தாமரை - 11
இந்த வாழ்க்கை நமக்கு என்னென்ன அற்புதங்களை ஒழித்து வைத்திருக்கிறதோ, அதன் போக்கில் அதை ஏற்று வாழ்ந்துதான் ஆக வேண்டும்.
நாட்கள் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் மிகவும் சாதாரணமாக சென்றது தாமரைக்கு.
காலையில் தாமரைய பிக்கப் செய்து, எத்தனை வேலை இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு மாலையில் ட்ராப் செய்வது என வாடிக்கையாக்கிக் கொண்டான் ஷ்யாம்.
இடையில் பிரீத்தாவையும் சில நாட்கள் பிக்கப் செய்து கொள்வான்.
அன்றைய நாட்களில் அவளிடம் பேசி அவள் மனதை தெளிவுபடுத்த முயல்வான்.
ஆனால் கட்டாயப்படுத்தி எதையும் ப்ரீத்தாவிடம் திணிக்க மாட்டான். ‘நீயே யோசி’ என அவளிடமே திருப்பி விடுவான்.
அப்படி ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, தாமரை வழக்கம் போல தூங்கி இருந்தாள்.
“ஏன் இவங்க தூங்கிட்டே இருக்காங்க.?” என பேச்சை பிரீத்தாவே ஆரம்பித்தாள்.
உறங்கிக் கொண்டிருந்த தாமரையை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் “மார்னிங் சிக்னஸ்” என்றான் தலையை ஆட்டி சிரித்தபடி.
“ஓ.. அப்போ ஏன் ஒர்க் போகணும். வீட்டிலேயே ரெஸ்ட் எடுக்கலாம் இல்ல.” என்றாள் வருத்தமாக.
அதில் சட்டென கோபம் வந்துவிட்டது ஷ்யாமிற்கு. “எதுக்கு உன் அம்மா வாயில விழறதுக்கா?” என்றான் கோபமாக.
“இல்ல.. அப்படி இல்ல.. அவங்களுக்கு கஷ்டமா இருக்குமில்ல..?” என பயந்து போனாள் ப்ரீத்தா.
“என்ன அப்படி இல்ல.. அது உண்மைதானே! எப்ப பார்த்தாலும் அவளை கரிச்சி கொட்டிக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்.” என்றான் கோபம் அடங்காமலே.
“அது அவங்களுக்கு கோபம்..” என்ற ப்ரீத்தாவிற்கு ஷ்யாமிடம் பேசவே பயமாக இருந்தது.
“என்ன கோபம்? இதே கோபம் ஏன் உங்க மாமா மேல வர்றதில்லை. தப்பு நடந்துடுச்சு அதை சரின்னு அவ சொல்லவே இல்லையே. அந்த தப்புக்கு தண்டனையையும் ஏத்துக்கிட்டா. இன்னும் என்ன எதிர்பார்க்கிறாங்க உங்க அம்மா..” என்றான் எரிச்சலாக.
“எனக்கு தெரியல. நானும் சொல்லிட்டுதான் இருக்கேன். கேட்கறதே இல்ல.” என்றவளுக்கு குரல் உள்ளே போய்விட்டது.
“உங்க மாமா மேல காட்ட முடியாத கோபத்தை எல்லாம் சேர்த்து வச்சு இவ மேல காட்டுறாங்கன்னு நினைக்கிறேன்.” என்று கடுப்பாக சொன்னவனுக்கு பதில் சொல்ல முடியவில்லை பிரீத்தாவால். அவள் அப்படியே அமைதியாகிவிட,
பதிலை எதிர்பார்த்து அமர்ந்திருந்த ஷ்யாமிற்கு, அவள் அமைதியானது ஒரு மாதிரியாகிவிட்டது.
“சாரி கொஞ்சம் டென்சன் ஆகிட்டேன்.” என ப்ரீத்தாவை சமாதானம் செய்ய,
“இட்ஸ் ஓகே.. நீங்க உண்மையைத்தான் சொன்னீங்க.” என மெல்ல புன்னகைத்தாள் ப்ரீத்தா.
அடுத்து இருவரிடமும் பேச்சு இல்லை. என்ன பேச என்றும் தெரியவில்லை. கல்லூரியும் வந்துவிட வழக்கம்போல ஒரு நன்றியுடன் இறங்க போனவளின் கையைப் பிடித்து தடுத்தான் ஷியாம்.
“சாரிம்மா..” என்றதும் ப்ரீத்தாவின் விழிகளில் இருந்து கடகடவென நீர் இறங்கியது.
அதைப் பார்த்து பதறியவன் “ஹேய் சாரிம்மா சாரி.. உன்னை ஹர்ட் பண்ணனும்னு நினைச்சு பேசல, அம்மு பேச்சு வந்தாலே நான் டென்ஷன் ஆயிடுறேன் வெரி சாரிமா..” என சமாதானம் செய்ய, ப்ரீத்தாவும் கட்டுக்குள் வந்திருந்தாள்.
தன் முகத்தை அழுந்த துடைத்து அவனைப் பார்க்க, “ஸாரிம்மா நீ இவ்ளோ வருத்தப்படுவன்னு நான் யோசிக்கல. இனிமே நம்ம ரெண்டு பேருக்கும் இடைல அந்த பேச்சே வேண்டாம் சரியா. இப்போ நாம பேசினதையே நினைச்சுட்டு இருக்காம, கிளாஸ்ல ஃப்ரெண்ட்ஸ் கூட ஜாலியா இரு. ஓகே.” என சிரிக்க,
பிரீத்தாவிற்கும் அப்போதுதான் சற்று நிம்மதியானது. “நானும் சாரி.! அந்த பேச்சை ஆரம்பிச்சிருக்கக்கூடாது. இனி இப்படி நடக்காது.” என்றாள் பதிலுக்கு.
“ஓக்கே லீவ் இட்.. பை டேக் கேர்..” என காரைத் திருப்பினான்.
காரை ஓட்டிக் கொண்டிருந்த ஷ்யாமிற்குள் சிறு போராட்டம்.
சிறு பெண்ணிடம் தன் கோபத்தை காட்டியிருக்கக் கூடாதோ என்று அவன் மனம் அவனிடமே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது.
இளங்கோவின் குடும்பத்தை பற்றி தாமரை பேசும்போது, ப்ரீத்தாவை பற்றியும் பேசுவாள். அப்போதெல்லாம் பெரிதாக எந்த எண்ணமும் அவனிடம் இல்லை, சொல்லப் போனால் அந்த குடும்பத்தினர் மீது அவனுக்கு நல்ல எண்ணமே இல்லைதான்.
அதனால் தாமரைக்கு இளங்கோவை பிடிக்கும் என்று தெரிந்ததிலிருந்து அவன் ஒத்துக் கொள்ளவே இல்லை. தாமரையை திட்டிக் கொண்டேதான் இருப்பான். எங்கே தாமரைக்கு இளங்கோ கிடைக்கமாட்டான் என்று தெரிந்தால் விரக்தியில் எதுவும் செய்து கொள்வாளோ என்று கூட பயந்திருக்கிறான்.
இளங்கோவின் மீதான தாமரையின் காதல் அளவை கண்டு!
அப்படி ஒரு காதல் இளங்கோ மீது தாமரைக்கு!
ஆனால் நடந்ததே வேறல்லவா.!
இத்தனைக்கும் இளங்கோவிடம் பேசியது கூட இல்லை தாமரை.
அவன் படித்த கல்லூரியில் தான் சேர்ந்தாள். ஒரு வருடம் அவன் முன்புதான் இருந்தாள் ஆனால் ‘நான் தான் உன் அத்தை மகள்’ என்று எங்குமே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை தாமரை.
அடுத்த ஐந்து ஆண்டுகளும் இதே சென்னையில் தான் இருந்தாள். அப்போதும் கூட அவனிடம் சென்று தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை அவள்.
‘ஏன் இந்த பைத்தியக்காரத்தனம்’ என்ற ஷ்யாமின் கேள்விக்கு, ‘தன் தந்தைக்குப் பிடிக்காது அவருக்கு பிடிக்காததை நான் எப்போதும் செய்ய மாட்டேன்’ என்று உறுதியாக இருந்தவள் எப்படி இப்படி ஒரு செயலை செய்தாள் என்று இப்போது வரை ஷியாமிற்க்கு புரியாத புதிர்.
பலமுறை கேட்டு சலித்து விட்டான். பதில் தான் கிடைக்கவில்லை. தாமரையின் மீதான இந்த செயலுக்கு காரணமானவர்களை ஒன்றும் இல்லாதவர்களாக்கி அழித்துவிடும் அளவிற்கு கோபம். அதே கோபத்துடன் தான் அன்று வீட்டுக்கும் வந்தான்.
ஆனால் ப்ரீத்தாவை பார்த்த பிறகு அந்த கோபத்தை காட்ட அவனால் முடியவில்லை.
சிறு பெண்ணை தங்கள் திட்டத்திற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களோ என்று பார்த்ததுமே தோன்றி விட்டது.
அதனாலே வார்த்தைகளை விடாமல் அவளிடம் பேச்சுக் கொடுத்தான் ஷ்யாம்.
அவன் நினைத்தது சரிதான் என்பது போலத்தான் இருந்தது பிரீத்தாவின் குழப்பமான பேச்சுகள்.
“என்ன மேன் யோசனை.?” என்ற தாமரையின் பேச்சில்தான் ஷியாம் நினைவுக்கு வந்தான்.
“நத்திங் அம்மு, உனக்கு இப்ப எப்படி இருக்கு. ஆபீஸ் போக முடியுமா இல்ல அப்படியே வீட்டுக்கு போயிடலாமா.?” என்றான் அக்கறையாக.
“ஷ்யாம் நீ பயப்படுற மாதிரி ஒண்ணுமே இல்லடா, மார்னிங் மட்டும்தான் கஷ்டமே. அதுக்குப் பிறகு ஒரு கஷ்டமும் இல்லை. நீ என்னை நினைச்சு டென்ஷன் ஆகாதே.” என்றாள் தாமரை.
“ம்ச் விடு.. ராணிம்மா புட் எல்லாம் கரெக்டா கொடுத்து இருக்காங்க இல்ல, கரெக்ட் டைமுக்கு சாப்பிடுடனும். நான் கால் பண்ண பிறகுதான் சாப்பிடுற ஞாபகமே வந்ததுனு எல்லாம் சொல்லக்கூடாது. வேற எந்த கஷ்டமா இருந்தாலும் என்கிட்ட உடனே சொல்லிடனும்.” என வழக்கம் போல அறிவுரைகளை வழங்கி, அவளது ஆபீஸ் முன் இறக்கி விட்டு சென்றான்.
வகுப்பறையில் அமர்ந்திருந்த பிரீத்தாவின் அமைதியை கண்டு அவளிடம் பேச்சுக் கொடுத்தாள் அனிதா.
பிரீத்தாவும் எதையும் மறைக்காமல் அன்று காலையில் தனக்கும் ஷ்யாமிற்கும் நடந்த உரையாடலை அவளிடம் கூறினாள்.
“ஐ திங்க் யூ லவ் ஹிம்..” என பட்டென பிரீத்தாவின் மனதில் உள்ளதை அனிதா கூறி விட, பிரீத்தாவிற்கு உடல் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது.
“என்ன? என்ன சொல்ற? நான் அப்படியெல்லாம் இல்ல, எனக்கு அந்த மாதிரி எண்ணமெல்லாம் தோனவே இல்லை. அவர் ஜஸ்ட் என்னோட பிரண்ட். நான் இளங்கோ மாமாவை லவ் பண்றேன். அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன். இது சின்ன வயசுலயே எடுத்த முடிவு. அதை எப்படி என்னால மீற முடியும்.”
“அந்த தாமரை செய்த தப்பால, நான் எந்த தப்பான முடிவும் எடுத்துடக்கூடாதுன்னு என்கூட பேசுறார்.”
“மத்தபடி அவருக்கு என் மேல அந்த மாதிரியான இன்ட்ரஸ்ட் எல்லாம் கிடையாது, அவர் என்னை ட்ராப் பண்றதுனால, எங்க ரெண்டு பேரையும் தப்பா நினைச்சுக்காத, அவரோட ஹாஸ்பிடல் இந்த பக்கம்தான். தாமரையை அழைச்சிட்டு போகும் போது என்னையும் சேர்த்து பிக்கப் பண்ணுவார்..” என படபடவென தன் மனதில் இருந்தவற்றையெல்லாம் ப்ரீத்தா கூற, அதற்கு பதில் ஏதும் கூறவில்லை அனிதா.
அனிதாவின் அமைதியே அவள் தன்னை நம்பவில்லை என்று கூற “என்னடி” என்றாள் ஆற்றாமையாக.
“பிரீத்தா உனக்கு இதை நான் எப்படி சொல்லி புரிய வைக்கணும் தெரியல, ஆனா இப்போ உன் மனசுல இருக்கிறது அந்த ஷியாம்தான். உன்னுடைய இளங்கோ மாமா கிடையாது.” என்றாள் திட்டவட்டமாக.
“அது.. அது எப்படி? எப்படி சரியா வரும்.? அப்போ நான் மாமாவை லவ் பண்றேன்னு நெனச்சிட்டு இருந்தது எல்லாம் பொய்யா.? இதை எப்படி வெளிய சொல்ல முடியும்.? என்னை எல்லாரும் என்ன நினைப்பாங்க. நான்… நான் தப்பானா பொண்ணா.?” அது வகுப்பறை, அனைவரும் தன்னையே கவனிப்பார்கள் என்று கூட உணராமல் முகத்தை மூடி அழ ஆரம்பித்தாள் ப்ரீத்தா.
“ப்ரீத்தா.. ஏய் என்னடி பண்ற? கிளாஸ்ல எல்லாரும் உன்னையே பார்க்கிறாங்க. சொல்றத கேளு. முகத்தை தொட.” என பிரீத்தாவின் முதுகை தடவி ஆறுதல் படுத்த, அதற்குள் மற்ற மாணவர்களும் அவர்களை சூழ்ந்துவிட, வகுப்பு ஆசிரியரும் வந்து விட்டார்.
“வாட் ஹேப்பன்ட் அனிதா?” என்றவரிடம்
என்ன பதில் சொல்வது என தெரியாமல், “ஸ்டொமக் பெயின் தான் மேம். கண்ட்ரோல் பண்ண முடியல, பெயின் இன்கிரிஸ் ஆயிட்டே இருக்கு.” என வாய்க்கு வந்ததை சொல்ல,
“ஏன் சொல்லாம இருக்கீங்க? ரெஸ்ட் ரூம் கூட்டிட்டு போ. பேரன்ட்ஸ்க்கு இன்பார்ம் பண்ணிட்டு, வீட்டுக்கு அனுப்பி விடு.” என்றவர் அனிதாவோடு அவளை அனுப்பி வைத்தார்.
ரெஸ்ட் ரூம் சென்று முகத்தை கழுவ வைத்து, கேண்டீன் அழைத்து வந்தவள், “என்னடி இவ்ளோ எமோஷன் ஆகிட்ட?” என்று பொறுமையாக கேட்க,
“எனக்கே தெரியலடி, நான் ஏன் இப்படி இருக்கேன். எனக்கு என்ன தான் வேணும். எனக்கே ஒன்னும் புரியல. ஆனா நீ சொன்ன மாதிரி ஷ்யாமை நான் லவ் பண்ணினாலும், அவரை கல்யாணம் பண்ணிக்க முடியாது.” என்றாள் கரகரப்பாக.
“என்ன சொல்ற? நீ சொல்றத வச்சு பார்க்கும்போது, அவருக்கும் உன்னை பிடிச்சிருக்கும் போலத்தான் நினைச்சேன்.” என்றாள் அனிதாவும்.
“இல்ல.. அப்படியெல்லாம் கிடையாது. அவருக்கு தாமரையை தான் பிடிக்கும். அவர்தான் தாமரையே கல்யாணம் செய்துக்க போறவர், அவங்களுக்கு ஆல்ரெடி எங்கேஜ்மென்ட் முடிஞ்சிடுச்சு.” என்ற பிரீத்தாவிற்கு மீண்டும் அழுகை வந்தது.
“ஓ” என்ற அனிதாவிற்குமே அடுத்து என்ன சொல்வது என்று தெரியவில்லை.
பிரீத்தாவை எப்படி சமாதானம் செய்வது என்றும் தெரியவில்லை.
இந்த வாழ்க்கை நமக்கு என்னென்ன அற்புதங்களை ஒழித்து வைத்திருக்கிறதோ, அதன் போக்கில் அதை ஏற்று வாழ்ந்துதான் ஆக வேண்டும்.
நாட்கள் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் மிகவும் சாதாரணமாக சென்றது தாமரைக்கு.
காலையில் தாமரைய பிக்கப் செய்து, எத்தனை வேலை இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு மாலையில் ட்ராப் செய்வது என வாடிக்கையாக்கிக் கொண்டான் ஷ்யாம்.
இடையில் பிரீத்தாவையும் சில நாட்கள் பிக்கப் செய்து கொள்வான்.
அன்றைய நாட்களில் அவளிடம் பேசி அவள் மனதை தெளிவுபடுத்த முயல்வான்.
ஆனால் கட்டாயப்படுத்தி எதையும் ப்ரீத்தாவிடம் திணிக்க மாட்டான். ‘நீயே யோசி’ என அவளிடமே திருப்பி விடுவான்.
அப்படி ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, தாமரை வழக்கம் போல தூங்கி இருந்தாள்.
“ஏன் இவங்க தூங்கிட்டே இருக்காங்க.?” என பேச்சை பிரீத்தாவே ஆரம்பித்தாள்.
உறங்கிக் கொண்டிருந்த தாமரையை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் “மார்னிங் சிக்னஸ்” என்றான் தலையை ஆட்டி சிரித்தபடி.
“ஓ.. அப்போ ஏன் ஒர்க் போகணும். வீட்டிலேயே ரெஸ்ட் எடுக்கலாம் இல்ல.” என்றாள் வருத்தமாக.
அதில் சட்டென கோபம் வந்துவிட்டது ஷ்யாமிற்கு. “எதுக்கு உன் அம்மா வாயில விழறதுக்கா?” என்றான் கோபமாக.
“இல்ல.. அப்படி இல்ல.. அவங்களுக்கு கஷ்டமா இருக்குமில்ல..?” என பயந்து போனாள் ப்ரீத்தா.
“என்ன அப்படி இல்ல.. அது உண்மைதானே! எப்ப பார்த்தாலும் அவளை கரிச்சி கொட்டிக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்.” என்றான் கோபம் அடங்காமலே.
“அது அவங்களுக்கு கோபம்..” என்ற ப்ரீத்தாவிற்கு ஷ்யாமிடம் பேசவே பயமாக இருந்தது.
“என்ன கோபம்? இதே கோபம் ஏன் உங்க மாமா மேல வர்றதில்லை. தப்பு நடந்துடுச்சு அதை சரின்னு அவ சொல்லவே இல்லையே. அந்த தப்புக்கு தண்டனையையும் ஏத்துக்கிட்டா. இன்னும் என்ன எதிர்பார்க்கிறாங்க உங்க அம்மா..” என்றான் எரிச்சலாக.
“எனக்கு தெரியல. நானும் சொல்லிட்டுதான் இருக்கேன். கேட்கறதே இல்ல.” என்றவளுக்கு குரல் உள்ளே போய்விட்டது.
“உங்க மாமா மேல காட்ட முடியாத கோபத்தை எல்லாம் சேர்த்து வச்சு இவ மேல காட்டுறாங்கன்னு நினைக்கிறேன்.” என்று கடுப்பாக சொன்னவனுக்கு பதில் சொல்ல முடியவில்லை பிரீத்தாவால். அவள் அப்படியே அமைதியாகிவிட,
பதிலை எதிர்பார்த்து அமர்ந்திருந்த ஷ்யாமிற்கு, அவள் அமைதியானது ஒரு மாதிரியாகிவிட்டது.
“சாரி கொஞ்சம் டென்சன் ஆகிட்டேன்.” என ப்ரீத்தாவை சமாதானம் செய்ய,
“இட்ஸ் ஓகே.. நீங்க உண்மையைத்தான் சொன்னீங்க.” என மெல்ல புன்னகைத்தாள் ப்ரீத்தா.
அடுத்து இருவரிடமும் பேச்சு இல்லை. என்ன பேச என்றும் தெரியவில்லை. கல்லூரியும் வந்துவிட வழக்கம்போல ஒரு நன்றியுடன் இறங்க போனவளின் கையைப் பிடித்து தடுத்தான் ஷியாம்.
“சாரிம்மா..” என்றதும் ப்ரீத்தாவின் விழிகளில் இருந்து கடகடவென நீர் இறங்கியது.
அதைப் பார்த்து பதறியவன் “ஹேய் சாரிம்மா சாரி.. உன்னை ஹர்ட் பண்ணனும்னு நினைச்சு பேசல, அம்மு பேச்சு வந்தாலே நான் டென்ஷன் ஆயிடுறேன் வெரி சாரிமா..” என சமாதானம் செய்ய, ப்ரீத்தாவும் கட்டுக்குள் வந்திருந்தாள்.
தன் முகத்தை அழுந்த துடைத்து அவனைப் பார்க்க, “ஸாரிம்மா நீ இவ்ளோ வருத்தப்படுவன்னு நான் யோசிக்கல. இனிமே நம்ம ரெண்டு பேருக்கும் இடைல அந்த பேச்சே வேண்டாம் சரியா. இப்போ நாம பேசினதையே நினைச்சுட்டு இருக்காம, கிளாஸ்ல ஃப்ரெண்ட்ஸ் கூட ஜாலியா இரு. ஓகே.” என சிரிக்க,
பிரீத்தாவிற்கும் அப்போதுதான் சற்று நிம்மதியானது. “நானும் சாரி.! அந்த பேச்சை ஆரம்பிச்சிருக்கக்கூடாது. இனி இப்படி நடக்காது.” என்றாள் பதிலுக்கு.
“ஓக்கே லீவ் இட்.. பை டேக் கேர்..” என காரைத் திருப்பினான்.
காரை ஓட்டிக் கொண்டிருந்த ஷ்யாமிற்குள் சிறு போராட்டம்.
சிறு பெண்ணிடம் தன் கோபத்தை காட்டியிருக்கக் கூடாதோ என்று அவன் மனம் அவனிடமே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது.
இளங்கோவின் குடும்பத்தை பற்றி தாமரை பேசும்போது, ப்ரீத்தாவை பற்றியும் பேசுவாள். அப்போதெல்லாம் பெரிதாக எந்த எண்ணமும் அவனிடம் இல்லை, சொல்லப் போனால் அந்த குடும்பத்தினர் மீது அவனுக்கு நல்ல எண்ணமே இல்லைதான்.
அதனால் தாமரைக்கு இளங்கோவை பிடிக்கும் என்று தெரிந்ததிலிருந்து அவன் ஒத்துக் கொள்ளவே இல்லை. தாமரையை திட்டிக் கொண்டேதான் இருப்பான். எங்கே தாமரைக்கு இளங்கோ கிடைக்கமாட்டான் என்று தெரிந்தால் விரக்தியில் எதுவும் செய்து கொள்வாளோ என்று கூட பயந்திருக்கிறான்.
இளங்கோவின் மீதான தாமரையின் காதல் அளவை கண்டு!
அப்படி ஒரு காதல் இளங்கோ மீது தாமரைக்கு!
ஆனால் நடந்ததே வேறல்லவா.!
இத்தனைக்கும் இளங்கோவிடம் பேசியது கூட இல்லை தாமரை.
அவன் படித்த கல்லூரியில் தான் சேர்ந்தாள். ஒரு வருடம் அவன் முன்புதான் இருந்தாள் ஆனால் ‘நான் தான் உன் அத்தை மகள்’ என்று எங்குமே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை தாமரை.
அடுத்த ஐந்து ஆண்டுகளும் இதே சென்னையில் தான் இருந்தாள். அப்போதும் கூட அவனிடம் சென்று தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை அவள்.
‘ஏன் இந்த பைத்தியக்காரத்தனம்’ என்ற ஷ்யாமின் கேள்விக்கு, ‘தன் தந்தைக்குப் பிடிக்காது அவருக்கு பிடிக்காததை நான் எப்போதும் செய்ய மாட்டேன்’ என்று உறுதியாக இருந்தவள் எப்படி இப்படி ஒரு செயலை செய்தாள் என்று இப்போது வரை ஷியாமிற்க்கு புரியாத புதிர்.
பலமுறை கேட்டு சலித்து விட்டான். பதில் தான் கிடைக்கவில்லை. தாமரையின் மீதான இந்த செயலுக்கு காரணமானவர்களை ஒன்றும் இல்லாதவர்களாக்கி அழித்துவிடும் அளவிற்கு கோபம். அதே கோபத்துடன் தான் அன்று வீட்டுக்கும் வந்தான்.
ஆனால் ப்ரீத்தாவை பார்த்த பிறகு அந்த கோபத்தை காட்ட அவனால் முடியவில்லை.
சிறு பெண்ணை தங்கள் திட்டத்திற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களோ என்று பார்த்ததுமே தோன்றி விட்டது.
அதனாலே வார்த்தைகளை விடாமல் அவளிடம் பேச்சுக் கொடுத்தான் ஷ்யாம்.
அவன் நினைத்தது சரிதான் என்பது போலத்தான் இருந்தது பிரீத்தாவின் குழப்பமான பேச்சுகள்.
“என்ன மேன் யோசனை.?” என்ற தாமரையின் பேச்சில்தான் ஷியாம் நினைவுக்கு வந்தான்.
“நத்திங் அம்மு, உனக்கு இப்ப எப்படி இருக்கு. ஆபீஸ் போக முடியுமா இல்ல அப்படியே வீட்டுக்கு போயிடலாமா.?” என்றான் அக்கறையாக.
“ஷ்யாம் நீ பயப்படுற மாதிரி ஒண்ணுமே இல்லடா, மார்னிங் மட்டும்தான் கஷ்டமே. அதுக்குப் பிறகு ஒரு கஷ்டமும் இல்லை. நீ என்னை நினைச்சு டென்ஷன் ஆகாதே.” என்றாள் தாமரை.
“ம்ச் விடு.. ராணிம்மா புட் எல்லாம் கரெக்டா கொடுத்து இருக்காங்க இல்ல, கரெக்ட் டைமுக்கு சாப்பிடுடனும். நான் கால் பண்ண பிறகுதான் சாப்பிடுற ஞாபகமே வந்ததுனு எல்லாம் சொல்லக்கூடாது. வேற எந்த கஷ்டமா இருந்தாலும் என்கிட்ட உடனே சொல்லிடனும்.” என வழக்கம் போல அறிவுரைகளை வழங்கி, அவளது ஆபீஸ் முன் இறக்கி விட்டு சென்றான்.
வகுப்பறையில் அமர்ந்திருந்த பிரீத்தாவின் அமைதியை கண்டு அவளிடம் பேச்சுக் கொடுத்தாள் அனிதா.
பிரீத்தாவும் எதையும் மறைக்காமல் அன்று காலையில் தனக்கும் ஷ்யாமிற்கும் நடந்த உரையாடலை அவளிடம் கூறினாள்.
“ஐ திங்க் யூ லவ் ஹிம்..” என பட்டென பிரீத்தாவின் மனதில் உள்ளதை அனிதா கூறி விட, பிரீத்தாவிற்கு உடல் எல்லாம் நடுங்க ஆரம்பித்துவிட்டது.
“என்ன? என்ன சொல்ற? நான் அப்படியெல்லாம் இல்ல, எனக்கு அந்த மாதிரி எண்ணமெல்லாம் தோனவே இல்லை. அவர் ஜஸ்ட் என்னோட பிரண்ட். நான் இளங்கோ மாமாவை லவ் பண்றேன். அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன். இது சின்ன வயசுலயே எடுத்த முடிவு. அதை எப்படி என்னால மீற முடியும்.”
“அந்த தாமரை செய்த தப்பால, நான் எந்த தப்பான முடிவும் எடுத்துடக்கூடாதுன்னு என்கூட பேசுறார்.”
“மத்தபடி அவருக்கு என் மேல அந்த மாதிரியான இன்ட்ரஸ்ட் எல்லாம் கிடையாது, அவர் என்னை ட்ராப் பண்றதுனால, எங்க ரெண்டு பேரையும் தப்பா நினைச்சுக்காத, அவரோட ஹாஸ்பிடல் இந்த பக்கம்தான். தாமரையை அழைச்சிட்டு போகும் போது என்னையும் சேர்த்து பிக்கப் பண்ணுவார்..” என படபடவென தன் மனதில் இருந்தவற்றையெல்லாம் ப்ரீத்தா கூற, அதற்கு பதில் ஏதும் கூறவில்லை அனிதா.
அனிதாவின் அமைதியே அவள் தன்னை நம்பவில்லை என்று கூற “என்னடி” என்றாள் ஆற்றாமையாக.
“பிரீத்தா உனக்கு இதை நான் எப்படி சொல்லி புரிய வைக்கணும் தெரியல, ஆனா இப்போ உன் மனசுல இருக்கிறது அந்த ஷியாம்தான். உன்னுடைய இளங்கோ மாமா கிடையாது.” என்றாள் திட்டவட்டமாக.
“அது.. அது எப்படி? எப்படி சரியா வரும்.? அப்போ நான் மாமாவை லவ் பண்றேன்னு நெனச்சிட்டு இருந்தது எல்லாம் பொய்யா.? இதை எப்படி வெளிய சொல்ல முடியும்.? என்னை எல்லாரும் என்ன நினைப்பாங்க. நான்… நான் தப்பானா பொண்ணா.?” அது வகுப்பறை, அனைவரும் தன்னையே கவனிப்பார்கள் என்று கூட உணராமல் முகத்தை மூடி அழ ஆரம்பித்தாள் ப்ரீத்தா.
“ப்ரீத்தா.. ஏய் என்னடி பண்ற? கிளாஸ்ல எல்லாரும் உன்னையே பார்க்கிறாங்க. சொல்றத கேளு. முகத்தை தொட.” என பிரீத்தாவின் முதுகை தடவி ஆறுதல் படுத்த, அதற்குள் மற்ற மாணவர்களும் அவர்களை சூழ்ந்துவிட, வகுப்பு ஆசிரியரும் வந்து விட்டார்.
“வாட் ஹேப்பன்ட் அனிதா?” என்றவரிடம்
என்ன பதில் சொல்வது என தெரியாமல், “ஸ்டொமக் பெயின் தான் மேம். கண்ட்ரோல் பண்ண முடியல, பெயின் இன்கிரிஸ் ஆயிட்டே இருக்கு.” என வாய்க்கு வந்ததை சொல்ல,
“ஏன் சொல்லாம இருக்கீங்க? ரெஸ்ட் ரூம் கூட்டிட்டு போ. பேரன்ட்ஸ்க்கு இன்பார்ம் பண்ணிட்டு, வீட்டுக்கு அனுப்பி விடு.” என்றவர் அனிதாவோடு அவளை அனுப்பி வைத்தார்.
ரெஸ்ட் ரூம் சென்று முகத்தை கழுவ வைத்து, கேண்டீன் அழைத்து வந்தவள், “என்னடி இவ்ளோ எமோஷன் ஆகிட்ட?” என்று பொறுமையாக கேட்க,
“எனக்கே தெரியலடி, நான் ஏன் இப்படி இருக்கேன். எனக்கு என்ன தான் வேணும். எனக்கே ஒன்னும் புரியல. ஆனா நீ சொன்ன மாதிரி ஷ்யாமை நான் லவ் பண்ணினாலும், அவரை கல்யாணம் பண்ணிக்க முடியாது.” என்றாள் கரகரப்பாக.
“என்ன சொல்ற? நீ சொல்றத வச்சு பார்க்கும்போது, அவருக்கும் உன்னை பிடிச்சிருக்கும் போலத்தான் நினைச்சேன்.” என்றாள் அனிதாவும்.
“இல்ல.. அப்படியெல்லாம் கிடையாது. அவருக்கு தாமரையை தான் பிடிக்கும். அவர்தான் தாமரையே கல்யாணம் செய்துக்க போறவர், அவங்களுக்கு ஆல்ரெடி எங்கேஜ்மென்ட் முடிஞ்சிடுச்சு.” என்ற பிரீத்தாவிற்கு மீண்டும் அழுகை வந்தது.
“ஓ” என்ற அனிதாவிற்குமே அடுத்து என்ன சொல்வது என்று தெரியவில்லை.
பிரீத்தாவை எப்படி சமாதானம் செய்வது என்றும் தெரியவில்லை.