன்பிறகு யார் யாரோ வந்தார்கள், பார்த்தார்கள். ஆதரவு கூறி சென்றார்கள். எதுவுமே அவள் காதில் விழவில்லை. மூளைக்கும் சென்று சேரவில்லை.
பெற்றோரின் முகத்தைக்கூட நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. அவள் செய்த செயலின் வீரியம் அவளால் யாரையும் தைரியமாக பார்க்க விடவில்லை.
சொல்லி வைத்தது போல இளங்கோவைப்பற்றி யாருமே அவளிடம் பேசவில்லை. ஒருபக்கம் வருத்தமாக இருந்தாலும், ஒருபக்கம் நிம்மதியாகவே இருந்தது.
மூன்றாம் நாள் காலை டிஸ்சார்ஜ் செய்து கிளம்பியிருந்தனர். ஊரை நெருங்கும் நேரம் தாமரையின் இதயம் வேக வேகமாக துடித்தது.
தன் கையை நெஞ்சுப் பகுதியில் வைத்து அழுத்தியபடியே அமர்ந்திருந்தாள்.
இதோ வரப்போகிறது அவன் வீடு. அய்யோ எப்படி அதை கடப்பேன், யாரும் பார்த்து தன்னை அசிங்கமாக பேசுவார்களோ என்று அவள் உள்ளுக்குள் அழுது கொண்டே வரும் நேரம் அந்த பெரிய வீட்டின் கேட் பெரிய பூட்டால் பூட்டியிருந்தது.
உண்மைக்கும் தாமரைக்கு அதைப் பார்த்து வருத்தம் தான் வந்திருக்க வேண்டும். ஆனால் அவள் மனமோ நிம்மதியாக ஒரு பெருமூச்சை விட்டுக் கொண்டது.
அப்படியே கண்னை மூடி சீட்டில் சாய்ந்துகொண்டாள். அவன் என்ன ஆனான், அடுத்து என்ன நடந்தது என யாரும் அவளுக்கு சொல்லவில்லை. அவளும் அதை கேட்கவில்லை.
வீட்டிற்கு வந்தவள் தன் அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டாள். அடுத்து வந்த நாட்கள் அந்த அறைக்குள்ளே கழிய ஆரம்பித்தது.
மகேஸ்வரிக்கு மகளை நினைத்து பெரும் கவலை. அவர்கள் இல்லாத காலத்தில் எப்படி தனியாக சமாளிக்கப்போகிறாள் என்ற பெரும் பயமும் சேர்ந்து கொண்டது.
இதற்கு முன்னர் இளங்கோவை நினைத்து, ‘எப்படியோ அவன் தன் மகளைப் பார்த்துக் கொள்வான்’ என்று நினைத்திருந்தார்.
எப்போது அவன் மனசாட்சிக்கு பயந்து, ஒரு இரக்க குணத்தில் கூட தன் மகளை மருத்துவமனையில் வந்து பார்க்கவில்லையோ அப்போதே அவரது எண்ணத்தை குழி தோண்டி புதைத்துவிட்டார்.
மகளைப்பற்றிய மனைவியின் பயம் செல்வத்திற்கு புரியாமல் இல்லை. அதனால் அவரிடம் “மகேஸு நீயும் பயந்து புள்ளையும் பயமுறுத்தாத. அவளை அப்படியே விட்டுடுவோமா என்ன.? நடந்தது ஒன்னும் உடனே மறக்கக்கூடியது இல்லை. அதை மறந்து கடந்து வரனும்.. அதுக்கு காலம் எடுக்கும். நீ சும்மா சும்மா அவளைப் பார்த்து அழறதை நிறுத்து. நாம நார்மலாகிட்டாலே அவ சரியாகிடுவா.” என பலவாறு சமாதானம் செய்தார்.
ஆனால் மாதம் மூன்று கடந்துமே தாமரை அப்படியே இருக்க, பெற்றவர்களுக்கு பெரும் பயம் வந்துவிட்டது. அதனால் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அங்கோ அவர்கள் எதிர்பார்த்திராத ஒரு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தார் மருத்துவர்.
ஊரிலிருந்து சென்னைக்கு வந்ததும் தான் அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது.
அந்த வீட்டின் பெரியவரும், இளங்கோவின் அம்மா வழி பாட்டியுமான வசந்திக்குதான் மனம் வெகுவாக உருத்திக் கொண்டே இருந்தது.
பஞ்சாயத்தில் நடந்ததை கேட்டதில் இருந்து அவர் மிகவும் வருத்தமாகவே இருந்தார்.
என்ன இருந்தாலும் ஒரு பெண்ணின் வாழ்க்கை எனும் போது, அவரால் பேரன் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஏற்கனவே தன் மகளால் தான் அங்கு ஒரு உயிர் போயிருந்தது அவருக்கு தெரியும். இப்போது மீண்டும் அதே போல் ஒரு சூழ்நிலை வர, அவரால் அதை தாண்டி வரவே முடியவில்லை.
இளங்கோ வந்த அன்றே அலுவலகம் செல்ல, அன்றிலிருந்து வீட்டிற்கே வரவில்லை.
அவன் பழக்கம் அதுதான் என்று எல்லாருக்கும் புரிந்தாலும், இந்த நேரம் இப்படி ஆபிசிலேயே இருப்பது அவர்களுக்கு பயத்தை கொடுத்தது.
இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்த சீனி, நாயகியுடன் சென்று தன் தாயிடம் நின்றார்.
ஒன்றாக வந்த இருவரையும் கேள்வியாக பார்த்த வசந்தியிடம்,
“அத்தை நடந்தது நடந்து போச்சு, நடந்த எதுக்கும் நம்ம இளங்கோ காரணம் இல்ல. அது அந்த ஊர்லேயே எல்லாருக்கும் தெரியும். அந்தப் பொண்ணு செஞ்சதுக்கு நம்ம இளா என்ன பண்ணுவான். தப்பு செஞ்சுட்டோமேனு குற்ற உணர்ச்சியிலேயே சுத்திக்கிட்டு இருக்கான். இன்னும் நாலு நாளில் கல்யாணத்தை வச்சிட்டு ஆபீஸ்லயே இருந்தா என்ன அர்த்தம் நீங்க கூப்பிட்டு கேளுங்க. உங்க ஒருத்தர் பேச்சை மட்டும் தான் அவன் கேட்பான்.” என நாயகி பேச,
செல்வமும் “ஆமா ம்மா, ஏற்கனவே நடந்ததிலிருந்து இன்னும் நம்ம ப்ரீ குட்டியும் வெளிய வரல, எங்க இளங்கோ அவளை விட்டு போயிருவானோனு பயம். அதனால அவளும் மனசளவுல ரொம்ப ஒடுங்கி போயிட்டா. இதை இப்படியே விட்டு விட முடியாது ம்மா, நாம முடிவு பண்ண மாதிரி இவங்களுக்கு கல்யாணத்தை முடிச்சிடலாம். அப்போதான் எல்லாருக்கும் நிம்மதியா இருக்கும். நம்ம பிள்ளைங்க வாழ்க்கையும் சந்தோசமா இருக்கும்..” என சீனியும் கூற, இதற்கு என்ன பதில் சொல்வது என்று அந்த பெரியவருக்கு தெரியவில்லை.
ஆனால் பேரனை அப்படியே விட்டு விடவும் மனம் இல்லை. அதனால் உடனே அவனுக்கு அழைத்து வீட்டுக்கு வர சொன்னார்.
வீட்டிற்குள் வந்தவனை அனைவரும் ஆராய்ச்சியாக பார்க்க, அவனும் மிகவும் சாதாரணமாக தன் பாட்டியின் அருகில் வந்து அமர்ந்தான்.
“என்ன பாட்டிம்மா எதுவும் அவசரமா, ஏன் உடனே கிளம்பி வர சொன்னீங்க? என்றான் மிகவும் சாதாரணமாக.
“அவசரமெல்லாம் ஒன்னும் இல்லையே கண்ணு, உன்ன பார்த்தே நாலு நாள் ஆயிடுச்சு, அதான் வர சொன்னேன்.” என்றார் அவன் முகத்தை ஆராய்ச்சியாக பார்த்தபடி.
அதை கவனித்தவன் “என்ன அம்மாச்சி? என்ன பிரச்சனை? ஏன் எல்லாரும் ஒரு மாதிரி இருக்கீங்க? ரீத்து நீ ஏன் இவ்ளோ டல்லா இருக்க?” என வரிசையாக கேள்வியாக கேட்க, அவன் பேச்சில் மற்ற எல்லோரும்தான் குழம்பிப் போயினர்.
“அது அதுவந்து ஊர்ல நடந்தது உனக்கு ஒன்னும் வருத்தமா இல்லையா இளா. என்ன இருந்தாலும் ஒரு பொண்ணோட வாழ்க்கை இல்லையா?” என வசந்தி மெதுவாக ஆரம்பிக்க,
“ஆச்சி இப்போ இதை பேசத்தான் மாமாவை வர சொன்னீங்களா? ஏன் ஆச்சி இப்படி எல்லாம் பண்றீங்க.” என பிரீத்தா கண்ணை கசக்க,
“அத்தை யாரோ ஒருத்திக்காக உங்க பேத்தியோட மனசை கஷ்டப்படுத்தாதீங்க. அங்க நடந்த பிரச்சனையில இளா மேல தப்பே இல்லை. தப்பே செய்யாம அவன் ஏன் பழி சுமக்கணும்.” என நாயகியும் பேச,
ஏனோ அந்த பேச்சே இளங்கோவிற்கு பிடிக்கவில்லை. தன்னை ஒருத்தி பலவீனப்படுத்தி, அவளின் ஆசைக்கு இணங்க வைத்தது, அவனின் ஆண்மையை அசிங்கப்படுத்தி சென்றதைப்போல் அவமானமாக நினைத்தான்.
அதை நினைத்தாலே தன்மேலே அவனுக்கு வெறுப்பு வந்தது. ‘ஒரு பெண்ணின் உடம்பிற்கு அடிமையாகிவிட்டாய்’ என அவனின் மனம் அவனை காரித்துப்புவது போல் இருந்தது.
அதோடு ப்ரீத்தாவை காதலித்துவிட்டு எப்படி இன்னொரு பெண்ணுடன் உடலளவில் இணைய முடியும். அப்படியென்றால் அவன் காதல் உண்மையில்லையா என அவனுக்குள்ளே பல குழப்பங்கள்.
அதனாலயே இங்கு யார் முகத்திலும் விழிக்காமல் ஆஃபிசே கதியென கிடந்தான். வசந்தி அழைக்கவும் வேறுவழியில்லாமல் வந்துவிட்டான்.
இப்போது இவர்களிடம் தன் குழப்பங்களை கூறினால் பயந்து விடுவார்கள் என்று புரிய, “எல்லாரும் கொஞ்ச நேரம் அமைதியா இருக்கீங்களா? அங்கு நடந்ததையும், அவளையும் ஒரு கனவா நினைச்சு மறந்துட்டேன். மறுபடியும் யாரும் அதை பத்தி பேச வேண்டாம்.” என தன் மனதை மறைத்து எரிச்சலாக சொல்லி முடிக்க,
“அப்போ பிக்ஸ் பண்ண டேட்லயே உங்க கல்யாணத்தை முடிச்சிடலாம். அப்போதான் எங்களுக்கு நிம்மதியா இருக்கும்.” என சீனிவாசனும் பட்டென்று கூறிவிட்டார்.
“இல்ல மாமா அதபத்தி பேசத்தான் நான் வந்தேன், நாங்க எல்லாரும் ரொம்ப நாளா எதிர்பார்த்த ஜெர்மனி ப்ராஜெக்ட் கிடைச்சிருச்சு, சோ நான் நாளைக்கு நைட் ஜெர்மனி போகணும். அதுக்கு முன்னாடி இங்கேயே எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு. அதை எல்லாம் முடிச்சு கொடுத்துட்டு தான் நான் ஜெர்மனி கிளம்ப முடியும். அதனால நான் போயிட்டு வந்து மேரேஜ் பத்தி பேசலாம். இப்போ எந்த அவசரமும் வேண்டாம்” என இளங்கோவும் மகிழ்ச்சியில் கூற, பிரீத்தாவின் முகத்தில் பயம் அப்பிக் கொண்டது.
அவனது மகிழ்ச்சி அங்கு இருக்கும் மற்றவர்கள் யாரையும் தொற்றவில்லை.
சில நொடிகளுக்குப் பிறகுதான் அதை உணர்ந்தான் இளங்கோ. அதை உணர்ந்தவன் அனைவரையும் கேள்வியாக பார்க்க,
“ப்ரீத்தா ரொம்ப பயப்படுறா இளா. அவளோட பயம் நியாயமானதுதானே. அவளுக்கு நீ என்ன பதில் சொல்ல போற.” என்றார் நாயகி.
அவருக்கு இளங்கோவை அப்படியே விட்டுவிட மனமில்லை. மகளை இழுத்து பேசினால் மனமிறங்குவானோ என்றுதான் ஆரம்பித்தார்.
இப்போது இளங்கோ பிரீத்தாவை கூர்மையாக பார்க்க, அந்த பார்வையில் பயந்தவள் “இல்ல.. இல்ல மாமா உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா அவ.. அவளால எதும் பிரச்சினை ஆகிடுமோன்னு..” என முனுமுனுத்து ‘ஸாரி மாமா’ என முடிக்க,
“இதுக்கு நான் என்ன பதில் சொல்லணும் ரீத்து. நீ என்னை நம்பணும்னு நான் எதுவும் செய்யப் போறதில்ல. இந்த பிராஜக்ட் எவ்ளோ முக்கியம்னு உனக்கும் தெரியும். இதுக்கு மேல பேச எனக்கு விருப்பமில்லை.” என்றவன் வேகமாக தன் அறைக்கு சென்று மறைந்து கொண்டான்.
“என்னம்மா இதெல்லாம்? இளா ஏன் இப்படி பேசிட்டு போறான்?” என சீனிவாசன் தாயிடம் புலம்ப,
“உனக்கே தெரியும் சீனி. கட்டாயப்படுத்தி எந்த வேலையும் அவன்கிட்ட வாங்க முடியாதுன்னு. இப்போதைக்கு அவன் போக்குல விடுங்க. என்னதான் அதை மறந்துட்டேன், கடந்து வந்துட்டேன் அப்படின்னு சொன்னாலும், அவன் மனசுல சின்ன குற்றவுணர்ச்சியாவது இருக்கும். அது போகணும்னா அவன் தனியா இருக்கணும். அவன் சொல்ற மாதிரி கொஞ்ச நாள் ஜெர்மனி போய்ட்டு வரட்டும். வந்த பிறகு கல்யாணத்தை பத்தி பேசலாம்.” என வசந்தியும் முடித்துவிட்டார்.
அனைவரும் மிகுந்த பயத்துடன்தான் இளங்கோவை ஜெர்மனி அனுப்பி வைத்தனர். அங்கு சென்று மூன்றாம் மாதத்தில் ஒரு நாள் மகேஸ்வரியிடமிருந்து அவனுக்கு அழைப்பு வர, மிகவும் தயக்கத்துடனே தான் அந்த அழைப்பை எடுத்தான் இளங்கோ.
அதில் அவர் கூறிய செய்தியில் அதிர்ந்து, அடுத்த இரண்டாம் நாள் அவர் வீட்டின் முன் ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தான்.
தாமரையை ஐசியுவில் வைத்திருந்தனர். தண்ணீரை அதிகமாக குடித்தது, பசி மயக்கம், உடல் சோர்வு, அடி வாங்கிய வலி என எல்லாம் சேர்ந்து அவளுக்கு மயக்கத்தைக் கொடுத்திருக்க, இந்த நான்கு மணி நேரமாக மயக்கத்தில் இருக்கிறாள் தாமரை.
செல்வம் மிகவும் ஒடுங்கி போயிருந்தார். அவர் குடும்பத்திற்கு இது சாபமோ என்று பயம் கூட வந்துவிட்டது. அந்த வீட்டு ஆண்களால் ஏமாற்றப்பட்டு உயிரை விடுவது தன் குடும்ப பெண்களுக்கு கிடைத்த சாபமோ என்ற எண்ணமே வந்துவிட்டது. அந்த எண்ணம் வந்ததுமே அவர் உயிர் ஒரு நொடி துடித்து அடங்கியது.
கணவரின் உடல் தூக்கிவாரிப் போடுவதை உணர்ந்த மகேஸ்வரி “என்னாச்சுங்க.. தாமரைக்கு ஒன்னும் ஆகாது. அவ நல்லாகிடுவா? நீங்க பயப்படாதீங்க..” என அவர் கையைப் பிடித்து ஆறுதல் சொல்ல,
“நாங்க அப்படி என்ன பண்ணிட்டோம்? உங்க குடும்ப ஆம்பளைங்க எல்லாரும் என் வீட்டு பொண்ணுங்களோட வாழ்க்கையில விளையாண்டுட்டு போக, என் தங்கச்சிக்கு நடக்கும் போது நான் சும்மா இருந்தேன். ஆனா என் பொண்ணுக்கு நடக்கும் போதும் அப்படியே இருப்பேன்னு நினைக்காத, அவனை கொல்லக்கூட தயங்கமாட்டேன்.” என ஆங்காரமாக சொன்னவர், மனைவியின் அதிந்த முகத்தில்,
“பூ மாதிரி வளர்த்த பொண்ணுடி, எப்படி படுத்திருக்கா பாரு. அவளை எப்படி இதுல இருந்து நான் வெளியே கொண்டு வருவேன். என் பொண்ணு எப்படி இதெல்லாம் தாங்குவா..” என அவரின் கையிலேயே முகத்தைப் புதைத்து அழ, மகேஸ்வரிக்கும் அழுகை பொங்கியது.
இருவரும் யாருக்கு யார் ஆறுதல் சொல்வது எனத் தெரியாமல், அழுது கொண்டிருந்த நேரம், நர்ஸ் வந்து தாமரை விழித்துவிட்டாள் என்று சொன்னதும் வேகமாக இருவரும் அவளைப் பார்க்க ஓடினர்.
பதட்டத்திலும், பயத்திலும் ஓடிவந்த பெற்றோரை பார்த்த தாமரைக்கு தன்னையே அவளால் மன்னிக்க முடியவில்லை. செத்திருந்தால் கூட ஒரு சில நாட்களோ, மாதங்களோ அழுது ஓய்ந்து அதிலிருந்து வெளியில் வந்துவிடுவார்கள்.
ஆனால் அவள் வாங்கிக் கொடுத்த பட்டம், அது அவள் சாகும் வரைக்குமே தொடருமே.
‘என்ன செஞ்சி வச்சிருக்க தாமரை. இதனால உன் அப்பா அம்மா தலை நிமிர்ந்து ஊர்ல நடக்க முடியாத மாதிரி பண்ணிட்டியே’ என அவளுக்குள்ளே பெரும் போராட்டம்.
மகளின் கையைப் பிடித்துக் கொண்ட செல்வம் “ஏன் இப்படி செஞ்சிட்ட கண்ணு, என்ன நடந்திருந்தாலும் அப்பா உன்னை விட்டிருப்பேனா சொல்லு?” என்றவர் குழுங்கி குழுங்கி அழ, அவருக்கு அவளால் என்ன பதில் கொடுத்திட முடியும்.
மௌனமாக கண்ணீர் வடிப்பவளை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவர் “உனக்கு அவனை பிடிச்சிருந்ததா?” என்றார் மெல்ல. தன் பேச்சுக்கூட தன் மகளை காயப்படுத்தி விடக்கூடாது என்று கவனமாக கேட்டார்.
அந்த கேள்வியில் தாமரையும், மகேஸ்வரியும் அதிர்ந்து போய் பார்த்தனர்.
தாமரைக்கு இல்லை என்றும் சொல்ல முடியவில்லை. ஆம் என்றும் சொல்ல முடியவில்லை.
‘இல்லை’ என்றால் பிறகு ஏன் அங்கு போனாய் என்ற கேள்வி வரும்.
‘ஆம்’ என்றால் அப்போ நான் கேட்டதற்கு இல்லையென்று பொய் சொன்னாயா என்ற கேள்வி வரும்.
என்ன பதில் சொல்வது என அவள் திணறிக் கொண்டிருந்த நேரம் மருத்துவர் உள்ளே வர, இரு பெண்களும் ஆசுவாசமாக மூச்சை விட்டனர்.
“இனி பயப்பட வேண்டாம் அண்ணா. ரெண்டு நாள் இங்க இருக்கட்டும். அப்புறம் வீட்டுக்கு போகலாம். இப்போ கண்டிப்பா ரெஸ்ட் எடுக்கட்டும். நீங்க அவளை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க..” என டாக்டர் சுமதி கூறவும், சரியென்றபடி வெளியில் வந்தனர், மகேஸ்வரியும் செல்வமும்.
அதன்பிறகு யார் யாரோ வந்தார்கள், பார்த்தார்கள். ஆதரவு கூறி சென்றார்கள். எதுவுமே அவள் காதில் விழவில்லை. மூளைக்கும் சென்று சேரவில்லை.
பெற்றோரின் முகத்தைக்கூட நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. அவள் செய்த செயலின் வீரியம் அவளால் யாரையும் தைரியமாக பார்க்க விடவில்லை.
சொல்லி வைத்தது போல இளங்கோவைப்பற்றி யாருமே அவளிடம் பேசவில்லை. ஒருபக்கம் வருத்தமாக இருந்தாலும், ஒருபக்கம் நிம்மதியாகவே இருந்தது.
மூன்றாம் நாள் காலை டிஸ்சார்ஜ் செய்து கிளம்பியிருந்தனர். ஊரை நெருங்கும் நேரம் தாமரையின் இதயம் வேக வேகமாக துடித்தது.
தன் கையை நெஞ்சுப் பகுதியில் வைத்து அழுத்தியபடியே அமர்ந்திருந்தாள்.
இதோ வரப்போகிறது அவன் வீடு. அய்யோ எப்படி அதை கடப்பேன், யாரும் பார்த்து தன்னை அசிங்கமாக பேசுவார்களோ என்று அவள் உள்ளுக்குள் அழுது கொண்டே வரும் நேரம் அந்த பெரிய வீட்டின் கேட் பெரிய பூட்டால் பூட்டியிருந்தது.
உண்மைக்கும் தாமரைக்கு அதைப் பார்த்து வருத்தம் தான் வந்திருக்க வேண்டும். ஆனால் அவள் மனமோ நிம்மதியாக ஒரு பெருமூச்சை விட்டுக் கொண்டது.
அப்படியே கண்னை மூடி சீட்டில் சாய்ந்துகொண்டாள். அவன் என்ன ஆனான், அடுத்து என்ன நடந்தது என யாரும் அவளுக்கு சொல்லவில்லை. அவளும் அதை கேட்கவில்லை.
வீட்டிற்கு வந்தவள் தன் அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டாள். அடுத்து வந்த நாட்கள் அந்த அறைக்குள்ளே கழிய ஆரம்பித்தது.
மகேஸ்வரிக்கு மகளை நினைத்து பெரும் கவலை. அவர்கள் இல்லாத காலத்தில் எப்படி தனியாக சமாளிக்கப்போகிறாள் என்ற பெரும் பயமும் சேர்ந்து கொண்டது.
இதற்கு முன்னர் இளங்கோவை நினைத்து, ‘எப்படியோ அவன் தன் மகளைப் பார்த்துக் கொள்வான்’ என்று நினைத்திருந்தார்.
எப்போது அவன் மனசாட்சிக்கு பயந்து, ஒரு இரக்க குணத்தில் கூட தன் மகளை மருத்துவமனையில் வந்து பார்க்கவில்லையோ அப்போதே அவரது எண்ணத்தை குழி தோண்டி புதைத்துவிட்டார்.
மகளைப்பற்றிய மனைவியின் பயம் செல்வத்திற்கு புரியாமல் இல்லை. அதனால் அவரிடம் “மகேஸு நீயும் பயந்து புள்ளையும் பயமுறுத்தாத. அவளை அப்படியே விட்டுடுவோமா என்ன.? நடந்தது ஒன்னும் உடனே மறக்கக்கூடியது இல்லை. அதை மறந்து கடந்து வரனும்.. அதுக்கு காலம் எடுக்கும். நீ சும்மா சும்மா அவளைப் பார்த்து அழறதை நிறுத்து. நாம நார்மலாகிட்டாலே அவ சரியாகிடுவா.” என பலவாறு சமாதானம் செய்தார்.
ஆனால் மாதம் மூன்று கடந்துமே தாமரை அப்படியே இருக்க, பெற்றவர்களுக்கு பெரும் பயம் வந்துவிட்டது. அதனால் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அங்கோ அவர்கள் எதிர்பார்த்திராத ஒரு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தார் மருத்துவர்.
ஊரிலிருந்து சென்னைக்கு வந்ததும் தான் அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது.
அந்த வீட்டின் பெரியவரும், இளங்கோவின் அம்மா வழி பாட்டியுமான வசந்திக்குதான் மனம் வெகுவாக உருத்திக் கொண்டே இருந்தது.
பஞ்சாயத்தில் நடந்ததை கேட்டதில் இருந்து அவர் மிகவும் வருத்தமாகவே இருந்தார்.
என்ன இருந்தாலும் ஒரு பெண்ணின் வாழ்க்கை எனும் போது, அவரால் பேரன் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஏற்கனவே தன் மகளால் தான் அங்கு ஒரு உயிர் போயிருந்தது அவருக்கு தெரியும். இப்போது மீண்டும் அதே போல் ஒரு சூழ்நிலை வர, அவரால் அதை தாண்டி வரவே முடியவில்லை.
இளங்கோ வந்த அன்றே அலுவலகம் செல்ல, அன்றிலிருந்து வீட்டிற்கே வரவில்லை.
அவன் பழக்கம் அதுதான் என்று எல்லாருக்கும் புரிந்தாலும், இந்த நேரம் இப்படி ஆபிசிலேயே இருப்பது அவர்களுக்கு பயத்தை கொடுத்தது.
இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்த சீனி, நாயகியுடன் சென்று தன் தாயிடம் நின்றார்.
ஒன்றாக வந்த இருவரையும் கேள்வியாக பார்த்த வசந்தியிடம்,
“அத்தை நடந்தது நடந்து போச்சு, நடந்த எதுக்கும் நம்ம இளங்கோ காரணம் இல்ல. அது அந்த ஊர்லேயே எல்லாருக்கும் தெரியும். அந்தப் பொண்ணு செஞ்சதுக்கு நம்ம இளா என்ன பண்ணுவான். தப்பு செஞ்சுட்டோமேனு குற்ற உணர்ச்சியிலேயே சுத்திக்கிட்டு இருக்கான். இன்னும் நாலு நாளில் கல்யாணத்தை வச்சிட்டு ஆபீஸ்லயே இருந்தா என்ன அர்த்தம் நீங்க கூப்பிட்டு கேளுங்க. உங்க ஒருத்தர் பேச்சை மட்டும் தான் அவன் கேட்பான்.” என நாயகி பேச,
செல்வமும் “ஆமா ம்மா, ஏற்கனவே நடந்ததிலிருந்து இன்னும் நம்ம ப்ரீ குட்டியும் வெளிய வரல, எங்க இளங்கோ அவளை விட்டு போயிருவானோனு பயம். அதனால அவளும் மனசளவுல ரொம்ப ஒடுங்கி போயிட்டா. இதை இப்படியே விட்டு விட முடியாது ம்மா, நாம முடிவு பண்ண மாதிரி இவங்களுக்கு கல்யாணத்தை முடிச்சிடலாம். அப்போதான் எல்லாருக்கும் நிம்மதியா இருக்கும். நம்ம பிள்ளைங்க வாழ்க்கையும் சந்தோசமா இருக்கும்..” என சீனியும் கூற, இதற்கு என்ன பதில் சொல்வது என்று அந்த பெரியவருக்கு தெரியவில்லை.
ஆனால் பேரனை அப்படியே விட்டு விடவும் மனம் இல்லை. அதனால் உடனே அவனுக்கு அழைத்து வீட்டுக்கு வர சொன்னார்.
வீட்டிற்குள் வந்தவனை அனைவரும் ஆராய்ச்சியாக பார்க்க, அவனும் மிகவும் சாதாரணமாக தன் பாட்டியின் அருகில் வந்து அமர்ந்தான்.
“என்ன பாட்டிம்மா எதுவும் அவசரமா, ஏன் உடனே கிளம்பி வர சொன்னீங்க? என்றான் மிகவும் சாதாரணமாக.
“அவசரமெல்லாம் ஒன்னும் இல்லையே கண்ணு, உன்ன பார்த்தே நாலு நாள் ஆயிடுச்சு, அதான் வர சொன்னேன்.” என்றார் அவன் முகத்தை ஆராய்ச்சியாக பார்த்தபடி.
அதை கவனித்தவன் “என்ன அம்மாச்சி? என்ன பிரச்சனை? ஏன் எல்லாரும் ஒரு மாதிரி இருக்கீங்க? ரீத்து நீ ஏன் இவ்ளோ டல்லா இருக்க?” என வரிசையாக கேள்வியாக கேட்க, அவன் பேச்சில் மற்ற எல்லோரும்தான் குழம்பிப் போயினர்.
“அது அதுவந்து ஊர்ல நடந்தது உனக்கு ஒன்னும் வருத்தமா இல்லையா இளா. என்ன இருந்தாலும் ஒரு பொண்ணோட வாழ்க்கை இல்லையா?” என வசந்தி மெதுவாக ஆரம்பிக்க,
“ஆச்சி இப்போ இதை பேசத்தான் மாமாவை வர சொன்னீங்களா? ஏன் ஆச்சி இப்படி எல்லாம் பண்றீங்க.” என பிரீத்தா கண்ணை கசக்க,
“அத்தை யாரோ ஒருத்திக்காக உங்க பேத்தியோட மனசை கஷ்டப்படுத்தாதீங்க. அங்க நடந்த பிரச்சனையில இளா மேல தப்பே இல்லை. தப்பே செய்யாம அவன் ஏன் பழி சுமக்கணும்.” என நாயகியும் பேச,
ஏனோ அந்த பேச்சே இளங்கோவிற்கு பிடிக்கவில்லை. தன்னை ஒருத்தி பலவீனப்படுத்தி, அவளின் ஆசைக்கு இணங்க வைத்தது, அவனின் ஆண்மையை அசிங்கப்படுத்தி சென்றதைப்போல் அவமானமாக நினைத்தான்.
அதை நினைத்தாலே தன்மேலே அவனுக்கு வெறுப்பு வந்தது. ‘ஒரு பெண்ணின் உடம்பிற்கு அடிமையாகிவிட்டாய்’ என அவனின் மனம் அவனை காரித்துப்புவது போல் இருந்தது.
அதோடு ப்ரீத்தாவை காதலித்துவிட்டு எப்படி இன்னொரு பெண்ணுடன் உடலளவில் இணைய முடியும். அப்படியென்றால் அவன் காதல் உண்மையில்லையா என அவனுக்குள்ளே பல குழப்பங்கள்.
அதனாலயே இங்கு யார் முகத்திலும் விழிக்காமல் ஆஃபிசே கதியென கிடந்தான். வசந்தி அழைக்கவும் வேறுவழியில்லாமல் வந்துவிட்டான்.
இப்போது இவர்களிடம் தன் குழப்பங்களை கூறினால் பயந்து விடுவார்கள் என்று புரிய, “எல்லாரும் கொஞ்ச நேரம் அமைதியா இருக்கீங்களா? அங்கு நடந்ததையும், அவளையும் ஒரு கனவா நினைச்சு மறந்துட்டேன். மறுபடியும் யாரும் அதை பத்தி பேச வேண்டாம்.” என தன் மனதை மறைத்து எரிச்சலாக சொல்லி முடிக்க,
“அப்போ பிக்ஸ் பண்ண டேட்லயே உங்க கல்யாணத்தை முடிச்சிடலாம். அப்போதான் எங்களுக்கு நிம்மதியா இருக்கும்.” என சீனிவாசனும் பட்டென்று கூறிவிட்டார்.
“இல்ல மாமா அதபத்தி பேசத்தான் நான் வந்தேன், நாங்க எல்லாரும் ரொம்ப நாளா எதிர்பார்த்த ஜெர்மனி ப்ராஜெக்ட் கிடைச்சிருச்சு, சோ நான் நாளைக்கு நைட் ஜெர்மனி போகணும். அதுக்கு முன்னாடி இங்கேயே எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு. அதை எல்லாம் முடிச்சு கொடுத்துட்டு தான் நான் ஜெர்மனி கிளம்ப முடியும். அதனால நான் போயிட்டு வந்து மேரேஜ் பத்தி பேசலாம். இப்போ எந்த அவசரமும் வேண்டாம்” என இளங்கோவும் மகிழ்ச்சியில் கூற, பிரீத்தாவின் முகத்தில் பயம் அப்பிக் கொண்டது.
அவனது மகிழ்ச்சி அங்கு இருக்கும் மற்றவர்கள் யாரையும் தொற்றவில்லை.
சில நொடிகளுக்குப் பிறகுதான் அதை உணர்ந்தான் இளங்கோ. அதை உணர்ந்தவன் அனைவரையும் கேள்வியாக பார்க்க,
“ப்ரீத்தா ரொம்ப பயப்படுறா இளா. அவளோட பயம் நியாயமானதுதானே. அவளுக்கு நீ என்ன பதில் சொல்ல போற.” என்றார் நாயகி.
அவருக்கு இளங்கோவை அப்படியே விட்டுவிட மனமில்லை. மகளை இழுத்து பேசினால் மனமிறங்குவானோ என்றுதான் ஆரம்பித்தார்.
இப்போது இளங்கோ பிரீத்தாவை கூர்மையாக பார்க்க, அந்த பார்வையில் பயந்தவள் “இல்ல.. இல்ல மாமா உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா அவ.. அவளால எதும் பிரச்சினை ஆகிடுமோன்னு..” என முனுமுனுத்து ‘ஸாரி மாமா’ என முடிக்க,
“இதுக்கு நான் என்ன பதில் சொல்லணும் ரீத்து. நீ என்னை நம்பணும்னு நான் எதுவும் செய்யப் போறதில்ல. இந்த பிராஜக்ட் எவ்ளோ முக்கியம்னு உனக்கும் தெரியும். இதுக்கு மேல பேச எனக்கு விருப்பமில்லை.” என்றவன் வேகமாக தன் அறைக்கு சென்று மறைந்து கொண்டான்.
“என்னம்மா இதெல்லாம்? இளா ஏன் இப்படி பேசிட்டு போறான்?” என சீனிவாசன் தாயிடம் புலம்ப,
“உனக்கே தெரியும் சீனி. கட்டாயப்படுத்தி எந்த வேலையும் அவன்கிட்ட வாங்க முடியாதுன்னு. இப்போதைக்கு அவன் போக்குல விடுங்க. என்னதான் அதை மறந்துட்டேன், கடந்து வந்துட்டேன் அப்படின்னு சொன்னாலும், அவன் மனசுல சின்ன குற்றவுணர்ச்சியாவது இருக்கும். அது போகணும்னா அவன் தனியா இருக்கணும். அவன் சொல்ற மாதிரி கொஞ்ச நாள் ஜெர்மனி போய்ட்டு வரட்டும். வந்த பிறகு கல்யாணத்தை பத்தி பேசலாம்.” என வசந்தியும் முடித்துவிட்டார்.
அனைவரும் மிகுந்த பயத்துடன்தான் இளங்கோவை ஜெர்மனி அனுப்பி வைத்தனர். அங்கு சென்று மூன்றாம் மாதத்தில் ஒரு நாள் மகேஸ்வரியிடமிருந்து அவனுக்கு அழைப்பு வர, மிகவும் தயக்கத்துடனே தான் அந்த அழைப்பை எடுத்தான் இளங்கோ.
அதில் அவர் கூறிய செய்தியில் அதிர்ந்து, அடுத்த இரண்டாம் நாள் அவர் வீட்டின் முன் ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தான்.