தாமரை - 12
அன்று சனிக்கிழமை மசக்கையின் காரணமாக தாமரை லேட்டாகத்தான் எழுந்தாள். எழுந்து பிரஷ் செய்யும் போதே ஒரு மூச்சு வாந்தி எடுத்து ஓய்ந்து போயிருந்தாள்.
முகத்தை கழுவி பாத்ரூமில் இருந்து அறைக்குள் வரவே மிகவும் சிரமப்பட்டாள் பெண். மெதுவாக கதவை பிடித்து ஒரு வழியாக கட்டிலில் வந்து அமர்ந்தவளுக்கு, தலை மிகவும் பாரமாக இருந்தது. உடலும் தன் பேச்சைக் கேட்காமல் காற்றில் பறப்பது போல் இருக்க, எழுந்து நிற்கவே பயந்து போனாள்.
அப்போது அவளது போன் அடிக்க, எழுந்து போய் எடுக்கவே மலைப்பாக இருக்க, அடிக்கட்டும் என அப்படியே விட்டு விட்டாள்.
அது முடிந்து மீண்டும் தொடர்ந்து அடிக்க ‘அம்மாவாகத்தான் இருக்கும், அப்புறம் பேசலாம்’ என அப்போதும் எடுக்காமல் விட்டு விட்டாள்.
அடுத்த சில நிமிடங்களில் வேகமாக அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த ப்ரித்தா “என்ன பன்றீங்க, இளா மாமா கால் பண்ணிட்டே இருக்காங்களாம், ஏன் எடுக்கல..?” என்றவாரே தாமரையைப் பார்க்க, அவளோ எதையும் உணரும் நிலையில் இல்லை. அவள் முகத்தை பார்த்தாலே தெரிந்தது பயந்து போயிருக்கிறாள் என்று.
உள்ளே வந்தவள் தாமரையின் நிலையைப் பார்த்து பதறி “என்ன செய்து? ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க?” என பதட்டமாக கேட்க,
“ஒன்னும் இல்ல.. தலை சுத்துது. எழுந்தேன்! முடியல, அப்படியே உட்கார்ந்துட்டேன்..” என்றவள், அமர்ந்தவாக்கில் அப்படியே கட்டிலில் சாய்ந்து விட, மேலும் பயந்துவிட்டாள் ப்ரீத்தா.
“நான் போய் ராணிம்மாவை கூப்பிட்டு வறேன்.” என்றவள் ஞாபகம் வந்தவளாக, “மாமா உங்களுக்கு கால் பண்ணாங்களாம். நீங்க எடுக்கலையாம். அதான் உடனே எனக்கு கூப்பிட்டாங்க..” என மீண்டும் படபடவென சொல்லிவிட்டு வேகமாக ராணியை அழைக்க சென்றுவிட்டாள்.
‘அத்தான் ஏன் எனக்கு கால் பண்ணாங்க. இவ்வளவு நாள் ஒரு மெசேஜ் கூட இல்ல. இப்போ மட்டும் ஏன் பண்றாங்க. ஒருவேளை இங்க வராங்களோ. அவங்க வரும்போது நான் இங்க இருக்கனுமா? இருக்க முடியுமா? மறுபடியும் வார்த்தையால் என்னை பேசியே கொல்லுவாங்களே, என்ன செய்ய.?’ என தாமரையின் எண்ணங்கள் இளங்கோவைப்பற்றி தாறுமாறாக நினைத்தது.
பதட்டத்துடன் வந்த ராணியும் தாமரையைப் பார்த்து பதறி போனார்.
“என்ன செய்து தாமரை.? ஹாஸ்பிடல் போலாமா இல்ல ஷ்யாம் தம்பிக்கு கூப்பிடவா?” என ராணி கேட்டுக் கொண்டிருக்கும்போதே வசந்தியும் வந்து விட்டார்.
“என்ன ராணி?” என்றவரிடமும் அதே பதட்டம்தான். ப்ரீத்தாவிற்கு அழைத்த இளங்கோ, அங்கு நடந்ததை கவனித்து உடனே வசந்திக்கு அழைத்திருந்தான். இந்த நேரத்தில் பேரன் அழைக்க மாட்டானே என்று யோசனையில்தான் போனை எடுத்தார்.
“பாட்டிம்மா அங்க என்ன நடக்குது? ஏன் தாரா கூட யாரும் இல்ல. ராணிக்கா எங்க போனாங்க.. அவளுக்கு ரொம்பவும் முடியல போல. சீக்கிரம் போய் பாருங்க..” என பதட்டமாக பேச, பேரனின் பதட்டம் அவருக்கும் தொற்றிக்கொண்டது.
“நான் பார்க்குறேன் கண்ணா…” என்றவர் தன் வயதையும் மீறி மாடிக்கு வந்திருந்தார்.
“தெரியலம்மா.. நானும் இப்பதான் வந்தேன். நைட்டெல்லாம் சுத்தமா தூங்கல. விடிய காலையிலதான் கண்ணசந்துச்சு. இவ்வளவு நேரம் பாப்பா தூங்கிட்டு இருக்கவும், அதுக்கு சமைச்சிடலாம்னு நினைச்சுத்தான் கீழ போனேன்..” என்றவர், தாமரையை மெதுவாக எழவைத்து கட்டிலில் சாய்ந்து அமர வைத்தார்.
தாமரையின் நெற்றியை வருடியபடியே “என்ன செய்து கண்ணு.? முகம் எல்லாம் வீங்கி போன மாதிரி இருக்கு.” என்ற ராணிக்கு இது ஒன்றும் சரியாக படவில்லை.
“தெரியல ராணிம்மா. தலையை தூக்கவே முடியல, பாரமா இருக்கு.” என கண் திறக்காமலே, தாமரை பதில் கொடுக்க,
“ராணி மொதல்ல குடிக்க ஏதாவது கொடு, அதுக்கு பிறகு அந்த டாக்டர் பையனுக்கு கூப்பிட்டு சொல்லு.” என அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே ப்ரீத்தா ஷ்யாமிற்கு அழைத்து விஷயத்தை சொல்லிவிட்டாள்.
இவர்கள் மூவரின் பதட்டத்தை பார்த்தபடியே முகத்தை சுளித்தபடி வந்து நின்றார் நாயகி.
“நீ இங்க என்னடி பண்ற.?” என வந்ததும் மகளைப் பார்த்து முறைக்க,
“நாயகி சண்டை போடணும்னா ரெண்டு பேரும் வெளியே போய் சண்டை போடுங்க..” என வசந்தி பட்டென்று கூறி விட, நாயகிக்கு எரிச்சல் கூடி போனது.
“குழந்தை உண்டானா இதெல்லாம் இருக்கிறது தானே அத்த. இதுக்கு ஏன் இவ்வளவு அலம்பல் பண்ணிட்டு இருக்கீங்க.” என்ற நாயகி தாமரையைப் பார்த்து முறைக்க, இந்த நேரத்திலும் குத்தலாக பேசும் மருமகளை என்ன செய்வது என்று புரியாமல் பார்த்தார் வசந்தி.
அதற்குள் மாதுளம் ஜூஸ் போட்டு எடுத்து வந்திருந்தார் ராணி..
“கண்ணு மெல்ல எழுந்துக்கோ, வெறும் வயித்துல இருந்தா இப்படித்தான் இருக்கும். இதை மட்டும் குடிச்சிடு. அப்புறமா சாப்பிட்டுக்கலாம். வயித்துக்குள்ள கொஞ்சம் போனாத்தான் உனக்கும் தெம்பா இருக்கும்..” என பேசிப் பேசி மெல்ல அந்த ஜூசை குடிக்க வைத்தார் ராணி.
குடித்து முடித்த அடுத்த நொடியே உள்ளே போன அத்தனையும் வெளியே வந்தது.
எழுந்து செல்லகூட முடியாமல் அந்த பெட்டிலேயே வாந்தி எடுத்திருந்தாள் தாமரை.
குடலே வெளியே வந்துவிடும் அளவிற்கு ஓங்கரித்துக் கொண்டே வாந்தி எடுக்க, அதைப் பார்த்து மிரண்டு போனாள் பிரீத்தா.
வாந்தி எடுத்து முடித்ததும் அப்படியே மயங்கி சரிய, வேகமாக வந்து பிடித்துக் கொண்டார் ராணி.
“கண்ணு கண்ணு..” என பதட்டமான ராணி, அங்கிருந்த டவலில் நீரை நனைத்துக் கொண்டு வந்து, தாமரையின் முகத்தை துடைத்துவிட்டார்.
அப்போதும் மயக்கம் தெளியாமல் போக, “அம்மா பாப்பா மயக்கமாயிடுச்சு, ஹாஸ்பிடல் போயிடலாம்..” என ராணி கூறியதை கேட்ட வசந்திக்கும் அதுவே சரி என்று பட்டது.
ப்ரீத்தா மீண்டும் ஷ்யாமிற்கு அழைத்து எங்கு வந்து கொண்டிருக்கிறான் என்று கேட்டுக் கொண்டவள், அதை வசந்தியிடமும் தெரிவித்தாள்.
“பாப்பா நீ கொஞ்ச நேரம் தாமரையை பிடிச்சுக்கிட்டு நில்லு நான் அதுக்குள்ள இந்த பெட்டை க்ளீன் பண்ணிடுறேன்..” என்ற ராணியிடம், ‘சரி என்று’ ப்ரீத்தா நகர, வேகமாக மகளின் கையைப் பிடித்து தடுத்தார் நாயகி.
“ராணி..” என ஆங்காரமாக கத்திய நாயகி, “இவளுக்கு என் பொண்ணு வேலை செய்யணுமா? என்ன நெனச்சுக்கிட்டு இருக்க நீ?” என மேலும் கத்த, வசந்திக்கு கோபம் தலைக்கேறியது.
“நாயகி உன்னை வரச்சொல்லி யாரும் கேட்கல, நீ இங்க ஒன்னும் நிக்க வேண்டாம். உன் பொண்ணை கூப்பிட்டுட்டு இங்க இருந்து கிளம்பு..” என பட்டென சொன்னவர், முதல் முறையாக தாமரையின் அருகில் வந்து நின்று அவள் தலையை மெதுவாகப் பிடித்துக் கொண்டார்.
“அம்மா ஏன் இப்படி பண்ற? அவங்க முடியாம இருக்காங்க? அவங்களுக்கோ அந்த குழந்தைக்கோ ஏதாவது ஆயிடுச்சுன்னா மாமாவுக்கு யார் பதில் சொல்வா? நீங்க ஏன் இப்படி இருக்கீங்க? கர்ப்பமா இருக்காங்க அந்த ஒரு மனிதாபிமானம் கூட உன்கிட்ட இல்லையா?” என பிரீத்தாவும் தாயை பேச,
“வாயை மூடு..” என மகளிடம் கத்தியவர் “அம்மா விடு.. அம்மா.. அம்மா..” என்ற மகளின் கதறலை கண்டுகொள்ளாமல், அவளை இழுத்துக் கொண்டு கீழே இறங்கிவிட்டார்..
அதற்குள் ராணி அந்த பெட்டை கிளீன் செய்து முடித்துவிட, பதட்டத்துடன் ஷ்யாமும் வந்து விட்டான்.
ஷ்யாமை பார்த்ததும் வசந்தி நகர்ந்து விட, தாமரையை செக் செய்தவன், யாரையும் பொருட்படுத்தாமல் கைகளில் அள்ளிக்கொண்டு வெளியில் நடந்தான்.
அவனுக்கு பின்னே பதட்டமாக ராணியும் வசந்தியும் வர, பொறுமையாக காரில் ஏற்றியவன், வசந்தியிடம் “நான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன் பாட்டிமா, ராணி ஆன்ட்டி எங்க கூட வரட்டும். ட்ரிப்ஸ் போடணும் பாட்டிமா. இப்போ வீக்கன்ட்தானே நான் பாத்துக்குறேன்.” என்றவன் அவர் பதிலுக்கு கூட காத்திராமல் காரை கிளப்பி இருந்தான்.
ஷ்யாமின் கார் நகர்ந்த பிறகுதான் வசந்திக்கு பேரனின் ஞாபகமே வந்தது. வேகமாக தன் கையில் இருந்த போனை பார்க்க அது இன்னுமே ஆனில்தான் இருந்தது.
இங்கு நடந்த அனைத்தையும் பேரன் கேட்டுக் கொண்டுதான் இருந்திருக்கிறான் என்று, அந்த போன் கட் ஆகாத நிலையிலேயே கண்டு கொண்டார்.
இனி என்ன நடக்குமோ என்று பயந்து போன வசந்தி போனை எடுத்து காதில் வைத்து “இளா..” என்றார்.
“ம்ம்ம் பாட்டிம்மா.. என்ற இளங்கோவின் குரல் கரகரத்து வந்தது.
‘பேரன் பயந்துவிட்டானோ?’ என்று உணர்ந்த வசந்தி, “இதெல்லாம் இந்த நேரத்துல எல்லாருக்கும் இருக்கிறதுதான் இளா. நீ பயந்துக்காத ஹாஸ்பிடல் போயிருக்காங்க. நானும் பின்னாடியே போறேன். பாத்துக்குறேன். இங்கே என்ன நடந்ததுன்னு பயத்துலையும் பதட்டத்துலயும் அங்க நீ டென்ஷன் ஆகாத. நான் ஹாஸ்பிடல் போய் பாத்துட்டு உனக்கு கால் பண்றேன்...” என்று அடுத்து பேரனை பேசவிடாமல் போனை வைத்து விட்டார்.
அவனுக்கோ அங்கு மனம் நிலையில்லாமல் தவித்தது. தாமரையை அத்தையிடமே விட்டு வந்துருக்கலாமோ, ‘அன்று கதறினாளே கேட்கவே இல்லையே. இப்போது எவ்வளவு கஷ்டப்படுகிறாள். எல்லாம் என்னால்தானே’ என இளங்கோவின் மனம் குற்றவுணர்ச்சியில் தத்தளித்தது.
அடுத்து அவனால் அங்கு இருக்க முடியும் போல தோன்றவில்லை. தான் வந்த வேலையும் முடியும் தருவாயில்தான் இருந்தது.
இனி அவன் இங்கிருக்க வேண்டிய அவசியமும் இல்லைதான். தாமரையை எதிர்கொள்ள பயந்துதான் ஊர் திரும்பாமலே இருந்தான்.
அன்றைய கோபமும், ப்ரீத்தாவின் முகத்தில் தெரிந்த வலியும், நாயகியின் தூண்டலும்தான் இளங்கோவை அப்படி பேச வைத்தது.
தன் அத்தை ஒரு வார்த்தை ‘என் மகளை நீதான் கல்யாணம் செய்யனும் சாமின்னு’ சொல்லிருந்தா மறுத்திருக்கவே மாட்டானே.
‘என் பொண்ணை நீதான் பார்த்துக்கனும், நீதான் பார்த்துக்கனும்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொன்னவங்களால, இந்த வார்த்தையை சொல்ல முடியாதா.? அப்போ அவங்களுக்கு விருப்பம் இல்லன்னுதானே அர்த்தம். நான் அப்படித்தான் நினைச்சேன். ஆனா நடந்தது எல்லாம் பார்க்கும் போது.. அய்யோ..’ என தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.
‘என்னடா பண்ணி வச்சிருக்க, உன்னை நம்பித்தான உன் அத்தை அவளை அனுப்பி வச்சாங்க. இப்போ அவங்களுக்கு நீ என்ன பதில் சொல்லப்போற’ என மனசாட்சி காரித்துப்பியது.
உடனே அவளைப் பார்க்க வேண்டும் என அவன் மனம் முந்திக்கொண்டு ஓடியது.
இப்போது மனைவியின் கஷ்டத்தைப் பார்த்தபிறகு உடனே கிளம்ப வேண்டும் என்று முடிவு செய்து, அங்கு செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் ஒழுங்குபடுத்தி அங்குள்ளவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அடுத்தநாள் காலை விமானம் ஏறியிருந்தான்.
ஆனால் இளங்கோ இங்கு வந்து நிற்கும்போது அனைத்தும் அவன் கையை மீறி போயிருந்தது.
அன்று சனிக்கிழமை மசக்கையின் காரணமாக தாமரை லேட்டாகத்தான் எழுந்தாள். எழுந்து பிரஷ் செய்யும் போதே ஒரு மூச்சு வாந்தி எடுத்து ஓய்ந்து போயிருந்தாள்.
முகத்தை கழுவி பாத்ரூமில் இருந்து அறைக்குள் வரவே மிகவும் சிரமப்பட்டாள் பெண். மெதுவாக கதவை பிடித்து ஒரு வழியாக கட்டிலில் வந்து அமர்ந்தவளுக்கு, தலை மிகவும் பாரமாக இருந்தது. உடலும் தன் பேச்சைக் கேட்காமல் காற்றில் பறப்பது போல் இருக்க, எழுந்து நிற்கவே பயந்து போனாள்.
அப்போது அவளது போன் அடிக்க, எழுந்து போய் எடுக்கவே மலைப்பாக இருக்க, அடிக்கட்டும் என அப்படியே விட்டு விட்டாள்.
அது முடிந்து மீண்டும் தொடர்ந்து அடிக்க ‘அம்மாவாகத்தான் இருக்கும், அப்புறம் பேசலாம்’ என அப்போதும் எடுக்காமல் விட்டு விட்டாள்.
அடுத்த சில நிமிடங்களில் வேகமாக அறைக் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த ப்ரித்தா “என்ன பன்றீங்க, இளா மாமா கால் பண்ணிட்டே இருக்காங்களாம், ஏன் எடுக்கல..?” என்றவாரே தாமரையைப் பார்க்க, அவளோ எதையும் உணரும் நிலையில் இல்லை. அவள் முகத்தை பார்த்தாலே தெரிந்தது பயந்து போயிருக்கிறாள் என்று.
உள்ளே வந்தவள் தாமரையின் நிலையைப் பார்த்து பதறி “என்ன செய்து? ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கீங்க?” என பதட்டமாக கேட்க,
“ஒன்னும் இல்ல.. தலை சுத்துது. எழுந்தேன்! முடியல, அப்படியே உட்கார்ந்துட்டேன்..” என்றவள், அமர்ந்தவாக்கில் அப்படியே கட்டிலில் சாய்ந்து விட, மேலும் பயந்துவிட்டாள் ப்ரீத்தா.
“நான் போய் ராணிம்மாவை கூப்பிட்டு வறேன்.” என்றவள் ஞாபகம் வந்தவளாக, “மாமா உங்களுக்கு கால் பண்ணாங்களாம். நீங்க எடுக்கலையாம். அதான் உடனே எனக்கு கூப்பிட்டாங்க..” என மீண்டும் படபடவென சொல்லிவிட்டு வேகமாக ராணியை அழைக்க சென்றுவிட்டாள்.
‘அத்தான் ஏன் எனக்கு கால் பண்ணாங்க. இவ்வளவு நாள் ஒரு மெசேஜ் கூட இல்ல. இப்போ மட்டும் ஏன் பண்றாங்க. ஒருவேளை இங்க வராங்களோ. அவங்க வரும்போது நான் இங்க இருக்கனுமா? இருக்க முடியுமா? மறுபடியும் வார்த்தையால் என்னை பேசியே கொல்லுவாங்களே, என்ன செய்ய.?’ என தாமரையின் எண்ணங்கள் இளங்கோவைப்பற்றி தாறுமாறாக நினைத்தது.
பதட்டத்துடன் வந்த ராணியும் தாமரையைப் பார்த்து பதறி போனார்.
“என்ன செய்து தாமரை.? ஹாஸ்பிடல் போலாமா இல்ல ஷ்யாம் தம்பிக்கு கூப்பிடவா?” என ராணி கேட்டுக் கொண்டிருக்கும்போதே வசந்தியும் வந்து விட்டார்.
“என்ன ராணி?” என்றவரிடமும் அதே பதட்டம்தான். ப்ரீத்தாவிற்கு அழைத்த இளங்கோ, அங்கு நடந்ததை கவனித்து உடனே வசந்திக்கு அழைத்திருந்தான். இந்த நேரத்தில் பேரன் அழைக்க மாட்டானே என்று யோசனையில்தான் போனை எடுத்தார்.
“பாட்டிம்மா அங்க என்ன நடக்குது? ஏன் தாரா கூட யாரும் இல்ல. ராணிக்கா எங்க போனாங்க.. அவளுக்கு ரொம்பவும் முடியல போல. சீக்கிரம் போய் பாருங்க..” என பதட்டமாக பேச, பேரனின் பதட்டம் அவருக்கும் தொற்றிக்கொண்டது.
“நான் பார்க்குறேன் கண்ணா…” என்றவர் தன் வயதையும் மீறி மாடிக்கு வந்திருந்தார்.
“தெரியலம்மா.. நானும் இப்பதான் வந்தேன். நைட்டெல்லாம் சுத்தமா தூங்கல. விடிய காலையிலதான் கண்ணசந்துச்சு. இவ்வளவு நேரம் பாப்பா தூங்கிட்டு இருக்கவும், அதுக்கு சமைச்சிடலாம்னு நினைச்சுத்தான் கீழ போனேன்..” என்றவர், தாமரையை மெதுவாக எழவைத்து கட்டிலில் சாய்ந்து அமர வைத்தார்.
தாமரையின் நெற்றியை வருடியபடியே “என்ன செய்து கண்ணு.? முகம் எல்லாம் வீங்கி போன மாதிரி இருக்கு.” என்ற ராணிக்கு இது ஒன்றும் சரியாக படவில்லை.
“தெரியல ராணிம்மா. தலையை தூக்கவே முடியல, பாரமா இருக்கு.” என கண் திறக்காமலே, தாமரை பதில் கொடுக்க,
“ராணி மொதல்ல குடிக்க ஏதாவது கொடு, அதுக்கு பிறகு அந்த டாக்டர் பையனுக்கு கூப்பிட்டு சொல்லு.” என அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே ப்ரீத்தா ஷ்யாமிற்கு அழைத்து விஷயத்தை சொல்லிவிட்டாள்.
இவர்கள் மூவரின் பதட்டத்தை பார்த்தபடியே முகத்தை சுளித்தபடி வந்து நின்றார் நாயகி.
“நீ இங்க என்னடி பண்ற.?” என வந்ததும் மகளைப் பார்த்து முறைக்க,
“நாயகி சண்டை போடணும்னா ரெண்டு பேரும் வெளியே போய் சண்டை போடுங்க..” என வசந்தி பட்டென்று கூறி விட, நாயகிக்கு எரிச்சல் கூடி போனது.
“குழந்தை உண்டானா இதெல்லாம் இருக்கிறது தானே அத்த. இதுக்கு ஏன் இவ்வளவு அலம்பல் பண்ணிட்டு இருக்கீங்க.” என்ற நாயகி தாமரையைப் பார்த்து முறைக்க, இந்த நேரத்திலும் குத்தலாக பேசும் மருமகளை என்ன செய்வது என்று புரியாமல் பார்த்தார் வசந்தி.
அதற்குள் மாதுளம் ஜூஸ் போட்டு எடுத்து வந்திருந்தார் ராணி..
“கண்ணு மெல்ல எழுந்துக்கோ, வெறும் வயித்துல இருந்தா இப்படித்தான் இருக்கும். இதை மட்டும் குடிச்சிடு. அப்புறமா சாப்பிட்டுக்கலாம். வயித்துக்குள்ள கொஞ்சம் போனாத்தான் உனக்கும் தெம்பா இருக்கும்..” என பேசிப் பேசி மெல்ல அந்த ஜூசை குடிக்க வைத்தார் ராணி.
குடித்து முடித்த அடுத்த நொடியே உள்ளே போன அத்தனையும் வெளியே வந்தது.
எழுந்து செல்லகூட முடியாமல் அந்த பெட்டிலேயே வாந்தி எடுத்திருந்தாள் தாமரை.
குடலே வெளியே வந்துவிடும் அளவிற்கு ஓங்கரித்துக் கொண்டே வாந்தி எடுக்க, அதைப் பார்த்து மிரண்டு போனாள் பிரீத்தா.
வாந்தி எடுத்து முடித்ததும் அப்படியே மயங்கி சரிய, வேகமாக வந்து பிடித்துக் கொண்டார் ராணி.
“கண்ணு கண்ணு..” என பதட்டமான ராணி, அங்கிருந்த டவலில் நீரை நனைத்துக் கொண்டு வந்து, தாமரையின் முகத்தை துடைத்துவிட்டார்.
அப்போதும் மயக்கம் தெளியாமல் போக, “அம்மா பாப்பா மயக்கமாயிடுச்சு, ஹாஸ்பிடல் போயிடலாம்..” என ராணி கூறியதை கேட்ட வசந்திக்கும் அதுவே சரி என்று பட்டது.
ப்ரீத்தா மீண்டும் ஷ்யாமிற்கு அழைத்து எங்கு வந்து கொண்டிருக்கிறான் என்று கேட்டுக் கொண்டவள், அதை வசந்தியிடமும் தெரிவித்தாள்.
“பாப்பா நீ கொஞ்ச நேரம் தாமரையை பிடிச்சுக்கிட்டு நில்லு நான் அதுக்குள்ள இந்த பெட்டை க்ளீன் பண்ணிடுறேன்..” என்ற ராணியிடம், ‘சரி என்று’ ப்ரீத்தா நகர, வேகமாக மகளின் கையைப் பிடித்து தடுத்தார் நாயகி.
“ராணி..” என ஆங்காரமாக கத்திய நாயகி, “இவளுக்கு என் பொண்ணு வேலை செய்யணுமா? என்ன நெனச்சுக்கிட்டு இருக்க நீ?” என மேலும் கத்த, வசந்திக்கு கோபம் தலைக்கேறியது.
“நாயகி உன்னை வரச்சொல்லி யாரும் கேட்கல, நீ இங்க ஒன்னும் நிக்க வேண்டாம். உன் பொண்ணை கூப்பிட்டுட்டு இங்க இருந்து கிளம்பு..” என பட்டென சொன்னவர், முதல் முறையாக தாமரையின் அருகில் வந்து நின்று அவள் தலையை மெதுவாகப் பிடித்துக் கொண்டார்.
“அம்மா ஏன் இப்படி பண்ற? அவங்க முடியாம இருக்காங்க? அவங்களுக்கோ அந்த குழந்தைக்கோ ஏதாவது ஆயிடுச்சுன்னா மாமாவுக்கு யார் பதில் சொல்வா? நீங்க ஏன் இப்படி இருக்கீங்க? கர்ப்பமா இருக்காங்க அந்த ஒரு மனிதாபிமானம் கூட உன்கிட்ட இல்லையா?” என பிரீத்தாவும் தாயை பேச,
“வாயை மூடு..” என மகளிடம் கத்தியவர் “அம்மா விடு.. அம்மா.. அம்மா..” என்ற மகளின் கதறலை கண்டுகொள்ளாமல், அவளை இழுத்துக் கொண்டு கீழே இறங்கிவிட்டார்..
அதற்குள் ராணி அந்த பெட்டை கிளீன் செய்து முடித்துவிட, பதட்டத்துடன் ஷ்யாமும் வந்து விட்டான்.
ஷ்யாமை பார்த்ததும் வசந்தி நகர்ந்து விட, தாமரையை செக் செய்தவன், யாரையும் பொருட்படுத்தாமல் கைகளில் அள்ளிக்கொண்டு வெளியில் நடந்தான்.
அவனுக்கு பின்னே பதட்டமாக ராணியும் வசந்தியும் வர, பொறுமையாக காரில் ஏற்றியவன், வசந்தியிடம் “நான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன் பாட்டிமா, ராணி ஆன்ட்டி எங்க கூட வரட்டும். ட்ரிப்ஸ் போடணும் பாட்டிமா. இப்போ வீக்கன்ட்தானே நான் பாத்துக்குறேன்.” என்றவன் அவர் பதிலுக்கு கூட காத்திராமல் காரை கிளப்பி இருந்தான்.
ஷ்யாமின் கார் நகர்ந்த பிறகுதான் வசந்திக்கு பேரனின் ஞாபகமே வந்தது. வேகமாக தன் கையில் இருந்த போனை பார்க்க அது இன்னுமே ஆனில்தான் இருந்தது.
இங்கு நடந்த அனைத்தையும் பேரன் கேட்டுக் கொண்டுதான் இருந்திருக்கிறான் என்று, அந்த போன் கட் ஆகாத நிலையிலேயே கண்டு கொண்டார்.
இனி என்ன நடக்குமோ என்று பயந்து போன வசந்தி போனை எடுத்து காதில் வைத்து “இளா..” என்றார்.
“ம்ம்ம் பாட்டிம்மா.. என்ற இளங்கோவின் குரல் கரகரத்து வந்தது.
‘பேரன் பயந்துவிட்டானோ?’ என்று உணர்ந்த வசந்தி, “இதெல்லாம் இந்த நேரத்துல எல்லாருக்கும் இருக்கிறதுதான் இளா. நீ பயந்துக்காத ஹாஸ்பிடல் போயிருக்காங்க. நானும் பின்னாடியே போறேன். பாத்துக்குறேன். இங்கே என்ன நடந்ததுன்னு பயத்துலையும் பதட்டத்துலயும் அங்க நீ டென்ஷன் ஆகாத. நான் ஹாஸ்பிடல் போய் பாத்துட்டு உனக்கு கால் பண்றேன்...” என்று அடுத்து பேரனை பேசவிடாமல் போனை வைத்து விட்டார்.
அவனுக்கோ அங்கு மனம் நிலையில்லாமல் தவித்தது. தாமரையை அத்தையிடமே விட்டு வந்துருக்கலாமோ, ‘அன்று கதறினாளே கேட்கவே இல்லையே. இப்போது எவ்வளவு கஷ்டப்படுகிறாள். எல்லாம் என்னால்தானே’ என இளங்கோவின் மனம் குற்றவுணர்ச்சியில் தத்தளித்தது.
அடுத்து அவனால் அங்கு இருக்க முடியும் போல தோன்றவில்லை. தான் வந்த வேலையும் முடியும் தருவாயில்தான் இருந்தது.
இனி அவன் இங்கிருக்க வேண்டிய அவசியமும் இல்லைதான். தாமரையை எதிர்கொள்ள பயந்துதான் ஊர் திரும்பாமலே இருந்தான்.
அன்றைய கோபமும், ப்ரீத்தாவின் முகத்தில் தெரிந்த வலியும், நாயகியின் தூண்டலும்தான் இளங்கோவை அப்படி பேச வைத்தது.
தன் அத்தை ஒரு வார்த்தை ‘என் மகளை நீதான் கல்யாணம் செய்யனும் சாமின்னு’ சொல்லிருந்தா மறுத்திருக்கவே மாட்டானே.
‘என் பொண்ணை நீதான் பார்த்துக்கனும், நீதான் பார்த்துக்கனும்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொன்னவங்களால, இந்த வார்த்தையை சொல்ல முடியாதா.? அப்போ அவங்களுக்கு விருப்பம் இல்லன்னுதானே அர்த்தம். நான் அப்படித்தான் நினைச்சேன். ஆனா நடந்தது எல்லாம் பார்க்கும் போது.. அய்யோ..’ என தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.
‘என்னடா பண்ணி வச்சிருக்க, உன்னை நம்பித்தான உன் அத்தை அவளை அனுப்பி வச்சாங்க. இப்போ அவங்களுக்கு நீ என்ன பதில் சொல்லப்போற’ என மனசாட்சி காரித்துப்பியது.
உடனே அவளைப் பார்க்க வேண்டும் என அவன் மனம் முந்திக்கொண்டு ஓடியது.
இப்போது மனைவியின் கஷ்டத்தைப் பார்த்தபிறகு உடனே கிளம்ப வேண்டும் என்று முடிவு செய்து, அங்கு செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் ஒழுங்குபடுத்தி அங்குள்ளவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அடுத்தநாள் காலை விமானம் ஏறியிருந்தான்.
ஆனால் இளங்கோ இங்கு வந்து நிற்கும்போது அனைத்தும் அவன் கையை மீறி போயிருந்தது.