தாமரை - 05
இளங்கோவும், தாமரையும் வீடு வந்து சேரவே மதியமாகியிருந்தது. அங்கிருந்தவர்களின் முகபாவங்களை பார்த்ததுமே தெரிந்தது வீட்டில் அனைவருக்கும் தெரிந்துவிட்டதென. எல்லோர் முகத்திலும் கோபம் கொளுந்து விட்டெறிந்தது.
அதிலும் ப்ரீத்தாவின் முகம் அழுது வீங்கி, பார்க்கவே பரிதாபமாக இருந்தது. இவர்களை பார்த்ததும் வேகமாக முன்னே வந்தவள் யாரும் என்ன என உணரும் முன்னே தாமரையின் கன்னத்தில் பளாரென்று அறைந்திருந்தாள்.
“பாவி.. பாவி என் வாழ்க்கையையே கெடுத்துட்டியே? நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்ட. நீ நினைச்ச மாதிரியே என் மாமாவை எங்கிட்ட இருந்து பிரிச்சிட்டியே..” என கதறியழ,
அரையை வாங்கிக் கொண்டு அதிர்ந்து போய் மிகவும் பரிதாபமாக நின்றிருந்தாள் தாமரை. அனைவரும் ப்ரீத்தாவை சமாதானம் செய்து கொண்டிருக்க, அடிவாங்கியவளின் நிலையோ மிகவும் மோசமாக போயிருந்தது.
அடித்ததையோ, ப்ரீத்தா பேசியதையோ அங்கு யாருமே ஒரு பொருட்டாக எடுக்கவில்லை. முதல் நாளே அந்த வீட்டில் அநாதையாக நிற்க வைக்கப்பட்டிருந்தாள் பெண்.
எங்கு போக, யாரிடம் பேச, போகவா வேண்டாமா? என மிகவும் கனமான ஒரு சூழ்நிலையில் நின்று கொண்டிருந்தவளிடம், மீண்டும் வேகமாக வந்தாள் ப்ரீத்தா.
அவள் வந்த வேகத்தைப் பார்த்து தாமரை பயத்தில் ஓரடி பின்னே நகர, “மாமா சொன்னது எல்லாம் உண்மையா.? நீ.. நீ போய்டுவியா? குழந்தை பிறந்ததும் போய்டுவியா.?” என முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் கேட்க,
உள்ளுக்குள் பொங்கிய வலியை வெளிக்காட்ட முடியாமல், துளிர்த்த கண்ணீரையும் வெளியில் விடாமல் இழுத்துப் பிடித்து ‘ஆம்” என்பது போல் தலையை மட்டும் ஆட்ட,
“ஏமாத்தமாட்டியே.. உன்னை நம்பலாம்தானே. உன் பாப்பாவை நான் ரொம்ப நல்லா பார்த்துக்குவேன்..” என தாமரையின் கையைப் பிடித்து கேட்க,
‘உன் பாப்பா’ அதுதான் நிஜம் என இவளுக்கு இப்போதே புரிந்து போனது. ப்ரீத்தாவின் கையைப் பிடித்த தாமரை “நிச்சயம் மாட்டேன். பாப்பா பிறந்ததும் உங்கக்கிட்ட கொடுத்துட்டு போய்டுவேன்..” என மெல்ல சிரிக்க,
அவளின் வலி நிறைந்த முகத்தில் தெரிந்த வேதனையான புன்னகை இளங்கோவின் மனதை பெரிதும் அசைத்துப் பார்த்தது.
நிற்க முடியாமல் நிற்பதை அப்போதுதான் உணர்ந்த இளங்கோ, ‘ஏற்கனவே உடம்பு முடியவில்லை. இதில் இவ்வளவு நேரம் நிற்க வைத்துவிட்டேனே’ என தன்னையே நொந்தவன், “ராணிக்கா..” என சத்தமாக அழைக்க,
அவன் அழைப்பிற்காகவே காத்திருந்தது போல, “தம்பி..” என வேகமாக வந்து நின்றார். அந்த வீட்டில் சிறு வயதிலிருந்து இளங்கோவை பார்த்துக் கொள்ளும் ராணிம்மா.
“அக்கா இனி தாமரை உங்க பொறுப்பு. அவளுக்கு உடம்பு சரியில்லை பார்த்துகோங்க..” என்றதோடு தன் அறைக்குச் சென்றுவிட,
இளங்கோவின் அறைக்குத்தான் அழைத்து செல்ல வேண்டும் என்று நினைத்த ராணியும், “வா பாப்பா, தம்பி ரூம் மேல இருக்கு..” என அழைக்க,
“அதெல்லாம் வேண்டாம்..” என தாமரை சொல்லும் முன்னே
“ஏன் மொத்தமா இங்கேயே இருந்துடலாம்னு ஐடியாவா.? இளா ரூம்ல இவளை எப்படி இருக்க வைக்க முடியும் ராணி. கீழையே எங்கையாவது ஒரு ரூமை பார்த்துக் கொடு..” என நாயகி ராணியைப் பிடித்து கத்த,
அப்போதுதான் தன் பேகை எடுத்துக்கொண்டு மீண்டும் கீழே வந்த இளங்கோ, “அத்தை என்னோட ரூம்லயே இருக்கட்டும், நான் இப்போ ஜெர்மன் கிளம்பிடுவேன், நான் வந்த பிறகு இதெல்லாம் பேசிக்கலாம்..” என்று முடித்துவிட, இளங்கோவை மீறி பேச முடியாததால், நாயகியும் அமைதியாகிவிட்டார்.
ராணியின் கையில் கொஞ்சம் பணத்தைக் கொடுத்தவன், “அக்கா அவளுக்குத் தேவையானது எல்லாம் வாங்கி கொடுத்துடுங்க. ட்ரெஸ் கூட இல்ல.. எல்லாமே வாங்கிடுங்க. பணம் பத்தலன்னா பாட்டிக்கிட்ட வாங்கிக்கோங்க..” என்றவன், அனைவரிடமும் சொல்லிவிட்டு, தாமரையை திரும்பியும் பார்க்காமல் ப்ரீத்தாவுடன் கிளம்பிவிட்டான்.
“வா பாப்பா..” என ராணி கைத்தாங்கலாக அழைத்துப் போக,
“ஹேய்.. நில்லு” என்று தாமரையை அழைத்து நிறுத்திய நாயகி, “நீ செஞ்சதுக்கு பேர் என்னனு உனக்கு தெரியுமா.?” என்றார் விசமாக.
“ம்மா என்ன பேசுறீங்க..?” என ராணி பதட்டமாக கேட்க,
“ஏன் இல்லைன்னு யாராலயும் சொல்ல முடியுமா.? ஒரு பொண்ணு எதை வேணும்னாலும் இழக்கலாம், மானத்தை இழந்துடக்கூடாது. ஆனா இவ அப்பனுக்காக அதைக்கூட இழந்துட்டு நிக்கிறா, ச்சீ என்ன பொண்ணோ, என்ன வளர்ப்போ..?” என நாயகி தன் விச வார்த்தைகளால் அவளை வதைக்க
“ம்மா..” என ராணி அடுத்து ஏதோ பேச வரும் முன் அவர் கையைப் பிடித்து தடுத்த தாமரை, கண்களால் கெஞ்சி அமைதியாக இருக்க சொல்ல,
“என்ன ராணி, இப்போ வந்தவளுக்காக என்னை எதிர்த்து பேசுற அளவுக்கு வந்துட்டியா.?” என்ற நாயகி,
“இளாவுக்கு சுயநினைவு இல்லாம இருந்தா மட்டும்தான் உன்னால அவன்கூட வாழ முடியும். அதுதான் உண்மை. அவனால என் பொண்ணைத் தவிர வேற யாரையும் நினைச்சுக்கூட பார்க்கமுடியாது. அப்படித்தான் அவனை ஏமாத்திருக்க, இந்த பொழப்புக்கு பேரு..” என முடிக்கும் முன்னே
“நாயகி..” என வசந்தி அதட்டலிட்டு, “போதும்.. உங்க பிரச்சினை முடிஞ்சது இல்ல. இனி இந்த பேச்சு வேண்டாம்..” என சத்தம் போட,
“எப்படி எப்படி போதும்னு சொல்றீங்க.. என் பொண்ணு வாழ வேண்டிய வாழ்க்கையை கெடுத்து, வயித்துல வாங்கிட்டு வந்து நிக்கிறவளை நான் ஒன்னுமே சொல்லக்கூடாதா.? என் பொண்ணோட சாபம் இவளை சும்மாவிடாது பாருங்க..” என ஆங்காரமாக கத்த,
“போதும்னு சொன்னேன்..” என வசந்தியும் கத்திவிட்டு, “ராணி மேலக் கூப்பிட்டு போ..” எனவும்,
“வா பாப்பா..” என்றவர் அவளை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார்.
“அத்தை ஏன் என் வாயை அடக்குறீங்க. உங்க பொண்ணு வாழ்க்கையை கெடுத்தவனோட பொண்ணுதான் இவ. அதை மறந்துடாதீங்க..”
“எனக்கு எல்லாம் தெரியும் நாயகி. நீ சொல்லித்தான் எனக்கு எல்லாமே தெரிஞ்சிக்கனுமா என்ன.? இனி இளா வரும் வரை அந்த பொண்ணை சீண்டாம இரு. போய்டுவேன்னு சொல்றவ, நீங்க கொடுக்குற தொந்தரவுல மொத்தமா இங்கேயே இருந்துட போறா..”
“உங்க பேரன் பேத்தி வாழ்க்கையை நாசம் பண்ணினவ அத்தை. அதை யோசிக்காம பேசாதீங்க..”
“முடிஞ்சதை பேசி பிரயோஜனமே இல்ல நாயகி. இனி அப்படி நடக்காம பார்த்துக்கலாம். சீனி அவளை உள்ள கூப்பிட்டு போ..” என மருமகளை திட்டி, மகனை அதட்ட,
“நாயகி அம்மா சொல்றதும் உண்மைதான். நாம அந்த பொண்ணை சீண்டாம இருந்தாலே, அவளுக்கு இருக்குற குற்றவுணர்ச்சில சொல்லாமலே போய்டுவா, ஆனா நாம இப்படி அவளை சீண்டிக்கிட்டே இருந்தா, தாலிகட்டிட்டு வந்துருக்கேன், அப்படியெல்லாம் போக முடியாதுன்னு இங்கேயே இருக்கவும் வாய்ப்பிருக்கு..” எனவும் நாயகியின் முகம் அகோரமாக மாறியது.
“அவ மட்டும் அப்படி சொல்லிப் பார்க்கட்டும், இந்த நாயகியோட உண்மையான முகத்தை பார்ப்பா.” என ஆங்காரமாக கத்திவிட்டு செல்ல வசந்திக்கு தாமரை நினைத்து மிகவும் வருத்தமாகிப் போனது.
தாயின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சீனிவாசன் “என்னம்மா என்ன யோசிக்கிறீங்க, நாயகி பேசுனதுல என்ன தப்பு? நம்ம பொண்ணு வாழ்க்கையை அந்த பொண்ணு வாழறா. அதைப் பார்த்துட்டு எப்படி சும்மா இருக்க முடியும்?” என்றதும்,
“சீனி நம்ம மேல தப்பு இல்லதான். ஆனா இளா அப்பா பண்ணது எவ்வளவு பெரிய தப்புன்னு உன்னால உணர முடியலையா? அந்த வீட்டில ரெண்டு உயிர் போயிருக்கு கண்ணா, நம்ம வீட்டுல அப்படி ஒரு அசம்பாவிதம் நடந்திருந்தா, நீ என்ன செஞ்சு இருப்பியோ அதைத்தான் அந்த செல்வமும் செஞ்சிருக்கார்.” என வசந்தி மகனுக்கு புரிய வைக்க,
“அம்மா எனக்கு புரியுது ஆனா அதனால எதுவும் நடக்க போகுதா, இல்ல மாறப் போகுதா? நாயகி என்ன நினைக்கிறாளோ அதுதான் நடக்கும். நடத்தி வைப்பா. உங்களுக்கே எல்லாம் தெரியும். ப்ரீகுட்டி மனசுல இளாவைப்பத்தி எண்ணம் வர வச்சதே நாயகிதான். இந்த வீடு, இந்த சாம்ராஜ்யம், இந்த சொத்து எல்லாம் அவளோட கனவு. அதை யாரோ ஒருத்தருக்கு போக விட்டுடுவாளா, சொல்லுங்க..” என மனைவியைப் பற்றி தெரிந்த சீனி பேச,
“சீனி எனக்கு ஒன்னு தோனுது. அந்த பொண்ணு தெரிஞ்சே தப்பு செஞ்சது போல இல்ல. அவளை இளா விடுவான்னும் எனக்கு தோணல. எப்போ வேணும்னாலும் என்ன வேணும்னாலும் நடக்கும். இளாவை மீறி யாரும் பேச முடியாது. அதனால வெளியே தெரியாம ஃப்ரீக்குட்டிக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிடு. நம்ம புள்ள வாழ்க்கை தான் நமக்கு முக்கியம்” என வசந்தி கூற,
“ம்மா.. என்ன சொல்றீங்க?” என தாயின் பேச்சில் சீனிவாசன் அதிர்ந்து விட்டார்.
“ஆமா கண்ணா, நாம என்னதான் பார்த்து பார்த்து வளர்த்தாலும், இளாக்கு அவனோட அத்தைதான் உயிர். இளாவோட அத்தை அந்த மகேஷ் ஒரு வார்த்தை சொன்னால் போதும் அவன் எல்லாமே செய்வான். மகேஷ் சொன்ன ஒரு வார்த்தைக்காகத்தான் அவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கான். அதே மகேஷ் சொன்ன ஒரு வார்த்தைக்காகத்தான் இத்தனை வருஷம் காதலிச்சு, நிச்சயம் பண்ண ஒரு பொண்ணை விட்டுட்டு அவங்க பொண்ணுக்கு தாலி கட்டியிருக்கான். யோசிச்சு பார்த்தா உனக்கே புரியும்.” என பேரனைப்பற்றி தான் அறிந்ததை, புரிந்ததை மகனுக்கு விளக்கினார் வசந்தி.
“அம்மா அப்படி மட்டும் நடந்தா நாயகியை சமாளிக்கவே முடியாது. அந்த பொண்ணை கொல்லவும் தயங்கமாட்டா..?” என சீனிவாசன் பயமும் பதட்டமுமாக சொல்ல,
“அப்போ உன் பொண்ணை சமாளிச்சுடலாம்ன்னு சொல்றியா சீனி..” என கூர்மையாக கேட்க,
“அது.. அதும்மா ப்ரீகுட்டி சொன்னா புரிஞ்சுக்கவா..” என தயங்கியப்படியே கூற
“நமக்கு ப்ரீகுட்டி தான் முக்கியம் சீனி, நாயகியை இளாவே சமாளிப்பான்..” என்றவர் பின் “சீனி இது நமக்குள்ளேயே இருக்கட்டும், இப்பவே நாயகிக்கு எதுவும் தெரிய வேண்டாம். நீ முதல்ல ப்ரீகுட்டிகிட்ட பேசு. பொறுமையா எடுத்து சொல்லு. நானும் பேசுறேன். அந்த பொண்ணோட பாவத்துல, நம்ம குழந்தையோட வாழ்க்கை ஆரம்பிக்க வேண்டாம்.” என பொறுமையாக எடுத்து சொல்ல,
“அம்மா உடனே முடியாது, ப்ரீத்தா முதல்ல இந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வரட்டும். அப்புறம் பொறுமையா எடுத்து சொல்லி புரிய வைக்கிறேன்.” என்றவருக்கு அடுத்து என்ன பேச என்று தெரியவில்லை.
வசந்தியும் அமைதியாகிவிட, சீனிவாசனும் அடுத்து என்ன செய்யலாம், மகளிடம் எப்படி பேசலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார்.
இங்கு அறைக்குள் வந்த தாமரையிடம் “பாப்பா கொஞ்ச நேரம் படுக்கிறியா, நான் ஹீட்டர் போட்டு, தண்ணி சூடானதும் எழுப்பறேன், அதுக்கு முன்ன உனக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்.” என்ற ராணியிடம் மெல்ல தலையசைத்து புன்னகைத்தாள் தாமரை.
“இப்போ எதையும் யோசிக்காத பாப்பா, இளா தம்பியை எனக்கு சின்ன வயசுல இருந்து தெரியும். அவர் கண்டிப்பா உன்னை விட்டுட மாட்டார்..” என தாமரையின் முகத்தை வருடியபடி ஆறுதலாக பேச,
அதைக் கேட்ட தாமரையின் முகத்தில் கசப்பான புன்னகைதான் தோன்றியது.
இளங்கோவும், தாமரையும் வீடு வந்து சேரவே மதியமாகியிருந்தது. அங்கிருந்தவர்களின் முகபாவங்களை பார்த்ததுமே தெரிந்தது வீட்டில் அனைவருக்கும் தெரிந்துவிட்டதென. எல்லோர் முகத்திலும் கோபம் கொளுந்து விட்டெறிந்தது.
அதிலும் ப்ரீத்தாவின் முகம் அழுது வீங்கி, பார்க்கவே பரிதாபமாக இருந்தது. இவர்களை பார்த்ததும் வேகமாக முன்னே வந்தவள் யாரும் என்ன என உணரும் முன்னே தாமரையின் கன்னத்தில் பளாரென்று அறைந்திருந்தாள்.
“பாவி.. பாவி என் வாழ்க்கையையே கெடுத்துட்டியே? நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்ட. நீ நினைச்ச மாதிரியே என் மாமாவை எங்கிட்ட இருந்து பிரிச்சிட்டியே..” என கதறியழ,
அரையை வாங்கிக் கொண்டு அதிர்ந்து போய் மிகவும் பரிதாபமாக நின்றிருந்தாள் தாமரை. அனைவரும் ப்ரீத்தாவை சமாதானம் செய்து கொண்டிருக்க, அடிவாங்கியவளின் நிலையோ மிகவும் மோசமாக போயிருந்தது.
அடித்ததையோ, ப்ரீத்தா பேசியதையோ அங்கு யாருமே ஒரு பொருட்டாக எடுக்கவில்லை. முதல் நாளே அந்த வீட்டில் அநாதையாக நிற்க வைக்கப்பட்டிருந்தாள் பெண்.
எங்கு போக, யாரிடம் பேச, போகவா வேண்டாமா? என மிகவும் கனமான ஒரு சூழ்நிலையில் நின்று கொண்டிருந்தவளிடம், மீண்டும் வேகமாக வந்தாள் ப்ரீத்தா.
அவள் வந்த வேகத்தைப் பார்த்து தாமரை பயத்தில் ஓரடி பின்னே நகர, “மாமா சொன்னது எல்லாம் உண்மையா.? நீ.. நீ போய்டுவியா? குழந்தை பிறந்ததும் போய்டுவியா.?” என முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் கேட்க,
உள்ளுக்குள் பொங்கிய வலியை வெளிக்காட்ட முடியாமல், துளிர்த்த கண்ணீரையும் வெளியில் விடாமல் இழுத்துப் பிடித்து ‘ஆம்” என்பது போல் தலையை மட்டும் ஆட்ட,
“ஏமாத்தமாட்டியே.. உன்னை நம்பலாம்தானே. உன் பாப்பாவை நான் ரொம்ப நல்லா பார்த்துக்குவேன்..” என தாமரையின் கையைப் பிடித்து கேட்க,
‘உன் பாப்பா’ அதுதான் நிஜம் என இவளுக்கு இப்போதே புரிந்து போனது. ப்ரீத்தாவின் கையைப் பிடித்த தாமரை “நிச்சயம் மாட்டேன். பாப்பா பிறந்ததும் உங்கக்கிட்ட கொடுத்துட்டு போய்டுவேன்..” என மெல்ல சிரிக்க,
அவளின் வலி நிறைந்த முகத்தில் தெரிந்த வேதனையான புன்னகை இளங்கோவின் மனதை பெரிதும் அசைத்துப் பார்த்தது.
நிற்க முடியாமல் நிற்பதை அப்போதுதான் உணர்ந்த இளங்கோ, ‘ஏற்கனவே உடம்பு முடியவில்லை. இதில் இவ்வளவு நேரம் நிற்க வைத்துவிட்டேனே’ என தன்னையே நொந்தவன், “ராணிக்கா..” என சத்தமாக அழைக்க,
அவன் அழைப்பிற்காகவே காத்திருந்தது போல, “தம்பி..” என வேகமாக வந்து நின்றார். அந்த வீட்டில் சிறு வயதிலிருந்து இளங்கோவை பார்த்துக் கொள்ளும் ராணிம்மா.
“அக்கா இனி தாமரை உங்க பொறுப்பு. அவளுக்கு உடம்பு சரியில்லை பார்த்துகோங்க..” என்றதோடு தன் அறைக்குச் சென்றுவிட,
இளங்கோவின் அறைக்குத்தான் அழைத்து செல்ல வேண்டும் என்று நினைத்த ராணியும், “வா பாப்பா, தம்பி ரூம் மேல இருக்கு..” என அழைக்க,
“அதெல்லாம் வேண்டாம்..” என தாமரை சொல்லும் முன்னே
“ஏன் மொத்தமா இங்கேயே இருந்துடலாம்னு ஐடியாவா.? இளா ரூம்ல இவளை எப்படி இருக்க வைக்க முடியும் ராணி. கீழையே எங்கையாவது ஒரு ரூமை பார்த்துக் கொடு..” என நாயகி ராணியைப் பிடித்து கத்த,
அப்போதுதான் தன் பேகை எடுத்துக்கொண்டு மீண்டும் கீழே வந்த இளங்கோ, “அத்தை என்னோட ரூம்லயே இருக்கட்டும், நான் இப்போ ஜெர்மன் கிளம்பிடுவேன், நான் வந்த பிறகு இதெல்லாம் பேசிக்கலாம்..” என்று முடித்துவிட, இளங்கோவை மீறி பேச முடியாததால், நாயகியும் அமைதியாகிவிட்டார்.
ராணியின் கையில் கொஞ்சம் பணத்தைக் கொடுத்தவன், “அக்கா அவளுக்குத் தேவையானது எல்லாம் வாங்கி கொடுத்துடுங்க. ட்ரெஸ் கூட இல்ல.. எல்லாமே வாங்கிடுங்க. பணம் பத்தலன்னா பாட்டிக்கிட்ட வாங்கிக்கோங்க..” என்றவன், அனைவரிடமும் சொல்லிவிட்டு, தாமரையை திரும்பியும் பார்க்காமல் ப்ரீத்தாவுடன் கிளம்பிவிட்டான்.
“வா பாப்பா..” என ராணி கைத்தாங்கலாக அழைத்துப் போக,
“ஹேய்.. நில்லு” என்று தாமரையை அழைத்து நிறுத்திய நாயகி, “நீ செஞ்சதுக்கு பேர் என்னனு உனக்கு தெரியுமா.?” என்றார் விசமாக.
“ம்மா என்ன பேசுறீங்க..?” என ராணி பதட்டமாக கேட்க,
“ஏன் இல்லைன்னு யாராலயும் சொல்ல முடியுமா.? ஒரு பொண்ணு எதை வேணும்னாலும் இழக்கலாம், மானத்தை இழந்துடக்கூடாது. ஆனா இவ அப்பனுக்காக அதைக்கூட இழந்துட்டு நிக்கிறா, ச்சீ என்ன பொண்ணோ, என்ன வளர்ப்போ..?” என நாயகி தன் விச வார்த்தைகளால் அவளை வதைக்க
“ம்மா..” என ராணி அடுத்து ஏதோ பேச வரும் முன் அவர் கையைப் பிடித்து தடுத்த தாமரை, கண்களால் கெஞ்சி அமைதியாக இருக்க சொல்ல,
“என்ன ராணி, இப்போ வந்தவளுக்காக என்னை எதிர்த்து பேசுற அளவுக்கு வந்துட்டியா.?” என்ற நாயகி,
“இளாவுக்கு சுயநினைவு இல்லாம இருந்தா மட்டும்தான் உன்னால அவன்கூட வாழ முடியும். அதுதான் உண்மை. அவனால என் பொண்ணைத் தவிர வேற யாரையும் நினைச்சுக்கூட பார்க்கமுடியாது. அப்படித்தான் அவனை ஏமாத்திருக்க, இந்த பொழப்புக்கு பேரு..” என முடிக்கும் முன்னே
“நாயகி..” என வசந்தி அதட்டலிட்டு, “போதும்.. உங்க பிரச்சினை முடிஞ்சது இல்ல. இனி இந்த பேச்சு வேண்டாம்..” என சத்தம் போட,
“எப்படி எப்படி போதும்னு சொல்றீங்க.. என் பொண்ணு வாழ வேண்டிய வாழ்க்கையை கெடுத்து, வயித்துல வாங்கிட்டு வந்து நிக்கிறவளை நான் ஒன்னுமே சொல்லக்கூடாதா.? என் பொண்ணோட சாபம் இவளை சும்மாவிடாது பாருங்க..” என ஆங்காரமாக கத்த,
“போதும்னு சொன்னேன்..” என வசந்தியும் கத்திவிட்டு, “ராணி மேலக் கூப்பிட்டு போ..” எனவும்,
“வா பாப்பா..” என்றவர் அவளை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றார்.
“அத்தை ஏன் என் வாயை அடக்குறீங்க. உங்க பொண்ணு வாழ்க்கையை கெடுத்தவனோட பொண்ணுதான் இவ. அதை மறந்துடாதீங்க..”
“எனக்கு எல்லாம் தெரியும் நாயகி. நீ சொல்லித்தான் எனக்கு எல்லாமே தெரிஞ்சிக்கனுமா என்ன.? இனி இளா வரும் வரை அந்த பொண்ணை சீண்டாம இரு. போய்டுவேன்னு சொல்றவ, நீங்க கொடுக்குற தொந்தரவுல மொத்தமா இங்கேயே இருந்துட போறா..”
“உங்க பேரன் பேத்தி வாழ்க்கையை நாசம் பண்ணினவ அத்தை. அதை யோசிக்காம பேசாதீங்க..”
“முடிஞ்சதை பேசி பிரயோஜனமே இல்ல நாயகி. இனி அப்படி நடக்காம பார்த்துக்கலாம். சீனி அவளை உள்ள கூப்பிட்டு போ..” என மருமகளை திட்டி, மகனை அதட்ட,
“நாயகி அம்மா சொல்றதும் உண்மைதான். நாம அந்த பொண்ணை சீண்டாம இருந்தாலே, அவளுக்கு இருக்குற குற்றவுணர்ச்சில சொல்லாமலே போய்டுவா, ஆனா நாம இப்படி அவளை சீண்டிக்கிட்டே இருந்தா, தாலிகட்டிட்டு வந்துருக்கேன், அப்படியெல்லாம் போக முடியாதுன்னு இங்கேயே இருக்கவும் வாய்ப்பிருக்கு..” எனவும் நாயகியின் முகம் அகோரமாக மாறியது.
“அவ மட்டும் அப்படி சொல்லிப் பார்க்கட்டும், இந்த நாயகியோட உண்மையான முகத்தை பார்ப்பா.” என ஆங்காரமாக கத்திவிட்டு செல்ல வசந்திக்கு தாமரை நினைத்து மிகவும் வருத்தமாகிப் போனது.
தாயின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சீனிவாசன் “என்னம்மா என்ன யோசிக்கிறீங்க, நாயகி பேசுனதுல என்ன தப்பு? நம்ம பொண்ணு வாழ்க்கையை அந்த பொண்ணு வாழறா. அதைப் பார்த்துட்டு எப்படி சும்மா இருக்க முடியும்?” என்றதும்,
“சீனி நம்ம மேல தப்பு இல்லதான். ஆனா இளா அப்பா பண்ணது எவ்வளவு பெரிய தப்புன்னு உன்னால உணர முடியலையா? அந்த வீட்டில ரெண்டு உயிர் போயிருக்கு கண்ணா, நம்ம வீட்டுல அப்படி ஒரு அசம்பாவிதம் நடந்திருந்தா, நீ என்ன செஞ்சு இருப்பியோ அதைத்தான் அந்த செல்வமும் செஞ்சிருக்கார்.” என வசந்தி மகனுக்கு புரிய வைக்க,
“அம்மா எனக்கு புரியுது ஆனா அதனால எதுவும் நடக்க போகுதா, இல்ல மாறப் போகுதா? நாயகி என்ன நினைக்கிறாளோ அதுதான் நடக்கும். நடத்தி வைப்பா. உங்களுக்கே எல்லாம் தெரியும். ப்ரீகுட்டி மனசுல இளாவைப்பத்தி எண்ணம் வர வச்சதே நாயகிதான். இந்த வீடு, இந்த சாம்ராஜ்யம், இந்த சொத்து எல்லாம் அவளோட கனவு. அதை யாரோ ஒருத்தருக்கு போக விட்டுடுவாளா, சொல்லுங்க..” என மனைவியைப் பற்றி தெரிந்த சீனி பேச,
“சீனி எனக்கு ஒன்னு தோனுது. அந்த பொண்ணு தெரிஞ்சே தப்பு செஞ்சது போல இல்ல. அவளை இளா விடுவான்னும் எனக்கு தோணல. எப்போ வேணும்னாலும் என்ன வேணும்னாலும் நடக்கும். இளாவை மீறி யாரும் பேச முடியாது. அதனால வெளியே தெரியாம ஃப்ரீக்குட்டிக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிடு. நம்ம புள்ள வாழ்க்கை தான் நமக்கு முக்கியம்” என வசந்தி கூற,
“ம்மா.. என்ன சொல்றீங்க?” என தாயின் பேச்சில் சீனிவாசன் அதிர்ந்து விட்டார்.
“ஆமா கண்ணா, நாம என்னதான் பார்த்து பார்த்து வளர்த்தாலும், இளாக்கு அவனோட அத்தைதான் உயிர். இளாவோட அத்தை அந்த மகேஷ் ஒரு வார்த்தை சொன்னால் போதும் அவன் எல்லாமே செய்வான். மகேஷ் சொன்ன ஒரு வார்த்தைக்காகத்தான் அவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கான். அதே மகேஷ் சொன்ன ஒரு வார்த்தைக்காகத்தான் இத்தனை வருஷம் காதலிச்சு, நிச்சயம் பண்ண ஒரு பொண்ணை விட்டுட்டு அவங்க பொண்ணுக்கு தாலி கட்டியிருக்கான். யோசிச்சு பார்த்தா உனக்கே புரியும்.” என பேரனைப்பற்றி தான் அறிந்ததை, புரிந்ததை மகனுக்கு விளக்கினார் வசந்தி.
“அம்மா அப்படி மட்டும் நடந்தா நாயகியை சமாளிக்கவே முடியாது. அந்த பொண்ணை கொல்லவும் தயங்கமாட்டா..?” என சீனிவாசன் பயமும் பதட்டமுமாக சொல்ல,
“அப்போ உன் பொண்ணை சமாளிச்சுடலாம்ன்னு சொல்றியா சீனி..” என கூர்மையாக கேட்க,
“அது.. அதும்மா ப்ரீகுட்டி சொன்னா புரிஞ்சுக்கவா..” என தயங்கியப்படியே கூற
“நமக்கு ப்ரீகுட்டி தான் முக்கியம் சீனி, நாயகியை இளாவே சமாளிப்பான்..” என்றவர் பின் “சீனி இது நமக்குள்ளேயே இருக்கட்டும், இப்பவே நாயகிக்கு எதுவும் தெரிய வேண்டாம். நீ முதல்ல ப்ரீகுட்டிகிட்ட பேசு. பொறுமையா எடுத்து சொல்லு. நானும் பேசுறேன். அந்த பொண்ணோட பாவத்துல, நம்ம குழந்தையோட வாழ்க்கை ஆரம்பிக்க வேண்டாம்.” என பொறுமையாக எடுத்து சொல்ல,
“அம்மா உடனே முடியாது, ப்ரீத்தா முதல்ல இந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வரட்டும். அப்புறம் பொறுமையா எடுத்து சொல்லி புரிய வைக்கிறேன்.” என்றவருக்கு அடுத்து என்ன பேச என்று தெரியவில்லை.
வசந்தியும் அமைதியாகிவிட, சீனிவாசனும் அடுத்து என்ன செய்யலாம், மகளிடம் எப்படி பேசலாம் என்று யோசிக்க ஆரம்பித்தார்.
இங்கு அறைக்குள் வந்த தாமரையிடம் “பாப்பா கொஞ்ச நேரம் படுக்கிறியா, நான் ஹீட்டர் போட்டு, தண்ணி சூடானதும் எழுப்பறேன், அதுக்கு முன்ன உனக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்.” என்ற ராணியிடம் மெல்ல தலையசைத்து புன்னகைத்தாள் தாமரை.
“இப்போ எதையும் யோசிக்காத பாப்பா, இளா தம்பியை எனக்கு சின்ன வயசுல இருந்து தெரியும். அவர் கண்டிப்பா உன்னை விட்டுட மாட்டார்..” என தாமரையின் முகத்தை வருடியபடி ஆறுதலாக பேச,
அதைக் கேட்ட தாமரையின் முகத்தில் கசப்பான புன்னகைதான் தோன்றியது.