• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தாமரை - 13

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,272
497
113
Tirupur
தாமரை - 13

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தாள் தாமரை. நான்கு மணி நேரம் ஆகியும் மயக்கம் தெளியாமல் இருக்க, அனைவருமே பயந்துவிட்டனர்.

தாமரை மயக்கமாகி விட்டாள் என்று ப்ரீத்தா கூறியதுமே, தன் தாய் சுமதிக்கு அழைத்து சொல்லியிருந்தான் ஷ்யாம்.. அவருமே உடனுக்குடன் அப்டேட் கேட்டு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

ஷ்யாம் முடிந்தளவிற்கு அவளை சரியாகவே பார்த்துக் கொண்டான்.

ராணிதான் “இன்னும் முழிக்கவே இல்லையே தம்பி.. இப்படியெல்லாம் ஆகாதே.” என பதட்டமாக கேட்க,

“ராணிம்மா.. இது மயக்கம் இல்ல. மயக்கம் மாதிரி தூக்கம். இந்த மாதிரி நேரத்துல ஒரு சிலருக்கு இப்படி ஆகும். பயந்துக்காதீங்க.. அவ நல்லா தூங்கி எழுந்தாலே நார்மலாகிடுவா.” என அவரை சமாதானம் செய்ய, தலையை ஆட்டிக் கொண்டு அமைதியாக உட்கார்ந்துவிட்டார்.

செல்வத்திற்கும் மகேஸ்வரிக்கும் சுமதியே அனைத்தையும் சொல்லிவிட, அவர்களும் மகளைப் பார்க்க கிளம்பியிருந்தனர்.

தாமரையை அனுப்பி வைத்த பிறகு, நாயகியை பிடிபிடியென பிடித்துவிட்டார் வசந்தி.

சீனிவாசனும் அங்குதான் இருந்தார். இப்போதெல்லாம் அவருக்கு மகளைப் பற்றிய கவலை மட்டும்தான். ‘உனக்கு இளங்கோ வேண்டாம்’ என்று மகளிடம் எப்படி புரிய வைப்பது என்ற யோசனையிலேயே சுத்திக் கொண்டிருந்தார்.

தெரிந்த புரோக்கர்களிடமும் கூட மனைவிக்குத் தெரியாமல் மகளின் ஜாதகத்தை கொடுத்து வைத்திருந்தார்.

“சீனி..” என வசந்தியின் அதட்டலில்தான் நிகழ்வுக்கு வந்தார் மனிதர்

“என்னாச்சும்மா..?” என்றவரை முறைத்த வசந்தி, “உன் பொண்டாட்டி செய்றது பேசுறது எதுவும் சரியில்ல. நாளைக்கு இளா வந்து கேட்டா என்ன பதில் சொல்லுவா.?” என கத்த,

“அத்த அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இளாக்கிட்ட என்ன பேசனும், எப்படி பேசனும்னு எனக்குத் தெரியும். அவன் வந்தா முதல்ல இந்த தாமரையைத் துரத்தி விடனும். அவளைப் பார்க்கும் போதெல்லாம் என் வயிறெல்லாம் எரியுது. என் பொண்ணு வாழவேண்டிய வாழ்க்கையைத் தட்டி பரிச்சிட்டாளேன்னு அவ மேல கொலைவெறி ஆகுது..” என் ஆக்ரோசமாக கத்த, அங்கிருந்த மூவரின் முகத்திலும் அப்பட்டமான அதிர்ச்சி தெரிந்தது.

“சீனி.. நான் ஹாஸ்பிடல் போறேன், உன் பொண்டாட்டிக்கிட்ட என்ன சொல்லுவியோ, எப்படி பேசுவியோ தெரியாது. அந்த பொண்ணைப் பார்க்க ஹாஸ்பிடலுக்கு வரனும். இல்லைன்னா இளா உங்களை விட்டு தூரமா போய்டுவான் பார்த்துக்கோங்க..” என்றுவிட்டு ஹாஸ்பிடல் கிளம்பிவிட,

‘என்ன இன்னும் உங்க அம்மா எங்கிட்ட மாமியார்தனத்தை காட்டனும்னு நினைக்கிறாங்களா.? இன்னும் அவங்க சொல்றதைக் கேட்டு பொறுமையா போவேன்னு நினைப்பா.? என் பொண்ணுக்காகத்தான் இவ்ளோ நாள் பொறுமையா போறேன். சும்மா என்னை சீண்டிக்கிட்டே இருந்தா யாருக்கும் நல்லைதில்லன்னு சொல்லி வை.” என மாமியார் மேலிருந்த கோபத்தை எல்லாம் கணவரிடமும் மகளிடமும் காட்டி பேசினார் நாயகி.

“அம்மா வர வர உனக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சு. இதுக்கெல்லாம் என்னால பதில் சொல்லிட்டு இருக்க முடியாது. நான் ஹாஸ்பிடல் போறேன். நீ வந்தா வா..? இல்லைன்னா இப்படியே புலம்பிக்கிட்டு இரு..” என ப்ரீத்தாவும் மருத்துவமனைக்கு கிளம்பிவிட்டாள்.

இப்போது கணவன் மனைவி இருவர் மட்டுமே அங்கிருந்தனர்.

“நாயகி…” என சீனிவாசன் பேச வரும் முன்னே, “இங்க பாரு எதையாவது சொல்லி என் வாயை அடைக்கலாம்னு மட்டும் நினைச்சுடாத, உன்னால எனக்கு ஒரு பயனும் இல்லை.”

“இந்த ஆஸ்தி அந்தஸ்து எல்லாம் இளாவோட அப்பாக்கு உள்ளது. உனக்குன்னு எதுவுமே இல்ல. அப்போ இருந்து இப்ப வரைக்கும் நீ எடுபுடியா மட்டும்தான் இருந்திருக்க, அது உனக்கு வேணும்னா கௌரவமா இருக்கலாம். எனக்கு அப்படி கிடையாது. என் புருஷனுக்கு ஒரு நிலையான வேலை இல்லைன்னு என் சொந்த பந்தங்ககிட்ட நான் பட்ட அசிங்கம் போதும்.”

“இப்போ சொத்தும் இல்லன்னு என்னால வெளியே சொல்லிக்க முடியாது. உனக்கும் உன்னோட அம்மாவுக்கும் அதைப்பத்தி எந்த கவலையும் இல்லை, ஆனா நான் அப்படி இருக்க முடியாது. என்னோட சொந்த பந்தங்கள் முன்னாடி நான் தலை நிமிர்ந்து நிக்கணும், என் புருஷனுக்கு இவ்வளவு சொத்து இருக்கு, என் பொண்ணு நல்ல இடத்துல பொழைக்கிறான்னு நான் பெருமை பட்டுக்கணும்.”

“என்ன பார்த்து முகத்தை சுளிச்சவங்க முன்னாடி திமிரா கர்வமா நிக்கணும். அதுக்கு என் பொண்ணோட கல்யாணம் இளாக்கூட நடக்கணும். அதை தடுக்கிற மாதிரி எது நடந்தாலும் நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன். அப்படி தடையா மட்டும் நடந்தா, நான் எந்த எல்லைக்கும் வேணும்னாலும் போவேன்.” என மிகவும் கொடூரமாக பேச வாயடைத்துப் போனார் சீனிவாசன்.

இவ்வளவும் பேசிய மனைவியை சமாதானம் செய்யவே முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டார் சீனிவாசன்.

இனி நடப்பது நடக்கட்டும் அந்தப் பெண்ணை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுக்கும் வந்துவிட்டார்.

இளா வந்து விட்டால் நாயகியை ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்றும் நினைத்தவர், இளா தாமரையோடு இருந்தால் நாயகி எந்த பிரச்சினையும் செய்யமாட்டாள் என்று அவருக்குத் தோன்றியது.

அதனால் இளா சீக்கிரம் வர வேண்டும் என்று மானசீகமாக கடவுளையும் வேண்டிக் கொண்டார்.

அறைக்குள் சென்ற நாயகிக்கு தன் கோபத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

என்னதான் ஆரம்பத்திலிருந்தே இந்த வீட்டில் தங்கியிருந்தாலும், தன் வீடு என்று அவரால் உரிமையாக எப்போதுமே நினைக்க முடியவில்லை.

அதற்கு முழுக்காரணம் வசந்திதான். வசந்தி செய்த மிகப்பெரும் தவறும் அதுதான். ‘தன் மகள் வீடு, பேரனுக்கு சொந்தமான வீடு, நீங்கள் இங்கே விருந்தாளிகள்’ என தன் ஒவ்வொரு செயலிலும் காட்டிக் கொண்டே இருப்பார்.

வசந்தியின் இந்த செயல்கள் அனைத்தும் நாயகியின் மனதில் வன்மத்தைத் தான் வளர வைத்தது.

அடுத்து சொத்தில் பாதியை ப்ரீத்தா பெயரில் எழுதி வைக்க கேட்கும் போதும் முட்டுக்கட்டையாக வந்தார். கண்மண் தெரியாதளவிற்கு கோபம் வந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகவே நகர்ந்தார்..

ஆனால் அப்போதே அவர் மனதில் இளங்கோவிற்கு தன் மகளைக் கட்டி வைத்து மொத்த சொத்திற்கும் சொந்தமாகிவிடலாம் என்று முடிவு செய்துவிட்டார்.

அதன்படியேதான் காய் நகர்த்தி, இளங்கோ மனதிலும் ப்ரீத்தாவைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற விதையை விதைத்து திருமணம் வரைக்குமே கொண்டு சென்றார்.

ஆனால் அவர் எதிர்பார்க்காதது, முதலில் திருமணத்தை இளங்கோவின் ஊரில் வைக்க வேண்டும் என்று இளங்கோ கேட்டது, அடுத்து அந்த மகேஸ்வரிக்கு திருமண வயதில் மகள் இருப்பாள் என்று..

தாமரையிடமிருந்து இளங்கோவை பிரித்த நாயகியால், மகேஸ்வரியிடமிருந்து பிரிக்க முடியவில்லை.

பார்த்து பேசி பழகாவிட்டாலும் ‘அத்தை அத்தை’ என மகேஸ்வரியின் பின்னே இளங்கோ சுற்றியதை பார்க்க தாங்கவே முடியவில்லை நாயகியால்.

அதோடு கூடவே இருந்து ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் தன்னை ஒருநாளும் இப்படி மரியாதையாக இளங்கோ நடத்தியதே இல்லை.

ஆனால் அந்த மகேஸ்வரியின் பார்வைக்காகவே அவள் பின்னே சுற்றிக் கொண்டிருந்ததை இப்போது நினைத்தாலும் ஆத்திரம் தலைக்கேறியது.

தன் திட்டத்தையெல்லாம் தவிடு பொடியாக்கிய தாமரையைக் கொன்றுவிடும் அளவிற்கு கோபம் வந்தது. அதை அவளிடம் காட்டாமல் இருக்கவே முடியாது என தோன்ற, மகளிடம் எந்த மருத்துவமனை என்று கேட்டுக்கொண்டு கிளம்பிவிட்டார்.

இங்கு மருத்துவமனையில் அனைவரையும் பயமுறுத்திவிட்டு, ஒரு வழியாக கண் விழித்திருந்தாள் தாமரை.

“என்ன கண்ணு இப்படி பயமுறுத்திட்ட?” என அழுகையுடன் ராணிம்மா கேட்க, மெல்ல புன்னகைத்தாள் தாமரை.

“என்ன நடந்ததுன்னு எனக்கே தெரியல ராணிம்மா. தலை சுத்துற மாதிரி இருந்தது, அடுத்து எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லை..” என மெதுவான குரலில் கூற,

“சரி விடு.. இனி இப்படி இருக்கக் கூடாது, எதுனாலும் எனக்கு கூப்பிடனும், உடனே சொல்லணும்.” என செல்லக் கண்டிப்பை காட்ட,

“சரி ராணிம்மா..” என அவளும் சோர்வாக புன்னகைத்தாள்.

இவர்கள் இருவரையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார் வசந்தி. தாமரையிடம் பேசிப் பழகாததால் என்ன பேசுவது என்று தெரியாமல், அவர்கள் இருவரும் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது சரியாக உள்ளே வந்தான் ஷ்யாம்.

யார் இருக்கிறார்கள் இல்லை என்று எதையும் பொருட்படுத்தாமல், “பைத்தியக்காரி என்னடி பண்ணி வச்சிருக்க, உன்கிட்ட நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன், உனக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும், உடனே எனக்கு கூப்பிடனும்னு சொல்லி இருக்கேன் இல்ல. என்ன செஞ்சி வச்சிருக்க.. தூக்கம் இல்லைன்னா சொல்ல வேண்டியதுதானே..” என அவன் பாட்டுக்கு கத்த ஆரம்பிக்க, தவறு செய்த குழந்தை போல திருதிருவென விழித்தாள் தாமரை.

“அம்மாவுக்கு கூப்பிட்டு சொல்லிட்டேன். ஆன்டியையும் கூட கூப்பிட்டு வர சொல்லிருக்கேன். நீ பெட்டியைக் கட்டிக்கிட்டு கிளம்பு. நீ இங்க இருந்து கிழிச்சது எல்லாம் போதும்..” என மேலும் கத்த, அப்போது சட்டென தாமரை வசந்தியைத் தான் பார்த்தாள்.

“என்ன..? என்ன..? ஏன் அவங்களைப் பார்க்குற? அவங்களை நம்பித்தான் உன்னை அங்க விட்டுட்டு வந்தேன். அந்த நம்பிக்கையை அவங்க காப்பாத்தல. சோ இனி நான் யார் பேச்சையும் கேட்க போறது இல்ல, நம்ப போறதும் இல்ல..” என காட்டமாக பேச, அப்போதும் வசந்தி அமைதியாகத்தான் இருந்தார்.

அவன் சொல்வது சரிதானே. அவன் மட்டுமா? இளங்கோவும் தன்னை நம்பித்தானே தாமரையை விட்டுப் போனான். ஆனால் நான் அதை சரியாகவே செய்யவில்லையே. இனி பேரன் வந்து கேட்டால் என்ன பதில் சொல்வது என யோசித்துக் கொண்டிருந்தான்.

அப்போது ப்ரீத்தாவின் போன் அலற, எடுத்துப் பார்க்க அதில் நாயகி அழைத்துக் கொண்டிருந்தார்.

இவர் ஏன் அழைக்கிறார்? என யோசித்துக்கொண்டே நிமிர, ஷ்யாம் அவளைத்தான் தீர்க்கமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

‘அது அம்மா வரேன்னு சொன்னாங்க..’ என ஷ்யாமின் பார்வைக்கு பதில் கொடுக்க, அப்போதும் தன் பார்வையை மாற்றிக் கொள்ளவில்லை. இப்போது மீண்டும் அழைத்தார் நாயகி.

“எடுத்துப் பேசுங்க… இனி ரூமுக்குள்ள மொபைல் எல்லாம் யூஸ் பண்ணாதீங்க..” என ஒரு அந்நியத் தன்மையோடு பேச, ப்ரீத்தாவின் மனதில் சுருக்கென்று ஒரு வலி வந்து போனது.

ஆனால் இப்போது அதை வெளிக்காட்ட முடியாதே. தன் மொபைலை எடுத்துக்கொண்டு வெளியில் சென்றாள்.

அடுத்த சில நிமிடங்களில் நாயகியுடன் மீண்டும் அந்த அறைக்குள் வந்தாள் ப்ரீத்தா. அவள் பார்வை ஷ்யாமையே சுற்றி வந்தது. ஆனால் அவனோ தாமரையிடம் மட்டுமே தன் கவனத்தை வைத்திருந்தான்.

அப்போது தாமரை ரெஸ்ட் ரூம் செல்ல வேண்டும் என்று கூறியதும், ட்ரிப்ஸை ஷ்யாம் கழட்ட, ராணி அவளை ரெஸ்ட் ரூம் அழைத்துச் சென்றார்.

“அடி ஆத்தி இதென்ன வயிறு இவ்ளோ பெருசா இருக்கு.?” என நாயகி அதிர்ச்சியாக கேட்பது போல் கேட்டாலும், அதில் இருந்த உள்குத்து வசந்திக்கும் ஷ்யாமிற்கும் சரியாக புரிந்தது.

அடுத்து மருமகள் என்ன பேசுவாளோ என பயந்த வசந்தி, “ப்ரீக்குட்டி உன் அம்மாவைக் கூப்பிட்டு போ. இல்ல அமைதியா இருக்கச் சொல்லு. தேவையில்லாம ஒரு வார்த்தைக்கூட இங்க பேசக்கூடாது..” என கண்டிப்பாக சொல்ல,

“ஏன் அத்தை.. ஏன் நான் பேசக்கூடாது. பேசினா இந்த நடத்தைக் கெட்டவளோட சாயம் வெளுத்துப் போயிருமா.?” என முடிக்கும் முன்னே, அவர் கழுத்தைப் பிடித்திருந்தான் ஷ்யாம்.

“ஹேய் யாரைப் பார்த்து என்ன பேசிட்டு இருக்க. இனி வயசுக்கு கூட மரியாதை கொடுக்க மாட்டேன். வெளியே போ..” என கர்ஜிக்க, வசந்தி ஷ்யாமின் கைகளை எடுத்துவிட போராட, ப்ரீத்தாவோ அவன் இடுப்பில் கைவைத்து பின்னாடி இழுத்துக் கொண்டிருக்க, ‘கண்ணு தாமர’ என்ற ராணியின் பதட்டமான குரல் அவர்களை அப்படியே செயலிழக்க செய்திருந்தது.
 

CRVS2797

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 11, 2023
117
8
18
Ullagaram
தாமரையே, என் செந்தாமரையே !
எழுத்தாளர்: வதனி .S
(அத்தியாயம் - 13)


அய்யய்யோ..! இந்த நாயகி பொண்ணா ? பேயான்னே தெரியலையே...? தவிர, அது வாயா, இல்லை
சாக்கடையா ?ன்னே தெரியலையே...? ஏன் தான் இப்படி சொத்து சொத்துன்னே இருக்கிறாளோ..?


ஷியாம் மட்டும் தான் யார், யாருக்கு என்ன மரியாதை கொடுக்கணுமோ அதை கரெக்ட்டா கொடுக்கிறான்.
நாயகிக்கு இந்த மரியாதையே அதிகம் தான்.


அச்சச்சோ...! அந்த நாயகி வாய்ல வசம்பை வைச்சு தேய்க்க. அய்யய்யோ..! அப்ப நாயகி அசிங்கமா பேசினதை தாமரை கேட்டுட்டா போலயிருக்கே...???


😀😀😀
CRVS (or) CRVS 2797